Friday, April 5, 2013

மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் பாரிய சிலந்தி கண்டுபிடிப்பு

மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் பாரிய சிலந்தி கண்டுபிடிப்பு




மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமரம் ஒன்றில் இருந்து இந்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பொயிசிலத்தேரிய வகைச் சிலந்தியை சேர்ந்தவை என்று தெரிவிக்கப்படுகிறது.

குறுக்காக சுமார் 8 அங்குளம் நீலம் வரையில் இருக்கும் இந்த சிலந்தி, மனிதனின் முகம் ஒன்றுக்கு ஈடான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Thursday, April 4, 2013

'அந்த' இடத்தில் 8000 நரம்புகள் இருக்கிறதாம்.. தெரியுமா?

'அந்த' இடத்தில் 8000 நரம்புகள் இருக்கிறதாம்.. தெரியுமா?


நமது உடலின் ஒவ்வொரு அம்சமும் அபாரமான ஆச்சரியங்கள் நிரம்பிய சுரங்கம் போல. அதிலும் பெண்களிடம் எத்தனையோ விசேஷங்கள் நிரம்பியிருக்கின்றன. அதுகுறித்த பார்வைதான் இது.... பெண்களின் பிறப்புறுப்பு குறித்து நிறையப் பேருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது உறவுக்கானது, குழந்தை பிறப்பின்போது பயன்படுவது என்பது வரை மட்டுமே பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அதில் எத்தனையோ விஷயங்கள் புதைந்துள்ளன.


வெளிப்புறம் வல்வா... 

லேபியா உதடுகள் வெஜைனா என்று அழைக்கப்படும் பெண்ணுறுப்பானது பல பகுதிகளுடன் கூடியது. வெளிப்புறப் பகுதிக்குப் பெயர் வல்வா. இந்தப் பகுதியானது, உள் மற்றும் வெளிப்புற லேபியா அதாவது உதடுகள், கிளிட்டோரிஸ், கிளிட்டோரல் முனை மற்றும் யூரித்ரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். உண்மையான பெண்ணுப்பானது உள்ளே இருக்கும் பகுதியே. இதில்தான் கர்ப்பப் பை, சினைப் பை, பலோப்பியன் டியூப் ஆகியவை அடங்கியுள்ளன.



உணர்ச்சி எரிமலை 

கிளிட்டோரிஸ் பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக உள்ள பகுதிதான் இந்த கிளிட்டோரிஸ். மிகவும உணர்ச்சிகரமான பகுதிதான் இந்த கிளிட்டோரிஸ். செக்ஸ் உறவின்போது கிளிட்டோரிஸ் தூண்டப்படும்போது உணர்வுகள் பெருக்கெடுத்து பெண்ணுக்கு சந்தோஷம் தரும்.

8000 நரம்பு முடிச்சுகள் 


கிளிட்டோரிஸ் ஏன் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு உள்ளது என்று ஆராய்ந்தால், அதில் உள்ள நரம்புகளே முக்கியக் காரணம் என்பது தெரிய வரும். அதாவது கிளிட்டோரிஸ் பகுதியில் மொத்தம் 8000 நரம்புகள் வந்து முடிகிறதாம். அதாவது உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும் நரம்பு மண்டலமாக இது திகழ்கிறது. இதனால்தான் கிளிட்டோரிஸைத் தொட்டாலே பெண்களுக்கு ஷாக் அடிக்குமாம்.


ஆணுறுப்பை விட ஸ்டிராங்கானது 

ஆணுறுப்பை விட பெண்களின் கிளிட்டோரிஸ்தான் ரொம்ப ஸ்டிராங்கானதாம். அதாவது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆணுறுப்பை விட கிளிட்டோரிஸ்தான் பெஸ்ட்டாம். ஆணுறுப்பில், அதாவது ஆண்குறியில் 3500 நரம்புகள்தான் இருக்கிறதாம். இருப்பினும் ஆணுறுப்பின் தோல் பகுதி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் உள்ள நரம்புகளைக் கணக்கிட்டால் இந்த நரம்புகளின் எண்ணிக்கை 24,000 ஆகும்.


சுறா மீனும் - பெண்ணுறுப்பும் 

சுறா மீனுக்கும், பெண்ணுறுப்புக்கும் ஒரு விஷயம் பொதுவானதாக இருக்கிறது. உடனே கண்டபடி கற்பனைக்குப் போக வேண்டியதில்லை. அதாவது ஸ்குவாலேன் என்ற ஒரு திரவம் பெண்ணுறுப்பில் சுரக்கிறது. இது லூப்ரிகன்ட் போல பயன்படுகிறது. இதுதான் உறவின்போது ஆண்குறியானது, உள்ளும், வெளியுமாக எளிதில் போய் வர உதவுகிறது. இந்த திரவம்

உணர்ச்சித் தூண்டலின்போது... 


உறவின்போது பெண்ணுக்கு உணர்ச்சித் தூண்டல் ஏற்படுகிறது. அப்போது பெண்ணின் கிளிட்டோரிஸும், லேபியா எனப்படும் உதட்டுப் பகுதிகளும் விரிவடைகின்றன, உப்புகின்றன. அந்த சமயத்தில்தான் இந்த ஸ்குவாலேன் சுரக்கிறது. இதன் மூலம் ஆணுறுப்பானது வெகு எளிதாக உள்ளே புகுந்து விளையாட வழி கிடைக்கிறதாம்.


200 சதவீதம் விரியுமாம் 

இந்த வெஜைனாவானது உறவின்போது 200 சதவீத அளவுக்கு விரியும் தன்மை கொண்டதாம். எந்தப் பெண்ணுக்கும் இந்த சைஸில்தான் வெஜைனா இருக்கும் என்று கூற முடியாது. சராசரியாக அதன் அளவானது 3 இன்ச் அலம், 3.5 இன்ச் ஆழம் கொண்டதாக இருக்கும். இருப்பினும் இது நிரந்தரமான அளவல்ல, மாறாக 200 சதவீத அளவுக்கு இது விரிவடையுமாம். வயதாக ஆக ஆக பெண்ணுறுப்பானது தளர்ந்து தொங்கிப் போய் விடும்.

வெஜைனாவுக்கும் எக்ஸர்சைஸ் உண்டு 


நாம் எப்படி உடற்பயிற்சி செய்கிறோமோ அதேபோல பெண்ணுறுப்புக்கும் பயிற்சிகள் உண்டு. இதன் மூலம் ஆர்கஸத்தை எளிதில் எட்ட அது உதவும். மேலும் சீக்கிரமே பெண்ணுறுப்பானது தளர்ந்து போவதைத் தடுக்கலாம்.


உள்ளே கழுவ வேண்டாமே... 

பெண்ணுறுப்பை அடிக்கடி கைகளை விட்டோ, விரல்களை விட்டோ அல்லது வேறு எதையும் பயன்படுத்தியோ சுத்தப்படுத்துவது கூடாதாம். காரணம், பெண்ணுறுப்பின் உள்ளே நிறைய பாக்டீரியாக்கள் உள்ளதால். இந்த பாக்டீரியாக்கள் நல்ல பாக்டீரியாக்கள். கெடுதல் செய்யாதவை, மாறாக, பெண்ணுறுப்பை இந்த பாக்டீரியாக்களே சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகின்றனவாம். எனவே அதை கழுவி காலி செய்து விடக் கூடாதாம்.


ஷேவிங் செய்யனுமா, வேண்டாமா..? 

பலருக்கு இந்த சந்தேகம் வரும். அதாவது பெண்ணுறுப்பைச் சுற்றி வெளியே வளர்ந்திருக்கும் முடியை ஷேவ் செய்து சுத்தமாக வைத்துக் கொள்வதா அல்லது அப்படியே விட்டு விடலாமா என்ற சந்தேகம் வரும். இந்த இடத்தில் ஒரு விஷயம்.. அதாவது உயிரினங்களிலேயே மர்ம உறுப்புப் பகுதியில் முடி வளர்வது மனிதர்களுக்கு மட்டும்தான். இருப்பினும் இதை ஷேவ் செய்வதா, வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் முடிவு செயய் வேண்டும். அதேசமயம், இந்த முடியால் எந்த பாதிப்பும் இல்லை, அதேசமயம், பலனும் இல்லையாம். பெண்ணுறுப்பின் மீது குட்டிப் புதர் போல படர்ந்து வளர்ந்திருக்கும் முடி, பெரும்பாலான ஆண்களுக்கு சந்தோஷத்தையும், கிளர்ச்சியையும் தர உதவுகிறதாம். எனவே பல பெண்கள் அதை ஷேவ் செய்வதில்லை. இருப்பினும் சிலருக்கு ஷேவ் செய்வதுதான் பிடித்திருக்கிறதாம். இது அவரவர் மனதைப் பொறுத்தது. பெண்ணின் உடம்பில் மிகவும் முக்கியமான பகுதி மட்டுமல்ல, ஆச்சரியமான பகுதியும் கூட இந்த பெண்ணுறுப்பு. காமப் பகுதியாக மட்டும் இதைப் பார்க்காமல் காதலுடன் பார்த்தால் செக்ஸ் உறவும் சிறக்கும்.... 






Monday, April 1, 2013

எகிப்து அருகே கடலடி இன்டர்நெட் கேபிள் துண்டிப்பு... இந்தியாவில் தொடரும் பாதிப்பு

எகிப்து அருகே கடலடி இன்டர்நெட் கேபிள் துண்டிப்பு... இந்தியாவில் தொடரும் பாதிப்பு



எகிப்துக்கு அருகே கடலடி இன்டர்நெட் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளடக்கிய தெற்காசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் இணைப்புகளின் வேகம் மகா மந்தமாக உள்ளன. இதனால் பயனீட்டாளர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே இன்டர்நெட்டுக்கு நேரம் சரியில்லை. ஆலந்தைச் சேர்ந்த ஒரு வெப்ஹோஸ்டிங் நிறுவனம் ஸ்பேமை பரப்பி முதலில் இன்டர்நெட்டின் வேகத்தை குறைத்து கஷ்டத்தைக் கொடுத்தது. அதிலிருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில் தற்போது கடலடி கேபிள் துண்டிப்புப் பிரச்சினையில் இன்டர்நெட் சிக்கியுள்ளது. இதனால் இன்டர்நெட்டின் வேகம் மந்தமாகி மக்களை வதைக்க ஆரம்பித்துள்ளது.

எகிப்துக்கு அருகே கடலுக்கடியில் உள்ள இன்டர்நெட் கேபிள்கள் சேதமடைந்துள்ளதால், ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எகிப்தின் அலெக்சாண்டிரியாவுக்கு அருகே கேபிள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கேபிளை டாடா கம்யூனிகேஷன்ஸின், விஎஸ்என்எல் பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 3 வகையான கேபிள் இணைப்புகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் இணைப்பின் வேகம் குறைந்து கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

முதலாவது இணைப்பு, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியே தென்கிழக்கு ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் கடல்வழி வலையமைப்பாகும்.

இரண்டாவது இணைப்பு ஐரோப்பாவையும், இந்தியாவையும் இணைக்கின்றது. 15,000 கி.மீ. தூரம் பரந்துள்ள இதில்தான், பாரதி ஏர்டெல் நிறுவனமும், பிஎஸ்என்எல் நிறுவனமும் தங்களது வலைத்தளத் தொடர்புகளைக் கொண்டுள்ளன.

மூன்றாவது இணைப்பு, மத்தியக் கிழக்கு நாடுகள் மூலம் இந்தியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கின்றது. இதில் ஏர்டெல் நிறுவனமும், டாட்டா நிறுவனமும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்கு வந்துள்ள முதலை தோலின் சட்டை: ரூ 50 லட்சம் விலை நிர்ணயம்

விற்பனைக்கு வந்துள்ள முதலை தோலின் சட்டை: ரூ 50 லட்சம் விலை நிர்ணயம்


அமெரிக்காவின் ஹாம்ஸ் என்ற நிறுவனம் 100 சதவீதம் சுத்தமான முதலை தோலினால் சட்டை ஒன்றை தயாரித்து நியூயார்க்கில் உள்ள மாடிசன் அவென்யூவில் உள்ள வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைத்துள்ளது.
முதலை தோலினால் தயாரிக்கப்பட்ட அந்த ஒரு சட்டையின் விலை ரூ.50 லட்சம்(91,500 டாலர்கள்) என நிர்ணயிக்கப்பட்டதால் அதை காண ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வந்துள்ளனர்.

சமீபத்தில் நியூயார்க் நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சட்டைகளில் இதுதான் மிக அதிக விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



உலகிலேயே சத்தமாக குரைத்து கின்னஸில் இடம்பிடித்த நாய்

உலகிலேயே சத்தமாக குரைத்து கின்னஸில் இடம்பிடித்த நாய்


அவுஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் வசித்து வருகின்ற பெலின்டா ப்ரீபெய்ன் என்பவரின் நாய், அதிக சத்தத்துடன் குரைத்து கின்னஸில் இடம் பெற்றுள்ளது.
இது கோல்டன் ரீட் ரைவர் வகையைச் சேர்ந்தது. இதற்கு சார்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலக சாதனை அகாடமி நடத்திய அதிக சத்தத்துடன் குரைக்கும் நாய் போட்டியில், சார்லி கலந்து கொண்டு 113 டெசிபல் சத்தத்துடன் குரைத்து வெற்றி பெற்றுள்ளது.

இது, ராக் இசை நிகழ்ச்சி மற்றும் இரும்பு ஆலையின் சத்தத்தை விட அதிகம். மேலும் உலகிலேயே அதிக சத்தத்துடன் குரைக்கும் நாய் என்ற கின்னஸ் சாதனையும் சார்லி படைத்துள்ளது.

லண்டன் நகரில் உள்ள ஜேர்மன் ஷெப்பர்டு வகை நாய் கடந்த 2009ம் ஆண்டு 108 டெசிபல் அளவுக்கு சத்தமாக குரைத்தது. அந்த சாதனையை சார்லி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


விண்வெளியில் பிளாட்டினம் வேட்டை!

விண்வெளியில் பிளாட்டினம் வேட்டை!


எத்தனை நாள்தான் பூமியிலேயே சுரங்கம் தோண்டி தங்கம், வைரம் என்று வெட்டி எடுப்பது? ஏற்கனவே அரிதாகிப் போன அந்தக் கனிமங்களை இன்னமும் பூமியில் தேடிக்கொண்டிருப்பது வேஸ்ட் என்ற முடிவுக்கு வந்துவிட்டது ப்ளானட்டரி ரிசோர்ஸஸ் என்ற நிறுவனம். அதனால்தான் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் விண்கற்களில் புதைந்திருக்கும் பொக்கிஷங்களைத் தேடி புறப்பட்டுவிட்டது அந்நிறுவனம்.

நம் பூமிக்கு அருகிலேயே பல விண்கற்கள், சிறிதும் பெரிதுமாக உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் சில இன்னொரு கிரகமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மிகப் பெரியவை. ஆஸ்டிராய்ட் என்று அழைக்கப்படும் அந்த விண்கற்களைத் தோண்டிப் பார்த்தால், பூமியைப் போலவே தண்ணீர் கிடைக்கலாம். ஏன்... பிளாட்டினம், வெள்ளி போன்ற உலோகங்கள் கூடக் கிடைக்கலாம். 500 மீட்டர் குறுக்களவு உள்ள சிறு கோள்களில் பெரிய அளவில் பிளாட்டினம் உள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். அவற்றைத்தான் வெட்டி எடுக்கத் திட்டமிட்டுள்ளது பிளானட்டரி ரிசோர்ஸஸ்.

விண்கலத்தோடு விண்கற்களை நெருங்குவதற்கு முன்பு எந்தெந்த விண்கற்களில் என்னென்ன பொக்கிஷங்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும். இதற்கான தொழில்நுட்ப பிரச்னைகள், செலவுகள், போக்குவரத்து ஆகியவற்றை அந்த நிறுவனமே எதிர்கொள்ளும். இன்னும் பத்தாண்டுகளில் கோள்களில் உள்ள செல்வங்களைத் தோண்டி எடுக்கும் பணி ஆரம்பமாகிவிடும்.
கிரகங்களில் செல்வங்களைத் தோண்டி எடுக்கும் இந்த முயற்சி மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அது தொழிற் புரட்சியைப் போல் மனித குலத்திற்கு பெரிய அளவில் பலனளிக்கும் சம்பவமாக அமையும் என்கிறார்கள். சில கோள்களும் அளவில் சிறியதாக இருப்பதால் கனிம வளங்களை எடுப்பது சுலபம் என கருதுகின்றனர் பிளானட்டரி ரிசோர்ஸஸ் நிறுவனத்தினர். இக்கோள்களுக்கு புவி ஈர்ப்பு சக்தி பலமாக இல்லாததால் ஒரு தானியங்கி வானூர்தி மூலம் கனிமங்களை எடுக்கலாம்.

விண்வெளியில் மிதக்கும் பாறைகளிலிருந்து தண்ணீரை எடுத்து அதை ராக்கெட்டுகளுக்கான எரிபொருளாக மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக எரிபொருளை நிரப்பும் நிலையங்கள் விண்வெளியில் அமைக்கப்படும். வருங்காலத்தில் வரப்போகும் அப்படிப்பட்ட விண்வெளி ஃப்யூவல் பங்க் ஒன்றை கனடா நாட்டு கிராஃபிக் வடிவமைப்பாளர் பிரயன் வெர்ஸ்டீஜ் வடிவமைத்திருக்கிறார். அதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

கேட்பதற்கே கனவு போல இருக்கும் இந்த ப்ராஜக்ட், பெருத்த பொருட்செலவு வைக்கும். ஆனாலும் கவலை இல்லை. உலகின் முதன்மை நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்றவையும் ‘டைட்டானிக்’ பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களும் இதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.
பிளாட்டினத்தை விட்டுட்டு தண்ணியக் கொண்டாங்கப்பா... புண்ணியமா போகும்

தனது சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்கியது சம்சுங்

தனது சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்கியது சம்சுங்


கூகுள் நிறுவனம் Google Play என்ற அப்பிளிக்கேஷன் ஸ்டோரையும், அப்பிள் iTunes என்ற அப்பிளிக்கேஷன் ஸ்டோரையும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இதனைத்தொடர்ந்து பல்வேறு இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் சம்சுங் நிறுவனமும் தனது உற்பத்திகளுக்கான Content & Services எனும் அப்பிளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் சம்சுங் தயாரிப்புக்களான தொலைக்காட்சி, ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் போன்றவற்றிற்கான அப்பிளிக்கேஷன்களை பெற்றுக்கொள்ள முடிவதுடன் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் தற்போது குறிப்பிட்ட அளவு அப்பிளிக்கேஷன்களையே இங்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ‘இரட்டை குடியுரிமை’! நிபந்தனைகளுடன்!!

இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ‘இரட்டை குடியுரிமை’! நிபந்தனைகளுடன்!!








வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து அங்கே பிரஜாவுரிமை பெற்று வாழும் இலங்கையர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள முடியும் என இலங்கை குடிவரவு குடியகல்வு இலாகா அறிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்காக, புதிய சட்டத்திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என குடிவரவு இலாகாவின் உயரதிகாரி சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் போது, நாட்டின் ‘தேசிய பாதுகாப்புக்கு’ பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

இரட்டை குடியுரிமை என்ற போர்வையில் இலங்கையின் வட பகுதியில் வீட்டு மனைகளுக்கு உரிமை பெற்றுக்கொள்ள வர முயற்சிக்கும் வடபகுதிகளைச் சேர்ந்த இலங்கையர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கருதுகிறது.

அந்த நோக்கத்தில் இரட்டைக் குடியுரிமை விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.




புதிய நடைமுறையில், இரட்டை குடியுரிமை விண்ணப்பிக்கும்போது, குறிப்பிட்ட நபர்கள் என்ன காரணம் காட்டி வெளிநாடு சென்றார்கள் என்ற விபரங்களுக்காக தனியாக ஒரு படிவம் வழங்கப்படும். ‘இலங்கைக்கு எதிரான’ காரணங்கள் கூறி வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்று இருந்தால், முதல் கட்டத்திலேயே விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று குடிவரவு இலாகா அதிகாரி தெரிவித்தார்.

அதாவது, யுத்தம் காரணமாக அரசியல் தஞ்சம் அல்லது அகதி அந்தஸ்து கோரி வெளிநாட்டுக்கு சென்றிருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று கூறுகிறார்கள். விண்ணப்பிக்கும் நபர் தற்போது வசிக்கும் நாட்டு குடிவரவு இலாகாவில் இருந்து இந்த விபரங்கள் நேரடியாக பெறப்படும்.

அதையடுத்து, விண்ணப்பம் செய்பவர்கள், நேர்முக தேர்வுக்காக அழைக்கப்படுவார்கள். பாதுகாப்பு அமைச்சினால், குறிப்பிட்ட விண்ணப்பதாரர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாதவர் என தீர்மானிக்கப்பட்டால், இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின்னர், இலங்கையில் சொத்துக்கள் மற்றும் நிலங்கள் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இலங்கை பிரஜாவுரிமை வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வரும். இலங்கை பிரஜாவுரிமை அற்ற பிரிவில், வெளிநாட்டு தூதரகங்கள் மட்டுமே இலங்கையில் நிலங்களை சொந்தமாக வாங்கவோ, வைத்திருக்கவோ முடியும் எனவும் தெரியவருகிறது.



Read more: http://viruvirupu.com/duel-citizenship-overseas-passport-lanka-50937/#ixzz2PBqpwoKf

Indian Internet capacity dropped! BSNL lost 21% due to cuts in undersea cable!!

Indian Internet capacity dropped! BSNL lost 21% due to cuts in undersea cable!!


India’s Telecom leader BSNL today said its Internet capacity has dropped by 21 per cent due to multiple fibre cuts in three under-sea cable systems that connect the country with many parts of the world.

“Three major cables which are serving as the International Gateway Connectivity are affected because of the multiple fibre cuts,” BSNL said in a statement.

“The Sea-Me-We-4, IMEWE and EIG cable systems are the ones affected. Because of this disruption, BSNL has lost around 21% of its total international bandwidth,” it added.

It, however, could not be ascertained whether BSNL’s customers are experiencing any trouble due to drop in bandwidth.

Tata Communications manages IMEWE and Sea-Me-We-4 cable systems. IMEWE connects India and Europe via West Asia, and Sea-Me-We-4 (SMW4) cable system connects South East Asia to Europe via the Indian Sub-Continent and Middle East.

“Tata Communications can confirm that the SMW4 cable system suffered a cable cut, and that there was interruption of services to some customers on March 27, 2013,” TCL said in a statement.

It further said that internet traffic of majority of the company’s customers was re-routed automatically via its south Asian and Pacific routes.

“Full restoration of the cable is underway .. In the meanwhile, Tata Communications continues to monitor its network closely to prevent further disruption to our customers,” TCL said, adding that the restoration would be soon.

No immediate comments could be obtained from TCL on the status of IMEWE cable system.

The other cable system Europe India Gateway (EIG) connects the UK,  Portugal, Gibraltar, Monaco, Libya, Saudi Arabia, Djibouti, Oman, UAE, India, Marseille and France.

iPad Mini ட்ரேட்மார்க் உரிமம் நிராகரிப்பு! Apple வைத்த பெயர் பொருத்தம் இல்லையாம்!!

iPad Mini ட்ரேட்மார்க் உரிமம் நிராகரிப்பு! Apple வைத்த பெயர் பொருத்தம் இல்லையாம்!!



ஆப்பிள் நிறுவனத்துக்கு மற்றொரு சிக்கல். iPad Mini தயாரிப்புக்கு ட்ரேட்மார்க் உரிமம் வழங்க முடியாது என, உரிமம் வழங்கும் அமெரிக்க அலுவலகம் (US Patent and Trademark Office) ஆப்பிள் நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.

“iPad Mini என்ற பெயருக்கும், அந்த பொருளுக்கும் சரியான பொருத்தம் கிடையாது” என்பதே, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் காரணம்.

ஆனால், ஆப்பிள் நிறுவனத்துக்கு வரும் ஜூலை மாதம்வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கிடையே, தமது தயாரிப்புக்கு iPad Mini என்ற பெயர் எப்படி பொருத்தமானது என்பதை ஆப்பிள் நிரூபித்துவிட்டால், ட்ரெட்மார்க் உரிமம் கிடைக்கும்.

இதை வேறு விதமாக சொல்வதானால், iPad என்பதில் இருந்து iPad Mini எந்த வகையில் வேறுபடுகிறது என்பதை ஆப்பிள் நிரூபிக்க வேண்டியிருக்கும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்பதுதான், இதிலுள்ள சிக்கல்.

கடந்த ஜனவரியில் முடிவடைந்த காலாண்டு பகுதியில் ஆப்பிள், 22.9 மில்லியன் iPads மற்றும் iPad Minis விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.



Read more: http://viruvirupu.com/apple-ipad-mini-united-states-office-50916/#ixzz2PBh1oh6X

Sunday, March 31, 2013

ஸ்டெர்லைட்: அன்று முதல் இன்று வரை


ஸ்டெர்லைட்: அன்று முதல் இன்று வரை


* தூத்துக்குடியில் 1992ம் ஆண்டு ஆலைக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 
* 1995ம் ஆண்டிலிருந்து ழீ1,500 கோடி முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்ட ஆலை சிப்காட்டிற்கு இடம் பெயர்ந்தது. அதே ஆண்டில் உற்பத்தியை தொடங்கியது. 
* முதன்மையான பொருளாக தாமிரமும் காப்பர் கேதோடு, பாஸ்பாரிக் அமிலம், சல்பியூரிக், ஜிப்சம், பெர்ரோசாண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 
* தூத்துக்குடி துறைமுகம் மூலம் மூலப்பொருட்கள் இறக்குமதி. துறைமுகத்தின் 2வது பெரிய இறக்குமதி நிறுவனம்.
* 4 ஷிப்ட்களில் நேரடியாக 6000 பேரும், மறைமுகமாக 10,000 மேற்பட்டோரும் பணியாற்று கின்றனர். 
* அரசுக்கு ஆண்டு வரி வருவாய் ழீ1,600கோடி.
* ஆலையின் உற்பத்தி பொருளை நம்பி தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிறிய துணைத் தொழிற்சாலைகள்.
* தூய சுற்றுச்சூழலுக்கான தேசிய அமைப்பின் (என்.டி.சி.இ.) சார்பில் 1996ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
* 1997ம் ஆண்டில் மதிமுக பொதுசெயலா ளர் வைகோ ஆலையை மூட ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நடைபயணம். சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.
* 2010ல் ஆலையில் வாயு கசிந்ததில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் இறந்தார். இதையடுத்து பிரச்னை பெரிதானது.
* 2010 செப்டம்பர் 28ல் சென்னை உயர் நீதிமன்றம், காற்று, தண்ணீர் ஆகியவற்றில் மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட உத்தரவிட்டது. நீதிபதிகள் எலிபி தர்மராவ், என்.பால்வசந்த குமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் 25 பக்க தீர்ப்பை வழங்கியது.
* 2010ல் உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. அதேநேரத்தில் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறை யீடு மனு தாக்கல் செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரியது.
* 2010ல் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 
* 2012ல் வழக்கு விசாரணை, வைகோ வாதிட்டார்.
* 2013 மார்ச் 23ம் தேதி அதிகாலை திடீரென்று காற்றில் விஷவாயு கலப்பு.
* ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயு கசிந்ததை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தது.
* 24ம் தேதி கலெக்டர் நோட்டீஸ்
* 28ம் தேதி வைகோ, நல்லகண்ணு தலைமையில் முற்றுகை போராட்டம்.
* 29ம் தேதி நள்ளிரவு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆலையை மூட உத்தரவு. 
* 30ம் தேதி மூடல் உத்தரவை ஆலை நுழைவாயிலில் ஒட்டப்பட்டது. மின் சப்ளை துண்டிப்பு. ஆலை மூடப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு : ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை அகற்றக்கோரி, கடந்த 17 ஆண்டுகளாக விவசாயிகள், மீனவர்கள், வியாபாரப் பெருமக்கள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தோம். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களை தொடர்ந்து மதிமுக நடத்தியது. ஆலையை மூடிட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு  மனம் நிறைந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.