Friday, November 23, 2012

Sandy Island என்று வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட தீவு இல்லை

Sandy Island என்று வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட தீவு நிஜத்தில் இல்லை: அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்



உலக வரைபடங்களில் பல காலமாக காண்பிக்கப்பட்டு வரும் தென் பசிபிக் சமுத்திரத்தின் சிறு தீவு என்பது நிஜத்தில் இல்லை என அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Sandy Island என்ற பெயரில் காண்பிக்கப்பட்டு வரும் இந்த தீவு, அவுஸ்திரேலியாவுக்கும் பிரான்சினால் ஆளப்படுகின்ற நியூ கேளடோனியா என்ற தீவுக்கூட்டத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.

ஆனால் அந்த கடல் பகுதிக்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சென்று தேடி பார்த்த போது, அங்கே தீவு எதுவும் இல்லை கீழே பவழப் பாறைகளுடன் நீலக்கடலே இருந்துள்ளது.

"தீவு தெரியும் என்று எதிர்பார்த்து போனால், ஆயிரத்து நானூறு மீட்டர் ஆழமான சமுத்திரமே அந்த இடத்தில் இருந்தது" என்று கப்பலில் சென்று பார்த்த விஞ்ஞானி மரியா செடன் என்பவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த தீவு உலக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.









சிவசேனா தலைவரை விமர்சித்த மாணவிகள் மீதான வழக்கு தள்ளுபடி

சிவசேனா தலைவரை விமர்சித்த மாணவிகள் மீதான வழக்கு தள்ளுபடி



சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை ஃபேஸ்புக்கில் விமர்சித்தற்காக 2 கல்லூரி மாணவிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடந்த 17ம் திகதி மரணமடைந்தார். அவரது இறுதி சடங்குகள் அடுத்த நாள் நடைபெற்றன. இறுதி ஊர்வலம் நடைபெற்ற நாளில் மும்பை நகரமே வெறிச்சோடியது. கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயங்கவில்லை. பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர்.

இதுகுறித்து கீன் தாதா என்ற கல்லூரி மாணவி ஃபேஸ்புக்கில் விமர்சனம் செய்திருந்தார். சிவசேனா தொண்டர்களுக்கு பயந்துதான் கடைகள் அடைக்கப்பட்டதாக கூறியிருந்தார். இதை கீனின் தோழி ரேணு சீனிவாசன் வரவேற்றிருந்தார். இது சிவசேனா தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தானே காவல் நிலையத்தில் இந்த 2 பெண்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஃபேஸ்புக்கில் கருத்து சொன்னதற்காக பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதை தொடர்ந்து பெண்கள் கைது நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவான் உத்தரவிட்டார்.

கொங்கண் பிராந்திய பொலிஸ் ஐஜி சுக்விந்தர் சிங், விசாரணை அறிக்கையை நேற்று அரசிடம் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து பால் தாக்கரேவை விமர்சித்த 2 மாணவிகள் மீதான வழக்கை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

பெண்கள் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மகாராஷ்டிர உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்தில் 5 சனி ஞாயிறு திங்கள் - 824 ஆண்டுகளுக்கு ஒரு முறை

டிசம்பர் மாதத்தில் 5 சனி ஞாயிறு திங்கள் - 824 ஆண்டுகளுக்கு ஒரு முறை



வரும் டிசம்பர் மாதத்தில் 5 சனி, 5 ஞாயிறு, 5 திங்கள் ஆகிய கிழமைகள் வருகின்றது. இந்த நிகழ்வானது 824 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் நிகழ்வதால் இதை அபூர்வமான மாதமாக கருதப்படுகின்றது.  கடந்த 1188ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 5 சனி, 5 ஞாயிறு, 5 திங்கள் கிழமை வந்தது. அதற்கு பிறகு, இந்தாண்டு(2012) டிசம்பர் மாதத்தில் இந்த மூன்று கிழமைகளும் 5 முறை வருவதால், ஜோதிட முறைப்படியும், எண்கணித முறைப்படியும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருத்தப்படுகிறது. சனிக்கிழமையை சனிபகவானாகவும், ஞாயிறு சூரியனாகவும், திங்களை சந்திரனாகவும் வழிபடுவது வழக்கம். 9 வகையான கிரகங்களுக்கும் ஒவ்வொ வகையான நிறங்கள் உள்ளன. சனிக்கு கருப்பு, சூரியனுக்கு சிவப்பு, சந்திரனுக்கு வெண்மை நிறங்களாக கருதப்படுகின்றன. எண்கணிதப்படி வரும் டிசம்பரில் மூன்று 5 கிழமைகள் வருவதால் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது.   இது பற்றி ஜோதிடர் ஒருவர் கூறுகையில், ‘‘2012 டிசம்பரில் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 கிழமைகள் 5 முறை வருவதால் சிறப்பு வாய்ந்தாக கருத்தப்படுகின்றது. டிசம்பரில் 1ம் தேதி சனிக்கிழமை உதயமாகி, இம்மாத கடைசி நாளான 31ம் தேதி திங்கள் கிழமையன்று முடிகின்றது. இதை வைத்து கிரகங்களின் நிற முறைகளைவைத்து பார்க்கும் போது  கருமையில் தொடங்கி வெண்மையில் முடிகிறது. இந்த மாதம் வளர்பிறையாக உள்ளது. இந்த மாதத்தில் தொழில், திருமணம் மற்றும் பல்வேறு சுப காரியங்களை செய்யலாம். கிரகங்களின் தோஷம் உள்ளவர்களும் இந்த மாதத்தில் கிரகத்திற்கு உண்டான வழிபாடு முறைகளை செய்தால் அவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும்‘‘ என்றார்.

அமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

அமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்




அமெரிக்காவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொலிவு ஏற்பட்டுள்ளது.
பனிப்பொலிவின் தொடர்ச்சியாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

டெக்சாஸ் நெடுஞ்சாலையில் இன்று காலை காணப்பட்ட கடும் பனிமூட்டதால் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 80 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

வானகங்கள் ஒன்றின் மீது ஒன்று குவியலாக மோதி நிற்கின்றன. இதனால் டெக்சாஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குளான வாகனங்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விபத்தில் காயமடைந்தவர்களில் சுமார் 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனிமூட்டம் மிகவும் அடத்தியாக ஏற்பட்டுள்ளதால் எதிரே வரும் வானத்தையும், சாலையின் சூழலையும் உடனடியாக புரிந்து கொள்ள முடியாததாலேயே அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதால் விபத்தில் காயமடைந்த கர்ரோல் என்பவர் தெரிவித்துள்ளார்.








10 லட்சம் ஊழியர்களின் 62 லட்சம் லீவு நாள் வீண்

10 லட்சம் ஊழியர்களின் 62 லட்சம் லீவு நாள் வீண்



நீங்கள் அடிக்கடி லீவு எடுப்பீர்களா? இருக்கும் லீவை கூட எடுக்காமல் நல்ல பெயர் எடுக்க விரும்புபவரா? அப்படியானால் கண்டிப்பாக படிங்க.
பன்னாட்டு நிறுவனங்களின் விலை ஒப்பீட்டு சர்வே நடத்தும் லண்டனை சேர்ந்த டிராவல் சூப்பர் மார்க்கெட் என்ற வெப்சைட் சமீபத்தில் ஆன்லைன் மூலம் வித்தியாசமான சர்வே நடத்தியது. ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பங்கேற்று வாக்களித்தனர். சர்வே எதற்கு தெரியுமா? யார் லீவு எடுக்கின்றனர், யார் எடுப்பதே இல்லை என்பது பற்றி தான்.
சர்வே முடிவில் தெரியவந்துள்ளதாவது:

* நான்கில் ஒருவர் தங்களின் லீவு நாளில் 28 சதவீதத்தை வீணடிக்கின்றனர். 

* லீவு எடுத்தால் வேலை பறிபோகும் என்று பயந்து எடுப்பதே இல்லை என 9 சதவீதம் பேர் கூறினர்.

* வீட்டில் இருப்பதை விட ஆபீஸ் மேல் என்று லீவு எடுப்பதில்லையென 3 சதவீதம் பேர் புலம்பல்.

* அடிக்கடி லீவு எடுத்தால் ஆபீசில் நடக்கும் சமாச்சாரங்கள் தெரிவதில்லை என்று 2 சதவீதம் பேர் ஆதங்கம்.

* லீவு எடுத்தால் பிரமோஷன் போய்விடும் என்று 4 சதவீதம் பேர் நம்பிக்கை.

* மொத்தத்தில் கணக்கிட்டதால் 10 லட்சம் பேர் ஆண்டுக்கு 62 லட்சம் லீவு நாட்களை வீணடிக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பார்ப்தற்கு கொசு (நுளம்பை) போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்

பார்ப்தற்கு கொசு (நுளம்பை) போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்




பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும்.
இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன்
நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.

முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.

சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.
அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை ரோபோக்கள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.


இவ் ஆக்கமானது அறிவியலின் வாசகரால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதே போன்ற அறிவியல் சம்பந்தமான ஆக்கங்களை அனைவரிடமும் எதிர்பார்கின்றோம்.

அறிவியல் சார்பாக "த.ருஷாந்தன், வவுனியா, இலங்கை." அவர்களிற்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

கத்தியை விழுங்கும் மனிதர் : உலக சாதனை !

கத்தியை விழுங்கும் மனிதர் : உலக சாதனை !




ஐயன் பிரவுன் என்னும் பிரித்தானிய நபர் ஒருவர் உலக சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். சுமார் 3 அடி நீளமுள்ள வாள் ஒன்றை இவர் தொண்டையூடாக விழுங்கியுள்ளார். குறிப்பிட்ட இளைஞர் ஒரு வாளை மட்டும் விழுங்கவில்லை. 2 வாள்களை ஒரே நேரத்தில் விழுங்கியுள்ளார். அதனை சுமார் 13 செக்கன் தனது தொண்டையில் வைத்திருந்து பின்னர் வெளியே எடுத்து, முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார். அதாவது சுமார் 3 அடி நீளமான இந்த 2 வாள்களையும் அவர் வாய் வழியாகச் செலுத்தி , அது தொண்டையூடாகச் சென்று வயிறுவரை செல்கிறது. மீன் சாப்பிடும் போது முள்ளு குத்தினால் கூட எம்மால் தாங்க முடியாது. ஆனால் இந்த இளைஞரோ வாளை விழுங்க கற்றுக்கொண்டுள்ளார்.

மிக மிக ஆபத்தான இந்த விடையத்தை ஒரு நாளைக்கு தான் 40 முறை பரீட்ச்சித்துப் பார்த்ததாகவும், இதற்கான பயிற்ச்சியை எடுத்துக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பல முறை இவ்வாறு பயிற்ச்சி எடுத்த பின்னரே தான் இவ்வாறு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மிக மிக ஆபத்தான இந்த விடையத்தை வீட்டில் யாரும் செய்து பார்க்கவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிரும் படங்களைப் பாருங்கள்.



யாழில் கள்ளச் சாமியார் செம்பில் செய்த வித்தை: 6.5 லட்சம் அபேஸ் !

யாழில் கள்ளச் சாமியார் செம்பில் செய்த வித்தை: 6.5 லட்சம் அபேஸ் !




யாழ் சுண்ணாகம் பகுதியில் விசித்திர கொள்ளை ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சாமியார் ஒருவர், தாம் மக்களின் கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குவேன் என சுய விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ஒரு குடும்பத்தினர், தமக்கு ஒரு கஷ்டம் இருப்பதாகக் கூறி இச் சாமியாரை அணுகியுள்ளனர். 20,000 ஆயிரம் ரூபா தந்தால் தாம் அதற்கு சாந்திசெய்வதாக அவர் கூறியுள்ளார். இக் குடும்பத்தினரும் அப்பணத்தைக் கொடுத்துள்ளார்கள். பாவி அப்பணத்தோடு ஓடவில்லை. மேலும் ஒரு விளையாட்டைக் காட்டியுள்ளார். பரிகாரம் முடிந்தபின்னர், இக் குடும்பத்தாரின் வீட்டிற்கு வந்த குறிப்பிட்ட சாமியார், வீட்டில் ஒரு பூசையை நடத்தியுள்ளார். அவர் ஒரு பெரிய செம்பையும் கொண்டுவந்துள்ளார். பூஜையின் முடிவில் , வீட்டில் உள்ள எல்லா நகைகளையும் அச் செம்பில் போடுமாறு கூறியுள்ளார்.

வீட்டில் உள்ளவர்களும் அவ்வாறே செய்துள்ளார்கள். செம்பை மூடி ஒரு துணியால் கட்டிவிட்டு. பின்னர் தீர்த்தம் என்று சொல்லி ஒரு நீரை அவர் கொடுத்துள்ளார். இந்த நீரை வீட்டிற்கு வெளியே சென்று தெளிக்குமாறு அவர் கூறியுள்ளார். இந்த 1 நிமிடத்தில், செம்பில் உள்ள நகைகளை அப்படியே அபேஸ் செய்துவிட்டு , கற்களைப் போட்டு செம்பை திரும்பவும் துணியால் கட்டிவிட்டார் சாமியார். பின்னர் வீட்டிற்குள் வந்த குடும்பத்தாரிடம், குறிப்பிட்ட செம்பைக் கொடுத்து , தாம் இன்னும் 10 நாட்களில் திரும்பி வருவதாகவும். தோஷங்கள் நீங்க 10 நாட்கள் ஆகும், அதுவரை நகைகளை இச் செம்பில் இருந்து எடுக்கவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி மூடிக் கட்டிய துணியோடு செம்பை அப்படியே கொண்டு சென்று அக் குடும்பத்தினர் வைத்துள்ளார்கள்.

பின்னர் 10 நாட்கள் ஆகியும் சாமியார் வரவில்லை என்று, அறிந்து செம்பையாவது திறந்து பார்க்கலாம் என்று பார்த்தால் அதில் வெறும் கற்கள் தான் இருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனார்கள். சுமார் 6. 5 லட்சம் நகைகளை அப்படியே அபேஸ் செய்துகொண்டு சாமியார் ஓடித்தப்பிவிட்டார். இப்போது தான் இந்தக் குடும்பம் உண்மையான கஷ்டத்தில் சிக்கியுள்ளனர். மீண்டும் மீண்டும் எப்படி தமிழர்கள் மட்டும் போலிச் சாமியாரை நம்பி ஏமாறுகிறார்கள் என்று தெரியவில்லையே ? சரவணா !

உலகின் அதிநவீன சூப்பர் கணனியாக அமெரிக்காவின் Titan தெரிவு

உலகின் அதிநவீன சூப்பர் கணனியாக அமெரிக்காவின் Titan தெரிவு



உலகின் அதிவேக சூப்பர் கணனியை(Super Computer) கொண்ட நாடு என்ற பெருமை அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வுகூடத்தில் உள்ள Titan Cray XK7 என்ற கணனியே தற்போது உலகின் அதிவேக சூப்பர் கணனியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இது Cray XT5 Jaguar என்ற சூப்பர் கணனியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

இந்த கணனி 560,640 Processor-களையும், 261,632 NVIDIA K20x Accelerator Cores-களையும் கொண்டுள்ளது.

மேலும் இது ஒரு Second-ல் 17.59 குவாட்ரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடியது.

இதற்கு முன்னர் உலகின் அதிநவீன சூப்பர் கணனிகளாக ஜப்பானின் 'K' என்ற கணனியும், சீனாவின் Tianhe - 1 A என்ற கணனியும் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹைவே நடுவே தனியே ஒரு வீடு! கையகப் படுத்த நிலம் கொடுக்க மறுத்தவரின் தில்!

ஹைவே நடுவே தனியே ஒரு வீடு! கையகப் படுத்த நிலம் கொடுக்க மறுத்தவரின் தில்!



புதிதாக அமைக்கப்பட்ட அகலமான ஹைவே ஒன்றின் நடுவே, தனி வீடு ஒன்று இருந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு காட்சியை சுலபமாக பார்த்துவிட முடியாது. ஆனால், சீனாவின் வென்லிங் என்ற நகரத்தில் பார்க்கலாம்.

நடுவே என்றால், வீதியின் நடுவே! அந்த இடம்வரை வேகமாக வரும் வாகனங்கள் ஸ்லோவாகி, வீட்டை சுற்றிச் செல்ல வேண்டும்! வீதி அமைப்பதற்காக அப்பகுதியில் நிலம் எடுக்கப்பட்ட போது, இந்த வீட்டு உரிமையாளர் தமது நிலத்தை கொடுக்க மறுத்துவிட்ட காரணத்தால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.




சீனாவின் வென்லிங் நகரில் லு போகென், மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமாக வீடு இது. இந்தப் பகுதியில் பெரிய ஹைவே கட்ட முடிவு எடுக்கப்பட்டு, அப்பகுதியில் நிலம் வைத்திருந்தவர்களிடம் இருந்து நிலம் எடுக்கப்பட்டு, அரசு நிர்ணயித்த விலையில் இழப்பீடு வழங்கப்பட்டது.

அந்தப் பணத்தை வைத்து இதேபோல வீடு ஒன்றை கட்ட முடியாது என்று கூறிய லு போகென், நிலத்தை அந்த விலைக்கு கொடுக்க மறுத்து விட்டார். அவரிடம் நிலப் பத்திரம் பக்காவாக இருந்ததால் (பார்க்க, கீழேயுள்ள போட்டோ), அந்த நிலத்தை எடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில், மற்றைய நிலங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு, பணமும் கொடுக்கப்பட்டு விட்டதால், திட்டமிடப்பட்ட வீதியை வேறு இடத்துக்கு கொண்டு செல்லவும் முடியவில்லை. அந்த வீட்டை நடுவே வைத்துக்கொண்டு, வீதியை அமைத்தார்கள். லு போகெனின் வீட்டுக்கு எவ்வளவு நெருக்கமாக வீதி வருகிறது என்பதை அடுத்த போட்டோவில் பாருங்கள்.



இப்போது லு போகெனின் வீட்டு வாயில்வரை வருகிறது வீதி. வீடு அமைந்துள்ள நிலத்தில், வீட்டை சுற்றி உபரி நிலம் ஏதும் அவருக்கு சொந்தமாக இல்லை. அதனால், அடைவெளி விட வேண்டிய தேவை ஏதும் வீதி அமைப்பவர்களுக்கு கிடையாது.

வீதி இப்போதுதான் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னமும் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவில்லை. அடுத்த மாதம் இந்த வீதி போக்குவரத்துக்காக திறந்து விடப்படும்போதுதான், வரப்போகிறது சிக்கல். எப்படியென்றால் லு போகென் தமது வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றால், பிசியான highway ஒன்றின் ட்ராஃபிக்கை கடக்க வேண்டியிருக்கும்.





சீனாவின் கடுமையான கம்யூனிஸ்ட் காலங்களில், தனியார் நில சொத்துக்கள் தடை செய்யப்பட்டிருந்தன. நிலங்கள் அரசுக்கு உரியவையாக இருந்தன. அதன்பின் தனியார் நில உரிமை அனுமதிக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட சட்டம், நில உரிமையாளரிடம் இருந்து நிலத்தை அரசு கையகப் படுத்துவது என்றால்கூட, இரு தரப்புக்கும் இடையே முறையான ஒப்பந்தம் ஒன்று இருக்க வேண்டும் என்ற வகையில் உள்ளது.

அதுதான், பக்காவாக பத்திரம் வைத்திருக்கும் இவரது வீட்டை தொட முடியவில்லை. ஆனால், வீதி இயங்கத் தொடங்கியபின் இவரால் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாமல், தாமாகவே கிளம்பி விடுவார் என எதிர்பார்க்கிறது மாகாண அரசு.

 


ஆனால், லு போகென் என்ன சொல்கிறார்? “வேகப்பாதையின் நடுவே குடியிருக்கும் தில் எனக்கு இருக்கிறது. நான் இந்த வீட்டை காலி பண்ண போவதில்லை. இதேபோல வீடு ஒன்றை கட்டிக் கொள்ளும் அளவுக்கு பணம் கொடுக்கட்டும், அப்போதுதான் இங்கிருந்து நான் கிளம்புவேன்” என்கிறார்.

இடைஞ்சல் இவருக்கு மட்டுமல்ல, இந்த வீதியில் வாகனம் செலுத்தப் போகும் ஆட்களுக்கும் இருக்க போகிறது.








இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தமது பிரதமருக்கு அடித்த கிண்டல்: “BIBI LOSER”

இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தமது பிரதமருக்கு அடித்த கிண்டல்: “BIBI LOSER”




காசா-இஸ்ரேல் யுத்தம் 8 நாட்களின் பி்ன் முடிவுக்கு வந்ததில், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மகிழ்ச்சி அடையாத ஒரு குரூப்பும் உள்ளது. இஸ்ரேலிய ராணுவத்தின் ஒரு பகுதியினர்தான் அவர்கள். “இந்த யுத்தத்தை இப்படியே தொடர்ந்திருந்தால், காசா பகுதியை முழுமையாக நாம் கைப்பற்றியிருக்கலாம்” என்கிறார்கள் இவர்கள்.

“யுத்தத்தில் நாம் ஜெயிக்க வாய்ப்பு இருந்தது. அப்படியான நேரத்தில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு சம்மதித்து, அந்த வாய்ப்பை கெடுத்துவிட்டார் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ” என்று குமுறும் இவர்கள், தமது பிரதமருக்கே கிண்டலடிக்கும் விதத்தில் ஒரு காரியம் செய்தார்கள்.

16 ராணுவ வீரர்கள் தரையில், Hebrew மொழி எழுத்துக்கள் போல படுத்து போட்டோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்கள். கீழேயுள்ள போட்டோதான் அது. Hebrew மொழியில் ‘பிபி லூசர்’ (‘Bibi loser’) என்ற சொற்கள் வருமாறு போஸ் கொடுத்திருக்கிறார்கள். ‘பிபி’ என்பது பிரதமரின் ‘பெஞ்சமின்’ என்ற பெயரின் சுருக்கம்!

இந்திய தேசிய பாதுகாப்பு மையம் உஷார் ! இலங்கை செயற்கைக்கோள் விடையம் சூடுபிடித்தது !

இந்திய தேசிய பாதுகாப்பு மையம் உஷார் ! இலங்கை செயற்கைக்கோள் விடையம் சூடுபிடித்தது !





சுப் -ரீம் ஸட்(Supreme Sat 1) என்று அழைக்கப்படும் சட்டலைட் (செயற்கைக் கோள்) ஒன்றை இலங்கை தயாரித்துள்ளதாகவும், அது இன்று வியாழக்கிழமை சீன நேரம் 3.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் எனவும் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த செயற்க்கைக் கோள் தொலைத் தொடர்புக்காக பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இச் செயற்கைக் கோளை ஏன் சீனாவின், சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து ஏவவேண்டும் ? அயல் நாடான இந்தியாவிடம் கேட்டால், ஸ்ரீகரிக் கோட்டாவில் இருந்து ஏவியிருக்க முடியுமே ? பொருட்செலவும் மிகக் குறைவாக அமைந்திருக்கும். ஆனால் இதனை விடுத்து இலங்கை அரசானது இச் செயற்க்கைக் கோளை, ஏன் சீனாவைக் கொண்டு வடிவமைக்கவேண்டும் ? அத்தோடு இலங்கைக்கு மேலுள்ள விண் பரப்பில் இது நிலைகொள்ள உள்ளது, இந்திய தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என டெல்லியில் உள்ள சிலர் சிவப்பு மணியை அடித்துள்ளார்கள்.

இவர்களின் சிவப்பு மணி எச்சரிக்கையை, இந்திய தேசிய பாதுகாப்பு மையம் ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, இலங்கை அரசு இன்று தெரிவித்துள்ள கருத்துக்கள் நிச்சயமான இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல. தமக்கும் இந்த செயற்கைக் கோளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறது இலங்கை அரசு. அத்தோடு சீனக் கம்பெனி ஒன்றே இதனைத் தயாரித்துள்ளதாகவும் அதில் என்ன இருக்கிறது என்று எமக்குத் தெரியாது என்றும், ஆனால் தொடர்பாடலுக்கு உகந்த செயற்கைக் கோள் இது என்றும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட இன்று தெரிவித்துள்ளார். இதில் இருந்து இலங்கை அரசானது இச் செயற்கைக் கோள் விடையத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது என்பது மிகத் தெள்ளத் தெளிவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க, இன்று மாலை சீன நேரம் 3.30 மணிக்கு இச் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படவிருந்தது. ஆனால் அதனை சீன செயற்கைக்கோள் ஏவு தள அதிகாரிகள் இடை நிறுத்தியுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு மையத்தின் தலையீட்டால் தான் இது, இன்று ஏவப்படவிருந்த செயற்க்கைக் கோள் ஏவப்படவில்லை என்ற செய்திகள் டெல்லியில் இருந்து கசிந்தாலும், கால நிலை சீர்கேட்டால் அது 5 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. இச் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய பிற்பாடு அதனைச் செயலிழக்க வைக்க இந்தியா சில முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனவும், அமெரிக்க உதவியோடு இது நடைபெற சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய இந்தச் செயற்க்கைக் கோள், மிகவும் இரகசியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, முடிவடைந்த பின்னரே இது குறித்து இலங்கை செய்தி வெளியிட்டுள்ளமையும் பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

பால் தாக்கரே + அவரின் நிழல் போல் இருந்த ஆறு பேர்

 பால் தாக்கரே + அவரின் நிழல் போல் இருந்த ஆறு பேர்




“மராட்டியம் மராட்டியருக்கே… வேற்று மொழியினருக்கு இங்கே இடம் இல்லை” என்றார் ஒருசமயம். இன்னொருசமயம், ”தமிழர்களை மிகவும் நேசிக்கிறேன். ஈழத் தமிழர்கள், இந்தியாவின் குழந்தைகள்…” என்றார்.

பாபர் மசூதி இடிப்பை முன்னின்று நடத்திய அரசியல் கட்சிகள் அடையாளம் மறைத்துப் பின்வாங்க, ”ஒருவேளை சிவசேனா இடித்து இருந்தால், நான் பெருமை அடைகிறேன்…”என்றவர். ”இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்துக்கள் தற்கொலைப் படையினராக மாற வேண்டும்” என்று கர்ஜித்தவர், தனது பேத்தி நெகா, ஒரு முஸ்லிமை மணந்தபோது முன்னின்று வாழ்த்தினார். ”கடவுள் இல்லாமல் உலகம்இயங்காது” என்று சொன்ன தீவிர சைவ சித்தாந்த ஆத்திகர், தனது மனைவி மீனா இறந்தபோது, மேஜை மீது இருந்த கடவுள் படங்களைச் சிதறடித்து, ”கடவுளே இல்லை” என்று கோபம் காட்டியவர். இப்படித் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் முரண்கள், சர்ச்சைகள், அதிரடிகளால் நிரப்பிய பால் தாக்கரே, கடந்த 17-ம் தேதி தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டதை நம்ப முடியாமல் தவிக்கிறார்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்கள்!

போக்குவரத்து வசதிகள் நிரம்பியிராத அந்தக் காலகட்டத்தில் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரைக் கோடிப் பேர் திரண்டது கின்னஸ் ரெக்கார்டு. ஆனால், எந்த ஆட்சிப் பொறுப்பிலும் நேரடியாக உட்காராத தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த 20 லட்சம் பேர் கூடியதும் ஒரு ரெக்கார்டுதான். ‘மண்ணின் மைந்தன்’ முழக்கத்தை முன் நிறுத்தி, பால் தாக்கரேவின் சிவசேனா கட்சியினர் செய்த அதிரடிகளால் மகாராஷ்டிரத்தில் வசித்த வேற்று மாநிலத்தவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர் ஆவர். ஆனால், 80-களுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிறுவனர் தாணுலிங்க நாடார் உள்ளிட்ட தமிழ்ப் பிரமுகர் களுடன் தாக்கரேவுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.

இதற்கு இடையே தாக்கரேவின் கல்லூரி நண்பரான இலங்கையைச் சேர்ந்த சிவஞான சுந்தரம், சச்சிதானந்தம் ஆகியோர் இலங்கையில் தமிழர்களுக்கு நிகழும் கொடுமைகளை தாக்கரேவிடம் விவரித்தனர். அதன் பிறகுதான் – 1985-க்குப் பிறகு – தமிழர்கள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார் தாக்கரே. அதற்கு முன்பெல்லாம் ஆண்டுக்கு ஆறேழு முறையேனும் பம்பாயின் தாராவி, மாதுங்கா உள்ளிட்ட தமிழர் வாழ் பகுதிகளில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள், அதன் பிறகு மடமட வெனக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டது. இதனால் மும்பையின் பெரும்பான்மைத் தமிழர்கள் சிவசேனா தொண்டர்கள் ஆகினர்.

இந்தியா அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்புகையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர்,ஒருமுறை அத்வானி துணை பிரதமராக இருந்தபோது, ‘காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க விடுதலைப் புலிகளை அழைத்து வர வேண்டும்’என்றார்.

தாக்கரேவுக்கு மகாராஷ்டிர அரசு சார்பாகப் பாதுகாப்பு அளிக்கப்பட்டா லும், இறுதிவரை அவரது நிழல் போலவே இருந்த ஆறு மெய்க்காப்பாளர்களும் ஈழத் தமிழர்கள். இது யாருக்கும் தெரியாது. மராட்டிய இந்துக்களைத் தாண்டியும் தாக்கரேவை ரசித்தவர்கள் ஏராளம். ஆனால், அவரோ தன்னை அந்தச் சின்ன வட்டத்துக்குள் குறுக்கிக்கொண்டது தான் துயரம். தென்னிந்தியர்கள் மீதான வெறுப்பில் தொடங்கி இப்போதைய வட இந்தியர்கள் மீதான வெறுப்பு வரையிலான இனவெறி விதைகளை மராட்டியர்களிடம் விதைத்ததில் சிவசேனாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. மும்பைக் கலவரமும் முஸ்லிம்கள் மீதான சிவசேனாவின் தாக்குதல்களும் தாக்கரேவின் வரலாற்றில் விழுந்த கரும்புள்ளிகள். ஆனால், எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்கள் சூழ்ந்திருந்தாலும் பால் தாக்கரேவின் மறைவைத் தாங்க மாட்டாமல் கதறி அழுகிறார்கள் மண்ணின் மைந்தர்கள் !

Thursday, November 22, 2012

மனிதக் குரங்குகளுக்கும் இளமையைக் கடக்கும்போது 'மன உளைச்சல்'

மனிதக் குரங்குகளுக்கும் இளமையைக் கடக்கும்போது 'மன உளைச்சல்'



மனிதக் குரங்குகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவைகளுக்கும், மனிதர்களைப் போல , வாழ்க்கையின் மத்திய கால கட்டத்தில், மன உளைச்சல் ஏற்படலாம் என்பதற்கான ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது, இளமையில் அதிகமாகவும், வாழ்க்கையின் மத்திய காலகட்டத்தில் குறைவாகவும், மீண்டும் முதுமையில் அதிகரித்தும் காணப்படுவதாக, கடந்த பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் காட்டுகின்றன.

உலகெங்கிலும் வன உயிர்க் காட்சி சாலைகள் மற்றும் ஆய்வு மையங்களில் இருக்கும் சிம்பான்ஸீகள் மற்றும் ஒராங்குட்டன் ஆகிய குரங்கினங்களிலும், இதே போன்றதொரு ஒரு போக்கு காணப்படுவதை தேசிய அறிவியல் அக்கெடமி ப்ரொசீடிங்க்ஸ் என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று காட்டுகிறது.

இது போன்ற வாழ்க்கையின் மத்திய காலகட்டத்தில் ஏற்படும் மன உளைச்சல் உணர்வு, உடலியல் மற்றும் உயிரியல் தொடர்பானது, சமூகக் காரணிகளால் மட்டும் அல்ல என்று இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக , இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான , பேராசிரியர் ஆண்ட்ரூ ஓஸ்வால்ட் கூறுகிறார்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, மனிதக் குரங்குகளின் பராமரிப்பாளர்கள், அந்தக் குரங்குகளின் மனோநிலையைக் கணிக்குமாறும், அவை எந்த அளவுக்கு சமூக தொடர்பாடலை அனுபவிக்கின்றன என்பதை கவனிக்குமாறும், அவைகள் அவைகளுக்கு விதிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதில் எந்த அளவுக்கு வெற்றியடைந்தன என்பதைப் பார்க்குமாறும் கோரப்பட்டனர்.

உலக நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வருகிறது: ஐ.நா தகவல்

உலக நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வருகிறது: ஐ.நா தகவல்



உலகின் பல்வேறு நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வருவதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் பாதிக்கும் மேலாக எய்ட்ஸ் பாதிப்பு குறைந்து விட்டது என்றும், குறிப்பாக மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருந்த ஆப்ரிக்க நாடுகளிலும் எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறைந்து விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மலாவி(73%), போத்ஸ்வானா(71%), நமீபியா(68%), ஜாம்பியா(58%), சிம்பாவே(50%), ஸ்வாஸிலாந்து(41%), தென்னாப்பிரிக்கா(41%) போன்ற நாடுகளில் எச்ஐவி நோய்த்தொற்று பாராட்டத்தக்க அளவில் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மாத்திரிகளை சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை 63 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.







உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரம்

உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரம்



குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆஷ்லி. அவர் 16 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவ பரிசோதனைக்கு சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் உள்ள கருவுக்கு இதயம் வெளியே இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை ஆஷ்லியிடம் தெரிவித்தபோது அவர் அதிர்ந்தார்.

கருவைக் கலைத்தல், கருவிலேயே குழந்தையின் மார்பில் துளையிட்டு இதயம் வளர வழிவகுத்தல், இல்லை என்றால் குழந்தையின் இழப்பை ஏற்க தயாராகுதல் என்னும் 3 வழிகளை மருத்துவர்கள் கூறினர்.

ஆனால் ஆஷ்லி எந்த வழியையும் பின்பற்றாமல் குழந்தையை பெற்றார். வழக்கமாக இது போன்ற குறையுள்ள குழந்தைகள் இறந்தே பிறக்கும் அல்லது பிறந்தவுடன் இறக்கும். ஆனால் ஆஷ்லியின் குழந்தை ஆட்ரினா உயிரோடு பிறந்தாள். மேலும் அவளின் இதயத்துடிப்பும் நன்றாக இருந்தது.

இதையடுத்து ஹூஸ்டனில் உள்ள டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் ஆட்ரினாவுக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தை உடலுக்குள் வைத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆட்ரினா நலமாக உள்ளாள்.

ஆனால் அவள் உடல்நலம் தேறிய பிறகு மேலும் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது. அவளுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு இதய சிகிச்சை நிபுணரின் ஆலோசனை தேவைப்படும் என்று கூறப்படுகிறது.


நியூசிலாந்தில் பாரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கியது

நியூசிலாந்தில் பாரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கியது



நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது.
நியூசிலாந்தின் வடக்கு தீவு பகுதியில் 1978 மீற்றர் நீளமுள்ள மௌண்ட் டோங்காரிரோ என்ற எரிமலை உள்ளது.

கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, தற்போது வெடித்து சிதற தொடங்கி உள்ளது.

இதனால் வெளிவரும் புகையானது சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்துக்கு மேல் நோக்கி எழும்பும்.

தேசிய பூங்கா அமைந்துள்ள இப்பகுதிக்கு குழந்தைகளோ மற்றும் சுற்றுலா பயணிகளோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.








உலக அழிவிலிருந்து தப்பிக்க பிரான்ஸ் கிராமத்திற்கு இடம் பெயரும் மக்கள்

உலக அழிவிலிருந்து தப்பிக்க பிரான்ஸ் கிராமத்திற்கு இடம் பெயரும் மக்கள்





மாயன் காலண்டரின் அடிப்படையில் வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப்போகிறது என்ற தகவல் அண்மையில் வெளியானது.
சுமார் 4,600 ஆண்டு பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் மாயன் நாகரீகம் (Mayan civilization) பிரேசில், எல் சால்வடோர், கெளதமாலா பகுதிகளில் தொடங்கி, தென் அமெரிக்கா முழுவதும் பரவியிருந்தது.

இந்த நாகரீகம் 8ம் நூற்றாண்டில் அழியத்தொடங்கி, 9ம் நூற்றாண்டில் காணாமலேயே போய்விட்டது.

உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சுமார் 200 ஆண்டுகாலம் நீடித்த வறட்சியால் இந்த நாகரீகமே அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த நாகரீகத்து மக்கள் காலண்டர் செய்வதில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்.


இந்த நாகரீகத்தின் புராண நம்பிக்கைகளின்படி, கடவுள் இதுவரை 4 முறை பூமியைப் படைத்துள்ளார்.

அதில் மூன்று முறையும் பூமியை முழுமையாக உருவாக்க முடியாமல் கடவுளே தோற்றுவிட்டார்.

4வதாக அவர் உருவாக்கிய 'சக்சஸ்புல்' பூமியில் தான் மனிதர்களும் பிற உயிரினங்களும் வாழ்கின்றன.

ஆனால், மாயா மொழியில் 13 பக்டூன்கள் (தோராயமாக சொன்னால் 5,125 வருடங்கள்) தான் இந்த உலகம் இருக்குமாம்.

அதன் பின்னர் இந்த உலகம் முழுவதும் அழிந்து விடும் (apocalypse).

மாயா காலண்டரின்படி, இந்த பூமி வரும் டிசம்பர் 21ம் திகதியோடு தனது 13 பக்டூன்களைக் கடந்து, காணாமல் போகப் போகிறது.

மாயா காலண்டர்படி இந்தத் திகதி 13.0.0.0.0. ஆகும்.

எனவே இதை வைத்து ஜோதிடர்கள் இந்த உலகம் வரும் டிசம்பர் 21ம் திகதியுடன் அழிந்து விடுமென கூறியுள்ளார்கள்.


இந்த மாயா ஜோதிடத்துடன் தங்களது கற்பனைகளையும் சேர்த்து சில மாடர்ன் ஜோதிடர்கள் ஒரு புதிய கட்டுக்கதையை விட்டுள்ளனர்.

இவர்களின் கூற்றுப்படி பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கே Bugarach என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஒரு மலை வரும் டிசம்பர் 21ம் திகதி அப்படியே பிளக்கும்.

அதிலிருந்து ஒரு வேற்று கிரக விண்கலம் வெளியே வரும். அந்த விண்கலத்தில் ஏறிக் கொள்கிறவர்கள் மட்டுமே தப்புவார்கள்.

மற்றவர்கள் எல்லோருமே இந்த பூமியோடு சேர்ந்து மடிந்து போகிறார்கள்.

இது தான் இவர்கள் சொல்லும் ஜோசியம். மலை மீது வேற்று கிரக விண்கலம் வந்திறங்கி, வேற்றுகிரகவாசிகளும் வந்திறங்குவதை ''Close Encounters of the Third Kind'' படத்தில் நமக்குக் காட்டியிருந்தார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்.

அதே போல 2012 படத்தில் உலக அழிவிலிருந்து மக்களைக் காக்க மாபெரும் நீர்மூழ்கிகள் ஒரு மலையைக் குடைந்து தான் கட்டப்படும் என கூறியுள்ளார்கள்.

இந்த ஜோதிடத்தையும் நம்பும் ஆட்களும் இருப்பதால், Bugarach பகுதிக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை சமீபகாலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

டிசம்பர் 21ம் திகதி நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, பெரும் பிரச்சனையாகிவிடலாம் என்று பிரான்ஸ் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து இப்போதே அங்கு பாதுகாப்புப் படையினரை பிரான்ஸ் குவிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் Bugarach பகுதிக்குள் வெளியாட்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டிசம்பர் 21ம் திகதி சூரியனிலிருந்து பெரும் கதிர்வீச்சு கிளம்பி பூமியை சுட்டுப் பொசுக்கும், பூமியின் காந்தப் புலமே (magnetic field) வடக்கு-தெற்கு என்பதற்குப் பதிலாக கிழக்கு மேற்கு என்று மாறப் போகிறது என்றெல்லாம் கூட Conspiracy theorists-கள் இந்த 'மாயா கதைக்கு' மசாலா சேர்த்து வருகின்றனர்.

இந்த மாயா நாகரீகத்தை பின்புலமாக வைத்து ஹாலிவுட் இயக்குனர் மெல் கிப்சன் 'Apocalypto' என்ற ஒரு படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் வெள்ள அபாய எச்சரிக்கை! பாதைகள் துண்டிப்பு!!

பிரிட்டனில் வெள்ள அபாய எச்சரிக்கை! பாதைகள் துண்டிப்பு!!




பிரிட்டனின் சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்த மழையால், சில நகரங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியிருக்க, இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்து பீதியை கிளப்பியுள்ளது.

கடந்த இரு தினங்களாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாக Devon, Dorset, Somerset ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள போலீஸின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்பவர்களாக இணைந்துள்ளவர்களுக்கு இன்று காலை, “வீதிகளில் வாகனங்களை இறக்கும்போது ஞாக்கிரதையாக இருக்கவும். நீங்கள் இறங்கும் வீதியில் ஆறுபோல தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கலாம்” என்று ட்விட் மெசேஜ் போயிருக்கிறது.

மேலேயுள்ள போட்டோ, நேற்று Cheltenham Spa ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்டது. இங்கிருந்து லண்டன் செல்வதற்காக காத்திருந்த பயணிகளுக்கு, அடுத்தடுத்து 8 ட்ரெயின்கள் கேன்சல் செய்யப்பட்ட செய்திதான் வந்துகொண்டிருந்தது. ட்ரெயின் வரவில்லை.

ட்ரெயினுக்கு என்ன நடந்தது? எங்கே நிற்கிறது? அடுத்த போட்டோவுக்கு வந்து பாருங்கள்.






இதோ இங்கேதான் நிற்கிறது ட்ரெயின். ரயில்வே பாதையை வெள்ளம் முடியிருப்பதால், வெள்ளம் வடிந்து செல்லும்வரை ட்ரெயின்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து நேற்று இயங்கவில்லை. இன்று 2.5 இஞ்ச் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ரயில் பாதைகள் கிளியர் ஆவது சந்தேகமே.

சரி. ரயிலில் செல்லும் யோசனையை கைவிட்டு விட்டு, காரை எடுத்துப் போகலாமா? வீதியில் நிலைமை எப்படியுள்ளது என்று பார்க்க அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.


பர்மிங்ஹாம், ரெட்னல் பகுதி வீதி ஒன்றில் நேற்று எடுக்கப்பட்ட போட்டோ இது. வீதியில் இப்படி வெள்ளம் இருந்தால், கார்களில் வேகமாக செல்ல முடியாது. ஆனால், ஓரளவுக்கு மெதுவாக செல்ல முடியும். இதனால், வழமையான 30 நிமிடங்களில் அலுவலகம் செல்பவர்கள், டஷ் டயத்தில் 3 மணி நேரத்துக்கு முன்பு கிளம்ப வேண்டியுள்ளது.

சரி, மெதுவாக டிரைவ் பண்ணினால் ஆபத்து இல்லை என்று அடித்துச் சொல்ல முடியுமா? அடுத்த போட்டோவில் வந்து பாருங்கள் என்ன ஆகிறது என்பதை.


நீங்கள் மெதுவாக சென்றாலும், உங்களுக்கு அருகே, உங்களை கடந்து செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்வார்கள் என்று சொல்ல முடியாது. பெரிய ட்ரக்குகளின் உயரம் அதிகம். டயரும் பெரியது. இதனால், அவர்களால் வேகமாக டிரைவ் செய்ய முடியும்.

கீழேயுள்ள போட்டோவில், ட்ரக்குக்கு அருகே செல்லும் வேனை பாருங்கள். ட்ரக் முழுமையாக வேனை கடந்து செல்லும் வரை, இவருக்கு வின்ட்ஷீல்டு வழியாக முன்னே எதையும் பார்க்க முடியாது. முன்னே ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தால், போய் மோத வேண்டியதுதான்.

அப்படியிருந்தும், சமாளித்துக்கொண்டு போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போக வேண்டிய இடம்வரை போய் சேருவது உறுதிதானா? அடுத்த போட்டோவுக்கு வந்துதான் பாருங்களேன்!







அடாடா.. வீதியின் இந்தப் பகுதி உயரம் குறைவாக இடத்தின் ஊடாக செல்கிறது. இதில் வந்து சிக்கிக் கொண்டால், வெள்ளம் வடியும்வரை காருக்குள் காத்திருக்க வேண்டியிருக்கும். அல்லது, காரை விட்டு இறங்கி நடக்க வேண்டியிருக்கும். அப்புறம் வந்து காரை எடுத்துக் கொள்ளலாம், நாளைக்கே வெள்ளம் அதிகமாகி, காரை அடித்துக் கொண்டு செல்லாவிட்டால்!




Top News Worldwide : Body Language ஒபாமாவுக்கே!!! வாங்க.. வந்து பழகி பாருங்க!!

Top News Worldwide : Body Language ஒபாமாவுக்கே!!!  வாங்க.. வந்து பழகி பாருங்க!!




அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தேர்தலில் ஜெயித்து இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவரது ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தில், வித்தியாசமான ஜனாதிபதி ஒருவரை காணமுடிந்தது. சம்பிரதாயங்களற்ற, ஜாலியாக தலைவர் என்ற இமேஜை ஏற்படுத்தியிருக்கிறார்.

இது அமெரிக்க ஜனாதிபதியின் ‘புதிய இமேஜ், புதிய அணுகுமுறை’ என்று வர்ணிக்கின்றன அமெரிக்க மீடியாக்கள். திட்டமிட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட இமேஜ் அது என்றும், அமெரிக்கர்கள் பற்றி மற்றைய நாட்டவரின் நினைப்பு இந்த இமேஜை ஒட்டியதாகவே இனி இருக்கும் எனவும் கூறுகிறார்கள்.

மூன்று நாடுகளுக்கான ஒபாமாவின் விஜயத்தில் முதலாவது நாடான மியன்மாருக்கு சென்றபோது, இந்த புதிய இமேஜ், அமெரிக்க மீடியாவில் பெரிய விஷயமாக காண்பிக்கப்பட்டது. ஆனால், ஒபாமாவின் தாய்லாந்து விஜயத்தின்போது, நிலைமை தலைகீழாக மாறியது.

ஒபாமா ஏற்படுத்த முயற்சிக்கும் இமேஜின் மொத்த உருவமாக இருந்தார் தாய்லாந்தின் மிக இளைய பெண் பிரதமர் யிங்லக் சினவாத்ரா.

மியன்மாரில் ஒபாமா பெயரைத் தட்டிச்செல்ல, தாய்லாந்தில் ஒபாமாவைவிட அதிகம் கவனிக்கப்பட்டார் யிங்லக். “யார் இந்த பெண்?” என்று தலைப்பு இட்டிருந்தது பாஸ்டன் குளோப் பத்திரிகை!

நியூயார்க் டைம்ஸ், “அமெரிக்கர்கள் என்றால் ஆசியர்களுக்கு உள்ள ஒருவித தாழ்வு மனப்பான்மை அடியோடு தென்படாமல், தனது பாடி லேங்குவேஜ் மூலம் ஒரு சுப்பிரியர் லெவலுக்கு சென்றார் யிங்லக்” என்று எழுதியது. “அவரது சில முகபாவங்கள் அமெரிக்க ஜனாதிபதியை லேசாக கிண்டலடிப்பது போலவும், வம்புக்கு இழுப்பது போலவும் இருந்தன” என்றது, ஃபாக்ஸ் நியூஸ் டி.வி. சேனல்.

அமெரிக்க மீடியாவே இப்படி எழுதினால், தாய்லாந்து மீடியா சும்மா விடுவார்களா? “ஒபாமாவைவிட எங்கள் பெண் பிரதமர் டாப்! பாருங்கள், அவரைப் பாருங்கள்” என்று எழுதியது, பாங்காக் போஸ்ட். சுருக்கமாக சொன்னால், “வாங்க.. பழகிப் பாருங்க”

இவர்கள் ஆகா, ஓகோ, என்று சொல்லும் விதத்தில் அப்படி என்னதான் செய்தார்? தனது பாடி லேங்குவேஜ் மூலம் எப்படி கவனிக்க வைத்தார்? “அவரது சில முகபாவங்கள் அமெரிக்க ஜனாதிபதியை லேசாக கிண்டலடிப்பது போலவும், வம்புக்கு இழுப்பது போலவும் இருந்தன” என்ற கூற்று நிஜமா?

ஒபாமாவுடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை தந்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்கள். நீங்களே புரிந்து கொள்வீர்கள், விளக்கம் ஏதும் தேவையில்லை. யிங்லக் சினவாத்ராவின் பாடி லேங்குவேஜையும், முகபாவத்தையும் கவனியுங்கள்.

இதோ ஒபாமா பாங்காக் வந்து இறங்கிவிட்டார். அடுத்த போட்டோவில் திருவிழா ஆரம்பம்.