Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

Thursday, February 27, 2014

”பூமிக்கு வெளியே புதிய உலகங்கள்”-நாசாவின் அதிசய கண்டுபிடிப்பு

”பூமிக்கு வெளியே புதிய உலகங்கள்”-நாசாவின் அதிசய கண்டுபிடிப்பு 




நாசா சமீபத்தில் கனிம வளம் மிக்க பூமியை போன்ற புதிய கோள்களை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை அன்று புதிய கோள்கள் கண்டுபிடிப்பு பற்றி நாசா செய்தி வெளியிட்டுள்ளது.அதன் படி செழிப்பான புதிய 715 உலகங்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருப்பதாக கூறியுள்ளது. 

வழக்கம் போல நாசாவின் கெப்ளர் தொலைநோக்கிதான் இதையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. இதற்காக கெப்ளர் தொலைநோக்கிக் குழுவுக்கு நாசா நன்றி கூறியுள்ளது.

கிரகங்கள் பற்றிய புதிய வகை ஆராய்ச்சியில் கெப்ளர் குழுதான் மனிதர்கள் வசிக்கும் தகுதி வாய்ந்த பூமியை போன்ற கிரகங்களை ஆராய உதவி புரிந்து வருகிறது.. 

"இந்த ஆராய்ச்சிதான் நாங்கள் கனிம வளங்கள் நிறைந்த,செல்வச்செழிப்பான,மனிதர்கள் வாழத்தகுந்த புதிய கிரகங்களை கண்டறிய உதவி புரிந்தது" என்று நாசாவின் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். 

அப்புதிய 715 கோள்களும் 305 வெவ்வேறான நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்பால் கிட்டதட்ட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கிரகங்களில் 95 சதவீத கோள்கள் பூமியை போன்றே பரப்பளவு, தண்ணீர், நிலப்பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அங்கு மனிதர்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கான நிலைமை நிலவுவதாக கூறப்படுகிறது. எப்படியோ "இரண்டாம் உலகம்" நிஜத்திலும் இருக்கலாம் என்று நிரூபித்துள்ளது 

இந்த புதிய கண்டுபிடிப்பு.சொல்ல முடியாது ஒரு வேளை நம்மை போன்ற உருவ அமைப்பினர் அங்கு வசித்து வரக்கூட சாத்தியம் இருக்கலாம். அங்கேயும் நாராயணசாமி இருக்கலாம்.. ஆதாம் இருக்கலாம்.. ஏவாள் இருக்கலாம்.. யார் கண்டார்.


Thursday, January 16, 2014

மனிதனும் விலங்கு தான்... 6ம் அறிவு என்பது இல்லை: விஞ்ஞானிகள் நிரூபணம்

மனிதனும் விலங்கு தான்... 6ம் அறிவு என்பது இல்லை: விஞ்ஞானிகள் நிரூபணம் 



பகுத்தறியும் திறன் எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று மனிதனிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் இல்லை என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். 

பொதுவாக, மனிதனையும் மற்ற உயிரினங்களையும் வித்தியாசப்படுத்துவது ஆறாம் அறிவு என்ற ஒன்று தான். உடல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காது இவற்றால் உணர்வது ஐந்தாம் அறிவு. இவை ஐந்தையும் தாண்டி, சிந்தனை என்பதன் துணை கொண்டு உணரத்தலைப்படுவது ஆறாம் அறிவு. 

இந்நிலையில், ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லையென்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.


நிரூபணம்.... 

ஆறாம் அறிவு இல்லை என்ற இந்த உண்மையை சிறிய சோதனைகள் மூலம் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த ஆய்வறிக்கைகள் 'பிளோஸ் ஒன்' என்ற இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது


விளக்கம்.... 

இந்த ஆய்வின் முடிவில், ஒரு மாற்றம் ஏற்படும்போது மக்களால் அதைப் பார்க்க இயலவில்லை என்றபோதும் உணரமுடியும் என விளக்கப் பட்டுள்ளது.


உதாரணமாக.... 

உதாரணத்திற்கு ஒருவருடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் உணரும்போதும் அந்த மாற்றம் அவர்களுடைய தலைமுடி திருத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்டது என்பதை நாம் உணரமுடியாமல் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர்.

முதல் ஆராய்ச்சி... 

இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள உளவியல் ஆராய்ச்சிப் பள்ளியின் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் பியர்ஸ் ஹோவே கூறுகையில், ‘மாற்றங்களை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் மனிதனால் உணரமுடியும் என்பதை உறுதிப்படுத்தும் முதல் ஆராய்ச்சி இது என்று குறிப்பிடுகின்றார்.

இது தான் 6வது அறிவு.... 

பொதுவாகக் குறிப்பிடப்படும் ஐம்புலன்களை சார்ந்து இல்லாமல் மனதின் மூலம் மாற்றங்களை உணரமுடியும். இதுவே இதுநாள்வரை ஆறாவது அறிவு என்று குறிப்பிடப்பட்டு வந்தது எனத் தெரிவித்துள்ளார்.


Monday, January 6, 2014

துபாயில் வீடு வாங்கினால் லம்போகினி கார் இனாம்! அருகே உள்ள நங்கை எந்த கணக்கு?

துபாயில் வீடு வாங்கினால் லம்போகினி கார் இனாம்! அருகே உள்ள நங்கை எந்த கணக்கு?




வசிப்பதற்கு ஒரு அட்டகாசமான பெந்த்ஹவுஸ் வாங்கும் திட்டம் உங்களுக்கு உள்ளதா? அதை அந்தப் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம்… ஒரு லம்போகினி ஆடம்பர கார் வாங்கும் பிளான் உள்ளதா? அதை, இந்தப் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது கேள்வி, சின்ன வயதில் மாங்காய்க்கு கல் எறிந்திருக்கிறீர்களா? ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தீர்களா?

இல்லை என்றால் கவலை வேண்டாம். இப்போது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். ஆனால் அதற்கு நீங்கள் துபாய் போக வேண்டியிருக்கும்! (ஏங்க.. போகுமிடம் துபாய். ஜாக்கிரதையாக மாங்காயை மட்டும் அடியுங்க. மாங்கனி கன்னத்தை பார்த்து கண் அடித்தால், கல்லால் அடித்து கொல்லும் தண்டனை இன்னமும் இருக்கிறதாம்)

ஒரு கல் – ரெண்டு மாங்காய் டீல் என்ன?

தமாக் பெந்த்ஹவுஸ் (Damac penthouse) வீடு வாங்கும் கஸ்டமர்களுக்கு, புத்தம் புதிய லம்போகினி கார் இனாமாக கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளது ஒரு நிறுவனம்! துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்காக தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அதற்காக, வீடு வாங்கும் ஆட்களின் பெயர்கள் எல்லாவற்றையும் சீட்டில் எழுதி, குலுக்கிப்போட்டு, அதிஷ்டசாலியாக சித்தப்பாவின் பெயரை எடுக்கும் லோக்கல் கேம் அல்ல இது. வீடு வாங்கும் அனைவருக்கும் கார் இனாம் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த டீலில் ஒரேயொரு கேட்ச், பெரிய வீடுகள் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே, லம்போகினி கார் கொடுப்பார்களாம். மற்றையவர்களுக்கு என்ன,  மந்தாகினியா?

சேச்சே, சிறிய சைஸ் வீடுகள் வாங்கினாலும் கார் இனாம் உண்டு. BMW அல்லது மினி கூப்பர் கார் கிடைக்கும் என அறிவித்துள்ளது ரியல் எஸ்டேட் நிறுவனம்!

லம்போகினி கார் சூப்பராக உள்ளதை, மேலேயுள்ள போட்டோவில் பார்த்திருப்பீர்கள். அந்த போட்டோ, துபாயில் கார் கொடுக்கும் தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்ட போட்டோ அல்ல. “கார் மட்டும்தான் கொடுக்கிறார்கள், அப்புறம் எதற்காக அம்மிணி போட்டோவையும் மேலே போட்டிருக்கிறீர்கள்?” என்று நீங்கள் எம்முடன் சண்டைக்கு வந்தால்,  அதற்கும் ஒரு பதில் எம்மிடம் உள்ளது.

துபாயில் கார் கொடுக்கும் தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் இலவச கார் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பிலும் ஒரு அம்மிணியின் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை 5-வது போட்டோவில் பார்க்கவும்.

நாங்களாவது பரவாயில்லை, அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காரைவிட நங்கையின் போட்டோ பெரிதாக இருக்கிறது! (வீடு வாங்கினால் இனாம், நங்கையா? காரா? என்ற சந்தேகம் எழுவதை தடுக்க முடியாது)

துபாய் நிறுவனம் வெளியிட்டுள்ள சில போட்டோக்களை இணைத்துள்ளோம். முதலில் அவர்கள் இனாமாக கொடுக்கும் காரின் போட்டோக்களை பாருங்கள்… அதன்பின், அந்த காரை இனாமாக பெற, நீங்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய வீட்டின் போட்டோக்களை பாருங்கள்.

இதுதான் நாம் போட்ட போட்டோ வரிசை. இந்த போட்டோ வரிசையை  எப்போது மாற்ற வேண்டும் தெரியுமா?

ஒருவேளை போட்டோக்களை பார்த்துவிட்டு வாங்கும் ஆசை ஏற்பட்டு, அதற்காக சம்சாரத்திடம் அனுமதியும் பெற வேண்டிய கட்டாயம் இருந்தால்… எமது ஆலோசனை, சம்சாரத்திடம் முதலில் வீட்டின் போட்டோக்களை காட்டுங்கள்…  அப்புறம் காரின் போட்டோக்கள்…  அம்மிணியின் போட்டோ வேண்டாம்!









“செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” மிரளும் அமெரிக்கர்கள்!

“செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” மிரளும் அமெரிக்கர்கள்!




“காலநிலை அறிவிப்பின்போது பொதுவாக நாம், ‘உயிர் அச்சுறுத்தல்’ (‘life threatening’) என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதில்லை. ஆனால், ஆம்.. தற்போது ஏற்பட்டுள்ளது ‘உயிர் அச்சுறுத்தல்’ என்ற நிலைமைதான்” என்கிறார், கென் சிமெஸ்கோ. இவர் அமெரிக்கா பிஸ்மார்ச் பகுதியை சேர்ந்த meteorologist.

“தற்போது வெளியே உள்ள மைனஸ்-50 டிகிரி குளிரில் உடலின் பாகங்கள் ஏதாவது தொடர்ந்து 5 நிமிடங்கள் தெரியும்படி நின்றிருந்தாலே, தோலில் frostbite ஏற்பட தொடங்கும். அந்த உடல் பகுதி தொடர்ந்து குளிரில் எக்ஸ்போஸ் செய்யப்பட்டால், மயக்கமடைந்து விழுவதுடன், உயிராபத்தும் ஏற்படலாம். அதுதான் காலநிலை அறிவிப்பில் ‘உயிர் அச்சுறுத்தல்’ என்ற எச்சரிக்கை செய்யப்படுகிறது” என்கிறார் கென்.

கடந்த இரு தினங்களாக கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கடும் மோசமான காலநிலை காணப்படுகிறது. குளிர் என்றால், உங்கவீட்டு குளிர், எங்க வீட்டு குளிர் அல்ல, நிஜமாகவே கிடுகிடுக்க வைக்கும் குளிர்.

அமெரிக்கர்களுக்கு இதில் கடும் கோபம் என்னவென்றால், கனடாவின் மத்திய பகுதியில் ஆரம்பித்த குளிர்தான் படர்ந்து, அமெரிக்காவின் சில பகுதிகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்! கனடாவின் கியுபக் பகுதிகளில் நேற்று முதலே வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தொடர்ந்து அறிவித்தபடி உள்ளார்கள்.

கனடா, டொரண்டோவில் வீதிகளில் கொட்டியிருந்த பனி தொடர்ந்து அகற்றப்பட்ட வண்ணம் உள்ள நிலையிலும், அதன்மேல் செல்லும் வாகனங்களின் அழுத்தம் காரணமாக வீதிகளில் பனி அழுந்தி கெட்டி ஐஸாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதில் வாகனங்கள் அதிகம் சறுக்க தொடங்குகின்றன.

கிழக்கு கனடாவில் உள்ளவர்களுக்கு இது ஓரளவு பரிச்சயமான காலநிலைதான் என்ன போதிலும், கடந்த பல ஆண்டுகளாக இந்தளவு மோசமான அளவுக்கு சென்றதில்லை. குளிரில் சடுகுடு விளையாடும் கனேடியர்களுக்கே இப்படி என்றால், அமெரிக்கர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என்று யோசித்து பாருங்கள்.

அதுதான், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில், ‘உயிர் அச்சுறுத்தல்’ அறிவிப்பை விடுத்துவிட்டு மிரண்டுபோய் உள்ளார்கள்! அமெரிக்க டி.வி. சேனல் ஒன்று, “செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” என்று மிரட்டுகிறது.

அமெரிக்காவின் வடக்கு டகோட்டா பகுதிகளில் காற்றுடன் சேர்ந்த குளிர் (wind chill factor) இன்றிரவு மைனஸ் 60 வரை போகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சனி ஞாயிறு தினங்களில் மத்திய கனடா, வடகிழக்கு அமெரிக்காவில் மற்றொரு பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது. 6 முதல் 12 அங்குல பனிப்பொழிவு இருக்குமாம்.

நீங்கள் வட அமெரிக்காவுக்கு (கனடா, அமெரிக்கா) வெளியே வசிப்பவராக இருந்தால், நம்மூரில் நிலைமை எப்படி என்று பார்க்க ஆவல் உள்ளவர்களாக இருப்பீர்கள் அல்லவா? இதோ, நேற்று எடுக்கப்பட்ட சில போட்டோக்களை இணைத்துள்ளோம். 



















Friday, January 3, 2014

AK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் (AK 47 ய் உருவாக்கியவரின் ஜாபகார்த்தமாக)

AK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் (AK  47 ய் உருவாக்கியவரின் ஜாபகார்த்தமாக) 


1980களில் நடைபெற்ற ஒரு சம்பவம். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்திக்க விரும்பம் தெரிவித்தார். அதையடுத்து புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் ராமாவாரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்தார். விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி பேசிக்கொண்டு இருந்தபோது, ஆயுதங்கள் வாங்குவதற்கு பணப் பற்றாக்குறை இருப்பதை தெரிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

சந்திப்பு முடிந்து ஆன்டன் பாலசிங்கம் திரும்பியபோது, புலிகள் இயக்கம் கனவில்கூட நினைக்காத அளவில் பணத்தை கொடுத்து அனுப்பினார். போலீஸ் காவலுடன் சென்னையில் இருந்த விடுதலைப்புலிகள் பிரபாகரனின் வீட்டுக்கு பெட்டிகளில் கொண்டுசெல்லப்பட்ட அந்த பணத்தை எண்ணி முடிக்கவே, வீட்டில் இருந்தவர்களுக்கு ஒரு இரவு முழுவதும் தேவைப்பட்டது.

அந்தப் பணத்தில் விடுதலைப் புலிகளின் முதலாவது பெரிய தொகை ஆயுதங்கள் வாங்கப்பட்டன. இந்த உதவிக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க விரும்பிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், எம்.ஜி.ஆரை சந்தித்தார். அப்போது, ஞாபகப் பரிசாக ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் பிரபாகரன்.

எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம்வரை, அந்த துப்பாக்கி எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அதன்பின் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

இப்போது, எம்.ஜி.ஆரும் இல்லை. ஆன்டன் பாலசிங்கமும் இல்லை. பிரபாகரனும் இல்லை. அப்படியானால், இந்த சம்பவத்தை எதற்காக சொல்கிறோம்?

மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் ஒரு துப்பாக்கி வருகிறது அல்லவா? Avtomat Kalashnikov-47 அல்லது, சுருக்கமாக ஏ.கே.47 என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட அந்த துப்பாக்கியை உருவாக்கிய மிக்ஹைல் கலாஷ்நிகோவ், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை)  ரஷ்யாவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 94.

‘உலகம் முழுவதும் அறியப்பட்ட துப்பாக்கி’ என்று குறிப்பிட்டோம் அல்லவா? அது வெறும் சம்பிரதாயத்துக்காக சொல்லப்பட்டதல்ல. நிஜமாகவே, ஆயுதங்களில் உலகப் புகழ்பெற்ற, உலகம் முழுவதும் அறியப்பட்ட துப்பாக்கி இதுதான் என்பது உங்களுக்கு தெரியுமா?

இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் 100 மில்லியன் ஏ.கே.-47 துப்பாக்கிகள் பாவனையில் உள்ளன. தீவிரவாத அமைப்புகள் தொடக்கம், உலக நாடுகளின் ராணுவம் வரை ‘விருப்பத்துக்குரிய’ ஆயுதம், இந்த ஏ.கே.-47 துப்பாக்கிதான். இது ஒரு வெறும் துப்பாக்கி என நீங்கள் நினைத்திருந்தால், இந்தக் கட்டுரையை படித்தபின் உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்வீர்கள். கட்டுரையில் ஏ.கே.-47 துப்பாக்கியுடன் தொடர்புள்ள 20 விஷயங்களையும், 20 போட்டோக்களையும் தருகிறோம்.

அட, இதற்குப் பின் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்பட சான்ஸ் உள்ளது.

1) மிக்ஹைல் கலாஷ்நிகோவ், 2-ம் உலக யுத்தத்தின்போது ரஷ்ய ராணுவத்தில் டாங்கி கமாண்டராக இருந்தவர். 1942-ம் ஆண்டு பிரையன்ஸ்க் என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இவரது தோளில் காயம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அதே வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றைய ராணுவ வீரர்கள், தாம் யுத்தம் புரிந்தபோது உபயோகித்த ரஷ்ய துப்பாக்கிகள் சரியாக இயங்குவதில்லை என அடிக்கடி பேசிக்கொள்வதை கேட்க நேர்ந்தது.

தாமே ஒரு துப்பாக்கியை ஏன் டிசைன் பண்ணக்கூடாது என்று மிக்ஹைல் கலாஷ்நிகோவ்க்கு தோன்றியது. அந்த ஐடியாவுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்து டிசைன் பண்ணிய துப்பாக்கிதான், ஏ.கே.-47.

1-வது போட்டோஏ.கே.-47 துப்பாக்கியை இளவயது மிக்ஹைல் கலாஷ்நிகோவ் டிசைன் செய்தபோது எடுக்கப்பட்டது. 


2) முதலாவது ஏ.கே.-47 துப்பாக்கி 1947-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 1949-ம் ஆண்டில் இருந்து, ரஷ்ய ராணுவத்தின் பிரதான துப்பாக்கியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ராணுவம் மட்டுமல்ல, 1970களில் இருந்து விடுதலை இயக்கங்களும், தமது பிரதான ஆயுதமாக ஏ.கே.-47 துப்பாக்கியையே பயன்படுத்த தொடங்கினர்.

2-வது போட்டோ, இலங்கையில் 1980களின் நடுப்பகுதியில், தமிழீழ விடுதலை இயக்க (டெலோ) போராளிகள், இலங்கை ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் ஒன்றை நடத்த ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் வேனில் செல்லும் காட்சி. இதில் யாராவது இப்போது உயிருடன் இருக்கிறார்களா, தெரியவில்லை.

3) ஏ.கே.-47 துப்பாக்கியின் குறைந்த தயாரிப்பு செலவு, இலகுவில் பழுது பார்க்கும் வசதி ஆகியவை ஒரு பக்கமாக இந்த துப்பாக்கியை பிரபலமாக்கின. மற்றொரு பக்கமாக, இதன் பிளஸ் பாயின்ட், உலகின் எந்த பகுதியிலும், எந்த காலநிலையிலும் ஜாம் ஆகாது சுடக்கூடிய துப்பாக்கி இது என்பதால், அனைவராலும் விரும்பப்பட்டது.

அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகள் பாலைவன மணலிலும், கடும் மழையின்போதும், ஜாம் ஆகிவிடும் என்ற நிலையில் இருக்க, ஆப்கானிஸ்தான் ‘கிராம பாதுகாப்பு படையில்’ உள்ள பெண்களே ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் நிற்பதை 3-வது போட்டோவில் பாருங்கள்.

4) ரஷ்யாவின் டாப் கூடைப்பந்து விளையாட்டு வீரரின் பெயர், அன்ட்ரே கிரிலென்கோ. சரி இவருக்கும் ஏ.கே.-47 துப்பாக்கிக்கும் என்ன தொடர்பு? கூடைப்பந்த விளையாட வரும்போது துப்பாக்கியுடன் வருவாரா? சேச்சே அதல்ல.

இவர் பிறந்த நகரத்தின் பெயர், துப்பாக்கி இஸ்கவ்ஸ்க். இந்த நகரத்தில்தான், ஏ.கே.-47 துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. கூடைப்பந்து விளையாட்டில் இவரது இலக்கம் 47. இந்த இரண்டையும் சேர்ந்து இவருக்கு கிடைத்த பட்டப்பெயர், ஏ.கே.-47. ரஷ்ய விளையாட்டு ரசிகர்கள், “இதோ, ஏ.கே.-47 கையில் பந்து கிடைத்து விட்டது” என உற்சாக கூச்சல் எழுப்ப, 47-ம் இலக்கம் பொறிக்கப்பட்ட உடையுடன் ‘ஏ.கே.-47’ அன்ட்ரே கிரிலென்கோவை 4-வது போட்டோவில் பாருங்கள்.

5) கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர் சீசர் லோபஸ் சுமார் ஒரு டஜன் ஏ.கே.47 துப்பாக்கிகளை வாங்கி, அவற்றை கிடார் வாத்தியமாக மாற்றினார் (யுத்தம் கூடாது என்பதை சிம்பாலிக்காக காட்டுவதற்கு). 2007-ம் ஆண்டு ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த கோபி அனனை சந்தித்த சீசர் லோபஸ் ஏ.கே.-47 கிடாரை பரிசாக கொடுத்தபோது எடுத்ததுதான், 5-வது போட்டோ.

6) பெலாரஸ் நாட்டில் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளுக்குள் ஆசிரியர்களால் எடுத்துச் செல்லப்படும் துப்பாக்கி, ஏ.கே.-47தான்! காரணம், அங்கு மேல்நிலைப் பள்ளியில், ராணுவ பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதில் செய்முறைப் பயிற்சியாக ஏ.கே.-47 துப்பாக்கியை இயக்குதல் மற்றும், கழட்டிப் பூட்டும் பயிற்சிகளுக்கு நிஜ ஏ.கே.-47 துப்பாக்கிகளை பயன்படுத்துவதை 6-வது போட்டோவில் பாருங்கள்.

7) உலகப் புகழ் பெற்ற ஏ.கே.-47 துப்பாக்கி படம் பொறிக்கப்பட்ட நாணயம் ரஷ்யாவில் வெளியிடப்படுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால், சமாதானத்தை விரும்பும் நியூசிலாந்து நாடு, 2 டாலர் நாணயம் ஒன்றில் ஏ.கே.-47 துப்பாக்கியின் படம் பொறித்து வெளியிட்டது. இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியானதை அடுத்து, இந்த நாணயம் வெளியிடப்பட்டது.

8) ஏ.கே.-47 துப்பாக்கியை, தேசியக் கொடியில் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? மொசாம்பிக். இவர்களது தேசியக் கொடியில் ஏ.கே.-47 படம் இருப்பதை 8-வது போட்டோவில் பார்க்கவும். அதேபோல லெபனானின் ஹிஸ்பொல்லா இயக்கத்தின் கொடியிலும் ஏ.கே.-47 துப்பாக்கி உள்ளது.  

9) ஏ.கே.-47 துப்பாக்கியின் பெயர், கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் அதிக எண்ணிக்கையில் (100 மில்லியன்) பயன்பாட்டில் உள்ள துப்பாக்கி என கின்னஸ் பதிவு சொல்கிறது. 9-வது படத்தில் ஏ.கே.-47 எப்படி உபயோகிக்கப்படுகிறது பாருங்கள்.

போட்டோவில் உள்ளது, பாலஸ்தீன போலீஸ் படையில் ஆட்களை சேர்க்கும்போது வைக்கப்படும் ஒரு டெஸ்ட். அதாவது, ஏ.கே.-47 துப்பாக்கியால் சடசடவென்று மண்ணில் சுடுவார்கள். போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ‘டைவ்’ அடித்து தப்பிக்க வேண்டும். அடேங்கப்பா.. நம்ம மருதை ஏட்டையா இப்படி அடிப்பாரா டைவ்?

10) உலகில் 106 நாடுகளைச் சேர்ந்த ராணுவம், மற்றும் அதிரடிப் படையினர், ஏ.கே.-47 துப்பாக்கிகளை தற்போது உபயோகிக்கின்றனர். அதைவிட அதிக எண்ணிக்கையில் அந்த ராணுவத்துடன் யுத்தம் புரியும் விடுதலை இயக்கங்களும் இதே துப்பாக்கியை உபயோகிக்கின்றனர். 1980-ம் ஆண்டு ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஏ.கே.-47 ஏந்திய பாதுகாவலுடன் இருப்பதை 10-வது போட்டோவில் பார்க்கவும்.

11) ரஷ்ய துப்பாக்கி என அறியப்பட்ட ஏ.கே.-47, ரஷ்யாவில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. சுமார் 30 நாடுகளில் ஏ.கே.-47 துப்பாக்கிகளை தயாரிக்க லைசென்ஸ் கொடுத்துள்ளது ரஷ்யா. அப்படி லைசென்ஸ் பெற்று ஏ.கே.-47 துப்பாக்கிகளை தயாரிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பது உங்களுக்கு தெரியுமா?

பாக்தாத் பல்கலைக்கழக மாணவர்களையும், மாணவிகளையும் துப்பாக்கி பயிற்சிக்கு வாருங்கள் என 1998-ம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுக்கு பயிற்சி கொடுக்க உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ஏ.கே.-47தான். 11-வது போட்டோவில், பாக்தாத் பல்களைக்கழக மாணவி ஒருவர் ஏ.கே.-47 துப்பாக்கியை ஹான்டில் பண்ணுவதை பாருங்கள்.

12) கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி, இத்தாலியின் ஜியோயா டோரோ துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த கன்டெயினர் ஒன்றை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் 8,000 ஏ.கே.-47 துப்பாக்கிகள் இருந்தன. அப்போது எடுக்கப்பட்ட போட்டோதான், 12-வது போட்டோவாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஒரே ரக ஆயுதங்கள் (பெறுமதி 6 மில்லியன் யூரோ) இதுவரை பிடிபட்டதில்லை.

சரி. அந்தக் கப்பலில் ஆயுதங்கள் எங்கே போக இருந்தன? ரோமானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற கப்பல் அது! அடப் பாவிகளா!

13) ஏ.கே.-47, தயாரிப்பு செலவு குறைந்த துப்பாக்கி என குறிப்பிட்டு இருந்தோம். இன்றைக்கு ஆயுத சந்தையில் இந்த துப்பாக்கியின் விலை என்ன தெரியுமா? ஒரு துப்பாக்கி சராசரியாக 540 டாலர்! மற்றொரு விஷயம், சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு, ஆயுத கறுப்பு சந்தையில் இதே துப்பாக்கி 200 டாலர் குறைவாக விற்பனையாகிறது.

இவ்வளவு மலிவாக உள்ளதால், மொன்ரோவியா டவுன்டவுனில் நடந்த ஒரு வீதிச் சண்டையிலும் ஏ.கே.-47 துப்பாக்கி உபயோகிக்கப்படுவதை, 13-வது போட்டோவில் பாருங்களேன்.

14) அதிர்ச்சியான ஒரு விஷயம் தெரியுமா? உலக அளவில் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில், மிக அதிக எண்ணிக்கையானவர்கள் ஏ.கே.-47 துப்பாக்கியில் இருந்து வந்த ரவையால்தான் உயிரிழந்துள்ளனர். ஆம். ஆட்டிலரி தாக்குதல், விமான தாக்குதல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களில் இறந்தவர்களின் மொத்த கூட்டுத்தொகையைவிட, ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்!

இன்றுகூட ஆண்டுக்கு சுமார் கால் மில்லியன் பேர் ஏ.கே.-47 துப்பாக்கியால் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். 14-வது போட்டோவில், இந்தோனேசியா காட்டுக்குள் ஏ.கே.-47 துப்பாக்கியுடன் பயிற்சி எடுப்பவர்களின் வயதைப் பாருங்கள்! 1999-ம் ஆண்டு எடுக்கப்பட்ட போட்டோ அது.

15) அமெரிக்க அதிரடிப் படையால் கொல்லப்பட்ட அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், தமது வீடியோ பேட்டிகள் அனைத்திலும் தமக்கு அருகே ஏ.கே.-47 துப்பாக்கி இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டார் என்பதை 15-வது போட்டோவில் பார்க்கவும். காரணம், அவர் முதல் முதலில் இயக்கிய எந்திரத் துப்பாக்கி, ஏ.கே.-47 என்ற அபிமானத்தால்!

ஆமா.. பின்-லேடனுக்கு முதல் முதலில் ஏ.கே.-47 துப்பாக்கியை கொடுத்தது யார்? சாட்சாத், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.தான்!

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக போர் புரிய அல்-காய்தாவுக்கு ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளை முதலில் கொடுத்தது சி.ஐ.ஏ.தான். பாகிஸ்தான் உளவுத்துறை மூலம் அந்த துப்பாக்கிகள் ஆப்கானிஸ்தானுக்குள் சென்றன!

16) வியட்நாம் யுத்தத்தில் நடந்த ஒரு தமாஷ் தெரியுமா? அநேக அமெரிக்க ராணுவ வீரர்கள், தமது (அமெரிக்க தயாரிப்பு) M16 எந்திரத் துப்பாக்கிகளை, (ரஷ்ய தயாரிப்பு) ஏ.கே.-47 துப்பாக்கிகளுக்கு மாற்றீடு செய்து கொண்டார்கள்.

யுத்தத்தில் வியட்நாமியர்களை சுட்டு வீழ்த்தியபோது, தமது M16 துப்பாக்கிகளை வீசிவிட்டு, உயிரிழந்த வியட்நாமியர்களின் உடலில் இருந்த ஏ.கே.-47 துப்பாக்கிகளை எடுத்து பயன்படுத்தினார்கள். காரணம், வியட்நாமிய காலநிலையில் அமெரிக்க துப்பாக்கிகள் அடிக்கடி ஜாம் ஆகின. ஏ.கே.-47 துப்பாக்கிகள் துல்லியமாக இயங்கின.

16-வது போட்டோவில் ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் இருப்பது, நிக்கரகுவா நாட்டு அதிரடிப்படை. “COE” (Centro de Operaciones Especiales) என்ற பெயருடடைய இந்த அதிரடிப் படையினரின் தனித் திறமை என்ன தெரியுமா? சகதிகளுக்குள் விழுந்து புரண்டு சண்டையிடுவது. சகதிக்குள் விழுந்தாலும், அற்புதமாக இயங்கும் துப்பாக்கிகள் ஏ.கே.-47 என்கிறார்கள் இவர்கள்.

17) ரஷ்யாவில் பிரபலமான ஒன்று ஏ.கே.-47 துப்பாக்கி என்றால், மற்றொரு பிரபலமான விஷயம் என்ன தெரியுமல்லவா? ஆம். வாட்கா மதுபானம். இந்த வாட்கா மதுபானத்தை பயன்படுத்தி செய்யும் காக்டெயில் ஒன்றின் பெயர், ஏ.கே.-47ன் பெயர்தான்!

‘Kalashnikov shot’ எனப்படும் அந்த காக்டெயில், வாட்கா, அப்சிந்த், கறுவா, சர்க்கரை ஆகியவற்றின் கலவை. ரஷ்யா போகும்போது டேஸ்ட் பண்ணி பார்க்கவும். ஜாக்கிரதை… அடித்தால், ஆளை வீழ்த்திவிடும்! 17-வது ‘அதிர்ச்சி’ போட்டோவில், ஈராக்கிய பாதுகாப்பு படையினரின் கையில் உள்ள ஏ.கே.-47 துப்பாக்கி எந்த நிமிடமும் வெடிக்க போகிறது. அதில் இருந்து வெளியாகப்போகும் ரவைக்கு உயிரைவிட தயாராக உள்ளவர், அல்-காய்தா சந்தேக நபர் ஒருவர்.

18) ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சதாம் ஹூசேனின் மாளிகையை கைப்பற்றியபோது, அங்கிருந்தது எடுக்கப்பட்ட ஆயுதங்களில் ஒன்று, ஏ.கே.-47 துப்பாக்கி. அதில் அப்படியென்ன விசேஷம்? முழுமையாக தங்கத்தால் முலாம் பூசப்பட்டிருந்த துப்பாக்கி அது! 18-வது போட்டோவும் ‘அதிர்ச்சி’ போட்டோதான்.

தாய்லாந்தின் யாலா மாகாண காட்டுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட தீவிரவாதி ஒருவரின் போட்டோ அது. உயிரிழந்த நிலையிலும், தனது ஏ.கே.-47 துப்பாக்கியை விடாமல் பற்றியிருப்பதை பாருங்கள்.

19) இலங்கையில் யுத்தம் முடிந்தபின், இறுதி யுத்தம் பற்றிய விபரங்களுக்காக சில ராணுவ தளபதிகளை சந்தித்து பேட்டியெடுக்க வேண்டியிருந்தது. அப்போது இலங்கை ராணுவத்தின் பெரிய தளபதிகளில் ஒருவர், விடுதலைப்புலிகள் பற்றி தெரிவித்த ஒரு விஷயம், “புலிகள் இயக்கத்தில் இரு திறமைசாலியான தளபதிகள் இருந்தார்கள். இருவரும் உயிரிழந்ததுதான் சோகம். அவர்கள் எமது ராணுவத்தில் இருந்திருந்தால், நாம் எப்போதோ யுத்தத்தை முடித்திருப்போம்”

அவர் குறிப்பிட்ட இரு தளபதிகளில் ஒருவர், பால்ராஜ் (மற்றையவர் தீபன்). 19-வது போட்டோ, புலிகள் ராணுவ முகாம் ஒன்றை தாக்க சென்றபோது எடுக்கப்பட்டது. அதில், தண்ணீரைத் தாண்டி பால்ராஜ் செல்லும்போது, அவருக்கு பின்னால் உள்ள போராளி உயர்த்தி பிடித்துள்ள துப்பாக்கி, ஏ.கே.-47!

20) ஏ.கே.-47 துப்பாக்கியை உருவாக்கிய மிக்ஹைல் கலாஷ்நிகோவ், அந்த துப்பாக்கி மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை எடுத்தது குறித்து என்ன சொன்னார்?

1997-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அவர் கலந்துகொண்ட துப்பாக்கி கண்காட்சி ஒன்றில் பேசியபோது (அப்போது எடுக்கப்பட்ட போட்டோதான் 20-வது போட்டோ) “இது குறித்து நான் கவலைப்படவில்லை. மக்களை கொல்லும் பாவச்செயலை செய்வது அரசியல்வாதிகள்தான். துப்பாக்கியை வடிவமைத்த நான் அல்ல. நான் இப்போது படுத்தாலும், நிம்மதியாக தூங்க முடிகிறது. காரணம், அந்த பாவத்தின் சுமை, என் தலையில் இல்லை” என்றார்.

மிக்ஹைல் கலாஷ்நிகோவ், கடந்த திங்கட்கிழமை இறந்து போனார். ஆனால், அவர் உருவாக்கிய ஏ.கே.-47 துப்பாக்கி இன்னமும் பல ஆண்டுகளுக்கு வெடித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது!






















நன்றி
ரிஷி அண்ணா (விறு) 


வாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்படி ரூ. 279 ஆயிரம் கோடியாம்!

வாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்படி ரூ. 279 ஆயிரம் கோடியாம்! 



உலகின் மிகப் பெரிய சூதாட்ட மையம் என்ற பெருமையை 2013ம் ஆண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது சீனாவின் சின்னஞ் சிறிய சூதாட்ட நகரான மக்காவ். 

இங்குள்ள சூதாட்ட கேஸினோக்கள் 2013ம் ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ. 279 ஆயிரம் கோடியாகும். வருடத்திற்கு வருடம் இங்குள்ள கேஸினோக்கள் ஈட்டும் வருவாயின் அளவு கூடிக் கொண்டேதான் போகிறதாம். மேலும் இங்குள்ள கேஸினோக்களுக்கு சூதாட வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியேதான் இருக்கிறதாம்.

குட்டி நகரம் 

மக்காவ், சீனாவின் மிக சிறிய நகரமாகும். இங்கு சூதாட்டம்தான் பிரதான தொழிலாகும்.


3 டஜன் கேஸினோக்கள் 

இந்த குட்டி நகரில் 3 டஜன் கேஸினோக்கள் உள்ளன. இந்த கேஸினோக்கள்தான் இப்படி வருவாயை அள்ளிக் கொட்டுகின்றன.


18.6 சதவீத வருவாய் உயர்வு 

2012ம் ஆண்டை விட 2013ம் ஆண்டில் இங்குள்ள கேஸினோக்கள் பெருமளவில் வருவாய் ஈட்டியுள்ளன. அதாவது 18.6 சதவீத உயர்வை இவை கண்டுள்ளன.


லாஸ் வேகாஸை விட 7 மடங்கு அதிகம் 

மக்காவ் கேஸினோக்கள் ஈட்டும் வருவாயானது, அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் உள்ள கேஸினோக்கள் ஈட்டும் வருவுாயை விட 7 மடங்கு அதிகமாகும்.


போர்ச்சுக்கீசிய நகரம் 

முன்பு மக்காவ், போர்ச்சுகீசியர்களின் வசம் இருந்த நகராகும். அப்போதுதான் இது கேஸினோ நகரமாக அவதாரம் எடுத்தது. இப்போது அது பாரம்பரியத் தொழிலாகி விட்டது. மேலும் இங்கு பல்வேறு வெ்ளிநாட்டு கேஸினோக்களும் கூட சூதாட்டத்தை நடத்தி வருகின்றன.

ஹாங்காங்குக்கு அருகில் 

ஹாங்காங்குக்கு அருகில் உள்ளது மக்காவ். அங்கிருந்து படகு மூலம் ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம்.