Thursday, October 3, 2013

2050ல் உலக மக்கள்தொகையில் இந்தியா 'நம்பர் ஒன்' ஆகும்.. 2வது இடத்துக்குத் தள்ளப்படும் சீனா...!

2050ல் உலக மக்கள்தொகையில் இந்தியா 'நம்பர் ஒன்' ஆகும்.. 2வது இடத்துக்குத் தள்ளப்படும் சீனா...! 




வரும் 2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தை பிடிக்கும் என சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் நாம் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறோம் என்பது நாமே அறிந்த விஷயம் தான் என்ற போதும், உலக மக்கள் தொகையில் தற்போது சீனா தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. 

ஆனால், இந்த நிலை மாறி 2050ல் இந்தியா தான் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் என தெரிவிக்கிறது இந்த ஆய்வு.

மக்கள்தொகைப்பெருக்கம்.... 

பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் டொமோகிராபிக் ஸ்டெடீஸ் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில், இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக நாடுகளின் மக்கள்தொகைப் பெருக்கம் என்ற நோக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

970 கோடி மக்கள்தொகை.... 

அந்த ஆய்வின் படி, உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை சுமார் 970 கோடியாக உயரும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 710 கோடி உலக மக்கள் தொகை என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா முதலிடம்..? 

அந்தவகையில், தற்போது முதலிடத்தில் உள்ள சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியாவின் மக்கள்தொகை 160 கோடியாக மாறி முதலிடத்தைப் பிடிக்கும் என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.

இரண்டாமிடத்தில் சீனா.... 

அதே நேரத்தில், இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை சுமார் 130 கோடியாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


7 மடக்கு அதிகரிப்பு.... 

கடந்த 200 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 7 மடங்கு அதிகரித்துள்ளது எனவும், இது 10 முதல் 11 பில்லியனாக இந்த நூற்றாண்டின் முடிவில் மாற வாய்ப்புள்ள்தாகவும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது..

மூன்றில் ஒரு பங்கினர்.... 

ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியா மற்றும் சீனாவில் பிறந்தவர்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னேற்றத்தில் பாக்...... 

அதேபோல், தற்போது உலக மக்கள்தொகையில் ஆறாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் நான்காவது இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்புள்ளதாக ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


சீனர்களுக்கான அரசின் புதிய சுகாதார பழக்க வழக்க அறிவுறுத்தல்கள் !!! நமக்கு எப்பவோ ?

சீனர்களுக்கான அரசின் புதிய சுகாதார பழக்க வழக்க அறிவுறுத்தல்கள் !!! நமக்கு எப்பவோ ? 




வெளிநாடுகளுக்கு செல்லும் சீன சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் மூக்கை குடைவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை கவர பல நாடுகள் விருப்பமாக உள்ளன. ஆனால் அவர்களின் அநாகரீகமான செயல்கள் பிற நாட்டவர்களை முகம் சுளிக்க வைக்கின்றன. 

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் சீனர்கள் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு 64 பக்கங்கள் கொண்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மூக்கை நோண்டுவது 

சுற்றுலா செல்லும்போது பொது இடங்களில் மூக்கை நோண்டி சீனாவின் பெயரைக் கெடுக்கக் கூடாது என்று சீனர்களுக்கு அரசு தெரிவித்துள்ளது.

சிறுநீர் கழித்தல் 

குளங்களில் சிறுநீர் கழிப்பது, விமானங்களில் வழங்கப்படும் லைஃப் ஜாக்கெட்டுகளை திருடுவது ஆகியவற்றை செய்யக் கூடாது என்று சீனர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

கழிவறைகள் 

பொது கழிவறைகளை பயன்படுத்தும்போது வெகுநேரம் அங்கேயே இருந்து விடக் கூடாது என்றும், கழிவறையை அசுத்தம் செய்துவிட்டு வரக் கூடாது என்றும் சீன மக்களக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

நூடுல்ஸ் 

சூப் குடிக்கையில் பாத்திரத்தை கையில் எடுத்து அப்படியே குடிக்கக் கூடாது என்றும், நூடுல்ஸ் சாப்பிடுகையில் சர் புர் என்று சத்தம் போடக் கூடாது என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.

பல்லை குடைவது 

பொது இடங்களில் பல்லை குடைவதும் கூடாது என்று சீன சுற்றுலாப் பயணிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே புகார் 

சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்று பல்வேறு நாடுகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து தான் சீன அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


570 மாணவர்கள் படித்து வந்த மற்றொரு தமிழ்ப்பள்ளியை மூடும் அபுதாபி கல்விக் கழகம்

570 மாணவர்கள் படித்து வந்த மற்றொரு தமிழ்ப்பள்ளியை மூடும் அபுதாபி கல்விக் கழகம் 


வெளிப்படையான பாதுகாப்புக் காரணங்களுக்காக அபுதாபியின் பள்ளிக் கல்விக் கழகம் இந்தியப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் தற்போது மற்றுமொரு பள்ளி மூடப்பட உள்ளது. 

சமீபகாலமாக, அபுதாபியின் அரசு கல்விக் கழகம் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்றுவரும் இந்தியப் பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டில் இதுபோன்று 72 இந்தியப் பள்ளிகள் நடைபெற்று வந்நிலையில், வெளிப்படையான பாதுகாப்புக் காரணங்களுக்காக அபுதாபியின் கல்விக் கழகம் இத்தகையப் பள்ளிகளை மூட ஆரம்பித்தது. 

அந்த வகையில், அபுதாபியில் இயங்கி வரும் லிட்டில் பிளவர் தனியார் பள்ளியில் சுமார் 570 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். தற்போது இந்தப் பள்ளியை இந்த வருடத்துடன் மூடிவிடுமாறு அபுதாபி கல்விக் கழகம் அறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதனால், இப்பள்ளியில் பயிலும் பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மற்றொரு சிறந்த பள்ளியைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிலர் தங்கள் பிள்ளைகளை இந்தியாவில் படிக்க வைக்கலாமா என ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. 

இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில், ‘சென்ற ஜூலை மாதம் பள்ளி விடுமுறையின்போது தங்களுக்கு இந்த அறிக்கை வந்ததாகவும் அதனால் செப்டம்பரில் பள்ளி திறந்தவுடன் பெற்றோர்களிடம் இந்த அறிக்கை குறித்த தகவல் அளிக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், பள்ளித் தலைவியான மேரி தாமஸ், ‘பெற்றோர்களை கல்வி ஆண்டு இறுதிவரை பொறுமையுடன் இருக்கும்படியும், அபுதாபி கல்வி நிர்வாகம் இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து தரும்' எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


3000 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதையுண்ட நகரம் ஈராக்கில் கண்டுபிடிப்பு

3000 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதையுண்ட நகரம் ஈராக்கில் கண்டுபிடிப்பு 




சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்றை வடக்கு ஈரானில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் புதையுண்டு கிடந்த நகரம் ஒன்றை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது சுமார் 3000 ஆண்டுகள் பழமையான நகரம் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

அந்தக்கால கட்டத்தில் தான் மக்கள் பயிர் வேளாண்மை செய்ய ஆரம்பித்ததாகவும் ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளனர்.


ஆய்வு.... 

சப் ஆற்றின் வடக்கு கரை பகுதியில் உள்ள கிராமம் சட்டு காலா. அங்கு ஒரு பாறையின் அடியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அபு மன்னர்.... 

அப்போது, தரைமட்டத்தில் இருந்து சுமார் 32 அடி ஆழத்தில் புதையுண்டு கிடந்த இடு என்று அழைக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.


பயிர் வேளாண்மை.... 

இந்த நகரில் மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில்தான் மத்திய கிழக்கு நாடுகளில் பயிர் வேளாண்மை தோன்றியதாகவும், அசாரியன் பேரரசின் கீழ் சுமார் 2900 மற்றும் 3300 ஆண்டுகளுக்கு இடையில் இந்த நகரில் மக்கள் வசித்திருக்க கூடும் எனவும் தொல்லியல் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.


அரண்மனை.... 

இந்த முன்னர் அபு நகரில், எடிமா என்பவரின் மகனான பவுரியின் அரண்மனை இருந்ததற்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


இப்படியெல்லாம் ஆண்களைக் கொடுமைப்படுத்துறாங்களாம் பெண்கள்..!

இப்படியெல்லாம் ஆண்களைக் கொடுமைப்படுத்துறாங்களாம் பெண்கள்..! 




ஆண்களை எப்படியெல்லாம் பெண்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா... இப்படித்தான் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது பாக்ஸ் நியூஸ் நிறுவனம். 

இந்தப் பட்டியலில் பத்து விதமான கொடுமைகளை ஆண்களுக்கு பெண்கள் இழைப்பதாக அது கூறியுள்ளது. ஆண்களின் உணர்வுகள் மற்றும் ஈகோவுடன் விளையாடிப் பார்ப்பதை ரசிக்கிறார்களாம் பெண்கள்... அந்தக் கொடுமையைக் கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்...

போன் பண்ணா எடுப்பதே இல்லை 

பெண்களுக்கு நல்ல மூடு இருந்தால் தங்களுக்குப் பிடித்தமான ஆணுக்கு, அவர்களே போன் செய்து கொஞ்சுவார்களாம், குலாவுவார்களாம்.. ஆனால் பிடிக்காமல் போய் விட்டால், போனே செய்ய மாட்டார்களாம். போன் செய்தாலும் கூட கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்களாம். இல்லாவிட்டால் செல் போன் எண்ணையே மாற்றி விட்டு அப்படியே மறந்து போய் விடுவார்களாகம்.

ப்ரீ' சர்வீஸுக்கு மட்டும் 

சில பெண்கள் தங்களது காதலர்களுடன் வெளியில் போகும் போது ஐந்து பைசா செலவழிக்க மாட்டார்களாம். மாறாக, காதலரையே முழுக்க செலவு செய்து மொட்டை போட்டு திருப்பதி ராஜாவாக்கி அனுப்புவார்களாம்.


டைம் பாஸுக்கு 

இன்னும் சில பெண்கள், டைம் பாஸுக்காகவே ஆண்களிடம் பழகுகிறார்களாம். அதாவது தனக்குப் பிடித்த இன்னொருவர் கிடைக்கும் வரை இவரை வைத்திருப்பது. கிடைத்தவுடன் பழைய ஆளை கைவிடுவது என்று பொழுதுபோக்கு போல செய்வார்களாம். இப்படிப்பட்ட பெண்கள் எப்போதும் தனிமையாக இருக்க விரும்ப மாட்டார்களாம். எனவே தனக்குத் தோதான இன்னொருவர் கிடைக்கும் வரை பழையவரிடம் பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்வார்களாம்.


உணர்வுகளுடன் விளையாடுவது 

பல பெண்களுக்கு ஆண்களைத் தவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கிறதாம். ஆண்கள் தங்கள் மீது காட்டும் அன்பை அவர்கள் 'மிஸ் யூஸ்' செய்கிறார்கள் என்று பாக்ஸ் நியூஸ் சொல்கிறது. மேலும் தங்களுக்குத் தேவையானதை சாதித்துக் கொள்வதற்காக, ஆண்களின் பலவீனத்தையும் பயன்படுத்துகிறார்களாம். அதாவது கண்ணீர் விடுவது, குழைந்து பேசுவது.. இப்படி.

என்னா அடி...! 

இன்னும் சில பெண்கள் கோவை சரளா ரேஞ்சுக்கு இருப்பார்களாம். அதாவது வடிவேலு அடித்தால் அது நியூஸ் இல்லை, கோவை சரளா அடித்தால்தான் நியூஸ் என்பது போல. இப்படிப்பட்ட குணம் கொண்ட பெண்கள், அடிக்கடி காதலரை அடிப்பது, கோபத்தில் முறைப்பது போன்றவற்றை செய்வார்களாம். நாம் என்ன செய்தாலும் இவன் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையாம் அது.


எப்பவுமே 'இவன்' இப்படித்தான் பாஸு... 

இன்னும் சில பெண்கள், தங்களது காதலரை மற்றவர்களுக்கு முன்பு மட்டம் தட்டிப் பேசுவது, கேலி செய்வது, கிண்டலடிப்பது என்று நடந்து கொள்கிறார்களாம். மேலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு 'லந்து' செய்வதும் உண்டாம்.

மனதில் உள்ளதை சொல்வதே கிடையாது 

பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பழக்கம் உள்ளதாம். அதாவது தன்னை விரும்பும் நபரிடம் தனது மனதில் இருப்பதை அப்படியே சொல்வது கிடையாதாம். மேலும் ஏற்கனவே மனதில் ஒருவரை வைத்திருந்தாலும் கூட, அதை தனது காதலரிடம் சொல்வது கிடையாதாம்.

எல்லாம் ஓ.கே.. செக்ஸ் மட்டும் முடியாது 

இதுவும் பெண்கள் கடைப்பிடிக்கும் குரூரமான டெக்னிக்காம். ஆண்களைப் பொறுத்தவரை காதலியரிடம் அன்பை மட்டுமல்லாமல் செக்ஸையும் அவர்கள் விரும்புகிறார்கள். இது இயல்பானதும் கூட. ஆனால் செக்ஸ் மட்டும் கூடவே கூடாது என்று பெண்கள் முரண்டு பிடிக்கிறார்களாம்.


சோதனை மேல் சோதனை... 

இன்னும் சில பேர் இப்படிச் செய்கிறார்கள். அதாவது அந்த ஆண் ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பார். தனது நண்பர்களுடன் எங்காவது போயிருப்பார். அப்போது பார்த்து போன் வரும்.. உடனே கிளம்பி வா என்று காதலியிடமிருந்து. முடியாது என்று சொன்னால் அவ்வளவுதான் கொந்தளித்து போய் விடுவார்களாம். அதை விட முக்கியமாக, நாம் எங்காவது போகிறோம், யாரையாவது பார்க்கப் போகிறோம் என்று தெரிந்தால், வேண்டும் என்றே என்னுடன் வா என்று கூப்பிடுவார்களாம். மறுத்தால் சண்டைதான்...நீ என்னை உண்மையிலேயே லவ் பண்ணலை என்று 'பன்ச்'சுடன்...

பாத்தியா எனக்கும் ஆள் இருக்கு... 

இப்படியும் சிலர் உள்ளனராம். அதாவது தங்களது காதலர்களை சீண்டுவதற்கும், டென்ஷன் கொடுப்பதற்கும், வேண்டும் என்றே மனதை நோகடிப்பதற்காகவும், பிற ஆண்களுடன் நெருங்கிப் பழகுவார்களாம், அவர்களுடன் தாங்கள் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்வார்களாம்... 

இது அமெரிக்க கதை.. நம்ம ஊர் கதை எப்படி என்று தெரியவில்லை!

Join with us on Facebook  >>>

              அறிவியல்


பீகாரில் உலகின் மிகப்பெரிய கோயில் கட்ட ஏற்பாடு

பீகாரில் உலகின் மிகப்பெரிய கோயில் கட்ட ஏற்பாடு


பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய இந்து கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிக்கான பூமி பூஜை, துர்கா பூஜை தினமான எதிர்வரும்11ம் தேதி நடத்தப்படுகிறது.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த கோயிலுக்கு விரட் ராமாயண் மந்திர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயிலை நிர்மாணிக்கும் பணியை செய்து வரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குனால் கூறியதாவது:-

இந்த கோயிலை கட்டுவதற்காக 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சமன்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டது. ரூ.500 கோடி செலவில் கட்டப்படும் இந்த கோயிலின் வளாகத்தில் சிவாலயம் உள்பட 18 சிறிய ஆலயங்கள் அமைக்கப்படும்.

சிவாலயத்துக்கள் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் உருவாக்கப்படும். 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அமரும் வகையில் பிரமாண்டமான அரங்கமும் உருவாக்கப்படும் என கூறினார்.

கம்போடியா நாட்டில் இந்து மன்னர் சூர்யவர்மனால் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோயில் 215 அடி உயரம் கொண்டது. இந்த கோயிலை உலகின் புராதாண சின்னங்களுள் ஒன்றாக 'யுனெஸ்கோ' அறிவித்துள்ளது.

பீகாரில் கட்டப்படவுள்ள இந்த புதிய கோயில் அங்கோர்வாட் கோயிலைவிட 2 மடங்கு உயரம் கொண்டதாக உருவாகலாம் என தெரிகிறது.

Wednesday, October 2, 2013

Maryland-based ASCII Group partnership with V-Rooms Virtual Data Rooms


Maryland-based ASCII Group partnership with V-Rooms Virtual Data Rooms

V-Rooms Virtual Data Rooms and, Maryland-based ASCII Group have completed their partnership preparation process and the Virtual Data Rooms solution is now available through ASCII’s 2,000 technology consultants.

Representing very high $9.7B in revenue, ASCII Group is the largest independent technology solutions provider in the United States. The ASCII Group’s network of solution providers, managed service providers (MSPs), and value added resellers (VARs) are now able to provide the V-Rooms solution.

Virtual Data Rooms was welcomed during the ASCII Success Summit 2013 in Austin, Texas, with the presentation of V-Rooms Pro to the conference attendees. V-Rooms Pro is a secure document sharing solution that provides banking level security, role-based access control, and activity reporting.

V-Rooms are used to exchange mission critical documents such as those used in mergers and acquisitions, pharmaceutical research, clinical trials, and mineral prospecting.

“V-Rooms takes on the challenges of the modern, global workforce with a solution that is easy to use and deploy,” said Karen Perkins, V-Rooms President. “We provide a document sharing platform with the highest level of security that is fully compliant with all major regulations governing financial transactions and personal privacy laws.”

Professionals can edit, view, and collaborate on documents in a Virtual Data Rooms.

Virtual Data Room administrators are able to control who can view, add, or modify documents and folders as well as create custom reports of access logs and file changes. These reports can be used to determine who is contributing to file changes, whether due diligence has occurred, or which investors have spent time evaluating documents.

“We were very happy to have had the opportunity to present the V-Rooms solution at ASCII Success Summit 2013 and look forward to continuing to work with them,” said Dan Bradbary, CEO of V-Rooms.

Tuesday, October 1, 2013

ரஷ்ய விமானநிலைய கிடங்கில் ரூ 1.69 லட்சம் கோடி... சதாம் ஹூசேனுடையதா?

ரஷ்ய விமானநிலைய கிடங்கில் ரூ 1.69 லட்சம் கோடி... சதாம் ஹூசேனுடையதா? 


ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாகக் கிடக்கும் சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகத்தை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று கிளப்பியுள்ளது. 


இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான 'மிரர்' சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கடந்த 2007ம் ஆண்டு, ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து பார்சின் மோட்லாக் என்ற மாபியா அசாமி ஒருவன் ரஷ்யாவில் உள்ள ஷெரமெட்யெவோ விமான நிலையத்திற்கு அனுப்பியது தான் இந்தப்பணம். 


பணத்தை அனுப்பிய ஆசாமியும் பணம் சரியான இடத்தில் சென்று சேர்ந்து விட்டதா என விசாரிக்கவில்லை, பணத்தை உரிமை கொண்டாடி பெற்றுக் கொள்ளவும் யாரும் வரவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம். 

இதனால், கடந்த 6 ஆண்டுகளாக அந்த பார்சல் கேட்பாரற்று ரஷ்ய விமான நிலைய கிடக்கில் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. பணம் முழுவதும் 100 யூரோக்கள் கொண்ட கட்டுகளாக பார்சல் செய்யப்பட்டுள்ளது. 

பணம் ஈரான் நபர் ஒருவரால் அனுப்பப் பட்டுள்ளதாக ரசீதுகளில் குறிப்பிடப் பட்டுள்ளதால், இந்த பணத்தை ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தனது எதிர்கால தேவைக்காக தந்தனுப்பியிருக்கக் கூடும் என அந்த பத்திரிகை சந்தேகம் தெரிவித்துள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


வாடிகன் வரலாற்றில் முதல்முறையாக... ஒரே நேரத்தில் இருவருக்கு புனிதர் பட்டம்

வாடிகன் வரலாற்றில் முதல்முறையாக... ஒரே நேரத்தில் இருவருக்கு புனிதர் பட்டம் 




வாடிகன் நகர வரலாற்றிலேயே முதன்முறையாக முன்னாள் போப்புகள் இருவருக்கு ஒரே நாளில் புனிதர் பட்டம் வழங்க இருப்பதாக தற்போதைய போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

வாழும் காலத்தில் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய கத்தோலிக்க கிறிஸ்துவ மதகுருமார்களுக்கு இத்தாலியில் உள்ள வாடிகன் அரண்மனை 'புனிதர்' அல்லது 'செயின்ட்' எனப்படும் உயரிய பட்டங்களை வழங்கி கௌரவப் படுத்தி வருகின்றது.

அந்தவகையில், ஆட்சி மாற்றம், நோயிலிருந்து விடுதலை, ஏழ்மை மீட்சி போன்ற வியத்தகு செயல்களில் ஈடுபட்டு 2 அற்புதங்களை புரிந்த முன்னாள் போப்புகளில் சிலருக்கு புனிதர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று 1958ம் ஆண்டிலிருந்து 1963 வரை போப்பாக இருந்து மரணமடைந்த போப் 23வது ஜான் மற்றும் 1978ம் ஆண்டிலிருந்து 2005 வரை போப் பதவியை 27 ஆண்டுகள் வகித்த போப் இரண்டாம் ஜான்பால் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட இருப்பதாக என போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

இந்தப் புனிதப்பட்டம் வழங்கும் விழா அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி வாடிகன் அரண்மனையில் நடைபெற இருக்கின்றது.


செல்லிடப்பேசி முக்கிய எண்கள்… [Mobile Phone Important Codes]…

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்… [Mobile Phone Important Codes]…




*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw(+1234567890+1# – Provider Lock Status.
+1234567890+2# – Network Lock Status.
+1234567890+3# – Country Lock Status.
+1234567890+4# – SIM Card Lock Status.)
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


'108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!

'108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்! 


பயங்கரத் திருடனைப் பிடிக்கப் போவதாக நினைத்து அவசரமாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கு கர்ப்பிணிப் பெண்ணொருவருக்குப் பிரசவம் பார்த்த சுவாரஸ்யமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. 

அமெரிக்க, டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி வழியாக போலீஸ் ரோந்து கார் ஒன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு அவசர அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய சிறுவன் ஒருவன் பதட்டமாக, எமர்ஜன்சி எனக் கூறி, ஒரு விலாசத்தை குறிப்பிட்டு உடனடியாக உதவி தேவை எனக் கூறியுள்ளான். 

திருட்டு சம்பவம் போன்ற அசம்பாவிதம் ஏதேனும் நடந்திருக்கலாம் என யூகித்த போலீஸ் அதிகாரி ஜீன் கிம்ப்டன், துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடி, சிறுவன் குறிப்பிட்ட விலாசத்திற்கு விரைந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த அதிகாரியை உட்புறம் உள்ள குளியலறைக்கு அழைத்துச் சென்றுள்ளான் சிறுவன். 

சிறுவன் எதற்காகத் தன்னை குளியலறைக்கு அழைத்துச் செல்கிறான் என குழப்பத்தோடு சென்ற அதிகாரிக்கு அதிர்ச்சி. குளியலறையின் உள்ளே, குழந்தையின் தலை பாதி வெளியேறிய நிலையில் அந்த சிறுவனின் தாயார் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்ததைக் கண்டுள்ளார். 

உடனே, சற்றும் தாமதிக்காமல் தனது கைகளில் உறைகளை மாட்டிக்கொண்ட ஜீன் கிம்ப்டன், அந்த பெண்ணுக்கு தைரியம் கூறி, குழந்தை முழுமையாக வெளியே வர உதவி புரிந்துள்ளார். தாயையும், சேயையும் பத்திரமாக பிரித்தெடுத்த பின்னர், உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்த ஜீன், அவர் பிரசவித்த பெண்ணையும், பிறந்த ஆண் குழந்தையையும் கரோல்டனில் உள்ள பேய்லர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உதவியுள்ளார். 

திருடனைப் பிடிக்கப் போய் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜீன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘எமர்ஜன்சி என்று அந்த சிறுவன் போன் செய்ததும் ஒரு திருடனை பிடிக்கப் போகிறோம் என்ற சுதாரிப்புடன் நான் துப்பாக்கியுடன் அந்த வீட்டினுள் நுழைந்தேன். ஆனால், இந்த பூமிக்கு ஒரு புதிய உயிரை அறிமுகப்படுத்திய பணியில் எனது பங்கும் உண்டு என்பதை எண்ணி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்' என்றார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடல்! 8 லட்சம் ஊழியர்கள் வேலை இழப்பு!!

அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடல்! 8 லட்சம் ஊழியர்கள் வேலை இழப்பு!!



நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் 6 மாத காலம் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பட்ஜெட்டில் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தரப்படவில்லை. இதைத் தொடர்ந்து அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டில் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் பணியாற்றிய 8 லட்சம் ஊழியர்களுக்கு 6 மாத காலம் ஊதியமில்லா கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அத்தியாவசியப் பணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.


Monday, September 30, 2013

நாம் கண்டுபிடித்த அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1000ஐத் தொடப் போகிறதாம்

நாம் கண்டுபிடித்த அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1000ஐத் தொடப் போகிறதாம் 




மனித வாசனையே இல்லாத அன்னிய உலகங்களைக் கண்டுபிடிக்க நாம் ஆரம்பித்து 20 வருடங்களாகி விட்டன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தொடவுள்ளது. அது சில நாட்களில் தெரியலாம் அல்லது சில வாரங்களில் தெரியலாம் என்று வி்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

மலைக்க வைக்கும் விஷயம்தான் விஞ்ஞானம். அதை விட ஆச்சரியமானது விண்வெளியியல். உலகத்தை கீழே பார்ப்பதை விட சற்று மேலே நிமிர்ந்து பாருங்கள்.. எத்தனை எத்தனை ஆச்சரியங்கள், அற்புதங்கள், அமர்க்களங்கள் நமது அண்டவெளியில் கொட்டிக் கிடக்கின்றன தெரியுமா... 

நம்மைப் போலவே யாராச்சும் எங்கேயோவது இருக்கிறார்களா என்பதை அறியும் ஆய்வுகள் பல வருடங்களாகவே நடந்து வருகின்றன. அதிலும் நம்மைப் போன்ற கிரகங்கள் வேறு உள்ளதா என்பதை அறியும் கண்டுபிடிப்புகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. இது நாள் வரை 900க்கும் மேற்பட்ட கிரகங்களை உலக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு இப்போது 1000ஐத் தொடவுள்ளதாம். 

900 அந்நிய கிரகங்கள் 

புதிய கிரகங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளை ஐந்து தகவல் தொகுப்புகளாக வகுத்துள்ளனர். அதில் நான்கு தகவல் தொகுப்புகளின் கணக்குப்படி நமது உலகுக்கு வெளியே 900 புதிய உலகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக கூறப்படுகிறது.

சரியான எண்ணிக்கை 986 

அதேசமயம், இரண்டு தகவல் தொகுப்புகளின் கணக்குப்படி, இதுவரை 986 புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

விரைவில் 1000மாவது உலகம் 

இன்னும் சில வாரங்களில் 1000மாவது உலகத்தின் கண்டுபிடிப்பு குறித்த தகவல் வெளியாகலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

92ல் கண்டுபிடிக்கப்பட்ட 2 கிரகங்கள் 

1992ம் ஆண்டு முதல் முறையாக 2 கிரகங்களை விஞ்ஞானிகள் க ண்டுபிடித்தனர். அதில் ஒன்று பல்சார் அல்லது நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வருவது தெரிய வந்தது. இந்த பல்சாரானது, பூமியிலிருந்து 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலான தொலைவில் உள்ளது.

கெப்ளர்தான் நிறைய கண்டுபிடித்தது 

நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கிதான் பெரும்பாலான புதிய கிரகங்களைக் கண்டுபிடித்த பெருமைக்குரியதாகும்.

3588 புதிய விஷயங்களைக் கண்டுபிடித்த கெப்ளர் 

கெப்ளர் தொலைநோக்கியானது, 3588 பூமிக்கு அப்பால் உள்ள புதிய விஷயங்களை நமக்கு அடையாளம் காட்டி அசத்தியுள்ளது.


160 பில்லியன் உலகங்கள் இருக்கிறதாம் 

ஆயிரம் உலகங்கள் குறித்துத்தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். ஆஐனால் நமது பால்வழிப் பாதையில் கிட்டத்தட்ட 160 பில்லியன் புதிய உலகங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுத்துகின்றனர். எங்கேயாச்சும் தண்ணீர், காத்து நல்லதா இருந்தா சொல்லுங்கப்பா... பொல்லூஷன் மற்றும் பொலிடீசியன்களால் பூமி ரொம்பவே நாறிப் போய்க் கிடக்கு... இடத்தை மாத்தனும்.  


தங்க பொக்கிஷத்தை கொண்ட தீவு விற்பனை

தங்க பொக்கிஷத்தை கொண்ட தீவு விற்பனை




அமெ­ரிக்க கனக்­ரி­கட்­டி­லுள்ள தனியார் தீவொன்று 3.95 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்­ளது.

பிரான்போர்ட் நகர கடற்­க­ரைக்கு அப்பால் அமைந்­துள்­ள­ திம்பிள் தீவுக் கூட்­டத்தில் ஒரு தீவான ஒரு ஏக்கர் நிலப் பரப்பை மட்­டுமே கொண்ட பெல்டென் தீவே இவ்­வாறு விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்­ளது.

17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடற்கொள்ளையர்களின் கப்பல் தலைவனான கிட் இந்த தீவில் பெரு­ம­ளவு தங்­கத்தை புதைத்து வைத்­துள்­ள­தாக வதந்­திகள் உலா­வு­கின்­றன.

இந்தத் தீவின் தற்­போ­தைய உரி­மை­யா­ள­ரான கிறிஸ்ரின் சவென்னிங்ஸென் மேற்­படி தீவை 2006 ஆம் ஆண்டில் 2.66 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு வாங்­கி­யி­ருந்தார்.

இந்த தீவில் 100 ஆண்­டுகள் பழைமையான 7 அறை­களைக் கொண்ட பண்ணை வீடொன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கு தண்டுப் பகுதியில் தக்காளிப்பழம்

வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கு தண்டுப் பகுதியில் தக்காளிப்பழம்




வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கு களையும் தண்டுப் பகுதியில் தக்காளிப் பழங்களையும் கொண்டுள்ள விசித்திர தாவரமொன்று பிரித்தானியாவில் முதல் தடவையாக செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டொம்டரோ என்ற மேற்படி தாவரம் ஒவ்வொன்றும் அதனது வேர் பகுதியில் உருளைக்கிழங்குகளையும் தண்டுப் பகுதியில் 500க்கு மேற்பட்ட தக்காளிப் பழங்களையும் கொண்டுள்ளது.

தாவரங்கள் தொடர்பான நீண்ட கால மரபணு பரிசோதனைக ளையடுத்தே இந்தத் தாவரம் விருத்தி செய்யப்ப ட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் உலக அழகியாக தேர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் உலக அழகியாக தேர்வு



பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இந்தோனேசியாவில் நடந்த உலக அழகி போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகான் யங் உலக அழகியாக வெற்றி பெற்றார். இந்தியா சார்பில் போட்டியிட்ட அழகி நவ்னீத் கவுர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்தோனேசியாவில் 3 வாரங்களுக்கு முன்பு உலக அழகி போட்டி தொடங்கியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையானோர் வசிக்கும் இங்கு, உலக அழகி போட்டி நடத்துவது மதக்கொள்கைக்கு எதிரானது; வெட்கக்கேடானது என்று கூறி முஸ்லிம் பாதுகாப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போரா ட்டம் நடத்தினர். மேலும், சகோதரத்துவம், கலாசாரம் ஆகியவற்றை வலியுறுத்தி முஸ்லிம் இளம்பெண்களுக்கு என தனியாக உலக அழகி போட்டியும் நடத்தினர்.

எனினும், பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே உலக அழகி போட்டியின் இறுதி சுற்று, இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாலி தீவில் நேற்று நடந்தது. போட்டி நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந் தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 127 அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இறுதி சுற்றில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகான் யங் (23) உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்தவர். டிஜிட்டல் பிலிம் தொழில்நுட்பம் பயின்று வருகிறார். 

கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட சீன அழகி வென்சியா யூ, அழகி பட்டத்தை மேகா னுக்கு சூட்டினார். மருத்துவ மாணவிகள் பிரான்ஸ்சை சேர்ந்த மெரின் லார்ப் ஹெலின் (20), கானாவை சேர்ந்த கரான்ஷர் நா ஒஹாலி ஷூட்டர் (23) ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த அழகி நவ்னீத் கவுர், பல சுற்று போட்டிகளில் வென்று டாப் 20 அழகிகள் பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால், டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. எனினும், Ôமிஸ் வேர்ல்ட் வெப்சைட்Õ மற்றும் பேஸ்புக் பக்கங்களில் ரசிகர்களுடன் நடந்த கலந்துரையாடல், வெளியிட்ட படங்களுக்கு கிடை த்த ஆதரவின் அடிப்படையில் Ôமல்டி மீடியாÕ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

எக்ஸ்ட்ரா தகவல்

உலக அழகி பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ரீட்டா பரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டயானா ஹைடன்(1997), யுக்தா முகி(1999), பிரியங்கா சோப்ரா(2000) ஆகியோரும் பிரபஞ்ச அழகி பட்டத்தை சுஷ்மிதா சென்(1994), லாரா தத்தா(2000) பெற்றுள்ளனர்.

மனிதனை போல ரோபாட்டுக்கு மூளை அமெரிக்க பல்கலையில் தமிழர் கண்டுபிடிப்பு

மனிதனை போல ரோபாட்டுக்கு மூளை அமெரிக்க பல்கலையில் தமிழர் கண்டுபிடிப்பு




சொன்னதை செய்யும் ரோபாட்டைதான் (எந்திர மனிதன்) இதுவரை கண்டிருக்கிறோம். இனி, சொல்லாததையும் செய்யும் மனிதனை போல மூளையுள்ள ரோபாட்டை காணப்போகிறோம். ஆம், ரோபாட்டுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட  மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி. மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர். 

ஜகன்னாதன் ரோபாட் பற்றி பல ஆண்டாக ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு, அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி, சுயமாக சிந்தித்து, குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர். இதில் ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து, செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார். எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில்வைத்து, மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபாட்டின் செயல்பாட்டை மாற்றியமைத்துள்ளார். 

சோதனை ரீதியாக ரோபாட்டுக்கு மூளையை பொரு த்தி செயல்படுத்தியபோது, ரோபாட்டுக்கு இலக்கை மட்டும் கமாண்ட் செய்து விட்டால் அதை  அடைய மனிதனை போல தானாகவே சிந்தித்து, செயல்பட முடியும் என்பதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார். ரோபாட்டுக்கு அவர் கண்டுபிடித்த மூளையை பொருத்துவதில் படிப்படியாக மேலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜகன்னாதன், எதிர்காலத்தில் ரோபாட்டால், மனிதனை போல சிரிக்க முடியும்; கோபப்பட முடியும். ஏன், முகபாவத்தை கூட காட்ட  முடியும் என்று உறுதியுடன் கூறுகிறார். 

பாலம் கட்டுவது, மேம்பாலம்  அமைப்பது போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் பத்து புல்டோசர்களை இயக்க வேண்டும் என்றால், அதில் உள்ள பழுதுகளை கண்டுபிடிக்க வேண்டும், அதை சரி செய்யவும் வேண்டும் என்றால் இந்த மூளையுள்ள ரோபாட்களை பயன்படுத்தலாம். அது தான்  என் குறிக்கோள்’ என்றும் அவர் கூறினார்.