Friday, March 8, 2013

வண்டலூருக்கும் வருகிறது 'கோயம்பேடு'.. 65 ஏக்கரில் பிரமாண்ட பஸ் நிலையம்!

வண்டலூருக்கும் வருகிறது 'கோயம்பேடு'.. 65 ஏக்கரில் பிரமாண்ட பஸ் நிலையம்!


தென் மாவட்ட மக்களின் நலனுக்காக தென் சென்னைப் பகுதியிலேயே பிரமாண்டமான ஒரு பஸ் நிலையத்தை உருவாக்க தீர்மானித்துள்ளது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏ. வண்டலூரில் இந்தப் பிரமாண்ட பேருந்து நிலையம் உருவாகவுள்ளது.

சென்னை மாநகரின் ஒரே ஒரு புறநகர்ப் பேருந்து நிலையம் தற்போது கோயம்பேட்டில் இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் அனைத்து வெளியூர்ப் பேருந்துகளும் இயங்கி வருகின்றன.

ஆனால் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கோயம்பேடு வருவதற்கு மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கூட்டநெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ சிந்திக்க ஆரம்பித்துள்ளது.

தினசரி 2000 பஸ்கள் 

தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கும் தினசரி 2000க்கும் மேற்பட்ட பஸ்கள் புறப்பட்டுச் செல்கின்றன, வருகின்றன.


நகரைக் கடந்து செல்ல 2 மணி நேரம் 

கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து தாம்பரத்தைத் தாண்டிச் செல்வதற்குள் இந்த பஸ்களுக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. மாலை நேரங்களில் நகரைக் கடந்து செல்லவே 2 மணிநேரம் ஆகிறதாம்.


வேளச்சேரி - மாதவரம் 

இந்த நெரிசல், பயண நேர விரயம், மக்கள் படும் பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வேளச்சேரி, மாதவரம் ஆகிய இடங்களில் புதிய புறநகர் பஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.


வேளச்சேரியில் 12 ஏக்கர் 

வேளச்சேரியில் 12 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ.48 கோடியும், மாதவரத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் பஸ் நிலையம் அமைக்க ரூ.32 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மோனோ ரயில் திட்டப்பணியால் இந்த இரண்டு பஸ் நிலையங்களும் அமைக்கப்படுவது தாமதமாகி வருகிறது.


வண்டலூரில் வருகிறது பிரமாண்ட பஸ் நிலையம் 

இதையடுத்து கோயம்பேடு பஸ் நிலையத்தைப் போலவே ஒரு பிரமாண்ட பஸ் நிலையத்தை உருவாக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வண்டலூர் பகுதியில், இந்த பிரமாண்ட பஸ் நிலையத்தை உருவாக்கப் போகின்றனர்.


எல்லாமே இனி வண்டலூரில்தான் 

தாம்பரத்திற்கு அடுத்து உள்ள பகுதிதான் வண்டலூர். இங்குதான் இந்தியாவின் மிகப் பழமையான விலங்கியல் பூங்கா உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் கோயம்பேடு செல்லாமல் அதனை இங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வசதியாக வண்டலூரில் ஒரு புதிய பஸ் நிலையம் 65 ஏக்கரில் அமைய உள்ளது.


நிலம் ரெடி 

ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வெளிவட்ட சாலையும், வண்டலூர்- வாலாஜாபாத் சாலை சந்திக்கும் இடத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவிலும் அதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


சகல வசதிகளுடன் பஸ் நிலையம் 

பணிமனை, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் கொண்டதாக வரைவு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. நிலங்களை கையகப்படுத்துவதற்கான திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக சி.எம்.டி.ஏ. வட்டாரம் தெரிவித்துள்ளது.


தாம்பரத்தில் ரயில்கள்- வண்டலூரில் பஸ்கள் 

ஏற்கனவே தாம்பரத்தை ஒரு ரயில்வே முனையமாக மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது. தென் மாவட்ட ரயில்கள் அனைத்தையும் தாம்பரத்திலிருந்து இயக்க ரயி்ல்வே திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தென் மாவட்ட பஸ்களை வண்டலூரிலிருந்து இயக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதால் இது தென் மாவட்ட மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Thursday, March 7, 2013

12 ஆண்டுகளுக்கு முன்பு பெட்டிகளில் புதைத்து வைத்த 10 கிலோ வெடிபொருள் அழிப்பு

12 ஆண்டுகளுக்கு முன்பு பெட்டிகளில் புதைத்து வைத்த 10 கிலோ வெடிபொருள் அழிப்பு



சித்தூர் அருகே வனப்பகுதி சாலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டு, இரு பெட்டிகளில் வைத்திருந்த 10 கிலோ வெடிப்பொருட்களை ஆந்திர போலீசார் அதிரடியாக கைப்பற்றி அழித்தனர்.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்ட போலீசாரிடம் பிடிபட்ட நக்சலைட், மாவோயிஸ்ட்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சித்தூர் மாவட்டம், பீலேர் அடுத்த அப்பிரெட்டிகாரிபள்ளி அருகே வனப்பகுதி சாலையில், வெடிபொருட்கள் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து கடப்பா போலீசார், சித்தூர் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் கலக்கடா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேஜோ மூர்த்தி தலைமையில், சப்&இன்ஸ்பெக்டர்கள் அசோக் குமார், விஸ்வநாத ரெட்டி மற்றும் போலீசார் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் கடந்த 6 நாட்களாக ஏர்ராவாடி பாளையம், தலபலா, அப்பிரெட்டிகாரிபள்ளி, ஏலமந்தா கிராமங்களில் உள்ள சாலைகளில் நவீன கருவிகளுடன் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று காலை அப்பிரெட்டிகாரிபள்ளி கிராமம் அருகே வனப்பகுதியில் உள்ள சாலையில் வெடி பொருட்கள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சாலையை தோண்டி பார்த்தனர்.

அங்கு இரு பெட்டிகள் புதைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.அவற்றை பாதுகாப்பாக அங்கிருந்து எடுத்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அவற்றை திறந்து பார்த்த போது, இரு பெட்டிகளிலும் தலா ஒரு டிட்டர்னெட்டர், தலா 5 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் இருந்தது.வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் ரமணா ரெட்டி, பழனி, சரண்குமார், ஷியாம் பிரசாத் ஆகியோர் வனப்பகுதியில் அவற்றை அழித்தனர்.இதுகுறித்து பிலேர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி கூறுகையில், வெடி பொருட்கள் புதைக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது வைக்கப்பட்டு இருக்கலாம் என்றார்.முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில், அவர் திருமலை செல்லும் வழியில் அலிபிரியில் சாலையோரம் புதைக்கப்பட்ட வெடிகுண்டு மூலம் கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. அதில் அவர் உயிர் தப்பினார். இதைதொடர்ந்து அவரை கொலை செய்ய இப்பகுதியில் வெடி பொருட்கள் சாலையில் புதைக்கப்பட்டதா? அல்லது போலீசார் மற்றும் வனத்துறையினரை கொல்ல வைக்கப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு


 தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாலியால் தமிழகத்தில் மழை நீடிக்கும். ராமநாதபுரம், தூத்துக்குடி, தி.மலை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரி- மாலத்தீவு இடையே மையம் கொண்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்

நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்



ஒப்பந்தப்படி வாடிக்கையாளர்களுக்கு உரிய வாய்ப்புகளை தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாக பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு ஐரோப்பிய யூனியன் 561 மில்லியன் யூரோ(ரூ.4,020 கோடி) அபராதம் விதித்துள்ளது.உலகின் முன்னணி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம். பில்கேட்ஸ் தலைமையிலான இந்நிறுவனம், விண்டோஸ் பெயரில் புதுப்புது சாப்ட்வேர்களை வெளியிட்டு வருகிறது. இந்த சாப்ட்வேர் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிடம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2009ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது.இதன்படி, இன்டர்நெட் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக, விண்டோஸ்&7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில், பல்வேறு பிரவுசர் வாய்ப்புகளை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்பது விதிகளில் ஒன்று. ஆனால், 2011 மே முதல் ஜூலை 2012ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் விற்கப்பட்ட விண்டோஸ்&7ல், மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மட்டுமே தரப்பட்டுள்ளது.அதாவது, இந்த காலத்தில் விண்டோஸ்&7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை வாங்கிய ஒன்றரை கோடி பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதன் மூலம் பல கோடிகளை அந்நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதுதொடர்பான புகாரை ஐரோப்பிய யூனியன் கமிஷன் விசாரணை செய்தது. ஒப்பந்தத்தை மீறி நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,020 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது.இதற்கு முன்பு இரு முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் அபராதம் விதித்துள்ளது.தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத்துடன் சேர்த்து, அந்நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை ரூ.15,840 கோடியாக உயர்ந்துள்ளது.

Wednesday, March 6, 2013

ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி

ஆண்களை விட பெண்களின் மூளைக்கு அதிக சக்தி


பெண் புத்தி பின் புத்தி’ என்று நம்மூரில் சொல்வார்கள்... அதற்கு அர்த்தம், பின்னாளில் வரக் கூடியதையும் சிறப்பாக கணிக்கக் கூடியவர்கள் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும். ஆம். ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும், அதற்கு திறன் அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புலனறியும் தேர்வுகளை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் 18 முதல் 27 வயது கொண்ட 59 பெண்கள் மற்றும் 45 ஆண்கள் பங்கேற்றனர். ஆய்வு முடிவு விவரம்: ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக உள்ளது. ஆனால், ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளைக்கு திறன் அதிகமாக உள்ளது. இதனால்தான் ஆண்களை விட பெண்கள் திறமையானவர்களாக விளங்குகின்றனர்.

தூண்டுதல் பகுத்தறிவு, எண் திறன், நிலைமையை வேகமாக மாற்றி விடக்கூடிய திறன் ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக விளங்கினர். சிக்கலான விஷயங்களிலும் பெண்களின் மூளை, மிக குறைந்த செல்களின் சக்தியை மட்டுமே பயன்படுத்தி தீர்வு காணும் திறன் படைத்துள்ளது. எனினும், புலம்சார்ந்த நுண்ணறிவில் ஆண்கள் சிறப்பாக விளங்கினர்.இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறிவியல் துறை பேராசிரியர் டிரிவோர் ராபின்ஸ் கூறுகையில், ‘‘மூளையின் அளவு என்பது ஒரு பிரச்னை இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ’’ என்றார்.

திருமணத்தில் அழகான மாப்பிள்ளையாக ஜொலிக்க வேண்டுமா?


திருமணத்தில் அழகான மாப்பிள்ளையாக ஜொலிக்க வேண்டுமா?


திருமணம் என்று சொன்னாலே ஒருவித மாற்றம் முகத்தில் தெரியும். குறிப்பாக பெண்களுக்கு நன்கு தெரியும். எனவே பெண்கள் திருமணத்தன்று இன்னும் அழகாக காணப்பட அழகு நிலையங்களுக்கு சென்று, நிறைய பராமரிப்புகளை மேற்கொள்வார்கள். இத்தகைய அழகு பெண்களுக்கு மட்டும் தான் உள்ளது, ஆண்களுக்கு இல்லையா என்ன? ஆகவே திருமணத்தன்று பெண்களை விட அழகாக காணப்படுவதற்கு, ஒருசில பராமரிப்புகள் என்று சொல்வதை விட, செயல்களை தினமும் செய்து வந்தால், நிச்சயம் அழகாக ஜொலிக்க முடியும்.

பொதுவாக அழகு என்று சொன்னால், பெண்கள் சொல்லப்படுவதற்கு காரணம், பெண்கள் அழகிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். எனவே தான், அவர்கள் திருமணத்தன்று மிகவும் அழகாக காணப்படுகின்றனர். ஆனால் ஆண்கள் இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால், சில ஆண்கள் பெண்களை விட அதிக அளவில் முகப்பருக்களால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பருக்கள் திருமணத்தன்று இருந்தால் நன்றாக இருக்குமா? இருக்காது அல்லவா! எனவே திருமணத்தன்று முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு, ஆண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!


ஃபேஸ் வாஷ் 

முகத்திற்கு சோப்பை பயன்படுத்தி கழுவுவதை விட, ஏதேனும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். ஏனெனில் சோப்பானது சருமத்தை அதிக வறட்சியடையச் செய்யும். குறிப்பாக இரவில் படுக்கும் முன், தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவினால், முகத்தில் பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.


எலுமிச்சை ஜூஸ் 

பெரும்பாலும், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், முகத்தில் பருக்கள் வருவதோடு, உடைந்து பரவவும் ஆரம்பிக்கும். எனவே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதில் தேனை சேர்த்து, கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், குடலியக்கப் பிரச்சனை சரியாகிவிடும்.


தண்ணீர் 

தினமும் 4 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் டாக்ஸின்கள் அதிகமாக இருந்தாலும், அவை பருக்களை உண்டாக்கும். எனவே தண்ணீரை குடிப்பதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி விடுவதோடு, உடலும் நன்கு பொலிவோடு காணப்படும்.


ஷேவிங் 

தினமும் ஷேவிங் செய்யாமல் இருந்தால், தாடியின் அளவானது அதிகரிப்பதோடு, முகத்தில் பிம்பிள்களும் வந்துவிடும். எனவே திருமணத்தன்று, முகத்தில் பிம்பிள் வராமல் இருப்பதற்கு, திருமணத்திற்கு ஒருமாதம் முன்பிருந்து, ஷேவிங் செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரிம் செய்யலாம்.


நைட் க்ரீம் 

இரவில் படுக்கும் முன், தினமும் சருமத்திற்கு மாய்ச்சுரைசரை தடவி படுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், சருமம் மென்மையாகும். மேலும் சருமத்தில் வறட்சி இருக்காது. அதுமட்டுமின்றி, இதனை தொடர்ந்து செய்யும் போது, இதன் பலனை எப்போதும் பெறலாம்.


சன் ஸ்கிரீன் லோசன் 

ஆண்கள் அடிக்கடி வெளியே செல்ல வேண்டி இருப்பதால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு, சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் மாறுவதை தடுக்கலாம்.


காபி 

காப்ஃபைன் அதிகம் உள்ள பொருளான காபி மற்றும் இதர பானங்களை குடித்தால், முகத்தில் பருக்கள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகள் வரும். எனவே திருமணத்தன்று நன்கு அழகாக காணப்படுவதற்கு, கொஞ்ச நாட்கள் அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.


பீர் 

ஆல்கஹாலில் ஒன்றான பீர் குடித்தால், சருமம் பொலிவோடு இருக்கும். அதுவும் அளவாக குடித்தால், நன்மைகளை பெறலாம். இல்லையெனில் தொப்பை வந்துவிடுவதோடு, உடலுக்கும் உயிருக்கும் கேடு தான் விளையும்.


வியர்வை 

உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது மிகவும் நல்லது. ஏனெனில் வியர்க்கும் போது, உடலில் இருந்து, டாக்ஸின்கள் வெளியேறிவிடும். எனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக கொண்டால், உடல் அழகாவதோடு, முகமும் நன்கு புத்துணர்ச்சியுடன்


ஃபேஸ் பேக் 

பெண்கள் மட்டும் தான் ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பதில்லை. ஆண்களும் வாரத்திற்கு ஒரு முறை, வீட்டில் உள்ள மஞ்சள், வெள்ளரிக்காய், பால், கடலைமாவு போன்றவற்றை பயன்படுத்தி, ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.



பெற்றோர்களே உஷார்...குழந்தைக்கு வாயுடன் வாய் வைத்து முத்தமிடாதீர்கள்

பெற்றோர்களே உஷார்...குழந்தைக்கு வாயுடன் வாய் வைத்து முத்தமிடாதீர்கள்




அக்குழந்தையின் பெயர் பேபி கெய்டன் மெக்கார்மிக். இக்குழந்தை 2 மாதங்களுக்கு முன்புதான் பிறந்தது. ஆனால் குழந்தையைக் கொஞ்சும் ஆர்வத்தில் அதன் வாயில் முத்தமிட்டுள்ளார் தந்தை கார்ல் மெக்கார்மிக். ஆனால் கார்லின் வாயிலிருந்து நோய்த் தொற்று குழந்தைக்குப் பரவி குழந்தையின் உயிரையே பறித்து விட்டது. இதனால் கார்லும், அவரது மனைவி மேரி கிளேரும் கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

உயிரிழந்த குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்ததாகும். எனவே குழந்தைக்கு மூச்சு விடுவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்கனவே இருந்து வந்தன. இந்த நிலையில்தான் தந்தை முத்தம் கொடுக்கப் போக குழந்தை இறந்து விட்டது.

கார் மெக்கார்மிக்கிடமிருந்து பரவிய ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் என்ற வைரஸ்தான் இந்த மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த வைரஸானது அனைவரிடமும் இருக்குமாம். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது முத்தம் உள்ளிட்டவை மூலம் இது பரவி விடுமாம்.

கடும் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வைரஸ்தான், குழந்தையின் உயிர் பறிபோக காரணமாக அமைந்து விட்டது.

தனது குழந்தையின் மரணத்திற்குத் தானே காரணமாகி விட்டதை நினைத்து வருத்தத்திலும், வேதனையிலும் உள்ளாராம் கார்ல்.

ஸ்கிரீன்ல கிஸ் பண்ணியாச்சா.. கங்கிராட்ஸ்

ஸ்கிரீன்ல கிஸ் பண்ணியாச்சா.. கங்கிராட்ஸ், உங்க கல்யாணம் முடிஞ்சு போச்சு, போய்ட்டு வாங்க!


காலம் கெட்டுப் போச்சு... இது பல்லுப் போன பாட்டி மார்களும், தாத்தாக்களும் ஒரு காலத்தில் நம்மைப் பார்த்து சொன்ன வார்த்தை. ஆனால் இன்று காலம் மாறிப் போய் விட்டது. இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் மூலம் ஒரு கல்யாணத்தையே முடிப்பார்களா... அப்படியாகி விட்டது கதை.. தொடர்ந்து படியுங்கள்.

ஒரு சின்ன லேப்டாப். இந்தப் பக்கம் மணப் பெண். மறுமனையில் ஏதோ ஒரு மூலையில் மாப்பிள்ளை. இருவருக்கும் நடுவே வெப்காம். இதுதான் இருவரையும் ஒருவரை ஒருவர் முகம் பார்க்க உதவுகிறது. இருவரும் ஆன்லைனில் மணம் முடிக்கிறார்கள். கம்ப்யூட்டர் மானிட்டரில் முத்தம் பதித்துக்கொள்கிறார்கள். கல்யாணம் முடிந்தது.

இப்படித்தான் கடந்த வாரம் பூனம் செளத்ரியின் திருமணம் நடந்தது. இன்னும் அந்தத் திருமணத்தின் திரில்லிலிருந்து மீளவில்லையாம் பூனம். உலகின் இரு வேறு மூலைகளிலிருந்தபடி பூனமும், அவரது கணவரும் திருமணம் செய்துள்ளனர்.

பூனம் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியப் பெண். அவரது கணவர் பெயர் தன்வீர் அகமது. இவர் வங்கதேசத்தில் இருக்கிறார். இருவரும் காதலித்னர். திருமணத்தை ஆன்லைனில் நடத்த முடிவானது.

இதையடுத்து ஜாக்சன் ஹைட்ஸ் என்ற இடத்தில் உள்ள மசூதியில் பூனமும் அவரது உறவினர்களும், நண்பர்களும் திரண்டனர். அதேபோல ஷரியா நீதிபதி ஒருவரது முன்னிலையில், தன்வீர் அகமது வங்கதேசத்தில் தயாராக இருந்தார். ஸ்கைப் மூலம் இருவரது திருமணத்தை நடத்தினர். முழுக்க முழுக்க இன்டர்நெட்டை நம்பி இந்தத் திருமணம் நடந்தது. இந்த்த திருமணம் தற்போது சட்டப்படி பதிவும் செய்யப்பட்டு விட்டதாம்.

திருமணத்திற்குப் பின்னர் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தெரிந்த பூனத்தின் வெட்கப் புன்னகை கலந்த முகத்தில் தன்வீர் முத்தமிட்டாராம். இதைப் பார்த்து கூட இருந்தவர்கள் குதூகலித்து சிரித்ததால் பூனத்திற்கு மேலும் வெட்கம் ஏறிப் போய் முகமே சிவந்து விட்டதாம்.

ஆன்லைனில் நடந்த இந்தத் திருமணம் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். ஆனால் பல காலத்திற்கு முன்பே அதாவது பிரான்ஸ் மன்னராக இருந்த 16ம் லூயிக்கும், மேரி ஆன்டான்ய்ட்டுக்கும் இடையேயும் கூட இப்படித்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரியாவில் நடந்தது இந்தத் திருமணம். அப்போது லூயி அங்கு இல்லை. அவர் இல்லாமலேயே திருமண சடங்குளை நடத்தினர். பின்னர் மேரியை பிரான்ஸுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.

தனது திருமணம் குறித்து தன்வீர் கூறுகையில்,எனது லேப்டாப்தான் இப்போதைக்கு எனது மனைவி என்று கூறிச் சிரித்தார்.

நிஜம்தான், இங்கு பலருக்கு கம்ப்யூட்டரும், லேப்டாப்பும்தானே மனைவியாகவும், கணவர்களாகவும் உள்ளனர்...!

வெனிசூலாவின் 'புரட்சித் தலைவர்' சாவேஸ் மரணம்!

வெனிசூலாவின் 'புரட்சித் தலைவர்' சாவேஸ் மரணம்!



வெனிசூலா அதிபர், அந்நாட்டின் இணையற்ற தலைவர் எனப் புகழப்பட்ட ஹியூகோ சாவேஸ் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

வெனிசூலாவின் புரட்சித் தலைவர் என்று புகழப்பட்டவர் சாவேஸ். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகும் நிலைத்து நின்ற கம்யூனிஸ அரசாங்கங்களில் முதலிடம் வெனிசூலாவுக்குதான். காரணம் சாவேஸ்.

இதனால் அந்நாட்டின் புரட்சித் தலைவர் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்களால் புகழப்பட்டார். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பிரமாண்ட வெற்றி பெற்று நான்காவது முறையாக அவர் அதிபரானபோதுதான், உலகம் அவரது மக்கள் செல்வாக்கை உணர்ந்தது.

உலகின் எண்ணெய் வளமிக்க நாடுகளில் முதன்மையானது வெனிசூலா. அமெரிக்காவின் ஆதிக்கம் இங்கு நிலைகொள்ள முடியாமல் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் சாவேஸ்.

ஆனால் இந்த வெற்றியையும் அவர் நினைத்த அரசியல் மாற்றங்களையும் செய்ய முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டார் சாவேஸ். புற்று நோய் தாக்கப்பட்ட சாவேஸ், கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தன. எனவே அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக புதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

சிகிச்சை முடிந்து வெனிசுலா அதிபர் சாவேஸ் 19-ம் தேதி நாடு திரும்பினார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த சாவேசுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஹியூகோ சாவேசுக்கு நேற்று புதிய நோய் தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து அவர் வெனிசுலா நாட்டின் நேரப்படி நேற்று மாலை 4.25 மணிக்கு மரணம் அடைந்ததாக துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்தார்.

சாவேஸின் மரணம் அந்நாட்டு மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்குப் பின் வெனிசூலாவின் அரசியல் நிலைமை என்னாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/06/world-venezuela-s-hugo-chavez-dies-from-cancer-170994.html

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு திடீர் மவுசு : சுவாரஸ்ய சர்வேயில் சூப்பர் தகவல்கள்

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு திடீர் மவுசு : சுவாரஸ்ய சர்வேயில் சூப்பர் தகவல்கள்


காதல் திருமணத்தைவிட நிச்சயிக்கப்படும் திருமணத்தையே இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது லேட்டஸ்ட் சர்வேயில் தெரியவந்துள்ளது. பெண் பார்ப்பது போன்ற சடங்குகள், தடபுடல் கல்யாண விருந்து, ஹனிமூன் குறித்தும் சுவாரஸ்யமாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், நாக்பூர், சூரத், கான்பூர், லூதியானா ஆகிய 10 நகரங்களில் தாஜ் ஓட்டல் குழுமம் சார்பில் சமீபத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இப்சாஸ் என்ற மார்க்கெட் ஆய்வு நிறுவனம் இதை நடத்தியது. திருமணத்துக்கு ஆடை, நகைகள் வாங்க மால்கள், பிரதான பஜார் பகுதிக்கு வந்த 18-35 வயதினர் ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள சர்வே ரிப்போர்ட்டில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 82% பெண்களும், 68% ஆண்களும் (சராசரியாக 75%) நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ஆதரிக்கின்றனர்.

வடஇந்தியாவில் இதற்கு அமோக (82%) ஆதரவு இருக்கிறது.திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்பார்கள். அது பார்க், பீச், தியேட்டரில் காதல் ஏற்பட்டு தீர்மானிக்கப்படுவதைவிட வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் நாலு சுவற்றுக்குள் முடிவாக வேண்டும். பெண் பார்க்கும் சடங்கு அவசியம் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. அதே நேரம், ‘மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?’ என்று பெண்ணிடம்தான் முதலில் கேட்க வேண்டும் என்று தென்மாநிலங்களில் 21% பேர் கூறியுள்ளனர். ஆண்களின் கருத்தை முதலில் கேட்க வேண்டும் என்று நாடு முழுவதும் 10% பேர் கூறினர். வெட்டி பந்தா இல்லாமல் பெண், மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்று நேருக்கு நேர் சொல்லிவிட வேண்டும் என 33% பேர் கூறினர். சம்மதத்தை முதலில் பெண்ணிடம் கேட்க வேண்டும் என்று 13% ஆண்களும், 8% பெண்களும் கூறினர்.

பெண் பார்க்கும் சம்பிரதாயத்துக்கு பிறகு, நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகபட்ச வரவேற்பு இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ‘சங்கீத்’ (வடஇந்தியாவில் திருமணத்துக்கு முந்தைய நாள் நடக்கும் மருதாணி மற்றும் இசை நிகழ்ச்சி). இதற்கு 81% ஆதரவும், இதர சம்பிரதாய சடங்குகளுக்கு 71% ஆதரவும் அளிக்கிறார்கள் இளைஞர்கள்.

பிரெண்ட்சுக்கு ‘தண்ணி பார்ட்டி’ என்றால் ரிசார்ட்டில் நடத்தலாம் என 34% பேர், டீலக்ஸ் ஓட்டலில் என 30% பேர், ஒதுக்குப்புறமான பண்ணை வீட்டில் என 13% பேரும் கூறுகின்றனர்.

கல்யாண சடங்குகளில் ஒன்றாக மேக்கப்பை குறிப்பிடுகின்றனர் 47% பேர். அதிலும் தென்மாநிலங்களில் இதற்கு அமோக ஆதரவு இருக்கிறது. 46% ஆதரவுடன் ஃபேஷியல் முதலிடத்தில் இருக்கிறது. ஸ்பா, மூலிகை சிகிச்சை 23% ஆதரவு பெற்றுள்ளன. திருமண ஜவுளி அசத்தலாக இருக்க வேண்டும் என்று 73% பேர், திருமண விழா தூள் கிளப்ப வேண்டும் என்று 65% பேர், விருந்து அமர்க்களமாக இருக்க வேண்டும் என்று 48% பேர் கூறினர்.

தென்இந்திய சமையல் மற்றும் சைனீஸ் விருந்துக்கு 56% ஓட்டு, வடஇந்திய உணவுக்கு 44% ஓட்டு கிடைத்துள்ளது. சராசரியாக 5 முதல் 15 ஐட்டங்கள் உணவில் இடம்பெற வேண்டும் என்கின்றனர் பலர். 100 முதல் 250 பேரைத்தான் திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்பதில் வடக்கு, மேற்கு மாநில மக்கள் உறுதியாக இருக்க.. ‘1000 பேர் வந்தாத்தான் கல்யாணம் களைகட்டும்’ என்று அசால்ட்டாக சொல்கிறார்கள் தென்மாநில மக்கள்.

அடுத்து ஹனிமூன். கல்யாணம் முடிந்த சூட்டோடு ஒரு வாரத்துக்குள் ஹனிமூன் போக வேண்டும் என்கின்றனர் 80 சதவீதத்தினர். கோவா, ஊட்டி, ஸ்ரீநகர் என டாப்3 இடங்களை பட்டியலிட்டுள்ளனர். பாரின் தேனிலவு என்றால் ஐரோப்பிய நாடுகளை 46% பேரும், அமெரிக்காவை 36% பேரும் குறிப்பிட்டுள்ளனர். பைவ் ஸ்டார் அல்லது செவன் ஸ்டார் ஓட்டலில் தேனிலவு கொண்டாடுவது சூப்பர் என 25% பேர் கூறினர்.

அரிய வகை பச்சை நிற மரகத புறா மீட்பு

அரிய வகை பச்சை நிற மரகத புறா மீட்பு






களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் மான், மிளா போன்ற விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவதும், அவற்றை வனத் துறையினர் மீட்டு வருவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதுபோல வனப்பகுதியில் இருந்து பறந்து வந்த அரியவகை இனமான பச்சை மரகத புறா ஒன்று களக்காடு, ஐந்துகிராமம் பகுதியில் வட்டமிட்டு வந்தது. இதை நோட்டமிட்ட வில்லேந்திரன் என்ற பறவை, மரகத புறாவை தாக்கியது. இதையடுத்து அந்த புறா, அங்குள்ள டேவிட் என்பவரது வீட்டு தோட்டத்தில் விழுந்து, காயங்களுடன் பறக்க முடியாமல் தவித்தது.

இதைக்கண்ட டேவிட், மரகத புறாவை மீட்டு, களக்காடு புலிகள் காப்பக ரேஞ்சர் மணிமாறனிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் அரிய வகை புறாவிற்கு சிகிச்சை அளித்து, அதனை தலையணை வனப்பகுதிக்கு கொண்டு சென்று பறக்கவிட்டனர். இதுகுறித்து ரேஞ்சர் மணிமாறன் கூறுகையில், ‘மரகத புறா அரிய வகை இனம். மிக வேகமாக அழிந்து வரும் இனமாகும். எனவே அரசு இதனை பாதுகாக்க மாநில புறாவாக அறிவித்துள்ளது. இந்த வகை புறாக்கள் மிகவும் அடர்ந்த, குளுமையான பகுதிகளில் மட்டுமே வசிக்கும். இரை தேடி வந்தபோது ஊருக்குள் வந்திருக்கலாம்’ என்றார். அரிய வகை புறாவை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

ஜேர்மனின் புதிய விமான நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல் திணறல்

ஜேர்மனின் புதிய விமான நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல் திணறல்


பல கோடி ரூபாய் செலவில் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.

பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க அதி நவீன வசதிகளுடன் "பெர்" என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டில் இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் எதிர்வரும் 2017ம் ஆண்டில் தான் இவ்விமான நிலையம் தயாராகும்.

இதற்கிடையில் இவ்விமான நிலையத்தை உருவாக்க முதலில் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

தாமதத்தின் காரணமாக செலவு இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது.

இந்நிலையில் இந்த விளக்குகளை அணைக்க முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறவில்லை என விமான நிலைய கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும் விமான நிலையத்தின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என சொல்வது "கேலிக்குரியது" என ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளனர்.





ஆண்டிற்கு 10 கோடி சுறாக்கள் வேட்டை: கனடிய ஆய்வு

ஆண்டிற்கு 10 கோடி சுறாக்கள் வேட்டை: கனடிய ஆய்வு



ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி சுறா மீன்கள் வேட்டையாடப்படுவதாக கனடிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கனடாவில் உள்ள டல் ஹவுசி பல்கலைக்கழக பேராசிரியர் போரிஸ் வார்ம் மற்றும் புளோரிடா பல்கலைக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ஹீதாஸ் ஆகியோர் சுறா மீன்கள் வேட்டையாடப்படுவது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது: சுறா மீன்கள் கடந்த 40 கோடி ஆண்டுகளாக கடலில் வாழ்கின்றன. இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது.

இவற்றின் துடுப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. கடந்த 2000ம் ஆண்டில் 10 கோடி சுறா மீன்கள் கொல்லப்பட்டன. கடந்த 2010ம் ஆண்டில் கொல்லப்பட்ட சுறா மீன்களின் எண்ணிக்கை ஒன்பது கோடி.

இவை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் கடல் தாவரங்கள் குறைந்து விடும். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



வடக்கு, கிழக்கில் விவசாய நடவடிக்கைகளுக்காக இந்தியர்களுக்கு வீசா

வடக்கு, கிழக்கில் விவசாய நடவடிக்கைகளுக்காக இந்தியர்களுக்கு வீசா


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியர்களுக்கு வீசா வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

எனினும் விவசாய துறை அமைச்சு இது தொடர்பில் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே இந்த வீசாக்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயத்தில் ஈடுபட போதுமான ஆளனி வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதனைத் தொடர்ந்தே அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த திட்டத்தை அறிவித்தார்.

இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் காணப்பட்ட போதும், தற்போது வரவேற்கப்படுகிறது.

ஏற்கனவே குறித்த பிரதேசங்களில் பயணிகள் வீசாவுடன் வந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்தியர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Monday, March 4, 2013

ஒயிட்னர் மோந்து பார்த்தால் மணிக்கணக்கில் போதை தற்கொலையை தூண்டும் பயங்கரம்

எழுத்தை மட்டுமல்ல.. இளைஞர்களையும் அழிக்கும்
ஒயிட்னர் மோந்து பார்த்தால் மணிக்கணக்கில் போதை தற்கொலையை தூண்டும் பயங்கரம்


ஒயிட்னர் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், தற்கொலை செய்து கொள் ளும் நிலைக்கு ஆளாவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தவறான நட்பு, பழக்கம் காரணமாக இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாக¤ன்றனர். ஆல்கஹால், புகையிலை, கஞ்சா, ஹெராயின், கொகைன், காட்டசி, பிரவுன் சுகர், மார்பின் உள்ளிட்ட போதை பொருட்களை தொடர்ந்து தற்போது ஒயிட்னரை போதைக்காக பலர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

பொதுவாக காகிதங்களில் அச்சிடப்பட்ட எழுத்து, மையினால் எழுதியதில் ஏற்பட்ட தவறை திருத்துவதற்காக வெள்ளை நிற திரவமான ஒயிட்னர் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள், மாணவர்கள் இதை ஸ்டேஷனரி கடைகளில் வாங்கி போதைக்காக உபயோகிக்கிறார்கள். ஒயிட்னரை கைக்குட்டைகளில் தேய்தும், இன்ஹேலர்களில் வைத்து ரகசியமாக பயன்படுத்தி வருகிறார்கள், இதை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஒயிட்னரை நுகர்ந்து பார்ப்பதால் 4 முதல் 10 மணி நேரம் வரை போதை ஏற்படுவதாக கூறுகிறார்கள். 15 மி.லி.கொண்ட ஒயிட்னர் திரவம் ரூ. 25 முதல் 30 வரை கிடைக்கிறது. பெரும்பாலும் நடுத்தர, குடிசை பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், காகிதம், குப்பை பொறுக்கும் இளைஞர்கள் இது போன்ற உயிர்கொல்லி போதைக்கு அடிமையாகி வருகிறார்கள்.

ஒயிட்னர் சாதாரணமாக ஆல்கஹாலைவிட 300 சதவீதம் அதிக தீங்கு ஏற்படுத்தக்கூடியது. நரம்பு மண்டலம், நுரை யீரல், மூளை, கிட்னிக்கு நேரடிபாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஒயிட்னரில் மீதேல் பென்சைன், ஹைட்ரோகார்பன், ஆல்கஹால் அடங்கியுள்ளதால் உடனடியாக போதையை ஏற்படுத்துகிறது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு இளைஞர்கள் மாணவர்களிடையே இது போன்ற போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முருகேசன் (13) என்ற 8 ம் வகுப்பு படித்த மாணவன் ஒயிட்னர் போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டான். போதை பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்கள், இளைஞர்கள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, தவறான செய்கைகள் உள்ளிட்ட சம்பங்களில் ஈடுபட்டு சமூகத்தில் குற்றவாளியாக மாறிவிடுகிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது.

இது போன்ற போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, சரியான வழிகாட்டுதல், மனநல ஆலோசகர்களின் மூலம் அறிவுரை வழங்குவதன் மூலம் எதிர்கால சமுதாயத்தை சிறந்ததாக உருவாக்க முடியும். இதை சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் செய்ய முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!


டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!


உணவில் போதிய கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமான உணவை கண்ட நேரத்தில் சாப்பிட்டு, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அதுமட்டுமின்றி, உடல் பருமனை தவிர, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. ஆகவே இத்தகைய பிரச்சனைக்கு பெரும் காரணம் உணவுகளே. அத்தகைய உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு தான், தற்போது பெரும்பாலானோர் டயட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் உணவு உண்பது தவறில்லை. அதற்கேற்றாற் போல் நன்கு ஓடியாடி வேலை செய்ய வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம். அதனால் உடலில் கொழுப்புக்கள் சேர்ந்து, உடல் பருமனை அதிகரித்துவிடுகிறது. சிலர் உடல் பருமனைக் குறைப்பதற்கு டயட் மேற்கொள்கிறோம் என்று சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை. அவ்வாறு சாப்பிடாததால், உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், அதுவே மிகப் பெரிய பிரச்சனையாகிவிடுகிறது.

மேலும் டயட் மேற்கொள்ளும் போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்ணும் உணவுகளில் மாற்றம் இருக்கும். உணவுகளை அனைவரும் சாப்பிடலாம் தான். ஆனால் டயட்டில் இருக்கும் போது உணவின் அளவு குறைவாக இருப்பதால், அந்த குறைவான உணவில் பாலினத்திற்கு தகுந்தவாறான உணவைத் தேர்ந்தெடுத்து உண்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். இப்போது டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!



தக்காளி 

தக்காளியில் ஆண்களுக்கான சத்துக்கள் அதிகம் உள்ளன. அதிலும் இதில் உள்ள லைகோபைன், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, பெங்குடல் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் ஆய்வுகள் பலவற்றிலும் லைகோபைன் அதிகம் உள்ள உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று சொல்கிறது.


பிரேசில் நட்ஸ் 

ஸ்நாக்ஸாக சாப்பிடும் உணவுகளில் நட்ஸ் ஒன்று. அத்தகைய நட்ஸ் இதயத்திற்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. குறிப்பாக நட்ஸில் பிரேசில் நட்ஸ் ஆண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அதில் உள்ள செலினியம், ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் வைக்கும்.


பச்சை இலைக் காய்கறிகள் 

முட்டைகோஸ், ப்ராக்கோலி மற்றும் புருசெல்ஸ் போன்ற காய்கறிகளை ஆண்கள் டயட்டில் நிச்சயம் சேர்க்க வேண்டும். இந்த காய்கறிகளில் ஆண்களுக்கு ஏற்படும் பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கெமிக்கல் அதிகம் இருக்கிறது. எனவே இதனை குறைந்த அளவு உணவில் சேர்க்க வேண்டும்.


முட்டை 

முட்டையில் புரோட்டீன் மற்றும் பயோடின் அதாவது வைட்டமின் பி7 அதிகம் இருப்பதால், இதனை ஆண்கள் சாப்பிட, கூந்தல் உதிர்தலை தடுப்பதோடு, வழுக்கை ஏற்படுவதையும் தடுக்கும்.


ப்ளூபெர்ரி 

ப்ளூபெர்ரி புரோஸ்டேட் புற்றுநோயை தடுப்பதில் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும் ஆய்வுகளிலும் ப்ளூபெர்ரி பழத்தை அதிகம் சாப்பிட்டால், இதய நோய், வயதாவதால் ஏற்படும் ஞாபக மறதி மற்றும் டைப்-2 நீரிழிவு போன்றவற்றைத் தடுக்கலாம். அதிலும் இந்த பழம் பெண்களை விட ஆண்களுக்கு தான் நல்ல பலனை காண்பிக்கும்.


மாதுளை 

ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக உள்ள மாதுளையை தினமும் டயட்டில் ஆண்கள் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன.


பூண்டு 

இதய ஆரோக்கியத்திற்கு பூண்டு மிகவும் சிறந்த உணவுப் பொருள். பெரும்பாலும் இதய நோய்க்கு ஆண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை தினமும் சாப்பிட்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கரைவதோடு, இதய குழாய்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்படும். ஆகவே இன்றிலிருந்து பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.


சால்மன் 

மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், பொதுவாக உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்வதில் சிறந்தது. குறிப்பாக ஆண்களுக்கு மிகவும் சிறந்தது. எனவே மீன்களில் சால்மன் மீனை உணவில் அதிகம் சேர்த்து, உடலை ஆரோக்கியமாக நோயின்றி வைத்துக் கொள்ளுங்கள்.


தானியங்கள் 

வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்களின் இருப்பிடம் என்றால் அது தானியங்கள் தான். இந்த உணவுகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே மிகவும் சிறப்பானது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் பி ஆண்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். அதாவது ஸ்பெர்ம்களை ஆரோக்கியமாக வைப்பது, கூந்தல் உதிர்தலை தடுப்பது போன்றவை.



ஐபொட் மூலம் தந்தைக்கு ரூ.1½ லட்சம் செலவு வைத்த 5 வயது சிறுவன்

ஐபொட் மூலம் தந்தைக்கு ரூ.1½ லட்சம் செலவு வைத்த 5 வயது சிறுவன்


பிரிட்டன் நாட்டில்  வசிக்கும் ஒரு தம்பதியின் 5 வயது நிரம்பிய டானி என்ற பெயருடைய மகன் பத்தே நிமிடத்தில் ரூ.1½ லட்சத்துக்கு தந்தைக்கு வேட்டு வைத்து விட்டான்.

எப்படியென்றால் வீட்டிலிருந்த ஐபொட் பாஸ்வேர்டு என்ன? என்று பெற்றோரிடம் கேட்டுள்ளான். பெற்றோரும் விவரத்தை கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.

அதன்பிறகு சிறுவன் விவரம் தெரியாமல் ஆன்லைன் வர்த்தக மையத்தில் புகுந்து விலை உயர்ந்த பல காணொலி(vedio) விளையாட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறான். இதனுடைய மதிப்பு 1,710 பவுண்ட்(சுமார் ரூ.1½ லட்சம்) என்று கூறுப்படுகிறது. அவனுடைய இந்த விளையாட்டு, தந்தையின் பொக்கெட் பணத்திற்கு வேட்டு வைத்து விட்டது.



உலகின் மாபெரும் ரயில் கொள்ளையன் 81 வயதில் மரணம்!

உலகின் மாபெரும் ரயில் கொள்ளையன் 81 வயதில் மரணம்!



உலகின் மாபெரும் ரயில் கொள்ளையன் என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் ப்ரூஸ் ரெனால்ட்ஸ் தனது 81வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக தனது தந்தை இறந்ததாக ப்ரூஸின் மகன் நிக் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார். 1963ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒரு ரயில் கொள்ளைச் சம்பவம் அப்போது

உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. கிளாஸ்கோவிலிருந்து லண்டன் சென்ற லண்டன் மெயில் ரயிலில் நடந்த பரபரப்பான கொள்ளை அது. அப்போது அந்த ரயிலில் புகுந்த கொள்ளைக் கும்பல் அதிலிருந்து 20 லட்சம் பவுண்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு துணிகரமாக தப்பியது. அந்தப் பணத்தின் மதிப்பு இப்போது 4 கோடி பவுண்டுகளாகும்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தே ஆடிப் போனது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டு நடத்திய கொள்ளைக் கும்பலின் தலைவர்தான் ப்ரூஸ்.

கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னர் 5 வருடம் தலைமறைவாக இருந்தார் ப்ரூஸ். 1968ம் ஆண்டுதான் அவர் சிக்கினார். பின்னர் அவருக்கு 25 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் பத்து வருடத்தில் விடுவிக்கப்பட்டார். பிறகு எழுத்தாளராக மாறி பத்திரிகைகளில் எழுதினார். சுயசரிதை எழுதினார். இப்போது மரணமடைந்துள்ளார்.

புத்தம் புதுப் பொலிவில் பேஸ்புக்கின் நியூஸ் பீட்

புத்தம் புதுப் பொலிவில் பேஸ்புக்கின் நியூஸ் பீட்




பேஸ்புக் முகம் மாறுகிறது.. அதாவது அதாவது அதன் நியூஸ்பீட் புதுப் பொலிவு பெறுகிறது. இந்த வாரம் புதிய பொலிவுடன் கூடிய நியூஸ் பீடை அறிமுகப்படுத்துகிறது பேஸ்புக். கிட்டத்தட்ட 1 கோடிப் பேரை உறுப்பினர்களாகக் கொண்ட பேஸ்புக், தனது நியூஸ் பீடில் பல புதிய விஷயங்களைச் சேர்த்து மேலும் கவர்ச்சிகரமாக்கியுள்ளது.

மார்ச் 7ம் தேதி பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைப் பீடமான கலிபோர்னியாவில், மென்லோ பார்க்கில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கடந்த ஜனவரி மாதம்தான் தனது சர்ச் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் இப்போது நியூஸ் பீடை அறிமுகப்படுத்துகிறது. இதுதான் பேஸ்புக்கின் இந்த ஆண்டின் 2வது பெரிய நிகழ்ச்சியாகும்.

நியூஸ்பீட் குறித்து பேஸ்புக்கின் அதிபரான மார்க் ஸுகர்பெர்க் கூறுகையில், பேஸ்புக்கைப் பொறுத்தவரை சர்ச், யூசர் புரபைல் ஆகியவற்றுக்கு அடுத்து முக்கியமானது இந்த நியூஸ் பீட்தான். எனவே இதை மூன்றாவது முக்கியத் தூண் என்று கூட சொல்லலாம் என்றார் அவர்.

அடுத்து மொபைல் போனில் பேஸ்புக்கை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த நிறுவனம் இறங்கப் போகிறதாம். தற்போது மொபைல் பேஸ்புக்கில் சில அம்சங்கள் சரியாக செயல்படுவதில்லை என்ற குறை உள்ளது. அதை அடுத்து சரி செய்யப் போகிறது பேஸ்புக்.

உலகிலேயே அதிகஅளவில் ஷேர்கள் செய்யப்படுவது பேஸ்புக்கில்தான் என்பது நினைவிருக்கலாம்

பணத்துக்கும் எருமைக்கும் மணப் பெண்கள் விற்பனை

ம.பி.யில் பரிதாபம் : பணத்துக்கும் எருமைக்கும் மணப் பெண்கள் விற்பனை



மத்திய பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் குறிப்பாக அசோக்நகர், குனா போன்ற மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை காரணமாக மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இதனால், ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. இதற்காக, இடைத்தரகர்களை மணமகன் வீட்டார் நாடுகின்றனர்.

அந்த இடைத்தரகர்களுக்கு ஆள் கடத்தும் கும்பல்களுடன் தொடர்பு உள்ளது. பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து மணமகளை விற்பனை செய்கின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 14 முதல் 16வயது வரையான 3 பேரை கடத்தி மத்திய பிரதேசத்தில் ரூ35 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை விற்றுள்ளனர். ரூ50 ஆயிரத்துக்கு விற்பனை செய்த பெண்ணுக்கு தரகர்கள் நிர்ணயித்த தொகை ரூ75 ஆயிரம்.

அந்த அளவுக்கு மணமகனிடம் பணம் இல்லாததால் ரூ25 ஆயிரத்துக்கு பதிலாக எருமையை பெற்றுக் கொண்டு பெண்ணை விற்றுள்ளனர். புகாரின் பேரில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் யோகேஷ் பர்டி தலைமையிலான போலீசார் ம.பி. சென்று அந்த பெண்களை மீட்டபோது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. யோகேஷ் பர்டி கூறுகையில், ‘வறுமை, போதுமான விழிப்புணர்ச்சி இல்லாமை காரணமாக பாதிக்கப்படும் பெண்களும் அவர்களது குடும்பத்தாரும் போலீசில் புகார்கள் அளிப்பதில்லை. விற்பனை செய்யப்படும் பெண்களை வாங்கும் மணமகன் அந்த பெண்ணை மனைவியாக்கி கொள்வதால் அந்த பெண்கள் புகார் தர தயங்குகின்றனர். இதனால், இந்த குற்றங்களை தடுப்பது கடினமாக உள்ளது’ என்றார்.

திரிஷா, ஹன்சிகா உட்பட 8 பேருக்கு சாதனையாளர் விருது

சென்னை விழாவில் வழங்கப்பட்டது திரிஷா, ஹன்சிகா உட்பட 8 பேருக்கு சாதனையாளர் விருது



ஜெ.எப்.டபிள்யூ மாதாந்திர இதழ் சார்பில் 5ம் ஆண்டு பெண் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் நடந்தது. விழாவில் 8 பேருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. விஞ்ஞானி டெசி தாமசுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப விருதும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பாலிகலுக்கு நியூஸ் மேக்கர் ஆப் 2012 விருதும் வழங்கப்பட்டது.

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி (வாழ்நாள் சாதனையாளர்), நடிகைகள் ஹன்சிகா (உணர்ச்சிபூர்வமான நடிப்பு), த்ரிஷா (பொழுதுபோக்கு), பின்னணி பாடகி சுஜாதா (இசை), டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (விளையாட்டு), அலமேலு வள்ளி (நடனம்) ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

விருதுகளை பின்னணி பாடகி பி.சுசீலா, நடிகர்கள் தனுஷ், மாதவன், ஜீவா, நடிகை குஷ்பு, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடகர் விஜய் யேசுதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், டைரக்டர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், கேமராமேன் ரவி கே.சந்திரன் ஆகியோர் வழங்கினர். நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், ஆண்ட்ரியா, பாடகி ஸ்வேதா மேனன், ஜெ.எப்.டபிள்யூ மாதாந்திர இதழ் எடிட்டர் பீனா உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

எரிவாயு குழாய் பதிப்பு விவகாரம் ஒரு பிடி மண்ணைகூட விட்டு தரமாட்டோம்

எரிவாயு குழாய் பதிப்பு விவகாரம் ஒரு பிடி மண்ணைகூட விட்டு தரமாட்டோம்


கொச்சி , பெங்களூர் காஸ் பைப் லைன் அமைக்கும் பணியை தொடங்கிய மத்திய அரசின் கெயில் நிறுவனத்துக்கு எதிராக விவசாய நிலங்களை பாதுகாக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பெண் விவசாயிகளும் ஆவேசமாக போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
கெயில் நிறுவனம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 7 மாவட்டங்களில் சுமார் 310 கிமீ தூரத்துக்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கடந்த பிப்ரவரி 9ம் தேதி தொடங்கியது. விளைநிலங்களில் புல்டோசர் மூலம் பயிர்கள் வேருடன் அழித்து அப்புறப்படுத்தப்பட்டன. ஆண்டாண்டு காலமாக இருந்த தென்னை மரங்கள் வேருடன் பிடுங்கி எரியப்பட்டது. பெற்ற குழந்தைகளைப்போல வளர்த்த பயிர்கள் அழிவதை கண்டு மனம் பொறுக்காத விவசாயிகள் கதறினர். சாமான்ய மக்களால் அரசு எந்திரத்தை தடுக்க முடியவில்லை. ஒரு சில விவசாயிகள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, ஈரோடு மாவட்டம் சிறுகளஞ்சி பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிக்கு 27ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது.

தமிழக அரசும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தது. வரும் 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் கருத்து கேட்கப்படுகிறது. காஸ் குழாயை விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்வதை தவிர்த்து மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதுகுறித்து தற்சார்பு விவசாய சங்கத்தின் பொறுப்பாளர் பொன்னையன் கூறியதாவது:

எரிவாயுக்குழாய் விளைநிலத்தில் பதிப் பால் கடும் விளைவுகள் ஏற்படும். முதலாவதாக பிஎம்பி சட்டம் 1962 திருத்த விதி 2012 படி விவசாயிகளை விசாரணையின்றி 10 ஆண்டுகள் சிறைவைக்கும் அடக்குமுறையாகவே இதை விவசாயிகள் கருதுகின்றனர். அப்பாவி விவசாயிகளுக்கு இந்த கொடூர சட்டம் பற்றி விளக்கிக் கூறப்படவோ அதன் மீது அவர்கள் சம்மதம் பெறப்படவோ இல்லை. இது பற்றி அரசு அதிகாரிகளிடம் கேட்டால், சட்டம் இருப்பது உண்மை, ஆனால் வழக்குப் போடமாட்டோம்‘ என பதில் கூறுகின்றனர். வழக்கு போடுவதில்லை என்றால் சட்டத்தை திரும்பப்பெற வேண்டியதுதானே என்பதுதான் எங்கள் வாதம். விளைநிலங்களில் 5 அடி அகலத்திற்கு தான் குழாய் போடுகிறோம், எவ்வித பாதிப்பும் இல்லை என்கிறார்கள். இது ஏமாற்றும் வேலை. ஒரு முழு நிலத்தில் நடுவில் 60 அடி அகலம் கையகப்படுத்துகின்றனர். இந்தப் பகுதிக்குள் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகள், நீர்ப்பாசன அமைப்புகள், சொட்டுநீர் பாசன அமைப்புகள் அழிக்கப்படுகின்றன.

கெயில் நிறுவனம் இதை மறைத்து பொய் கூறுகிறது. நிலப் பயன்பாட்டு உரிமை சட்டத்தின் கீழ் எடுக்கின்றோம் என்கிறார்கள். இதன் பொருள் என்ன? நில உரிமை விவசாயியிடம் இருக்கும். ஆனால் நிலத்தின் பயன்பாட்டு உரிமை கெயில் நிறுவனத்திடம் இருக்கும். இது அப்பட்டமான மோசடி. மாற்றுவழிகள் இருந்தும் அதை செய்யாமல் பெருநிறுவனங்கள் எங்கள் நிலங்களை பறிக்கும் செயல் சந்தேகப்பட வைக்கிறது. இவ்வாறு பொன்னையன் கூறினார். விவசாயி சுதா: நாங்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு சொல்லவில்லை. இத்திட்டத்தை மாற்று பாதையில் கொண்டு செல்லுங்கள், விவசாய பூமிக்குள் வேண்டாம் என்று தான் செல்லுகிறோம். இதே திட்டம் கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக தான் கொண்டு செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் விவசாய பூமியில் கொண்டு செல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. எந்த விதமான நோட்டீசும் கொடுக்காமல் எங்கள் பூமிக்குள் ஏன் வருகிறார்கள்? போலீசை வைத்து எங்களை மிரட்டி அவசர அவசரமாக வேலை செய்கிறார்கள். இதை எதிர்த்து ஏற்கனவே நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இதில் கோர்ட் பிறப்பித்த உத்தரவை கெயில் நிறுவனம் பொருட்படுத்தவில்லை. விவசாய பூமியில்தான் குழாய் பதிப்போம் என பிடிவாதம் பிடித்தால் நாங்கள் அத்தனை பேரும் அவர்கள் வெட்டிய குழியில் பிணமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும். இப்போது எங்கேயோ இருந்து வந்த கெயில் நிறுவனம் அரசாங்கத்திற்கு முக்கியமாகி விட்டது, இங்கேயே வாழ்கின்ற நாங்கள் முக்கியமில்லையா? எங்களுக்கு பணமோ, காசோலையோ தேவையில்லை. நாங்கள் பிறந்து வளர்ந்த பூமியே எங்களுக்கு போதும். சிறு பிடி மண்ணும் விட்டுக் கொடுக்கமாட்டோம். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம். இதுவே விவசாயிகளான எங்கள் இறுதி முடிவு. ஆக்ரோஷமாக கூறினார் சுதா. விவசாயி வசந்தாமணி: ஆலாம்பாளையத்தில் எனக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அந்த விளைநிலத்தை நம்பித்தான் இவர்களைப் படிக்க வைத்துள்ளேன். இதற்கிடையே என் விளைநிலத்தில் காஸ் பைப் லைன் பதிக்கும் பணியை 500 போலீசாருடன் வந்து தொடங்கினார்கள். இதை தடுக்க முயன்றபோது எனது தலைமுடியை பிடித்து முட்புதரில் தள்ளினர். ‘நாங்கள் வாழ்வதற்காக எங்கள் நிலத்தை விட்டுவிடுங்கள், இல்லையென்றால் என்னையும் குடும்பத்தாரையும் இந்த மண்ணிலேயே புதைத்து விடுங்கள்‘ என்று சொன்னேன். அதை கண்டுகொள்ளாமல் என்னை மறுபடியும்  போலீசார் கீழே தள்ளி