Thursday, October 18, 2012

வலுக்கிறது காற்றழுத்தம் தமிழகத்தில் மழை நீடிக்கும்..!

வலுக்கிறது காற்றழுத்தம் தமிழகத்தில் மழை நீடிக்கும்..!






வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று, வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகாவில் இதுவரை பெய்து வந்த தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தென் கிழக்கு வங்கக் கடலில் நேற்று முன்தினம் மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. சென்னையிலும் பல இடங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 25 மிமீ மழை பெய்துள்ளது.  இந்நிலையில், தென் கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டு இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோரப்பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதலாம் பதிப்பு


 இலங்கை அருகே தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் லட்சத் தீவு பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு இரண்டு நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும்  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியதாவது: கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை பெய்து வந்த தென் மேற்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்தது. அடுத்து பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன.

வழக்கமாக அக்டோபர் 20ம் தேதியில் தொடங்கும் வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே தொடங்குவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக  இலங்கை அருகே தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மெல்ல வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரத் தொடங்கும். அப்படி நகரும் போது தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். 

இவ்வாறு ரமணன் கூறினார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று காலை முதலே தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்துகொண்டே இருந்தது. நேற்று மாலை மழையின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

அதிகபட்சமாக நேற்று பழனியில் 90 மிமீ மழை பெய்துள்ளது. பெரியபாளையம் 80 மிமீ, தாராபுரம், வால்பாறை 70 மிமீ, சூளூர், ராமநாதபுரம் 60 மிமீ, பெரியகுளம், திருவண்ணாமலை, இளையான்குடி 50 மிமீ, சத்திரப்பட்டி, பெரம்பலூர் 40 மிமீ, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, கல்லணை, தொழுதூர், பாளையங்கோட்டை, கோவை விமான நிலையம், தேனி, வேம்பாவூர், சமயபுரம், வேடச்சந்தூர், ஸ்ரீவைகுண்டம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, லால்குடி 30 மிமீ மழை பெய்துள்ளது.

பிரிட்டன் பெண் எழுத்தாளர் ஹிலாரி மேன்டலுக்கு 2-வது முறையாக புக்கர் பரிசு

பிரிட்டன் பெண் எழுத்தாளர் ஹிலாரி மேன்டலுக்கு 2-வது முறையாக புக்கர் பரிசு




பிரிட்டனை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹிலாரி மேன்டல் எழுதிய வரலாற்றுப் புதினத்துக்கு மேன் புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் நாடுகள் மற்றும் ஜிம்பாப்வேயை சேர்ந்த எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுதும் சிறந்த நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பரிசை பெறும் புத்தகம் லண்டனில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரிட்டனை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹிலாரி மேன்டல் எழுதியுள்ள "பிரிங் அப் தி பாடீஸ்" என்ற வரலாற்று புதினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த 1535ஆம் ஆண்டின் வரலாற்று பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை தெரிவு செய்த நடுவர் குழுவின் தலைவர் பீட்டர் ஸ்டோதார்டு கூறுகையில், ஹிலாரி மேண்டல் மிகச்சிறந்த நவீன ஆங்கில எழுத்தாளர். வரலாற்றுக் கதை எழுதும் முறையை அவர் மாற்றி அமைத்துள்ளார் என்றார்.

ஹிலாரி மேன்டலுக்கு சுமார் ரூ.43 லட்சம் மதிப்புடைய புக்கர் பரிசு கிடைப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே அவர் எழுதிய வோல்ஃப் ஹால் என்ற புத்தகம் 2009ஆம் ஆண்டு இப்பரிசை வென்றது.

இந்தப் புதினம் பிரிட்டனின் எட்டாவது ஹென்றி மன்னரின் அவையில் இடம்பெற்ற தாமஸ் க்ராம்வெல் என்பவரை கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். இரு முறை புக்கர் பரிசு வென்ற ஒரே பெண் எழுத்தாளர் ஹிலாரி மேன்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது நாவலுக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், இப்பரிசுக்காக 20 ஆண்டுகள் காத்திருந்தால், ஒரே நேரத்தில் இரண்டு பரிசுகள் கிடைக்கும் போலிருக்கிறது என்று நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்தார்.

சந்திரனின் விண்கல்: ரூ.18 லட்சத்துக்கு ஏலம் போனது

சந்திரனின் விண்கல்: ரூ.18 லட்சத்துக்கு ஏலம் போனது







சந்திரனில் இருந்து விழுந்த சுமார் 1 3/4 கிலோ எடையுள்ள விண்கல் நியூயோர்க் நகரில் ஏலம் விடப்பட்டது.
இந்த விண்கல்லை ஏலத்தில் எடுக்க ஏராளமான வரலாற்று ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

இந்த விண்கல் சாம்பல் நிறத்தில் பாலீஸ் செய்யப்பட்டது போன்று காணப்படும்.

இதே போன்று சைபீரியாவில் கண்டெடுக்கப்பட்ட சந்திரனின் விண்கல் ரூ.24 லட்சத்துக்கு ஏலம் போனது.

இந்த விண்கற்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 12 மடங்கு அதிகமாக ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடற்கரைக்கு வெகு அருகே வந்த மீன்கள்

கடற்கரைக்கு வெகு அருகே வந்த மீன்கள்





இலங்கையில் மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் இன்று புதன் கிழமை வழமைக்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்ததால் பொது மக்கள் சர்வ சாதாரணமாக மீன்பிடித்ததை அங்கு காணக் கூடியதாக இருந்தது.

சூடை,கீரி ,சூரன் ,கணவாய் உட்பட பல்வேறு வகையான மீன் இனங்கள் காலை தொடக்கம் மாலை வரை அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்ததாக மாவட்ட மீன் பிடித்துறை இயக்குனர் எஸ்.ரி.ஜோர்ஜ் கூறுகின்றார்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கு விரைந்து மீன்களை பிடித்து சென்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

குறித்த மீன் இனங்கள் கடலில் குளிரான பிரதேசத்தில் நடமாடுவதாகக் கூறும் கிழக்கு பல்கலைக்கழக விலங்கியல் துறை தலைவர் கலாநிதி பி.வினோபாவா சில சமயம் கரையோரத்தில் வெப்ப நிலை குறைந்த நீரோட்டங்கள் வருவதால் இது போன்றதொரு நிலைமை ஏற்படுகிறது. இது காலநிலை மாற்றத்தின் ஊடாக நிகழும் மாற்றங்களாகும் என்று தெரிவித்த அவர் இந்த மாற்றங்களை அறிநது கொள்ள அவுஸ்திரேலியாவில் இருப்பது போன்ற சமுத்திரவியல் ஆய்வு மையமொனறு நாட்டில் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்;

இந்த மீன்களை உண்பதால் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றும் கிழக்கு பல்கலைக்கழத்தின் விலங்கியல் துறை தலைவர் கலாநிதி .பி. வினோபாவா மேலும் கூறுகின்றார்

பீஜிங்கில் உருவாகும் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம்

பீஜிங்கில் உருவாகும் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம்



 
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா விமான நிலையம் தான் தற்போது உலகிலேயே மிக பெரியதாக உள்ளது.
இங்கு ஆண்டுக்கு 8 கோடியே 90 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பீஜிங் மற்றும் லண்டன் ஹுத்ரு விமான நிலையங்கள் திகழ்கின்றன.

சீன தலைநகர் பீஜிங்கில் சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு 7 கோடியே 50 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இங்கு புறநகரில் மற்றொரு விமான நிலையம் கட்டப்பட உள்ளது. இது 55 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு உடையதாக இருக்கும்.

இங்கு ஆண்டொன்றுக்கு 13 கோடி பேர் வந்து செல்ல முடியும். இதற்கு “பீஜிங் டாசிங் சர்வதேச விமான நிலையம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் கட்டுமான திட்டத்தை நெதர்லாந்து விமான நிலைய ஆலோசனை நிலையமான ‘நாகோ’ தயாரித்துள்ளது.

இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது, உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் என்ற அந்தஸ்தை பெறும். இதை வருகிற 2017ம் ஆண்டில் திறக்க சீனா திட்டமிடப்பட்டுள்ளது.











மரக்கறி, பழவகைகளின் விதைகளும் மருத்துவ குணமுடையவே


மரக்கறி, பழவகைகளின் விதைகளும் மருத்துவ குணமுடையவே



வீட்டில் சமைப்பதற்கு பயன்படுத்தும் காய்கறிகளின் விதைகளை எப்போதும், தூக்கிப் போடுவோம். ஏனெனில் அவற்றில் எந்த ஒரு ஆரோக்கியமும் இல்லை என்பதற்காகத் தான். தெரிந்தோ, தெரியாமலோ, இதுவரை நாம் தூக்கிப் போட்டுவிட்டோம். ஆனால் இனிமேல் அவற்றின் விதைகளைத் தூக்கிப் போட வேண்டாம். ஏனெனில் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களின் விதைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. அத்தகைய காய்கறி மற்றும் பழங்களின் விதைகளால், நமது உடலில் ஏற்படும் பல நோய்களைத் தடுக்கலாம். எனவே இனிமேல் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடும் போது, அதன் விதைகளையும் கண்டிப்பாக சாப்பிடுங்கள். இப்போது எந்த காய் மற்றும் பழங்களின் விதைகளில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

பூசணிக்காய் விதை
டயட் மேற்கொள்வோருக்கு பூசணிக்காயின் விதைகள் மிகவும் சிறந்தது. ஏனெனில் அவற்றில் குறைந்த அளவு கலோரியும், கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அதில் எலும்புகளுக்கு வலுவூட்டுகின்ற, சிறுநீரகக் கற்களை கரைக்கக்கூடிய சத்துக்களான இரும்பு மற்றும ஜிங்க் இருக்கின்றன. மேலும் குடலில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் இருந்தால், பூசணிக்காயின் விதைகளை சாப்பிட்டால் சரியாகிவிடும். வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் இருந்தால், அவற்றை பூசணிக்காயின் விதைகள் சரிசெய்துவிடும்.

தக்காளி விதைகள்
சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங் என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். இப்போது சொல்வதை நம்புவீர்களோ, இல்லையோ, தக்காளியின் விதைகளை சாப்பிட்டால், விரைவில் செரிமானம் ஆகாது. ஆனால் மலச்சிக்கலை சரிசெய்யும். மேலும் செரிமானம் நடைபெற்று வெளியேறும் செரிமானப் பாதையை சுத்தம் செய்யும்.

குடைமிளகாய் விதைகள்
தற்போது பல வகையான குடைமிளகாய் வந்துள்ளது. ஆனால் அதில் பெல் பெப்பர் என்னும் குடை மிளகாயில் தான் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் இதனை சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் குடைமிளகாயை சமைக்கும் போது, அதிலுள்ள விதையை தூக்கிப் போட்டுவிட்டு, அதன் சதையை மட்டும் தான் சமைப்பார்கள். இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். ஏனெனில் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. அதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும். ஏனெனில் அந்த விதையில் வயதான தோற்றத்தை தடுக்கும் லைகோபைன் என்னும் பொருள் உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் இளமையோடு காட்சியளிக்கலாம்.

பப்பாளி விதைகள்
அனைவருக்கும் பப்பாளியின் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியும். ஆனால் அதன் விதைகளில் எத்தனை சத்துக்கள் உள்ளன என்பது தெரியாது. எப்படி பப்பாளியின் சதையில் நிறைய சத்துக்கள் உள்ளதோ, அதேப் போல் அதன் விதைகளிலும் உள்ளது. பப்பாளியின் விதைகளை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் இருக்கும் டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறுவதோடு, செரிமானத்தை அதிகரிக்கிறது. அதிலும் வாயுத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு ஸ்பூன் பாப்பாளியின் விதையை சாப்பிட்டால் சரியாகிவிடும். வேண்டுமென்றால் அதனை காய வைத்து, உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். உடல் நலத்திற்கு மட்டும் இது நல்லதல்ல, அழகிற்கும் தான் நல்லது. வேண்டுமென்றால் அதனை ஃபேஸ் பேக்கிற்கு பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக மின்னும்.

மாதுளை விதைகள்
இனிமையான சுவையைக் கொண்ட மாதுளை பழம் முழுவதுமே விதைகளால் மட்டும் தான் நிரம்பியுள்ளது. இதனை யாரும் தூக்கிப் போடமாட்டார்கள். ஆனால் அதன் சிறப்பான பலனை பற்றி சிலருக்கு தெரியாது. சிலர் அதன் ஜூஸை மட்டும் சாப்பிட்டுவிட்டு, விதையை துப்பிவிடுவார்கள். ஆனால் அதன் விதையை டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டால், உடல் எடை ஈஸியாக குறையும். அதனை ஒரு ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். மாதுளையில் இருக்கும் பைட்டோகெமிக்கலில், கேன்சர், டியூமர், இதய நோய் போன்றவற்றை தடுக்கும் பாலிஃபீனால் இருக்கிறது. ஆகவே இந்த பழத்தை சாப்பிட்டு, உடலை நன்கு பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்






கருப்பாக இருகிறீங்களா! கவலைப்படாதீங்க

கருப்பாக இருகிறீங்களா! கவலைப்படாதீங்க !





இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகஅழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும். அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத்தன்மையை குறைவு படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

1. வெண்ணெய் பழத்தில் இருக்கும் ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் ஈ, நிறமி செல்லான மெலனின் அளவை கட்டுப்படுத்தும்.அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்பழ (Avocado) பேஸ்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றி நன்கு கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முகத்தில் இருக்கும் அளவுக்க அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறையும். முகமும் அழகாக, பொலிவோடு இருக்கும்.

2. பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

3. 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும். இது மிகவும் சிறந்த இயற்கையான வழி.

4. சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.

5. கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

மேற்கூரியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்.

பிஸ்கட் கேக் சாப்பிடும் முன் கொஞ்சம் யோசியுங்களேன்

பிஸ்கட் கேக் சாப்பிடும் முன் கொஞ்சம் யோசியுங்களேன்




லேசாக பசி எடுத்தாலே பிஸ்கெட் சாப்பிடும் பெண்கள்தான் அதிகம். ஏனெனில் பசி அடங்குவதோடு சுவையாகவும் இருக்கும் என்பதாலேயே நொறுக்குத்தீனிக்காக அதிக அளவில் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை பெண்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் இதுபோன்று பிஸ்கெட் மற்றும் கேக் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 60000த்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோய்க்கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது.

ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என்ற ரீதியிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 1987 ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்களின் வாழ்க்கை முறை, உணவு, எடை போன்றவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல் பத்தாண்டுகள் கழித்து அவர்களிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 729 பெண்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு ஏற்படுவதாகத் தெரியவில்லை என்று கூறும் இந்த ஆய்வு பிஸ்கட்டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை உண்பதால் புற்றுநோய் வாய்ப்பு 42% அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 6,400 பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுகிறது என்றும் இதில் 1,000 பேர் மரணமடைவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
பெண்களை அதிகம் பாதிப்பது கருப்பை புற்றுநோயும், மார்பகப்புற்றுநோயும்தான் ஆனால் பிஸ்கெட், கேக் சாப்பிட்டால் கருப்பை புற்றுநோய் வரும் என்று பீதியை கிளப்பியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வு மற்ற ஆய்வுகளின் முடிவுகளுடன் ஒத்துப் போகுமென்றால் கவலையளிக்கும் ஒரு ஆரோக்கியப் பிரச்ச்னையாகி விடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்கட்டுரை டெய்லி மெயில் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், ஐரோப்பிய பாணியில் கொழும்பில் அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறை

சிங்கப்பூர், ஐரோப்பிய பாணியில் கொழும்பில் அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறை






சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளைப் போன்று அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறையை கொழும்பிலும், அதன் அயல் நகரங்களிலும் முன்னெடுக்க இலங்கையின் போக்குவரத்து அமைச்சு பாரிய திட்டங்களை வகுத்துள்ளது.
யுத்தம் முடிவுற்ற பின்னர் கொழும்பு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் இத்திட்டம் அதிக முக்கியத்துவம் பெறுவதுடன் வாகன நெரிசல் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையு மெனவும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

இத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலான சாத்தியவள கற்கையினை அமைச்சு ஜய்க்கா நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது.

அதிநவீன போக்குவரத்து திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பயிற்சிப்பட்டறை நேற்று கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது உரையாற்றிய செயற்திட்ட குழுத் தலைவர் வாச்சி டொமகாசு, திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏதுவாக வீடுகளில் கருத்துக் கணிப்புகள் நடத்த தீர்மானித்திருப்பதனால், பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இத்திட்டத்திற்கான முழுமையான செலவீனம் இன்னமும் மதிப்பிடப்படவில்லையென சுட்டிக்காட்டிய அமைச்சின் செயலாளர் கெ. தம்மிக்க பெரேரா, எதிர்வரும் 21 மாதங்களுக்குள் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமெனவும் கூறினார்.

கொழும்பிலும் அதன் அயல் நகரங்களிலும் அதிநவீன வீதி போக்குவரத்து முறையை ஏற்படுத்த ஜப்பானிய அரசாங்கத்தின் ஜய்க்கா நிறுவனம் நிதி உதவி மற்றும் முழுமையான ஒத்துழைப்பினை அரசாங்கத்திற்கு வழங்கி வருகிறது.

2014ஆம் ஆண்டு ஜனவரியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. வாகன நெரிசல், வாகன தரிப்பிடத்திற்கு போதிய இடவசதியின்மை, பாதசாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை, வீதி விபத்துக்கள், சூழல் மாசடைதல், பஸ் போக்குவரத்திலுள்ள குறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களுக்கு விமோசனமாக அமையும் வகையிலேயே இத்திட்டத்தின் சாத்தியவள கற்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

305 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.???

305 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.???





ஸ்கொட்லாந்து சுதந்திரம் பற்றி 2014ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துவது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் கமென்டும் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் பிரகாரம் 305 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பாக நடக்கவுள்ள கருத்துக்கணிப்புக்கான நிபந்தனைகளை முறையாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பல மாதங்களாக நடந்த கருத்தாடலுக்கு இவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு 1707ஆம் ஆண்டில் யூனியன் சட்டம் மூலம் இணைக்கப்பட்ட ஸ்கொட்லாந்தின் பிரிவுக்கு வழிவகுக்கக்கூடும்.

2014 இலையுதிர் காலத்தில் வாக்கெடுப்பை நடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்னரும் பின்னரும் எடின்பரோவின் இந்த இருவரும் கைகுழுக்கிக்கொள்வர். இந்த வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பாக ஆம் இல்லை என்ற ஒரு தெரிவை மட்டுமே வழங்கும். கமெருன் விரும்பாத போதிலும் 16 வயது இளைஞர்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வர். இந்த ஒப்பந்தம், 5 மில்லியன் ஸ்கொட்லாந்து மக்களிடையே கருத்துக் கணிப்பை நடத்தும் அதிகாரத்தை ஸ்கொட்லாந்து அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. எட்வர்ட் ஐஐ மன்னரின் படைகளை ஸ்கொட்லாந்து இராணுவம் துவம்ஸம் செய்தபோது பனொக்பேண் யுத்தத்தின் 700 ஆண்டுகள் பூர்த்தியாவதால் 2014ஆம் ஆண்டு சிறப்புபெறுகிறது.

இப்போது நாம் செயன்முறைப் பற்றி கவனித்துவிட்டோம். ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பதால் ஸ்கொட்லாந்தும் ஸ்கொட்லாந்துடன் இருப்பதால் ஐக்கிய இராச்சியமும் நன்மையடையும் என கமரொன் கூறினார். ஐக்கிய இராச்சியத்தை பேணவே, மக்கள் வாக்களிப்பர் என நம்புகிறேன் என அவர் மேலம் குறிப்பிட்டார். ஐக்கிய இராச்சியம் (ஊனிடெட் Kஇங்டொம், பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ ஊK அல்லது பிரித்தானியா (Bரிடைன்) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன.

நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது. பல ஒன்றிணைப்புச் சட்டங்களின் வாயிலாக, (வேல்ஸை உள்ளடக்கிய) இங்கிலாந்து இராச்சியத்தோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. 1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய இராச்சியத்துடனே தொடர்ந்தன.

ஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, வடக்குக் கடல், ஆங்கிலக் கால்வாய், செல்டிக் கடல், ஐரியக் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது. பெரிய பிரித்தானியா » அல்லது பிரித்தானியா என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகள்).பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சிய ஒன்றிய சட்டம் 1707 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை வடக்குப் பிரித்தானியா என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை தெற்குப் பிரித்தானியா என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது.

ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் பிரித்தானியா என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய இராச்சியத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய இராச்சியம் என்பதற்கு பெரிய பிரித்தானியா என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்த பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது. இது மனவருத்ததை ஏற்படுத்தலாம். பிரித்தானியத் தீவுகள் என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, மான் தீவு, ஈச்லெ ஒf Wஇக்க்ட், ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.

எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய இராச்சியத்திற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், வடக்கு அட்லாந்தியத் தீவுகள் என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது.


Wednesday, October 17, 2012

காருக்குள் புகைபிடித்தல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காருக்குள் புகைபிடித்தல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை






காருக்குள் அமர்ந்து புகைப்படிக்கும்போது உள்ளிருக்கின்ற காற்றில் நச்சுப் பொருட்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்துவைத்துக்கொண்டு புகை பிடித்தாலும், காரில் ஏசியை ஓடவிட்டுக்கொண்டு புகைபிடித்தாலும்கூட நச்சுப் பொருட்கள் அதிகமாகவே இருக்கிறது என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தொடர்புடைய விடயங்கள்

உடல்நலம்காரின் முன்னிருக்கையில் அமர்ந்து ஒருவர் புகைக்கும்போது பின்னால் அமர்ந்திருக்குக்கக்கூடியவர்களை இந்த நச்சுப் பொருட்கள்பாதிக்கும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புகைக்கும்போது காருக்குள் காற்றில் நச்சுப்பொருட்களை அளவை 85 கார்ப் பயணங்களில் கணக்கிட்டு ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக டொபாக்கோ கண்ட்ரோல் ஜர்னல் என்ற புகைப்பழக்க ஒழிப்பு விழிப்புணர்வு சஞ்சிகை கூறுகிறது.

காருக்குள் அமர்ந்து புகைபிடிப்பதற்கு தடையைக் கொண்டுவர வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவ கழகம் விரும்புகிறது.

குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு
"காருக்குள் புகைப்பிடிப்பவர்களால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பின்னால் அமர்ந்திருக்கின்ற குழந்தைகள்தான். ஏனென்றால் குழந்தைகள் ஒரு நிமிடத்தில் அதிக தடவை மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுபவர்கள் ஆவர், மேலும் அவர்களது நோய் எதிர்ப்பு கட்டமைப்பு முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. எனவே மற்றவர்கள் விடுகின்ற புகையை சுவாசிப்பதால் இவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு அதிகம்", என அபர்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷான் செம்பிள் கூறுகின்றார்.

29 வயதிலேயே முதுமையை நினைத்து கவலைப்படும் பெண்கள்

29 வயதிலேயே முதுமையை நினைத்து கவலைப்படும் பெண்கள்





முதுமை அடைவதை நினைத்து பெண்கள் 29 வயதிலிருந்தே கவலைப்பட தொடங்குகின்றனர் என்பது புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சரும பராமரிப்பு லோஷன் தயாரிக்கும் லண்டன் நிறுவனமொன்று மனதளவிலும், உடலளவிலும் முதுமையை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து 2 ஆயிரம் பெண்களிடம் கருத்துக்கணிப்பும், ஆய்வும் நடத்தியது.

இதில், பெரும்பாலான பெண்கள் பதின்வயதில் அதாவது 20 வயது வரை முதுமை குறித்த சிந்தனை இல்லாமல் மகிழ்ச்சியாகவே உள்ளனர். 29 வயதிற்கு பிறகு தங்களது தோற்றத்திற்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலை மற்றும் சிந்தனை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு கவலைப்பட்டால் மனம் மற்றும் உடல்நிலை பாதிப்படையும். முதுமை முன்கூட்டியே தாக்கும். இது ஆரோக்கியத்தை பாதித்து பல நோய்களை உண்டாக்கும்.

எனவே ஊட்டச்சத்துள்ள உணவுகள், தொடர் தியானம் மற்றும் உடற்பயிற்சி, நடைபயிற்சியுடன் அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டால் முதுமை கவலை, மன உளைச்சல் இல்லாமல் ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

ஜிமெயில் Search-ல் புத்தம் புதிய வசதி

ஜிமெயில் Search-ல் புத்தம் புதிய வசதி




இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நபர்கள் ஜிமெயில் கணக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுவரையிலும் நமக்கு வந்த மின்னஞ்சல் செய்திகளை தேடும் போது, அனுப்பி வைத்த நபரின் பெயர், மின்னஞ்சல் மற்றும் செய்தியின் தலைப்பு போன்றவற்றை பயன்படுத்தியே தேடுவோம்.

தற்போது மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ள Documents எந்த Format-ல் (Doc, PDF)இருந்தாலும் அதை பயன்படுத்தியே தேடலாம்.

தேடல் கட்டத்தில் has:attachment என்றபடி அமைத்து, அதன் பின்னர் தேடலுக்கான சொல்லை அமைக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒபாமா(Obama) என்ற சொல் உள்ள இணைப்பு கோப்பினை அறிய, has:attachment Obama எனத் தர வேண்டும்.

நீங்கள் இந்த தேடலை PDF File-களில் மட்டும் தேட விரும்பினால், has:attachment filename:PDF Obama என அமைக்கப்பட வேண்டும்.

இதற்கு அவை Text அல்லது HTML File-களாக இருக்க வேண்டும். Word, Excel, and Powerpoint போன்ற Format கொண்ட File-களில் தேட முடியாது.



Operator Definition Examples
from: Used to specify the sender Example: from:amy
Meaning: Messages from Amy
to: Used to specify a recipient Example: to:david
Meaning: All messages that were sent to David (by you or someone else)
subject: Search for words in the subject line Example: subject:dinner
Meaning: Messages that have the word "dinner" in the subject
OR Search for messages matching term A or term B*
*OR must be in all caps
Example: from:amy OR from:david
Meaning: Messages from Amy or from David
-
(hyphen)
Used to exclude messages from your search Example: dinner -movie
Meaning: Messages that contain the word "dinner" but do not contain the word "movie"
label: Search for messages by label*
*There isn't a search operator for unlabeled messages
Example: from:amy label:friends
Meaning: Messages from Amy that have the label "friends" Example: from:david label:my-family
Meaning: Messages from David that have the label "My Family"
has:attachment Search for messages with an attachment Example: from:david has:attachment
Meaning: Messages from David that have an attachment
list: Search for messages on mailing lists Example: list:info@example.com
Meaning: Messages with the words info@example.com in the headers, sent to or from this list
filename: Search for an attachment by name or type Example: filename:physicshomework.txt
Meaning: Messages with an attachment named "physicshomework.txt"
Example: label:work filename:pdf
Meaning: Messages labeled "work" that also have a PDF file as an attachment
" "
(quotes)
Used to search for an exact phrase*
*Capitalization isn't taken into consideration
Example: "i'm feeling lucky"
Meaning: Messages containing the phrase "i'm feeling lucky" or "I'm feeling lucky"
Example: subject:"dinner and a movie"
Meaning: Messages containing the phrase "dinner and a movie" in the subject
( ) Used to group words
Used to specify terms that shouldn't be excluded
Example: from:amy (dinner OR movie)
Meaning: Messages from Amy that contain either the word "dinner" or the word "movie"
Example: subject:(dinner movie)
Meaning: Messages in which the subject contains both the word "dinner" and the word "movie"
in:anywhere Search for messages anywhere in Gmail*
*Messages in Spam and Trash are excluded from searches by default
Example: in:anywhere movie
Meaning: Messages in All Mail, Spam, and Trash that contain the word "movie"
in:inbox
in:trash
in:spam
Search for messages in Inbox, Trash, or Spam Example: in:trash from:amy
Meaning: Messages from Amy that are in Trash
is:important
label:important
Search within messages that Priority Inbox considers important. Example: is:important from:janet
Meaning: Messages from Janet that were marked as important by Priority Inbox
is:starred
is:unread
is:read
Search for messages that are starred, unread, or read Example: is:read is:starred from:David
Meaning: Messages from David that have been read and are marked with a star
has:yellow-star
has:red-star
has:orange-star
has:green-star
has:blue-star
has:purple-star
has:red-bang
has:orange-guillemet
has:yellow-bang
has:green-check
has:blue-info
has:purple-question
Search for messages with a particular star Example: has:purple-star from:David
Meaning: Messages from David that are marked with a purple star
cc:
bcc:
Used to specify recipients in the cc: or bcc: fields*
*Search on bcc: cannot retrieve messages on which you were blind carbon copied
Example: cc:david
Meaning: Messages that were cc-ed to David
after:
before:
Search for messages sent during a certain period of time
(using the date format yyyy/mm/dd)
Example: after:2004/04/16 before:2004/04/18
Meaning: Messages sent between April 16, 2004 and April 18, 2004.*
*More precisely: Messages sent after 12:00 AM (or 00:00) April 16, 2004 and before April 18, 2004.
is:chat Search for chat messages Example: is:chat monkey
Meaning: Any chat message including the word "monkey."
deliveredto: Search for messages within a particular email address in the Delivered-To line of the message header Example: deliveredto:username@gmail.com
Meaning: Any message with username@gmail.com in the Delivered-To: field of the message header (which can help you find messages forwarded from another account or ones sent to an alias).
circle: Search for messages that were sent from someone who you added to a particular Google+ circle Example: circle:friends
Meaning: Any message that was sent by a person in your "Friends" circle.

Examples: circle:"soccer friends (team blue)" or circle:"my \"fab four\""
Notes: For circle names that include a space, parentheses, curly brackets, or vertical bar, add quotes around the name. For names that include quotes, add a back slash immediately before the quotes.
has:circle Search for all messages that were sent from someone who you added to your Google+ circles Example: has:circle
Meaning: Any message that was sent by a person in any of your circles.

4 சூரியன்களை கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

4 சூரியன்களை கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு






நான்கு சூரியன்களால் ஒளி பெறும் புதிய கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையத்தளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

எனவே இந்த கிரகத்திற்கு பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது.

அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூரியன்களை சுற்றிவருகின்றன. எனவே இந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு நான்கு சூரியன்களின் ஒளியும் கிடைக்கும்.

இதுவரை ஆராய்ச்சியாளர்கள் ஒரு சூரியனால் ஒளி பெறும் கிரகங்கள், இரண்டு சூரியன்களால் ஒளி பெறும் கிரகங்களை மட்டுமே கண்டறிந்திருக்கும் பின்னணியில், நான்கு சூரியன்களால் ஒளிபெறும் இந்த புதிய கிரகம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.



48 ஆண்டுகளுக்கு பின்பு அணுகுண்டு சோதனை நடத்தவுள்ள சீனா

48 ஆண்டுகளுக்கு பின்பு அணுகுண்டு சோதனை நடத்தவுள்ள சீனா





ஆசியாவின் அச்சுறுத்தல் நாடான சீனா, தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை 48 ஆண்டுகளுக்கு பின்பு நடத்தவுள்ளது.
தனது முதல் அணுகுண்டு சோதனையை கடந்த 1964ம் ஆண்டு ஒக்ரோபர் 16ம் திகதி, ஜிங்ஜியான் உய்கூர் மாகாணத்தின் மாலான் பகுதியில் வெற்றிகரமாக நடத்தியது.

அதன் பின்னர் கடந்த 1996ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின்படி அணு சோதனை நடத்துவதை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் சீனா தனது இரண்டாவது அணு சோதனையை மீண்டும் அதே இடத்தில் நடத்த உள்ளது.

தற்போது சீனாவில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட அந்த இடம் சுற்றுலாஸ்தளமாக உள்ளது.

மேலும் அணு சோதனைக்காக சீன அரசு 944 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்துள்ளது.

மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனையை நடத்த சீன விஞ்ஞானிகள் இரவு பகலாக முயற்சி செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.



உலகில் பணக்காரர்கள் மிகுந்த நாடு சுவிட்சர்லாந்து

உலகில் பணக்காரர்கள் மிகுந்த நாடு சுவிட்சர்லாந்து




சுவிட்சர்லாந்தில் சென்ற ஆண்டு முதல் தனியாரின் சொத்து விகிதம் 13 சதவீதமாகக் குறைந்திருந்தது. ஆனாலும் கூட, உலகில் அதிக பணக்காரர்கள் வாழும் நாடாக சுவிட்சர்லாந்து விளங்குவதாக கிரெடிட் சுவிஸ் வெளியிட்ட வருடாந்திர உலகளாவிய சொத்து அறிக்கை தெரிவித்துள்ளது.

சுவிஸ் ஃபிராங்கின் மதிப்பு உயர்ந்திருந்ததால் நாட்டின் சொத்து மதிப்பும் உயர்ந்திருந்தது. இதனால் சுவிட்சர்லாந்து பணக்கார நாடுகளின் வரிசையில் இடம்பெறுவது எளிதாயிற்று.

ஒரு நபருக்கான சொத்து மதிப்பு 439,874 சுவிஸ் ஃபிராங்க் ஆகும். டொலரில் கணக்கிட்டால் அதாவது 468,000 டொலர் ஆகும். 2000ம் ஆண்டின் தனிநபர் வருமானத்தை விட இது இரண்டு மடங்கு ஆகும்.

2001 மற்றும் 2002ம் ஆண்டுகளில் சொத்து மதிப்பு குறைந்த போதும் கூட அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. முதல் பத்து உலகப் பணக்கார நாடுகளில் எட்டு நாடுகள் தனது தனிநபர் சொத்து மதிப்பில் 4 முதல் 17 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. அமெரிக்காவும் ஜப்பானும் மட்டுமே சிறிதளவு அதாவது 1 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன.

மேலைநாடுகளில் சொத்து மதிப்பு சரிந்ததற்குக் காரணமாக யூரோ மண்டலத்தில் ஏற்பட்ட நெருக்கடி, குறைந்த வட்டி விகிதம் போன்றவற்றைக் கூறலாம்.

உலகில் முதன்முறையாக ஆசிய நாடுகள் சில இந்தப் பணக்கார நாடுகளின் வரிசையில் இடம் பெற்றன. இந்த நாடுகளின் நிகர வீட்டு வருமானம் 7.1 டிரில்லியன் டொலராகும். ஐரோப்பாவில் கடந்த யூன் 30ம் திகதி முடிவு பெற்ற நிதியாண்டுக் கணக்கின்படி அங்குள்ள நிகர வீட்டு வருமானம் முன்பு இருந்ததை விட 14 சதவீதம் குறைந்து 69.3 டிரில்லியனாகி விட்டது.

பணக்காரர்கள் வசிக்கும் முதல் பத்து நாடுகளில் நார்வே, லக்ஸர்பெர்க், ஃபிரான்ஸ், பிரிட்டன், ஸ்வீடன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பூசணிக்காய் போட்டி: 768.5 கிலோ எடையுள்ள பூசணிக்காயை விளைவித்தவருக்கு பரிசு

பூசணிக்காய் போட்டி: 768.5 கிலோ எடையுள்ள பூசணிக்காயை விளைவித்தவருக்கு பரிசு






சூரிச் மாநிலத்தின் நெஃப்ட்டென்பெக்கைச் சேர்ந்த பேனி மேயர் என்ற தோட்டக்காரர் சுவிட்சர்லாந்திலேயே மிகப்பெரிய பூசணிக்காயை விளைவித்திருக்கிறார். இம்மாநிலத்தில் ஸீக்ராபேனில் நடக்கும் பூசணிக்காய்ப் போட்டிக்கு இவர் இந்த ஆண்டும் பெரிய பூசணிக்காயை (768.5 கிலோ) கொண்டு வந்திருந்தார்.

பேனி மேயர் கடந்த வருடமும் பூசணிக்காய் போட்டியில் கலந்து கொண்டார். அது 702 கிலோ எடையிருந்தது.

இந்த ஆண்டு, ஃபிரான்சில் உள்ள மேரி டாஓ என்பவர் 730 கிலோ எடையுள்ள பூசணிக்காயை விளைவித்திருக்கிறார்.

இந்தக் காய் தான் இன்று வரை ஐரோப்பாவின் மிகப்பெரிய காய் என்ற பெயர் பெற்றிருந்தது. ஆனால் இப்போது மேயர் கொண்டு வந்த காயோ இதை விட எடை கூடியதாகும்.

எனவே இவரை ஐரோப்பாவின் சாதனையாளர் என்று தோட்டக்காய்களுக்கான சந்தை மையத்தின் நிர்வாகியான ஃஜக்கர் ஃபார்மர் அறிவித்துவிட்டார்.

மேயருக்கு சிறியகார் எடையுள்ள இந்தப் பெரிய பூசணியை விளைவித்ததற்காக 2500 யூரோ (3000 ஃபிராங்க் / 3200 டொலர்) ரொக்கப் பரிசாகக் கிடைக்கும்.

Tuesday, October 16, 2012

காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது

காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது




காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விக்கு கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி.ரமணிகாந்த் பதிலளிக்கிறார்.

நான் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன், நான் மூச்சு விடும் போது ஒரு விதமான விசில் சப்தம் வருகிறது. இதனால் வகுப்பறையில் மாணவர்களின் கேலிக்கு ஆளாகிவிடுகிறேன். இதை சரிசெய்ய முடியுமா?

பதில்: மூக்கு முதல் குரல் நாண் வரை அடைப்போ அல்லது குறுகலாவோ இருந்தால் சில விதமான சப்தங்கள் வரலாம். எந்த பகுதியில் அடைப்பு உள்ளது என்பதனை பொறுத்து தான் தெளிவாக கூறமுடியும். இதற்காக பயப்படவேண்டிய அவசியம் இல்லை இதனை எளிதாக சரி செய்ய இயலும்.

காது கேளாமை என்பது பிறவி கோளாறா? மரபணு கோளாறா அல்லது விபத்து, அதிர்ச்சி போன்றவற்றால் ஏற்படுகிறதா?

நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று காரணங்களாலும் காது கேளாமை, கேட்டலில் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.பாதிப்புகளின் அளவை பொறுத்து அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது செயற்கை காது கேட்கும் கருவியை பொருத்தியும் இதனை சரிசெய்யலாம்.

சைனஸ் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெஸ் என்ற சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் பலன் என்ன யாருக்கு பொருந்தும்?

பொதுவாக இந்த அறுவை சிகிச்சை இ.எஸ்.எஸ் என்று கூறப்படுகிறது. காதில் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. மருந்துகள் மூலம் பலன் இல்லாவிடில் சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு பாதிப்பை பொறுத்து செய்யப்படுகிறது. பாதிப்பு ஏற்பட்ட யாருக்கு வேண்டுமானலும் இந்த சிகிச்சை செய்யலாம்.

காதில் எதனால் சீழ் வடிகிறது? இதனை எவ்வாறு சரி செய்யவேண்டும்?

காதில் சீழ் வடிவதற்கான காரணத்தை கண்டறிந்து தான் முறையான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இது ஆரம்ப கட்டத்தில் இருப்பின் மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த இயலும். காதில் சீழ் வடிதலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நாட்கள் வரை மருந்துகளை உட்கொள்ளவேண்டும். மூக்கு தண்டு வடபாதிப்பு, சைனஸ் தொல்லை, டான்சில்ஸ், அண்ண சதைப் பிரச்னை போன்ற தொல்லைகளும் உடனிருந்து காதில் சீழ் வடிவது நெடுநாளாக இருந்தால் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும். ஒரு சிலருக்கு காதில் இருக்கும் சவ்வு கிழிந்து கூட சீழ் வரலாம். இவர்களுக்கு அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனரே சரியா?

வேக்ஸ் எனப்படும் திரவப்பொருள் பொதுவாக அனைவரின் காதுகளிலும் இருக்கும். இது காற்றில் உள்ள வாயுக்களினால் ஒரு சிலருக்கு திடப்பொருளாக மாறி கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தங்கி விடுகிறது. குளிக்கும் போது இயல்பாகவே வெளிவந்து விடுகிறது. ஒரு சிலருக்கு இது வெளிவராமல் கட்டி போன்று ஆகிவிடுகிறது. இவர்கள் மட்டும் மருத்துவர்களை அணுகி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இதனை தாமாக சுத்தம் செய்வது காதுகளின் உட்பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. காதுகளில் சோப்பு தண்ணீர், உடலில் தேய்த்துக்குளிக்கும் மாவு போன்றவை போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மூக்கடைப்பிற்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரேவின் காரணமாக புற்றுநோய் ஏற்படுமா?

பதில்: இல்லை, அதன் காரணமாக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புஇல்லை. பொதுவாக ஸ்பிரே இரண்டு வகைகளில் உள்ளது. ஸ்டிராய்டு, அலர்ஜி, சதை வளர்ச்சி போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரே வகைகள், மற்றொன்று சளிக்காக பயன்படுத்துவது. முதல் வகையை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தொடர்ந்து பயன்படுத்தலாம். இரண்டாம் வகையை ஒரு குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே பயன்படுத்தவேண்டும் அல்லது அதற்கு அடிமையாகிவிடுவோம். அதை தவிர புற்றுநோய் என்பது மூக்கு பொடி பயன்படுத்துவதால் வரலாம்.


கர்ப்ப காலத்தின் போது காது, மூக்கு, தொண்டை, ஆகிய பகுதிகளில் பிரச்னை ஏற்பட்டால் அதற்கான மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என்று கூறுகின்றனரே ஏன்?

காது, மூக்கு, தொண்டை மட்டும் அல்ல கர்ப்ப காலங்களில் எவ்வித மருந்துகளையும் உண்பதை தவிர்க்கவேண்டும். மருந்து எடுக்கும் போது அது நேரடியாக கருவில் உள்ள கருவை பாதிக்கும். மருந்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். என் தொழில் காரணமாக அதிகபட்ச நேரம் நான் செல்போன் பயன்படுத்தவேண்டிய சூழல் உள்ளது.  இயர் போன் மூலம் பேசினால் பாதிப்புகளை தவிர்க்க முடியுமா?

செல்போன் பயன்பாட்டின் மூலம் இதுபோன்ற பாதிப்பு வரும் என்பதை உறுதியாக கூற இயலாது. இது பற்றிய ஆய்வு எதுவும் இன்னும் முழுமையடையவில்லை.ஆனால், அதிக நேரம் செல்போனில் பேசுவது கட்டாயம் கேட்கும் தன்மையை குறைத்து பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். சிறிது இடைவெளி விட்டு பேசுங்கள். இதில் இயர் போனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். அப்படியே பயன்படுத்தினாலும் ஒலி அளவை குறைத்து வைத்துக்கொள்வது பாதிப்புகளை குறைக்கும்.

வீதியில் முதலைகள்.. ஸ்கூல் லீவு! முதலை வேட்டை இன்றும் தொடர்கிறது!!

வீதியில் முதலைகள்.. ஸ்கூல் லீவு! முதலை வேட்டை இன்றும் தொடர்கிறது!!





சிறுவர் பாடசாலை அமைந்துள்ள பகுதியில் வீதியில் நடமாடுவதால், நேற்று (திங்கட்கிழமை) தெற்கு வியட்நாமிலுள்ள ஸ்கூலுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவுக்குள் சுமார் 60 முதலைகள் அகப்பட்டன. இன்னும் எத்தனை முதலைகள் அங்கு சுற்றிக்கொண்டு உள்ளன என்று சரியாக தெரியவில்லை.

முதலைகள் காப்பகம் ஒன்றின் சுவர், மழையில் இடிந்து வீழ்ந்ததை அடுத்தே, இந்த முதலைகள் வெளியேறி வீதிகளுக்கு வந்தன. இது, பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் நடந்துள்ளது. “டின்ஹ் பின் டவுனில் உள்ள இந்த முதலைகள் காப்பகத்தில் சுமார் 580 முதலைகள் இருந்திருக்கலாம்” என்று வியட்நாமிய பத்திரிகை தான்ஹ் நின் நியூஸ் தெரிவித்துள்ளது.

முதலைகள் தப்பிச் சென்ற காப்பகத்துக்கு அருகிலுள்ள கிம் டொங் பள்ளியை சுற்றியுள்ள வீதிகளில் அநேக முதலைகள் நடமாடுவதால், அந்தப் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவுக்குள் 60 முதலைகளே அகப்பட்டுள்ள நிலையில், இன்றும் பள்ளிக்கு லீவு விடப்படலாம் என்று  தான்ஹ் நின் நியூஸ் கூறியுள்ளது.

வைரத்தினாலான கிரகம் கண்டுபிடிப்பு

வைரத்தினாலான கிரகம் கண்டுபிடிப்பு




ஒரு பகுதி வைரத்தினாலான பூமியை போன்ற 2 மடங்கு பெரிதான கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
55 Cancri e என்று பெயரிடப்பட்டுள்ள இக்கிரகத்தை பிரெஞ்சு - அமெரிக்க ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இக்கிரகத்தின் மேற்பரப்பு காரீயம் மற்றும் வைரத்தினால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: ஆய்வில் தகவல்

நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: ஆய்வில் தகவல்




நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நிலவில் உள்ள துருவ எரிமலைகளின் உள்புறத்தில் பனிக்கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பை மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களது ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.

சூரியக் காற்றில் உள்ள அபரிமிதமான ஹைட்ரஜன் அணுக்கள், ஆக்சிஜனுடன் இணைந்து நிலவின் மேற்பரப்பில் ஹைட்ராக்ஸல் எனப்படும் சேர்மமாக உருவாகியுள்ளது. இதனை புவி அறிவியல் துறை பேராசிரியர் யூக்ஸ்யு ஸங்க் தன் ஆய்வில் தெரிவித்துள்ளார்.

இந்த ஹைட்ராக்ஸல் சேர்மம், நிலவில் உள்ளவற்றில் பரவியுள்ளது. நேரடியாகக் குடிப்பதற்கான நீராக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் நிலவில் எளிதாக நீர் கிடைக்க இது உதவியாக இருக்கும் என்று யூக்ஸ்யு ஸங்க் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பேராசிரியரான யாங்க் லியு, நிலவில் உள்ள சூழல் வேறுமாதிரியாக உள்ளது. ஆனால், அங்குள்ளவற்றில் நீரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நிலவில் இருந்து அப்போலோ விண்கலத்தால் கொண்டு வரப்பட்ட மாதிரிகளை 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இயற்கை புவி அறிவியல் என்ற இதழில் இந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகிறது செயற்கை மழை! உதவிக்கு வருகிறது சீனா!!

இலங்கைக்கு வருகிறது செயற்கை மழை! உதவிக்கு வருகிறது சீனா!!




இலங்கையில் செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சியில் சீனாவின் உதவியை இலங்கை அரசு கோரியிருப்பதாக, அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக சீன அரசுடனும், நிபுணர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், அவசரகால நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அம்பலாங்கொட, கொகல்ல கிராமிய சுகாதார நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் சீனா உதவியுடன் செயற்கை மழை வரவுள்ளது பற்றி தெரிவித்தார். “தீவிரவாதத்தை மட்டுமல்ல, வரட்சி போன்ற இயற்கையின் சவால்களையும் முறியடிப்பதற்கான தைரியம் அரசாங்கத்திடம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.

சீன அரசுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும், சீன நிபுணர்கள் குழு ஒன்று இலங்கையின் வரட்சியான பகுதிகளில் தங்கியிருந்து, செயற்கை மழைக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளை செய்யவுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலேயே வரட்சி அதிகமுள்ள பகுதி, தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணம் உள்பட வட மாகாணம்தான்!

Monday, October 15, 2012

பாரம்பரிய சின்னமாகிறது கோட்டை : யுனெஸ்கோ விரைவில் அறிவிப்பு

பாரம்பரிய சின்னமாகிறது கோட்டை : யுனெஸ்கோ விரைவில் அறிவிப்பு






பாரம்பரியமிக்க பண்டைய கலை கலாசார படைப்புகளை பார்வையிட மத்திய நகர்ப்புற வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் கலாசார துறை அமைச்சர் குமாரி செல்ஜா தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார். நேற்று காலை அவர் கும்பகோணம் மகாமக குளத்தை பார்வையிட்டார். பின்னர் திருபுவனம் திகோ சில்க்ஸ் பட்டு சேலை உற்பத்தி செய்யும் நெசவு கூடத்துக்கு சென்றார்.

பின்னர் நிருபர்களிடம் செல்ஜா கூறியதாவது: தஞ்சை பெரிய கோயில், அரண்மனை, சங்கீத மகால், சரஸ்வதி மகால் நூலகத்தை பார்வையிட்டேன். சோழர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளன. இவற்றை போற்றி பாதுகாக்க வேண்டும். தென்னகத்தின் கும்பமேளா என போற்றப்படும் கும்பகோணம் மகாமக குளத்தில் பலர் துணிகளை துவைப்பது, படுக்கை பாய்களை துவைப்பது என குளத்தை அசுத்தப்படுத்தி வருகின்றனர். குளத்தின் பெருமையை போற்றி பாதுகாக்க மக்களே முன்வர வேண்டும்.

சுவாமிமலையில் வடிவமைக்கப்படும் ஐம்பொன் சிலைகள் ஆயிரம் ஆண்டுகளை கடந¢து இன்றும் பெருமை பெற்றுள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, மகாபலிபுரம் புலிக்காடு ஏரி, சங்கரன்கோவில் கழுகுமலை, ஸ்ரீரங்கம் கோயில், செட்டிநாடு பங்களா ஆகியவற்றை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது இவ்வாறு செல்ஜா கூறினார். தொல்பொருள் ஆய்வு துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் சத்யபாமா பத்ரிநாத், உலக பாரம்பரிய சின்ன ஆலோசனை குழு உறுப்பினர் ஸ்டீவ் போர்ஷா உடனிருந்தனர்.

வானிலை ஆய்வு மையம் தகவல் 18 ,19 ல் வடகிழக்குப் பருவமழை துவங்கும்

வானிலை ஆய்வு மையம் தகவல் 18 ,19 ல் வடகிழக்குப் பருவமழை துவங்கும் 



தமிழகத்தில் அக்டோபர் 18 அல்லது 19 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் முதலில் வடகிழக்குப் பருவமழை துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஓரிரு நாளில் தென் மேற்குப் பருவ மழை முடிவுக்கு வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபரில் துவங்கும் வடகிழக்குப் பருவ மழை டிசம்பர் வரை நீடிக்கும். வடகிழக்குப் பருவ மழை காலத்தில் தான் தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்கும்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு





2012 ஆம் ஆண்டிற்கான பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பொருளியல் அறிஞர்கள் இருவருக்கு  நோபல் பரிசு வழங்கப்படுகிறது.ஆல்வின் ராத், லாய்ட்ஷாப்லே ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

கம்ப்யூட்டரால் கண் வலியா? டிவென்டி-20 ரூல்சை ஃபாலோ பண்ணுங்க

கம்ப்யூட்டரால் கண் வலியா? டிவென்டி-20 ரூல்சை ஃபாலோ பண்ணுங்க 





கடந்த 11ம் தேதி உலக பார்வை தினமாக கடைபிடிக்கப்பட்டது. முன்பெல்லாம் 40 வயதை தாண்டியவர்கள்தான் மூக்கு கண்ணாடி அணிவார்கள். ஆனால், தற்போது 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட மூக்கு கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பது, உணவுப்பழக்கமே காரணம் என்கிறார் அமெரிக்கன் ஐ கேர் சென்டர் டாக்டர் டி.பி.பிரகாஷ்.

கண் மருத்துவ பரிசோதனையில் தற்போது வந்துள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், கண் பார்வை குறைபாடுக்கான காரணங்கள் குறித்தும் இதோ அவரே விளக்கம் தருகிறார்...

இன்றைய கால கட்டத்தில் எல்லா துறையை சேர்ந்தவர்களும் கம்ப்யூட்டரில்தான் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. பணி நிமித்தம் காரணமாக 8 மணி நேரம் தொடர்ச்சியாக கம்ப்யூட்டரை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், பெரும்பாலானவர்களுக்கு பார்வையில் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, அதிகளவில் கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்கள் டிவென்டி-20 என்ற ரூல்சை ஃபாலோ செய்வது நல்லது.

அதாவது, 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்தால் 20 செகன்ட் ரிலாக்ஸ் செய்யுங்கள். அந்த 20 செகன்ட்டில் கண்களை மூடி, கண்களுக்கு ஓய்வு தரலாம். அல்லது 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்த்துக் கொண்டிருங்கள். அப்படி செய்வதால் கண் வலி ஏற்படாது. பார்வை குறைபாடு ஏற்படுவது பெருமளவு தடுக்கப்படும்.

நிறைய பேர் கான்டாக்ட் லென்ஸ் அணிகிறார்கள். டாக்டர் ஆலோசனை இல்லாமல், பவர் இல்லாத லென்ஸ் தானே என்று நீங்களாக எந்த லென்சையும் அணியாதீர்கள்.  அதனால் உங்கள் பார்வையே பறிபோகும் அபாயமும் ஏற்படலாம். கருவிழியையே மாற்ற வேண்டிய ஆபத்தும் ஏற்பட வாய்ப்புண்டு.

குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் புட் தருவதை தவிர்த்து, காய்கறி பழங்கள் அதிகளவில் தர வேண்டும். பச்சை, சிவப்பு நிற காய்கறி பழங்களை சாப்பிடுவதால் பார்வை திறன் அதிகரிக்கும். எந்த வயதினராக இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக, குழந்தைகளுக்கு அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும்.




ரிலாக்ஸா இருங்க டென்ஷன்... பயம்... வேண்டாம்

ரிலாக்ஸா இருங்க டென்ஷன்... பயம்... வேண்டாம்




அழுக்கடைந்த அரை குறை ஆடைகளுடன், சுத்தமில்லாமல் சாலையில் ஏதேதோ புலம்பிக் கொண்டு செல்பவர்கள் தான் மனநோயாளிகள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அதிக மனஅழுத்தம், பயம் கொண்டவர்களும் மனநோயாளிகள் தான் என்றால் அதை நம்ப முடிகிறதா? இது உண்மைதான். ஆண்டு தோறும் அக்டோபர் 10ம் தேதி உலக மனநல நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனநல மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இதனால் மனநலம் பற்றிய சில தகவல்கள் இதோ உங்களுக்காக...

அதிக டென்ஷன், பதற்றம் உடையவர்களும் மனநோயாளிகள் தான். இது ஆரம்பகட்ட நிலை. இந்த நிலை தொடர்ந்தால் தீவிர மனநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என மனநல மருத்துவர் ராஜமோகன் கூறுகிறார். இதோ அவர் தரும் விளக்கங்கள்...

இளம் வயதில் ஏற்படும் அதிக மனஅழுத்தம், பதற்றம், பயம் போன்றவை மனநோய்க்கு முதல் காரணமாக அமைகிறது. குடும்ப சூழ்நிலையாலும் சிலருக்கு மனநோய் ஏற்படுகிறது. முன்பெல்லாம் 15 வயதினர் முதல் பெரியவர் வரை மனநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது குழந்தைகளுக்கு கூட இந்த நோய் வருகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் அழுத்தம் கொடுக்க கூடாது. பள்ளிக்குழந்தைகள் சிலருக்கு பாடச்சுமை காரணமாக கூட இந்த நோய் வர வாய்ப்புள்ளது.

தாக்கத்தை பொறுத்து மனநோய்கள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. அதில் முதல் இடத்தில் இருப்பது மிதமான மனநோய். இந்த நோய் உடையவர்கள் அனைவரையும் போல சாதாரணமாகவே இருப்பார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் அதிக பதற்றம் ஏற்படும். சிறிய பிரச்னைக்கு கூட அதிகம் கோபம் வரும். அடிக்கடி கை கழுவுதல், பணத்தை எண்ணிக் கொண்டே இருத்தல் போன்றவை இதன் அறிகுறியாகும். இந்த நோயினால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதில்லை. ஆரம்ப காலத்தில் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனை படி இந்நோயை குணப்படுத்த முடியும்.

2வது தீவிரமான மனநோய். இந்த நோய் தற்போது பள்ளிப் பருவம் தொடங்கி 50 வயது உள்ளவர்களுக்கு வருகிறது. இந்நோய் உள்ளவர்கள் கற்பனையில் வாழ்வார்கள். யாருடனும் பேசமாட்டார்கள். தனிமையில் அமர்ந்து கொண்டு எதையோ சிந்தித்திக் கொண்டே இருப்பார்கள். இந்த நோயினால் சோர்வு, வெறித்தன்மை அதிகம் ஏற்படும். அமெரிக்காவில் இதன் தாக்கம் கொண்டவர்கள் அதிகம். கட்டாயம் இதுபோன்ற நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதை குணப்படுத்த மருந்துகள் உள்ளது. இந்த நோய் உள்ளவர்களுக்கு 6 மாத சிகிச்சை அவசியம்.

தீவிரமில்லாத மனநோய் 3வது வகை. இந்த நோய் உள்ளவர்களும் சாதாரணமாகவே இருப்பார்கள். ஆனால் அதீத பயம் காரணமாக சிறிய விஷயத்தை பெரிதாக்குவார்கள். இதுபோன்ற நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவையில்லை. சைகோதெரபி மற்றும் சிறந்த ஆலோசனை மூலமாக விரைவில் இந்த நோயை குணப்படுத்த முடியும்.  உடல் சார்ந்த மனநோய் 4ம் ரகம். எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத நோயாளிகளை இதற்கு உதாரணமாக எடுத்து கொள்ளலாம். சிலர் இளம் வயதிலேயே தீராத நோயினால் அவதி அடைந்து வருவார்கள். இதனால் எப்போதும் பெரும் விரக்தியில் இருப்பார்கள். இந்த நோய் கொஞ்ச கொஞ்சமாக மனதை பாதிக்கும் தன்மை கொண்டது. உரிய சிகிச்சை மூலம் இதை குணப்படுத்தலாம்.

தகுந்த மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலமாக மனநோயை எளிதில் நிவர்த்தி செய்யலாம். மனநோய் உடையவர்களுக்கு ஆரோக்கியமான சூழல் கட்டாயம் அவசியமாகும். மேலும் இளம் வயதிலேயே கோபம், டென்ஷனை குறைக்க வேண்டும். தியானம், யோகா போன்றவை மூலம் மனதை எப்போதும் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருந்தால் எவ்வித மனநோயும் பாதிக்காது.

2012 கால்பந்தாட்ட போட்டியின் அசத்தலான சின்னம்

2012 கால்பந்தாட்ட போட்டியின் அசத்தலான சின்னம்





வரும் 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி, பிரேசில் நாட்டில் நடக்கிறது. இதற்காக அரிதான, மிகவும் பொருத்தமான ஒரு அதிகார  பூர்வ சின்னத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறது அந்த நாடு. அது ஒருவகை எறும்புத்தின்னி. ‘பிரேசிலியன் த்ரீ பேண்டட் ஆர்ம டில்லோ’ என்று இதற்குப் பெயர். பெயருக்கு ஏற்றபடி இது பிரேசில் நாட்டில் மட்டுமே வசிக்கிறது. அழிந்துவரும் அரிதான இனம். இதன் உடல் அமைப்பு விநோதமானது. தலை ஒரு பகுதியாகவும், வயிற்றுப் பிரதேசத்தில் ‘வெஸ்டிபுள் டியூப்’ போல மூன்று விசித்திரமான மடிப்புகளுடன் உடல் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.

குட்டியூண்டு வால் பின்னால் நீட்டிக் கொண்டிருக்கும். இதன் உடலின் மேல்பகுதி, ஆமைகளுக்கு இருப்பதைப் போன்ற கடினமான ஓடுகளுடன் இருக்கிறது. ஆனால், வயிறு போன்ற அடிப்பாகங்கள் மென்மையானவை. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்துக்கொண்டு, உடலை அந்த மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டு கொள்கிறது. உருட்டிப் பார்க்கும் எந்த விலங்கும், இதை கடினமான ஒரு கல் எனக் கருதி விட்டுவிட்டுப் போய்விடும்.

ஆபத்து நீங்கியதும் பழையமாதிரி எழுந்து நடக்கும். பொதுவாக எறும்புத்தின்னிகள் தரையில் வளை தோண்டியோ, மரப்பொந்துகளிலோ வசிக்கும் பழக்கம் உள்ளவை. ஆனால், இப்படி ஒரு அமர்த்தலான பாதுகாப்பு இருப்பதால், இவை மட்டும் கேஷுவலாக புல்வெளிகளில் வசிக்கின்றன. கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் உருண்ட வடிவம் இருப்பதால், கால்பந்துப் போட்டிகளின் சின்னமாகி விட்டது. அதோடு இவை அழிந்து வருவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வும், இந்த அறிவிப்பைச் செய் திருக்கிறது பிரேசில்.

400 ஆண்டு பழமையான 76 காரட் இந்திய வைரம் ஜெனீவாவில் நவம்பரில் ஏலம்

400 ஆண்டு பழமையான 76 காரட் இந்திய வைரம் ஜெனீவாவில் நவம்பரில் ஏலம்





சுமார் 400 ஆண்டு பழமையான 76 காரட் எடை கொண்ட வைரம், ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது. கிரிஸ்டி என்ற ஏல நிறுவனம் இதை ஏலத்தில் விடுகிறது. இதுகுறித்து அந்நிறுவன அதிகாரி ராகுல் ககாடியா கூறியதாவது: இந்தியாவில் முன்பு இருந்த கோல்கொண்டா சுரங்கத்திலிருந்து இந்த வைரம் எடுக்கப்பட்டது. குயிலின் முட்டை அளவு உள்ள இந்த வைரம் நிறம் எதுவும் இல்லாதது. கோஹினூர், ரீஜென்ட் போன்ற விலை உயர்ந்த புகழ் வாய்ந்த வைரங்களை போன்று இதுவும் இந்தியாவை சேர்ந்தது.

இது 1.5 கோடி டாலருக்கு ஏலம் போகும் என கணிக்கப்பட்டாலும், அதை விட அதிக விலைக்கு போகவும் வாய்ப்பு உள்ளது. 19ம் நூற்றாண்டு காலத்தில் ஹங்கேரி நாட்டின் இளவரசராக இருந்த ஆர்க்டியூக் ஜோசப் ஆகஸ்ட் என்பவரிடம் இந்த வைரம் இருந்தபோது அவரின் பெயரே இந்த வைரத்துக்கும் வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கனடாவில் ஆண்டுதோறும் 27 பில்லியன் டொலர் மதிப்பிலான உணவுகள் வீண்

கனடாவில் ஆண்டுதோறும் 27 பில்லியன் டொலர் மதிப்பிலான உணவுகள் வீண்: ஆய்வில் தகவல்






கனடாவில் ஆண்டுதோறும் 27 பில்லியன் டொலர் மதிப்பிலான உணவுகள் வீணாவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
வீணாக்கப்படும் உணவுகளில் 51 சதவிகித உணவுகள் மக்களின் வீடுகளில் வீணாக்கப்படுகின்றது.

அதாவது உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு கனடாவில் மட்டும் வீணாக்கப்படுவதாக உலக உணவு விவசாய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு காரணங்களாக உணவுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றமை, காலாவதியாகும் திகதி குறித்த குழப்பம், உணவுகளை அதிகளவு வாங்குபவை தெரிவிக்கப்படுகின்றது.

விண்ணிலிருந்து பூமியில் குறித்து உலக சாதனை

Top News : விண்ணிலிருந்து பூமியில் குறித்து உலக சாதனை படைத்தார் பெலிக்ஸ்: ஒலியை விட அதிக வேகத்தில் பயணம்


 


விண்வெளியிலிருந்து குதித்த வீரர் பெலிக்ஸ் பௌம்கார்ட்னர் வெற்றிகரமாக பூமித்தரையை தொட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரிய பாய்ச்சல் வீரர் பெலிக்ஸ் பௌக்மார்ட்னர் தனது ஏழு வருட கடும் பயிற்சியின் பின்னர், பூமியின் ஓட்டிலிருந்து அதாவது விண்வெளியிலிருந்து பூமித்தரையை நோக்கி ஒற்றைமனிதராக குதித்து உலக சாதனை படைத்துள்ளார்.

அவர் விண்வெளியில் தனது கேப்சுலிலிருந்து குதித்து 4 நிமிடங்கள் 22 செக்கன்களில் பூமியை வந்தடைந்தார்.

விண்வெளியிருந்த குதித்ததும், அவரது பார்வை மட்டும் சிறிது மங்கலானதாக கீழே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார்.

பூமியின் தரைப் பகுதியை நெருங்கியதும் பாரசூட்டை விடுவித்த அவர் பத்திரமாக பூமி மண்ணை தொட்டார்.

சாதனையை முடித்த பின் பெலிக்ஸ் கூறுகையில், இது எனது ஏழுவருட உழைப்பு, எனது மிகப்பெரும் கனவு என்று தெரிவித்தார்.

அடுத்து என்ன உங்களது திட்டம் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த தலைமுறைக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்க விரும்புகிறேன். நான் உங்கள் அச்சத்தை போக்கியுள்ளேன். இனி துணிந்து களமிறங்குங்கள் இளைஞர்களே என்றார்.


பௌக்மார்ட்னரின் உலக சாதனைகள்:

1. அவர் குதித்த போது ஒரு கட்டத்தில் அவர் பயணித்து கொண்டிருந்த அதியுயர் வேகம் வேகம் 1.342 km/h என உறுதிப்படுத்தப்பட்டதால், Free Fall (தன்னிச்சையாக விழுதல்) மூலம் ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதன் எனும் மாபெரும் சாதனை.

2. உலகின் அதி உயரத்திலிருந்து குதித்த மனிதர் (120, 000 அடிக்கு மேல்).

3. பாரசூட் அல்லது பலூனில் அதிக உயரத்திற்கு சென்ற மனிதன் (120,000 அடிக்கு மேல்).

4. உலகில் தனி ஒரு மனிதருக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பலூன் (550 அடி உயரம், 30 மில்லியன் கியூபிக் அடி கனஅளவு).
















16 மில்லியன் யூரோ பணத்தில் அரண்மனை கட்டுகிறார் தென் ஆப்ரிக்க ஜனாதிபதி

16 மில்லியன் யூரோ பணத்தில் அரண்மனை கட்டுகிறார் தென் ஆப்ரிக்க ஜனாதிபதி




தென் ஆப்ரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக ஜேக்கப்ஷுமா பதவி வகித்து வருகிறார்.64 வயதான இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். இவர் குவாசுலு நடால் மாகாணத்தில் உள்ள காண்ட்லா என்ற கிராமத்தில் தனக்கு சொந்தமாக பிரமாண்டமான அரண்மனை கட்டி வருகிறார்.

இதில், அவருக்கும், அவரது மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கும் தனித்தனி அறைகள், அலங்கார சொகுசு பாத்ரூம்கள் உள்ளன. மேலும், அவரது பாதுகாவலர்களுக்கு 10 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

சுரங்க பாதைகளுடன் கூடிய தரை தளமும், ஹெலிகாப்டர் தளமும், மருத்துவமனையும் கூட உள்ளன. இந்த அரண்மனை சுமார் 16 மில்லியன் யூரோ (ரூ.127 கோடி) செலவில் கட்டப்படுகிறது. இது ஊழல் பணத்தில் கட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வரி செலுத்தும் நிறுவனங்களுக்கு சலுகை காட்டி அவர்கள் தந்த லஞ்ச பணத்தின் மூலம் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அதை ஜனாதிபதி ஜேக்கப்பும் அவரது உதவியாளர்களும் மறுத்துள்ளனர். இந்த அரண்மனை ஜேக்கப்பின் குடும்ப உறுப்பினர்களால் கட்டப்படுவதாக தெரிவித்துள்ளனர்.









முஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு மட்டும் நோபல் பரிசு: ஈரான் அதிரடி அறிவிப்பு

முஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு மட்டும் நோபல் பரிசு: ஈரான் அதிரடி அறிவிப்பு




சர்வதேச நோபல் பரிசுக்கு போட்டியாக முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளை கௌரவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
இயற்பியல், வேதியியல் உள்பட 6 அறிவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சுவீடன் அகடமி ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நோபல் பரிசுக்கு போட்டியாக, முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்காக மட்டும் புதிய நோபல் பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச நோபல் பரிசு கடந்த 1901ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த பரிசு வழங்கப்பட்டு வந்தாலும், ஈரானை சேர்ந்த ஒரே ஒரு விஞ்ஞானிக்கு மட்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஈரானில் மனித உரிமைக்காக போராடி வரும் ஷெரின் எபாடி என்ற பெண்ணுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால் அறிவியல் துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஈரான் முஸ்லிம் விஞ்ஞானிகளுக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் அறிவியல் தொழில்நுட்ப துறை துணை அதிபர் நஸ்ரின் சுல்தான்கா கூறுகையில், நபிகள் நாயகம் பெயரில் The Great Prophet World Prize என்ற விருது 2 ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும்.

இந்த பரிசு 3 தொழில்நுட்ப துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.