Friday, September 27, 2013

கரப்பான் பூச்சியைப் போல டி.வி. கேமராவை பார்த்து மிரண்ட தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி.கள்!

கரப்பான் பூச்சியைப் போல டி.வி. கேமராவை பார்த்து மிரண்ட தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி.கள்!


தமிழகத்தில் இருந்து டில்லி சென்ற காங்கிரஸ் பிரமுகர்கள், கரப்பான் பூச்சியைப் போல டி.வி. கேமராவை பார்த்து மிரண்டதால், ராகுல் காந்தி கடும் கோபமடைந்தார் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து டி.வி. கேமராவை பார்ப்பதற்காக 5 தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் சென்றபோதே, இந்த சம்பவம் நடைபெற்றது.

தமாஷான இந்த விவகாரம் என்னவென்றால், நம்ம காங்கிரஸ் கட்சி, தமது பிரசார பலத்தை அதிகரிக்க திட்டமிட்டது. அதையடுத்து, காங்கிரஸ் சார்பில், டிவி சேனல் விவாதங்களில் பங்கேற்க தகுதியான ஆட்களை தேர்ந்தெடுத்து, முறையான பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் ஐடியா இது.

டி.வி. சேனல்களில் பிரிந்து மேயும் திறமை கொண்ட 5 பேரை ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுத்து, டில்லிக்கு அனுப்பி பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 5 பேர் கொண்ட பட்டியலை அனுப்பி வைக்கும்படி, மற்றைய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தரவு போல, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கும் உத்தரவு வந்து சேர்ந்தது.

ஞானதேசிகனும் ஒரு பட்டியல் தயார் செய்தார்.

அதில், பீட்டர் அல்போன்ஸ், அழகிரி, கோபண்ணா, ஞானசேகரன், விஜயதரணி ஆகியோர் பெயர்கள் ஞானதேசிகனின் பட்டியலில் இடம் பெற்றன. அதுவரைக்கும் சரி. ஆனால், பட்டியலை டில்லிக்கு அனுப்புவதற்கு முன், மத்திய அமைச்சர் வாசனிடம் பட்டியலைக் காட்டிவிட்டார் ஞானதேசிகன்.

இவர் தயாரித்த பட்டியலை அப்படியே அனுப்பிவிட்டால், அப்புறம் அவர் எதற்காக அமைச்சராக இருக்க வேண்டும்? எனவே அவர் பட்டியலில் சில திருத்தங்களை செய்து கொடுத்தார்.

பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, அழகிரி ஆகிய மூவரும் நீக்கப்பட்டனர். பிரின்ஸ், யசோதா, சேலம் பாலு ஆகியோருடைய பெயர்கள் சேர்க்கப்பட்டன. இது பட்டியல்-2!

இந்த நிலையில் ஞானதேசிகனின் மூளையில் அபூர்வ நரம்பு ஒன்று அசைந்தது.

இனியும் இந்த பட்டியலை வேறு தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் யாரிடம் காட்டினாலும் ‘பட்டியல்-3’ உருவாக நேரிடும் என்பதை அவரது கூரிய அறிவு அவருக்கு சொன்னது. அதையடுத்து, கமுக்கமாக பட்டியலை டில்லிக்கு அனுப்பிவிட்டு, கம்மென்று இருந்துவிட்டார் ஞானதேசிகன்.

பட்டியல் டில்லி போய் சேர்ந்தது.

தமிழகத்தில் இருந்து சென்ற பட்டியல் டில்லியில் அப்படியே ராகுலின் கைகளுக்கு போய்விட்டால், அந்து காங்கிரஸ் பாரம்பரியத்துக்கு அழகா? இதனால் இந்தப் பட்டியல் டில்லியில் ட்ரான்சிட்டில் இருந்தபோது, அதில் தன் பெயரையும் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டார், அமெரிக்க நாராயணன்.

‘நாராயணனுடன் சேர்ந்து அறுவரானோம்’ என்ற நிலையில் பட்டியல் ராகுலின் கைகளை சென்றடைந்தது.

இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, வழமைபோல சென்னை ஏர்போர்ட்டில் விமானம் ஏறுமுன், “கூடங்குளம் மின்சார உற்பத்தி 2-ம் கட்டம் இன்னமும் 8.5 நாட்களில் தொடங்கும் என்று பேட்டி கொடுத்துவிட்டு, டில்லி சென்று லேன்ட் ஆனார். தற்செயலாக ராகுலையும் சந்தித்துவிட்டார்.

ஞானதேசிகன் அனுப்பிய பட்டியல் பற்றி அவருக்கு தெரியவந்தபோது, “பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா ஆகிய இருவரையும் மீண்டும் சேர்த்தால் நன்றாக இருக்கும்” என தன் பங்குக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துவிட்டு சென்றார்.

ராகுலுக்கு தலை சுழன்றது. ‘பட்டியல்-3’ உருவாகும் சந்தர்ப்பம் உருவானது.

ஆனால் ராகுல் பட்டியலை மாற்றுமுன், வாசனால் திருத்தப்பட்ட ‘பட்டியல்-2’ பிரமுகர்கள் கட்சி செலவில் டில்லி வந்து இறங்கி விட்டனர். டில்லியில் இவர்களுக்கான பயிற்சிப் பாசறைக்கான ஏற்பாடுகள் ரெடியாக இருந்தன.

இவர்களை தேர்ந்தெடுக்கும் முன், சின்னதாக ஒரு டெஸ்ட் வைத்தார்கள்.

டில்லி ஸ்டூடியோ ஒன்றில் டிவி சேனல் விவாத நிகழ்ச்சி போலவே, அரங்கம் செட்டப் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் டெஸ்ட் நடத்தப்பட்டது. அதற்காக, பிரபல ஆங்கில சேனல்களை சேர்ந்த நிருபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் கேட்கும் சரமாரியான கேள்விகளுக்கு சளைக்காமல் ஆங்கிலத்தில் பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் என்று அடுக்கடுக்கான கேள்விகள் கடகடவென கேட்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து சென்ற சிலருக்கு வயிற்றுக்குள் தடதடவென அதிர்ந்தது.

எல்லா மாநிலத்தில் இருந்து வந்தவர்களும் கலந்து கொண்ட இந்த டெஸ்ட்டில், ஒவ்வொருவரும் சொல்லும் பதிலில் உள்ள தெளிவு, ஆங்கில உச்சரிப்பு, விஷய ஞானம், புள்ளிவிவரம் ஆகியவற்றின் அடிப்படையில் ரிப்போர்ட் ஒன்று தயாராகி, ராகுலின் கையில் கொடுக்கப்பட்டது.

ரிப்போர்ட்டை ஆய்வு செய்த ராகுல், அதிர்ச்சி அடைந்து விட்டார். மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களின் ஸ்கோர் ஓகோவென்று இருக்க, தமிழகத்தை சேர்ந்த திறமைசாலிகள், தரையை தடவும் நிலையில் இருந்ததே ராகுலின் அதிர்ச்சிக்கு காரணம்.

“தமிழகம் இந்தளவுக்கு பின்தங்கிய நிலையில் உள்ளதா?” என்று ராகுல் நாலு பேரை விசாரித்தபோதுதான், பின்தங்கியது தமிழகம் அல்ல, அங்குள்ள காங்கிரஸ்காரர்கள்தான் என்று தெரியவந்தது. அத்துடன், பட்டியல் மாற்றப்பட்ட விஷயமும் ராகுலுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, பீட்டர் அல்போன்சை டில்லிக்கு அழைத்த ராகுல், என்ன நடந்தது என்பதை விசாரித்து அறிந்தார்.

ஞானதேசிகனின் பட்டியல்-2, குப்பைத் தொட்டிக்கு போய்ச் சேர்ந்தது. பட்டியல்-3, ராகுலால் உருவாக்கப்பட்டது. அதில் மூன்றே மூன்று பேர்தான். பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, அமெரிக்க நாராயணன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 15-ம் தேதி நடந்த டி.வி. ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மற்றையவர்களின் கதி என்னாச்சு என்று தெரியவில்லை. லோக்கலில் “The Cow Jumped Over the Moon” என்று பாடி பயிற்சி எடுக்கிறார்களோ, என்னவோ!


Join with us on Facebook  >>>

              அறிவியல்

இந்திய விஞ்ஞானி புது கண்டுபிடிப்பு விண்ணில் கருங்குழி மர்மம் நீங்குமா?

இந்திய விஞ்ஞானி புது கண்டுபிடிப்பு விண்ணில் கருங்குழி மர்மம் நீங்குமா?



விண்ணில் ‘இறந்த’ நட்சத்திரங்களால் உருவாகும் கருங்குழிகள் பற்றி நீடிக்கும் மர்மத்தை உடைக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.   அண்டவெளியில் பூமி உட்பட பல கோள்கள் உள்ளன. பல லட்சம் சூரியன்கள், நிலாக்கள், நட்சத்திரங்கள் என்று பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும் போது ‘இறந்த’ நட்சத்திரங்களாகி விடுகின்றன. விண்ணின் பால்வெளி மண்டலத்தில் இப்படி சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் பரவி கிடக்கும் நிலையில், இந்த ‘இறந்த’ நட்சத்திரங்கள் எல்லாம் கருங்குழியாகி விடுகின்றன. இந்த கருங்குழி, பல சூரியன்களின் ஒளியை தன்னுள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஈன்ஸ்டின் புவிஈர்ப்பு கோட்பாட்டுக்கும் இந்த கருங்குழிகளுக்கும் ஒரு வகையில் இயற்பியல் ரீதியாக ஒரு ஒற்றுமை இருக்கிறது  என்று இந்தியா உட்பட பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். 

கருங்குழி பற்றி முதன்  முதலில் உண்மைகளை கண்டுபிடித்து சொன்னவரே, நம் நாட்டு தமிழ் விஞ்ஞானி சந்திரசேகர் தான். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.   இறந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, கருங்குழியாகவோ ஆகி விடும் என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் இவர். இதனால் இந்த கண்டுபிடிப்புக்கு சந்திரசேகர் லிமிட் என்றும் பெயர் வைக்கப்பட்டது.   இந்த நிலையில், கருங்குழி பற்றிய மர்மம் நீடித்து வருகிறது. இந்த குழிகள் சிறியது தானா, அதன் ஆழம் என்ன, அதன் ஈர்ப்பு சக்தி  என்ன? ஒலி, ஒளியை தன்னுள் விழுங்கும் போது நடப்பது  என்ன? பல சூரியன்கள் ஒளியை கொண்டது  என்பது சரியா? என்பது பற்றி எல்லாம் மர்மம் நீடிக்கிறது.   சாதாரண கண்களுக்கு இந்த கருங்குழி தெரியாது. டெலஸ்கோப் மூலமும் கண்டுபிடிப்பது சிரமம் தான். நுணுக்கமாக ஆராய்ந்தால் பால்வெளியில் ஏதோ கரும்புள்ளி போல தான் தெரியுமாம். பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள பானிப்ரத்தா முகோபாத்யை இந்த கருங்குழி ஆய்வில் புதிய உண்மையை கண்டுபிடித்துள்ளார்.  

 இரண்டு ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில், அண்டவெளியில் உருவாகும் கருங்குழி தன்னை சுற்றிய ஒலி, ஒளி மற்றும் நட்சத்திர துகள்கள் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் சக்தி படைத்தது. இது மட்டுமின்றி, இதை சுற்றிய சுழற்சி, நட்சத்திர எரி துகள்கள் போன்ற பொருட்கள் ஆகியவற்றை வைத்து  குழியின் ஆழம், சுழற்சி வேகத்தை கணக்கிடலாம். மேலும், குழியை சுற்றிய சுழற்சி வலை மற்றும் பொருட்கள் தனியாக இயங்குவதில்லை. ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பது தான் பானிப்ரத்தாவின் கண்டுபிடிப்பு.  இந்த கண்டுபிடிப்பு மூலம்,  கருங்குழி பற்றிய ஆராய்ச்சிகளில் புதிய தெளிவு கிடைத்துள்ளதாக அமெரிக்க, பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர். ‘நட்சத்திரங்கள் எப்படி நொறுங்கி அழிகின்றன, கருங்குழியாகின்றன என்பதற்கு இந்த ஆராய்ச்சி உதவும்’ என்று விஞ்ஞானி பானிப்ரத்தாவுக்கு உதவியாக இருந்த ஆராய்ச்சி மாணவி இந்திராணி பானர்ஜி கூறினார். 

அதென்ன கருங்குழி?
* பூமி, சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அண்டவெளி. 

* விண்ணில் பரந்து கிடக்கும் பால்வெளியில் உள்ளது தான் சூரியன், நிலா, நட்சத்திரங்கள். 

* இந்த நட்சத்திரங்கள் தன்னுள் உள்ள அணு எரிசக்தியை இழக்கும் போது ‘இறந்ததாக’ கருதப்படுகின்றன.

* அப்படி இறந்த பின் அவை என்னவாகின்றன என்பது மர்மமாக இருந்தது. 

* அவை, கருங்குழியாகிவிடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

* கருங்குழி ஈர்ப்பு சக்தி கொண்டது. தன்னை சுற்றிய பொருட்களை ஈர்த்துக்கொள்ளும். 

* சுழலும் அணு துகள்கள், பொருட்கள் வேகம் பற்றிய ஆய்வு தொடர்ந்து மர்மமானது.

* கருங்குழி மர்ம முடிச்சுகள் தொடர்ந்து அவிழ்ந்த வண்ணம் உள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

திருச்சியில் மோடி: “பிரதமரே, காதில் விழுகிறதா? தமிழக இளைஞர்களின் குரல் கேட்கிறதா?”

திருச்சியில் மோடி: “பிரதமரே, காதில் விழுகிறதா? தமிழக இளைஞர்களின் குரல் கேட்கிறதா?”




திருச்சியில் நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமது உரையை தமிழ் மொழியில் தொடங்கினார். “பாரத் மாதாஹே ஜே, தமிழ் மண்ணே வணக்கம்! பெரியோர்களே, தாய்மார்களே, வாலிப சிங்கங்களே! அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்நாடு பெருமை வாய்ந்த நாடு, கம்பன், வள்ளுவன் பிறந்த நாடு இந்த தமிழ்நாடு. தமிழ்நாடு என்று சொன்னால் காதில் தேன் வந்து பாயும் என்று பாடினார் பாரதியார். திருச்சி தமிழ்நாட்டின் இதயம் போல் மத்தியில் இருக்கும் மாவட்டம், காவிரியும் அலங்கரிக்கும் மாவட்டம், சோழர்கள் ஆண்ட திருச்சியில் வசிக்கும் அனைவருக்கும் மீண்டும் வணக்கம்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழர்தான் இ-மெயிலையும் கண்டுபிடித்தவர். உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்கள்தான் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர்.

தமிழகமும், குஜராத்தும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இரண்டு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் நாட்டு விடுதலைக்காகப் போராடி இருக்கின்றனர். இங்கே ஒரு சிறிய குஜராத் என்று சொல்லும் அளவுக்கு செளகார்பேட்டை இருக்கிறது. குஜராத்திலேயே ஒரு சிறிய தமிழகமாக மணிநகர் இருக்கிறது.

அந்த மணிநகர்தான் எனது சட்டசபை தொகுதி. மணிநகர் தமிழ் வாக்காளர்கள்தான் என்னை பெரும் வெற்றி பெற வைத்தனர்.
கடற்கரையை ஒட்டி இருக்கிற நமது இரு மாநிலங்களுக்கும் சில முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. எப்படி குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனரோ, அதேபோல் இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் ஏன் தூக்கி செல்கிறது? தமிழக மீனவர்களை இலங்கை ஏன் தூக்கி செல்கிறது? இதற்கான தைரியம் இந்த நாடுகளுக்கு எப்படி வந்தது? பிரச்சனை மத்தியில் உள்ள கடல் அல்ல! மத்தியில் இருக்கிற பலமற்ற அரசால்தான் இந்த தைரியம் இந்த நாடுகளுக்கு வந்துள்ளது!!

பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்து ராணுவத்தினர் தலையை வெட்டி எடுத்துச் செல்கின்றனர், பாகிஸ்தான் ராணுவத்தினர் இங்கு வந்து படுகொலை செய்து விட்டு செல்கின்றனர் என நடந்து கொண்டிருக்கும் போது அந்த நாட்டு பிரதமருடன் விருந்தில் பங்கேற்கிறார்.

பிரதமர் என்றால் என்ன அர்த்தம்? இந்த நாடு கையாலாகாத நாடா? பலவீனமான நாடா? என்று நமக்கு கேள்வி எழும்.

அவர்கள் என்ன செய்தாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலை ஏன் வந்தது? பாகிஸ்தான் நமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் போது நமது பிரதமர், பாகிஸ்தான் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவசரம் வேண்டுமா? (கூடாது கூடாது என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர்.)

பிரதமரே, காதில் விழுகிறதா.. தமிழக இளைஞர்களின் குரல் கேட்கிறதா?

பிரேசில் நாட்டின் மீது அமெரிக்கா உளவு பார்த்தபோது அமெரிக்கக் குழுவை பிரேசில் திருப்பி அனுப்பியது. பிரேசிலின் தன்மான உணர்ச்சியை நாம் பாராட்ட வேண்டும்.

அமெரிக்காவில் உளவுத் துறையில் பணியாற்றியவர் ஸ்னோடன். உளவுத் துறையில் அவர் அறிந்த விஷயங்களை வெளியிட்டார். தேசத் துரோகத்தில் ஈடுபட்ட காரணத்தால் அமெரிக்கா அவரை கைது செய்ய முனைந்தது. ஆனால் ரஷியாவோ ஸ்னோடனுக்கு அடைக்கலம் கொடுத்தது. அதனால், என் நாட்டிலே துரோகம் செய்து ஓடியவனுக்கு அடைக்கலம் கொடுத்த உன் மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று சொன்னார் அதிபர் ஒபாமா.

சிறிய நாடோ, பெரிய நாடோ ஒரு நாட்டின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் நாட்டின் சுய கவுரவத்தையும் மரியாதையும் காப்பாற்ற வீறு கொண்டு எழத்தான் செய்யும்.

நான் பிரதமரிடம் கேட்க விரும்புவது நீங்கள் முன்னுரிமை கொடுப்பது எதற்கு? இந்த நாட்டின் தன்மானத்துக்கா? கவுரவத்துக்கா? அல்லது பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கா? பதில் சொல்லுங்கள்..

இங்கே தாக்குதல் நடத்தும் போது நீங்கள் பேச்சுவார்த்தையின் பெயரால் விருந்து சாப்பிடுகிறீர்களா?

நாட்டில் ராணுவ வீரர்களுக்கு, எல்லைக்கு, மாநிலங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழல் இருக்கிறது. இந்த சூழலில் நாம் செய்ய வேண்டிய முதல் கடமை, இதற்கு காரணமான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதுதான்.

இன்று டில்லியில் ஒரு அரசு இருக்கிறது. அந்த அரசு, இந்த நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி இருக்கிறது. பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. நாட்டி ரூபாய் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. இந்திய ரூபாய்க்கு இப்போது மதிப்பு இல்லை. இன்னும் இந்த அரசு நீடித்தால் ரூபாய்க்கு மதிப்பே இல்லாமல் போய்விடும்.

இந்த ஆட்சி தொடருமேயானால் 5 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் பிச்சை எடுக்க நேரிடும் என்று நாட்டின் பொருளாதாரம் பற்றி பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த அரசின் நடவடிக்கையால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. திருச்சியில் செயல்படும் பெல் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் பெல் நிறுவனத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. சிறிய தொழிற்சாலைகள் அனைத்தும் அரசின் தவறான கொள்கைகளால் மூடப்பட்டு வருகின்றன.

பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளுக்காக, வங்கிக் கடன்களை பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர்கள் பத்திரிகைகளில் வருகிறதா? ஆனால் லட்சம் ரூபாய் கடன் பெற்று தராதவர்கள் பெயரை பகிரங்கப்படுத்தி அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது மத்திய அரசு.

நீங்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும். தன்மானத்தை விட்டுவிடக் கூடாது. உங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் ஒரு அரசு மத்தியில் அமையும்.

20,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன என்கிறது அரசின் புள்ளி விபரம். காரணம் நிலக்கரி கிடைக்கவில்லை. ஒருபக்கம் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இன்னொருபுறம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. மற்றொருபுறம் பல மாநிலங்களில் மின்வெட்டு அமலில் இருக்கிறது.

இந்த நிலை மாற இந்த மத்திய அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

ஆதார் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு மத்திய அரசு ஆனந்தக் கூத்தாடுகிறது. இந்த விஷயத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம் மத்திய அரசின் தலையில் குட்டு வைத்தது. இந்த ஆதார் அடையாள அட்டை விவகாரத்தில் பலன் அடைந்தவர் யார்? எவ்வளவு செலவிடப்பட்டது என்பதை இந்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சொல்ல வேண்டும்.
ஆதார் அடையாள அட்டை தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளை 3 ஆண்டுகளுக்கு முன்பே நான் கேட்டேன். நாட்டில் ஊடுருவியிருப்பவர்களும் ஆதார் அடையாள அட்டையைப் பெற்றுவிடுவார்கள். அது மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கும் என்றேன்.

இப்போது உச்சநீதிமன்றமே குட்டு வைத்துள்ளது.

அரசின் அனைத்து துறைகளும் அனைத்து மாநிலங்களும் இந்த ஆதார் அடையாள அட்டையை ஏற்றுக் கொண்டார்களா? இந்த நாட்டு மக்களின் பல நூறு கோடி பணம் ஆதார் அட்டை எனும் உங்கள் அரசியல் நாடகத்துக்காக வீணடிக்கப்பட்டிருக்கிறதே!
காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களை பிரித்து ஆட்சியை நிரந்தரமாக காப்பாற்ற முயற்சிக்கிறது. இதனால் நாட்டில் மிகப் பெரும் பிளவு ஏற்பட்டிருகிறது. நாட்டு மக்கள் ஒருமைப்பாட்டுக்காக போராடுகிறார்கள். ஆனால் காங்கிரசோ நாட்டை பிளவுபடுத்தியது. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய போதும்கூட ஜம்மு காஷ்மீருக்கு ஒரு சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி கொடி என்ற பிரிவினையை உருவாக்கி பாவத்தைச் செய்தது காங்கிரஸ்.

நாட்டின் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சனையை உருவாக்கி தண்ணீருக்காக மாநில மக்கள் மோதிக் கொள்ளும் பாவத்தைச் செய்தது மத்திய அரசு. இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிதான் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியது. 1857-ல் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சுதந்திரத்துக்காகப் போராடிய போது மதத்தின் பெயரால் பிளவை உருவாக்கிய பாவத்தைச் செய்தது காங்கிரஸ்தான்!

காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கிகளுக்காக இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சி எனும் பாவத்தைத் தொடர்கிறது காங்கிரஸ்.

அதேபோல் ஜாதிகளுக்கு இடையே முற்பட்டோர், பிற்பட்டோர் என்ற பிளவை எழுப்பியதும் காங்கிரசே! இம்மாதிரியான பிளவு மனப்பான்மை கொண்ட காங்கிரஸால் நகரம் மற்றும் கிராமங்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது.

சகோதரர்களுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டு ஆட்சியை தக்க வைக்க முயலும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இந்த நாடு விடுதலை பெற்றாக வேண்டும். நாம் காங்கிரஸைப் பற்றி அறிந்திருப்பதைவிட அதிகம் அறிந்தவர் காந்தி. அதனால்தான் நாடு விடுதலை அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியை கலைக்கச் சொன்னார்.

மகாத்மா காந்தியின் அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

நம் நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியிடம் இருந்து, காங்கிரஸோடு சேர்ந்து செயல்படுகிற கட்சிகளிடம் இருந்து அவர்களின் தரகர்களிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும்.

என் அரசியல் வாழ்க்கையில் இவ்வளவு பிரம்மாண்ட கூட்டத்தை இப்போதுதான் பார்க்கிறேன். இது இளைஞர்களின் சமுத்திரமாக காட்சி தருகிறது.

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைந்து போக, உங்களது கனவுகள் உடைந்து போக விடமாட்டோம். உங்கள் நம்பிக்கையை கனவை நனவாக்க எங்கள் சக்தியை முழுமையாக பயன்படுத்துவோம்.

எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கும் தமிழக பா.ஜ.க. இளைஞர் அணியினருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று பேசிய மோடி, தமது உரையின் முடிவில் “வந்தே..” என்று முழக்கம் எழுப்ப, “..மாதரம்” என்று கூட்டத்தினர் பின் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


Wednesday, September 25, 2013

ஃபேஸ்புக்கே கதின்னு கிடந்தா நீங்க 'சஞ்சய் ராமசாமி' ஆயிருவீங்களாம்...!

ஃபேஸ்புக்கே கதின்னு கிடந்தா நீங்க 'சஞ்சய் ராமசாமி' ஆயிருவீங்களாம்...! 


ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம். 

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கேடிஹெச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் மற்றும் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று ஆய்வு செய்தது. 

அதில் ஒரு குறிப்பிட்ட வகையான சமூக வலைதலங்களை அதிகமாக பயன்படுத்தும்போது நம் மூளையில் மிகக் குறைவான தகவல்களை பதிவாகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் 

ஃபேஸ்புக்கே கதி என்று கிடந்தால் கஜினி போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்டர்நெட் மோகம் 

இன்டர்நெட் மோகம் என்பது முதன்முதலாக சிகரெட் பிடிக்கும்போது கிடைக்கும் உணர்வு போன்று ஆகும். இன்டர்நெட்டுக்கு அடிமையாக வேண்டாம்.

ரியல் வாழ்க்கைக்கு வாங்க 

உங்களின் நிஜ வாழ்க்கையை வெர்ச்சுவல் வாழ்க்கை ஓவர்டேக் செய்துவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டரில் போட்டோக்களை அப்லோட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு உங்களுக்கு நிஜ வாழ்க்கை என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா.

திட்டமிடல் 

அடுத்த முறை ஆன்லைன் போகும் முன்பு என்ன தேவை என்பதை குறித்து வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

அடிமையாகிவிடாதீர்கள் 

இன்டர்நெட், ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு அடிமையாகிவிடாதீர்கள்

நரம்பு பிரச்சனை 

இன்டர்நெட் மற்றும் ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பதால் நரம்பு பிரச்சனைகளும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் போன் 

ஃபேஸ்புக்கில் ஒரு அப்டேட் வந்தால் உடனே உங்கள் ஸ்மார்ட் போன் உங்களுக்கு தெரிவித்துவிடும். நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் ஸ்மார்ட் போன் நோட்டிபிகேஷன்களை தவிர்க்கவும்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்



பலுசிஸ்தான் பயங்கர நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 217! புதிய தீவு உருவானது!

பலுசிஸ்தான் பயங்கர நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 217! புதிய தீவு உருவானது! 


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 217 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 350 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் கத்வார் கடற்பரப்பில் புதிய தீவு என்றும் உருவாகியிருக்கிறது. 

பலுசிஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியையும் அதிர வைத்தது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது. 

22 கி.மீ ஆழத்தில் 

நிலத்துக்கு அடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. தொடக்கத்தில் நிலநடுக்க சேத விவரம் வெளியாகவில்லை.. 

80...90..பேர் பலி 

பின்னர் 80 பேர் பலி, 93 பேர் பலி என்று தகவல் இப்போது அதிர்ச்சியூட்டும் வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

217 பேர் 

பலி பாகிஸ்தானின் உள்துறை செயலர் ஆசாத் கிலானி தெரிவித்த தகவலின்படி மொத்தம் 208 பேர் பலியான அறிவிக்கப்பட்டது. 350 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது. இது தற்போது 217ஆக அதிகரித்துள்ளது. 


பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் 

தற்போதைய பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். 

புதிய தீவு 

பலுசிஸ்தானின் கத்வார் கடற்பரப்பில் இந்த நிலநடுக்கத்தினால் புதிய தீவு ஒன்றும் திடுமென உருவாகியிருக்கிறதாம்.. 

முன்பும் உருவாகி மறைந்த தீவுகள் 

இதேபோல் முன்பு பலமுறை இதே பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட போது இத்தகைய தீவுகள் உருவாவதும் சிறிது காலம் கழித்து அது தானாகவே மறைந்துபோவதும் நடந்துள்ளது.


200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வானில் தோன்றும் ஐசான் வால் நட்சத்திரம் நவம்பரில் பார்க்கலாம்

200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வானில் தோன்றும் ஐசான் வால் நட்சத்திரம் நவம்பரில் பார்க்கலாம்




ஐசான் என்ற புதிய வால்நட்சத்திரம் வரும் நவம்பரில் சூரிய குடும்பத்தில் நுழைகிறது. இதன் வயது சுமார் 460 கோடி எனவும், சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ள னர். மிகவும் பிரகாசமான இந்த நட்சத்திரம், 200 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் கண்களுக்கு தெரிய இருக்கிறது. நவம்பர் 2வது வாரத்தில் இந்த வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாக தெரிய ஆரம்பிக்கும்.

தொடர்ந்து, வால்நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்குள் நுழைய முயற்சிக்கும்போது சூரியனை உரசிச்செல்வது போல் தோன்றும். அப்போது, வால்நட்சத்திரம் சிதறக்கூடிய வாய்ப்பு உள்ளது. சிதறாமல், நுழைந்து விட்டால், இந்த நு£ற்றாண்டில் பிரகாசமாக தெரியும் வால் நட்சத்திரம் இதுவாகத்தான் இருக்கும். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=48640#sthash.C8o1nqub.dpuf

இந்தியாவிலேயே முதன்முறையாக தயாராகிறது திருப்பதி கோயிலுக்கு 24 கோடியில் தங்க ரதம்

இந்தியாவிலேயே முதன்முறையாக தயாராகிறது திருப்பதி கோயிலுக்கு 24 கோடியில் தங்க ரதம்




இந்தியாவிலேயே முதன்முறையாக திருப்பதி கோயிலில் 24 கோடி செலவில் 32 அடி உயரமுள்ள தங்க ரதம் தயாராகிறது.திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு தங்க ரதம் தயார் செய்யும் பணிகளை, தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ நேற்று ஆய்வு செய் தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பதி கோயிலுக்காக 32 அடி உயரத்தில் தங்க ரதம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. 27ம் தேதிக்குள் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும். 30ம் தேதி காலை சோதனை ஓட்டம் நடத்தப்படும். வரும் அக்டோபர் 10ம் தேதி பிரம்மோற்சவமும், மாலை 5 மணிக்கு தங்க ரத ஊர்வலமும் நடக்கிறது. தமிழகத்திலுள்ள மதுரை, சுவாமி மலை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தங்க ரதம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே 32 அடியில் தங்க ரதம் செய்யப்படுவது, திருப்பதி கோயிலில் மட்டும்தான். இதற்கான தங்கம் பக்தர்களிடம் நன்கொடையாக பெறாமல், தேவஸ்தான கருவூலத்திலிருந்து பெறப் பட்டு செய்யப்பட்டுள் ளது. 74 கிலோ தங்கம், 2,900 கிலோ காப்பர், 25 டன் மரப்பலகைகளுடன் 24 கோடியில் தங்க ரதம் தயாராகி வருகிறது என்றார்.

Monday, September 23, 2013

மெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''

மெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''




குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும். 

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும். 

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம். 

இந்த  7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம். 

 தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

சி.ஐ.ஏ. டி-கிளாசிபைடு ரகசியம்: பண்ணை வீட்டில் அல்-ஸவாகியின் கடைசி டின்னர் பார்ட்டி

சி.ஐ.ஏ. டி-கிளாசிபைடு ரகசியம்: பண்ணை வீட்டில் அல்-ஸவாகியின் கடைசி டின்னர் பார்ட்டி



அமெரிக்க உளவுத்துறை செய்த பல ரகசிய ஆபரேஷன்கள் பற்றிய தகவல்கள், அந்த ஆபரேஷன்கள் முடிந்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு ரகசியமாகவே வைத்திருக்கப்படும். இப்படியான ரகசிய ஆவணங்களை, classified documents என்பார்கள். காலப்போக்கில் (சில ஆண்டுகளின் பின்) சில ஆவணங்களின் ரகசியங்கள் விலக்கப்படும். அதை Declassification என்பார்கள்.

இப்படியான ‘முன்னாள் ரகசியங்கள்’ அடங்கிய ஆவணங்களை, அமெரிக்காவின் தகவல் அறியும் சட்டப்படி, அமெரிக்கப் பிரஜை ஒருவர் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். அநேக மீடியாக்கள், எந்த ரகசியங்கள் டிகிளாசிஃபை பண்ணப்படுகின்றன என கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டிருந்து, உடனே விண்ணப்பிப்பார்கள்.

அப்படி Declassification செய்யப்பட்ட ஆவணங்களில் ஒன்று, அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்தபோது, அப்போதைய ஈராக்கிய அல்-கய்தா தலைவர் அல்-ஸவாகி எப்படி கொல்லப்பட்டார் என்பது.

Declassification செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில் இருந்து, அந்த ஆபரேஷன் எப்படி நடைபெற்றது என்று இப்போது முழுமையான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவையும் சுவாரசியமாக இருக்கின்றன.

பண்ணை வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே, விமானம் மூலம் குண்டு வீசப்பட்டு அல்-ஸவாகியும் வேறு சிலரும் கொல்லப்பட்டனர். குண்டு போடப்பட்ட பண்ணை வீட்டுக்கு அல்-ஸவாகி சென்ற காரணம், ஒரு டின்னர் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக. ஈராக்கிய தலைநகர் பாக்தாத்திலிருந்து சுமார் 60 கி.மீ. வடக்கே அமைந்திருந்த பண்ணை வீடு அது.

அந்த இரவு விருந்தில் கலந்து கொண்டவர்கள், அல்-ஸவாகியுடன், மூன்று பெண்களும் மூன்று ஆண்களும்.

ஆண்களில் ஷேக் அப்துல் ரஹ்மான் ஒருவர். இவர்தான் அல்-ஸவாகியின் மத ஆலோசகர். அவரை விட மற்றொரு முக்கிய நபரும் விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவர், அல்-ஸவாகியின் நம்பிக்கைக்குரிய கூரியர். இவர் மூலமாகவே அல்-ஸவாகி தகவல்களை மற்றையவர்களுக்கு அனுப்புவது வழக்கம்.

சி.ஐ.ஏ. அல்-கய்தா தலைவர்களை தகவல் தொழில்நுட்பத்தை வைத்து உளவு பார்ப்பது தெரிய வந்தவுடன், பின்லேடன் உட்பட அல்-கய்தா முக்கியஸ்தர்கள் அனைவருமே செல்போன்களையோ, இமெயில்களையோ உபயோகிப்பதை நிறுத்தி விட்டனர். மாறாக, நம்பிக்கைக்குரிய தகவல் அனுப்புனர்களாக கூரியர்களை உபயோகிக்க தொடங்கினர்.

(பின்னாட்களில் அல்-காய்தா தலைவர் பின்லேடனின் கூரியர் ஒருவரை கண்காணித்து, அவர் மூலமாகவே பின்லேடனின் ரகசிய இருப்பிடத்தை அறிந்து அவரை கொன்றது சி.ஐ.ஏ.)

அல்-காய்தாவின் ஈராக்கிய பிரிவுக்கு தலைவராக இருந்த அல்-ஸவாகிக்கு நம்பிக்கைக்குரிய சில கூரியர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலமாகத்தான் அல்-ஸவாகியின் உத்தரவுகள், ஆராக்கின் பல பகுதிகளிலும் இருந்த மற்றய தளபதிகளுக்கு போய்ச் சேர்ந்து கொண்டிருந்தன.

செல்போன் உரையாடல்களை அமெரிக்கர்கள் ஒட்டுக் கேட்பார்கள் என்று தெரிந்து கொண்டு, உஷாராக கூரியர்களை பயன்படுத்திய அல்-ஸவாகிக்கு மற்றொரு விஷயம் தெரிந்திருக்கவில்லை.

அது-

அல்-ஸவாகி பயன்படுத்திய கூரியர் ஒருவரை உளவுத்துறைகள் ட்ரக் டவுன் பண்ணிவிட்டார்கள் என்ற விஷயம்.

‘உளவுத்துறைகள்’ என பன்மையில் எழுதுவதன் காரணம், அமெரிக்க உளவுத்துறையுடன், ஜோர்தானிய உளவுத்துறையும் இணைந்தே அல்-ஸவாகியின் கூரியரை ட்ராக்-டவுன் பண்ணியிருந்தன.

இந்த நபரைப் பற்றிய விபரம் முதலில் ஜோர்தானிய உளவுத்துறைக்கு தெரிய வந்தது. அதன்பின் பல வாரங்களாகவே ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று தங்களுக்குள் சங்கேத மொழியில் கூறிக் கொண்டிருந்தார்கள். மிஸ்டர் எக்ஸின் நடமாட்டங்கள் மீதும் கண் வைக்கத் தொடங்கினார்கள்.

ஏற்கனவே அல்-ஸவாகியின் மத ஆலோசகர் அப்துல் ரஹ்மான் இவர்களது கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தாலும், அவர் அல்-ஸவாகியைச் சந்தித்ததாக தெரியவில்லை.

இதற்கிடையே மிஸ்டர் எக்ஸ், ஜோர்தானிய உளவுத்துறையின் கண்பார்வையில் இருந்து திடீரென மறைந்து போனார். அவர் ஈராக்கை விட்டு வெளியேறியிருக்கலாம் என  நினைத்த ஜோர்தானிய உளவுத்துறை, அவரை ட்ராக் பண்ண சி.ஐ.ஏ.வின் உதவியை நாடியது. மிஸ்டர் எக்ஸ் தொடர்பான விபரங்கள் அனைத்தும் சி.ஐ.ஏ.வுக்கு போய் சேர்ந்தன.

இதற்கிடையே, மிஸ்டர் எக்ஸ் ஈராக்கை விட்டு வெளியேறவில்லை என்றும், பாக்தாத்துக்கு 60 கி.மீ. வடக்கேயுள்ள பண்ணைவீடு ஒன்றில் தென்படுகிறார் என்றும் ஜோர்டானிய உளவுத்துறைக்கு தெரிய வந்தது. ஏற்கனவே மிஸ்டர் எக்ஸ் பற்றிய தகவல்கள் சி.ஐ.ஏ.வுக்கு பாஸ் செய்யப் பட்டுவிட்டதால், இந்த பண்ணை வீடு பற்றிய தகவலும் கொடுக்கப்பட்டது.

அதன்பின், விவகாரத்தை முழுமையாக தமது கைகளில் எடுத்துக் கொண்டது சி.ஐ.ஏ. ஜோர்தானிய உளவுத்துறை ஒதுங்கிக் கொண்டது.

உடனே அந்த இடம் கண்காணிக்கப்பட வேண்டிய இடமாகிவிட்டது. அல்-ஸவாகி தனது கடைசி தினத்தில் அங்கே செல்வதற்கு முன்னரே அமெரிக்க ராணுவத்தின் ரேஞ்சர்கள் பண்ணை வீட்டைச் சூழவுள்ள அடர்த்தியான மரங்களில், நாள் கணக்கில் மறைந்து இருந்திருக்கிறார்கள்.

மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்களுக்கும் மையக் கட்டுப்பாட்டுத் தளத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு நாள் இரவிலும் பண்ணை வீட்டைச் சூழ மறைந்திருந்தவர்கள் மாறி, புதிய ஆட்கள் வந்து மறைந்திருக்கிறார்கள்.

பண்ணை வீட்டுக்கு மிஸ்டர் எக்ஸ் வந்து போய்க்கொண்டிருந்தார். ஆனால், அல்-ஸவாகி அந்தப் பக்கமே தென்படவில்லை. இருப்பினும், ராணுவ ரேஞ்சர்களை அங்கேயே நிறுத்தி வைத்திருந்தது சி.ஐ.ஏ.

இந்த நிலையில் திடீரென ஒருநாள் அடுத்த தகவல், மற்றொரு சோர்ஸிடம் இருந்து சி.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது – மிஸ்டர் எக்ஸ் நடமாடிய பண்ணை வீட்டுப் பகுதியை நோக்கி, அப்துல் ரஹ்மான் செல்கிறார் என்பதே அந்த தகவல்.

உடனடியாக இந்தத் தகவல் பண்ணை வீட்டைச் சூழ மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

மிஸ்டர் எக்ஸ் ஒரு பண்ணை வீட்டில் அடிக்கடி தென்படுகிறார். அதன்பின் ஒருநாள் அப்துல் ரஹ்மானும் அதே பண்ணை வீட்டை நோக்கிச் செல்கிறார் என்றவுடன், அல்-ஸவாகி அந்த பண்ணை வீட்டுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்று சி.ஐ.ஏ. புரிந்து கொண்டது.

அல்-ஸவாகியும், அப்துல் ரஹ்மானும் சந்தித்துக் கொள்ளும் ரகசிய இடமாக இந்த பண்ணை வீடு இருக்கலாம் என்பது அவர்களது ஊகம்.

உடனே பண்ணை வீட்டை நோக்கி மேலும் பல ராணுவ ரேஞ்சர்களை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அதை நடைமுறைப் படுத்த முடியாதபடி சடுதியாகக் காரியங்கள் நடந்து விட்டன.

அப்துல் ரஹ்மான் பண்ணை வீட்டுக்குள் சென்றார். அடுத்த 30 நிமிடங்களில், வேறு சில வாகனங்கள் அந்த வீட்டுக்கு முன்னே வந்து நின்றன. அதிலிருந்து இறங்கியவர்களில் ஒருவர் அல்-ஸவாகி!

அல்-ஸவாகி பண்ணை வீட்டுக்கு வந்து இறங்கியபோது அவருடன் வந்தவர்களில் ஒருவர் அல்-ஸவாகி புதிதாகத் திருமணம் செய்திருந்த 16 வயது மனைவி. அத்துடன் மிஸ்டர் எக்ஸ்ஸூம் ஏற்கனவே அதே பண்ணை வீட்டில் இருந்திருக்கிறார்.

அல்-ஸவாகி பண்ணை வீட்டுக்குள் நுழைந்துவிட்டார் என்ற விபரத்தை, அங்கே மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்கள் உடனடியாக சி.ஐ.ஏ.வுக்கு அறிவித்தார்கள். “புதிதாக மேலதிக ஆட்களை அனுப்பினால், அந்தச் சத்தத்தில் அல்-ஸவாகி உஷாராகித் தப்பிவிடலாம் என்பதால், மேலதிகமாக யாரையும் அனுப்ப வேண்டாம்” என்று தகவல் கொடுத்தார்கள், ஏற்கனவே அங்கே மறைந்திருந்தவர்கள்.

இதற்கிடையே, அல்-ஸவாகியும் அவருடன் வந்தவர்களும் பண்ணை வீட்டுக்கு உள்ளே செல்ல, ஏற்கனவே உள்ளே இருந்தவர்களில் சிலர் வெளியே வந்தார்கள். அவர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிக்-அப் ட்ரக்கில் ஏறி அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

இவர்கள் வெளியேறியதை அடுத்து, பண்ணை வீட்டைச் சூழ்ந்து இருந்த ரேஞ்சர்கள் பதட்டம் அடைந்தார்கள்.

காரணம், வெளியேறிய ஆட்களில் அல்-ஸவாகி இல்லை என்பது உண்மைதான். ஆனால் இதே போல மற்றொரு செட் ஆட்களும் வெளியேறும்போது, அவர்களுடன் அல்-ஸவாகியும் வெளியேறலாம் அல்லவா? அப்படி நடந்தால் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாது போய்விடுமே..

அல்-ஸவாகியும் எந்த நிமிடத்திலும் பண்ணை வீட்டிலிருந்து வெளியேறிவிடலாம் என்ற தகவல், பண்ணை வீட்டை சூழ்ந்து மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்களால் சி.ஐ.ஏ.வின் ஆபரேஷன் சென்டருக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், சி.ஐ.ஏ. ஆபரேஷன் சென்டரிலிருந்து பதில் வந்தது.

“பண்ணை வீட்டை நீங்கள் உடனடியாக தாக்க முடியுமா? உள்ளே இருக்கும் அல்-ஸவாகியை உங்களால் தாக்குதல் நடத்தி கைப்பற்ற முடியுமா” என்று கேட்கப்பட்டது.

பண்ணை வீட்டைச் சூழ மறைந்திருந்த அமெரிக்க ராணுவ ரேஞ்சர்கள் வெறும் மூன்றே மூன்று பேர்தான். அவர்களிடமும் ஆளுக்கொரு துப்பாக்கிதான் இருந்திருக்கிறது. வீட்டுக்குள் இருக்கும் அல்-ஸவாகியிடமும் மற்றயவர்களிடமும் நிச்சயம் துப்பாக்கிகள் இருக்கும். இதனால், ராணுவ ரேஞ்சர்கள் பண்ணை வீட்டை தாக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

அந்த நிலையில் உள்ள ஒரேயொரு வழி, அவசர அவசரமாக விமானத் தாக்குதல் நடத்துவதுதான் என்று சி.ஐ.ஏ. ஆபரேஷன் சென்டரில் அவசர முடிவு எடுக்கப்பட்டது.

அல்-ஸவாகி எந்த நிமிடத்திலும் அந்த வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிடலாம் என்ற நிலையில், ஈராக்கில் அமைந்திருந்த அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து போர் விமானங்களை தாக்க அனுப்புவது கூட காலதாமதமாகி விடும்.

அமெரிக்கர்களின் நல்ல காலம், இந்த பண்ணை வீடு இருந்த வான் பகுதியிலிருந்து சுமார் 30 கி.மீ.களுக்கு அப்பால் வேறு ஒரு தாக்குதல் ஆபரேஷனுக்காக நான்கு F-16 விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. குண்டுவீச்சு ஆபரேஷனில் இருந்த அந்த 4 விமானங்களில், இரு விமானங்களில் மட்டும் 500 பவுண்ட் குண்டுகள் போடப்படாமல் இருந்தன.

உடனடியாக தரையில் இருந்து அந்த இரண்டு விமானங்களின் விமானிகளுக்கும் தகவல் தெரிவித்து, அந்த ஆபரேஷனை இடைநிறுத்தினார்கள். குண்டுகளை வைத்திருந்த இரு விமானங்களையும் உடனே திசைதிருப்பி, பண்ணை வீடு இருந்த லொகேஷன் கொடுத்து, அங்கே சென்று குண்டுவீச உத்தரவு கொடுக்கப்பட்டது.

சரியாக மாலை 6.12க்கு, பண்ணை வீட்டின் மீது துல்லியமாக முதலாவது குண்டை வீசியது F-16 போர் விமானம்.

முதலாவது குண்டுவீச்சின் போதே, அல்-ஸவாகி, அப்துல் ரஹ்மான், ஸவாகியின் 16 வயது மனைவி, மிஸ்டர் எக்ஸ், மற்றும் ஒரு ஆண், இரு பெண்கள் ஆகியோர் கொல்லப்பட்டார்கள்.

அப்படியிருந்தும், யாரும் தப்பக்கூடாது என்பதற்காக, இரண்டாவது விமானமும் அதே இலக்கின்மீது தன்னிடமிருந்த குண்டை வீசியது. பண்ணை வீடு தரைமட்டமாகியது.

தாக்குதல் நடந்து முடிந்து, விமானங்கள் அங்கிருந்து அகன்ற பின் பண்ணை வீட்டுக்கு வெளியே மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்கள் ஓடிச் சென்று இடிபாடுகளில் பார்த்தபோது, பண்ணை வீட்டில் குண்டுவீச்சு நடத்தப்பட்ட போது, அங்கு பெரிய விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது.

டின்னர் பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோதே, குண்டுகள் போய் விழுந்திருக்கின்றன!

இந்த இரு F-16 போர் விமானங்களும் பண்ணை வீட்டில் இருந்து சுமார் 30 கி.மீ.களுக்கு அப்பால் வேறு ஏதோ ஆபரேஷனில் குண்டுவீச பறந்து கொண்டு இருக்காவிட்டால், ஒருவேளை அல்-ஸவாகி தப்பியிருக்கலாம்.

அதே நேரத்தில், அந்த வேறு ஒரு ஆபரேஷனில் குண்டுவீசுவது கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டதால், அங்கு வேறு யாருக்கோ, ஆயுசு கெட்டி! அந்த வகையில் அல்-ஸவாகி தனது உயிரை கொடுத்து வேறு யாருடைய உயிரையோ காப்பாற்றினார் என்றுகூட சொல்லலாம்.


Join with us on Facebook  >>>

              அறிவியல்





’செக்ஸ் ஜிகாத்’: சிரியப் போராளிகளை சந்தோஷப்படுத்த படையெடுக்கும் துனிஷிய பெண்கள்...

’செக்ஸ் ஜிகாத்’: சிரியப் போராளிகளை சந்தோஷப்படுத்த படையெடுக்கும் துனிஷிய பெண்கள்... 


வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும், உடல் ரீதியாக உற்சாகம் ஏற்படுத்தவும் துனிஷியாவிலிருந்து பெருமளவில் பெண்கள் சிரியாவுக்கு போவதால் துனிஷிய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை அந்த நாட்டின் மகளிர் நலத்துறை வகுத்துள்ளதாம். செக்ஸ் ஜிஹாத் என்று இது வர்ணிக்கப்படுகிறது. 

போராளிகளுக்கு இன்பம் 

இது குறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுபோல துனிஷிய பெண்களை சிரியாவுக்குள் அனுப்பி அங்குள்ள போராளிகளுடன் உடல் ரீதியான உறவுகளை ஏற்படுத்த முயல்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவர். விரும்பிச் செல்லும் பெண்களும் தண்டனைக்குள்ளாவர். 

தடுக்க அரசு தீவிரம் 

இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பெண்களுக்காக விழிப்புணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளப்படும். இதற்காக ஒரு தனிக் குழுவும் ஏற்படுத்தப்படும் என்றார். 

குறைந்தது 20 பேருடன் 

சிரியாவுக்குச் செல்லும் பெண்கள், ஒவ்வொருவரும் குறைந்தது 20 முதல் அதிகபட்சம் 100 போராளிகளுக்கு இன்பம் கொடுப்பதாக பரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளது. 

கர்ப்பிணிகளாக ரிட்டர்ன் 

இந்த செக்ஸ் ஜிஹாத்தை முடித்துக் கொண்டு திரும்பும் பெண்களில் 99 சதவீதம் பேர் கர்ப்பிணிகளாகவே திரும்பி வருகின்றனராம். இதுவரை எத்தனை பேர் இந்த செயலில் பெரும்பாலும் இளம் பெண்களே ஈடுபடுத்தப்படுகிறார்களாம். 

இதுவரை எத்தனை பேர் 

இதுபோன்று ஈடுபட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம் துனிஷிய அரசிடம் இல்லையாம். 

நூற்றுக்கணக்கான பெண்கள் 

இருப்பினும் இதுவரை நூற்றுக்கணக்கான துனிஷிய பெண்கள் சிரியாவுக்கு இதுபோல செக்ஸ் ஜிஹாத் என்ற பெயரில் சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல நூறு பெண்கள் காத்திருக்கிறார்களாம். 

செக்ஸ் அவலம் 

இந்த செக்ஸ் அவலத்தைத் தடுக்க துனிஷிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு கூறியுள்ளது. 

புனிதப் போர்கள்... 

கடந்த 15 ஆண்டுகளில் துனிஷியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, துருக்கி, லிபியா நாடுகளில் நடந்த உள்நாட்டுப் போர்களிலும், புரட்சிகளிலும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஈரானில் 2000கிமீ தூரம் தாக்கும் 30 ஏவுகணைகளின் அணிவகுப்பு: எதிரிகளுக்கு எச்சரிக்கையா?

ஈரானில் 2000கிமீ தூரம் தாக்கும் 30 ஏவுகணைகளின் அணிவகுப்பு: எதிரிகளுக்கு எச்சரிக்கையா? 


ஈரானில் சுமார் 2000கி.மீ தூரம் சென்றுத் தாக்கும் 30 ஏவுகணைகளைன் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது ஈரானை தாக்க நினைக்கும் பிற நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி போல் இருந்தது. 

ஈரான் நாட்டில் அணுஆயுதங்கள் அதிகளவில் சேமிக்கப்படுவதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அந்நாட்டின் மீது குற்றம் சாட்டி வருகின்றன. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது சில பொருளாதாரத்தடைகளை அமல் படுத்தியது. இஸ்ரேலும் தன் பங்கிற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்து வருகிறது. 

ஆனால், தன் மீது குறை கூறும் அண்டை நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்க வழிகளில் பயன்படுத்தவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக கூறிவருகிறது ஈரான். இந்நிலையில் 1980-1988 ஆண்டு வரை ஈரான்-ஈராக்கிடையே நடந்த போரின் நினைவுதினத்தை முன்னிட்டு நேற்று ஈரானில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

இந்த அணிவகுப்பில் சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய 30 ஏவுகணைகளை ட்ரக்குகளில் வைத்து அணிவகுப்பு நடத்தியது ஈரான். இதன் மூலம் தனது பலத்தை காட்டி, தனது எதிரி நாடுகளுக்கு ஈரான் ஒரு எச்சரிக்கை மணி விடுத்துள்ளது எனச் சொல்லப்படுகிறது. 

மேலும், அணிவகுப்பில் 12 செஜில் மற்றும் 18 காதர் ஏவுகணைகள் இடம்பெற்றன. இந்த இரு ஏவுகணைகளும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அரேபிய ஏவுதளங்களை குறிவைத்து தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அணிவகுப்பில் கலந்து கொண்டு பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரஹானி கூறும்போது, ‘காட்சிக்கு வைக்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் தற்காப்புக்காக மட்டுமே. கடந்த 200 வருடங்களில் எந்த ஒரு நாட்டையும் ஈரான் தாக்கியது கிடையாது' எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..