Tuesday, October 30, 2012

சான்டி புயல்: ஸ்தம்பித்தது அமெரிக்கா

சான்டி புயல்: ஸ்தம்பித்தது அமெரிக்கா - Pictures




அமெரிக்காவை தாக்க உள்ள சான்டி புயலிலிருந்து மக்களை பாதுகாக்க பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவையொட்டிய கரீபியன் கடற்பரப்பில் சில நாட்களுக்கு முன்பு சான்டி புயல் உருவானது.

இது கியூபா மற்றும் ஜமைக்காவில் பெருமழையைக் கொட்டியபடி நேற்று முதல் அமெரிக்காவிற்கு மிரட்டல் கொடுத்து வருகிறது.

சூப்பர் புயல் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சான்டியிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாகாணங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சான்டி புயலை தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று அதிபர் ஒபாமா எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

இதற்கிடையே அமெரிக்காவின் நியூயோர்க் பங்கு சந்தை மூடப்பட்டிருக்கிறது. சுமார் 4 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலான இரயில் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாகாணங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

நியூயோர்க் நகரம் இருள் போர்த்தியதாக காணப்படுகிறது. இந்த சான்டி புயலால் சுமார் 31 செமீ அளவுக்கு மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருக்கிறது.

கடலோரப் பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.


























No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!