Friday, March 22, 2013

New Research Report about Sexual Life

New Research Report about Sexual Life




No sex, please, it's Tuesday: Beginning of week is least sexy day... and when we DO get frisky we want 23 minutes of it, on Saturday, before 11pm, and with lights ON

Only 4% of couples have sex on Tuesday, 37% on Saturday
Ideal amount is once a week for 23 minutes... and before 11pm
'I have a headache' excuse only used by 1% of people
Ideal position is woman on top

WHICH DAY IS SEXIEST?
Saturday - 37%
Friday - 23%
Sunday - 16%
Monday - 8%
Wednesday - 7%
Thursday - 6%
Tuesday - 4%


66% Women 88% men would rather have sex with the lights on - the main reason being they like to see their partner's face and body, according to research into sex rituals by Lovehoney, Britain's largest sex toy retailer.

But while most of us enjoy a bit of light in our love lives, a third of women would rather remain in the dark because they are self-conscious about their bodies (36 per cent), while 19 per cent feel it is a more intimate experience. An adventurous 19 per cent admit they are less inhibited when the lights go out.

(Furthermore, the ideal amount of sex we'd like to be having is just once a week, before 11pm and for 23 minutes, according to online pharmacy ukmedix.com who also learned that the ideal position is the woman on top.)

The weekend is still the most popular time to have sex, with 37 per cent of couples picking Saturday as their favourite day for getting steamy, and 23 per cent opting for Friday.

Perhaps unsurprisingly, 73 per cent of men say they never turn down their partner's, advances while 46 per cent of women claim they never say no either

And while men insist that they instigate sex 79 per cent of the time, women say that they are responsible for making the first move in 46 per cent of cases.
Perhaps unsurprisingly, 73 per cent of men say they never turn down their partner's, advances while 46 per cent of women claim they never say no either. Almost a third of women (30 per cent) turn down their partner 10 per cent of the time.


When it comes to the circumstances for instigating sex, the most likely spark is a caress or a kiss.
Some 12 per cent of couples say they have sex after one of them gives a 'flirty look'.
Couples tend to have just gone to bed, be watching TV or sharing a bottle of wine when the moment arises.
Couples who want to break their sexual routine are most likely to have sex in a hotel (19 per cent), followed by outdoors (16 per cent), the shower (16 per cent), the sofa (13per cent), a beach (10 per cent) a car (nine per cent) or the kitchen (seven per cent).


WHAT SPARKS IT?
A kiss - 23%
A caress - 23%
Just got into bed - 14%
A flirty look - 12%
We were talking about sex - 7%


WHAT'S BEEN HAPPENING?
Just gone to bed - 33%
Watching TV - 30%
Sharing a bottle of wine - 10%
Been on a night out together - 9%
Just arrived home from work - 7%


Lovehoney polled 1,654 people for its Fast & Frisky survey. Company co-founder Richard Longhurst said: 'I think this shows that we are all becoming far more relaxed and honest about sex
'It is healthy that outdated euphemisms for saying no such as 'I've got a headache' have largely died out. And it is great that most women love to have sex with the lights on and almost half of women say they make the first move.

'If we had conducted this survey 20 years ago, we would have got very different answers. I do think that the sexual landscape in Britain is changing fast, partly because of Fifty Shades of Grey. Women are become more sexually confident and assertive - and that has to be good news for their partners.'


இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்

இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்



இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22&ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.

உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

சந்தோஷமான திருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்!!!


சந்தோஷமான திருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்!!!


 திருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள் புகைப்பிடித்தலுக்கு சமமானவை. ஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால், உடல் மெதுவாகவும் அமைதியாகவும் பாதிக்கப்படுகிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது. தற்போது விவாகரத்தானது எளிதில் ஏற்படுகிறது. இதற்கு காரணம் ஒருவரின் குணங்கள் தான். அத்தகைய குணங்கள் இன்றைய மக்களது மனதில் அதிகம் உள்ளது.

எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால், நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம். நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர். உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளன. அது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும் வார்த்தைகள், கோபம், அகங்காரம் போன்றவை.

இத்தகைய குணங்கள் தம்பதியருக்குள் இருந்தால், நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும். எனவே திருமண வாழ்வை. விவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள்.





அகங்காரம் 

எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி. முதலில் அனைவருமே "திருமணம் என்பது ஆர்வமுள்ள ஒரு விளையாட்டு. இத்தகைய விளையாட்டில் இருவருமே நன்கு விளையாடி, இருவருமே வெற்றி பெற வேண்டும்" என்று நினைக்க வேண்டும்.


சந்தேகம் 

சந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் துணை மீது நம்பிக்கை வேண்டும்.

பேச்சு இடைவெளி 

தம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும். அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன், அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், அதுவே இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும்.


நேரம் 

இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும். எனவே எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும், துணையுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும்.


விமர்சனம் 

இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால், அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, அதனைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால், அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும்.


கெட்ட நடத்தை 

துணை ஏதேனும் தவறு செய்து விட்டால், அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போது, அவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும். மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும். அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாது. ஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும்.


குடும்ப பிரச்சனை 

இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால், சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும். பின் அதுவே விவாகரத்து வரை முடியும். ஆகவே எதுவாக இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும்.


கலாச்சார பிரச்சனை 

சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். அவ்வாறு காதல் திருமணம் செய்யும் போது, வேறு மதத்தினரையோ அல்லது நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால், அப்போது சில நேரங்களில கலாச்சார பிரச்சனை ஏற்படும். எனவே இவ்வாறான திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. இது ஒருவரது மனம் மற்றும் புரிதலை பொறுத்தது. ஆகவே அதற்கேற்றாற் போல் நடக்க வேண்டும்.


கோபம் 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான கோபத்தை வீட்டில் துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில் துணை நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் அதுவே தொடர்ந்தால், பின் பிரிவை சந்திக்க நேரிடும்.











நியூயார்க்கை நோக்கி வரும் பாரிய ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நியூயார்க்கை நோக்கி வரும் பாரிய ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை


நியூயார்க் நகரை நோக்கி பாரிய விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் மேலும் தெரிவிக்கையில், பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித எரிகற்களை நாசா கண்காணித்து வருகிறது.

அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அடங்கும். இந்த விண்கல்லானது மனித நாகரிகத்தையே அழித்துவிடும் அபாயம் இருக்கிறது.

இந்நிலையில் நியூயார்க் நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய எரிகல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். எரிகல்லை திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பூமியை தாக்கும் எரிகற்களை திசைதிருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறது என்றும் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதேபோன்று கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னுமிடத்தை நோக்கி வந்த எரிகல்லை குண்டு வீசி தகர்த்து விட்டதாக ரஷ்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை குறித்து எச்சரிக்கும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது அமெரிக்கா

ஏவுகணை குறித்து எச்சரிக்கும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது அமெரிக்கா


 உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும் அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கைகோளை அமெரிக்கா விண்ணில் செலுத்தியுள்ளது.
உலகின் வல்லரசு நாடுகளும், வடகொரியா  உள்ளிட்ட சில நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளன.

இந்நிலையில் இந்த ஏவுகணைகளை எப்போது ஏவினாலும் அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை அமெரிக்கா தயாரித்துள்ளது.

“ஜியோ-2” என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், அமெரிக்காவின் புளோரிடா பகுதியிலுள்ள கேப் கெனவரெல் ஏவுதளத்தில் இருந்து அட்லஸ்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அகசிவப்பு கதிர் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் இந்த செயற்கைக்கோள் உலகின் எந்த பகுதியில் இருந்தும் எதிரி நாட்டு மீது ஏவுகணை ஏவப்பட்டால் உடனடியாக அது குறித்து அமெரிக்காவுக்கு முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கும்.

ஏற்கனவே ஜியோ-1 என்ற பெயரில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெற்றிகரமாக செயல்படவில்லை என்றாலும் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் குறித்த தகவல்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை குறித்து எச்சரிக்கும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது அமெரிக்கா

ஏவுகணை குறித்து எச்சரிக்கும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது அமெரிக்கா


 உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும் அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கைகோளை அமெரிக்கா விண்ணில் செலுத்தியுள்ளது.
உலகின் வல்லரசு நாடுகளும், வடகொரியா  உள்ளிட்ட சில நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளன.

இந்நிலையில் இந்த ஏவுகணைகளை எப்போது ஏவினாலும் அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை அமெரிக்கா தயாரித்துள்ளது.

“ஜியோ-2” என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், அமெரிக்காவின் புளோரிடா பகுதியிலுள்ள கேப் கெனவரெல் ஏவுதளத்தில் இருந்து அட்லஸ்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அகசிவப்பு கதிர் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் இந்த செயற்கைக்கோள் உலகின் எந்த பகுதியில் இருந்தும் எதிரி நாட்டு மீது ஏவுகணை ஏவப்பட்டால் உடனடியாக அது குறித்து அமெரிக்காவுக்கு முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கும்.

ஏற்கனவே ஜியோ-1 என்ற பெயரில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெற்றிகரமாக செயல்படவில்லை என்றாலும் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் குறித்த தகவல்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 21, 2013

மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கிராமங்களின் மக்களுக்கு பிரதான தொழில் திருட்டு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கிராமங்களின் மக்களுக்கு பிரதான தொழில் திருட்டு


 மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கிராமங்களில் கொள்ளையடிப்பதை பிரதான தொழிலாக சிலர் மேற்கொண்டிருப்பது ரயில்வே போலீசார் விசாரணையில் ரயில்வே கொள்ளையன் தெரிவித்துள்ளான். சென்னையை சேர்ந்தவர் வரதராம். இவர் தங்க நகை கேரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்க கட்டிகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் போது 12 கிலோ நகைகளை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.இது தொடர்பாக ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 208 கிராம் நகைகள், சொகுசு கார்கள், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மகாராஷ்டிராவை சேர்ந்த லட்சுமணன் ஜாகிப் யாதவ் என்பவரை கடந்த 8ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் மாவட்டம் கர்மலா தாலூகாவில் உள்ள பார்லோகி, நிம்புரே, கர்மலா, மாடா, குருதுவாடி உள்ளிட்ட 5 கிராமங்களில் உள்ள பெரும்பாலானோர் கொள்ளையடி ப்பதை முழு நேர தொழிலாக வைத்துள்ளனர். வசதி படைத்தவர்களை மட்டுமே குறி வைத்து இக்கொள்ளை சம்பவங்களை நடத்துவதாகவும், ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் போலீசாரிடம் கூறி உள்ளான்.

 கொள்ளையடிக்கப்படும் நகைகளை கடைகளுக்கு கொண்டு சென்று விற்பதில்லை. மாறாக நிம்புரே கிராமத்தை சேர்ந்த ஒரு நபரிடம் மட்டுமே விற்பனை செய்து அதற்கான பணத்தை பெற்று வந்துள்ளனர். காவலில் எடுக்கப்பட்ட லட்சுமணன் ஜாகிப் யாதவை ரயில்வே போலீசார் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கொள்ளை கும்பல் தலைவன் பதுங்கி உள்ள நிம்புரே கிராமத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கும்பல் தலைவன் அங்கிருந்து தலைமறைவானான். மேலும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதோடு எவ்வித தகவல்களையும் போலீசாருக்கு தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் நகைகளை மீட்க முடியாமல் ஏமாற்றத்துடன் லட்சுமணன்யாதவை அழைத்துக்கொண்டு ஈரோடு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் திரும்பி வந்தனர். தொடர்ந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நகைகளை மீட்பதற்காக இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் அந்த கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் 7 நாள் போலீஸ்காவல் முடிவடைந்ததையடுத்து ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு லட்சுமணன் ஜாகிப் யாதவ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tuesday, March 19, 2013

கு.க-வுக்கு ஆள் பிடித்து வந்தால் தங்க காசு, ப்ரிட்ஜ், நானோ கார் பரிசு!


கு.க-வுக்கு ஆள் பிடித்து வந்தால் தங்க காசு, ப்ரிட்ஜ், நானோ கார் பரிசு!– ம.பி. அரசு அதிரடி


குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு ஆள்பிடித்து வருபவர்களுக்கு பல அதிரடி பரிசுகளை அறிவித்துள்ளது மத்தியபிரதேச மாநில அரசு. தங்கக் காசு, ப்ரிட்ஜ், நானோ கார் என கிடைக்கும் பரிசுகளை வாங்க ஆள் ஆளுக்கு வலைவீசி ஆள்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதுதான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை. இந்த கு.க.அறுவைச் சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு 500 ரூபாய் பணம், ஹார்லிக்ஸ் பாட்டில், அரிசியும் ஊக்கத் தொகையாக கொடுக்கின்றனர்.

ஆனால் கு.க. ஆபரேசனுக்கு ஆள் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசுகள் அள்ளிக்கொடுக்கின்றனர். 500 பேரைக் கூட்டிவந்தால் நானோ கார், 50 பேர் அழைத்து வந்தால் ஒரு பிரிட்ஜ், 25 பேர் என்றால் 10கிராம் தங்கக் காசு என்று அரசே பரிசுகளை அறிவித்துள்ளது. இதற்கு ஆசைப்பட்டு மக்களைத் துரத்தித் துரத்திப் பிடிக்கும் பிடிக்கும் அவலம் மத்தியபிரதேச மாநிலத்தில் அதிகரித்துள்ளது.

யாராக இருந்தாலும் ஆபரேசன் 

திருமணம் ஆகாதவர்கள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், 70 வயதானவர்கள் என அனைத்து தரப்பினருமே இவர்களின் குறிக்கோளுக்குத் தப்புவதில்லை.

மிரட்டப்படும் ஏழைகள் 

பழங்குடி மக்களும், தலித்துகளும் இவர்களின் மிரட்டலுக்கு ஆளாகின்றனர். ஏழைக் குடும்பத்தினர், அரசாங்கத்தின் இலவசப் பொருட்கள், அத்தாட்சிகள் தரப்படமாட்டாது என்ற அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிகிறார்கள் என்றும் தகவல் வருகிறது..

இலக்கை எட்ட கட்டாயம் 

தம்பதியர் மனமொத்து குடும்பக்கட்டுபாடு அறுவைச் சிகிச்சை செய்வது என்பது வேறு. அதை விடுத்து இலக்கை அடைவதற்காக கட்டாயப்படுத்துகின்றனர் அதிகாரிகள் என்ற புகாரும் எழுந்துள்ளது.

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே 

அண்மையில் 23 வயதான ராஜ்குமார் அஹிர்வார், என்பவர் தீபக் ரசாக் என்பவருடன் மதுக்கடைக்குச் சென்றுள்ளார். குடிபோதையில் இருந்து தெளிந்த பின்னர், தான் ஒரு மருத்துவமனையில் படுத்திருப்பதை அறிந்தார். அவருடைய சட்டைப்பையில் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததற்கான அத்தாட்சிக் கடிதம் இருந்ததை அறிந்து அதிர்ந்துபோனார், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான் கொடுமை.

அளவில்லாத அறுவை சிகிச்சைகள் 

ஒரு நாளைக்கு 30முதல் 50 அறுவை சிகிச்சைகளே செய்யவேண்டும் என்ற விதிமுறையையு மீறி, மருத்துவர்களே 500 அறுவை சிகிச்சைகள் செய்கின்றனர் என்றும் புகார் எழுந்துள்ளது. ஆனால், இது குறித்து மருத்துவ இணை இயக்குனர் ரஞ்சனா குப்தாவிடம் கேட்டபோது, 'இந்தப் பிரச்சினைகள் பெரிது படுத்தப்படுகின்றன'. என்று கூறியுள்ளார்.

சாம்சங்கின் அடுத்த படைப்பு : சாம்சங் கேலக்ஸி எஸ் 4

சாம்சங்கின் அடுத்த படைப்பு : சாம்சங் கேலக்ஸி எஸ் 4



சாம்சங் நிறுவனத்தின் அடுத்த மொபைல் போன் எதுவாக இருக்குமென பல நாட்களாகவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய கேலக்ஸி எஸ் 4 ஒரு வழியாக வெளியாகிறது. இதை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சாம்சங் அடுத்ததாக அந்த போன், இந்த போன் என ஆளாளுக்கு ஒரு பெயரைவைத்து வதந்திகளை பரப்பியவண்ணம் இருந்தார்கள். இப்பொழுது வதந்திகள் முடிவுக்கு வந்துவிட்டது. சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ் 4!

இது விரைவில் மொபைல் சந்தைகளில் கிடைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நுட்பக்கூறுகள் பின்வருமாறு,

5 அங்குல முழு HD தொடுதிரை,
சூப்பர் AMOLED திரை,
1.9 GHz குவாட்-கோர் ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
13 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.2.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதி,
விலை விவரங்கள் தெரியவில்லை.






















உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...

உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...


நாம் என்னதான் அறிவியல் யுகத்தில் இருந்தாலும் இதற்கு புள்ளையார் சுழி எங்கிருந்து வந்தது? நமது மூதாதையர்கள் விட்டுச்சென்ற அவர்களின் அறிவை நாம் தூசி தட்டிப் பயன்படுத்துகிறோம் என்றுசொன்னால் அது மிகையாகாது.

அவர்கள் கண்டுபிடித்தவைகளே இன்று மறுவடிவமெடுத்துள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. அவர்கள் கண்டுபிடித்த பல உக்திகள் இன்றைய உலகை மாற்றியுள்ளது என்பதே நிதர்சனம். அப்படி உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள் இங்கே!



உழுதல்:

இன்றளவிலும் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள இந்த உழுதல் முறைதான் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விவசாயம் செய்வதை எளிமையாக்கியதும் இம்முறையே! ஆனால் இன்று பல்வேறு வளர்ச்சியில் இருக்கும் உழுதலின் நிலையும், உழவனின் நிலையும் வருங்காலத்தில் கேள்விக்குறியுடனே இருக்கும்...

சக்கரம்:
சாதாரணமாக பார்த்தால் இது வெறும் சக்கரம் தான். ஆனால் இது இல்லாமல் எதையாவது நினைத்துப் பார்க்க இயலுமா? வாகனங்கள் சக்கரம் இல்லாமல் இயங்குமா? இந்த சக்கரம் 3100 B.C யில் கண்டுபிடிக்கப்பட்டவை.


இன்டர்நெட்:

சாப்பாடு கூட இல்லாமல் பலரால் சில தினங்கள் உயிர்வாழமுடியும். ஆனால் இன்டர்நெட் இல்லாமால் இருக்க முடியாது என்பார்கள் அவர்கள். அந்த அளவிற்கு மனித வாழ்வில் முக்கியப்பங்குவகிக்கிறது இன்டர்நெட்! இதை கண்டறிந்தவர்களுக்கு ஒரு சல்யூட்!


குளிர்சாதனப் பெட்டி:

ஆண்களின் பார்வையில் இந்த குளிர்சாதனப் பெட்டி என்பது, பணத்தை வீணடிக்கும் ஒரு ஆடம்பர டப்பாதான். ஆனால் பெண்கள் இந்த குளிர்சாதனப் பெட்டியை தயிர், பால், காய்கறிகள், இவ்வளவு ஏன் இட்லி மாவை பாதுகாக்கும் பொக்கிசமாகவே கருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் காலங்களில் அதிகம் தேவைப்படும் ஒரு பெட்டி. ஆனால் பயன்படுத்துவதற்கு 'பவர்தான்' இருப்பதே இல்லை!


ஸ்டீம் என்ஜின்:

அந்தக்காலத்தில் ஒரு பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்வது மிகவும் கடினவாகவும், மெதுவாகவும் இருந்தது. அந்த சூழலில்தான் இந்த ஸ்டீம் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டு, சற்றே வேகமானது பிசினஸ்!


அச்சிடும் இயந்திரம்:

ஆயிரம் வருடங்களுக்கும் முன்பே சீனர்கள் காகிதங்களை கண்டறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. காகிதங்களில் அச்சிடுவதற்கு இந்த அச்சிடும் இயந்திரம் பயன்பட்டது. இதனால்தான் தகவல்தொடர்பும் விரிவடைந்தது என்றே சொல்லலாம். செய்திகளை காகிதங்களில் அச்சிட்டது, அது இன்று இணையவழி செய்தியாக மாறியதும் தொழில்நுட்பத்தின் உந்துதலே!


 தகவல்தொடர்பு சாதனங்கள்:

இன்றைய உலகம், மொபைல் போன், டிவி,ரேடியோ போன்றவையெல்லாம் இல்லாமல் வாழவே முடியாது என்கின்ற நிலையில் உள்ளது. டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். டிவியை கண்டுபிடித்தவர் லோகி பைர்ட். ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்கோனி.


மின்சார விளக்கு:

இந்த பல்ப்பை கண்டுபிடித்தவர் தாமஸ் எடிசன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது எனவும் சொல்லப்பட்டது. நினைத்துப் பாருங்கள் இந்த பல்ப் மட்டும் இல்லாமல் இருந்தால்...


வாகனங்கள் :

உலகின் முதல் வாகனத்தை உருவாக்கியவர் கார்ல் பென்ஸ் என நம்பப்படுகிறது. இதை இவர் 1885ல் உருவாக்கினார் எனவும் கூறப்படுகிறது. இவைகளில் தான் இன்றைய உலகம் நகர்த்தப்படுகிறது.


கணிப்பொறி:

கம்ப்யூட்டர் பற்றிப் படிக்காதவர்களும் கம்ப்யூட்டர் அறிவு இல்லாவதவ்ர்களும் மிக மிகக் குறைவு எனலாம். அதிக அளவில் வளர்ச்சிபெறும் துறையில் முக்கியமான இடத்தில் கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளே உள்ளன.














முகப்பரு போகவில்லையா? இதோ சில சிறந்த வழிகள்!!!


முகப்பரு போகவில்லையா? இதோ சில சிறந்த வழிகள்!!!


தற்போது முகப்பரு பிரச்சனையானது அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான். அவற்றால் பெரும்பாலும் முகப்பருக்கள் போவதை விட, அதனால் பருக்கள் வந்தது தான் அதிகம்.

சிலருக்கு அந்த பருக்களால் வடுக்கள் கூட வந்துவிடுகின்றன. அதனால் பலருக்கு அந்த வடுவானது, நீண்ட நாட்கள் போகாமல் கருமையாக இருக்கின்றன. எனவே இத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பதற்கு, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான இயற்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய இயற்கை முறைகளில் இதுவரை பலவற்றை பார்த்துள்ளோம். இப்போது அவற்றில் வீட்டில் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ள பொருட்களைக் கொண்டு, எப்படி முகப்பருக்களை போக்கலாம் என்று பார்ப்போமா!!!




டூத் பேஸ்ட் 

முகப்பருக்களை போக்குவதில் டூத் பேஸ்ட் சிறந்ததாக உள்ளது. அதற்கு முகத்தை சுத்தமாக கழுவி, மாய்ச்சுரைசர் தடவியப் பின், சிறிது டூத் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருவானது எளிதில் போய்விடும். குறிப்பாக அவ்வாறு டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது, டூத் பேஸ்ட் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. மேலும் பேஸ்ட் வைப்பதற்கு முன், அதனை ஒரு பருவில் வைத்து, ஏதேனும் எதிர்வினை தெரிகிறதா என்று பார்த்து விட்டு, பின் தடவ வேண்டும். ஏனெனில் சிலருக்கு இது அழற்சியை உண்டாக்கும்.


கற்றாழை ஜெல் 

சூரியக் கதிர்கள் அதிகப்படியாக சருமத்தில் பட்டாலும், சருமத்தில் பருக்கள் வந்துவிடும். எனவே அத்தகையவற்றால் ஏற்பட்ட பருக்களையும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கு, தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை தினமும் இரவில் படுக்கும் போது செய்வது மிகவும் சிறந்த பலனைத் தரும்.


க்ரீன் டீ 

முக அழகைக் கெடுக்கும் பருக்களைப் போக்குவதற்கு, க்ரீன் டீயும் ஒன்று. அதுவும் க்ரீன் டீயை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி, அதனை முகப்பருக்களின் மீது வைத்து தேய்த்து வந்தால், க்ரீயானது பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, எளிதில் நீங்கிவிடும்.


எலுமிச்சை சாறு 

பருக்களை போக்கும் சிறந்த பொருட்களில் எலுமிச்சை சாறும் ஒன்று. அதற்கு தினமும் படுக்கும் போது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள நீர்மமானது மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும். மேலும் பருக்களில் உள்ள கிருமிகளும் அழிந்து, பருக்களும் வற்றிவிடும்.


வினிகர் 

வினிகர் மற்றும் உப்பை கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் சுத்தமான துணியால் துடைத்து, எண்ணெய் இல்லாத மாய்ச்சுரைசரை தடவி வந்தால், சருமத்தில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான எண்ணெயின் வெளிப்பாடு தடைப்பட்டு, பருக்கள் மேலும் வராமல் தடுப்பதோடு, அந்த பருக்களை எளிதில் போக்கிவிடும்.


ரோஸ்வாட்டர் 

சருமத்தை கிளின்சிங் செய்வதற்கு சிறந்த பொருள் என்றால் அது ரோஸ்வாட்டர் தான். அதிலும் ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் பருக்கள் போய்விடும்.



பழங்கள் மற்றும் காய்கறிகள் 

பருக்களை போக்கும் சிறந்த வழிகளுள் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதும் ஒன்றாகும். ஏனெனில் உடலை சரியாக இயக்குவதற்கான போதிய சத்துக்களான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருந்தால் தான், உடலானது சரியாக இயங்கும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள், பெர்ரிப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இல்லையெனில் இத்தகைய காய்கனிகளை பருக்கள் உள்ள இடங்களில் அரைத்து தடவி வந்தாலும், பருக்களை போக்க முடியும்.












சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?


சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?

வசந்தகாலம் தான் தொடங்கியுள்ளது. ஆனால் கோடை காலத்தைப்போல சுட்டெரிக்கிறது வெப்பம். உதிக்கும் போது என்னவோ செவ்வானம் அழகாய் தான் இருக்கிறது. ஆனால் நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் தகிக்கிறது.

இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை அதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. சென்னையில் நேற்று 32.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. கடல் காற்று திசை மாறி உள்ளதால் தமிழ் நாட்டில் வறண்ட வானிலை காணப்படுவதாகவும் இனி நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல்-மே மாதங்களில் 35 டிகிரிக்கும் மேல் 37 டிகிரி வரை வெயில் இருக்கும் என்றும் சில ஊர்களில் 40 டிகிரி வரை வெப்பம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். பருவநிலை மாற்றம் வேறு மழையை குறைத்துவிட்டது. இதனால் ஏரி, குளங்களும் வறண்டுவிட்டன. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமே என்ற அச்சமும் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது.

மின்சாரத் தட்டுப்பாடு வேறு இரவுகளில் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வியர்வையை அதிகரிக்கிறது. கொசுவிற்கு வரவேற்பு அளிக்கிறது.




கண் நோய் வரலாம் 

கொளுத்தும் வெயியினால் கோடை காலத்தில் தோன்றும் கண் நோய்களும் வயிற்றுக் கோளாறுகளும் இப்போதே எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டன. மெட்ராஸ் ஐ எனப்படும் கண் சிவப்பு நோய் ஆங்காங்கே தோன்றி வருவதால் கண்ணை பத்திரமாக பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்


வேர்க்குரு அரிப்பு வரலாம் 

கோடை காலத்தில் வியர்வை அதிகமாகி உடம்பில் வேர்க்குரு அதிகமாகலாம் இதனால் அரிப்பும் ஏற்படும். சிலருக்கு தோலில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே தினமும் இருவேளை குளிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.


அச்சுறுத்தும் அம்மை நோய் 

வெயிலின் தாக்கத்தோடு அவ்வப்போது சில நேரங்களில் தூரலும் போடுகிறது. இந்த கலவையான சீசனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் சின்னம்மை, பெரியம்மை நோய்கள் எட்டிப் பார்க்கின்றன. எனவே குழந்தைகள் பள்ளி முடித்து வந்த உடன் ஒருமுறை கை, கால்களை கழுவி சுத்தப்படுத்துவது அவசியம்.


டைபாய்டு, நிமோனியா வரலாம் 

வெயில் உக்கிரம் அதிகரிக்கும் போது டைபாய்டு, நிமோனியா, வைரஸ் காய்ச்சல், மஞ்சள் காமாலை நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே வருமுன் காப்பது அவசியம்.


டெங்கு ஜாக்கிரதை 

கோடை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் எனவே கொசுக்களிடம் இருந்தும் பாதுகாத்துக் கொள்வது அவசியம். பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் இருந்தும் தப்பித்துக் கொள்ளவேண்டும்.


நுங்கு பதநீர் குடிங்க 

கோடை காலத்தில் இயற்கை அளித்திருக்கும் பானம் நுங்கு, பதநீர். இளம் நுங்கை சீவி எடுத்து பொடியாக்கி, அதில் பாதநீர் ஊற்றி பனை ஓலையில் குடிக்கலாம் உடல் சூடு அடங்கும்.


கூல்டிரிங்ஸ் வேண்டாமே 

தாகம் தணிக்கிறோம் என்று பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கிக்தரவேண்டாம். அதேபோல் தெரு ஓரங்களில் தூசி படிந்த நிலையில் உள்ள குளிர்பானங்களை சாப்பிட வாங்கித தரவேண்டாம். சத்தான குளிர்ச்சியான,தாகம் தணிக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.


இளநீர், தர்ப்பூசணி சாப்பிடலாம் 

உடலை குளிர்விக்கும் வகையில் தண்ணீர், இளநீர், தர்பூசணி மற்றும் தாகம் தணிக்கும் மோர் போன்ற பானங்களை அருந்தினால் இவற்றை தடுக்க முடியும் என்றார்.









கனடா சிறையில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்த கைதிகள்

கனடா சிறையில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்த கைதிகள்


கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள சிறையிலிருந்து பட்டப் பகலில் 2 கைதிகள் ஹெலிகாப்டர் உதவியுடன் தப்பினர். சினிமா காட்சி போல நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் செயின்ட்,ஜெரோம் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைக்கு மேலே நேற்றுமுன்தினம் பிற்பகலில் வானில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடிக்க அதிலிருந்து போடப்பட்ட கயிற்றில் ஏறி 2 கைதிகள் தப்பினர். பெஞ்சமின் ஹூடன்,பார்பியா (36), டேனி புரோவென்கால் (33) என்ற அந்த கைதிகள் தப்பியது சில நிமிடங்களில் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

உடனே, போலீசார் அந்த ஹெலிகாப்டர் எங்கு செல்கிறது என்று கண்காணித்து கார்களில் பின் தொடர்ந்தனர். எனினும், ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் மறைந்து விட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர், சுமார் 85 கி.மீ. தொலைவில் மாண்ட்,டிரம்பிளண்ட் என்ற இடத்தில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் விமானி மட்டுமே இருந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சிறையிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் பெஞ்சமின் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிய மற்றொரு கைதியான டேனி புரோவென்கால் இருக்கும் இடம் தெரிந்துள்ளது. அவர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர். செயின்ட்,ஜெரோம் சிறை கண்காணிப்பு அதிகாரி வைவெஸ் காலர்நியோ கூறுகையில், ''எனது 30 ஆண்டுகால சர்வீஸில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது இல்லை. வான் வழியாக தப்புபவர்களை தடுக்க இப்போதைக்கு சிறையில் எந்த வசதியும் இல்லை'' என்றார்.

வரலாற்றில் இது முதல்முறை முழு பதவி காலம் முடித்தது பாகிஸ்தான் நாடாளுமன்றம்

வரலாற்றில் இது முதல்முறை முழு பதவி காலம் முடித்தது பாகிஸ்தான் நாடாளுமன்றம்



பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றம் முழு பதவி காலத்தை முடித்துள்ளது. பாகிஸ்தான் உதயமாகி 66 ஆண்டுகளில் ஒரு முறை கூட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் முழு பதவி காலத்தை முடித்ததில்லை. இடைக்காலத்திலேயே ராணுவ புரட்சி, ஆட்சி கவிழ்ப்பு என்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விடும். இது வரை 12 நாடாளுமன்ற சபைகள் அற்ப ஆயுசில் முடிந்து விட்ட நிலையில், முதல் முறையாக 13வது நாடாளுமன்ற சபை நேற்று முன் தினம் முழு பதவி காலத்தை முடித்தது.

இதன்பின், சபை கலைக்கப்படுவதற்கு முன்பாக, ரேடியோவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் அஷ்ரப் உரையாற்றினார். அப்போது பாகிஸ்தானில் ஜனநாயகம் வேரூன்றியதற்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி, ஒரு அரசு பதவி காலம் முடிந்ததும் ஆளும்கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியும் இணைந்து இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவரது கண்காணிப்பில் தேர்தல் நடைபெற வேண்டும்.

பிரதமரை தேர்ந்தெடுப்பதில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், இரு கட்சிகளில் இருந்தும் தலா 4 எம்.பி.க்களை நியமித்து ஒரு குழு அமைத்து தேர்வு செய்ய வேண்டும். தற்போது ஆளும்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், எதிர்க்கட்சியான பிஎம்எல்(என்) கட்சியும் பல முறை பேசியும், இடைக்கால பிரதமரை தேர்வு செய்ய முடியவில்லை.

நாளைக்குள் கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால், எம்.பி.க்கள் குழு அமைக்கப்படும். அந்த குழு 3 நாட்களுக்குள் பிரதமரை தேர்வு செய்யாவிட்டால், தேர்தல் ஆணையமே இடைக்கால பிரதமரை நியமித்து, பின்னர் தேர்தலை நடத்தும்.

முஷாரப் 24ம் தேதி நாடு திரும்புகிறார்

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி, லண்டனிலும் துபாயிலுமாக வசித்து வரும் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வரும் 24ம் தேதி நாடு திரும்புவதாக கூறியுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 24ம் தேதி கராச்சிக்கு வருவதாகவும், வரும் தேர்தலில் தனது கட்சியை வழிநடத்தி செல்லப் போவதாகவும் கூறியுள்ளார். பெனாசிர் கொலை வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதனால், நாடு திரும்பினால் கைது செய்யப்படுவோம் என்று அச்சத்தில் இது வரை அவர் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.