Saturday, December 22, 2012

நித்தியானந்தா கப்பலில் சிஷ்யைகளுக்கும் காட்டிய ‘கல்பதரு’

நித்தியானந்தா இன்று சிங்கப்பூர் சொகுசுக் கப்பலில் சிஷ்யைகளுக்கும் காட்டிய ‘கல்பதரு’



அருணகிரிநாதர், “நித்தியானந்தவை மதுரை ஆதீனத்தை விட்டு வெட்டி வெளியே அனுப்பி விட்டேன்” என அறிவித்த பின், தமிழ்நாட்டில் இருக்க பிடிக்காமலும், கர்நாடகாவுக்கு போக விருப்பம் இல்லாமலும் இருந்த நித்தி சுவாமிகள் தற்போது போய் லேன்ட் பண்ணியுள்ள இடம், சிங்கப்பூர்!

இன்று (சனிக்கிழமை) அவர் சிங்கப்பூர் கடலில் சொகுசுக் கப்பலில் இருக்கிறார். சிஷ்யர்களுக்கும், சிஷ்யைகளுக்கும் (அவர்கள் இல்லாமலா?) சொகுசுக் கப்பலில் ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கிறார் அவர்.

இந்த சிறப்பு பயிற்சிக்கு பெயர், ‘கல்பதரு’. ஒரு முழு நாள் பயிற்சி.

இன்று காலை சிங்கப்பூர் Marina Bay Cruise Centerக்கு (மரீனா பே MRTக்கு அருகில் உள்ளது) சிஷ்யர்களுடன் வந்து சேர்ந்த நித்தி சுவாமிகள், சிஷ்ய, சிஷ்யைகளுக்கு ‘கல்பதரு’ காட்டுவதற்காக சொகுசுக் கப்பலில் ஏறினார். கப்பலின் பெயர், கொஸ்டா விக்டோரியா (Costa Victoria – மேலே போட்டோவில் உள்ள கப்பல்)

‘கல்பதரு’வில் கலந்துகொள்ள கட்டணமாக 125 சிங்கப்பூர் டாலர் அறவிடப்பட்டது.

என்ன இருந்தாலும், நித்தி, நித்திதான். அருணகிரிநாதர் மதுரை மடத்தில் பால் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருக்க, நித்தி ஜம்மென்று சிங்கப்பூர் சொகுசுக் கப்பலில், ‘கல்பதரு’ காட்டிக்கொண்டு இருக்கிறார்!

Thursday, December 20, 2012

நாளை உலகம் அழியலாம் என்ற பயத்தில் சில அமெரிக்க முன்னேற்பாடுகள்!

நாளை உலகம் அழியலாம் என்ற பயத்தில் சில அமெரிக்க முன்னேற்பாடுகள்!


நாளை (21-ம் தேதி, வெள்ளிக்கிழமை) உலகம் அழியலாம் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதை நம்புவது, நம்பாதது ஒருபக்கம் இருக்கட்டும், “எதற்கும் இருக்கட்டுமே” என்ற முன்னேற்பாடுகள் செய்பவர்கள் ஏராளம்! விஞ்ஞானிகள் உலகம் அழிவதற்கான சாத்தியத்தை, நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் சிரிப்புடன் ஒப்பிடுகிறார்கள். “சான்சே இல்லை”

உலகம் அழியப் போகிறது என்பதை நீங்கள் நம்பும் ஆளாக இருந்தால், இதைப் படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். கடைசி ஆசைகளை நிறைவேற்றுவதில் பிசியாக இருப்பீர்கள். இன்டர்நெட் பார்க்க நேரம் இருக்காது (ஒருவேளை உங்கள் கடைசி ஆசைகளில் ஒன்று அறிவியல் (http://arinjar.blogspot.com/) பார்க்க வேண்டும் என்று இருந்தால், வேறு விஷயம்)

உலகம் அழியப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தால், நான் இதை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். எனது ஒரேயொரு கடைசி ஆசையை நிறைவேற்ற கிளம்பியிருப்பேன். “வாழ்க்கையில் ஒரு தடவையாவது பவர் ஸ்டாரை நேரில் பார்க்க வேண்டும்”

எப்படியோ, சிலர் என்னவெல்லாம் முன்னேற்பாடுகள் செய்கிறார்கள் என்பதே, அமெரிக்க மீடியாக்களில் இன்று மெகா டாபிக்காக உள்ளது. இதோ அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள Utah மாநிலத்தில் உள்ள American Fork சிறு நகரத்தில் (ஜனத்தொகை -உலகம் அழிவதற்குமுன்- வெறும் 26,000) சிலர் செய்துள்ள முன்னேற்பாடுகள் இவை.

கீழேயுள்ள போட்டோவில் இருப்பவருக்கு பெயர், ஃபில் பர்ன்ஸ். இவர் அணிந்திருப்பது, காற்றை சுத்தப்படுத்தும் முகமூடி (air purifying SCape Mask) திடீரென மூச்சு முட்டும் அளவுக்கு காற்று மண்டலம் அசுத்தமாகி, மக்கள் இறக்க நேர்ந்தாலும், இதை அணிந்திருந்தால், காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்துக்கு ஏற்றபடி கொடுக்கும். (உலகம் அழியாவிட்டால், சென்னை அண்ணா சாலையில் ஆட்டோவில் செல்லும்போது அணியலாம்)



முதுகில் கொண்டுசெல்லக்கூடிய பேக்பாக் ஒன்றில், வீடு இடிந்தால், அல்லது, இடிபாடுகளுக்குள் சிக்கினால், தேவைப்படும் சிறு உபகரணங்களை இன்றிரவு எடுத்து வைத்திருக்கப் போகிறாராம் இவர்.


Utah மாநிலத்தில் உள்ள நார்த் சால்ட் லேக் என்ற மற்றொரு நகரில் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து, $64,900 பங்கர் ஒன்றை அமைத்துள்ளார்கள். Utah Shelter Systemsல் அமைக்கப்பட்டுள்ள இந்த பங்கர், தற்போதுள்ள கட்டடங்கள் சரிந்து விழுந்தால் தாங்கக்கூடியது.




Utah மாநிலத்தில் உள்ள பொன்டிஃபுல் என்ற மற்றொரு சிறு நகரில், தமது வீட்டுக்கு கீழ் பேஸ்மென்டில் உணவுகளை சேகரித்து, பாதுகாப்பாக வைத்துள்ள இவரின் பெயர், ஹூ வெய்ல்.



Utah மாநிலத்தில் உள்ள பொன்டிஃபுல் நகரில் ஹூ வெய்ல், மரங்களில் இருந்து விறகு வெட்டி சேகரித்து வைத்துள்ளார். (அமெரிக்காவில் விறகு வாங்குவது சுலபமல்ல)



Utah மாநிலத்தில் உள்ள சான்டி என்ற மற்றொரு நகரில் உள்ள American Prepper Network’s warehouseல், சான்டி சிறு நகரில் வசிக்கும் அனைவருக்கும் தேவையான எமர்ஜன்சி கேம்ப் ஸ்டவ்வுகள் தயார் நிலையில் உள்ளனவா என செக் செய்பவரின் பெயர், மைக் பொரென்டா.


உலகையே உலுக்கும் வேற்றுக் கிரக மனித எலும்புகள் ?

உலகையே உலுக்கும் வேற்றுக் கிரக மனித எலும்புகள் ?




மெக்சிக்கோ நாட்டில் நேற்றைய தினம் கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளால், உலகமே பரபரப்பில் மூழ்கியுள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த எலும்புக்கூடுகளை அகழ்வாராட்சி செய்பவர்கள் இன்னும் முழுதாக தோண்டி எடுக்கவில்லை. அதன் மேற்பரப்பை சுத்தம் செய்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் வேற்றுக்கிரக மனிதர் அமைப்பைப் போன்ற தோற்றமுடைய பல எலும்புக்கூடுகளும் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளது. முதல்கட்டமாக அவற்றை தோண்டி எடுத்து பின்னர் பகுப்பாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மெக்சிக்கோ தெரிவிதுள்ளது. இச் செய்தி வெளியாகிய சில மணிநேரத்திலேயே உலக நாடுகள் பலவற்றில் இருந்து விஞ்ஞானிகள், பகுப்பாய்வாளர்கள் தொல்பொருள் நிபுனர்கள் எனப் பலர் மெக்சிக்கோவுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.

இது இவ்வாறு இருக்கையில், இது மனிதர்களுடைய எலும்புகூடுகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் பெண்கள் தமது கழுத்து நீளமாக இருக்கவேண்டும் என்பதற்காக சில இருப்பு ஆபரணங்களை அணிவது உண்டு. இதேபோல தமது தலை சற்று நீளமாக (நீள் வட்டமாக) இருக்க பண்டைய காலத்தில் சில இன மக்கள், செயற்கையாக தமது மண்டை ஓட்டை வளரவைத்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. எமது உடலில் உள்ள எலும்புகளை இம் முறை மூலம் வளைக்க முடியும். மற்றும் நீளமாக்கவும் முடியும். சில இருப்பு அச்சுக்களைப் பாவித்து இவ்வாறு மண்டை ஓட்டை நீளமாக்குவதை இவர்கள் பாரம்பரிய வழக்கமாகக் கொண்டிருந்தார்களா ? என்ற கோணத்திலும் ஆய்வாளர்கள் தமது ஆராட்சிகளை நடத்தி வருகின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளில் உறைந்துள்ள இரத்தத்தில் உள்ள டி.என்.ஏ வை பரிசோதனை செய்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்



“நாளை உலகம் அழியும் முன் என்ஜாய்” தர்மபுரியில் மக்களுக்கு பணம் கொடுத்த நபர்!

“நாளை உலகம் அழியும் முன் என்ஜாய்” தர்மபுரியில் மக்களுக்கு பணம் கொடுத்த நபர்!



நாளை (21ம் தேதி) உலகம் அழியும் என பரவி வரும் தகவல் காரணமாக, தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த வியாபாரி ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்து, மக்களுக்கு விநியோகித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உலகம் தோன்றியதில் இருந்து பல்வேறு காலண்டர் முறைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இவற்றில் ஆதிகாலம் தொட்டு மாயன் காலண்டர் பின்பற்றப்பட்டு வந்தது. மாயன் காலண்டரில் 21-12-2012 தேதிக்கு பின்னர் தேதி பொறிக்கப்படவில்லை. எனவே அன்றைய தினத்துடன் உலகம் அழிந்து விடும் என்ற கருத்து கடந்த சில திங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவியது. இது ஒரு சிலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 55 வயதான கரும்பு வியாபாரி குழந்தைதம்பி, 21-ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது என்றும், அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறிவந்தார். அவர் அப்படிக் கூறியதுடன் நின்றுவிடவில்லை, நேற்று வங்கியில் இருந்து ரூ1 லட்சம் பணத்தை எடுத்து வந்து, அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.

பணத்தை கொடுத்தபோது அவர், “வரும் 21ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்” என்று கூறியபடி பணத்தைக் கொடுத்தார்.

இரந்தும் ஒரு பேக்-அப் பிளானாக, “ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்” என கூறியுள்ளார்.

இந்த தகவல் பரவியதை அடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் அவரை பார்க்க சென்றனர். ஆனால் ஆட்கள் தேடி வருவது தெரிந்தவுடன், அவர் எங்கோ சென்றுவிட்டார். அவரை எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Wednesday, December 19, 2012

21ம் திகதி உலகம் அழியாது! 29ம் திகதி பூமியதிர்ச்சி ஏற்படும்! - புவியியலாளர்

21ம் திகதி உலகம் அழியாது! 29ம் திகதி பூமியதிர்ச்சி ஏற்படும்! - புவியியலாளர்


உலகத்தின் அழிவு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் ஏற்படும் என கூறிவருகின்ற போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது என புவியியலாளர் லலித் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்த்தன தெரிவிக்கையில்,

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அதாவது டிசம்பர் மாத இறுதி சனிக்கிழமை அன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும்.

இதன் தாக்கம் இந்தியாவிற்கும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி ஆகியவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும்.

2004ம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் 2013ம் ஆண்டில் விண்கற்கள் விழும் என்ற எச்சரிக்கை என்பவை தொடர்பில் 2001, 2002 ஆகிய ஆண்டுகளின் ஊடகங்களில் தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையாகியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

2012ம் ஆண்டு உலகம் அழியும் என்பது முற்றிலும் போலியான பிரச்சாரம் ஆகும், ஆனால் எதிர்வரும் 29ம் திகதி பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படவுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவுக்கும் ஏற்படும். ஆனால் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படாது.

பூமியின் மீது 2013ம் ஆண்டு விண்கற்கள் விழும் என நான் 2001, 2002 காலப்பகுதியில் எதிர்வு கூறினேன்.

அதன் பின்னர் இது குறித்து ஆராய்ந்து நாசா உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் அக்கற்களை சிறுதுண்டுகளாக உடைத்தெறியும் நடவடிக்கையில் இறங்கினர்.

அதேபோன்று, 2004ம் ஆண்டு கடல்சார் பாரிய அழிவுகள் இலங்கையில் இடம்பெறும் என்று 2002ம் ஆண்டிலேயே கூறினேன்.

அதற்கமைய 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி சுனாமி அலைகள் இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கின.

இவ்வாறு எதிர்வு கூறிய அனைத்தும் எனது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட வகையிலேயே இடம்பெற்று முட்ந்துவிட்டன. எனவே நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

2012ம் ஆண்டில் உலகம் அழியாது. ஆனால் 29ம் திகதி பூமியதிர்வு இலங்கையில் ஏற்படும்.

2019ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் அரேபிய நாடுகள் பாரிய இயற்கை அழிவுகளைச் சந்திக்கும் எனவும் திடமாக கூறியுள்ளார் லலித் விஜயவர்த்தன.

கூந்தலை நேராக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க...


கூந்தலை நேராக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க...



பண்டிகை நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக, அடங்காமல் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் கூந்தலை நேராக்க ஐயர்னிங் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.

ஏனெனில் இந்த உலகில் தனக்கு இயற்கையாக இருக்கும் கூந்தலை யாருக்கு தான் பிடிக்கிறது. அதிலும் சுருட்டை முடி இருப்பவர்கள் தான், இந்த மாதிரியான கூந்தலை நேராக்கும் சிகிச்சைகள் பலவற்றை மேற்கொள்வார்கள். இதற்கு காரணம் சுருட்டை முடி இருப்பவர்களுக்கு கூந்தலை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் வெளியே எங்கேனும் செல்ல வேண்டுமெனில், தலை சீவுவதற்காகவே ஒரு மணிநேரத்தை செலவிட வேண்டும். இதற்காகத் தான் அவர்கள் கூந்தலை நேராக்க முயல்கின்றனர். ஆனால் கூந்தல் நேராவதற்கு செயற்கை முறையை கையாண்டால், கூந்தல் உதிர்தல், வெடிப்புகள், வறட்சி என்று பல பிரச்சனைகள் கூந்தலில் ஏற்படும்.

எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் கூந்தலை நேராக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ஒரே வழி இயற்கை முறை தான். இந்த இயற்கை முறையால் கூந்தல் நன்கு வலுபெறுவதோடு, ஆரோக்கியமாக, பொலிவோடு காணப்படும். இப்போது கூந்தலை நேராக்க எந்த மாதிரியான ஹேர் பேக்குகளை போட வேண்டுமென்று பார்ப்போமா!!!


வாழைப்பழம் மற்றும் பப்பாளி பேக்

வாழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்கு மசித்துக் கொண்டு, அதில் சிறிது தேனை சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை கூந்தலில் தடவி காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் கூந்தல் காய்ந்ததும், கூந்தலை சீவிப் பாருங்கள், கூந்தல் நன்கு நேராக காணப்படும். அதிலும் இந்த ஹேர் பேக்குகளை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் விரைவிலேயே நேராகிவிடும்.




மூல்தானி மெட்டி மற்றும் அரிசி மாவு

ஒரு கப் மூல்தானி மெட்டியுடன், 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி, நன்கு அடித்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் கூந்தலுக்கு வெதுவெதுப்பாக எண்ணெயை காய வைத்து, தலைக்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு இந்த கலவையைத் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த செயலை மாதத்தில் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் சீக்கிரம் நேராகிவிடும்.




தேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு தேங்காய் முழுவதையும் நன்கு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, ஃப்ரிட்ஜில் க்ரீம் போன்று ஆகும் வரை வைக்க வேண்டும். பிறகு அந்த க்ரீம் கலவையை கூந்தலுக்கும், ஸ்கால்ப்பில் படும்படியும் தடவி, ஒரு துணியால் 1 மணிநேரம் கட்டிக் கொண்டு, பின்னர் குளிக்க வேண்டும். இந்த மாதிரி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கூந்தல் இயற்கையாகவே நேராகிவிடும்.





நெல்லி பவுடர், சீகைக்காய் மற்றும் அரிசி மாவு

ஒரு பெளலில் அரை கப் நெல்லிக்காய் பவுடருடன், அரை கப் சீகைக்காய் மற்றும் அதே அளவு அரிசி மாவையும் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு, கூந்தலில் தடவி, குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மேல் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், கூந்தல் நன்கு நேராக பட்டுப்போன்று மின்னும்.




கண்டிசனர்

மற்றொரு வழியென்றால், கடைகளில் விற்கும் கண்டிசனர் தான். இந்த கண்டிசனர் கூட கூந்தலை நேராக்கும். ஆகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தப் பின்பு, கூந்தலுக்கு கண்டிசனரை தடவி சிறிது நேரம் கூந்தலுக்கு மசாஜ் செய்து, பின் அலச வேண்டும்.

இலங்கை யாழ்ப்பாணத்துக்கு போக்குவரத்து துண்டிப்பு! பஸ்கள் பாதி வழியில் மறிப்பு!


இலங்கை யாழ்ப்பாணத்துக்கு போக்குவரத்து துண்டிப்பு! பஸ்கள் பாதி வழியில் மறிப்பு!


இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் போக்குவரத்து இன்று அதிகாலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்புவில் இருந்து சென்ற பஸ்கள் அனைத்தும் சிலாபம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் நேற்றிரவு வெள்ளம் பாய்ந்ததால், கொழும்புவில் இருந்து கிளம்பிச் சென்ற பஸ்களில் இரு பஸ்களால் மட்டுமே, வெள்ளத்தை கடந்து செல்ல முடிந்தது. அதையடுத்து வெள்ளப்பெருக்கு அதிகரித்து விட்டதால், மீதி பஸ்கள் சிலாபம் பகுதியில் நிறுத்தப்பட்டு, வெள்ளம் வடிவதற்காக காத்திருக்கின்றன.

மீண்டும் பாதை போக்குவரத்துக்காக எப்போது திறக்கப்படும் என்ற தகவல், இன்று காலை வரை கிடைக்கவில்லை.

Tuesday, December 18, 2012

விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவின் புதிய சாதனை

விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவின் புதிய சாதனை



விண்வெளியில் குறுங்கோள் ஒன்றின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது சீனாவின் சாங்கி-2 விண்வெளி ஓடம்.
சூரியனை சுற்று வரும் குறுங்கோள்களை புகைப்படம் எடுத்து, ஆய்வு செய்வதற்காக சாங்கி-2 என்ற விண்வெளி ஓடத்தை சீனா அனுப்பியது.

தற்போது பூமியிலிருந்து 70 லட்சம் கிலோமீற்றர் தூரத்தில் சென்று கொண்டிருந்த "தெளடாட்டிஸ்" என்ற குறுங்கோளை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

குறுங்கோளிலிருந்து 3.2 கிலோமீற்றர் தூரத்தில் இருந்தபடி எடுக்கப்பட்ட அந்தப் படங்கள் துல்லியமாக இருந்ததாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் ஜனவரிக்குள் பூமியிலிருந்து ஒரு கோடி கிலோமீற்றர் தூரம் வரை உள்ளவற்றை புகைப்படம் எடுக்கும் பணியில் சாங்கி-2 ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே 5 கிலோமீற்றர் தூரம் நீளமுள்ள தெளடாட்டிஸ் குறுங்கோள், பூமி மீது மோதினால் கடும் அழிவுகளை ஏற்படுத்திவிடும்.

எனினும் இப்போது வெகுதூரத்தில் சுற்றிவருவதால், பூமியைத் தாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.







இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -வானிலை மையம்

இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -வானிலை மையம்



வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வலுவிழந்திருந்தாலும் கூட தொடர்ந்து அதே இடத்தில் இருப்பதால் 2 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் பருவ மழை மீண்டும் பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால் பெரிய மழைக்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இருப்பினும், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை, தமிழகம் மற்றும் ஆந்திராவை யொட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழைபெய்யும்.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும். நாளை (வியாழக்கிழமை) படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




இலங்கையில் சிவப்பு மழை.. விருத்தாசலத்தில் மஞ்சள் மழை- மக்கள் பீதி


இலங்கையில் சிவப்பு மழை.. விருத்தாசலத்தில் மஞ்சள் மழை- மக்கள் பீதி


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிகுப்பத்தில் திடீரென மஞ்சள் மழை பெய்ததால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர்.

புதுவிருத்தகிரிகுப்பம் கிராமத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் திடீரென வானம் இருண்டது. பின்னர் 15 நிமிடம் கழித்து மழை கொட்டியது. ஆனால் மழையின் நிறத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

மஞ்சள் நிறத்தில் மாவு போல் மழை பெய்ததால் அமில மழை என நினைத்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 'அமில மழை' பெய்வதாக பக்கத்து கிராமங்களுக்கும் தகவல் பரவ பரபரப்பு பற்றிக் கொண்டது.

ஏற்கனவே இலங்கையில் சிவப்பு மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில மஞ்சள் மழை பெய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை

இலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை



இலங்கையில் பொதுமக்களை அச்சுறுத்திய சிவப்பு மழையைத் தொடர்ந்து மீன்மழை கொட்டி ஓய்ந்திருக்கிறது.



இலங்கையின் பல பகுதிகளில் சிவப்பு மழை கொட்டி மிரட்டி வருகிறது. இந்த சிவப்பு மழை பெய்யக் கூடிய இடங்களில் நாய்கள் இறந்து போய்விடுகின்றன.



இதேபோல் நேற்றும் மாத்தறையில் சிவப்பு மழை கொட்டித் தீர்த்தது. இந்த சிவப்பு மழை கொட்டித் தீர்த்த சிறிது நேரத்தில் இன்னொரு மழை பெய்தது. அதுதான் மீன்மழை!



மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்தினுள் இந்த மீன் மழை பெய்திருக்கிறது.



கொட்டிய மீன்களில் நன்னீரில் இருக்கக் கூடிய உங்கா மற்றும் லூலா வகை மீன்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த மீன்கள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.



பொதுவாக சுழற்காற்றின் போது கடல் அல்லது நன்னீர் மேலே இழுக்கப்படும் போது மீன்களும் இழுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சுழற்காற்றோடு மழை பெய்கின்ற போது மீன்களும் விழும். இருப்பினும் உலகம் அழியப் போகிறது, மாயன் காலண்டர், விண்கற்கள், சிவப்பு மழை என உச்சபீதியில் இருக்கும் இலங்கையருக்கு இந்த மீன் மழையும் மர்மம்தான்!

இலங்கையில் இன்னொரு பீதி- கடல்பாம்புகள் படையெடுப்பு- சுனாமி அச்சம்!

இலங்கையில் இன்னொரு பீதி- கடல்பாம்புகள் படையெடுப்பு- சுனாமி அச்சம்!



மட்டக்களப்பு: இலங்கையில் சிவப்பு மழை, விண்கற்கள் விழுதல், நாய்களின் மர்ம மரணம் போன்றவற்றைத் தொடர்ந்து புதிய பீதியாக கடல் பாம்புகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்திருக்கின்றன.


தமிழர் பிரதேசமான இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள குளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகள் நேற்று காலை படையெடுத்திருக்கின்றன. இப்பாம்புகள் 3 அடியிலும் 4 அடியிலும் நீளமாக இருக்கின்றன. இந்தப் பாம்புகளைப் பார்க்க மக்களும் குவிந்து வருகின்றனர். அதே நேரத்தில் 2004-ம் ஆண்டு சுனாமிக்கு முதல் வாரமும் இப்படி கடல் பாம்புகள் படையெடுத்ததாகக் கூறப்படும் தகவலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்...

கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்...



உடல் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்போம். ஆனால் அவ்வாறு இருப்பதற்கு, உடலைப் பராமரிப்பதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை செலுத்துவார்கள். ஏனெனில் பெண்கள் தான் எப்போதும் ஷாட் ஸ்கர்ட், ட்ரௌசர் போன்ற மார்டன் உடைகளை அணிகின்றனர். எனவே அப்போது கால்கள் காணப்படும் போது, நன்கு அழகாக பொலிவோடு காணப்பட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சொல்லப்போனால், மற்ற உறுப்புகளைப் பராமரிப்பதை விட, கால்களை அதிகம் பராமரிக்கமாட்டார்கள்.

நமது உடலின் பாரத்தை சுமப்பதே கால்கள் தான். அத்தகைய கால்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். எனவே எப்போது கால்களில் அதிகமான உடற்பயிற்சி செய்யும் போது, தசைகளில் லாக்டிக் ஆசிட் உருவாகி, கால்களானது பார்ப்பதற்கு பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். எனவே இத்தகைய கால்களை எப்போதும் பொலிவோடு வைத்துக் கொள்ள ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து தினமும் செய்து வந்தால், கால்கள் அழகாக பொலிவோடு மின்னும்.

கால்களை அழகாக்க சில டிப்ஸ்.... 



தண்ணீர் 

உடலுக்கு நீரானது மிகவும் முக்கியம். ஏனெனில் நீர்ச்சத்து உடலில் இருந்தால் தான், உடல் நன்கு அழகாக ஆரோக்கியமாக காணப்படும். ஆகவே கால்கள் நன்கு அழகாக இருக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் கால்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கால்களில் எந்த ஒரு தசைப்பிடிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.

உணவுகள் 

கால்களில் இரத்த ஓட்டப் பிரச்சனைகள் எளிதில் ஏற்படும். ஆகவே எந்த ஒரு இரத்த ஓட்டப்பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமலிருக்க ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த சாலமன், வால்நட் மற்றும் வெண்ணெய் பழம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. மேலும் சிட்ரஸ் உணவுகளான ஆரஞ்சு, கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற உணவுகளையும் சாப்பிட்டால், கால்கள் நன்கு பொலிவோடு காணப்படும்.

வறுத்த மற்றும் ஜங்க் உணவுகள் 

கால்கள் நன்கு அழகாக இருக்க வேண்டுமெனில் எண்ணெயில் பொரித்த மற்றும் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள அதிகமான சாச்சுரேட்டட் கொழுப்புகள், கால்களில் இரத்த ஓட்டப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, கால்களில் வீக்கங்களையும் ஏற்படுத்தும். எனவே இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி 

கால்கள் நீண்ட நேரம் நடப்பதால், அவை சோர்ந்து இருக்கும். எனவே தினமும் படுக்கும் போது கால்களை சிறிது நேரம் தரையில் படுத்துக் கொண்டு, சுவற்றின் மேல் நீட்டிக் கொண்டு படுப்பதால், கால்கள் நன்கு புத்துணர்ச்சியோடு காணப்படும்.

அழுக்குகளை நீக்குவது 

கால்களின் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவது என்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் அழுக்குகள் இருப்பதால் தான் கால்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே கால்களுக்கு பொலிவைத் தருவதற்கு கால்களுக்கான மாஸ்க் க்ரீம் போட்டு தேய்த்து, ஊற வைத்து பின் உரித்து எடுக்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, நன்கு சுத்தமாக பொலிவோடு இருக்கும்.

வைட்டமின் ஈ லோசன் 

உடலுக்கு அழகைக் கொடுக்கும் ஒரு சத்து என்னவென்றால் அது வைட்டமின் ஈ தான். தற்போது கடைகளில் விற்கும் லோசன்கள் அனைத்திலும் வைட்டமின் ஈ சத்து இருக்கும். ஆகவே அத்தகைய சத்துக்கள் நிறைந்த லோசனை கால்களுக்குத் தடவி, மசாஜ் செய்ய வேண்டும். அதுவே வெளியே வெயிலில் செல்லும் போது, மறக்காமல் சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.

காலணி 

எப்போது காலணி அணிவதாக இருந்தாலும், அவை நடப்பதற்கு எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும். மேலும் ஸ்டைல் என்று ஹீல்ஸ் போட்டு நடந்தால், கால் மற்றும் குதிகால்களில் வலி ஏற்படுவதோடு, இடுப்பு வலியும் ஏற்படும். பின் அந்த மாதிரியான காலணிகள் கால்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். எனவே இந்த மாதிரியான காலணிகளை தவிர்ப்பது நல்லது.

மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கால்கள் வலுவோடு வறட்சியின்றி ஆரோக்கியமாக இருக்கும். வேறு ஏதாவது டிப்ஸ் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

பயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்!!!

பயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்!!!


இன்றைய காலத்தில் லீவு நேரத்தில் வெளியே பிக்னிக் போக நிறைய இடங்கள் உள்ளன. அதிலும் அந்த இடங்கள் அனைத்தும் சற்று தூரமாக இருக்கும். அப்போது நாம் அந்த இடத்திற்கு போக பல திட்டங்களை போடுவோம். அவ்வாறு போடும் போது, நாம் அந்த பிக்னிக் போகும் போது சந்தோஷமாக உடலில் எந்த ஒரு தொந்தரவுமின்றி, செல்வது மிகவும் கடினமானது. ஏனெனில் பிக்னிக் போவதற்கு பயணம் மேற்கொள்வோம். இப்போது தான் பிரச்சனையே ஏற்படுகிறது.

எப்படியெனில் இந்த நேரம் சந்தோஷத்தில் உணவுகளில் கவனமின்றி கண்டதை சாப்பிட்டுவிடுவோம். பின் அந்த உணவுகளால், வயிற்றில் பல பிரச்சனை ஏற்படும். எனவே அந்த மாதிரியான பிரச்சனை வயிற்றில் ஏற்படாமல் இருப்பதற்கு, பயணம் மேற்கொள்வதற்கு முன், எந்த மாதிரியான உணவுகளை தவிர்த்தால், நன்கு ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், பயணத்தை மேற்கொள்ளலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!




சீஸ் உணவுகள்

சீஸ் வகையான உணவுகளை சாப்பிட்டால், மூளை மந்த நிலையில் இருக்கும். அதுமட்டுமின்றி, அவை செரிமானமடைவது என்பது கடினமான ஒன்று. இதனால் வாயுத் தொல்லை ஏற்பட்டு, வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே தான் சீஸ் உணவுகள் எதை உண்டாலும், எப்போதும் வயிறு நிறைந்தது போல் கும்மென்று இருக்கும்.




பர்க்கர் மற்றும் வறுத்த உணவுகள்

பெரும்பாலானவர்கள் பயணத்தின் போது சிப்ஸ், பர்க்கர் போன்ற உணவுகளை வாங்கிக் கொண்டு செல்வார்கள். ஆனால் அவற்றை உண்பதால், செரிமான மண்டலத்தின் இயக்கம் குறைவதோடு, வாயுத் தொல்லை அதிகரித்து, உடல் எடையும் அதிகரிக்கும்.





பானங்கள்

பயணத்தின் போது பலர் கார்போனேட்டட் பானங்களான கூல்ட்ரிங்ஸ், சோடா போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்வோம். ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படுவதோடு, வாய் துர்நாற்றமும் ஏற்படும்.




செயற்கை இனிப்புகள்

சாக்லேட் மற்றும் சூயிங் கம் போன்ற செயற்கை இனிப்புகளால் செய்யப்படும் தின்பண்டங்களை சாப்பிட்டால், பற்கள் தான் பாதிப்படையும். மேலும் சூயிங் கம் சாப்பிடும் போது, வாயின் வழியே அதிகமான அளவில் காற்றானது உடலின் உள்ளே செல்கிறது. இதனால் வாயுத் தொந்தரவு ஏற்படும்.





கார உணவுகள்

சிலர் பயணம் செய்கிறோம் என்று சமைத்துக் கொண்டு செல்வார்கள். இல்லையெனில் வீட்டில் சமைத்து நன்கு சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால், வயிறானது சற்று மந்த நிலையில் இருக்கும். ஆகவே சாதாரணமான அதிக காரமில்லாத உணவுகளை அளவாக சாப்பிட்டு செல்வது நல்லது.




நூடுல்ஸ்

பஸ் மற்றும் ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று ஈஸியாக சமைத்து சாப்பிவதற்கு நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிட்டு செல்வோம். இதனால், செரிமானம் தடைபட்டு, வயிற்றில் வாயு மற்றும் மந்த நிலை ஏற்படும். எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.




ஆல்கஹால்

கார்போனேட்டட் மதுபானங்களில் பீர், சோடா மற்றும் சாம்பைன் போன்றவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தக்கூடியவை. மேலும் இதை குடித்தால், எப்போதும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ஆகவே இதனை குடித்து, சைடு டிஷ்ஷாக வறுத்த உணவுகளை சாப்பிட்டால், பின் வாந்தி எடுக்க வேண்டியது தான். அதுமட்டுமின்றி அவை பின்பு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

பூமியை தாக்க வருகிறது விண்கல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பூமியை தாக்க வருகிறது விண்கல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை




நாம் வாழும் பூமியை விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூரியனை பல்வேறு குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்று வட்ட பாதையை விட்டு விலகும் பட்சத்தில் பூமியின் மீது தாக்கும் அபாயம் உள்ளது. இவற்றை விண்கற்கள் என அழைக்கிறோம்.

பூமியை நோக்கி வரும் பெரும்பாலான விண்கற்கள் புவிஈர்ப்பு விசை காரணமாக எரிந்து சாம்பலாகி விடுகின்றன.

இவ்வாறான விண்கற்கள் இதுவரையிலும் குறைந்த அளவே சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் அபோபிஸ் என்ற இராட்சத விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் கடந்த 2004ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விண்கலம் 2029ஆம் ஆண்டில் பூமியை தாக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விண்கல் பூமியை தாக்காது, வரும் வழியில் புவி ஈர்ப்பு வட்டத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாகி விடும் என்றும் தெரிவிக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய தீவை சீனாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது: ஜப்பானின் புதிய பிரதமர்

சர்ச்சைக்குரிய தீவை சீனாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது: ஜப்பானின் புதிய பிரதமர்



தீவுப் பிரச்னையில் சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், ஜப்பானுக்கே சொந்தமான பகுதி என்றும் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சி(எல்டிபி) தலைமையிலான கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஷின்சோ அபே அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அபேவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அபே, தீவுப் பிரச்னையில் சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

மேலும் எங்கள் கட்சித் தலைமையில் புதிதாக பதவியேற்க உள்ள அரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசு நாடான ஜப்பானின் பொருளாதாரம் சர்வதேச நிதிநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். யென் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்காகு தீவுக் கூட்டங்கள் (டியாவூஸ் என சீனா அழைக்கிறது) ஜப்பான் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. சர்வதேச சட்டப்படி இந்தத் தீவுக் கூட்டங்களை ஜப்பான் சொந்தம் கொண்டாடுவதுடன், தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

எனவே இதுதொடர்பாக மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தேசிய நலனை கருத்தில் கொண்டு ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இதுவிஷயத்தில் சீனா சற்று பின்தங்கி உள்ளது. எனவே, இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து அந்த நாடு தான் சிந்திக்க வேண்டும் என்றார் அபே.



ஈக்வடாரில் எரிமலை குமுற தொடங்கியது: மக்கள் வெளியேற்றம்

ஈக்வடாரில் எரிமலை குமுற தொடங்கியது: மக்கள் வெளியேற்றம்



ஈக்வடார் நாட்டில் எரிமலை குமுற தொடங்கி உள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், துங்குரகுவா என்ற இடத்தில் உள்ள எரிமலை தற்போது குமுற தொடங்கி உள்ளது.

இந்த எரிமலை இரவு நேரத்தில் வழக்கத்தை விட கூடுதலாக நெருப்பை கக்கி வருகிறது.

மேலும் எரிமலை தூக்கி எறியும் சிறிய பாறைகள் மற்றும் சாம்பல், குடியிருப்பு பகுதியில் மண்டிக் கிடக்கிறது.

குறிப்பாக பனோஸ் டி அகுவா சான்டா நகரப் பகுதி முழுவதும் ஒரே சாம்பலாக காணப்படுகிறது. காற்றில் மாசு கலந்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது மக்களை ஈக்வடார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரமுடைய துங்குரகுவா எரிமலையை தவிர, ஈக்வடார் நாட்டில் மேலும் 7 எரிமலைகள் உள்ளன.

வங்கியில் கொள்ளையடித்த மிட்ரோம்னியால் பரபரப்பு

வங்கியில் கொள்ளையடித்த மிட்ரோம்னியால் பரபரப்பு


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மிட்ரோம்னி வங்கியில் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வெல்ஸ் பர்ஸோ வங்கியின் கிளை உள்ளது.

இந்த வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர், பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் இவர் புளோரிடா மாகாண கொடியை போன்ற சட்டையும், மிட்ரோம்னி போன்று முகமூடியும் அணிந்திருந்தார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.











மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்

மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்



கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வெல்லாவெளி பிரதேசம் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதுடன் செங்கலடி, கிராண் செயலக பிரிவுகளும் மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதிகளும் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.

வெல்லாவெளியின் பல பகுதிகளில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வேற்றுச்சேனை கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வெளியேறமுடியாத நிலையில் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் சுமார் 120 குடும்பங்கள் இவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் வெல்லாவெளியில் ஆறு வீதிகளை மறித்து வெள்ள நீர் ஓடுவதன் காரணமாக போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்ட நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆணைகட்டியவெளி, இரணமடு, கம்பியாறு, 35ஆம் கொலணிக்கான பாதையென்பனவற்றினூடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லவெளி-மண்டூர் வீதியில் நான்கு அடிக்கு மேலாக வெள்ளம் பாய்வதன் காரணமாக அதனூடனா போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதிகளான கூழாவடி, இருதயபுரம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏறாவூரின் பல பகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று கிராண் பாலம் ஊடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக கிராண் ஊடாக படுவான்கரைக்கான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்துவருவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது.
















Monday, December 17, 2012

சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!

சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!


அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதற்காக பல க்ரீம், ஃபேஷியல், ஃபேஸ் வாஷ் போன்ற பல செயல்களைச் செய்வோம். அதிலும் அவற்றை அழகு நிலையங்களுக்குச் சென்று, நிறைய பணம் செலவழித்து செய்வோம். எவ்வளவு தான் பணத்தை செலவழித்து முகத்தை அழகாக மாற்றினாலும், அவை நீண்ட நாட்கள் இருப்பதில்லை. சிலர் அதன் காரணத்தினால், விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை அடைய நேரிடுகிறது. எனவே அத்தகைய தோற்றத்தை விரைவில் பெறாமல் இருப்பதற்கு, இயற்கை வழிகளை மேற்கொள்வதே சிறந்தது.

இயற்கை வழிகளில் ஒன்று தான் பழங்கள். பழங்களை நிறைய சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எதற்கு சொல்கின்றனர் என்று தெரியுமா? ஏனெனில் பழங்களை அதிகமாக சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமமும் பொலிவாகும். அவ்வாறு பழங்களை சாப்பிட்டாலோ அல்லது சருமத்திற்கு பயன்படுத்தினாலோ, சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும். இப்போது சருமத்திற்கு பொலிவைத் தரும் பழங்கள் என்னவென்று பார்ப்போமா!!!


ஆப்ரிகாட்

ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனலி இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது. அதாவது இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில் சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்தும் தடவலாம்.




பப்பாளி

முகத்தில் முகப்பருக்கள் இருந்தால், பப்பாளி பழம் அதற்கு ஒரு நல்ல பலனைடத தரும். ஏனெனில் பப்பாளியில் உள்ள நொதியானது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதில் நீக்கிவிடும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை பொலிவாக்குவதில் பப்பாளி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே பப்பாளியின் சதைப் பகுதியை எடுத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, கழுவி வந்தால், முகம் நன்கு பொலிவோடு இருக்கும்.



ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. ஏனெனில் அதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் என்னும் பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடலை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றுவதால், உடலானது அழுக்கின்றி இருக்கும். அதேப் போல் சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே போல் அந்த ஆப்பிளை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து, அதனை முகத்திற்கு தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் இந்த கலவையில் இருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைக்கிறது.




மாதுளை

நிறைய பேருக்கு மாதுளை பிடிக்காது. இதற்கு காரணம் அதனை உரித்து சாப்பிடும் வகையில் பொறுமை இல்லாததே ஆகும். ஆனால் சருமம் நன்கு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில் மாதுளை மிகவும் நல்லது. அதற்கு அத்தகைய மாதுளையின் விதையை அரைத்து, அத்துடன் வேண்டிய டோனரை சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கு, பின் அந்த கட்டிகளை ஒரு காட்டன் துணியில் வைத்து, பின் முகத்தில் தடவினால், முகமானது நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதனை கோடை காலத்தில் செய்தால், நன்றாக இருக்கும்.




ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பல வகையில் பயன்படுகிறது. அதிலும் அதன் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், பின்னர் அதன் முழு பலனும் தெரியும். மேலும் அவ்வாறு ஜூஸ் போட்டு குடித்தப் பின்னர், அதன் தோலை தூக்கி எறிய வேண்டாம். ஏனெனில் அதன் தோலிலும் பல சருமத்திற்கான நன்மைகள் பல உள்ளன. அதிலும் ஆரஞ்சு பழத்தை உரித்ததும், அதன் தோலை உடனே முகத்தில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகமானது குழந்தையின் முகத்தைப் போன்று பொலிவோடு அழகாகும். இதனை தினமும் செய்தால், சருமம் சூப்பராக இருக்கும்.

கோடிகளில் குளிக்கும் பாலிவுட் கேடிகள்


புத்தாண்டு கொண்டாட்டம்: கோடிகளில் குளிக்கும் பாலிவுட் நடிகைகள்!


புத்தாண்டு வந்தாலே ஸ்டார் ஹோட்டல்களிலும், மால்களிலும் பார்ட்டி, நடனம் என களை கட்டும். 2012 டிசம்பர் 31ம் நாள் இரவு மிகப்பெரிய ஹோட்டல்களில் நடைபெறும் பார்ட்டிக்கு பாலிவுட், கோலிவுட் நடிகைகளின் நடனம் இடம் பெறுவது வழக்கம்.இதற்காக போட்டிப்போட்டுக்கொண்டு கோடிக்கணக்கான ரூபாயை கொட்டிக்கொடுத்து புக் செய்து வருகின்றன.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதவிதமான உணவுகள் மட்டுமல்லாது சுவையான உற்சாகபானமும் பரிமாறப்படும். இதோடு நடிகைகளின் கலக்கலான நடனமும் இடம்பெறும். இந்த பார்ட்டிகளில் பங்கேற்க வருபவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன ஹோட்டல்கள். ஒருநாள் இரவுதானே உற்சாகமாய் கொண்டாடலாம் என்று கட்டணத்தைப் பற்றிக் கவலைப் படாமல் பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

புத்தாண்டு பார்ட்டியை ஒட்டி பிரியங்கா சோப்ரா, சன்னி லியோன் என பலரும் கோடி கோடியாய் பணமழையில் குளிக்கின்றனர். மல்லிகா ஷெராவத் இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். சமீரா ரெட்டிக்கு 50 லட்சம் கொடுத்திருக்கின்றனராம். எந்த நடிகை என்ன சம்பளம் வாங்குகிறார் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.






லண்டனில் கரீனா கபூர்
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பார்ட்டியில் இரண்டு முக்கிய ஹீரோயின்களை புக் செய்வதில் போட்டியே நடைபெறும். கத்ரீனா கைப், கரீனா கபூர்தான் அந்த சூப்பர் ஸ்டாரினிகள். இந்த ஆண்டு கரீனா கபூர் திருமணமாகி செட்டிலாகிவிட்டதால் இந்த ஆண்டு அவர் புத்தாண்டு பார்ட்டியில் பங்கேற்கவில்லை மாறாக கணவன் சயீப் அலிகானுடன் டிசம்பர் 31ம் தேதி லண்டனில் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளார்.





மல்லிகாவுக்கு ரூ. 2 கோடி சம்பளம்
பாலிவுட் கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்திற்கு புத்தாண்டு பார்ட்டிக்கு ரூ.2 கோடி சம்பளம் தர ஹோட்டல்கள் ஒத்துக்கொண்டுள்ளன. மும்பை ஜூஹூ கடற்கரையில் அமைந்துள்ள ஸ்டார் ஹோட்டல் பார்ட்டியில் பங்கேற்கும் மல்லிகா ஷெராவத் கொலைவெறி பாட்டுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.




ஒரு கோடி நாயகிகள்
இந்த ஆண்டு புத்தாண்டு பார்ட்டிக்கு பிபாஷா பாசு, கங்கனா ரணவத் ஆகியோருக்கு தலா ஒரு கோடி ரூபாய் சம்பளமாக தர ஸ்டார் ஹோட்டல்கள் ஒத்துக்கொண்டுள்ளனவாம்.




சன்னி லியோன் கலக்கல்

கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் இந்த ஆண்டு புத்தாண்டு இரவு டெல்லியில் நடனமாட ரூ.1 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். மும்பையில் 5 நிமிடம் ஒரு நடனத்தில் பங்கேற்க 26 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



பிராச்சி தேசாய் சம்பளம் ரூ.51 லட்சம்
நடிகை பிராச்சி தேசாய், மும்பை கிளப் ஒன்றில் நடனமாடுகிறார். அதற்காக ரூ.51 லட்சம் சம்பளமாக பெறுகிறார். பிரபல போஜ்புரி நடிகை ஸ்வேதா, டேராடூனில் நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சியில் நடனமாடுகிறார். இதற்காக அவருக்கு ரூ.48 லட்சம் வழங்கப்பட உள்ளது.




சமீராவின் சம்பளம் ரூ. 50 லட்சம்

பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் சமீரா ரெட்டிக்கு 10 நிமிடம் புத்தாண்டு பார்ட்டியில் பங்கேற்க ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். லக்னோ நகரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் இந்த ஆண்டு சமீரா ரெட்டி நடனமாட உள்ளார்.




பரினிதி சோப்ராவுக்கு ரூ. 10 லட்சம்

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையான பரினிதி சோப்ரா, நடிகர் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து லோனாவாலாவில் நடனமாடுகிறார்.இதற்காக ரூ.10 லட்சம் அவருக்கு சம்பளமாக தரப்பட்டுள்ளதாம்