Friday, November 2, 2012

உலகின் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய மொடல் அழகி தெரிவு

உலகின் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய மொடல் அழகி தெரிவு






உலக அளவில் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய அழகி மிராண்டா கெர் தெரிவாகி உள்ளார்.
ஆண்கள் பேஷன், மொடலிங் விடயங்களுடன் உலகின் பல நாடுகளிலும் வெளிவரும் அமெரிக்க மாத இதழ் எஸ்கொயர்.

சுமார் 80 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த இதழில், உலகிலேயே கவர்ச்சியான பெண் யார் என்ற தலைப்பில் போட்டி நடந்தது.

இதில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி மிராண்டா கெர்(வயது 29) அதிக வாக்குகள் பெற்று கவர்ச்சிக் கன்னியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருமணமான மிராண்டாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தன் முகம், கூந்தல், மேனி பளபளப்புக்கு காரணம் தேங்காய் எண்ணெய் தான். கிரீன் டீ, சாலட் மற்றும் உணவுகளில் தினமும் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ஏற்கனவே ஏஞ்சலினா ஜூலி, ஸ்கார்லட் ஜோகன்சன், ரிகானா உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!