Thursday, November 1, 2012

புயலின் பெயர் நிலமா? நீலமா?

புயலின் பெயர் நிலமா? நீலமா?




இந்திய கடல் பகுதியில் உருவாகும் புயல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக பெயர் வைத்துள்ளனர். இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளனர். அதில் பங்களாதேஷ், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகளை உள்ளடக்கி உள்ள கடல் பிரதேசங்களில் உருவாகும் புயல்களுக்கு மேற்கண்ட நாடுகள் பெயர்களை பரிந்துரை செய்கின்றன. அதன்படி இதுவரை 32 பெயர்களை முதற்கட்டமாக வெளியிட்டுள்ளனர். இதுவரை வந்த 29 புயல்களுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ள பெயர்கள் வரிசைக்கிரமமாக சூட்டப்பட்டன. இப்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘நிலம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். நிலம் என்ற இந்த பெயரை பாகிஸ்தான் பரிந்துரை செய்தது. அதை ‘நீலம்’ என்று அழைக்க வேண்டும் என்றும் அந்த நாடு குறிப்பிட்டது. ஆனால், டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த புயலின் பெயரை ‘நிலம்’ என்று உச்சரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு புயலின் பெயரையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று விளக்கி ஒருபட்டியலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி இப்போது உருவாகியுள்ள புயலை ‘நிலம்’ என்று அழைக்க வேண்டும். இது தவிர இனிமேல் வர உள்ள புயலுக்கு ‘மகசென்’ என்ற பெயரை இலங்கை சூட்டியுள்ளது. அதற்கு அடுத்த புயலின் பெயரை தாய்லாந்து பரிந்துரை செய்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!