Friday, November 9, 2012

விஷ்கி குடிப்பவரா நீங்கள் ?

விஷ்கி குடிப்பவரா நீங்கள் ?







ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா!!!

நல்ல தூக்கம்- உடல் அதிக களைப்புடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.

நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.
மன அழுத்தம்- மனம் அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி ஒரு சிறந்த பானம். அதிலும் மன அழுத்தம் ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஏற்பட்டால், அதனை உடனே சரிசெய்ய வேண்டும். அதுவே நீடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பவர்கள், அதனை குறைக்க ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டு தூங்கினால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.
சளி மற்றும் ஜலதோஷம்- உடலில் சளி அல்லது ஜலதோஷம் வந்துவிட்டல், அதனை போக்க மாத்திரைகளை விட, விஸ்கி மிகவும் சிறந்தது. அதிலும் ஒரு பெக் விஸ்கியுடன், சிறிது சுடு தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து குடிக்க வேண்டும். அதுவும் குடிக்கும் போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

மற்ற நோய்கள்- விஸ்கியை மருத்துவரின் ஆலோசனையின் படி குடித்து வந்தால், 50% பக்கவாதம் வராமல் இருக்கும். மேலும் இதனை குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கும்.

ஆகவே எப்போதும் ஆல்கஹாலை உடலுக்கு நீங்கு என்பதை நினைக்க வேண்டாம். விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம்.

சாண்டியை அடுத்து நியூயார்க் ய் தாக்கிய பனிப்புயல்

நியூயார்க்கை தாக்கியது பனிப்புயல்! தரையில் 12 இன்ச் ஸ்நோ!! மின்சாரம், விமானங்கள் இல்லை!!! - படங்கள் இணைப்பு

 

சூறாவளி சான்டி வந்து ஒரு புரட்டு புரட்டிவிட்டு சென்ற நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதிகளை நேற்று இரவு தாக்கத் தொடங்கிய பனிப்புயல் தற்போதும் நீடிக்கிறது. நேற்றும், இன்றுமாக (புதன், வியாழன்) இதுவரை 1,700 விமானங்கள், கேன்சலாகியுள்ளன. சில இடங்களில் 12 இன்ச் அளவுக்கு ஸ்நோ தரையை மூடியுள்ளது.

ஆயிரக் கணக்கான வீடுகள், மற்றும் வர்த்தக நிலையங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்குள் 2-வது தடவையாக பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60,000 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மின்சாரத்தை இழந்துள்ளன.

நியூயார்க்கின் லாங்-ஐலேன்ட் ரயில்பாதை முழுமையாக ஸ்நோவால் மூடப்பட்டுள்ளது. இந்தப் பாதையில்தான், அமெரிக்காவின் மிகப்பெரிய கம்யூட்டர் ரயில் சேவை இயங்குகிறது. லாங்-ஐலேன்ட் ரயில்பாதையில் ஓடும் அனைத்து ரயில்களும் கேன்சல் செய்யப்பட்டுள்ளன.

சான்டி சூறாவளி அளவுக்கு வேகமான காற்று இல்லை என்றபோதிலும், கிட்டத்தட்ட மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. ஆனால், சான்டி சூறாவளியைவிட நிலைமை மோசமாக இருப்பதற்கு காரணம், இப்போது, காற்றுடன் பனிப்பொழிவும் சேர்ந்துள்ளது. பனிப்பொழிவு தொடர்ந்து நடப்பதால், தரை மூடப்பட்டு, வீதிகளில் உள்ள வாகனங்களும் மூடப்படும் நிலைமை.

உயரம் குறைவான பகுதிகளில் வசிப்பவர்களை வீடுகளில் இருந்து வெளியேறுமாறு போலீஸ் லவுட் ஸ்பீகக்கரில் அறிவித்தபடி உள்ளனர். மரங்கள் விழும் அபாயம் உள்ளதான் பார்க்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வீதிப் போக்குவரத்துக்கு லாங்-ஐலேன்ட் எக்ஸ்பிரஸ்வே, இரு திசை போக்குவரத்துக்கும் மூடப்பட்டுள்ளது. வீதியில் ஐஸ் படிந்து வழுக்குவதே காரணம்.

சான்டி புயலின் பாதிப்பில் இருந்து தற்போதுதான் மீண்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நியூயார்க், மற்றும் நியூஜெர்சி மக்கள், மற்றொரு கடுமையான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தத் தொகுப்பில் உள்ள போட்டோக்கள், நேற்றும் இன்றும் அங்குள்ள நிலைமையை காட்டக்கூடியவை.














































Top News : ஜெயித்த பின் வெளியிட தயாராக இருந்த ‘ஜனாதிபதி ராம்னி’ வெப்சைட் தவறுதலாக லீக்!

Top News : ஜெயித்த பின் வெளியிட தயாராக இருந்த ‘ஜனாதிபதி ராம்னி’ வெப்சைட் தவறுதலாக லீக்!



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் ஒபாமாவுக்கு எதிரணி ஆதரவாளராக இருந்திருந்தால், இந்த செய்தியில் உள்ள போட்டோக்களை பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். காரணம், இவை உங்களை மேலும் கடுப்பேற்றி விடக்கூடியவை.

தொடர்ந்து படிக்கிறீர்களா? வாருங்கள், இங்கு இணைக்கப்பட்டுள்ள போட்டோக்கள் ஒரு இணையதளத்தின் ஸ்கிரீன் ஷாட்கள்.

ஒபாமாவுக்கு எதிராக போட்டியிட்ட ராம்னி, தாம் நிச்சயம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில் உருவாக்கிய, ‘அமெரிக்க ஜனாதிபதி ராம்னி’ வெப்சைட் இது. தேர்தல் முடிவுகள் வெளியாவதறகு முன்பே கிரியேட் செய்யப்பட்டு யாவும் தயாராக வைக்கப்பட்டிருந்தது இந்த வெப்சைட்.

செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, ராம்னி ஜெயித்திருப்பார். புதன்கிழமை காலை இந்த வெப்சைட் இன்டர்நெட்டில் ‘லைவ்’வாக போகவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்கள். அதன்படி, தேதியும் செட் பண்ணப்பட்டு இருந்தது வெப்சைட்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, ராம்னி ஜெயிக்கவில்லை என்றானபோது, உடனடியாக இந்த வெப்சைட் வெளியாவதை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்ய தவறி விட்டனர் அவரது உதவியாளர்கள். இதனால், புதன்கிழமை காலை திட்டமிட்டபடி வெப்சைட் ‘லைவ்’வாக இன்டர்நெட்டில் போகத் தொடங்கியது.

சுமார் 5 நிமிடங்களில் தமது தவறை உணர்ந்துகொண்டு, வெப்சைட்டை முடக்கி விட்டார்கள் ராம்னியின் உதவியாளர்கள். ஆனால், தற்போதைய இன்டர்நெட் உலகத்தில் அந்த 5 நிமிடங்கள் போதுமே… வெப்சைட்டின் பக்கங்கள் ஸ்கிரீன் ஷாட்டாக பிரதிபண்ணப்பட்டு விட்டன.

இப்படி தற்செயலாக லீக் ஆகிப்போன ‘ஜனாதிபதி ராம்னி வெப்சைட்டில்’ இருந்து சுவாரசியமான 4 பக்கங்களை தருகிறோம்.


இதுதான் ஜனாதிபதியின் வெப்சைட்டின் முகப்பு பக்கம். அதாவது, ஹோம் பேஜ்.  “I’m excited about our prospects as a nation. My priority is putting people back to work in America” என்கிறார் ராம்னி இந்தப் பக்கத்தில். மேலே ஜனாதிபதியின் கையொப்பமும் உள்ளது. அற்புதமான நாட்டை உருவாக்குவதற்கு அமெரிக்கர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் பக்கம் இது.



 
கீழேயுள்ள போட்டோ, மேலே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் போட்டோக்களுடன், ஜனாதிபதி ராம்னி பதவியேற்கும் வைபவம் பற்றி விளக்கம் கொடுக்கிறது. பதவிப் பிரமாணம் செய்வது முதற்கொண்டு, நடைபெறவுள்ள சடங்குகள் பற்றிய திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன.



 
 
இந்த போட்டோவில், ராம்னி புதிதாக நியமிக்கும் அமைச்சர்கள், செயலாளர்கள் யார்யார் என்ற விபரங்களை கூற திட்டமிடப்பட்ட பக்கம் உள்ளது. நல்லவேளையாக அமைச்சர்கள், அதிகாரிகளின் பெயர்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கவில்லை. ஓரிரு பெயர்களையாவது, ராம்னி ஜெயித்தவுடன் அப்டேட் செய்ய தயாராக வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.



 
 
இந்த போட்டோவில் இருப்பது, ‘ஜனாதிபதி ராம்னி’ நிர்வாகத்தில் நீங்கள் இணைந்துகொள்ள விரும்பினால், பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்கம். இதிலுள்ள சிவப்பு பட்டனை அழுத்தி, உங்கள் résuméயை இணைத்தால், தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவதற்கான ஏற்பாடு இது!

நம்ம பா.ம.க. ராமதாஸே தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது நாமே என்று சீரியசாக கூறிவரும் நிலையில், ராம்னி அமெரிக்க ஜனாதிபதியாவேன் என நம்பியதில் என்ன தப்பு?

Thursday, November 8, 2012

பிரதிபா கப்பலின் என்ஜினை இயக்கும் முயற்சி வெற்றி : இழுக்கும் முயற்சி தோல்வி


பிரதிபா கப்பலின் என்ஜினை இயக்கும் முயற்சி வெற்றி : இழுக்கும் முயற்சி தோல்வி




நிலம் புயலால் சென்னையில் தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பலின் என்ஜினை இயக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக பிரதிபா காவேரி கப்பலை கடலுக்குள் இழுக்க பயன்படுத்தப்பட்ட ராட்சத கயிறு அறுந்தது. பிரதிபா கப்பலை இழுக்க ராட்சத கயிறானது மாளவிகா இழுவை கப்பலுடன் இணைக்கப்பட்டது. அந்த சமயத்தில் கப்பல் லேசாக நகர்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத கயிறு அறுந்ததால் மீட்புக் குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். ராட்சத கயிறு அறுந்த சத்தம் கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்களுக்கு கேட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதிபா கப்பல் என்ஜின் இயங்கியது


பிரதிபா காவேரி கப்பல் என்ஜினை இயக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. வெளிநாட்டு பொறியாளர்கள் இரண்டு நாட்களாக போராடி என்ஜினை இயக்கியுள்ளனர். என்ஜின் இயங்குவதால் கப்பலை கடலுக்குள் சென்று விட்டுவிடலாம் என்று மீட்புக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கரப்பான் பூச்சிகளால் கடுப்பான பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்

கரப்பான் பூச்சிகளால் கடுப்பான பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்





ரயில் பெட்டி முழுவதும் கரப்பான் மயமாக இருந்ததால் கடுப்பான பயணிகள் அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தினர்.
ரயில்களில் கரப்பான், எலி பிரச்னை நீண்டகாலமாக உள்ளது. இதுகுறித்து அடிக்கடி புகார்கள் எழுந்தும் பலனில்லை. ரயில் பெட்டிகளில் இருந்து எலி,கரப்பான் பூச்சி போன்றவற்றை ஒழிக்க புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாக ரயில்வே அடிக்கடி கூறுகிறது.ஆனால் பலன்தான் இருப்பதாக தெரியவில்லை.அவற்றைக்கண்டு பயணிகள் அருவெறுப்பினாலும், பயத்திலும் அலறுவது வாடிக்கையாக உள்ளது.

அதேபோன்ற சம்பவம் நேற்று முன்தினமும் நடந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்தது.ரயிலில் பயணிகள் ஒவ்வொருவராக ஏறிக்கொண்டிருந்தனர். அவர்களில் 3 அடுக்கு ஏசி பெட்டியான பி,1ல் ஏறியவர்கள் மட்டும் அலறினர். காரணம் எங்கு பார்த்தாலும் கரப்பான் பூச்சிகளாக இருந்தன. கொஞ்சம் சமாளிக்கும் திறன் உள்ள பயணிகள் வேறு வழியில்லாமல் தங்கள் உடமைகளை மேல் படுக்கையில் வைத்து விட்டு வெளியில் வந்தனர். அங்கிருந்த ஏசி பெட்டி உதவியாளர்களிடம் தெரிவித்தனர்.அவர்களும் அங்கு வந்து கரப்பான்களை விரட்ட ஆரம்பித்தனர். பயணச்சீட்டு பரிசோதகருக்கும் தெரிவிக்கப்பட்டது.வழக்கம்போல் பலனில்லை.

இந்நிலையில் அட்டவணைப்படி இரவு 9.15 மணிக்கு ரயில் புறப்பட்டது. அதனால் எரிச்சலான பயணிகள் அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற ரயில்நிலைய அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தினர். ஊழியர்களை வைத்து கரப்பான் பூச்சிகளை கொஞ்சம் கொன்றனர். பின்னர் நேரமாவதை கண்டு பயணிகளும் வேறுவழியில்லாமல் சமாதானமாகினர். அதன்பிறகு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கரப்பான் பூச்சிகளுடனும், பயணிகளுடனும் 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 9.25 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச்சென்றது.

பிரதிபா காவேரி கப்பலை மாலை 3 மணிக்கு இழுக்க முடிவு... முயற்சி வெற்றி பெறுமா?

பிரதிபா காவேரி கப்பலை மாலை 3 மணிக்கு இழுக்க முடிவு... முயற்சி வெற்றி பெறுமா?




நிலம் புயலால் கடந்த 8 தினங்களாக கரை ஒதுங்கியுள்ள பிரதிபா காவேரி கப்பலை இழுக்க, இழுவைக் கப்பலான மாளவியா தரைதட்டிய கப்பலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரத்னா இழுவைக் கப்பல் சென்னை துறைமுக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மாளவியா முயற்சி தோல்வி


முன்னதாக, தரைதட்டிய பிரதிபாவை மாளவியா மூலம் கடலுக்குள் இழுக்கும் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. நேற்றிரவு ராட்சத கயிறை கட்டி பிரதிபாவை இழுத்த மாளவியா முயற்சிக்கும் ஏமாற்றம் கிடைத்தது. 6 அடி ஆழத்தில் தரைதட்டியுள்ள பிரதிபாவை அசைக்க கூடு முடியாததால் மீட்பு- பணி ஒத்திவைக்கப்பட்டது.

ரத்னா உதவியுடன் கப்பலை இழுக்க முயற்சி


இதனையடுத்து, ரத்னா இழுவை கப்பல் உதவியுடன், மாளவியா இழுவை கப்பலும் இணைந்து, பிரதிபா காவேரி கப்பலை இழுக்கும் முயற்சி மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறவிக்கப்பட்டுள்ளது.

முயற்சி தோல்வி அடைந்தால் அமாவாசை நாளில் இழுக்க முடிவு


பிரதிபா காவேரி கப்பல் இழுக்கும் முயற்சி இன்றும் தோல்வி பெறும் பட்சத்தில் அமாவாசை நாளான 13ந் தேதி அன்று கடலில் நீர்ப் பெருக்கு காணப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. அப்படி நீர் மட்டம் உயர்ந்திருந்தால் மீட்புப் பணி எளிதாக இருக்கம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்தள்ளனர்.

கப்பல் மீட்புப் பணி பார்க்க மக்கள் கூட்டம்


இதனையடுத்து இன்று மாலை 3 மணிக்கும் நடக்கும் மீட்பு பணியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். அதுமட்டுமின்றி, பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் மீட்பு பணியை கூடியுள்ளனர்.

16 வயதிலே மூன்று பெண்களாம் !!!! ஆய்விலே அதிர்ச்சி ...

16 வயதிலே மூன்று பெண்களாம் !!!! ஆய்விலே அதிர்ச்சி ...





இன்றைய இளைய தலைமுறையினர் தங்களின் 16 வயதில் சராசரியாக இரண்டு முதல் மூன்று பேருடன் உறவில் ஈடுபட விரும்புவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகின. பத்து சதவிகித பருவ வயதினர் தங்களை விட வயது மூத்தவர்களுடன் உறவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் கர்ப்பமடைவது குறித்தோ, நோய் தொற்று குறித்தோ எந்த வித விழிப்புணர்வும் இன்றி இருக்கின்றனர்.

16 வயது முதல் 22 வயதுவரை உடைய 60 சதவிகித இளைய தலைமுறையினர் காண்டம் உபயோகிப்பது எவ்வாறு என்று தெரியாமல் இருக்கின்றனர். மூன்றில் இருவருக்கு எஸ்.டி.டி எனப்படும் பாலியல் நோய் தாக்கியுள்ளது பற்றி அறியாமலேயே இருக்கின்றனர். 1200 பேரிடம் கேட்கப்பட்ட கேள்வியில் மூன்றில் ஒருவர் மட்டுமே உறவின் போது காண்டம் உபயோகிப்பதாக கூறியுள்ளனர். 25 சதவிகிதம் பேர் காண்டம் உபயோகிப்பதில்லையாம்.

22 வயதுடையவர்களில் 12 சதவிகிதம் பேர் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவில் ஈடுபடுவதை விரும்புவதாக கூறியுள்ளனர்.ஐரோப்பா கண்டத்திலேயே அதிக அளவில் டீன் ஏஜ் கர்ப்பிணிகள் உள்ள நாடாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பதின் பருவத்தினருக்கு பாதுகாப்பான உறவு பற்றியோ, பாலியல் நோய் பற்றியோ எந்த வித விழிப்புணர்வும் இருப்பதில்லை என்று அரசு கவலை தெரிவித்துள்ளது. பாப் பாடகர் ஜே. எல்.எஸ் மூலம் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

இந்த சர்வே இங்கிலாந்தில் எடுக்கப்பட்டதுதான். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இதுபோன்ற சர்வே எடுத்தால் என்னென்ன அதிர்ச்சி வெளியாகுமோ தெரியலையே ?

Wednesday, November 7, 2012

தகுந்த வயதில் குழந்தைப்பேறு அவசியம்!

தகுந்த வயதில் குழந்தைப்பேறு அவசியம்!






நவநாகரிக  உலகில் பெண்கள் பெரும்பாலானோர்  வேலைக்கு செல்கின்றனர்.  ஒவ்வொருவரும் தாம் எடுத்துக்  கொண்ட பணியினை செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அதிலும் எதிர் நீச்சல் போட்டு  பொருளாதார ரீதியில் அவர்கள் நல்ல நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.  ஆனால் பெண்களுக்கே உரித்தான, அரிய பொக்கிஷமாக போற்றி அனுபவிக்க வேண்டிய இனிமையான  சூழல்களை இழந்து விடுகின்றனர். 
“பருவத்தே பயிர் செய்” என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல.  மகளிருக்கும் இது பொருந்தும்.

இளவயது பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகிறார்கள். அப்படியே 24-26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும் பிள்ளை பேறை தள்ளிப் போட நினைக்கிறார்கள்.நாம் நல்ல நிலைக்கு வந்த பின்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து பெரும்பாலானவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

சில பெண்கள், திருமணத்திற்கு பிறகு உடனடியாக குழந்தை பெற விரும்பாமல், கருத்தடை சாதனங்களை உபயோகித்து, பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற விரும்பும் காலத்தில் அவற்றை நீக்கிக் கொண்டால் உடனடியாக கருத்தரிக்கலாம் என திட்டம் தீட்டுகின்றனர்.அது அவ்வளவு சுலபம் அல்ல.இவர்கள் இந்த எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.தங்கள் தேவைகள் பூர்த்தியாகி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அவ்வளவு சுலபமாக  கருத்தரிக்க இயலாது.

உடலில் மற்ற உறுப்புகளை விட பெண் இனப்பெருக்க  உறுப்புகள் வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. பெண்ணின் நடுத்தர வயதிலேயே மாதவிலக்கு முற்றுப் பெறுதல் வந்து கருத் தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது.

பொதுவாக பெண்களுக்கு முப்பது வயதிலிருந்தே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது.நாற்பது வயதுக்கு மேல், மேலும்  அதிக சதவிகிதத்தில் வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.

பெண்ணின் வயதைப் பொறுத்து அவளது கரு முட்டைகளும் பாதிக்கப்படுகின்றன.உடல் ரீதியாகக் கருப்பை முதிர்ந்துவிடும் நிலை கருத்தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

முப்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில்  செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் பெண்களின் கர்ப்பம் நிலைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.அதில் முட்டை உருவாவது முக்கிய இடத்தை வகிக்கிறது.முட்டை வெளிப்படுவது,வயது முதிர்ந்த நிலையில் தன் கணவர் வெளிப்படுத்தும் குறைபாடுள்ள விந்தணுவோடு அது சேர முடியாமல் சிதைவது என பல பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிறது.

30 முதல் 35 வயதுக்கிடையில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதற்கு முன்னதாக கருத்தரிப்பதில் இருக்கும் வாய்ப்பை விட இருமடங்கு தள்ளிப்போகிறது.  30 வயதை தாண்டினாலே  பெண்களுக்கு குழந்தை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.  உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஹார்மோன் சார்ந்த காரணிகள், மற்றும் பிற நோய்களும் ஏற்படு கின்றன.

வயது ஆக ஆக உடலின் ஆற்றல் குறைய ஆரம்பிக்கிறது.  மேலும் உடலில் ஹார்மோன்களால் மாற்றங்கள் பல நிகழ்கின்றன.  உயர் ரத்த அழுத்தம், கருப்பையில் கழலைகள், சினைப்பையின் செயல்திறன் குறைதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைவு, உடல் பருமன், நீரிழிவு, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது.  இதில் பெரும்பங்கு வகிப்பது மாதவிலக்கு குறைபாடுகளாகும்.  ஹார்மோன் குறைவின் காரணமாக ஒழுங்கற்ற உதிரப்போக்கு அதாவது விட்டு விட்டு வருதல், சினைப்பையால் கருமுட்டைகளை உருவாக்க இயலாத நிலை போன்றவை  ஏற்படுகின்றன. 

கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடுபவராக இருந்தால் அவற்றை நிறுத்திய மூன்று மாதங்களுக்குப் பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வது நல்லது.  ஏனென்றால் இந்த மூன்று மாத இடை வெளியில் உடலில் உள்ள ஹார்மோன்களின் நிலை பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.  உடலும் ஆரோக்கியமாக  இருக்கும்.

மேலும் முப்பது வயதுக்கு மேல் கருத் தரிக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு அதிகளவில் ஏற்படுகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.சுற்றுச் சூழல் காரணிகள், பயணம், மன நிலைகள் போன்றவை இளம் வயதினரைவிட வயது முதிர்ச்சியடையும் நிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் கருச்சிதைவுகள் தவிர்க்க இயலாததாகி விடுகின்றன .

இளம் வயதில் கருவைச் சுமக்கும் தாயைப் போல் அல்லாமல் முதிய வயதில் கருவைச் சுமக்கும்போது சோர்வு, படபடப்பு போன்ற பிரச்சனைகள் அதிகமாகத் தோன்றுகின்றன.

முதிர் வயதுப் பெண்கள் பிரசவிக்கும்போது இடுப்புக்கூட்டுப் பகுதியிலுள்ள எலும்புகளின் விரிந்து கொடுக்கும் தன்மை வெகுவாக குறைந்துவிடுவதால் சுகப் பிரசவம் நடப்பது அரிதாகிறது.  இதனால் சிசேரியன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தகுதியான வயதில் தாய்மை அடையாததால் பெண்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

இவை அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்பதாலேயே  மருத்துவர்கள் தகுதியான வயதில் குழந்தைப்பேறு அடைய வேண்டும் என்ற கொள்கையை ஆதரிக்கின்றனர்.

ஆகவே தாய்மையை விரும்பும் பெண்கள் அதற்காகத் திட்டமிட சரியான வயது, தாய்மையை முழுமையாக அனுபவிக்கச் சிறந்த வயது இருபது முதல் முப்பது வயது வரைதான்.  அதற்கு அப்பால் வரும் ஒவ்வொரு வயதிலும் கருத்தரிப்பது  என்பது சிக்கல் மிகுந்தாக உள்ளது.

இதனால்தான் நம் முன்னோர்கள் “பருவத்தே பயிர் செய்” என்றார்கள்.  இதை கருத்தில் கொண்டு ஏற்ற வயதில் குழந்தைப் பேறை பெற்றால்தால் தானும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா? நாசாவின் புதிய முயற்சி

சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா? நாசாவின் புதிய முயற்சி





சர்வதேச விண்வெளி நிலையத்தை இரவுப்பொழுதில் நாம் இருந்த இடத்தில் இருந்து வெறுங் கண்ணால் இனிமேல் பார்க்க நாசா குறுஞ்செய்தி (SMS) சேவை ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பூமி மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றை விண்வெளி வீரர்கள் விண்ணில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது International Space Station (ISS).

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள், ஆய்வுக் கருவிகள், உணவுகள் ஆகியவற்றை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் விண் ஓடங்கள் அவ்வப்போது விண்ணுக்குச் சுமந்து சென்று வருகின்றன.

தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கணையான சுனிதா வில்லியம்ஸ் ISS ஐ இயக்கி வருகின்றார்.

இந்த ISS செயற்கைக் கோளை இரவு வானில் தொலைக் காட்டி இன்றி எவரும் வெறுங் கண்ணால் ஒரு நட்சத்திரம் விண்ணில் குறுக்கே மிக வேகமாக செல்வது போல் அவதானிக்கலாம்.

தமது இடத்திலிருந்து வானின் எத்திசையில் சரியாக எத்தனை மணிக்கு இது வானில் செல்லும் என்பதை அறிவதற்கு நாசா சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய SMS சேவைக்கு அதாவது நாசாவின் இணையத் தளமான http://spotthestation.nasa.gov/ இல் தமது பெயர், மொபைல் நம்பர் மற்றும் முகவரியை இவர்கள் பதிவு செய்தால் போதும். ISS தென்படும் நேரம் மற்றும் இடம் SMS மூலம் தெரிவிக்கப்படும்.

வானியலில் ஆர்வமுடையவர் எவரும் ISS ஐ வெறுங் கண்ணால் பார்ப்பதற்கு இதன் மூலம் உடனடியாக முயற்சி செய்ய முடியும்.

ஆகவே நீங்களும் உங்கள் வீட்டருகே ISS ஐ அவதானித்து அதைப் பிறருக்கும் எடுத்துரையுங்கள். இதன் மூலம் அவர்களுக்கும் விண்வெளித் துறையில் ஆர்வம் அதிகரிக்கலாம்.

105 முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்த பெண்

105 முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்த பெண்





பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர், 105 முறை தேர்வில் தோல்வி அடைந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனில் ஓட்டுநர் பயிற்சிக்கு முன்பாக எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் தான் ஓட்டுநர் பயிற்சி கற்றுத் தரப்படும்.

இதில் கேட்கப்படும் 50 கேள்விகளில், 43 கேள்விக்கு கண்டிப்பான முறையில் பதிலளித்தாக வேண்டும்.

பிரிட்டன் இல்போர்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், இந்த தேர்வை 105 முறை எழுதி தோல்வி அடைந்துள்ளார்.

இதற்காக 2.5 லட்ச ரூபாய் வரை செலவழித்துள்ளார். ஏன் இந்த சாதாரண தேர்வில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறித்த நடந்த ஆராய்ச்சியில், சிலர் பதற்றத்தின் காரணமாகவும், கடைசி நேரத்தில் படிப்பதாலும் தான் தோல்வி ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பு பீட்டர்பாரோ பகுதியை சேர்ந்த நபர், 84 முறை தேர்வில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதனைப்போல பேச்சொலி எழுப்பும் அதிசய திமிங்கலம்

மனிதனைப்போல பேச்சொலி எழுப்பும் அதிசய திமிங்கலம்






அமெரிக்காவைச் சேர்ந்த அதிசய வெள்ளைத்திமிங்கலம் ஒன்று மனிதனைப்போல பேச்சொலி எழுப்புவது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.இந்த அதிசய திமிங்கிலத்தின் திறமையை கண்டுபிடித்த கதையே சுவார்ஸ்யமானது.

கலிபோர்னியாவில் இருக்கும் தேசிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆய்வுமையத்தில் பணிபுரியும் ஆழ்கடல் மூழ்குபவர் ஒருநாள் நீருக்குள் மூழ்கியிருந்தார். அவர் திடீரென நீரிலிருந்து மேலே வந்தார். வந்தவர் என்னை உடனடியாக நீரிலிருந்து மேலே வரச்சொல்லி கூப்பிட்டது யார் என்று கேட்டார்.
கரையில் நின்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அவரை நீரிலிருந்து மேலே வரும்படி அவர்கள் யாரும் சொல்லவில்லை. ஆனால் நீரில் மூழ்கியிருந்தவரோ தனக்கு குரல் கேட்டதாக அடித்துச் சொன்னார். அவர்கள் இருந்த இட்த்தில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சில திமிங்கலங்களைத்தவிர. ஆய்வாளர்களுக்கு லேசாக சந்தேகம் தட்டியது. இந்த திமிங்கலங்கள் ஏதாவது குரல் எழுப்பியிருக்குமோ என்று சந்தேகப்பட்டவர்கள், அந்த திமிங்கலங்களை கண்காணிக்கத்துவங்கினார்கள். சில தினங்களிலேயே அவர்களின் சந்தேகம் ஊர்ஜிதமானது.
பேசமுயலும் பெலுகா திமிங்கிலம் என் ஓ சி என்று பெயரிடப்பட்டிருந்த ஒன்பது வயது பெலூகா இன வெள்ளைத்திமிங்கிலம் தான் மனிதர்களை மாதிரி ஒலி எழுப்புகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தபோது அவர்களின் ஆச்சரியம் பலமடங்கானது.

காரணம் இதுநாள் வரை டால்பின்களை மட்டுமே மனிதனை மாதிரி ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என்று நினைத்திருந்த ஆய்வாளர்களுக்கு, இந்த வெள்ளைத்திமிங்கலம் எந்த பயிற்சியும் இல்லாமல், தானாகவே மனிதர்களைப் போல பேச முயல்வது மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.

அந்த பகுதி மீனவர்கள் மத்தியில் உலவும் நாடோடிக்கதைகளில் திமிங்கிலங்கள் மனிதனைப்போல பேசியதாக சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எவையும் இல்லை. எனவே இந்த குறிப்பிட்ட திமிங்கலம் எப்படி இந்த ஒலிகளை எழுப்புகிறது என்பதை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன்படி, இந்த என் ஓ சி எழுப்பும் ஒலிகளை பதிவு செய்த ஆய்வாளர்கள், இந்த ஒலிகள் மனிதர்களின் பேச்சு ஒலிகளைப்போலவே கால அளவிலும் ஓசையின் ஒலியை அளக்கப்பயன்படுத்தப்படும் மாத்திரை அளவிலும் அமைந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். அடுத்த கட்டமாக இந்த திமிங்கிலம் இந்த ஒலியை எப்படி எழுப்புகிறது என்பதை ஆராய்ந்தனர். சிரமப்பட்டாலும் பேச முயலும் பெலுகா அவர்களுக்கு அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. திமிங்கலங்கள் வழமையாக ஒலி எழுப்புவதற்கு செய்யும் முயற்சிக்கு மாறாக இந்த என் ஓ சி திமிங்கலம், மனிதர்களைப்போல ஒலி எழுப்ப நினைக்கும்போது தனது மூக்குப்பகுதியில் இருக்கும் வெற்றிடத்தில் ஏற்படும் அழுத்தத்தை வேறு விதமாக மாற்றியமைத்தது.

நுரையீரலுக்குள் தண்ணீர் போகாமல் தடுப்பதற்காக, இதன் தலைக்கும் உடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் காற்றடைத்த பை போன்றதொரு உடலுறுப்பை, இந்த திமிங்கலம் கஷ்டப்பட்டு ஊதிப்பெரிதாக்கி மனிதனைப்போல பேச முயல்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
சுருக்கமாக சொல்வதானால் மனிதனைப்போல பேசுவது என்பது இந்த வெள்ளைத்திமிங்கலத்துக்கு சுலபமான விடயமல்ல. ஆனால் அதற்கு அதில் ஆர்வம் இருக்கிறது. இந்த ஒலிகள் மூலம் அது மனிதர்களுடன் பேச விரும்புகிறது என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

அதேசமயம், யாருடைய தூண்டுதலும் இல்லாமலே இந்த திமிங்கலம் இந்த முயற்சியில் ஏன், அல்லது எப்படி ஈடுபட்டது என்கிற கேள்விக்கு மட்டும் ஆய்வாளர்களால் விடை காண முடியவில்லை.



முதுமையில் உடற்பயிற்சி மூளையை ஆரோக்கியமாக்கும்

முதுமையில் உடற்பயிற்சி மூளையை ஆரோக்கியமாக்கும்




அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதைத் தடுத்து, டிமெண்டியா எனப்படும் நினைவிழப்பு நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அறுபது வயதுக்கு மேற்பட்ட 638 பேரிடம் செய்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
அறுபது எழுபது வயதுகளில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதை தடுக்க முடியும் என்றும், இதன் மூலம் வயோதிகத்துடன் தொடர்புடைய டிமெண்டியா எனப்படும் நினைவிழப்பு நோயை தடுக்கமுடியும் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உடற்பயிற்சி என்றதும் ஏதோ கடினமான உடற்பயிற்சி தேவை என்பதல்ல; தினந்தோரும் நல்ல நடைபயிற்சி செய்தாலே அதுவும் உரிய பலன் தரும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். அதேசமயம் மூளைக்கு வேலை தரும் சுருக்கெழுத்து, சொடோகு போன்ற விளையாட்டுக்கள் வயோதிகத்தில் மூளை சுருங்காமல் தடுக்கவில்லை என்றும் இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

வயது ஆக ஆக, பொதுவாக மனிதர்களின் மூளை சுருங்குவது இயல்பு. இப்படி மூளை சுருங்கும்போது, மனிதர்களின் நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும். மூளையில் கட்டளைகள் உருவாகும் இடம் கிரே மேட்டர் என்கிற சாம்பல் பகுதி என்றும், அந்த கட்டளைகளை கடத்தும் பகுதி வைட் மேட்டர் என்கிற வெள்ளைப்பகுதி என்றும் இரண்டாக அறியப்படுகிறது. இதில் வயதாக ஆக, மூளையின் வெள்ளைப்பகுதி பாதிக்கப்படும். சாம்பல் பகுதி சுருங்கும்.

தினசரி நடைப்பயிற்சி இந்த இரண்டையும் தடுக்கிறது என்பது தான் எடின்பர்க் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு. உடற்பயிற்சியினால் ரத்த சுழற்சி ஊக்குவிக்கப்படுவதால், அது மூளை செல்களில் ரத்த சுழற்சியை அதிகப்படுத்தி மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதால் மூளை சுருங்காமல் தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே வயதான காலத்தில் மூளைத்திறனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள், தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பது அவர்களின் அறிவுரை.

நாற்பதுக்கு முன் புகைப்பதைக் கைவிடுவது வாழ்நாளை அதிகரிக்கிறது

நாற்பதுக்கு முன் புகைப்பதைக் கைவிடுவது வாழ்நாளை அதிகரிக்கிறது




புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாற்பது வயதுக்கு முன்பாகவே அப்பழக்கத்தை கைவிடுகிறார்கள் என்றால், தமது ஆயுட்காலத்தை அவர்கள் கணிசமான அளவில் அதிகரித்துக்கொள்கிறார்கள் என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.

பிரிட்டனில் பத்து லட்சம் பெண்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, புகைப் பழக்கத்தை நாற்பது வயதுக்கு முன்பாக கைவிட்டவர்கள், தொடர்ந்து புகைப்பவர்களை விட சராசரியாக ஒன்பது ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.

மருத்துவ சஞ்சிகையான தி லான்செட்டில் இந்த ஆய்வின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு பெண்களிடையேசெய்யப்பட்டிருந்தாலும், ஆண்களுக்கும் இந்த முடிவு அதே அளவில் பொருந்தும் என்று ஆய்வுக்கு தலைமையேற்றிருந்த ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ கூறுகிறார்.
எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு மேலும் உகந்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.

விஞ்ஞானிகளை நடுங்கவைக்கும் நிலநடுக்கத் தீர்ப்பு

விஞ்ஞானிகளை நடுங்கவைக்கும் நிலநடுக்கத் தீர்ப்பு




இத்தாலியில் 2009 ஆம் ஆண்டு கடும் பாதிப்புக்களை ஏற்படுத்திய லாகுய்லா நிலநடுக்கத்தை துல்லியமாக கணித்து பொதுமக்களை சரியாக எச்சரிக்கத்தவறிய குற்றச்சாட்டின் கீழ் ஆறு விஞ்ஞானிகளுக்கும் ஒரு பேரிடர் மையத்தடுப்பு மையத்தின் உயர் அதிகாரிக்கும் ஆறுஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் சுமார் எட்டுமில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இத்தாலியை கடுமையாக பாதித்த லாகொய்லா நிலநடுக்கத்தில் 309 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் பெரும் இழப்புக்களை சந்தித்தனர்.

இந்த குறிப்பிட்ட நிலநடுக்கம் ஏற்படும் என்று இத்தாலிய பேரிடர் தடுப்பு மைய விஞ்ஞானிகள் சரியாக கணித்திருந்தாலும், இதன் தீவிரத்தன்மை குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புக்களின் சாத்தியங்கள் குறித்தும் இந்த ஆறுவிஞ்ஞானிகளும், ஒரு உயர் அதிகாரியும் பொதுமக்களுக்கு முறையாக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி கோரவில்லை என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏழுபேருக்கும் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். இந்த தண்டனையை எதிர்த்து இந்த ஏழுபேரும் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
நிலவியல் விஞ்ஞானிகளுக்கு நீதிமன்றம் விதித்திருக்கும் இந்த சிறைத்தண்டனை விஞ்ஞான உலகில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்றைய நிலையில் நிலவியல் விஞ்ஞானம் என்பது நிலநடுக்கத்தை பெருமளவுக்கு தோராயமாக கணித்துக்கூறவல்ல நிலையில் மட்டுமே வளர்ந்திருப்பதாகவும் 100சதவீத துல்லியத்தன்மையுடன் நிலநடுக்கத்தின் அளவை கணிப்பது கடினம் என்றும், இந்த நிலைமையில் விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த சிறைத்தண்டனை என்பது விஞ்ஞானிகளை அச்சுறுத்தும் செயல் என்றும், இது விஞ்ஞான பரிசோதனை முயற்சிகளுக்கு நல்லதல்ல என்றும் விஞ்ஞானிகளில் ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.
2009 ஆம் ஆண்டு இத்தாலியை பாதித்த நிலநடுக்கத்தைத் துல்லியமாக கணிக்கத்தவறியதற்காக ஆறு விஞ்ஞானிகளுக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பது தவறு என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் அருணாசலம்.

Tuesday, November 6, 2012

வாழ்நாளிலேயே முதன்முறையாக வாக்களிக்க உள்ளார் 99 வயது மூதாட்டி

வாழ்நாளிலேயே முதன்முறையாக வாக்களிக்க உள்ளார் 99 வயது மூதாட்டி





அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன் வாழ்நாளிலேயே முதன் முறையாக 99 வயது மூதாட்டி வாக்களிக்க உள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் மியர்ஸ் பகுதியில் வசிப்பவர் ரோசி லெவிஸ்(வயது 99).

இத்தனை வருட காலமும் வாக்களிக்காமல் இருந்த ரோசி, தற்போது முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ளார்.

இதுவரையிலும் அவருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது அவருக்கு அடையாள அட்டை தபாலில் அனுப்பப்பட்டுள்ளதால், தனது பேரனுடன் சென்று வாக்களிக்க உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என் வாழ்நாளில் இப்போதாவது வாக்களிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ரோசிக்கு ஏழு வயதாக இருக்கும் போது தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதாம்.

இங்கிலாந்தில் அதிகமான பனிப்பொழிவு

இங்கிலாந்தில் அதிகமான பனிப்பொழிவு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது





இங்கிலாந்தின் மேற்கு மற்றும் தென் பகுதியில் பனி அதிகமாக படர்ந்துள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சோமர்செட், வில்ட்ஷயர் மற்றும் டோர்செட் பகுதிகளில் நேற்று காலை முதல் பனி பொழிய தொடங்கியது.

மேலும் பனி உருகத் தொடங்கியுள்ளதால், இப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் பேத், புரோம், மிட்சோமர், நார்ட்டன் மற்றும் ரேட்ஸ்டோக் பகுதிகளில் அரையடி உயரத்திற்கும் மேலாக பனி படர்ந்துள்ளது.

இது குறித்து வெள்ள இடர் மேலாளர் கிரேக் உல்ஹவுஸ் கூறுகையில், இந்த ஆண்டில் கோடை காலத்தில் பெருமழை பொழிந்ததால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பனிக்காலத்திலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது பனி உருகி வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார்.














ரத்தத்தில் இருந்து செங்கல் தயாரிப்பு

ரத்தத்தில் இருந்து செங்கல் தயாரிப்பு: சர்ச்சையை கிளப்பியுள்ள நிபுணர்




லண்டனை சேர்ந்த ஜேக் மன்றோ ரத்தத்தில் செங்கல்லை தயாரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான ஜேக் மன்றோ, அனைத்து வகையான செங்கற்களையும் கொண்டு கட்டிடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்.

கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்தி வரும் இவர் தற்போது சர்ச்சைக்குரிய செங்கல்லை தயாரித்துள்ளார்.

26 வயதான ஜேக் மன்றோ விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளார்.

இதனை மணலுடன் கலந்து செங்கல் போன்று தயாரித்து, அவற்றை மின் அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைத்து பதப்படுத்துகிறார். ஒவ்வொரு ரத்த செங்கல் தயாரிப்பதற்கும் அவர் 35 லிட்டர் ரத்தத்தை பயன்படுத்துகிறார்.

இதுபற்றி ஜேக் கூறுகையில், இந்த செங்கல் தண்ணீர் புக முடியாத அளவுக்கு மிகவும் கெட்டியாக உள்ளது. இரும்பு கம்பிக்குப் பதில் இதனை பயன்படுத்த முடியும். மேலும் இந்த செங்கற்களைக் கொண்டு எகிப்தில் முன்மாதிரியான ஒரு கட்டுமானத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருக்கிறேன்.

இருப்பினும் இந்த செங்கற்களை கொண்டு வீடு கட்டினால் அதில் மக்கள் வசிக்க விரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.










ஒடுதளமின்றி ரொக்கெட் போல பறக்கும் அதி நவீன ஆளில்லா விமானம்: ஈரான் அசத்தல்

ஒடுதளமின்றி ரொக்கெட் போல பறக்கும் அதி நவீன ஆளில்லா விமானம்: ஈரான் அசத்தல்





அமெரிக்காவிற்கு போட்டியாக அதி நவீன ஆளில்லா விமானங்களை ஈரான் தயாரித்துள்ளது.
அமெரிக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள இவ்வகை விமானங்களுக்கு ஓடுதளம் தேவை.

ஆனால் ஈரான் தற்போது தயாரித்துள்ள இந்த விமானங்களுக்கு ஓடுதளம் தேவையில்லையாம்.

ரொக்கேட் போல விண்ணில் அதிவேகத்தில் பறந்து எதிரிகளை துள்ளியமாக தாக்கக்கூடியதாம்.

ஈரானின் அப்பாஸ் ஜாம் என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்து இருக்கிறார். இது போன்ற விமானம் உலகில் தயாரிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

ஈரானில் வருகிற ஞாயிற்றுக்கிழமை கடற்படை தளம் திறக்கப்பட உள்ளது. அப்போது இது குறித்த தகவலை அந்நாடு வெளியிடுமென தெரிகிறது.

கடந்த ஒக்ரோபர் மாதம் இஸ்ரேலில் ஜீவில் மாகாணத்தில் அத்து மீறி நுழைந்த ஒரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அது தங்களுடையது என லெபனான் ராணுவம் உரிமை கொண்டாடியது.

ஆனால் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமானத்தின் உதிரிபாகங்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டு லெபனானில் பொருத்தப்பட்டிருப்பதை இஸ்ரேல் ராணுவ மந்திரி அகமது வகிடி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



அமெரிக்காவை நோக்கி மீண்டும் ஒரு புயல்

அமெரிக்காவை நோக்கி மீண்டும் ஒரு புயல்




சமீபத்தில் சான்டி புயல் அமெரிக்காவையே புரட்டி போட்ட நிலையில், தற்போது புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது.
கடந்த வாரம் வீசிய சான்டி புயல், அமெரிக்காவை நிலைகுலைய செய்து விட்டது.

இந்நிலையில் வருகிற வாரத்தின் பிற்பகுதியில் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் மற்றொரு புயல் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் அட்லாண்டிக் மத்திய கடல் மற்றும் புதிய இங்கிலாந்து கடல் பகுதியில் மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

மரங்கள்- மின் கம்பங்கள் சாயலாம், பல அடி உயரத்திற்கு ராட்சத கடல் அலைகள் எழும்பும், கடும் பனிப்பொழிவும் இருக்கும்.

மொத்தத்தில் சான்டிக்கு நிகரான பாதிப்பை விளைவிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி - ஜேர்மன் உலக சாதனை

சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி - ஜேர்மன் உலக சாதனை




சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜேர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜேர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.

இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜேர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.

இந்தாண்டு ஜேர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.

இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)

இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ‌ஜேர்மன் சாதனை படைத்துள்ளது.

Monday, November 5, 2012

ஹலோ, நோ, குட் சொல்லும் யானை : தென் கொரியாவில் ஆச்சரியம்

ஹலோ, நோ, குட் சொல்லும் யானை : தென் கொரியாவில் ஆச்சரியம்




 தென் கொரியாவில் வன விலங்கு பூங்காவில் உள்ள ஆசிய யானை ஒன்று, கொரிய மொழி பேசுகிறது. அதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியப்படுகின்றனர். மனிதர்களை போலவே கிளி பேசும் என்பது தெரியும். ஆனால் கொரிய மொழியில் பேசி, யானை ஒன்று அசத்தி வருகிறது. கசகஸ்தான் நாட்டில் யானை ஒன்று மனிதர்களை போலவே பேசியது குறித்து தகவல்கள் வெளியாயின. அந்த யானை ரஷ்ய மற்றும் கசக் மொழியில் சில வார்த்தைகளை பேசியதாக கூறப்பட்டது.

ஆனால், யானை பேசுவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், தென் கொரியாவின் எவர்லேண்ட் வன விலங்கு உள்ள பூங்காவில் உள்ள கோஷிக் என்ற ஆசிய யானை மனிதர்களை போலவே மிமிக்ரி செய்து வருகிறது. இந்த யானை கொரிய மொழியில் ஹலோ, நோ, சிட் டவுன், குட் போன்ற வார்த்தைகளை உச்சரிக்கிறது. தனது துதிக்கையை வாய்க்கு திணித்து ஒலி எழுப்புவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் ஏஞ்சலா மற்றும் டெக்கம்சே பிட்ச் ஆகியோர் கூறுகையில், யானை குட்டியாக இருந்த போதே இதுபோல் மிமிக்ரி செய்ய பழகி இருக்கும். அத்துடன் யானையை பராமரித்து வந்த பாகனும் அதற்கு மொழி கற்று கொடுத்திருக்க வாய்ப்புண்டு என்கின்றனர். யானை எப்படி மனிதர்களை போலவே பேசுகிறது என்பது குறித்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கொரிய மொழியில் சில வார்த்தைகளை கோஷிக் யானை பேசினாலும், அதன் அர்த்தம் அதற்கு தெரியவில்லை.

33 தடவை விண்வெளிக்கு சென்று வந்த அட்லாண்டிஸ் விண்கலம் ஓய்வு

33 தடவை விண்வெளிக்கு சென்று வந்த அட்லாண்டிஸ் விண்கலம் ஓய்வு




அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் 30 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிஸ் என்ற விண்கலத்தை வடிவமைத்தது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உட்பட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தை கட்டி வருகிறது.

இந்த கூடத்திற்கு அட்லாண்டிஸ் விண்கலம் 12 தடவை சென்று வந்துள்ளதுடன், பூமியை 4,848 தடவை சுற்றி வந்துள்ளது.

மேலும் 20 கோடியே 26 லட்சத்து 73 ஆயிரத்து 974 கிலோ மீற்றர் தூரம் விண்வெளியில் பயணம் மேற்கொண்டுள்ளது.

விண்வெளியில் 305 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்துள்ள அட்லாண்டிஸ், 195 விண்வெளி வீரர்களை சுமந்து சென்றுள்ளது.

இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்த அட்லாண்டிஸ், கடந்தாண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி பணி ஓய்வு பெற்றது. இந்நிலையில் நேற்று தனது இறுதி பயணத்தை முடித்து கொண்டுள்ளது.

தற்போது இந்த விண்கலம் புளோரிடாவில் கேப்கெனவரலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தின் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அட்லாண்டிஸ் விண்கலம் வந்தவுடன் அதன் பணியை போற்றும் வகையில் பட்டாசு முழங்க வாணவேடிக்கையுடன் அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.