Thursday, August 8, 2013

அது ஏன் கொசு ராத்திரி மட்டும் கடிக்குது தெரியுமா...!

அது ஏன் கொசு ராத்திரி மட்டும் கடிக்குது தெரியுமா...!


கொசுக்கடியை தாங்கும் மனோ திடம் மற்றும் உடல் வலுவுடன்தான் வர வேண்டும். அப்படி ஒரு கொசுக்கடி இங்கு.. இங்கு மட்டுமல்ல எங்கு போனாலும் இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. அதுவும் ராத்திரியில்தான் ஓவராக கடிக்கின்றன.

ஏன் இந்த கொசுக்கள் ராத்திரியில் மட்டும் ஓவராக கடிக்கின்றன என்று பார்த்தால், அதற்கு அறிவியல்பூர்வமாக ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். பகலை விட ராத்திரியில் கொசுக்கள் அதிகம் கடிக்க, அல்ட்ரா வயலட் அதாவது புற ஊதாக் கதிர்கள்தான் காரணமாம்.

பகலை விட இரவு, சூரிய உதயத்திற்கு முன்பு மற்றும் அந்தி சாயும் நேரங்களில் இந்த புற ஊதாக்கதிர் வீச்சு அதிகம் இருக்கும். அவைதான் கொசுக்கள் படு ஆக்டிவாக இருக்கும் நேரமும் ஆகுமாம்.

அதிகாலையில்.. அந்தி சாயும் நேரத்தில் 

கொசுக்களுக்கு ரொம்பப் பிடித்த நேரம் இந்த அதிகாலையும், அந்தி சாயும் நேரமும்தானாம். இடையில் அவை அதி தீவிரமாக செயல்படுவதில்லையாம்.

ரொம்ப சூடும் ஆகாது.. ரொம்ப குளிரும் ஆகாது 

கொசுக்களுக்கு அதீத சூடும், அதீத குளிரும் ஆகவே ஆகாதாம். மேலும் வறட்சியான சூழலையும் கொசுக்கள் வெறுக்கின்றனவாம்.


லைட்டும் ஆகாது 

அதேபோல அதிக வெளிச்சமும் கொசுக்களுக்கு ஆகாதாம். பலமாக வீசும் குளிர்காற்றும் கூட கொசுக்களுக்குப் பிடிக்காத விஷயம்.

கார்பன் டை ஆக்சைடு அதிகம் இருந்தால் 

கார்பன் டை ஆக்சைடும் கூட கொசுக்களின் சுறுசுறுப்புக்கு இன்னொரு காரணம். அதன் அடர்த்தி அதிகம் இருந்தால் கொசுக்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

புற ஊதாக் கதிர்கள் ஓ.கே. 

கொசுக்களுக்கு புற ஊதாக் கதிர்கள் என்றால் ரொம்ப இஷ்டமாம். அதுபோன்ற சமயங்களில்தான் அவை மிகவும் ஆக்டிவாக இருக்குமாம்.

அகச்சிவப்பு கதிர் ஆகாதே... 

அதேசமயம், அகச்சிவப்பு கதிர்கள் அதாவது இன்பிரா ரெட்... கொசுக்களுக்கு எமன் போல.

இரவில் புற ஊதாக் கதிர் வீச்சு அதிகம் 

அதிகாலை, அந்தி சாயும் நேரம், இரவு நேரங்களில் புற ஊதாக் கதிர் வீச்சு சற்று அதிகமாக இருக்கும். எனவேதான் இந்த சமயங்களில் கொசுக்கள் கூடிக் கும்மாளம் போடுகின்றனவாம்.

பகலில் அகச்சிவப்பு அதிகம் 

பகல் நேரங்களில் அகச்சிவப்பு கதிர் வீச்சு அதிகம் இருக்கும். இதனால்தான் சூரிய உதயத்திற்குப் பின்னரும், பகலிலும், கொசுக்களைப் பார்க்க முடிவதில்லை.

காலைத்தான் குறி வைக்கும் 

கொசுக்கள் பெரும்பாலும் காலைத்தான் குறி வைத்துக் கடிக்குமாம். அதேபோல கால், நெற்றியிலும் அவை அதிகம் விளையாடுமாம்.

இவன் சரியான நாத்தப் பய.. இவனை கடிப்போம் 

அதேபோல ஒருவரது உடலின் வாசனையை வைத்தும் கொசுக்கள் குறி வைத்துக் கடிக்குமாம். குறிப்பாக மோசமான உடல் துர்நாற்றம் உடையவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்குமாம். அப்படிப்பட்டவர்களை 100 மீட்டர் தூரத்திலேயே அவை மோப்பம் பிடித்து விடுமாம். கொசுக்களின் ரகசியம்


Wednesday, August 7, 2013

“எனது மகளின் கணவர் ஏழையாக இருக்கலாம். ஆனால், நல்லவராக இருக்க வேண்டாமா?” இயக்குனர் சேரன்

“எனது மகளின் கணவர் ஏழையாக இருக்கலாம். ஆனால், நல்லவராக இருக்க வேண்டாமா?” இயக்குனர் சேரன்

“நான் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பவன் அல்ல, காதலுக்கு எதிரானவனும் அல்ல… ஆனால் எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே?” என உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார், இயக்குனர் சேரன்.

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சேரனின் 2-வது மகள் தாமினி, உதவி இயக்குனர் சந்துரு என்பவரை காதலித்து வருகிறார். சேரன் தமது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னை வீட்டுச்சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தாமினி நேற்று புகார் அளித்துள்ளார்.

இது தமிழ் திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேரன் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சந்துரு மீது புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் சந்துரு செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனது மகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு அச்சுறுத்தியதாகவும், பின்னர் தனது மகளை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேரன், “நான் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பவன் அல்ல. நானும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன்தான். காதலுக்கு எதிரானவனும் அல்ல. நான் எடுத்த திரைப்படங்களை பார்த்தாலே இதை தெரிந்துகொள்ளலாம். மேலும்,  நானும் எனது மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான். எனது மனைவி குடும்பத்தினர் கூட ஏழ்மை நிலையிலிருந்து மேலே வந்தவர்கள்தான்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “நானும் எங்களது குழந்தைகளை ஏழை, பணக்காரன், சாதி, மத பாகுபாடு பார்க்கக்கூடாது என்று சொல்லி அதன்படியே வளர்த்துள்ளோம். எனது மகள் தாமினி சந்துருவை காதலிப்பதாக கூறியதை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் படிப்பு முடியும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் எனது மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அப்போது அந்த பையன் ( சந்துரு) தன்னை டார்ச்சர் செய்வதாகவும், பயமாக இருப்பதாகவும் எனது மகள் கூறினாள். உடனே உனக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த பையனை விட்டுவிடு… நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன்.

இது தொடர்பாக 10 தினங்களுக்கு முன்னர் காவல்துறை ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தேன். இந்நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. எனது மகள் எனக்கு எதிராக காவல்துறைஆணையரிடம் புகார் அளித்துள்ளாள்.

ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றும், அதேபோன்று ஒரு மாமனாராக எனக்கு மருமகனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது? நியாயமானதுதானே?” எனக் கூறிய சேரன் அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர் மல்க பேட்டியை முடித்துக்கொண்டார்.

சேரனுடன் இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், கரு. பழனியப்பன், நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

சேரன் மீது அவருடைய மகள் தாமினி புகார் கொடுத்ததை தொடர்ந்து சேரன் மனைவி செல்வராணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாக  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.