Friday, November 2, 2012

முல்லைத்தீவில் வெள்ளத்தோடு பாய்ந்த ஆயிரக்கணக்கான மீன்கள்

முல்லைத்தீவில் மழைவெள்ளத்தோடு வீதியின் குறுக்கே பாய்ந்த ஆயிரக்கணக்கான மீன்கள் - வீடியோ இணைப்பு




முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த அடைமழையின் போது இரட்டை வாய்க்கால் பகுதியிலுள்ள மதகு ஒன்றின் ஊடாக திடீரென பெருமளவான மீன்கள் வீதியின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தோடு அடிபட்டு வந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது
கெளிறு வகையைச் சேர்ந்த சிறிய பெரிய மீன்களே இவ்வாறு திடீரென்று வெள்ளத்தினை எதிர்த்து வீதியினைக் கடக்க முயற்சி செய்தன.

எண்ணிக்கையற்று வந்த மீன்களைக் கண்ட சிங்கள சுற்றுலாப் பயணிகளும் இராணுவத்தினரும் அவற்றை அள்ளிக் கொண்டு சென்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும் அம்மீன்களை பிடித்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!