Friday, August 23, 2013

அதிகம் படித்தவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்குமாம்!

அதிகம் படித்தவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்குமாம்!


கல்வித் தகுதி அதிகம் உடைய நபர்கள், மனதளவிலும், உடலளவிலும்அதிகம் பாதிக்கப்படுவதாக,ஆய்வாளர்கள் தெரிவித்துஉள்ளனர். பணிச்சூழலில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கும் படித்தவர்கள் தனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான்

மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஒரு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

மன அழுத்த பாதிப்பு 

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உறவில் விரிசல் 

மன அழுத்தத்தினால் எற்படும் பிரச்சினைகள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடும் நோய்களின் பிறப்பிடமாக உள்ள மனஅழுத்தம் மண வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதிக படிப்பு ஆபத்து 

அதிகம் படிக்கும் நபர்கள், மனதளவிலும், உடலளவிலும்அதிகம் பாதிக்கப்படுவதாக,பெல்ஜியத்தைச் சேர்ந்தகென்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அறிக்கைவெளியிட்டு உள்ளனர்.அதிக கல்வித் தகுதிஉடைய, 21 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, 17ஆயிரம் பணியாளர்களிடம்நடத்திய ஆய்வில், பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திறமைக்கேற்ற வேலை 

உலகின் பல நாடுகளிலும் தற்கால இளைஞர்கள் அதிகம் படித்தவர்களாய்இருக்கிறார்கள். எனினும்,அவர்களின் திறமைக்கேற்ற வேலை கிடைப்பதுஇல்லை. தங்கள் பணியில் முழு திறமையையும் வெளிப்படுத்த முடியாத சூழல்ஏற்படுவதால், ஒரு விதமன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர்.

பாதிக்கும் உடல்நிலை 

வாழ்க்கையில் தாங்கள் கற்ற அனைத்தையும் வெளிப்படுத்த முடியவில்லையே என்ற உணர்வு அவர்களை உறுத்துகிறது. இதனால், மன இறுக்கம் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் உடல் நிலையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஆய்வில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், மனதளவிலும், உடலளவிலும்ஏராளமான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். Show Thumbnail

அதிக மனஇறுக்கம் 

அதிக திறமை மற்றும்உயர்ந்த பட்டங்களைப்பெற்ற நபர்கள், குறுகியகாலத்திற்குள் தங்கள்தகுதிக்கேற்ற வேலையில்சேராவிடில், அதிக மனஇறுக்கம் ஏற்பட்டு, உடல்நிலை பாதிப்புக்கும்ஆளாகின்றனர். எனவே,அதிகம் படிக்கும் நபர்களை, மன இறுக்க நோய்அதிக அளவில் பாதிக்கிறது.

குறைந்த சம்பளம் 

அதிகம் படித்த நபர்கள்,ஆரம்பத்தில் குறைந்த சம்பளம் மற்றும் தங்களின்திறமைக்குக் குறைவானவேலையில் சேருகின்றனர். தங்களை விட திறமைமற்றும் தகுதி குறைந்த சீனியர்களின் கீழ் வேலைபார்க்க வேண்டியசூழ்நிலையாலும், சீனியர்களின் தாழ்வு மனப்பான்மையால்,

ஆபத்தாகும் கல்வித்தகுதி 

இதற்கிடையில் உலகின் பல நாடுகளைச்சேர்ந்த மக்களும், கல்விக்குமுக்கியத்துவம் தந்து வருவதால், போட்டி உலகில்தங்கள் கல்வித் தகுதியைமேலும் மேலும் உயர்த்திக்கொள்வதற்காக, பலரும்அதிகம் படிக்கத் துவங்கி உள்ளனர் அதுவே இன்றைக்கு ஆபத்தாகியுள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

உலக வர்த்தகத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் 'டாப் 10' கரன்சிகள்

உலக வர்த்தகத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் 'டாப் 10' கரன்சிகள்


டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து விரைவிலேயே 65 ரூபாயை எட்டிவிடும் என்று கருதப்படும் நிலையில், உலகளவில் பங்குச் சந்தைகளில் மிக அதிகமாகப் புழங்கப்படும் கரன்சிகள் குறித்து இந்த நேரத்தில் ஆராய்வது நல்லது.

அமெரிக்க டாலர்: 

உலகம் முழுவதும் சர்வதேச வர்த்தகத்தில் மிக அதிகமாக, அன்னிய செலாவணியாகப் பயன்படுத்தப்படுவது அமெரிக்க டாலர் தான். இதனால் தான் டாலருக்கு ஏதாவது நடந்தால் உலகம் முழுவதுமே அதன் தாக்கம் உணரப்படுகிறது.

யூரோ: 

இதில் இரண்டாவது இடத்தில் இருப்பது யூரோ. ஐரோப்பிய நாடுகள் இணைந்து 1999ம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மிக இளம் கரன்சி தான் யூரோ. ஆனாலும் விரைவிலேயே உலகின் மிக முக்கியமான 2வது கரன்சி என்ற இடம் யூரோவுக்குக் கிடைத்துவிட்டது. இதை வெளியிடுவது ஐரோப்பிய மத்திய வங்கி.

ஜப்பானின் யென்: 

இதில் 3வது இடத்தில் இருப்பது ஜப்பானின் யென். 1871ம் ஆண்டில் அப்போதைய மெய்ஜி ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பணம் தான் யென்.

பிரி்ட்டிஷ் பவுண்ட்: 

உலகளவில் கரன்சி வர்த்தகத்தில் 4வது இடத்தில் இருப்பது பிரிட்டனின் பவுண்ட். இதன் முழுப் பெயர் பவுண்ட் ஸ்டெர்லிங். 1694ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பழமையாக மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள கரன்சி இது.

ஆஸ்திரேலிய டாலர்: 

அடுத்த இடத்தில் இருப்பது ஆஸ்திரேலிய டாலர். 1911ம் ஆண்டு வரை தனியார் ஆஸ்திரேலிய வங்கிகளே கூட கரன்சியை அச்சடித்து வினியோகிக்கும் உரிமை பெற்றிருந்தன. பின்னர் இது ஆஸ்திரேலிய கரூவூலத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. 1959ம் ஆண்டு முதல் இதை ரிசர்வ் பேங்க் ஆப் ஆஸ்திரேலியா தான் கட்டுப்படுத்துகிறது.

ஸ்விஸ் பிராங்க்: 

உலகளவில் கரன்சிகள் வர்த்தகத்தில் 6வது இடத்தில் இருப்பது ஸ்விட்சர்லாந்து நாட்டின் பிராங்க். 1910ம் ஆண்டு முதல் ஸ்விஸ் நேசனல் பேங்க்கின் கட்டுப்பாட்டில் வினியோகமாகி வருகிறது இந்த கரன்சி.

கனடிய டாலர்: 

அடுத்து இருப்பது கனடா நாட்டு டாலர். 19ம் நூற்றாண்டின் துவக்கம் வரை கனடாவில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் உள்நாட்டு கரன்சிகள் புழக்கத்தில் இருந்தன. 1930களில் அமெரிக்கா, கனடாவில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து 1935ம் ஆண்டில் பேங்க் ஆப் கனடா என்ற மத்திய வங்கி உருவாக்கப்பட்டு கனடா டாலர் அறிமுகமானது.

ஹாங்காங் டாலர்: 

பிரிட்டனினால் ஹாங்காங் ஆக்கிரமிக்கப்பட்டபோது அங்கு பவுண்ட், ஸ்பெயின், மெக்ஸிகோ, இந்திய ரூபாய், சீனவின் யுவான் என அனைத்து வகையான கரன்சிகளும் புழக்கத்தில் இருந்தன. 1863ல் தான் ஹாங்காங் டாலர் கரன்சி அறிமுகமானது. இதையடுத்து 1898ல் இந்தத் தீவை பிரிட்டனுக்கு லீசுக்கு விட்டது சீனா. அப்போது ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் ஹாங்காங் கரன்சி பெரும் பலமடைந்தது. இப்போது உலகில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் கரன்சிகளில் 8வது இடத்தில் இது உள்ளது.

ஸ்வீடிஷ் க்ரோனா: 

இந்த வரிசையில் 9வது இடத்தில் இருப்பது ஸ்வீடன் நாட்டின் க்ரோனா. 1873ம் ஆண்டு முதல் இந்த கரன்சி புழக்கத்தில் உள்ளது.

நியூசிலாந்து டாலர்: 

இதில் 10வது இடத்தில் இருப்பது நியூசிலாந்து டாலர். 1934ம் ஆண்டில் இந்த கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

வண்டலூரில், இனச்சேர்க்கையின் போது மோதல்: ‘செம்பியனை’க் கொன்ற வங்கப்புலி சத்தியா

வண்டலூரில், இனச்சேர்க்கையின் போது மோதல்: ‘செம்பியனை’க் கொன்ற வங்கப்புலி சத்தியா


மிருகக்காட்சி சாலையில், இனச்சேர்க்கைக்காக விடப்பட்ட இரண்டு புலிகளிடையே உண்டான பெரும் மோதலில், ஆண் புலி பரிதாபமாகப் பலியானது. பெண் புலி தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது. சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது மக்களுக்கு பல அரிய விலங்குகளையும், பறவைகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு வழிவகை செய்யும் இடமாக உள்ளது.

சென்னை உட்பட உலகின் பிற பகுதிகளில் இருந்தும் தினந்தோரும் இங்கு பல்லாயிரக்காணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சிங்கம், புலி, யானை, வெள்ளைப்புலி, கரடி உள்பட பல்வேறு அரிய வகை விலங்குகளும், பறவைகளும் உள்ளன. மிருகக்காட்சி சாலைக்குள்ளாகவே பல இனச்சேர்க்கைகள் நடை பெறுவது வழக்கம். அப்படி சமீபத்தில் நடந்த புலிகள் இனச்சேர்க்கையில் புலிகளுக்கிடையே உண்டான மோதலில் ஆண் புலி பரிதாபமாக இறந்துள்ளது.


இந்தியாவிலேயே முதல்முறையாக... 

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலேயே முதல் முறையாக வெவ்வேறு இனப் புலிகளுக்கிடையே இனச்சேர்க்கை ஈடுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அதில், சாதாரண வங்கப் புலியுடன், வெள்ளைப்புலியை இனச்சேர்க்கைக்கு விட தீர்மானித்தனர் அதிகாரிகளும், மருத்துவர்களும்.

வாங்க, பழகிப் பார்க்கலாம்.... 

அதன்படி, வங்கப்புலி விஜயுடன், வெள்ளைப் புலி அகன்ஷாவைப் பழக விட்டனர். தோழமையோடு பழகிய புலிகள், பின்னர் இனச்சேர்க்கையில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து கர்ப்பமான அகன்ஷா அழகிய 3 வெள்ளைப் புலிகளை ஈன்றது. முறையே அவற்றிற்கு வித்யா, ஆர்த்தி, நேத்ரா எனப் பெயரிடப்பட்டது.

முதல் முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் புலிகளின் இனச்சேர்க்கை குறித்து ஆலோசிக்கப் பட்டது. இதற்காக ஆண் வெள்ளைப் புலியான 3 வயது செம்பியனுடன், பெண் வங்கப் புலியான 9 வயது சத்தியாவை இனச்சேர்க்கை செய்ய முடிசெய்யப்பட்டது.

முன்பு போலவே, முதலில் இரண்டு புலிகளும் சகஜமாகப் பழக விடப்பட்டன. இந்நிலையில் கடந்த 7ம் தேதி இது புலிகளுக்கு ஏற்ற இனச்சேர்க்கைகாலம் என்பதால், அதிகாரிகள் இரண்டு புலிகளுக்கும் இனச்சேர்க்கைக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர்.

இனச்சேர்க்கைகான முயற்சிகள் நடைபெற்ற போது திடீரென வங்கப்புலியான சத்தியா, ஆண் புலி செம்பியன் மீது கோபத்துடன் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், புலிகளுக்கு இடையே மோதல் உண்டானது. அதிகாரிகள் எவ்வளவோ முயன்று பார்த்தும் சண்டையை தடுக்க இயலவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது இந்தச்சண்டை.


செம்பியனைத் தாக்கிய சத்தியா.... 

இதில் பெண் வங்கப்புலி சத்தியா, ஆண் வெள்ளைப்புலி செம்பியனின் தலையில் கடுமையாக தாக்கியதில் செம்பியனின் மூளை செயல் இழந்தது. மயங்கி கீழே விழுந்தது. இந்த சண்டையில் வங்கப்புலி சத்தியாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர் சிகிச்சை... 

பின்னர் ஒரு வழியாகப் போராடி, பூங்கா மருத்துவர்கள் முதலில் பெண் வங்கப்புலி சத்தியாவை அந்த கூண்டில் இருந்து பிரித்து வேறு கூண்டிற்கு மாற்றினர். தற்போது பெண் புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிதாபப்பலி.... 

மூளையில் பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த வெள்ளைப்புலி செம்பியனுக்கு கடந்த 10 நாட்களாக பூங்கா மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சை செய்து பார்த்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி வெள்ளைப்புலி செம்பியன் பரிதாபமாக இறந்தது.

நல்லடக்கம் 

இறந்த செம்பியனின் உடலை பிரேதபரிசோதனை செய்த பின்னர் பூங்கா வளாகத்திலேயே பூங்கா ஊழியர்கள் புதைத்தனர்.

இது எதிர்பாராத ஒன்று... 

விபரீதத்தில் முடிந்த் இனச்சேர்க்கை முயற்சி குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் ரெட்டி கூரும்போது, ‘வங்கப்புலியுடன் வெள்ளைப்புலியை இனச்சேர்க்கையில் ஈடுபடுத்தி வண்டலூர் உயிரியல் பூங்கா வெற்றி பெற்று மற்ற பூங்காவிற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. இரண்டாவது முறை இதே போல் இனச்சேர்க்கையில் ஈடுபடும் போது எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நடந்து உள்ளது. இரண்டு புலிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் ஆண் புலி இறந்து உள்ளது. வேறு எந்த காரணங்களும் கிடையாது.

குணமடைந்து வரும் சத்தியா... 

தற்போது வங்கப்புலி சத்தியாவிற்கு பூங்கா மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் வீடியோ காமிரா மூலம் கண்காணித்து தொடர்ந்து நவீன சிகிச்சை அளித்து வருகிறது. சத்தியாவிற்கு ஏற்பட்ட காயங்கள் சரியாகி வருகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

“சிங்கள அமைச்சர் என்ற முறையில், நான் தமிழர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும்”

“சிங்கள அமைச்சர் என்ற முறையில், நான் தமிழர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும்”


இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் இரு நாட்டு கடல் பகுதிகளிலும் மாறிமாறி மீன்பிடிக்க அனுமதிக்கும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். “இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்தால், சிங்கள அமைச்சர் என்ற முறையில், நான் தமிழர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய, இலங்கை மீனவர்கள், தத்தமது நாட்டு கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பதால் கைது செய்யப்படும் நிலை தற்போது உள்ளது. இதனைத் தவிர்க்க, இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் இரு நாடுகளின் கடல் எல்லைகளிலும், 70 நாட்கள் இங்கும், 70 நாட்கள் அங்குமாக மாறிமாறி மீன் பிடிக்க அனுமதிக்கலாம் என ஒரு திட்டத்துக்கு இரு நாட்டு மீனவர்கள் தரப்பில் உடன்பாடு ஏற்பட்டது.

ஆனால் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜித சேனாரத்ன, “இலங்கை கடல் பகுதியில், 70 நாட்களும், இந்திய கடல் பகுதியில், 70 நாட்களும், இரு நாட்டு மீனவர்களும், மீன் பிடிக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் சேனாரத்ன கூறுகையில், “இரு நாட்டு கடல் எல்லைகளைத் தாண்டி இரு தரப்பு மீனவர்களும் மீன் பிடிக்கும் திட்டம் சர்வதேச கடல் எல்லை ஒப்பந்தத்தை மீறுவதாகும். கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் கடலில் நடமாடியதால், இலங்கை மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. அவர்கள் சரியாக மீன் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

தற்போது யுத்தம் முடிந்தபின் இலங்கை மீனவர்கள் எமது பகுதிகளில் மீன்பிடிக்க முடிகிறது. இப்படியான நிலையில், இந்திய மீனவர்களும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி அளித்தால், இந்திய மீனவர்கள் நம் கடல் வளத்தை சுரண்டி விடுவர். இதனால் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவர்.

இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்தால், சிங்கள அமைச்சர் என்ற முறையில், நான் தமிழர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும்” என்றார்.


Join with us on Facebook  >>>

              அறிவியல்


Thursday, August 22, 2013

இன்று சென்னைக்கு 375வது பிறந்த நாள்!

இன்று சென்னைக்கு 375வது பிறந்த நாள்!



சென்னை நகருக்கு இன்று 375வது பிறந்த நாள். இதையொட்டி, ஒரு வாரத்துக்கு நகரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது.

1646ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை 19 ஆயிரம். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம் ஆகும். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு மதராஸ், மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் 1639 ஆகஸ்ட் 22ம் தேதியை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் தினமே சென்னை தினம். இந்த தினம் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளை படங்களுடன் 2004ம் ஆண்டு தொடங்கிய இந்த கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக்கண்காட்சி, உணவு திருவிழா, மராத்தான் ஓட்டம் என பல்வேறு பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சென்னை நகரம் உருவானது. எழும்பூர், திரு வல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இருந்தன. இவை காலப் போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. ஆங்கிலேயர் வசமிருந்த காரணத்தால் உலகின் புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்த வேகத்தில் சென்னைக்கும் வந்தன. தொலைபேசி, ரெயில், சினிமா, தபால் போன்றவை அடுத்த சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு அறிமுகமாகின.
1895-ம் ஆண்டு மே 7-ந்தேதி சென்னை நகர வீதிகளில் முதன் முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. ஆனால் அந்த சமயத்தில் லண்டனில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. தென்னிந்தியாவின் முதல் ரெயில் நிலையமாக ராயபுரம் அமைந்தது. அண்ணாசாலை தபால் நிலைய கட்டிடத்தில் அப்போது எலெக்ட்ரிக் தியேட்டர் இருந்தது. தமிழகத்திலேயே முதல் சினிமாக்கொட்டகை இதுதான்.

ஒருபுறம் எளிய மக்களின் பாட்டுப் புத்தகங்களை விற்பனை செய்த குஜிலிபஜார் பிரபலமாக விளங்கியது. மற்றொரு புரம் சாஸ்த்ரீய சங்கீதம் வளர்த்த இசை சபாக்கள் வேரூன்றி வளர்ந்தன.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மதராஸ் மாகாணத்தின் தலை நகரானது சென்னை. சென்னை மாகாணமாக இருந்தது கடந்த 1969ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நகரின் பெயர் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை நகரின் மக்கள் தொகை கடந்த 1646 ஆம் ஆண்டு 19 ஆயிரமாக இருந்தது. பரந்து விரிந்த மெரீனா கடற்கரை, விவேகானத்தர் இல்லம், மிகப்பெரிய கோவில்கள் என சென்னைக்கு பல அடையாளங்கள் உள்ளன.

இன்று சென்னை மாநகரம் புகழ்பெற்ற கோவில்கள், நட்சத்திர ஓட்டல்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், பொழுது போக்குவதற்காக தியேட்டர்களுடன் கூடிய ஷாப்பிங் மால்கள் என புதுப்பொலிவுடனும் இளமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.

கிராமங்கள் ஒன்றினைந்து நகரமாகி, பின்னர் மாநகரமாகி இன்றைக்கு கிரேட்டர் சென்னையாக உயர்ந்து நிற்கிறது. சென்னையின் 375 வது பிறந்த தினத்தை கொண்டாட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள் சென்னை நகரின் வரலாறு தொடர்பான பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளன.

சிறப்பு மிக்க சென்னை தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னைக்கு இன்று வயது 375. ‘மெட்ராஸ் டேயை‘ முன்னிட்டு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து “நம்ம சென்னை‘ என்ற தலைப்பில் சென்னை நகரின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி இன்று காலை மைலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகன்ட்டரி பள்ளியில் புகைப்பட கண்காட்சி நடந்தது. பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரியில் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது.

இதே போல், இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை தரமணி சி.பி.டி. வளாகத்தில் உள்ள பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அரங்கத்தில் சென்னை வரலாற்றை விளக்கும் ஆவணப் படங்கள் திரையிடப்படவுள்ளன. இதே போல், ஒரு வாரத்துக்கு சென்னையின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Like us on Facebook  >>>

              அறிவியல்

Monday, August 19, 2013

புகார் கொடுத்தா கண்டுக்கவா மாட்டேங்கிறீங்க: ஃபேஸ்புக் நிறுவனரின் பக்கத்தை ஹேக் செய்த பாலஸ்தீனியர்

புகார் கொடுத்தா கண்டுக்கவா மாட்டேங்கிறீங்க: ஃபேஸ்புக் நிறுவனரின் பக்கத்தை ஹேக் செய்த பாலஸ்தீனியர்


நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹேக்கர் ஹேக் செய்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

அதாவது ஃபேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும்(wall) யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஃபேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக ஃபேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை(bug) இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசு அளிப்பார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதனால் கடுப்பான கலீல் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹேக் செய்து அதில் புகாரை தெரிவித்துள்ளார்.

ஜக்கர்பர்கின் பக்கத்தில்(wall) கலீல் கூறியிருப்பதாவது, 

என் பெயர் கலீல் ஷ்ரியாதே. நான் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸில் பி.ஏ. முடித்துள்ளேன். உங்களின்(www.facebook.com) இணையதளத்தில் ஒரு பக்கை(bug) கண்டுபிடித்துள்ளேன். அது குறித்து உங்களிடம் புகார் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த பக்(bug) மூலம் ஒரு ஃபேஸ்புக் யூசர் மற்றொரு யூசரின் பக்கத்தில்(wall) எழுத முடிகிறது. நான் சாரா. குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர்பர்க்குடன் ஹார்வர்டில் படித்த சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Like us on Facebook  >>>

              அறிவியல்

இந்த இந்தியரின் சம்பளம் ரூ. 105 கோடி தான்!

இந்த இந்தியரின் சம்பளம் ரூ. 105 கோடி தான்! 


உலகின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான டியாஜியோவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ள இந்தியரான இவான் மெனெசெசுக்கு ஆண்டு ஊதியம் ரூ. 105 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவான் கடந்த 13 ஆண்டுகளாக டியாஜியோவில் பணியாற்றி வருகிறார். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (COO) இருந்த அவருக்கு கடந்த ஆண்டு ரூ. 75 கோடி ஊதியமாகத் தரப்பட்டது. 

இப்போது தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள அவருக்கு 8.6 சதவீத ஊதிய உயர்வும் (ரூ. 9.6 கோடி), மற்ற சலுகைகளாக ரூ. 95 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 டியாஜியோ நிறுவனத்தின் தயாரிப்புகள் தான் ஜானி வாக்கர், ஸ்மிர்னாப் போன்ற மதுபான வகைகளாகும். இந்த நிறுவனம் சமீபத்தில் விஜய் மல்லையாவின் யு.பி. மதுபான நிறுவனத்தில் ரூ. 10,000 கோடியை முதலீடு செய்து பங்குகளை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. 

53 வயதான இவான் மெனெசெஸ் அகமதாபாத் ஐஐஎம்மில் படித்தவர். டியாஜியோவில் பணிக்கு சேரும் முன் நெஸ்ட்லே, வேர்ல்பூல் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.




Like us on Facebook  >>>

              அறிவியல்