Friday, October 5, 2012

24 கேரட் தங்கம் உருவாக்கும் குப்ரியாவிடஸ் பாக்டீரியா

24 கேரட் தங்கம் உருவாக்கும் குப்ரியாவிடஸ் பாக்டீரியா




மிக மிக தூய்மையான 24 கேரட் தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக்குகிறது என்ற ஆச்சரியமான விஷயத்தை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் ஈஸ்ட் லான்சிங் நகரில் உள்ளது மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம். இப்பல்கலையின் மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்யூலர் ஜெனடிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினர். பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை ஆய்வில் கண்டறிந்தனர். இந்த பாக்டீரியாவுக்கு ‘குப்ரியாவிடஸ் மெட்டாலிடியுரன்ஸ்’ என பெயரிட்டுள்ளனர். இதுபற்றி பல்கலைக்கழக மைக்ரோபயாலஜி பேராசிரியர் கசம் கஷேபி கூறியதாவது: பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களில் வளர்வதில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத்தன்மையுள்ள தங்க குளோரைடு என்ற  வேதிப்பொருளில் வளர்கிறது. இந்த தங்க குளோரைடு நீர்ம தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தங்க குளோரைடில் வளர்த்தபோது ஒரே வாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது தங்கக்கட்டியாக மாற்றமடைந்தது. இயற்கையில் தங்கம் எப்படி உருவாகிறதோ, அதேபோன்ற ரசாயன வினை இங்கும் நடந்திருக்கிறது.

இவ்வாறு கசம் கஷேபி கூறினார். இந்த கண்டுபிடிப்பை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற ‘பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரானிக்கா’ என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். ‘த கிரேட் ஒர்க் ஆஃப் மெட்டல் லவ்வர்’ என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய தங்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த மைக்ரோ பயாலஜி விஞ்ஞானிகள் இதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். 24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தில் தங்கத்தை உருவாக்குவது சவாலானது, அதிக செலவு ஏற்படுத்தக்கூடியது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது செலவு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். சுரங்கம் அமைத்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை பாக்டீரியாவை கொண்டு உருவாக்கினால் உலக அளவில் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்.. சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா.. தொழில் ரீதியான உற்பத்திக்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படுத்தலாமா.. என பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஆராய்ச்சி.

‘ஹாட்’ ஆகிறது கடல்: ஒல்லியாகும் மீன்கள் : விஞ்ஞானிகள் பகீர் தகவல்

‘ஹாட்’ ஆகிறது கடல்: ஒல்லியாகும் மீன்கள் : விஞ்ஞானிகள் பகீர் தகவல்






 பருவநிலை மாற்றத்தாலும் கடல் வெப்பம் அதிகரிப்பதாலும் மீன்களின் உடல் எடை குறைந்துகொண்டே வருகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 50 ஆண்டுகளில் மீன்களின் சைஸ் 20 சதவீதம் வரை குறைந்துவிடும் என்று கூறியுள்ளனர். கடல் வெப்பம் தொடர்பாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலையின் மீன்வள ஆய்வு மையம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் மற்றும் கடல் வெப்பம் அதிகரிப்பால் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி தீவிரமாக ஆராயப்பட்டது. கம்ப்யூட்டர் உதவியுடன் 600,க்கும் மேற்பட்ட கடல் மீன் வகைகளின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி ஆய்வு குழு தலைவர் பேராசிரியர் வில்லியம் சியூங் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பருவநிலையில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடல் வெப்பமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், மீன்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படுவது தெரிந்ததே. கடல் வெப்பத்தால் மீன்களின் உடல் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது என தற்போது தெரியவந்துள்ளது. மிகச்சிறிய அளவில் தொடங்கி பல டன் வரை பல்வேறு சைஸ்களில் மீன்கள் இருக்கின்றன. கடல் வெப்பம் அதிகரிப்பால், மீன்களின் அதிகபட்ச வளர்ச்சியானது குறைந்துகொண்டே போகிறது. 2000,ல் இருந்ததைவிட மீன்களின் எடை 2050,ல் 14 முதல் 20 சதவீதம் வரை குறையும் என்று தெரிகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் உள்ள கடல்களில் (இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் உள்பட) இந்த பாதிப்பு அதிகம் இருக்கிறது.

இவ்வாறு வில்லியம் சியூங் கூறினார். மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி பிரிட்டிஷ் கொலம்பியாவின் மீன்வள ஆய்வு மையம் பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் பாலி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ‘தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டுதான் மீன்கள் தொடர்ச்சியாக வளர்கின்றன. கடல் வெப்பம் அதிகரித்தால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்களின் உடல் வளர்ச்சி குறையும்’ என்று ஆய்வு முடிவில் டேனியல் கூறியிருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போதைய ஆய்வு நடத்தப்பட்டது.

உடலில் இரத்தத்தை அதிகரிப்பதற்கு

உடலில் இரத்தத்தை அதிகரிப்பதற்கு






உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் அனீமியா என்னும் மறதி நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே அத்தகைய இரத்தத்தை அதிகப்படுத்த கடைகளில் நிறைய மருந்துகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றை சாப்பிடுவதால் மட்டும் உடலில் இரத்தம் அதிகரிக்காது.

ஒரு சில இயற்கையான வழிகளையும் தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும் உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.

மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.

உணவுகள்


உடலில் இரத்தம் அதிகரிக்க வேண்டுமென்றால் நல்ல ஆரோக்கியமான, இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

அதாவது கொய்யாப்பழம், டார்க் சாக்லேட், கீரைகள், உருளைக்கிழங்கு, பூசணிக்காய் விதை, பயிர் வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

நன்னாரி வேர்

மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.

கற்றாழை
கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மாசடைந்த காற்று

இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், வீட்டில் பயன்படுத்தும் கொசுவர்த்தி மற்றும ஏர் ப்ரஸ்னர்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இதில் இருந்து வரும் கெமிக்கல் கலந்த வாசனையை நுகர்வதால், அந்த கெமிக்கல் இரத்தத்தில் கலந்து புற்றுநோய், சுவாசக்கோளாறு, ஹார்மோனில் சில தொந்தரவு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

க்ரீம்கள்


உடலுக்கு தடவும் பாடி க்ரீம்கள் அல்லது லோசன்கள் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் சில சமயங்களில் அந்த கெமிக்கல்கள் உடலில் ஊடுருவி, இரத்தத்தில் கலந்து ஏதேனும் தொற்றுநோய்களை ஏற்படுத்தும்.

ஆகவே எப்போதும் கெமிக்கலால் ஆன பொருட்களை பயன்படுத்துவதை விட கற்றாழை, மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

டைனசோர்களை அழித்த விண் கல்லை கண்டுபிடித்தனர் !

டைனசோர்களை அழித்த விண் கல்லை கண்டுபிடித்தனர் !





பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, டைனசோர்கள் இறுதியில் முற்றாக அழிவுற்றது. இதற்கு பல காரணங்களை விஞ்ஞானிகள் கூறினாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய காரணம் ஒன்றாகத்தான் உள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியில் விழ்ந்த விண் கல் ஒன்றின் மூலமே டைனசோர்கள் அழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட விண் கல் பூமியில் வீழ்ந்ததால் ஏற்பட்ட தூசு துகள்கள் வழி மண்டலத்தில் பரவியதால், சூரிய ஒளி தெறிப்படைந்ததாகவும், இதனால் கடும் குழில் ஏற்பட்டதால், டைனசோர்களின் முட்டைகள் பொரிக்கமுடியாமல் போய், இறுதியில் அனைத்து டைனசோர்களும் அழிவுற்றது என்று கூறப்படுகிறது. இது விஞ்ஞானிகளின் கருத்தாக மட்டுமே இருந்தது. ஆனால் அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியமான விடையம் ஆகும் !

றோமேனியா நாட்டில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் இக் கல் காணப்படுகிறது. பூமி தோன்றிய காலத்தில் இருந்து, இதுவரை பூமி மீது மோதிய கற்களுக்குள் இது தான் பெரியது என்று சொல்லப்படுகிறது. ஒரு மலையளவு பெரிய கல்லாக அது காணப்படுவதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த இக் கல்லில் பல படிமங்கள் காணப்படுவதாகவும், சில தாதுகள் இன்னும் அறியப்படாத மூலக்கூறுகளைக் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. இத்த விண் கல்லின்மேல் தற்போது பூமியில் உள்ள தாதுகள் படிந்துள்ளது. மஞ்சல் மற்றும் ஊதா நிறத்திலான இந்த விண் கல் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வீழ்ந்துள்ளது.

இக் கல்லின் தாக்கத்தால் தான் பூமியில் டைனசோர்கள் அழிந்தது என்று விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதனை ஆராய, அமெரிக்க விஞ்ஞானிகளும் இவ்விடத்தை நோக்கி விரைந்துள்ளனர். விரைவில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது ! இறுதியில் டைனசோர்களின் அழிவு குறித்து நாம் துல்லியமாக அறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Thursday, October 4, 2012

ஏலத்தில் விடப்படுகிறது செவ்வாய் கிரக கல்

ஏலத்தில் விடப்படுகிறது செவ்வாய் கிரக கல்




செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் விழுந்த சிறிய கல் ரூ.1.35 கோடிக்கு ஏலத்தில் விடப்பட உள்ளது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் சிறிய கோள் மோதியதால் உருவான சிறிய பாறை(விண்கல்) கடந்தாண்டு வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கன் பாலைவனப் பகுதியில் சிறு சிறு துண்டுகளாக விழுந்துள்ளது.

இவை வித்தியாசமாக இருந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சேகரித்து வைத்தனர்.

இதையறிந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று, அவர்களிடம் இருந்து 1.1 எடை கொண்ட விண்கற்களை சேகரித்து, லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திடம் விற்றது.

இதில் பத்திரப்படுத்தி வைத்திருந்த சிறு பகுதியை இப்போது ஏலத்தில் விற்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு விலை ரூ.1.35 கோடி என நிர்ணயித்துள்ளது.

இதுபற்றி பழங்கால பொருள்களை ஏலமிடும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் வால்கர் கூறுகையில், சகாரா பாலைவனப் பகுதியில் இதுபோன்ற விண்கற்கள் அடிக்கடி விழுகின்றன. இவற்றை சேரிக்கும் அப்பகுதி மக்களுக்கு இவற்றின் மதிப்பு தெரிவதில்லை.

ஏலம் விடப்பட உள்ள செவ்வாய் கிரக சிறிய கல் மிகவும் அழகாக உள்ளது. இது கூடுதல் விலை கிடைக்க உதவும். அக்டோபர் 14ஆம் திகதி நியூயார்க்கில் இந்தக் கல் ஏலத்துக்கு வருகிறது என்றார்.

10 லட்சம் அரிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் ஆய்வாளர்கள் சாதனை

10 லட்சம் அரிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் ஆய்வாளர்கள் சாதனை





இதுவரையிலும் கண்டறியப்படாத பல்வேறு வகையை சேர்ந்த 10 லட்சம் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் ஆய்வு கப்பல் டரா, உலகம் முழுவதும் கடலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இக்கப்பல் அட்லாண்டிக், பசிபிக், சதர்ன் மற்றும் வங்காள விரிகுடா கடலில் இதுவரை சுமார் 1,12,654 கி.மீ பயணத்தை நிறைவு செய்துள்ளது.

ஆய்வு குறித்து குழுவின் தலைவர் க்ரிஸ் பவுலர் கூறுகையில், இந்த ஆய்வை தொடங்கிய போது 5 லட்சம் புதிய கடல் வாழ் உயரினங்கள் கண்டறியப்படலாம் என்று கருதப்பட்டது. அதுவே எங்களது இலக்காகவும் இருந்தது.

ஆனால் 3 ஆண்டு கால ஆய்வில் 10 லட்சம் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக சிபோனோபோர் எனப்படும் வளைந்து நெளிந்த குழாய் போன்ற வடிவத்தில் சுமார் 150 அடி நீளத்தில் அரிய உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தான் உலகிலேயே அதிக நீளம் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனவே புதிய மற்றும் பழைய கடல்வாழ் உயிரினங்களையும் சேர்த்து இந்த கண்டுபிடிப்பு 15 லட்சத்தை தாண்டும். இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.



யோகா இந்து மதத்திற்கு உட்பட்டது: பிரிட்டன் சர்ச்சில் தடை

யோகா இந்து மதத்திற்கு உட்பட்டது: பிரிட்டன் சர்ச்சில் தடை




கிறிஸ்துவ மத நம்பிக்கைக்கு ஏற்றதாக இல்லை எனக்கூறி, யோகா வகுப்பு நடத்த பிரிட்டன் சர்ச் தடை விதித்துள்ளது.
பிரிட்டனில் சவுத் ஆம்ப்டன் பகுதியில் உள்ள செயின்ட் எட்மண்ட்ஸ் சர்ச் வளாகத்தில் கோரி விதெல் என்பவர் யோகா வகுப்புகளை நடத்தி வந்தார்.

அவர் பலரிடம் யோகாசன பயிற்சிகளை கற்று வந்தனர். இந்நிலையில் யோகா இந்துக்களின் மத வழிபாட்டு முறைகளில் ஒன்று, கத்தோலிக்க மத நம்பிக்கைக்கு ஏற்றதாக இல்லை எனக்கூறி, யோகா வகுப்புகளை உடனே நிறுத்துமாறு கோரி விதெலுக்கு சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து யோகா வகுப்புகளை பாதியிலேயே கைவிட நேர்ந்ததாக கோரி வருத்தப்பட்டார்.

இதுகுறித்து கோரி மேலும் கூறுகையில், யோகாவை மதத்துடன் சம்பந்தப்படுத்தி கூறுவதை இதற்கு முன், நான் கேள்விப்பட்டதே இல்லை.

எனது வகுப்புகளில் தியானம் தொடர்பான விஷயம் எதுவும் இல்லை, யோகா முறைப்படி உடற்பயிற்சிகளை மட்டும் தான் கற்றுத் தந்தோம்.

உடற்பயிற்சிகளை எப்படி மதத்துடன் சம்பந்தப்படுத்துகின்றனர் எனத் தெரியவில்லை என்றார்.

போர்ட்ஸ்மவுத் கத்தோலிக்க பேராயர் அலுவலக தகவல் தொடர்பாளர், யோகாவுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து நிருபர்களிடம் கூறுகையில், கிறிஸ்தவத்துக்கு தொடர்பில்லாத செயல்பாடுகளை கத்தோலிக்க சர்ச் வளாகத்தில் அனுமதிக்க மாட்டோம்.

யோகா என்பது இந்து மத தியானமாக கருதப்படுகிறது. தேசிய அளவில் இது தொடர்பான கொள்கை எதுவும் இல்லை.

இருப்பினும் யோகா தொடர்பாக அந்தந்த சர்ச் பாதிரியார் முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.


செவ்வாயில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடிப்பு

செவ்வாயில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடிப்பு






செவ்வாய் கிரகத்தில் நீரோடை சரளை கல் படுகை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கியூரியாசிட்டி என்ற விண்கலம் செவ்வாயில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு மிகப் பெரிய அளவில் நீரோடை சரளை கல் படுகை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

எனவே இங்கு நீரோடை மற்றும் சிற்றாறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதை 'கேத்தாக்' என நாசா விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த சரளை கற்களின் பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன.

காற்றின் மூலம் அடித்து வரப்பட்டால் இது போன்று உருவம் கிடைக்காது. நீரோட்டத்தின் வேகத்தை பொறுத்து வடிவம் மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், அந்த பாறைகளின் வடிவத்தின் அடிப்படையில் நீரோடை மற்றும் சிற்றாறுகளில் வினாடிக்கு 3 அடி தண்ணீர் ஓடியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.



ஐஸ்லாந்திற்கு இடம்பெயர்கிறது விக்கிலீக்ஸ் இரகசியங்களை வெளியிட முடிவு

ஐஸ்லாந்திற்கு இடம்பெயர்கிறது விக்கிலீக்ஸ்: அனைத்து நாடுகளின் இரகசியங்களை வெளியிட முடிவு




அமெரிக்கா தொடர்பான இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத்தளம், புதிய வடிவில் ஐஸ்லாந்திலிருந்து இயங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரையிலும் அமெரிக்கா தொடர்பான தகவல்களுக்கே முக்கியத்துவம் அளித்து வந்த விக்கிலீக்ஸ், இனிமேல் உலக நாடுகள் முழுவதிலும் கவனம் செலுத்த போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஊடகங்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் புதிய சட்டமொன்று சமீபத்தில் ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால், விக்கிலீக்ஸ் அங்கு இடம்பெற தீர்மானித்துள்ளது.

இந்த இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தற்சமயம் பாலியல் சர்ச்சை குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால், பிரிட்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இதுநாள் வரையிலும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தலைமை சுவீடனிலிருந்து இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

புருனே சுல்தான் மகள் திருமணம் அரண்மனையில் கோலாகலமாக நடந்தேறியது

புருனே சுல்தான் மகள் திருமணம் அரண்மனையில் கோலாகலமாக நடந்தேறியது




உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான புருனே சுல்தானின் 5வது மகள் ஹபிசாவுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது.
32 வயதாகும் ஹபிசா, மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவர் பிரதமர் அலுவலக ஊழியரான முகமது ருசானியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் 1700 அறைகள் கொண்ட மன்னர் அரண்மனையில் கோலாகலமாக நடந்தது.

திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர் உட்பட ஏராளமான வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

புருனே சுல்தானுக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.










14 வயதில் பல்கலைக்கழகத்தில் BA படிக்கும் ஜிம்பாப்வே சிறுமி

14 வயதில் பல்கலைக்கழகத்தில் BA படிக்கும் ஜிம்பாப்வே சிறுமி




ஆப்ரிக்கா நாடான ஜிம்பாப்வேயில் சிறுமி ஒருவர் அந்நாட்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து BA படிப்பது ஆச்சர்யமூட்டுகிறது.
மௌட் சிஃபாம்பா என்ற பெயருடைய இந்த சிறுமி, தனது பெற்றோர்களை இளம் வயதிலேயே இழந்தவர்.

இருப்பினும் தனது கடின உழைப்பால் 14 வயதில் பல்கலைக் கழகத்தில் வணிகக் கல்வி படிக்கத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வே நாட்டில் மட்டுமல்லாது முழுத் தென்னாபிரிக்காவிலும் மிகக் குறைந்த வயதில் பல்கலைக் கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவி மௌட் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எதிர்காலத்தில் ஒரு கணக்காளராக வருவதே தனது இலட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

4 வருட பல்கலைக் கழக படிப்பு காலப் பகுதியில் வணிகம் மற்றும் கணக்கியலில் (Bachelor of Accountancy) பட்டம் பெற இவருக்குத் தேவையான உதவித் தொகை ஒவ்வொரு வருடமும் $10 000 டொலர்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

காஷ்மீரிலிருந்து பிரிட்டனுக்கு பேருந்து: புதிய போக்குவரத்து திட்டம்

காஷ்மீரிலிருந்து பிரிட்டனுக்கு பேருந்து: புதிய போக்குவரத்து திட்டம்





பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் மக்களின் நலன் கருதி இருநாடுகளும் பேருந்து போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

அவர்களுக்கு வசதியாக காஷ்மீரிலுள்ள மிர்பூர், பிரிட்டனிலுள்ள பர்மிங்ஹாம் நகருக்கு இடையில் இந்த புதிய பேருந்து சேவையை தொடங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 7 நாடுகள் வழியாக இந்த இந்த சாலை வழித்தடம் செல்கிறது.

6,500 கிமீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் மிர்பூரிலிருந்து, பர்மிங்ஹாம் நகரை சென்றடைய 12 நாட்களாகும்.

இதற்கிடையில் தாலிபன் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பாகிஸ்தான் நகரமான குவெட்டா வழியாகவும் இந்த பேருந்து செல்லும் என்பதால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த பேருந்தில் பயணி ஒருவர் செல்வதற்கு கட்டணமாக 130 பவுண்டுகள் கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லியிலிருந்து பர்மிங்ஹாம் நகருக்கு விமானத்தில் செல்ல குறைந்தபட்சம் 460 பவுண்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீரிலிருந்து பிரிட்டனுக்கு தரை வழியாக பேருந்தில் செல்லும்போது நான்கில் ஒரு பங்கு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

Wednesday, October 3, 2012

இஸ்லாத்தின் இருதயத்தில் தவறு இருக்கிறதாம்: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

இஸ்லாத்தின் இருதயத்தில் தவறு இருக்கிறதாம்: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி




இஸ்லாத்தின் இருதயத்தில் ஏதோ தவறு நடந்துகொண்டு இருக்கிறது என்று பிரிட்டனில் வாழும் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய Innocence of muslims திரைப்படத்திற்கு பின்பு இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

தாம் சிறுவனாக இருந்தபோது, முஸ்லிம் நாடுகளின் அநேக நகரங்கள் பரந்த கலாசாரத்தின் மையமாக திகழ்ந்ததாகவும் ஆனால் ஒரு கட்டத்தில் இந்த கலாசாரம் திசைமாறி சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

தனக்குதானே ஏற்படுத்திக் கொண்ட காயத்தைப் போல், இஸ்லாத்தில் நடந்த இதை ஒரு மிகப்பெரிய விபத்தாக கருதுகிறேன் என்றார்.

நபிகள் நாயகத்திற்கு எதிராக சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை எழுதியதற்காக இஸ்லாமிய நாடுகளின் பார்வையிலிருந்து மறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ருஷ்டி.

கடந்த மாதங்களில் ராஜஸ்தானில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு ருஷ்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் காரணமாக தனது பயணத்தை தவிர்த்தார் ருஷ்டி.

செவ்வாய் கிரகத்தில் பிரமிடு கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் பிரமிடு கண்டுபிடிப்பு





செவ்வாய் கிரகத்தில் பிரமிடு வடிவ பாறை ஒன்று இருப்பதை கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள கியூரியா சிட்டி விண்கலம் தினசரி ஒரு புதுமையான அரிய தகவல்களை பூமிக்கு வழங்கி வருகின்றது.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பிரமிடு வடிவ பாறை ஒன்றை கியூரியாசிட்டி படமெடுத்து அனுப்பியுள்ளது.

செவ்வாயில் கிளன்லெக் என்ற இடத்தை நோக்கி கியூரியாசிட்டி செல்லும் பாதையில் இந்த பிரமிடு வடிவ பாறை உள்ளது.

இந்தப் பாறையானது கியூரியாசிட்டி விண்கலத்திற்கு முன்பாக 2.5 மீற்றர் தூரத்தில் உள்ளது.

இதன் உயரம் 25 சென்டிமீற்றராகவும் 40 சென்டி மீற்றர் அகலம் கொண்டதாகவும் இந்த பிரமிடு வடிவ பாறை உள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறைக்கு ஜேக் மெடிஜெவிக் என்று நாசா பெயரிட்டுள்ளது.

ஜேக் மெடிஜெவிக் என்பவர், நாசாவின் செவ்வாய் அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றிய முதன்மைப் பொறியாளர் ஆவார்.

கியூரியாசிட்டி விண்கலத்தின் முக்கியப் பணிகளில் இவரது பங்கும் உண்டு.

64 வயதான இந்தப் பொறியாளர், கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த அடுத்த நாள் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாறைக்கு ஜேக் மெடிஜெவிக் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த பிரமிடு வடிவ பாறை அதிசயமானதல்ல என்று கூறியுள்ள நாசா, இது காற்றின் அரிப்பால் இந்த வடிவத்தை அடைந்திருக்கலாம் என்று கருதுவதாக கூறியுள்ளது.

விற்பனைக்கு வந்துள்ள உலகின் அதிக விலையுள்ள வைர ஆடை

விற்பனைக்கு வந்துள்ள உலகின் அதிக விலையுள்ள வைர ஆடை






வைரங்கள் பதிக்கப்பட்ட 30 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான, உலகின் மிக விலை உயர்ந்த பெண்களுக்கான ஆடை விற்பனைக்கு வந்துள்ளது.
உக்ரைன் நாட்டில் உள்ள கிவ் நகரில், சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் பிரிட்டனைச் சேர்ந்த பெண் “டிசைனர்” டெப்பி விங்கம் வடிவமைத்த, வைரங்கள் பதிக்கப்பட்ட கறுப்பு நிறத்தில் செய்யப்பட்ட பெண்களுக்கான ஆடை அறிமுகப்படுத்தப்பட்டது.

13 கிலோ எடையில், 50க்கும் மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த ஆடை தான் உலகின் மிக விலை உயர்ந்த ஆடையாக கருதப்படுகிறது. ஆறு மாத கடின முயற்சிக்குப் பின் இந்த ஆடையை டிசைனர் வடிவமைத்துள்ளார்.

இதன் மதிப்பு 30 கோடியே 77 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயாகும். தற்போது மக்கள் மத்தியில் விற்பனைக்கு வந்துள்ளது.




சுறாவால் உயிர் தப்பிய பொலிசார்

சுறாவால் உயிர் தப்பிய பொலிசார்




பசிபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்று வழி தவறி 15 வாரங்கள் கடலிலேயே தத்தளித்த பிரிட்டன் பொலிஸ்காரர், சுறா மீன் உதவியால் கரை திரும்பியதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி டோவ்காய் டெய்டோ 42, தன் உறவினர் லெலு பைலலி உடன், பசிபிக் பெருங்கடலில் கில்பர்ட் எலிஸ் தீவில் உள்ள தரவா பகுதிக்கு, படகில் மீன் பிடிக்கச் சென்றார்.

மெயினா தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் எரிபொருள் தீர்ந்து விட்டது. எனவே, இருவரும் படகிலேயே படுத்துத் தூங்கினர். பின் சில வாரங்கள் கடலிலேயே செய்வதறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

லெலு பைலலி மூச்சுத் திணறலில் இறந்தார். இதையடுத்து, டோவ்காய் மட்டும் 15 வாரங்களாக படகிலேயே கிடந்தார். சமீபத்தில் அவரை மீனவர்கள் காப்பாற்றினர்.

உயிர் பிழைத்தது குறித்து டோவ்காய் கூறுகையில், எரிபொருள் தீர்ந்த பின், என் உறவினர் உயிர் வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார். சில வாரங்களுக்கு முன் அவர், மூச்சுத் திணறி இறந்தார்.

ஒருநாள் காலை படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய உருவம் படகை உலுக்கியது. விழித்து பார்த்தபோது, படகின் ஒரு முனையை சுறா மீன் உலுக்கிக் கொண்டிருந்தது. சுறாவைப் பார்த்ததும் செய்வதறியாமல் திகைத்தேன்.

பின், அந்த வழியாக ஒரு மீனவப் படகு வருவதைப் பார்த்ததும் கத்தினேன். அவர்கள் பைனாகுலர் வழியாக பார்த்து, என்னை வந்து காப்பாற்றிச் சென்றனர். அந்த சுறா மீன் மட்டும் படகை உலுக்காமல் இருந்திருந்தால், நான் தூங்கிக் கொண்டிருப்பேன். மீனவர்களும் காப்பாற்றி இருக்க மாட்டார்கள். ஒரு வகையில் பார்த்தால் சுறா மீன் தான் என்னைக் காப்பாற்றி உள்ளது என உயிர் பிழைத்த பொலிசார் தெரிவித்தள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்: படம் பிடித்து அனுப்பியது கியூரியாசிட்டி

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்: படம் பிடித்து அனுப்பியது கியூரியாசிட்டி




செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கும் கியூரியாசிடி ரோவர் விண்கலம், அங்கு காணப்பட்ட சூரிய கிரகணத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய அமெரிக்காவின் கியூரியாசிடி ரோவர் விண்கலம், கடந்தாண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

பத்து மாத பயணத்துக்கு பின், 56 கோடியே 30 லட்சம் கிலோ மீற்றர் தூரம் பயணித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி செவ்வாயில் தரையிறங்கியது.

பிரமாண்ட விண் கற்களால் ஏற்பட்ட காலே பள்ளப் பகுதியில், பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் 13ஆம் திகதி காணப்பட்ட சூரிய கிரகணத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

தற்போது நாசா மையம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது.



பாகிஸ்தானில் 200 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலை இடிக்க தடை

பாகிஸ்தானில் 200 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலை இடிக்க தடை




பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவிலை இடிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேட்டிவ் ஜெட்டி பிரிட்ஜ் பகுதியில், லட்சுமி நாராயண் கோவில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன் இந்த கோவில் கட்டப்பட்டது.

கடல் நீர் கோவிலை தொடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் விழாவின் போது இந்த கடல் நீரில் சில சடங்குகள் செய்யப்படும்.

தற்போது கராச்சி துறைமுக பொறுப்பு கழகம் கோவிலுக்குச் செல்லும் கடல் நீர் பாதையை அடைத்தும், கோவிலின் சில பகுதிகளை இடித்தும் கட்டடம் கட்டி வருகிறது.

கட்டடம் கட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் போன்றவற்றால் இந்த பழங்கால கோவிலின் கட்டடம் முழுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, கைலாஷ் விஷ்ராம் என்பவர் சிந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முஷிர் ஆலம், கோவிலையொட்டி நடக்கும் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தற்போதுள்ள நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? ஆய்வு செய்கிறது கியூரியாசிட்டி

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? ஆய்வு செய்கிறது கியூரியாசிட்டி






செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கியூரியாசிட்டி ரோவர் ஆய்வு செய்ய உள்ளது.
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலம் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

பத்து மாத பயணத்துக்குப் பின் 56 கோடியே 30 லட்சம் கி.மீ தூரம் கடந்து, கடந்த ஆகஸ்டு 6ஆம் திகதி செவ்வாயில் தரையிறங்கியது கியூரியாசிட்டி விண்கலம்.

பிரமாண்ட விண் கற்களால் ஏற்பட்ட காலே பள்ளப் பகுதியில் "ஏலிஸ் பாலஸ்" என்று பெயரிடப்பட்ட இடத்தில் கடந்த ஐந்து வாரமாக பல்வேறு சோதனைகளை மேற்கொண்டது.

அணுசக்தியால் இயங்கும் கியூரியாசிட்டி நாசா விஞ்ஞானிகளின் முக்கிய கட்டளையான, உயிரைத் தேடும் பயணத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

கடந்த ஒரு வார காலமாக நடந்த பல கட்ட சோதனைகளுக்கு பின், இறுதியாக அதன் ரோபோ கை சோதிக்கப்பட்டு வருகிறது.

இக்கையில் பொருத்தப்பட்ட, அற்புத கமெரா கையின் அடிப்பகுதியில் வாரப்படும் மணலை சோதிக்க வேண்டும்.

எல்லாம் திருப்தி என்றால் உடனடியாக கியூரியாசிட்டி தொடர் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதுதான்.

அதன் பின் "ஓட்டம்... ஓட்டம்... உயிர் பொருள் தென்படும் வரை ஓட்டம்" என்பதுதான் கியூரியாசிட்டியின் இலக்காக இருக்கும்.

உயிர் மூலக் கூறுகள், உயிர் வாழத் தேவையான விஷயங்களை தேடும் கியூரியாசிட்டி விஞ்ஞானிகள் உத்தரவிடும் இடத்தில், நின்று கிடைக்கும் பாறை அல்லது மணலை ரோபோ கையால் அள்ளி, அதிநவீன கமெரா மூலம் உடனுக்குடன் ஆராய்ச்சி நடத்தும்.

பெறப்படும் தகவல்கள் அவ்வப்போது விஞ்ஞானிகளின் பார்வைக்கு சென்று விடும். செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் நிலவான "போபோஸ்" பற்றிய வீடியோ படங்களையும் பெறவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

கியூரியாசிட்டி வாழும் காலம் இரண்டு ஆண்டு. இதற்குள் 7 கி.மீ பயணம். பின், மவுன்ட் ஷார்ப் எனப்படும் மலை பகுதியில் ஏறும் வகையில், சகல அம்சங்களுடன் இதை உருவாக்கி உள்ளனர்.

கின்னஸ் சாதனை படைத்த 7.4 அடி உயரமுள்ள நாய்

கின்னஸ் சாதனை படைத்த 7.4 அடி உயரமுள்ள நாய்






உலகின் சிறந்த சாதனை தொகுப்புகளை வெளியிடும் கின்னஸ் புத்தகத்தின் 2013ம் ஆண்டிற்கான பதிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இதில் அமெரிக்காவின் மிச்சிகன் நகரைச் சேர்ந்த கிரேட் டேன் என்ற நாய் உலகின் மிக உயரமான நாயாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாய் நின்ற நிலையில், பாதம் முதல் தோள் வரை உயரம் 3.4 அடி. பின்னங்காலை வைத்து நிமிர்ந்து நின்றால், உயரம் 7.4 அடி ஆகும். தினமும், 14 கிலோ உணவை உண்ணும் டேனின் எடை 70.3 கிலோ. இதன் வயது மூன்று.

கிரேட் டேனின் உயரத்தை விட ஒரே ஒரு அங்குலம் குறைவான கிரேட் ஜார்ஜ் என்ற நாய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

கிரேட் டேனின் உரிமையாளர் டெனிஸ், பெருமையுடன் கூறுகையில், டேனினை பார்ப்பவர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்வி, இது நாயா? அல்லது குதிரையா? என்பது தான் என்றும் இதை, வேன் மூலம்தான் வெளியே கூட்டிச் செல்ல முடியும் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று வயதான ஜாக்ஸ்டாக், 1.55 மீற்றர் உயரத்துடன் உலகின் உயரமான கழுதையாக தெரிவாகி உள்ளது.










உங்களது அப்பா யார் என்று தெரிய வேண்டுமா? நியூயார்க்கை வலம் வரும் புதிய வாகனம்

உங்களது அப்பா யார் என்று தெரிய வேண்டுமா? நியூயார்க்கை வலம் வரும் புதிய வாகனம்





ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வாகனம்.
இந்த வாகனத்தில் மரபணு சோதனை நடத்துவதற்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ளன. நிபுணர்களும் தயாராக உள்ளனர்.

மரபணு சோதனை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு 32 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தினமும் நியூயார்க் நகரின் முக்கிய சாலைகளை சுற்றி வரும்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்படுகிறது.

ஏராளமான ஆண்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இந்த குழந்தை தங்களுக்குப் பிறந்தது தானா? என்று பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய்வு முடிவுகள் சில நாட்களுக்குப் பின்னர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுபோன்ற சோதனை நடத்துவதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோன்ற சோதனைகள் மூலம் ஏராளமான தம்பதிகளிடையே தேவையற்ற மனக்கசப்பு ஏற்படுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் ஏற்கனவே விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற சோதனைகளினால் குடும்ப வாழ்க்கையில் விரிசல்கள் அதிகம் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர். ஆனால் ஒரு சிலரோ இதுபோன்ற மரபணு சோதனைக்கு வரவேற்பு அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.






நிஜ வாழ்க்கையில் மனைவிகளிடம் அடி, உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்

நிஜ வாழ்க்கையில் மனைவிகளிடம் அடி, உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்




ஹாலிவுட் சினிமா படங்களில் ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றவையாகும்.
இந்த படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர்களில் ஒருவர் ரோஜர் மூர். சினிமா படத்தில் தான் அவர் துப்பறியும் வீரதீரர் வேடம் ஏற்றார்.

ஆனால் உண்மையான வாழ்க்கையில் அவர் தனது மனைவிகளிடம் அடி- உதை வாங்கி இருக்கிறார்.

தற்போது 84 வயதாகும் ரோஜர் மூர் இந்த தகவலை பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். அவருடைய முன்னாள் முதல் மனைவி டூர்ன்வான் என்பவர் ரோஜர் மூரை கையால் குத்து விடுவதுடன் நகத்தால் கீறி விடுவாராம். ஒரு முறை டீ கோப்பையாலும் தாக்கி இருக்கிறார்.

அடுத்து 2-வது மனைவியான டாரோதி ஸ்குரீஸ் எம்பவரும் ரோஜர் மூர் தன்னிடம் நம்பிக்கைக்குரியவராக இல்லை என கருதி வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறார்.

இவர் தனது கணவரின் தலையில் கித்தார் இசைக்கருவியை கொண்டு தாக்கியுள்ளார்.

அமெரிக்காவில் எரிமலை வெடித்து சிதறும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவில் எரிமலை வெடித்து சிதறும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்





வட அமெரிக்காவில் உள்ள கவுதமலா நாட்டில் “பியூகோ” என்ற இடத்தில் மிகப்பெரிய எரிமலை உள்ளது.
அந்த எரிமலை வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பயங்கர சத்தம் எழுப்பி வரும் அதிலிருந்து சாம்பலும், புகையும் வெளியாகிறது.

எனவே, அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நெருப்பு குழம்புடன் பாறைகள் தூக்கி வீசப்படும். இது சுமார் 1000 மீற்றர் உயரத்துக்கு எழும்பும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பியூகோ எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் சுமார் 1 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கவுதமலா ஜனாதிபதி ஒட்டோ பெரீஷ் மொலினா தெரிவித்துள்ளார்.




பிரான்சில் விற்கப்படும் மருந்துகளில் பாதி உயிருக்கு ஆபத்தானவை

பிரான்சில் விற்கப்படும் மருந்துகளில் பாதி உயிருக்கு ஆபத்தானவை: புதிய தகவலால் பரபரப்பு




பிரான்சில் விற்கப்படும் மருந்துகளில் பாதி பயனற்றவை, குறிப்பாக 5 சதவிகிதம் உயிருக்கே ஆபத்தானவை என்று புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிசில் உள்ள நெக்கெர் மருத்துவமனையின் முன்னாள் தலைவரான பிலிப் எவன் என்பவரும், மருத்துவரும் எதிர்க்கட்சியான UMP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பெர்னார்ட் டெப்ரே என்பவரும் ஆராய்ச்சி செய்து நூல் ஒன்றை வெளியிட்டனர்.

இது குறித்து எவன் அளித்த பேட்டியில், நானும் டெப்ரேயும் இணைந்து “மீடியேட்டர்” ஊழலை அம்பலப்படுத்த போவதாக தெரிவித்தார். இந்த மீடியேட்டர் என்ற மருந்தை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கானோர் நோய் குணமாகாமல் மரணத்தைத் தழுவினர்.

“4000, useful, useless and dangerous medicines” என்ற நூலில் பயனற்ற அல்லது ஆபத்து நிறைந்த மருந்துகளுக்கு செலவழிக்கும் தொகையை மிச்சப்படுத்தினால் அது ஆண்டொன்றுக்கு பத்து மில்லியன் யூரோவை எட்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது.

உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜேர்மனி, அயர்லாந்துக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் நாடு அதிக அளவில் மருந்துகளைப் பயன்படுத்துகிறது.

ஒவ்வொரு பிரெஞ்சு நபரும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 47 மருந்துப் பொட்டலங்களை வாங்குகின்றனர். ஒரு மனிதருக்கு 532 யூரோ செலவாவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்த மருந்துகளுக்கான உற்பத்திச் செலவில் 77 சதவீதத்தை அரசே ஏற்றுக் கொள்கிறது.

உலகத் தரம் வாய்ந்த பல்கலைகழங்களின் பட்டியலில் கனடிய பல்கலைகழகங்கள்

உலகத் தரம் வாய்ந்த பல்கலைகழங்களின் பட்டியலில் கனடிய பல்கலைகழகங்கள்



உலகத் தரம் வாய்ந்த முதல் 20 பல்கலைகழகங்களின் பட்டியலில் கனடாவின் மெக்கில் பல்கலைகழகமும், டொரண்டோ பல்கலைகழகமும் இடம்பெற்றது.
2012ஆம் ஆண்டுக்கான குவாகுவாரெலி சீமேண்ஸ் பல்கலைக்கழகம்(QS World University) பல்கலைகழகங்களின் தரப்பட்டியலை வெளியிட்டது.

இதில் முதல் 200 பல்கலைக்கழகங்களின் வரிசையில் கனடாவின் ஒன்பது பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் 45ஆவது இடத்தையும், ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம் 108ஆவது இடத்தையும், மொன்றியல் பல்கலைக்கழகம் 114ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் அமெரிக்காவின் மஸாச்சூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரி முதலிடத்தைப் பெற்றது.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் தரக்கணிப்பில் முதலிடம் பெற்று வந்த ஹார்வார்ட் பல்கலைக்கழகமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் அந்தத் தகுதியை இந்த முறை இழந்துவிட்டன.

70000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் அடிப்படையிலும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டி.வி. ஷோ பாப் ஐடல் போட்டியில் ஆச்சரிய வெற்றி! ஓட்டு போட கடும் பிரசாரம்!!

டி.வி. ஷோ பாப் ஐடல் போட்டியில் ஆச்சரிய வெற்றி! ஓட்டு போட கடும் பிரசாரம்!!




Pop Idol போட்டியின் எட்டு எப்சோட்டுகளும் ஸ்மாஷ் பாடல் ஹிட்டுகள், ஆர்ப்பரிக்கும் கூட்டம் என்று தென்னாபிரிக்காவையே கடந்த சில வாரங்களாக கலக்கிக் கொண்டிருந்த நிலையில், இறுதிப் போட்டி நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. அதில், ஆச்சரிய நபர் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளர்.

ஆச்சரியத்துக்கு காரணம், முதல் தடவையாக கருப்பு இனத்தவர் ஒருவர் ஜெயித்திருக்கிறார்!

உலகிலேயே இனப் பாகுபாடு அதிகம் காட்டப்படும் நாடு தென்னாபிரிக்காதான். இங்குள்ள வெள்ளை இன மக்கள், கருப்பு இன மக்களை எந்த விதத்திலும் ஜெயிக்க விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.

பிரிட்டிஷ் பாப் ஐடல் பாணியில் தென்னாபிரிக்க டி.வி. நேனலில் இந்த இசைப் போட்டி தொடங்கப்பட்டது, 2002-ம் ஆண்டில். அன்றில் இருந்து கடந்த வருடம்வரை வெள்ளை இனத்தவர்களே வெற்றி பெற்று வந்தனர்.

போட்டியில் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது, டி.வி. ரசிகர்கள்தான். நேற்று முடிவு அறிவிக்கப்பட்ட போட்டிக்காக, ஓட்டு போட்ட ரசிகர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 3 மில்லியன் பேர்!!

25 வயதான கய்யா ம்திதவா என்ற கருப்பு இன ஆண், 23 வயதான மெலிசா அலிசன் என்ற பெண்ணை போட்டியில் ஜெயித்து, Idol South Africa பட்டத்தை ஜெயித்திருக்கிறார். இவர்களில் யாருக்கு ஓட்டுபோட வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் பிரசாரமும் நடந்தது.

தென்னாபிரிக்காவில் 90 சதவீதம் கருப்பு இன மக்களும், வெறும் 10 சதவீத வெள்ளையின மக்களும் உள்ளனர். ஆனால், பெரிய பண்ணைகள், வர்த்தகங்கள் அனைத்தும் வெள்ளை இனத்தவரின் கைகளில் உள்ளது. Idols South Africa போட்டி, டிவி பே-சேனலில் ஒளிபரப்பானது.

இதில் ஓட்டுபோட பணம் செலுத்த வேண்டும் என்பதால், வசதியான நிலையில் உள்ள வெள்ளை இன மக்களே இதுவரை ஓட்டுப்போட்டு, வெற்றியாளரை தேர்ந்தெடுத்து வந்தனர்.

இம்முறை இது, கிட்டத்தட்ட இனங்களுக்கு இடையிலான பலப் பரீட்சையாக முடிந்தது. வெளிப்படையாகவே தத்தமது இனங்களுக்காக மக்கள் பிரசாரம் செய்தார்கள். முடிவு, கருப்பு இனத்தவருக்கு ஆதரவாக வந்துள்ளது.

நேற்று முழுவதும், ஜொகனாஸ்பர்க் நகரில் விடியவிடிய வீதிகளில் ஒரே வெற்றிவிழா கொண்டாட்டங்களாக இருந்தது.

Tuesday, October 2, 2012

எப்டிப்பட்ட ஆண்களை பெண்களும் எப்படியான பெண்களை ஆண்களும் எதிர்பார்கிறார்கள் : New Survey Hot Report

எப்டிப்பட்ட ஆண்களை பெண்களும் எப்படியான பெண்களை ஆண்களும் எதிர்பார்கிறார்கள் : New Survey Hot Report





நல்லா கலரா, அழகா இருக்கிற பெண்ணா பாருங்க என்று கூறிய காலம் போய் இன்றைக்கு புத்திசாலியான பெண்தான் வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து, வெளியாகும், "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை, உலகின், 30 நாடுகளை
 சேர்ந்த, 12 ஆயிரம் பேரிடம் கணக்கெடுப்பு நடத்தியது. இதன் மூலம், தற்கால ஆண், பெண் விருப்பங்கள் பற்றி, பல்வேறு, ருசிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.

அறிவான பெண்கள்

சமீப காலமாக, பெண்களை, அவர்களின் தோற்றத்தின் மூலம், ஆண்கள் மதிப்பிடுவதில்லை. மாறாக, பெண்களின் அறிவுத் திறன், பண்பான குணங்கள் போன்றவையே, ஆண்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.

வீட்டு வேலையோ, அலுவலக வேலையோ இரண்டையுமே பேலன்ஸ் செய்வதில் புத்திசாலிப் பெண்களுக்குத்தான் தனி திறமை உண்டு. அழகுப் பதுமைகளாக இருக்கும் பெண்கள் எதற்கெடுத்தாலும் தங்களைத்தான் எதிர்பார்க்கின்றனர். எனவே அழகு என்பதை விட புத்திசாலியான பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும் என்று ஆண்கள் கூறியுள்ளனர்.

அழகான ஆண்கள்

அதே சமயத்தில், ஆண்களிடம், வசதியை எதிர்பார்க்கும் பெண்கள், வெகுவாக குறைந்து விட்டனர். நல்ல உடற்கட்டுடன், அழகாக தோற்றம் அளிக்கும், ஆண்களுக்குத்தான் தற்கால பெண்கள், அதிக மதிப்பெண்கள் தந்துள்ளனர். ஆண்களுக்கு, நிகராக, பெண்களின், பொருள் ஈட்டும் திறன் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ஆண்களின் பணத்தை நம்பி, வாழ வேண்டிய அவசியம் பெண்களுக்கு குறைந்து போய் உள்ளதால், அவர்களது எதிர்காலம் பற்றிய, சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாரிசுகளுக்கு, தன் கணவனால், வசதியான எதிர்காலத்தை தர முடியுமா என்றும், இக்கால பெண்கள் நினைப்பதில்லை.

பெண்களிடம் ஏற்பட்டு வரும், இந்த மாற்றம் காரணமாக, இனி ஆண்கள், "பணம்... பணம்' என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்காது. தம் உடலை அழகாக பேணி வந்தாலே போதும் என்ற நிலை உருவாகி வருவதால், ஆண்கள் இனி, நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இவ்வாறு சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆண் மற்றும் பெண்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகிறது என்பதையே இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

கொம்பு மாடு என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்

கொம்பு மாடு என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்