Friday, September 20, 2013

நம்பர் 1 குடிகார நாடு எது தெரியுமா?

நம்பர் 1 குடிகார நாடு எது தெரியுமா? 


தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை 2011 - 2012 ம் ஆண்டு 18 ஆயிரத்து 81 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பதாக சொல்கிறது புள்ளிவிபரம். 

பத்துரூபாய் அம்மா வாட்டர் விற்பனையால் குஷியாகியுள்ள தமிழ்நாட்டு ‘குடி' மகன்கள் இதேபோல் மலிவு விலையில் வறுத்த முந்திரி, சிப்ஸ் விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதன் மூலம் விற்பனையை இன்னும் சில கோடிகள் உயர்த்துவோம் என்றும் கூறியுள்ளனர். அதேபோல் சரக்கு குடிக்க டம்ளர், ஊறுகாய், இன்னும் சில பல கோரிக்கைகளையும் அரசுக்கு வைத்துள்ளனர். 

நம்முடைய கட்டுரை அதைப்பற்றியதல்ல. உலகிலேயே அதிக அளவு குடிக்கும் நாடுகளைப் பற்றியும், பீர் குடிமகன்களைப் பற்றியும்தான்.

மோல்டோவா 

இந்த நாடு உலக மேப்பில் எங்கிருக்கு என்று தேடும் முன்பாக இந்த நாட்டு மக்கள்தான் மொடா குடிகாரர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த நாட்டின் குடிமகன் ஒருவர் வருடத்திற்கு சராசரியாக 250 லிட்டர் குடிக்கிறாராம்.

செக் குடியரசு 

செக் குடியரசு நாட்டில் ஒரு நபர் ஆண்டிற்கு சராசரியாக 210 லிட்டர் சரக்கை உள்ளே தள்ளுகிறாராம்.

அயர்லாந்து 

இந்த நாட்டில் மெடிக்கல் ஷாப் இருக்கிறதோ இல்லையோ, தெருவுக்கு தெரு பப்களும், டான்ஸ் பார்களும் பரவிக் கிடக்கின்றன. குடி, கிளுகிளு டான்ஸ் என குஜாலாக வாழும் இந்த நாட்டில் ஒரு குடிமகன் ஒரு ஆண்டிற்கு 196 லிட்டரை உள்ளே தள்ளுகிறாராம்.

எஸ்டோனியா 

இங்கு மதுவிலை ரொம்ப கம்மியாம். தமிழ்நாட்டில் இருந்து குடிப்பதற்காகவே பாண்டிச்சேரி போகும் மக்கள் இருக்கின்றனர். அதேபோல இந்த நாட்டில் சுற்றுலா துறையே எங்க ஊரில் மதுவிலை ரொம்ப கம்மி என்று கூவி கூவி மக்களை அழைக்கிறதாம். இந்த நாட்டு குடிமகன் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 186 லிட்டர் மது குடிக்கிறாராம்.

ஜெர்மனி 

இந்த நாட்டில்தான் பீர் திருவிழாவே நடைபெறுகிறது. அக்டோபர் ஃபிஸ்ட் கொண்டாடும் இந்த நாட்டில் சராசரியாக குடிப்பழக்கம் உள்ள ஒரு நபர் ஆண்டுக்கு 170 லிட்டர் பீர் குடிக்கிறாராம்.

ஆஸ்த்ரியா 

ஆஸ்த்ரியா நாட்டில் 22 சதவிகிதம் பேர் ஒயின் குடிப்பவர்களாம். இங்குள்ள பெண்கள் பீர் குடிப்பதில் கில்லாடிகளாம்.

பின்லாந்து 

பின்லாந்து நாட்டு மக்கள் பீர்தான் அதிகம் குடிக்கின்றனராம். சராசரியாக ஒரு நபர் 146 லிட்டர் பீர் குடிக்கிறாராம்.

பெல்ஜியம் 

பெல்ஜியம் நாட்டில் குடிகாரர்களுக்குத்தான் மரியாதையாம், பணக்கார்ர்கள் கூடவே ஒரு அசிஸ்டெண்ட்களை வேறு வைத்திருப்பார்களாம்.

லூதியானா 

ஐரோப்பிய நாடான லூதியானாவில் மொத்த தொழில் முதலீட்டில் 78 சதவிகிதம் மது தயாரிப்பதுதானாம். சிலர் குடிப்பதற்காக சொந்த பேக்டரி கூட வைத்திருக்கிறார்களாம்.

அமெரிக்கா 

அமெரிக்க மக்கள் தொகையில் 22 சதவிகிதம் பேருக்கு பீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறதாம். ஆண்டுக்கு சராசரியாக ஒருவர் 129 லிட்டர் பீர் குடிக்கிறார்களாம்.

ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமகன் ஒருவர் சராசரியாக 109.9 லிட்டர் பீர் குடிப்பாராம்.

பீர் குடியர்கள் 

லக்ஸ்சம்பர்க் மக்களில் ஒருவர் சராசரியாக 84.4 லிட்டர் பீர் குடிக்கிறாராம். டென்மார்க் மக்கள் சராசரியாக 89 லிட்டர் பீரும், யுகே குடிமகன் ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு 99 லிட்டர் பீரும் குடிக்கிறாராம்.

இந்தியா

நல்லவேலை இந்த லிஸ்டில் இந்தியா இல்லை என்பது முக்கிய அம்சம்.


மைக்ரோசாப்டின் முழு வரலாறு இதுதான்...!

மைக்ரோசாப்டின் முழு வரலாறு இதுதான்...! 




கம்பியூட்டர் உலகில் மிகப்பெரும் புரட்சியை உண்டு பண்ணியது மைக்ரோசாப்ட் என்னும் அந்த ஒரு கம்பெனி மட்டும் தான் எனலாம். 

இது கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் முற்றிலும் புதிய வழிமுறை ஒன்றை மைக்ரோசாப்ட் அண்மையில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. 

சிலருக்கு வழக்கமான விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து வருவதற்குத் தயக்கம் இருந்தாலும், இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறைக்கு பலரும் மாறி வருகின்றனர். 

என்னதான் மைக்ரோசாப்ட் மீது குற்றம் சாட்டினாலும், கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நம் வாழ்க்கை நடைமுறையின் ஏதாவது ஒரு விதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு சாப்ட்வேர் பயன்பாட்டினத் தந்து கொண்டு தான் இருக்கிறது. 

உலகளாவிய இந்த வளர்ச்சியும் பயன்பாடும், வேறு எந்த ஒரு நிறுவனமும் மக்களுக்கு தந்ததில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆரம்பம் முதல் இப்போது வரையிலான முழு வளர்ச்சியையும் இங்கே பாருங்கள் நண்பரே...

1975 ஆம் ஆண்டில், பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ் தொடங்கினார். தொடங்கியது முதல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தினைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டு அசுர வளர்ச்சியினை மேற்கொண்டார்.

1975: மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகார பூர்வமாக தொடங்கப்பட்டது.

1979: வர்த்தக ரீதியாக, எஸ்.க்யூ.எல். ஆரக்கிள் பதிப்பு 2ல் தரப்பட்டது.

1984: மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் 1 என்ற பெயரில், டாஸ் இயக்க பதிப்பு வர்த்தக நடைமுறைக்கு அளிக்கப்பட்டது.

1985: விண்டோஸ் 1.0. வெளியானது.

1986: இளைய வயதில் உலக அளவில் கோடீஸ்வராக பில் கேட்ஸ் தன் 31 ஆவது வயதில் இடம் பிடித்தார்.

1989:மைக்ரோசாப்ட் எஸ்.க்யூ.எல் சர்வர் தயாரிப்பில் இணைந்து செயலாற்றியது.

1990: NGWS (Next Gen Web Services) என்ற பெயரில் டாட் நெட் தொழில் நுட்பத்தினை மைக்ரோசாப்ட் உருவாக்கியது.

1992: விண்டோஸ் 3.1 வெளியானது. விண்டோஸ் இயக்கத்தினை இரண்டரை கோடி பேர் பயன்படுத்தினர்.

1993: மைக்ரோசாப்ட் தங்களுடைய சர்வர்களின் இயக்கத்தினை XENIX தொழில் நுட்பத்திலிருந்து Exchangeக்கு மாற்றியது. இதற்கு மைக்ரோசாப்ட் எடுத்துக் கொண்ட காலம் மூன்று ஆண்டுகள்.

1993: விண்டோஸ் அட்வான்ஸ்டு சர்வர் மற்றும் விண்டோஸ் என்.டி. வெளியானது.

1993: விண்டோஸ் என்.டி.யுடன் இணைந்து எஸ்.க்யூ.எல். மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது.

1995: பெருத்த விளம்பரம் மற்றும் ஆரவாரத்துடன், மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. வெளியான நான்கு நாட்களிலேயே, பத்து லட்சம் விண்டோஸ் 95 இயக்க தொகுப்புகள் விற்பனையாயின.

1995: மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மெயில், காலண்டர் மற்றும் இணைந்த சாப்ட்வேர் தொகுப்புகள் முதன் முதலாக விண்டோஸ் 95 தொகுப்புடன் இணைந்து வெளியானது.

1995: விண்டோஸ் என்.டி. சர்வர் 3.5, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. முதன் முதலாக நவீன கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் இதில் தரப்பட்டது.

1997: விண்டோஸ் என்.டி. சர்வர் பதிப்பு 4.0, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு மிக உதவியாக இருந்தது.

1998: மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்னாளில் தந்த மைக்ரோசாப்ட் சிஸ்டம் சென்டர் இயக்கத்திற்கு முன்னோடியாக, சர்வர் குரூப் நிறுவனம், SeNTry என்னும் இயக்கத்தினைத் தந்தது.

1998: ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் சொல்யூசன் என்ற பிரிவில் முதன் முதலாக, Microsoft Project Central உருவாகி வெளியானது.

2000: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டாட் நெட் (.NET) பிரேம் ஒர்க் தொகுப்பின் சோதனைப் பதிப்பு வெளியானது.

2000: எக்சேஞ்ச் சர்வர் 2000 வெளியானது. இது முதலில் அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. ஆனால், முதன் முதலாக இன்ஸ்டண்ட் மெசேஜிங் என்ற தொழில் நுட்பத்தினைக் கொண்டிருந்தது.

2000: நிறுவனங்களுக்கு பல தீர்வுகளைத் தந்த Biz Talk Server வெளியானது.

2001 இனி அடுத்தடுத்து வரும் ஸ்லைடுகளில் மைக்ரோசாப்ட் கம்பெனி ஆபிஸின் படங்களை பார்த்து கொண்டே அதன் செய்திகளை பாருங்கள்.. 2001: விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி, மிகக் குறுகிய காலத்தில் பல லட்சக்கணக்கான பயனாளர்களைப் பெற்றது. 40 கோடி பதிப்புகள் மிக எளிதாக விற்பனை செய்யப்பட்டன.

2002: மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் என்ற மேனேஜ்மெண்ட் சாப்ட்வேர் வெளியிடப்பட்டது.

2002: டாட் நெட் பதிப்பு 1.0 வெளியானது. இது அனைத்து விண்டோஸ் இயக்கங்களுடனும் இணைந்து செயல்பட்டது. புரோகிராம்கள் தயாரிப்பில் உதவிட விசுவல் ஸ்டுடியோ வெளியானது.

2002: விசுவல் ஸ்டுடியோ மற்றும் டாட் நெட் இயக்கங்களுடன் செயலாற்றும் வகையில் Biz Talk Server 2000 வெளியானது.

2003: டாட் நெட் இயக்கம் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு, விண்டோஸ் சர்வர் மற்றும் விசுவல் ஸ்டுடியோவுடன் வெளியிடப்பட்டது.

2003: விண்டோஸ் சர்வர் 2003 வெளியிடப்பட்டு, அதிக அளவில் பயன்படுத்தப்படும் சர்வர் இயக்க தொகுப்பு என்ற புகழைப் பெற்றது. விண்டோஸ் சர்வர் 2000 தொகுப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக விற்பனையானது.

2003: எக்சேஞ்ச் சர்வர் 2003 வெளியானது. நிறைய வசதிகள் மேம்படுத்தப்பட்டன. நிறுவனங்கள் சிஸ்டங்களுக்கிடையே மாறுவதற்கான எளிய வழிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரச்னைகள் ஏற்படுகையில் அவற்றிலிருந்து மீட்சி பெற பல வழிகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப் பட்டிருந்தது மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் தொகுப்பிற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் கம்யூனிகேஷன் (Microsoft Office Live Communication) வெளியானது.

2003: விண்டோஸ் ஷேர்பாய்ண்ட் 2.0 என்ற பெயரில் ஷேர் பாய்ண்ட் இலவச பதிப்பு தரப்பட்டது.மைக்ரோசாப்ட் பிசினஸ் சொல்யூசன்ஸ் Microsoft Dynamics என்ற பெயரில் தரப்பட்டது. இதில் Dynamics AX, GP, NAV SL மற்றும் C5 கிடைத்தன.

2006: 64 பிட் சப்போர்ட் செய்திடும் வகையில், டாட் நெட் 2.0 வெளியானது. விண்டோஸ் சர்வர் 2005 மற்றும் விசுவல் ஸ்டுடியோ புதிய பதிப்பும் இணைந்து கிடைத்தன.டாட் நெட் 2.0 இணைந்த Biz Talk Server வெளியானது.புதிய டாட் நெட் 3 வெளியானது. விண்டோஸ் விஸ்டா மற்றும் மைக்ரோசாப்ட் சர்வர் 2008 உடன் இது இணைந்து இயங்கியது.

2007: ஸ்பேம் வகை கோப்புகள் மற்றும் மெசேஜ் வடிகட்டும் தொழில் நுட்ப வசதியுடன், 64 பிட் சப்போர்ட் கொண்ட எக்சேஞ்ச்சர்வர் 2007 வெளியானது.மைக்ரோசாப்ட் ஷேர்பாய்ண்ட் சர்வர் 2007 ல் வெளியானது.

2008: விண்டோஸ் சர்வர் 2008 அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே முதல் 64 பிட் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

2009: விண்டோஸ் 7 வெளியானது. இதற்கு முந்தைய விண்டோஸ் தொகுப்பின் விற்பனை ரெகார்ட் அனைத்தையும் முறியடித்தது. ஏறத்தாழ 20 லட்சம் தொகுப்பு உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன.

2009: ஆபீஸ் கம்யூனிகேசன்ஸ் சர்வர் 2007 ஆர் 2, பல முக்கிய மேம்பாடுகளுடன் வெளியானது.

2010: டாட் நெட் 4.0 வெளியானது. மல்ட்டி கோர் ப்ராசசரின் செயல்வேகத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இதன் வடிவமைப்பு இருந்தது. ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் சர்வர், மைக்ரோசாப்ட் லிங்க் சர்வர் (Microsoft Lync Server) என்ற பெயரில் தரப்பட்டது.

2010:ப்ராஜக்ட் போர்ட்போலியோ சர்வர் மற்றும் வெப் அப்ளிகேஷன்ஸ் இணைத்து மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் மேம்படுத்தப்பட்டு Microsoft Project 2010 என வெளியானது. மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் சர்வர் 2010 வெளியிடப்பட்டது. இதில் மல்ட்டி பிரவுசர் சப்போர்ட் தரும் வகையில் தொழில் நுட்பம் அமைந்தது.

2012: விண்டோஸ் சர்வர் 2012 வடிவமைப்பில் மைக்ரோசாப்ட் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. டாட் நெட் 4.5 சோதனையில் உள்ளது. இது விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த விண்டோஸ் 8 இயக்கங்களை மட்டும் சப்போர்ட் செய்கிறது.

2012: புதிய இன்டர்பேஸ், தொடு திரை வழி இயக்கம் ஆகியவற்றை மெட்ரோ டிசைன் லாங்குவேஜ் என அழைத்து, மைக்ரோசாப்ட் இதுவரை வெளியான விண்டோஸ் இயக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்கத் தொகுப்பினை விண்டோஸ் 8 என்ற பெயரில் வெளியிட்டது.

2012: சர்பேஸ் ஆர்.டி. என்ற பெயரில், மைக்ரோசாப்ட் டேப்ளட் பிசி சந்தையில் தன் முதல் தடத்தைப் பதித்தது. ஏ.ஆர்.எம் ப்ராசசர்களில் விண்டோஸ் ஆர்.டி. இயங்கியது.

2013: இந்த ஆண்டில், விண்டோஸ் 8 ப்ரோ மற்றும் இன்டெல் கோர் ஐ 5 ப்ராசசரில் இயங்கும் சர்பேஸ் வெளியாகி உள்ளது.


உலக தரவரிசையில் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிற்கு 18, 19-ஆம் இடம்!!!

உலக தரவரிசையில் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிற்கு 18, 19-ஆம் இடம்!!! 


2013 எஃப்டி மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட் (எம்ஐஎம்) சர்வேயில், ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐஎம் கொல்கத்தா ஆகியவற்றின் முதுநிலை பட்டப்படிப்புகள் உலகின் தலைசிறந்த 20 நிர்வாக பாடத்திட்டங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. 

ஐஐஎம் அகமதாபாத் 18-வது இடத்தைப் பிடித்திருக்கும் அதே வேளையில் ஐஐஎம் கொல்கத்தா அதனைத் தொடர்ந்து 19-வது இடத்தைப் பிடித்துள்ளது. அகமதாபாத் ஐஐஎம் போலன்றி கொல்கத்தா கல்வி நிறுவனம் இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஐஐஎம்-சி இந்த சர்வேயில் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.

013 எஃப்டி மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட் (எம்ஐஎம்) தரவரிசையில், பணி சார்ந்த முன் அனுபவம் உள்ள அல்லது அறவே முன் அனுபவம் இல்லாத மாணாக்கர்களுக்கான தலைசிறந்த 70 பாடத்திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உலகளவில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த செயின்ட் கேல்லன் பல்கலைக்கழகம், தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த இஎஸ்சிபி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த டபிள்யூஹெச்யூ பெய்ஷெய்ம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐஎம் கொல்கத்தா ஆகிய இவ்விரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் சார்பில் இந்த தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவை இரண்டும், உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக அறியப்படும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், ஆல்டோ பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பிசினஸ் ஸ்கூல் மற்றும் இதர பல கல்வி நிறுவனங்களுக்கும் மேலானதாக பட்டியலிடப்பட்டுள்ள சிறப்பைப் பெற்றுள்ளன. 

"மேலாண்மை கல்வியின் உலகளாவிய கூட்டணி நிறுவனமான சிஇஎம்எஸ் -உடனான எங்களது தொடர்பு, எஃப்டி ரேங்கிங் சர்வேயில் நாங்கள் பங்கேற்க வழி வகுத்ததோடல்லாமல், சர்வதேசத் தரத்தை நோக்கிய எங்களின் பயணத்துக்கும் தூண்டுகோலாகத் திகழ்கிறது. நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஏஏசிஎஸ்பியின் (AACSB) அங்கீகாரத்தோடு, சர்வதேசத் தரம், தொழில் முனைவு மற்றும் வலுவான அடித்தளம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு நாங்கள் மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளும் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், வரும் ஆண்டுகளில் எங்களால் மேலும் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று நம்புகிறோம்." என்று ஐஐஎம் கொல்கத்தா சார்பில் வெளியான ஒரு பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. 

இவ்வருடத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான எஃப்டி உலக எம்பிஏ தரவரிசைப் பட்டியலில் ஐஐஎம் அகமதாபாத் 26 ஆம் இடத்தைப் பிடித்த அதே வேளையில், ஐஎஸ்பி ஹைதராபாத் 34-வது இடத்தைப் பிடித்திருந்தது. இவ்விரு நிறுவனங்களும் கடந்த ஆண்டு தொடங்கி பல்வேறு சறுக்கல்களிலிருந்து தப்பி வந்துள்ளன.


வீட்டில் நாயின் சிறுநீர் துர்நாற்றமா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...

வீட்டில் நாயின் சிறுநீர் துர்நாற்றமா? அதை போக்க இதோ சில டிப்ஸ்... 


வீட்டில் ஆசையாக வளர்த்து வரும் செல்லப் பிராணிகள், வீட்டின் பல இடங்களில் சிறுநீர் கழித்துவிடும். இவ்வாறு செல்லப் பிராணிகளின் சிறுநீரின் துர்நாற்றமானது, வீட்டிலேயே இருக்க முடியாதவாறான நிலையை ஏற்படுத்தும். 

இத்தகைய சிறுநீர் துர்நாற்றத்தைப் போக்க எவ்வளவு தான் ரூம் ப்ரஷ்னர் அடித்தாலும், நன்கு சுத்தப்படுத்தினாலும், அந்த இடத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் மட்டும் எப்போதும் நீங்காமல் இருக்கும். எனவே இத்தகைய துர்நாற்றத்தில் இருந்து விடைபெற வேண்டுமானால், ஒருசில எளிமையான மற்றும் வாசனை நிறைந்த பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தால், நிச்சயம் நாயின் சிறுநீர் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். 

அதுமட்டுமின்றி, அதிக பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. சரி, இப்போது அந்த துர்நாற்றத்தைப் போக்க பயன்படும் பொருட்களைப் பார்ப்போமா!!!


ஆரஞ்சு தோல் 

ஆரஞ்சு பழத்தின் தோலில் நல்ல நறுமணம் நிறைந்துள்ளது. எனவ இந்த ஆரஞ்சு பழத் தோலைக் கொண்டு, நாயின் சிறுநீர் துர்நாற்றத்தைப் போக்கலாம். அதற்கு ஆரஞ்சுப் பழத்தின் தோலை அந்த இடத்தில் சில மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த இடத்தில் ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து சாறு எடுத்து, தெளிக்கலாம்.


எலுமிச்சை 

எலுமிச்சை ஒரு சிறந்த நேச்சுரல் ரூம் ப்ரஷ்னர். எனவே இந்த எலுமிச்சையின் தோலை சிறுநீர் நாற்றம் வரும் இடத்தில் தூவி, 30 நிமிடம் ஊற வைத்தால், துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.


வினிகர் 

வீட்டின் உள்ளே நாய் சிறுநீர் கழித்துவிட்டால், உடனே நல்ல சுத்தமான துணியால் துடைத்து, பின் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த நீரால், அவ்விடத்தை துடைத்தால், துர்நாற்றம் நீங்கிவிடும்.


போராக்ஸ் 

நாயின் சிறுநீர் கார்பெட்டில் கறையாக படிந்திருந்தால், அதனை போக்குவதற்கு போராக்ஸ் பயன்படுத்த வேண்டும். அதுவும் அந்த கார்பெட்டில் சிறிது போராக்ஸை தெளித்து, ஸ்பாஞ்ச் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் கறையானது எளிதில் போய்விடும்.


பேக்கிங் சோடா 

பேக்கிங் சோடா பல பொருட்களை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுகிறது. அதில் ஒன்று தான் சிறுநீர் துர்நாற்றத்தைப் போக்குவது. அதிலும் இது சிறுநீர் துர்நாற்றத்தை மட்டுமின்றி, கறைகளையும் போக்க வல்லது.


சுத்தமான மற்றும் ஈரமில்லாத துணி 

பொதுவாக வீட்டின் உள்ளே நாய் சிறுநீர் கழித்தால், உடனே ஈரமான துணியைக் கொண்டு வந்து துடைப்போம். ஆனால் அவ்வாறு ஈரமான துணி கொண்டு துடைத்தால், துர்நாற்றம் பரவச் செய்யுமே தவிர, நீங்காது. ஆகவே நல்ல சுத்தமான மற்றும் ஈரமில்லாத துணி கொண்டு துடைக்க வேண்டும்.


அடிமையாவது, நரம்பு பிரச்சனையால் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வெளியேறும் மக்கள்

அடிமையாவது, நரம்பு பிரச்சனையால் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வெளியேறும் மக்கள் 


இன்டர்நெட்டுக்கு அடிமையாவது, தனிமை பறிபோதவது மற்றும் நரம்பு பிரச்சனையால் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நிறுத்தி வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

பலர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இன்டர்நெட்டே கதி என்று இருக்கின்றனர். மேலும் ஃபேஸ்புக், ட்விட்டர் இருப்பது அவர்களுக்கு மேலும் வசதியாக உள்ளது. நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் சமூக வலைதளங்களில் அப்டேட்ட செய்யும் ஆட்கள் உள்ளனர். 

இந்நிலையில் வியன்னா பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் சமூக வலைதளங்கள் பயன்பாடு குறித்து ஒரு ஆய்வை நடத்தினர்.

விக்கிலீக்ஸ் 

விக்கிலீக்ஸ். தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவை பல ரகசியங்களை அம்பலப்படுத்தியதையடுத்து சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் சொந்த விஷயங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அஞ்சுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் 

தங்களின் சொந்த விஷயங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்து பலர் தங்களின் ஃபேஸ்புக் கணக்கை டிலீட் செய்து வருகின்றார்களாம்.

சமூக வலைதளங்கள் 

இன்டர்நெட்டிலேயே கிடையாய் கிடப்பது, தனிமை பாதிக்கப்படுவது மற்றும் நரம்பு பிரச்சனையால் பலர் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறார்களாம்.

போர் அடித்துவிட்டது 

சமூக வலைதளங்களை பயன்படுத்தி போர் அடித்துவிட்டதாலும் சிலர் அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சும்மா படுத்து கிடந்தால் 5000 டொலர் சம்பளம்! தயாரா?

சும்மா படுத்து கிடந்தால் 5000 டொலர் சம்பளம்! தயாரா?


அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா புதிய ஆய்வு ஒன்றுக்காக தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருக்க ஆள் தேடி வருகிறது.
இதற்கு 5000 அமெரிக்க டொலர் (சுமார் ரூ.3.15 லட்சம்) மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பெட் ரெஸ்ட் ஸ்டடி என்ற ஆய்வுக்காக இந்த தேடுதல் என்று நாசா தெரிவித்துள்ளது.

மைக்ரோ கிராவிட்டி என்ற புவிஈர்ப்பு குறித்த ஆய்வுக்காக தெரிவு செய்யப்படுபவர்கள் எந்த வேலையும் செய்யாமல் தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருந்தால் போதும் என்கிறது ஆய்வு குழு.

ஜான்சன் ஸ்பேஸ் மையத்தில் உள்ள பிளைட் என்லாக் புராஜக்ட் குழு, விண்வெளி செல்லும் வீரர்களின் பணியை எளிதாக்கும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆய்வுக்கு ஒப்புக் கொள்பவர்கள், 70 நாட்கள், 24 மணி நேரமும் ஒரு சில பரிசோதனைகளுக்காக மட்டுமன்றி மற்ற நேரங்களில் தொடர்ந்து ‘ஹெட் டவுன் பெட் ரெஸ்ட் பொசிஷனில்(தலைகீழாக) இருக்க வேண்டும்.

விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் எடையில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள, பெட்டில் படுத்திருப்பவர்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

ஆய்வுக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு எலும்பு, தசை, இதயம், நரம்பு மண்டலம், சுழற்சி மண்டலங்கள் உணவு மற்றும் எதிர்ப்பு சக்தி குறித்து விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

ஆய்வுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் அமெரிக்கராக அல்லது அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெறும் காங். எம்.பி. – இந்திய வரலாற்றில் முதல்முறை பதவி இழக்கும் அதிஷ்டசாலி!

தண்டனை பெறும் காங். எம்.பி. – இந்திய வரலாற்றில் முதல்முறை பதவி இழக்கும் அதிஷ்டசாலி!


“பதவியில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு குற்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்” என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட உத்தரவுபடி, இந்தியாவிலேயே முதல் முதலில் பதவியை பறிகொடுக்கும் நபர் என்ற பெருமையை (!) பெறப்போகிறார், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ரஷீத் மசூது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இது நடந்திருப்பது மற்றொரு சுவாரசியம்.

தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இந்த எம்.பி. குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் மசூது, மத்தியில் 1990 – 1991-ம் ஆண்டுகளில் வி.பி.சிங் தலைமையிலான அரசு பதவியில் இருந்த போது அதில் சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தார். தற்போது காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.

இவர் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சராக இருந்தபோது, மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் மத்திய தொகுப்பு இடங்களில் இருந்து மாநிலங்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு. அந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றது.

சி.பி.ஐ. விசாரணையில், இந்த எம்பி பணம் வாங்கிக்கொண்டு மருத்துவக் கல்லூரி சீட்களை வழங்கினார் என தெரிய வந்தது. அவர்மீது வழக்கு பதிவானது.

வழமையாக அரசியல்வாதிகள் மீதான வழக்கு இழு இழு என இழுத்துச் செல்வதுபோல இந்த வழக்கும் இழுத்துச் சென்று, இப்போது ஒரு வழியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ். மாலிக் தீர்ப்பு வழங்கினார்; ரஷீத் மசூது மற்றும் இருவர் மீதான குற்றங்களை உறுதி செய்து, அவர்கள் குற்றவாளிகள் என அறிவித்துள்ளார்.

முன்பென்றால், இந்த எம்.பி.க்கு தண்டனை வழங்கப்பட்டால், அவர் பதவியில் இருந்தபடியே தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்துவிட முடியும். பதவிக்கு ஏதும் ஆகாது.

ஆனால், இப்போது கதை வேறு.

கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி, குற்ற வழக்குகளில் இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்.

குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள ரஷீத் மசூதுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை விவரம் அக்டோபர் 1-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நம்ம எம்.பி. ‘ஊழல் தடுப்புச்சட்டம் – 1988’ என்பதன்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அந்தக் குற்றத்துக்கு, ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கிடைப்பது உறுதி.

சுருக்கமாக சொன்னால் அவருக்கு நிச்சயம் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கும்.

“குற்ற வழக்குகளில், 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்” என்ற புதிய உத்தரவுப்படி, முதலில் பதவியை இழக்கப் போகும் பெருமையை ரஷீத் மசூது பெறப் போகின்றார். அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்கிய காங்கிரஸ் கட்சியும் இந்தப் பெருமையில் சரித்திரம் படைக்கவுள்ளது!

ஏற்கனவே பலத்த சிக்கலில் இடி மேல் இடி வாங்கி கொண்டு  உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, அடுத்த இடியாக வந்துள்ளது இந்த விவகாரம்.

போகிற போக்கில் மன்மோகன் சிங், சந்தோஷமாக துண்டை உதறிக்கொண்டு கிளம்பி விடுவார் போலிருக்கிறதே…. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால்!


பூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்: ஆய்வில் தகவல்

பூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்: ஆய்வில் தகவல்


பூமியில் இன்னும் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ரஷ்பி பூமியின் சுற்றுப்புறச் சூழல் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்.

அவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியில் மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தினார்கள்.

இந்த ஆய்வில் பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழலாம் என்பது தெரியவந்துள்ளது.

இது பற்றி ஆய்வு நடத்திய விஞ்ஞானி ஆன்ட்ரூ ரஷ்பி கூறியது,

நமது பூமி சூரியனின் வெப்ப மண்டல பகுதிக்குள் செல்லும்போது பூமியின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்.

இதன் காரணமாக கடல் முழுவதும் ஆவியாகி விடும். இந்த கால கட்டத்தில்தான் உயிரினங்கள் பூமியில் வாழ முடியாத நிலை ஏற்படும்.

எங்களது ஆய்வின் மூலம், பூமியில் உயிரினங்கள் இன்னும் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழ முடியும் என்பதை கண்டறிந்துள்ளோம்.

சூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை பயன்படுத்தி , கிரகங்கள் வாழ்க்கை நடத்த சாத்தியமானதா என்பது பற்றி கண்டறிந்துள்ளோம்.

கிரகத்திற்கும் அதன் நடசத்திரத்திற்கும் உள்ள தூரம் மற்றும் அதன் மேற்பரப்பில் உள்ள தண்ணீருக்கு உகந்த வெப்பநிலையைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

விண்மீன்களின் வெப்ப அலை மாதிரிகள் மூலம் கிரகங்களின் வாழத் தக்க நாட்களை கணக்கீடு செய்தோம்.

கிரகங்களில் வசிக்கத்தக்க காலம் எவ்வளவு என்பதை அளக்கும் அளவீடானது, மற்ற கிரகங்களில் எவ்வளவு நாள்கள் வசிக்க முடியும் என்பதை அளவிட பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஒருவேளை இந்த ஆய்வு முடிவு துல்லியமாக இல்லாவிட்டாலும் கூட, பூமியானது 75 சதவீத வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது. பூமிக்கு இன்னும் 25 சதவீத ஆயுள்தான் உள்ளது.

சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 1,000 க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகங்களை வைத்துத்தான் விஞ்ஞானிகளால் கிரகங்களில் வசிக்கத்தக்க கால கட்டத்தை கணக்கிட முடிந்தது.

நாங்கள் இதேபோன்ற 8 கிரகங்கள் மற்றும் செவ்வாய்கிரகத்தின் தற்போதைய வசிக்கத்தக்க கால கட்டத்துடன் பூமியை ஒப்பீடு செய்துள்ளோம்.

எங்களது ஆய்வில் சிறிய கூட்ட நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் நீண்ட காலம் வசிக்கத்தக்கதாக இருப்பதை கண்டறிந்துள்ளோம் என்று ஆன்ட்ரூ ரஷ்பி தெரிவித்தார்.

15வது மனைவியை மணமுடிக்க தயாராகும் சுவாசிலாந்து மன்னர்

15வது மனைவியை மணமுடிக்க தயாராகும் சுவாசிலாந்து மன்னர்



ஆப்ரிக்காவிலுள்ள சுவாசிலாந்து நாட்டின் மன்னர், 15வது மனைவியை தேர்வு செய்து உள்ளார். சுவாசிலாந்தின் மன்னராக 45 வயதான எம்ஸ்வாட்டி ஆட்சி செய்கிறார்.
இவர் மன்னராக பொறுப்பேற்ற பின், தங்கள் பாரம்பரியப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வருகிறார்.

மன்னர், புதிய மனைவியை தேர்வு செய்வதற்காக இங்கு "நாணல் புல்' திருவிழா நடக்கிறது.

இத்திருவிழாவில், நூற்றுக்கணக்கான கன்னி பெண்கள் மேலாடை அணியாமல், நாணல் புல்களை ஏந்தி, மன்னர் முன் ஆடிப் பாடி, அணிவகுத்து செல்வார்கள். இந்த பெண்களில் ஒருவரை மன்னர் தேர்வு செய்து அந்த பெண்ணின் தலையில், சிகப்பு இறகை செருகி, மனைவியாக்கி கொள்வார்.

சுவாசிலாந்து மன்னரின் இந்த செயலுக்கு, இங்குள்ள எதிர்கட்சியினரும், சில நாடுகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

"ஏற்கனவே, சுவாசிலாந்தில், எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம். இதில், மன்னரின் இந்த நடவடிக்கை எய்ட்சை அதிகரிக்க வழி செய்யும் விதத்தில் உள்ளதென எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இதையெல்லாம், மன்னர் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

இந்த ஆண்டும், வழக்கம் போல், கன்னி பெண்களின் அணிவகுப்பை நடத்தி, சின்டிஸ்வா டிலாமினி, என்ற பெண்ணை, 15வது மனைவியாக தேர்வு செய்து உள்ளார். இதற்கான அரசு பூர்வமான அறிவிப்பு வரும், 28ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

மன்னருக்கு, முந்தைய மனைவிகள் மூலம் 24 குழந்தைகள் உள்ளனர். மன்னரின், செக்ஸ் கொடுமை தாங்க முடியாமல், மூன்று மனைவிகள் ஓடி விட்டனர்.

Wednesday, September 18, 2013

பூமியிலிருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில், அண்டவெளியில் ஒலிபரப்பான இந்திய இசை!

பூமியிலிருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில், அண்டவெளியில் ஒலிபரப்பான இந்திய இசை! 


36 ஆண்டு காலம் பயணம் செய்து நமது சூரிய குடும்பத்தைக் கடந்து அண்டவெளியில் நுழைந்துள்ள அமெரிக்காவின் வாயேஜர்-1 விண்கலம், அந்த 'ஆழ்நிசப்த' மண்டலத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தானி இசையை ஒலிபரப்பியுள்ளது.

சூரிய மண்டலத்தைத் தாண்டிச் சென்றுள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வாயேஜர் 1, வாயேஜர் 2: 

வெறுமையான இந்த அண்டவெளியை (Interstellar space) அயனி நிலையிலான (ionized state) ஹைட்ரஜன், ஹீலியம், நியூட்ரினோக்கள் (இவை சூரியனி்ல் நடக்கும் அணு இணைப்பால் உருவாகும் துணை அணு துகள்கள்), மின்காந்த கதிர்வீச்சு ஆகியவை தான் நிரப்பியுள்ளன. வாயேஜர்-1 விண்கலத்துடன் சேர்த்து ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலமும் அந்தப் பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளது.

சூரியனின் கோள்களின் ரகசியங்களை கண்டுபிடித்துவிட்டு... 

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் உருவாக்கிய வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 விண்கலங்கள் 1977ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டன. வாயேஜர்-1 விண்கலம் ஜூபிடர், சனி கிரகங்களை சுற்றிவிட்டும், வாயேஜர்-2 விண்கலம் யுரேனஸ், நெப்டியூன் கிரங்களுக்கு அருகே சென்று படம் பிடித்துவிட்டும் இப்போது இந்த அண்டவெளியை அடைந்துள்ளன.

இந்த இரு விண்கலங்களும் ஜூபிடர் (வியாழன் கிரகம்), சனி, யுரானஸ், நெப்டியூனின் 23 நிலவுகளைக் கண்டுபிடித்தன, ஜூபிடரின் நிலவான 'லோ'-வில் வெடித்துச் சிதறும் எரிமலை, சனி கிரகத்தைப் போல ஜூபிடருக்கும் வளையங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தன.

கார்ல் சாகன்... 

நெப்டியூனில் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்கள், நியூட்டனின் நிலவான ட்ரைடனில் இருந்து நைட்ரஜன் வாயு அண்டவெளியில் பாய்வது, மேலும் ஜூபிடரின் நிலவான 'லோ'-விலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைத் துகள்கள் ஒன்று சேர்ந்து தான் ஜூபிடருக்கு வளையத்தை உருவாக்கியது என்ற உண்மையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.

அமெரிக்காவின் முன்னணி விண்ணியலாரான கார்ல் சாகன் தலைமையில் தான் இந்தத் திட்டம் உருவானது. அப்போது அண்டவெளியில் ஒலிபரப்ப உலகம் முழுவதும் இருந்தும் பல இசைகள் தேர்வு செய்யப்பட்டன.

ஹிந்துஸ்தானி இசை... 

இதில் இந்தியாவில் இருந்து கேசர் பாய் கேர்கர் பாடிய 'Jaat kahan ho' என்ற ஹிந்துஸ்தானி பாடலை தேர்வு செய்தார் கார்ல் சாகன். கேசர் பாய் கேர்கர் கோவாவைச் சேர்ந்தவர் ஆவார். இந்தக் கட்டுரையை எழுதி முடித்தபோது பூமியில் இருந்து 18,783,364,273 கி.மீ. பயணித்துவிட்ட வாயேஜர்-1 இந்தப் பாடலை சமீபத்தில் ஒலிபரப்பியது. அதாவது பூமியில் இருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில் இந்தப் பாடல் ஒலிபரப்பானது.

வாயேஜர் இப்போ எங்கே இருக்கு?:

வாயேஜர்- 1 கடந்து கொண்டிருக்கும் தூரத்தை உடனுக்குடன் அறிய


பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு... உணவுப் பணவீக்கம் 18.18... நெலம ரெம்ப்ப மோசம்!!

பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு... உணவுப் பணவீக்கம் 18.18... நெலம ரெம்ப்ப மோசம்!! 


நாட்டில் விலைவாசி உயர்வு வரைமுறை இல்லாமல், கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் போய்விட்டது! மொத்தவிலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்ந்துவிட, உணவுப் பணவீக்கம் 18.18 சதவீதமாகிவிட்டது!

குறிப்பாக உணவுப் பொருள்களின் விலையில் அசாதாரண உயர்வு காணப்படுகிறது. வெங்காயத்தின் விலை கடந்த ஒரு ஆண்டில் 245 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையில் 77.81 சதவீத உயர்வு காணப்படுகிறது. 


அரிசி, தானியங்கள், முட்டை, இறைஞ்சி, பால் பொருட்கள் மற்றும் மீன் போன்றவற்றின் விலையிலும் அசாதாரண ஏற்றம் காணப்படுகிறது. உருளைக் கிழங்கு விலை மட்டும் 15 சதவீதம் குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிடுகையில். பருப்பு வகைகளின் விலைகளும் 14 சதவீதம் குறைந்துள்ளது. சர்க்கரை, சமையல் எண்ணெய் வகைகளின் விலையில் பெரிய மாற்றமில்லை. கடந்த ஜூலையில் பணவீக்கம் 5.79 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8.01 சதவீதமாக இருந்தது.

உணவுப் பணவீக்கம் (நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில்) 18.18 சதவீதத்தை எட்டுவது கடந்த மூன்றாண்டுகளில் இதுவே முதல்முறை. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன், "ரூபாய் மதிப்பு வீழ்ச்சிதான் இதற்கு முக்கிய காரணம். விரைவில் நிலைமை சரியாகிவிடும்," என்றார்.


உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! 



தாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்து கொள்ளலாம்.

அவ்வாறு கட்டுக்கடங்கா உணர்ச்சிகளுக்கிடையே உடலுறவால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கீழே தொகுத்துள்ளோம். பொதுவாக செக்ஸ் என்பது இன்பம் கொடுப்பது, கணவன் அல்லது மனைவியிடம் நெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அதனால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன. இப்போது அந்த நன்மைகளைப் பார்ப்போமா!!!

மன அழுத்தத்தை குறைக்கிறது 

உடலுறவு மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையே சமநிலையை உருவாக்க உதவுகிறது. மேலும் உடலுறவு கொண்ட பின்பு, மூளையானது எண்டார்பின் (Endorphin) என்னும் ஹார்மோனை வெளியிட்டு, மனதில் களிப்புடன் கூடிய நிலையை உருவாக்குகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் 

உடலுறவு கொள்ளுதலை வழக்கமாக வைத்திருந்தால், உடலில் வைரஸை அழிக்கும் இரசாயனங்கள் உருவாகும். மேலும் ஆய்வு ஒன்றில், வழக்கமாக உடலுறவு கொள்ளுதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது எனவும், அதனால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது எனவும் தெரிவிக்கின்றன.

நிம்மதியான தூக்கம் வர உதவுகிறது 

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், படுக்கையில் சாயும் முன்பு உடலுறவு கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும்.

இதய ஆரோக்கியம் 

உடலுறவு வைத்து கொள்ளாத மனிதரை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கும் அதிகமாக உடலுறவு கொள்ளும் மனிதருக்கு இதய நோய் அபாயம் குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

சரிவிகித ஹார்மோன்கள் 

பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் இருந்தால், உடலுறவு கொள்ளுதல் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் மற்றும் தசை பிடிப்புகளையும் குறைக்கும். ஏனெனில் உடலுறவானது, உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சரிவிகிதப்படுத்தும்.

இடுப்பு தசைகள் வலுப்பெறும் 

உடலுறவு கொள்ளும் போது பல தசைகளை உபயோகப்படுத்துவதால், இடுப்பு தசைகள் வலுவாகும். மேலும் உடலுறவு கொள்ளுதல் முதுகு மற்றும் மைய பகுதிகளை வலுப்படுத்தும்.

அழகு சேர்க்கும் 

உடலுறவை பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை என்றே சொல்லலாம். ஏனெனில் உடலுறவின் போது, உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் இரண்டு மடங்காக சுரக்கிறது. இதனால் பெண்களுக்கு கூந்தல் பொலிவோடும், சருமம் மென்மையாகவும் மாறுகிறது.


வாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்தரவு

வாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்தரவு




ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் புதிய உத்தரவு அமலாகியுள்ளது. அதாவது பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமல்படுத்தியுள்ளதாம். பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம்.

நாகரீகம்.. ப்ளீஸ் 

ரயில்கள், பேருந்துகளில் ஜோடிகளாகப் போவோர் மிகவும் நாகரீகமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முத்தம் கூடவே கூடாது 

தம்பதிகள் நெருக்கமாக அமருவது, வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

முத்தச் சத்தம் தாங்க முடியலை.. 

வியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வியனர் லினியன் என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு நிறையப் புகார்கள் வந்ததாம். அதில், பொது போக்குவரத்து வாகனங்களில் பப்ளிக்காக முத்தம் கொடுப்போரால் பெரும் சங்கடம் ஏற்படுவதாக மக்கள் குமுறியிருந்தனராம்.

ஹலோ..நான் பேசுறது கேட்குதா.. 

அதேபோல செல்போன்களில் படு சத்தமாக பேசுவதையும் தடை செய்துள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடையூறாக இருப்பதால் இந்த தடை. இனிமேல் மெதுவாகத்தான் செல்போனில் பேச வேண்டுமாம்.

சீனச் சாப்பாடு, கபாபுக்கும் தடை 

அதேபோல சீனச் சாப்பாடு, பாஸ்ட் புட், கபாப் போன்றவற்றை ரயில்கள், பஸ்களில் வைத்து மொச்சக் மொச்சக் என்று சாப்பிடுவதற்கும் தடை போட்டு விட்டனர்.

ஆள் வைத்துப் பிடிப்பார்கள் 

இந்த உத்தரவுகளை கண்காணிக்கவும், தவறு செய்வோரைக் கையும் களவுமாக பிடிப்பதற்கும் ஆட்களை நியமித்துள்ளனராம்.

நிர்வாணத்திற்கும் தடை 

இதேபோல பலர் திடீரென டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு நிர்வாணமாக காட்சி தருவதும் அங்கு சகஜமாகும். அதற்கும் தடை போட்டுள்ளனர்.

ஓடும் ரயிலில் குஜால் 

ஒருமுறை ஓடும் ரயிலிலேயே ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டு சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமும் அங்கு நடந்துள்ளதாம்.

குதிரையுடன் வந்த ஜாக்கி 

இன்னொரு முறை ஒரு நபர் தான் வளர்த்து வரும் குதிரையுடன் ரயிலில் பயணித்து அத்தனை பேரையும் டென்ஷனாக்கினாராம்.


கம்ப்யூட்டர் கோளாறு: அமெரிக்காவில் விமான டிக்கெட்டுகள் இலவசமாக விற்பனை

கம்ப்யூட்டர் கோளாறு: அமெரிக்காவில் விமான டிக்கெட்டுகள் இலவசமாக விற்பனை


அமெரிக்காவில் செயல்படும் யுனைடெட் ஏர்லைன்ஸின் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறால் விமான டிக்கெட்டுகள் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் ஏர்லைன்ஸின் கம்ப்யூட்டரில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. 

இதனால் கடந்த வியாழக்கிழமை அந்நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தாங்க முடியவில்லை. கம்ப்யூட்டர் கோளாறால் விமான டிக்கெட்டுகள் கட்டணமில்லாமலும், மிகக் குறைந்த கட்டணத்திற்கும் ஆன்லைனில் கிடைத்தன. பயணிகள் அமெரிக்க பாதுகாப்பு கட்டணமான 5 முதல் 10 டாலர் மட்டும் கட்ட வேண்டி இருந்தது. இந்த கோளாறு குறித்து அறிந்த விமான நிறுவனம் தனது இணையதளத்தை நேற்று மூடியது.

மேலும் கட்டணமில்லாமல் மற்றும் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த அனைவரும் அந்த கட்டணத்திலேயே பயணம் செய்யலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஹவாய் மற்றும் லாஸ் வேகாஸ் உள்ளிட்ட பிரபல இடங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் மதுரை விஞ்ஞானி வீரபத்திரன் ராமநாதன்

சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் மதுரை விஞ்ஞானி வீரபத்திரன் ராமநாதன் 




இந்திய விஞ்ஞானியான வீரபத்திரன் ராமநாதனுக்கு ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருது வழங்கப்பட உள்ளது. மதுரையில் பிறந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்துவிட்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் முதுகலைப்பட்டம் பெற்றுவிட்டு முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்றவர் வீரபத்திரன் ராமநாதன். 

அங்கு அவர் சுற்றுச்சூழல் குறித்து பல ஆய்வுகளை செய்துள்ளார். இந்நிலையில் ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. 

இந்த விருது அரசு தலைவர்கள், தனியார் நிறுவனத்தார் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அவர் தற்போது கலிபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓஷனோகிராபியில் பேராசிரியராக பணிபுரிகிறார். காற்று மாசால் ஆசியாவில் தட்பவெட்ப நிலை மாறுவதை அவர் கடந்த 1997ம் ஆண்டு தனது சர்வதேச குழுவுடன் சேர்ந்து கண்டுபிடித்தார். 

இந்த உயரிய விருதை பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று ராமநாதன் தெரிவித்துள்ளார். பிளாக் கார்பன் மற்றும் மீத்தேன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த தேவையான 16 நடவடிக்கைகள் குறித்த ஆய்வை கடந்த 2011ம் ஆண்டில் சமர்பித்த குழுவின் துணை தலைவராக ராமநாதன் இருந்தார். அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் வரும் 2050ம் ஆண்டுக்குள் சுவாசக் கோளாறுகளால் ஆண்டுதோறும் பலியாகும் 2.5 மில்லியன் பேரின் உயிரை காப்பாற்றலாம், 32 மில்லியன் பயிர் சேதத்தை கட்டுப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

லண்டனில் வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்

லண்டனில் வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்


இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) ஆசிரியை ஆக பணி புரிகிறார்.
இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்றே (வியாழக்கிழமை) டயானாவுக்கு பள்ளி வகுப்பறையிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

அன்று பள்ளிக்கு சென்ற டயானா, தலைமை ஆசிரியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து சக ஆசிரியைகளிடம் தெரிவித்த டயானா, கணவர் விஜய்க்கும், உடனே வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துச்செல்லுமாறு டெலிபோனில் கூறினார். அவரும் விரைந்து பள்ளிக்கு சென்றார்.

இதற்குள் டயானாவுக்கு வலி அதிகரித்தது. சக ஆசிரியைகள் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு போன் செய்தனர். ஆம்புலன்சும், கணவரும் வருவதற்கு முன்னதாக, வகுப்பறையில் படுக்க வைக்கப்பட்டிருந்த டயானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு ஜோனா என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் பிரசவம் நடந்த வகுப்பறைக்கும், பள்ளி நிர்வாகம் ஜோனா வகுப்பறை என்று பெயர் சூட்டியது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

மனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாளை கணக்கிடலாம்

மனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாளை கணக்கிடலாம்

ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது. அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

ஒரு மனிதன் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்

ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்.

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு.

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு.

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

எச்சரிக்கை !! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள்

எச்சரிக்கை !! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள் 



#‎எச்சரிக்கை :- Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும். இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். 

மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும். அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்? இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது. தீர்வு தான் என்ன? Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். 

தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான். எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்