Friday, January 11, 2013

நியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து!

நியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து!


நியூயார்க்கில் அலுவலகம் செல்பவர்கள் அதிகம் பயணிக்கும் இரண்டடுக்கு ஃபெரி (commuter ferry) நேற்று காலை விபத்துக்குள்ளாகி உள்ளது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விபத்தில் காயமடைந்தனர். மொத்தம் 326 பேர் பயணம் செய்த இந்த ஃபெரி விபத்துக்குள்ளானது, அங்கு அலுவலகங்களில் பணிபுரியும் பலரை திகிலடைய வைத்துள்ளது.

காரணம், மான்ஹட்டன் பகுதியில் அலுவலகங்களில் பணிபுரியும் அநேகர், தினமும் உபயோகிப்பது ஃபெரி பயணத்தைதான்.




ஃபெரி கரையை நெருங்கிவிட்ட நேரத்தில் திடீரென காங்க்ரீட்டுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. கரைக்கு நெருக்கமாக வந்துவிட்டதில், கீழே இறங்க தயாராக பெரும்பாலான பயணிகள் எழுந்து, ஃபெரியின் முன்பகுதிக்கு வந்து நின்றிருந்த நிலையிலேயே, ஃபெரி மோதியது. இதனால், அநேகர் 8 முதல் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.

நியூஜெர்சி ஹைலேன்ட்ஸில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ஃபெரி இது. 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டிய பலர் இதில் பயணம் செய்வது வழக்கம். 8 மணிக்கு புறப்படும் ஃபெரி, சரியாக 8.43க்கு மான்ஹட்டன் பகுதியில் உள்ள இறங்குதுறை 11ஐ சென்றடைவது வழக்கம். விபத்து நடந்தபோது, ஃபெரி, இறங்குதுறை 11-ல் இருந்து 40-50 மீட்டர் தொலைவில், சுமாரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.


அந்த நேரத்தில் திடீரென காங்க்ரீட் ஒன்றில் மோதியது ஃபெரி. மோதியபோது அதன் வேகம் 10 – 12 knots ஆக இருக்கலாம் என்று பயணம் செய்தவர்கள் சொல்கிறார்கள். வால் ஸ்ட்ரீட் என்ற பெயருடைய இந்த ஃபெரி, Seastreak என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனம், நியூயார்க்கில் பல ஃபெரிகளை இயக்கும் நிறுவனம்.

விபத்து எப்படி நடந்தது என்பது அதிகாரபூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதில் பயணம் செய்தவர்களின் கூற்றுப்படி, இறங்குதுறையின் ஒரு ஸ்லிப்பை தவறவிட்டு, அடுத்த ஸ்லிப்பில் போய் மோதியது என்று கூறப்படுகிறது. காயமடைந்த பயணிகளில் 20 பயணிகள் தலை மற்றும் கழுத்தில் அடிபட்ட நிலையில், ஸ்ட்ரெட்சர்களில் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.


காயமடைந்ததாக பதிவாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 57. இதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த 11 பேரும் மான்ஹட்டன் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட, உயிராபத்தற்ற காயம் ஏற்பட்டவர்கள், ப்ருக்ளின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். (East riverன் அந்தப்பக்கம் உள்ளது)


விபத்து நடந்தபோது ஃபெரியில் இருந்த ஒருவர், “பலரும் எழுந்து நின்ற நிலையில் திடீரென ஃபெரி மோதியதால், கிட்டத்தட்ட அனைவரும் முன்னோக்கி தூக்கியெறியப்பட்டனர். இதில் மிக மோசமான நிகழ்வு என்னவென்றால், ஒருவர்மேல் ஒருவர் போய் விழுந்தனர். இதனால், அடியில் சிக்கிக் கொண்டவர்கள் பலத்த காயமடைந்தனர்” என்றார்.


விபத்தில் காயமடைந்த ஒருவர் கூறும்போது, “விபத்து நடந்தவுடன் ஃபெரியின் தளம் முழுவதிலும் விழுந்த நிலையில் பலர் காணப்பட்டனர். கண்ணாடிச் சிதறல்கள், காகிதங்கள். ரத்தம் என்று அனைத்தும் தளத்தில் பரவியிருந்ததை பார்த்தபோது, யுத்த களம் ஒன்றில் யுத்தம் முடிந்தபின் காணப்படும் காட்சி போலிருந்தது என்றார்.


விபத்து நடந்த உடனேயே, ஃபெரி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, மோசமாக காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். ஓரிரு நிமிடங்களில் இறங்குதுறையில் ஃபெரி பொசிஷன் பண்ணப்பட்டு விட்டது. அதையடுத்து போலீஸ் மற்றும் மருத்துவ சிகிச்சை பிரிவினர் வரத் தொடங்கினர். சிறிது நேரத்தில் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளும்பர்க் வந்து சேர்ந்தார்.


விபத்துக்குள்ளான ஃபெரி வால்ஸ்ட்ரீட் 141 அடி நீளமான, இரண்டு அடுக்குகளை கொண்டது. அதிகபட்சம் 400 பயணிகள் பயணிக்கலாம். அதிகபட்ச வேகம் 38 knots (44 mph). Gladding-Hearn கப்பல் கட்டுமிடத்தில் கட்டப்பட்டது. இதுவரை விபத்துக்கு உள்ளானதில்லை. தற்போது, இதன் முன் பகுதி நொருங்கி, பெரிய துவாரம் ஏற்பட்டுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணைகள் தொடங்கிவிட்டன.

Thursday, January 10, 2013

விடுதலை குறித்து சபையில் பேசிய அமைச்சர்!

ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தெரியாமல், விடுதலை குறித்து இன்று சபையில் பேசிய அமைச்சர்!


ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தெரியாமல் பாராளுமன்றம் இன்று பகல் 1 மணியளவில் கூடியபோது, ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அவரது விடுதலை குறித்து அரச தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா, ரிசானாவை விடுதலை செய்ய சவூதி அரசிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதென குறிப்பிட்டார்.

ஆனால் அமைச்சர் இவ்வாறு பதிலளிக்கும் வேளையில் ரிசானா நபீக்கிற்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது.

அதன் பின்னரே மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றில் ரிசானாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவங்க எல்லாம் நல்லா வருவாய்ங்கஅய்யா இதை படிக்கிறவங்க ஏதாவது கமெண்ட்ஸ் போடுங்கப்பா .... 


கோவையில் ஒரு நாள் ஸ்டிரைக்கால் ரூ. 1000 கோடி உற்பத்தி அவுட்


கோவையில் ஒரு நாள் ஸ்டிரைக்கால் ரூ. 1000 கோடி உற்பத்தி அவுட்


சீரான மின்சாரம் வழங்கக் கோரி நேற்று ஒரு நாள் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் கோவையில் ரூ.1000 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக தொழிலாளர் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் ஒன்று சேர்ந்து நேற்று சீரான மின்சார விநியோகத்தை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் கோவையில் நேற்று தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போய் விட்டன.

சென்னைக்கு மட்டும் 2 மணி நேரம், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு பல மணி நேர மின்தடை என்பது நியாயமற்றது, அநீதியானது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குமுறல் வெளியிட்டனர். இதை விடுத்து, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக, சீரான மின்தடையை மற்றும் மின் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 50,000 பேர் கலந்து கொள்ளவில்லை.

அனைத்து சிறு, குறு தொழிற்கூடங்கள் முடங்கிப் போயிருந்தன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூடங்கள் அனைத்தும் நேற்று இயங்கவில்லை. இந்த கூடங்கள் இயங்காததால்ரூ.35 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் குறு, சிறு பவுண்டரிகள் என்று பார்த்தால் சுமார் 400-க்கும் மேற்பட்டதாக உள்ளது. மொத்த பவுண்டரிகள் 600 உள்ளது. இதில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். சீரான மின்வினியோகம் கோரி நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பவுண்டரிகள் எதுவும் இயங்கவில்லை. இதன் காரணமாக 2500 டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். பவுண்டரிகளை பொறுத்தவரை மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் மின்தடை பிரச்சினை மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பவுண்டரிகள் முடங்கும் நிலைக்கு தள்ளப்படும்.

கோவை மாவட்டத்தில் சிறு நூற்பாலைகள் (சிஸ்பா) சங்கத்துக்கு உட்பட்டு சுமார் 200 நூற்பாலைகள் உள்ளன. இது தவிர மொத்தம் சுமார் 750 நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. கோவையில் உள்ள அனைத்து நூற்பாலைகளும் இயங்கவில்லை. இதன் மூலம் 1 லட்சம் ஆலை தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வில்லை. ரூ.100 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

ஸ்டிரைக் குறித்து கொடிசியா தலைவர் ஆர்.ராமச்சந்திரன் கூறுகையில், கோவையில் கொடிசியா மற்றும் இதர தொழில் அமைப்புகள், வணிக அமைப்பினர் பங்கேற்ற இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதன் மூலம் ரூ.1000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை மேலும் தொடராத வகையில் தமிழக முதல்-அமைச்சர், தொழில் வணிக அமைப்பினரின் கோரிக்கையை கருணையுடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/10/tamilnadu-rs-1000-cr-losss-coimbatore-goes-on-strike-167706.html

சவூதியில் இலங்கைப் பெண்ணின் 'தலை துண்டி' மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!


சவூதியில் இலங்கைப் பெண்ணின் 'தலை துண்டி' மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!


ரியாத்: சவூதி அரேபியாவில் 4 மாத குழந்தையின் மரணத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்ற பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஸானா சவூதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் மீது 2005-ம் ஆண்டு 4 மாத குழந்தையின் மரணத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இலங்கை அரசு சார்பில் ரிஸானாவின் வயது 17தான் என்பதால் கருணை காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. சவூதி அரசர் அப்துல்லாவுக்கும் ரிஸானாவின் பெற்றோர் கருணைமனு அனுப்பியிருந்தனர். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ரிஸானாவுக்கு கருணை காட்ட வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று ரிஸானாவின் தலையை துண்டித்து சவூதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

Wednesday, January 9, 2013

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க...


கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க...


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நிறைய உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த உணவுகளைப் பார்த்தாலும், சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இது கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய உணர்வுகள் தான். சிலருக்கு உணவுகளை சாப்பிடவே தோன்றாது. ஆனால் ஒருசில உணவுகளைப் பார்த்தால், அதன் மீது ஆசை அதிகரிக்கும். அப்போது பசி இல்லாவிட்டாலும் சாப்பிடுவார்கள். உதாரணமாக, நிறைய கர்ப்பிணிகள் இனிப்புகள், காரமான உணவுகள் அல்லது ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட விரும்புவார்கள்.

அதிலும் குறிப்பாக ஜங்க் உணவுகளை தான் பெரும்பாலான கர்ப்பிணிகள் விரும்புவர். ஆனால் அவற்றை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடுவதை தவிர்கக வேண்டும். ஏனெனில் அவை உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். அவை சாதாரணமாகவே ஆரோக்கியமற்றது, கர்ப்பிணிகளுக்கு சொல்லவா வேண்டும்.

எனவே கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்று சிலவற்றை பட்டிலிட்டுள்ளோம். அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, கவனமாக இருங்கள்



 

 சோடா


கர்ப்பமாக இருக்கும் போது கார்போனேட்டட் பானங்களான சோடா அல்லது கூல்டிரிங்ஸ் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் வாயுத் தொல்லையை அதிகரிப்பதோடு, அதில் கலோரிகள் அதிகம் உள்ளன.



தயிர்


பால் பொருட்களில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கும். எனவே கர்ப்பிணிகள் பால் பொருட்கள், குறிப்பான தயிரை அதிகம் சாப்பிட்டால், எலும்புகள் வலுவடையும்.




ஜூஸ்


ஜூஸ் வகைகளில் கேரட், பீட்ரூட் மற்றும் இதர பழச்சாறுகள் மிகவும் ஆரோக்கியமானவை. முக்கியமாக கர்ப்பிணிகளுக்கு சிறந்தது.



பதப்படுத்தப்பட்ட இறைச்சி


பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பாக்டீரியா அதிகம் இருக்கும். ஜங்க் உணவுகளில் உள்ள இறைச்சிகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்டவையே. எனவே நிச்சயம் இதனை தவிர்க்க வேண்டும்.



முழு தானியங்கள்


தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், செரிமான மண்டலம் நன்கு இயங்கும். மேலும் தானியங்களில் கலோரிகள் மிகவும் குறைவு.



நூடுல்ஸ்


இந்த உணவுகளை மிகவும் வேகமாக சமைத்துவிடலாம். ஆனால் அந்த உணவுகளை கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் உப்பு, கலோரிகள் அதிகம் இருப்பதோடு, செரிமானமடைவது கடினமாகிவிடும்




சீஸ்


கொழுப்பு குறைவான சீஸில் கலோரிகள் குறைவாகவும், கால்சியம் அதிகமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி இதில் பாக்டீரியா இருக்காது. எனவே இது கர்ப்பிணிகளுக்கான சிறந்த உணவாகும்.




உறைந்த உணவுகள்


உறைந்திருக்கும் உணவுகளில் உப்புகள் அதிகம் இருக்கும். அத்தகைய உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமற்றவை.



கேரட்


கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் சிறந்தது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதும்ட பொலிவோடு அழகாக இருக்க கேரட்டை அதிகம் சாப்பிடலாம்.



சாலட்


மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்றால் சாலட் என்று சொல்லலாம். ஏனெனில் சாலட்டானது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றால் செய்யப்படுவதால், இதில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிடுவதால், வயிறு நிறைவதோடு, கலோரிகளும் குறைவாக இருக்கும்.



பழங்கள்


பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பேரிக்கய் மற்றும் மற்ற பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அதிலும் அவற்றை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், கருவில் இருக்கும் சிசுவிற்கும் நல்லது. எனவே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆனால் பப்பாளி மற்றும் அன்னாசியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.







ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!


ஸ்ரீபெரும்புதூர்: நோக்கியா நிறுவனம் ரூ.3,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்தே வருமானவரித் துறையினர் அந்த நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையிலும் சென்னை அலுவலகத்திலும் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனத்துக்கு சென்னையையடுத்து ஸ்ரீபெரும்புதூரில் மாபெரும் தொழிற்சாலை உள்ளது.

நேற்று இந்த ஆலையிலும் சென்னை அலுவலகத்திலும் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்தது.

2006ம் ஆண்டு துவங்கப்பட்ட சென்னை தொழிற்சாலையில் 8,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 70 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். உலகிலேயே மிக அதிக அளவில் நோக்கியா செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-12ம் நிதியாண்டில் நோக்கியா இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ. 12,000 கோடியாக இருந்தது. ஆனால், தனது தாய் நிறுவனமான பின்லாந்தில் உள்ள நோக்கியா நிறுவனத்துக்கு சென்னை தொழிற்சாலை ராயல்டி தொகை செலுத்தியபோது, அதற்கான வரியை பிடித்தம் செய்யவில்லை என்று தெரிகிறது.

இந்த வகையில் ரூ. 3,000 கோடி வரை நோக்கியா வரி ஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே வருமான வரித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 130 இடங்களில் தீப்பிடித்தது! 20,000 ஹெக்டேரில் பரவியது!

ஆஸ்திரேலியாவில் 130 இடங்களில் தீப்பிடித்தது! 20,000 ஹெக்டேரில் பரவியது!



ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக, பல இடங்களில் தீப்பிடித்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா கண்டிராத அளவில், ஒரே நேரத்தில் 130 இடங்களில் தீப்பிடித்து பரவி வருகிறது. இவற்றில் 40 இடங்களில் தீ அணைக்க முடியாத அளவுக்கு பெரிதாகி உள்ளது. இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

ஆஸ்திரேலியாவின் மிக பாபுலர் மாநிலம் நியூ சவுத் வேல்ஸில் நேற்று மட்டும் 130 இடங்களில் தீப்பிடித்து எரிந்தது. டஸ்மேனியாவில் இடம்பெற்ற தீப்பிடிப்பால், 20,000 ஹெக்டேர் ஏரியாவுக்கு தீ பரவி நாசம் செய்தது. இவை பெரும்பாலும் காட்டு பகுதிகள்தான்.

நேற்று வெப்பநிலை சில பகுதிகளில் 45C (113F) அளவுக்கு உச்சத்துக்கு சென்றது. அடுத்துவரும் தினங்களும், வெப்பநிலை அதிகமான தினங்களாகவே இருக்கும் என காலநிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பல இடங்களில் தீ பரவுவதற்காகன வாய்ப்பு அதி உச்ச நிலையில் உள்ளது. எனவே இவ்விடங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள ஆலிஸ் ஸ்பிரிங்குக்கு அருகேயிருந்த பிரபலமான சுற்றுலா விடுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று பிரதமர் ஜூலியா கில்லார்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.

தீ காரணமாக நாட்டின் வனப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.




















1700 கோடி - இது ஊழல் கணக்கல்ல, பூமி அளவுடைய கிரகங்களின் எண்ணிக்கை

1700 கோடி - இது ஊழல் கணக்கல்ல, பூமி அளவுடைய கிரகங்களின் எண்ணிக்கை




பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.

நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது.

அப்படியான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க விண்ணியல் ஆராய்ச்சிக் குழுமத்தின் முன்பு இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர்.

ஒரு கோளத்தில் உயிர்கள் வாழ்வதற்கு, திரவ வடிவில் நீர் வேண்டும்.
ஆனாலும் ஆயிரங்கோடிக் கணக்கில் பூமியை ஒத்த கிரகங்கள் இருக்கின்றபடியால், பூமியைப் போல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட கிரகம் ஒன்றை விண்ணியல் நிபுணர்கள் நிச்சயம் கண்டறிவார்கள் என்று பிபிசியிக் அறிவியில் துறை செய்தியாளர் கூறுகிறார்.

புவி வெப்பமடையும் வேகம் குறைகிறது

புவி வெப்பமடையும் வேகம் குறைகிறது



பருவநிலை மாற்றமடையும் வேகம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக குறையும் என்று பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூவியின் வெப்பநிலை தொடர்ந்து உயரும் என்றாலும், வெப்பநிலை உயர்வு முன்பு கணிக்கப்பட்ட அளவை விட இருபது சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் அது கணித்துள்ளது.

இயற்கை காரணங்கள் காரணமாக புவி வெப்பமடைவது குறைந்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் மாற்றங்களும் கடல் நீர் சுழற்சியும் இதில் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

இயற்கை மாற்றங்களால் சற்றே தணியும் புவி வெப்பமடையும் வேகம், எதிர்காலத்தில் வெப்ப வாயுக்கள் வெளியீட்டால் மீண்டும் பழைய படி அதிகரிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அழிந்த சிங்களத் திரைப்படத்தின் பிரதி இந்தியாவில் கிடைத்துள்ளது

அழிந்த சிங்களத் திரைப்படத்தின் பிரதி இந்தியாவில் கிடைத்துள்ளது


இலங்கை திரைப்பட வரலாற்றின் தலைசிறந்த படங்களில் ஒன்றினுடைய அசல் படச்சுருள் அழிந்துவிட்ட நிலையில், அத்திரைப்படச் சுருளின் நகல் ஒன்று புனே திரைப்பட ஆவணக் காப்பகத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சிறந்த படம்

இலங்கையின் திரைவானில் மின்னிய பெரு நட்சத்திரங்களான காமினி ஃபொன்சேகா, மாலினி ஃபொன்சேகா என்று இருவரும் தோன்ற இலங்கையின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் கைவண்ணத்தில் 1972ல் வெளியான சிங்களத் திரைப்படம் நிதானய.

சிங்களத்தில் நிதானய என்றால் புதையல் என்று பொருள்.

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும், பிரிட்டிஷ் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளைப் வென்ற இப்படம், இலங்கை திரையுலகின் முதல் அரைநூற்றாண்டுச் சரித்திரத்தின் மிகச் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.


வித்தியாசமான கதை


கழுத்தில் நான்கு மச்சங்களைக் கொண்ட கன்னிப் பெண்ணை பலி கொடுத்தால் மலைக் குகையில் பெரும் புதையல் கிடைக்கும் என்று நம்பும் ஒருவன் அப்படி ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து பழகுகிறான். கல்யாணமும் செய்துகொள்கிறான். அந்தப் பெண்ணை ஏமாற்றி மத சடங்கு எனக்கூறி பலியும் கொடுத்துவிடுகிறான். ஆனாலும் நினைத்திருந்த புதையல் கிடைக்கவில்லை. வெறுத்துப்போனவன் நடந்தது எல்லாவற்றையும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறான் என்பதாக இந்தப் படம் செல்லும்.


படச்சுருள் காப்பக வசதி


இலங்கையில் திரைப்படங்களைப் பாதுகாக்கும் ஆவணக் காப்பகம் என்று எதுவும் இல்லாத சூழலில், இத்திரைப்படத்தின் அசல் ஃபிலிம் ரோல் கெட்டுப்போய் அழிக்கப்பட்டுவிட்டிருந்தது.
இந்த சிறந்தப் படத்தின் ஒழுங்கான பிரதியும்கூட இலங்கையில் மற்றவர்களிடம் இருந்திருக்கவில்லை.

இந்த சூழ்நிலையில்தான் இந்தியாவின் புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் இந்தப் படத்தின் பிரதி ஒன்று நல்ல நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

"இந்திய திரைப்பட தேசிய ஆவணக் காப்பகத்துக்கு இந்தப் படத்தின் பிரதி ஒன்று 1974ல் கிடைத்தது. இலங்கையிடம் ஃபிலிம்களைப் பாதுகாத்து வைப்பதற்கான வசதிகள் இல்லை. ஆனால் இங்கே ஃபிலிம்களைக் கெடாமல் பாதுகாத்து வைப்பதற்கான விசேடப் பெட்டிகள் இருக்கின்றபடியால், பழைய ஃபிலிம் சுருள் எங்களிடம் உள்ளது." என்றார் புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் பிரஷாந்த் பதர்பே.

"எங்களிடம் இருக்கின்ற இத்திரைப்படத்தின் ஃபிலிம் சுருள் நல்ல நிலையில் இருக்கிறது. எங்களுக்கு கிடைத்தது இந்தப் படத்தின் திரையிடப்படக்கூடிய பிரிண்ட் அல்ல. ஆனால் டியூப் நெகடிவ் என்று சொல்லக்கூடிய பிரதிதான் எங்களிடம் உள்ளது. இதனை திரையிடுவதற்கு இந்த டியூப் நெகடிவ் பிரதியிலிருந்து சிறப்பு வழிமுறை ஒன்றைப் பயன்படுத்தி பிரிண்ட் போடவேண்டும்."

இலங்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் வரும் பட்சத்தில் அந்த டியூப் நெகடிவ்விலிருந்து திரையிடக்கூடிய பிரிண்ட் ஒன்றை தங்களால் இலங்கைக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும் என்றும் புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் கூறினார்.

அழிந்துபோய்விட்டதாகக் கருதப்பட்டுவந்த தலைசிறந்த கலைப்படைப்பின் பிரதி ஒன்று யாரும் எதிர்பாராதவகையில் வெளிநாட்டில் இருக்கிறது என்று செய்தி கேட்டு, இலங்கையின் மூத்த திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் பிபிசியிடம் மகிழ்ச்சி வெளியிட்டார்.

"அசல் அழிந்துபோய்விட்ட என்னுடைய திரைப்படத்தின் பிரதி இருக்கிறது என 94 வயதில் என் காதில் விழுகிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது."

நிதானய படத்தின் அசல் படச்சுருளுக்கு இலங்கையில் நேர்ந்த கதி கம்பெரலிய என்ற தன்னுடைய மற்றொரு படைப்புக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக அந்தப் படத்தின் அசலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திடம் தான் ஒப்படைத்துவிட்டதாக பீரிஸ் கூறினார்.

இத்திரைப்படத்தின் திரையிடக்கூடிய பிரிண்ட் ஒன்றை புனேயிலிருந்து பெற நிதி உதவிகளையும், முயற்சிகளையும் செய்ய இலங்கையில் ஆட்கள் முன்வருவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா...

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா...


இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு,கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்.. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர். தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.


சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.


ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.

அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்

50 சுறா மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிய பரிதாபம்

50 சுறா மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிய பரிதாபம்


 

பீஜி நாட்டில் உள்ள தீவின் கடற்கரையில் 50 சுறா மீன்கள் திடீரென இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஜி நாடு பல தீவுகளை உள்ளடக்கியுள்ளது. இங்குள்ள நுலோவு தீவின் கடற்கரையில் ஹேம்மர்கெட் என்ற வகையை சேர்ந்த 50 சுறா மீன்கள் திடீரென கரை ஒதுங்கின.

இவற்றில் பெரும்பாலானவை சுறாமீன் குட்டிகள். இருப்பினும் மற்ற இன மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில் கடல் நீரில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றமே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழத்திற்கு தடை விதித்த பிபிசி

வாழைப்பழத்திற்கு தடை விதித்த பிபிசி


லண்டனில் உள்ள பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார்.
இதனால் இந்த ஊழியருக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

பின், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார்.

இதையடுத்து பி.பி.சி. நிறுவனம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி லண்டன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியின்போது வாழைப்பழம் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அறிவிப்பு அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

கோவையில் இன்று 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடல்!

கோவையில் இன்று 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடல்! ஹோட்டல்களை மூட அழைப்பு!!


மின்வெட்டை கண்டித்து கோவையில் இன்று இரண்டு லட்சம் தொழிற்கூடங்கள் மூடப்படுகின்றன. டெக்ஸ்டைல், இன்ஜினீயரிங், ஆட்டோமொபைல், பம்புசெட், மோட்டார், பவுண்டரி, லேத் ஒர்க்ஷாப், நகை பட்டறை, விசைத்தறி என பல்வேறு துறைகளை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை காரணம் காட்டி சென்னையில் தினம் 2 மணி நேரம் மின்வெட்டு, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 12 முதல் 16 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால், கோவையில் தொழில்கள் முடங்கி போயுள்ளன. தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்பட்டுவந்த கோவையில், 70 சதவீதத்துக்கும் அதிகமாக உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சீராக மின்வெட்டு அமல்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் மின்தட்டுப்பாடு பிரச்னைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெறுகிறது.

கோவையில் சேம்பர், கொடிசியா, சீமா, சைமா, கவுமா, காஸ்மோபேன், டாக்ட், காட்மா, கோப்மா, சியா உள்ட்ட 35க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் இப்போராட்டத்தில் குதிக்கின்றன.

இன்றைய தினம், ஹோட்டல்கள், கடைகள் ஆகியவற்றை மூடவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், இன்று ஒருநாள் மட்டும் கோவை யில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உற்பத்தி இழப்பு ஏற்படும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, January 8, 2013

தாய்க்கு எமனாக மாறிய பச்சிளம் குழந்தைகள்

தாய்க்கு எமனாக மாறிய பச்சிளம் குழந்தைகள்



கருவில் இருந்த குழந்தையின் நகம் தாயின் ரத்த நாளத்துக்குள் புகுந்தது, இதனால் உயிருக்கு போராடிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தின் செஷயரில் உள்ள செஸ்டர் நகரை சேர்ந்தவர் ஏஞ்சலா கோட்டம்(வயது 32). இவர் ஒரு பள்ளி ஆசிரியை.

இவருடைய கணவர் டேவிட், இவர்களுக்கு ஒலிவியா என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கருவுற்றார் ஏஞ்சலா.

வழக்கமான பரிசோதனையின் போது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்வது தெரியவந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த ஏஞ்சலாவுக்கு 8 மாதமானதும் திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்தது.

உடனடியாக செஸ்டர் மருத்துவமனையில் சேர்த்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது திடீரென ஏஞ்சலாவுக்கு அலர்ஜி ஏற்பட்டு, மூச்சு விட திணறினார்.

இதனையடுத்து பரிசோதித்து பார்த்த போது, கருவில் இருந்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தையின் நகம் அல்லது தலை முடி தாயின் ரத்த நாளத்துக்குள் புகுந்ததும், ரத்த ஓட்டத்தில் அது நுரையீரலுக்குள் சிக்கி கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் வெளியில் எடுக்கப்பட்டன, இதன் பின் ஏஞ்சலாவை காப்பாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடந்ததால் ஏஞ்சலாவுக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது, அத்துடன் ரத்தம் உறையும் தன்மையும் குறைந்தது.

இதனால் 22 முறை ரத்தம் மாற்றப்பட்டு ஒருவழியாக ஏஞ்சலாவின் உடல்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் மருத்துவர்கள் எதிர்பார்த்தபடியே அவர் கோமா நிலைக்கு சென்றார்.

அதிர்ஷ்டவசமாக 12 மணி நேரத்தில் ஏஞ்சலா கண்விழித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

8 மாதம் முன்பு குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளான அமிலி- அவா தற்போது நல்ல எடையுடன் ஆரோக்கியமாக உள்ளன.





செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு

செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு

மார்ஸ் எனப்படும் செந்நிற கிரகமான செவ்வாய் கிரகத்தில் சிறு நகரம் அமைக்க முடிவு செய்துள்ளார் பேபால் நிறுவனரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான எலான் முஸ்க்.

இந்த நகரத்தில் 80000 பேரை குடியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அசைவப் பிரியர்களுக்கு அங்கு இடமில்லை. சைவர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிறார் முஸ்க்.

அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம் நிகழும் என்றும் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் எலான் முஸ்க் தெரிவித்துள்ளார்.

செந்நிற கோள் செவ்வாய் 

 
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது. இது பூமியில் இருந்து 5 கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளை சுற்றி சிவப்பாக காணப்படுவதால் இது 'செவ்வாய்' என அழைப்படுகிறது.
 


 

 உயிரினங்கள் வாழத் தகுதி


செவ்வாய் கிரகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண் டன. பின்னர் 1965-ஆம் ஆண்டில் அங்கு தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தனர். பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதி வாய்ந்த கிரகம் என்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.



ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்


செவ்வாய் கிரகத்தில் சிறிய நகரம் அமைக்க ஸ்பேஸ் எக்ஸ், பேபால் நிறுவனரான எலான் முஸ்க் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச்சென்று சாதனை படைத்தது இவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.



சைவர்களுக்கு மட்டும் அனுமதி


இந்த குடியேற்றம் பற்றி லண்டன் ராயல் ஏரோநாட்டிகல் சொசைட்டியில் பேசிய முஸ்க், செவ்வாய்கிரகத்தில் சைவ உணவுப் பிரியர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றார். அங்கு முதலில் குடியேறுவோர், தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.



கட்டணம் எவ்வளவு?


செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான கட்டணம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2 கோடியே 77 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிகளவில் இப்பயணத்துக்கு முன்வர வேண்டும் என்பதற்காக கட்டணத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்கிறார் எலான் முஸ்க்.



செவ்வாயில் விவசாயம்


செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடிக்கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியதிருக்கும். செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும்.



விண்வெளி பயணம்


செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. அதோடு, விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் "பால்கன்-9' விண்கலத்தை நாசா தயாரித்து வருகிறது.






செல்போனுடன் சிறைக்குள் ஊடுருவிய பூனை

செல்போனுடன் சிறைக்குள் ஊடுருவிய பூனை: கையும் களவுமாக பிடிபட்டது (வீடியோ இணைப்பு)



பிரேசில் சிறைக்குள் ஆக்ஸா பிளேடு மற்றும் செல்போன்களுடன் பதுங்கி பதுங்கி சென்ற பூனையை பொலிசார் சிறை பிடித்தனர்.
பிரேசிலின் அலகோஸ் நகரில் உள்ள அராபிராகா என்ற சிறையில் 263 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சிறையில் கடந்த புத்தாண்டு அன்று வெள்ளை சாம்பல் நிறம் கலந்த பூனை ஒன்று பிரதான நுழைவு வாயில் வழியாக புகுந்தது.

பூனைதானே என்பதால் பொலிசார் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பூனை வித்தியாசமாக இருப்பதை பார்த்த ஒருவர் அதன் அருகில் சென்று ஆய்வு செய்தார்.


அப்போது பூனை உடலில் டேப் சுற்றி இருந்ததால், சந்தேகப்பட்டு பூனையை பிடித்தனர். டேப்பை கழற்றிய போது, பூனை உடலில் சுவரை துளை போடும் டிரில், மெமரி கார்டு, ஆக்ஸா பிளேடு, செல்போன், பற்றரிகள் இருந்ததை பார்த்து பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவற்றை கைப்பற்றி பூனையை கூண்டுக்குள் அடைத்தனர். பின்னர் விலங்குகள் நோய் தடுப்பு மையத்துக்கு அனுப்பினர்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், செல்போன் உள்பட பொருட்களை வைத்து பூனையை சிறைக்குள் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில் பூனை பேசாது பாருங்கள் என்று கேலியாக கூறினார்.





பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்: மலேசிய வக்கீல்கள் சங்கம் ஆதரவு


பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கு மலேசிய வக்கீல்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மலேசிய வக்கீல்கள் சங்கத்தலைவர் லிம் சீவி கூறுகையில், அடிக்கடி பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை வழங்கலாம்.

ஆனால் இந்த முறையில் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த முறை மூலம் காமவெறியர்களிடம் இருந்து மக்களை காக்க முடிவது மட்டுமின்றி, குற்றவாளியும் தண்டிக்கப்படுவார். இதற்கு முன்பு குற்றவாளிகளின் ஒப்புதலை பெறலாம் என்றார்.

அவாம் என்ற பெண்கள் அமைப்பின் தலைவர் ஹோ யோக் லின் கூறுகையில், இந்த தண்டனை மிகவும் கொடூரமானது, இயற்கைக்கு மாறானது.

இதன் மூலம் இத்தகைய குற்றங்களை தடுத்து விட முடியாது. பெண்கள் சமத்துவம், உரிமைகளை மேம்படுத்துவதன் மூலமே இதுபோன்ற குற்றங்களை வேறோடு அழிக்க முடியும் என்றார்.

ஆசிய நாடுகளில் முதல்முறையாக தென் கொரியாவில் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யவும், 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் ஜேர்மனி, டென்மார்க், சுவீடன், போலந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஆகிய இடங்களில் பல ஆண்டுகளாக இதுபோன்ற தண்டனை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Monday, January 7, 2013

பனிக்கால உறக்கத்தை முடித்த ஆமைகள்

பனிக்கால உறக்கத்தை முடித்த ஆமைகள்


சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் உள்ள திசினோ மாநிலத்தில் திடீரென்று வெப்பநிலை உயர்ந்ததனால் பனிக்கால உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஆமைகள் வெயில் காலம் பிறந்துவிட்டதாக விழித்துக் கொண்டன.
பெலின்சோனாவில் உள்ள விலங்குப் பாதுகாப்புக் குழு(SPAB), இந்த ஆமைகள் அடுத்த சில நாட்களில் பனி வரும்போது திரும்பவும் பழைய இடங்களுக்குப் போய் உறங்க முடியாமல் திண்டாடும்.

எனவே இவற்றைக் தரையில் உலாவவிடாமல் மீண்டும் உறங்கப்போகுமாறு திருப்பியனுப்ப வேண்டும் என்று தெரிவித்தது.

திசினோவின் பல பகுதிகளில் வெப்பநிலை 24 டிகிரியை எட்டியது. கடந்த நான்கு நாட்களாக இங்கு வெப்பம் அதிகரித்து வருகிறது.

அதிகரித்துவரும் வெப்பம் திசினோவில் வெயில் காலம் வந்துவிட்டதைப் போன்ற உணர்வைத் தருகிறது.

இதனால் பல ஆமைகள் விழுத்துக்கொண்டு நடமாடத் தொடங்கிவிட்டன.

இவற்றை நடமாட அனுமதிக்கக் கூடாது, பனிக்கால உறக்கம் குறைவுபட்டால் ஆமைகளின் உடல்நலம் பாதிக்கும்.

அதே சமயம் அடுத்து பனி பெய்தால் அந்தப் பனியின் குளிர் தாங்காமல் இந்த அமைகள் செத்துவிடும். எனவே தரையை ஆழமாகத் தோண்டி அவற்றை அந்தப் பள்ளத்துக்குள் அனுப்பிவிட்டால் அவை மீண்டும் உறங்க ஆரம்பிக்கும் என்று விலங்குப் பாதுகாப்புக்குழு அறிவுறுத்தியது.

ஆமைகளைச் செல்லப்பிராணியாக வளர்ப்பவர்கள் இந்தக் குழுவுடன் தொடர்பு கொண்டு இந்த ஆமைகளின் உறக்கம் கலைந்தது குறித்து விபரம் கேட்கின்றனர்.










கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம்

சீனாவின் கடும் பனிப்பொழிவு! கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம்



3 தசாப்தங்களுக்கு பிறகு சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்துவிட்டதால் சீனாவின் லயோனிங் மாகாணம், ஜினோஹு பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் தமது பயணங்களை மேற்கொள்ளாமல் தரித்து நிற்கின்றன.
சீனாவில் மைனஸ் 7.4 டிகிரியாக வெப்ப நிலை குறைந்துபோனதால் அனைத்தும் உறைபனியாகிவிட்டன. பெருங்கடலும்கூட உறைபனியாகிக் கிடக்கிறது.

இதனால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் சிக்கியுள்ளன. சீனாவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மோசமான தட்பவெப்ப நிலையால் பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் போகல் கடல் நீர் ஐஸ்கட்டியாகி விட்டது. கடல் முழுவதும் சுமார் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு ஐஸ் கட்டிகளாகிக் கிடக்கிறது! அந்த கடலில் பயணித்த 1000 கப்பல்கள் ஐஸ் கட்டிக்குள் சிக்கி கிடக்கின்றன.

தென் சீனாவில் இரவில் பனிப்புயல் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாலுமிகள் பலர் கடும்குளிரில் அவதிப்படுவதனால் அவர்கள் மரக்குற்றிகளை தீமூட்டி அச்சூட்டில் குளிர்காய்வதாகவும், கடலில் உறைந்துள்ள பனிக்கட்டிகளால் கப்பல்களுக்கு சேதம் ஏற்படாதவகையில் மீட்புப்பணியில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் சீனச் செய்திகள் தெரிவிக்கின்றன.







குப்பையால் துர்நாற்றத்தில் இருக்கும் லண்டன்

குப்பையால் துர்நாற்றத்தில் இருக்கும் லண்டன்



இங்கிலாந்தின் பல நகரங்களில் 3 வாரங்களுக்கு மேல் குப்பை அள்ளாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.

3 வாரங்களாக வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள குப்பையை எடுத்து செல்ல சுகாதார துறை பணியாளர்கள் வரவில்லை. இதனால் பல நகரங்களிலும் துர்நாற்றம் வீசுகிறது.

பிரிஸ்டோல், மான்செஸ்டர், பர்மிங்ஹாம், எடின்பர்க் உள்பட இங்கிலாந்தின் பல முக்கிய பகுதிகளில் மூட்டை மூட்டையாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் நோய் வரும் அபாயம் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார துறை அலுவலகத்துக்கு ஏராளமானோர் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள நகரங்கள், டவுன்களில் தெருவுக்கு தெரு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.

பர்மிங்காமில் உள்ள ஹார்போர்ன் பகுதி மக்கள் கூறுகையில், டிசம்பர் 16ம் திகதியில் இருந்தே குப்பைகளை எடுத்து செல்லவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கதவை திறந்தாலே மலைபோன்று குவிந்து கிடக்கும் குப்பை மூட்டைகள்தான் தெரிகின்றன என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சூறாவளி காற்றும் வீசியதில் குப்பை மூட்டைகள் சிதறி தெரு முழுவதும் குப்பைகள் பரவிவிட்டன.

இதுகுறித்து பர்மிங்ஹாம் நகர கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று குப்பை சேகரிப்பு பணி நடக்காது என்று அறிவிக்கப்பட்டது. வாரத்துக்கு ஒரு முறை குப்பைகள் சேகரிக்கப்படும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் அளவுக்கு அதிகமாக குப்பைகள் குவிந்துவிட்டன. அவசரமாக குப்பை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், குப்பைகள் மறுசுழ