Friday, September 14, 2012

ஹார்ட் அட்டாக் வருமா?


ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்

 
மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நேத்து வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு வந்திருச்சாம் என்று பேசுவதை கேட்டிருப்போம். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது. எதனால் இந்த திடீர் மரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

வேலை, குடும்பம், உடல்பருமன், மனஅழுத்தம் மற்றும் பணப் பிரச்சனைகளினால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து இதை கணிக்க முடியும் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. தலைமுடியில் உள்ள கார்டிசால் ஹார்மோன் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேலில் உள்ள மெய்ர் மெடிகல் சென்டரில் அனுமதிக்கப்பட்ட, மாரடைப்பு ஏற்பட்ட 56 ஆண்களின் முடி மாதிரியையும், இதய நோயாளிகள் அல்லாத 56 ஆண்களின் முடி மாதிரியையும் பரிசோதித்தனர். இதில் மாரடைப்பு நோயாளிகளின் முடியில் கார்டிசால் அதிக அளவில் இருந்தது தெரியவந்ததாம்.

வழக்கமாக ரத்த நிணநீர், சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் தான் கார்டிசாலின் அளவு கண்டறியப்பட்டது. இவற்றில் சில மணி நேரத்தில் இருந்து சில நாட்கள் வரை உள்ள கார்டிசாலைத் தான் அளக்க முடியும். இதனால் நீண்ட காலமாக உள்ள அழுத்தத்தைக் கண்டறிய முடியாது. ஆனால் தலைமுடியில் உள்ள கார்டிசாலை வைத்து பல மாதங்களுக்கு முன்பே மாரடைப்பை கணிக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சாதாரணமாக நமது தலை முடி ஒவ்வொரு மாதமும் 1 செமீ வளர்கிறது. 6 செமீ நீளம் உள்ள முடியை பரிசோதனை செய்வதன் மூலம் நெடுங்காலமாக இருந்து வரும் அழுத்த அளவை அறியலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

6 அறிவு மனிதனே கவனி ...


ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம், கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் ..... 6 அறிவு மனிதனே கவனி ...

 



நீ (மனிதன்) மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்….
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன…

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன…
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை…
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது…

இப்படி உன் (மனிதனின்) உடல் சிதைந்து போக…… (மனிதனுக்கு) உனக்கு  
ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,
கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா…??



றறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா……????

நரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் !


நரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் !


 

சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அது வானத்தில் அல்லது இந்திரலோகத்தில் இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் பூமியில் ஒரு நரகத்தின் வாசல் படி பலகாலமாக இருக்கிறதே யாராவது அறிவீர்களா ?



ஆம் இதனை ஆங்கிலேயர், நரகத்தின் வாசல் என்று அழைக்கிறார்கள். டேக்மேனிஸ்தான் (அக்பானிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடு) என்னும் நாட்டில் உள்ள கராக்கும் என்னும் பாலைவனத்தில் இந்த நரகத்தின் வாசல் காணப்படுகிறது.



40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வாளர்களால் கண்டுபிடி க்கப்பட்டு ஆராய்ந்த போது இக் குழியினுள் மனிதனுக்கு பேராபத்தை உண்டாக்க‍ கூடிய இயற்கை எரிவாயு வெளியே றுவதை தடுக்கும் விதமாக இக்குழியில் தீ முட்டி னார்கள் ஆனால் இன்று வரை அக்குழியில் இயற்கை வாயு வெளியேற்றம் நிற்காத தால், குறித்த நெருப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. இக்குழி ”நரகத்தின் வாசல்” என சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.

 

 

 

இந்த ஓட்டையின் ஆழத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அதனுள் எரியும் நெருப்பு ! உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக இதனை ஏன் இன்னும் இணைக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு , இது அமைந்துள்ளது.


ஐபோன் 5 வெளியானது (காணொளி



உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 5 வெளியானது (காணொளி)



உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 5 ஸ்மார்ட்போனை அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் கூப்பர்டீனோ நகரை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஆப்பிள் இன்கார்ப்பரேஷன்.
கணனிகள், மென்பொருள், வன்பொருள், ஐபேட், டேப்லட் கம்ப்யூட்டர், மீடியா பிளேயரான ஐபாட் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

 


பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை 2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறது.

                                 

முதல் தலைமுறை ஸ்மார்ட்போன் ஐபோன் என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஐபோன் 3ஜி(2008), 3ஜிஎஸ்(2009), ஐபோன்4(2010), 4எஸ்(2011 அக்டோபர்) ஆகியவை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஐபோன் வரிசையில் 6வது தலைமுறை ஸ்மார்ட்போன் ஐபோன் 5 நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை வந்த மொடல்களைவிட இது நீளமானது, ஒல்லியானது, எடை குறைந்தது, பளபளப்பானது.

கருப்பு, சில்வர் என இரு நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 4எஸ் மொடல் போலவே 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி மாடல்கள் முறையே ரூ.11 ஆயிரம், ரூ.16,500, ரூ.22 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதால் இந்த விலை.

 

ஸ்மார்ட்போனுக்கே உரித்தான டச் ஸ்கிரீன், ஜிபிஎஸ் வசதி, மீடியா பிளேயர், வீடியோ கமெரா, வை,பி மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிகள் இதிலும் உண்டு. 7.66 மி.மீ. தடிமன், 112 கிராம் எடை, இன்னும் அதிக தெளிவான ஸ்கிரீன் ஆகியவை சிறப்பு அம்சங்கள்.

லித்தியம் அயான் பாலிமர் பற்றரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சம் 225 மணி நேரம் வரை பற்றரி சார்ஜ் நிற்கும். பேசினால் 8 மணி நேரம் வரை சார்ஜ் இருக்கும். ஐபோன்5 வாங்குவதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வரும் 21ஆம் திகதி விற்பனை தொடங்குகிறது.

நாயின் நட்பு : நிச்சயம் வாசிங்கள் ஒருமுறை


நாயின் நட்பு : நிச்சயம் வாசிங்கள் ஒருமுறை





நாய் நன்றியுள்ள மிருகம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம். தனது எசமானை பாதுகாக்கும், திருடர்களை துரத்திவிடும் என்று எல்லாம் நாம் படிப்பது உண்டு. சில நாய்கள் அதற்கும் ஒரு படி மேலேபோய் ஆபத்தான சமயங்களில் தனது எசமானைக் காப்பாற்றிய கதைகளும் உண்டு. ஆனால் நீங்கள் இங்கே படிக்கவிருப்பதும் மிகவும் மாறுபட்ட ஒரு உண்மைச் சம்பவம். வாசித்தால் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கும் அளவுக்கு, இந்த நாயின் நன்றி உணர்வு இருக்கிறது. தமிழர்கள் இதனை ஒரு முறை அழுத்தம் திருத்தமாகப் படிப்பது நல்லது !

ஜேர்மனியில் உள்ள புறநகர்ப் பகுதி ஒன்றில் வசித்துவந்தார் முகுள் குஸ்மான் என்னும் நபர். இவருக்கு ஜேர்மன் ஷப்பர்ட் கப்டன் எனப்படும் (ஒரு வகை இனம்) நாயை அவரது மகன் பரிசளித்தார். அதனை வளர்த்து வந்த குஸ்மான் கடந்த 2006ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனை அடுத்து அவர் வளர்த்துவந்த நாய் வீட்டை விட்டு வெளியேறிவிட்டது. கப்டன் என்று அழைக்கப்படும் இந்த நாய் வீட்டை விட்டு வெளியேறி எங்கோ சென்று இறந்துவிட்டது என குஸ்மானின் மனைவியும் குடும்பத்தாரும் நினைத்துவிட்டனர். ஆனால் நடந்த விடையம் மனதைத் தைக்கும் விடையமாக உள்ளது ! சில வாரங்கள் கழித்து குஸ்மானின் குடும்பத்தார், குஸ்மானின் கல்லறைக்கு பூ வைத்து அஞ்சலி செலுத்தச் சென்றுள்ளனர். என்ன ஆச்சரியம் ! சவக்காலையில் உள்ள குஸ்மானின் கல்லறைக்கு பக்கத்தில், கப்டன் எனப்படும் அந்த நாய் இருப்பதைக் கண்டு அனைவரும் ஆடிப்போய்விட்டனர் !

குடும்பத்தாரைப் பார்த்த நாய், அவர்களை வாலாட்டி வரவேற்று, அவர்களோடு உறவாடியது. அவர்கள் கண்களில் கண்ணீரைத் தவிர எதனையும் காணமுடியவில்லை. சவக்காலையில் நாய் இருக்கவேண்டாம் எனக் கருதிய அவர்கள் நாயை காரில் ஏற்றிக்கொண்டு தமது வீட்டிற்குச் சென்றுவிட்டனர். அன்று மாலைவரை குஸ்மானின் வீட்டில் இருந்த நாய், மாலை 6 மணிக்கு இருட்ட ஆரம்பித்தவேளை வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்று, அவரது கல்லறையை அடைந்து அங்கே தங்கிவிட்டது. மீண்டும் மறுநாள் அவர்கள் சென்று யாயைக் கூட்டிவந்தார்கள். முதல் நாள் போலவே மாலைவரை வீட்டில் இருந்த நாய், பின்னர் புறப்பட்டு சவக்காலை சென்றுவிட்டது. இதனைக் கவனித்த குடும்பத்தாருக்கு ஒருவிடையம் நன்றாகப் புரிந்துவிட்டது. அது எக்காரணம் கொண்டும், குஸ்மானை இரவில் தனியாக இருக்க விடாது. அவர் உயிரோடு இருக்கும்வரை அவரை அது இரவில் பாதுகாத்து வந்தது. அதேபோல இறந்த பின்னரும் அந்த நாய் அவரை இரவில் விட்டுவிட்டு வர விரும்பவில்லை !

2006 முதல் இன்றுவரை, அதாவது 6 வருடமாக அந்த நாய், அவரது கல்லறைக்கு பக்கத்திலேயே இருக்கிறது. இதனைப் பார்த்த சவக்காலைக்கு அருக்கில் உள்ள மக்கள் அதற்கு சாப்பாடு வழங்கி வருகின்றனர். சிலர் போர்வைகளால் போர்த்து அதனை குளிரில் இருந்து பாதுகாத்து வருகின்றனர். கடும் குழிர், மழை, பனிப் பொழிவு என்ன கால நிலை இருந்தாலும் அது தனது எசமானின் கல்லறையைச் சுற்றி வருகிறது. அதனை அது பாதுகாத்தும் வருகிறது. இதில் விநோதம் என்னவென்றால், குஸ்மான் இறந்தபின்னர், அவரது உடலை குறிப்பிட்ட சவக்காலையில் அடக்கம் செய்ய, உறவினர்கள் சென்றவேளை இந்த நாயை அவர்கள், தமது மற்றுமொரு உறவினர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். எனவே குஸ்மானின் உடல் எந்த சவக்காலையில் புதைக்கப்பட்டது என்பது இந்த நாய்க்குத் தெரியாது. ஆனால் எப்படி அது அதனைத் தேடிக் கண்டுபிடித்தது என்பதுதான் பெரிய அதிசயம் என்கிறார்கள் மக்கள்.

இதேபோல பிறிதொரு சம்பவம் டோக்கியோவிலும் பதிவாகியுள்ளது. ஜப்பானில் உள்ள நபர் ஒருவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். அவர் வேலைசென்று திரும்பும்போது, ஒவர் நாளும் அந்த நாய் அவரை ரயில்வே நிலையம் சென்று வரவேற்கும். ஒரு நாள் அவர் வேலை இடத்திலேயே இறந்துவிட்டார். அன்று அவர் ரயில்வே நிலையம் வரவில்லை. ஆனால் அந்த நாய் சுமார் 8 ஆண்டுகளாக ஒவர் நாளும் குறிப்பிட்ட நேரத்துக்குப் போய் எசமான் வருவார் எனக் காத்திருக்குமாம். பின்னர் ஒரு நாள் அது ரயில்வே நிலையத்திலேயே இறந்தும் விட்டது.

இச் செய்தி இன்று பிரித்தானியா முதல் உலகளாவிய ரீதியில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இச் செய்தியை வாசித்து நான் அழுதுவிட்டேன் என்று பலர் காமென்ஸ் எழுதி, இந்த நாயை ஒரு நட்பின் அடையாளமாக, உண்மையான விசுவாசியாகப் பார்கிறார்கள். நம்பில் எத்தனைபேர் நட்பை மதிக்கிறார்கள். உதவிபுரிந்தவர்களுக்கு விசுவாசியாக உள்ளார்கள் ? ஒரு நாய்க்கு இருக்கும் அறிவு கூடவா எமக்கு இல்லை என்று மனித குலம் வெட்க்கி நாணும் அளவுக்கு இந்த நாய் உயர்ந்து நிற்கிறது.








Thursday, September 13, 2012

அடிக்கடி பித்தம் தலைசுற்றல் மற்றும் தோல் வியாதிகள்


அடிக்கடி பித்தம் தலைசுற்றல் மற்றும் தோல் வியாதிகள்



 
 

அடிக்கடி பித்தம் தலைசுற்றல் மற்றும் தோல் வியாதிகள் வருபவர்களுக்கு நிரந்தர குணம் தெரிவதற்கு கொத்தமல்லி விதை (தனியா) பச்சையாக ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் இந்த உடைத்த தனியாவை ஒரு கை அள்ளி, கொதித்த வென்னீரில் போட்டு மூடி வைக்கவும்.

தேவையானால் சிறிது நேரம் கொதிக்க வைக்கலாம். பிறகு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். உடலில் கெட்ட நீர் பிரிந்து ரத்தம் சுத்தமாகும். கொத்தமல்லி கசகசா பருத்தி விதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வென்னீரில் கலந்து குடிக்க, தலைச்சுற்று, கிறுகிறுப்பு நீங்கும்.

அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்தஅழுத்தம் இருப்பதாக அர்த்தம். முற்றிய இஞ்சியை நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள். தலைச்சுற்றும் நிற்கும். பிளட் பிரஷரும் குறையும்.

வெண்தாமரைப்பூவின் இதழ்களைத் தூளாக்கி காப்பி டிகாக்சனைப்போல் தயாரித்து பாலில் ஊற்றிச் சாப்பிட்டால் - தலைச்சுற்றல், கிறுகிறுப்பு. குணமாகும்.

50 கிராம் சீரகத்தில் 2 ஸ்பூன் உப்பு, சிறிதளவு பெருங்காயம், ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் சேர்த்து ஒரு நாள் ஊறவைத்து அடுத்த நாள் வெயிலில் நன்றாகக் காயவைத்து ஒரு பாட்ழலில் வைத்துக் கொண்டு தலைச்சுற்றல் வயிற்றுப்பொறுமல் பசியின்மைக்கு இதில் அரை ஸ்பூன் சீரகத்தை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.



தடாகத்தில் விழுந்த பெண்ணை கரை சேர்க்கும் டால்பின்

நீர் தடாகத்தில் விழுந்த பெண்ணை காப்பாற்றி கரை சேர்க்கும் டால்பின் - நேரடி காட்சி  - வீடியோ




Wednesday, September 12, 2012

அடிக்கடி தலைசுற்றலா! இதோ உங்களுக்கு டிப்ஸ்


அடிக்கடி தலைசுற்றலா! இதோ உங்களுக்கு டிப்ஸ்




அடிக்கடி பித்தம் தலைசுற்றல் மற்றும் தோல் வியாதிகள் வருபவர்களுக்கு நிரந்தர குணம் தெரிவதற்கு கொத்தமல்லி விதை (தனியா) பச்சையாக ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் இந்த உடைத்த தனியாவை ஒரு கை அள்ளி, கொதித்த வென்னீரில் போட்டு மூடி வைக்கவும்.

தேவையானால் சிறிது நேரம் கொதிக்க வைக்கலாம். பிறகு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். உடலில் கெட்ட நீர் பிரிந்து ரத்தம் சுத்தமாகும். கொத்தமல்லி கசகசா பருத்தி விதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வென்னீரில் கலந்து குடிக்க, தலைச்சுற்று, கிறுகிறுப்பு நீங்கும்.

அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்தஅழுத்தம் இருப்பதாக அர்த்தம். முற்றிய இஞ்சியை நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள். தலைச்சுற்றும் நிற்கும். பிளட் பிரஷரும் குறையும்.

வெண்தாமரைப்பூவின் இதழ்களைத் தூளாக்கி காப்பி டிகாக்சனைப்போல் தயாரித்து பாலில் ஊற்றிச் சாப்பிட்டால் - தலைச்சுற்றல், கிறுகிறுப்பு. குணமாகும்.

50 கிராம் சீரகத்தில் 2 ஸ்பூன் உப்பு, சிறிதளவு பெருங்காயம், ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் சேர்த்து ஒரு நாள் ஊறவைத்து அடுத்த நாள் வெயிலில் நன்றாகக் காயவைத்து ஒரு பாட்ழலில் வைத்துக் கொண்டு தலைச்சுற்றல் வயிற்றுப்பொறுமல் பசியின்மைக்கு இதில் அரை ஸ்பூன் சீரகத்தை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

அபுதாபியில் பிரமாண்டம்: கட்டிடத்தை சுற்றி சன் ஸ்கிரீன்


அபுதாபியில் பிரமாண்டம்: கட்டிடத்தை சுற்றி சன் ஸ்கிரீன்




அபுதாபியில் பிரமாண்ட கட்டிடத்தை சுற்றிலும் பைபர் கிளாஸ் போர்வை அமைக்கப்பட்டுள்ளது. சூரியன் நகர நகர இந்த போர்வையும் சுற்றிக்கொண்டே இருக்கும். கம்ப்யூட்டர் உதவியுடன் இது இயங்குகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் ‘அல் பாஹர் டவர்ஸ்’ என்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் கண்ணை கூசாமல் இருக்க இதில் பிரத்யேக, பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கட்டிடத்தை சுற்றிலும் போர்வை போல பிரமாண்ட சன் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை விட்டு 6 அடி தொலைவில் இது உள்ளது. காலை அலுவலகம் துவங்கும் நேரத்தில், இந்த சன் ஸ்கிரீன் கிழக்கு பக்கத்தில் இருக்கும். வெயில் உச்சிக்கு ஏற, ஸ்கிரீன் மெல்ல நகர தொடங்கும். மாலை நேரத்தில் மொத்த ஸ்கிரீனும் மேற்கு பக்கம் போய்விடும். இவ்வாறு சூரியனின் இருப்பிடத்துக்கு ஏற்ப கம்ப்யூட்டர் உதவியுடன் சன் ஸ்கிரீன் நகர்கிறது. பைபர்கிளாஸ் பொருளால் இந்த ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது.

கண்ணை கூசாத அளவுக்கு போதிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும். சூரிய ஒளி விழாததால் வெப்பமும் குறையும். இதனால், மின்விளக்கு, ஏசி செலவு கணிசமாக குறையும் என்கின்றனர் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி தந்த ஏய்டஸ் நிறுவன இன்ஜினியர்கள். கட்டிடத்தை சுற்றி போர்வை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பணிகள் சில மாதங்களில் நிறைவடையும் என்கின்றனர்.

484 ஆண்டுகளாக அணையாமல் ஔிரும் விளக்கு!


484 ஆண்டுகளாக அணையாமல் ஔிரும் விளக்கு! ஆசியாவின் சாதனைப் புத்தகத்தில்!




அசாமில் உள்ள வைணவ மடம் ஒன்றில் கடந்த 484ஆண்டுகளாக அணையாமல் ஒரு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

இது ஆசியாவின் சாதனைப் புத்தகத்தில் சனிக்கிழமை அதிகாரபூர்வமாக இடம்பெற்றது. ஜோர்ஹட் மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிஜோய் கிருஷ்ணாவிடம் இதற்கான சான்றிதழ் ஒப்படைக்கப்பட்டது.

வைணவ மகான்களில் ஒருவரான ஸ்ரீமந்த சங்கரதேவாவின் சீடரான மாதவ்தேவாவால் நிறுவப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க நாம்கார் மடத்தில் கி.பி.1528-ம் ஆண்டு இந்த விளக்கு ஏற்றப்பட்டது. அது இன்றளவும் அணையாது பாதுகாக்கப்பட்டு வருவதுடன் அதன் புனிதம் போற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அசாம் மஜூலி தீவில் உள்ள கமலாபாரி வைணவ மடாதிபதி 300ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள "குரு சரித்திர´த்திலும் இந்த விளக்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

30 யூரோவில் பூமியை படம் பிடித்து சாதனை படைத்த வாலிபர்


30 யூரோவில் பூமியை படம் பிடித்து சாதனை படைத்த வாலிபர்





பல நூறு கோடி ரூபாய் செலவில் செயற்கை கோளை விண்ணில் செலுத்தி அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் பூமிப் பந்தை விதம் விதமாய் படம் எடுத்து வருகின்றனர்.
ஆனால் பழைய கமெரா உயரமாக செல்லக் கூடிய ஒரு பலூன் என்று வெறும் 200 யூரோ செலவில் இச்சாதனையை பிரிட்டனை சேர்ந்த இளைஞர் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார், .

பிரிட்டனின் வோர்செஸ்டர் பகுதியில் உள்ள ஒம்பர்ஸ்லி நகரைச் சேர்ந்தவர் ஆடம் கட்வொர்த் (வயது 19).

பொறியியல் படிப்பில் ஆரம்பக் கட்டத்தை தாண்டாத இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கமெராவை பலூனில் வைத்து பறக்க வைக்கும் முயற்சியில் ஒருவர் ஈடுபட்டதை பார்த்திருந்தார்.

அந்த சம்பவத்தை கடந்த சில நாட்களாக நினைத்து வந்த ஆடம், அதையே சாதித்து காட்ட வேண்டும் என்று எண்ணி பழைய பொருட்கள் விற்கும் கடைக்கு சென்று 30 யூரோ மதிப்பில் ஒரு கமெராவை வாங்கினார்.

பின்பு கார்களில் பயன்படுத்தப்படும், ஜி.பி.எஸ் கண்காணிப்பு கருவியையும், அதன் மூலம் சிக்னல்களை அனுப்பும் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் கருவியையும், மைக்ரோ பிராசசர் கருவியையும் வாங்கினார்.

பின்பு இரண்டு மீற்றர் நீளம் கொண்ட, 30 கி.மீ., உயரத்தை தாண்டி, பறக்கக் கூடிய வலிமையான ரப்பர் பொருளால் ஆன பலூனையும், சூரிய ஒளியை மின்சக்தி ஆக்கும் சோலார் பேனல்களையும் தேடிப் பிடித்து வாங்கினார்.

அனைத்தையும் ஒன்றாக இணைத்து 40 மணி நேர கடும் உழைப்புக்கு பின்பு புதியதோர் சாதனத்தை உருவாக்கி பின்பு அதை பலூனில் பாதுகாப்பாக பொருத்தினார்.

எல்லாம் முடிந்த பின்பு பலூனை விண்ணில் செலுத்தினார். இரண்டரை மணி நேரமாக பறந்த பலூன் பூமியிலிருந்து, 33 கி.மீ., உயரத்தை சென்றடைந்தது. அங்கிருந்தவாறே பூமிப் பந்தை பல கோணங்களில் கமெராக்கள் படம் எடுத்தன.

அதன் பின்பு சிறிது நேரத்தில் பலூன் வெடித்து சிதறியது. கமெராக்கள் கொண்ட பெட்டி, பூமியை நோக்கி மணிக்கு, 250 கி.மீ., வேகத்தில் பாய்ந்து வந்து விழுந்தது.

ஜி.பி.எஸ்., கருவியின் துணையுடன் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் அனுப்பிய சிக்னல்களை கொண்டு தன் வீட்டிலிருந்து, 45 கி.மீ., தொலைவில் பிராட்வே என்ற இடத்தில் விழுந்து கிடந்த கமெரா பெட்டியை எடுத்து, அதில் இருந்த படங்களை பார்த்தார் ஆடம்.

நம்ப முடியாத வகையில், அக்கமெராவில் பூமியை பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் பதிவாகி இருந்தன.

நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட பூமி படங்களுக்கு ஆடம் கேமரா எடுத்த படங்கள் எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் இருந்தன.

















Tuesday, September 11, 2012

எம்.பி.ஏவுக்கு 'மவுசு' குறைந்தது.. மூடப்படும் கல்வி நிலையங்கள்!


எம்.பி.ஏவுக்கு 'மவுசு' குறைந்தது.. மூடப்படும் கல்வி நிலையங்கள்!






இந்தியாவில் எம்பிஏ பட்டப் படிப்பை அளித்து வரும் கல்வி நிறுவனங்களில் சேருவோரின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் சுமார் 140 கல்வி நிறுவனங்கள் மூடப்படும் சூழல் எழுந்துள்ளதாக கிரிசில் ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.

எம்பிஏவில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 4,000 எம்பிஏ கல்வி நிலையங்கள் உருவாயின. ஆனால், இதில் பெரும்பாலான கல்வி மையங்களில் சுமார் 35 சதவீத இடங்கள் காலியாகவே உள்ளன.

அதிலும் 140 கல்வி நிலையங்களில் மிக மிகக் குறைவானவர்களே சேர்ந்து வருவதால், அவை மூடப்படவுள்ளன.

எம்பிஏ பட்டம் என்ற பெயரில் பெருமளவில் காசு பிடுங்கிக் கொண்டு கல்வி அளித்து வந்த இந்த நிறுவனங்களில் இப்போது சேர ஆளில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி படு வேகமாக இருந்த நிலையில், வேலைவாய்ப்புகளும் மிக அதிகமாக உருவாயின. இதையடுத்து எம்பிஏ பட்டதாரிகளுக்கு தேவையும் அதிகமாக இருந்தது.

ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் இந்த நிதியாண்டில் தான் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மிக மிகக் குறைவான நிலையை அடைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் உருவாக்கமும் குறைந்துவிட்டது. இதனால் ஏராளமான பணத்தை செலவிட்டு எம்பிஏ பயின்றாலும் வேலை கிடைப்பது கஷ்டமே என்ற நிலையால், அதில் சேருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் 3,52,000 எம்பிஏ இடங்கள் உருவாயின. இதில் ஐஐஎம்கள் மற்றும் நாட்டின் 20 முன்னணி கல்வி மையங்களில் எம்பிஏ படிப்போர் தான் கேம்பஸ் மூலம் வேலைகளுக்குத் தேர்வாகின்றனர்.

இந்த கல்வி மையங்களிலும் கடந்த 2008ம் ஆண்டில் 41 பேருக்கு கேம்பசிலேயே வேலை கிடைத்தது. ஆனால், 2011-12ம் ஆண்டில் வெறும் 29 சதவீதம் பேருக்கே வேலை கிடைத்துள்ளது.

முன்னணி கல்வி நிலையங்களிலேயே இந்த நிலை என்றால், மற்ற கல்வி நிலையங்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.

100 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் கடும் மழை : 3 நாளில் 80 பேர் சாவு


100 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் கடும் மழை : 3 நாளில் 80 பேர் சாவு





பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையில் இதுவரை 80 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கைபர்,பக்துன்கவா மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் வெள்ளம் புகுந்ததில் 1,500க்கும் அதிகமான வீடுகள் நொறுங்கி விழுந்தன. இதில் இதுவரை 80 பேர் பரிதாபமாக இறந்தனர். பஞ்சாபின் முல்தான் நகரில் மின்சாரம் பாய்ந்து சிறுவனும் சிறுமியும் பரிதாபமாக பலியாயினர். சிந்து மாகாணத்தின் ஜகோபாபாத் நகரில் நேற்று 440 மி.மீ. மழை பதிவானது. நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிந்து மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட ராணுவத்தின் உதவியை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

லேப் டாப்பை உலகிற்கு அறிமுகப்படுத்திய பில் மாக்ரிட்ஜ் மறைவு

லேப் டாப்பை உலகிற்கு அறிமுகப்படுத்திய பில் மாக்ரிட்ஜ் மறைவு




லேப்டாப்பை உருவாக்கி உலகிற்கு அளித்த பில் மாக்ரிட்ஜ் சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 69. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போதும் நோயின் தீவிரம் காரணமாக மரணமடைந்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த பில் மாக்ரிட்ஜ் லண்டனில் உள்ள சென்ட்ரல் ஸ்கூல் ஆப் டிசைனில் பட்டப் படிப்பை முடித்தார். தலைசிறந்த கணினி வடிவமைப்பாளராக விளங்கிய மாக்ரிட்ஜ், அங்குள்ள ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ்சில் கவுரப் பேராசிரியாக பணியாற்றினார்.

அவர் லண்டனில் கடந்த 1969ல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினார். கிரிட் காம்பஸ் என்ற பெயரில் 1979-ல் முதல் மடிக்கணினியை உருவாக்கினார். முதலில் இது அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 1985-ல் ஏவப்பட்ட டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் பயன்படுத்தப்பட்டது.

மேலும் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னர் அமெரிக்காவில் குடியேறிய அவர், நியூயார்க் நகரில் கூப்பர் ஹெவிட் தேசிய வடிவமைப்பு அருங்காட்சியகத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார். 2010 வரை இப்பதவியில் இருந்த அவர் பின்னர் புற்றுநோய் பாதிப்பினால் அதிலிருந்து விலகினார். நோயின் தீவிரம் அதிகரிக்கவே கடந்த சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று அவர் மரணமடைந்தார்.

புற்றுநோயை கட்டுப்படுத்தும் வைட்டமின் ஏ


புற்றுநோயை கட்டுப்படுத்தும் வைட்டமின் ஏ


 

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயை கட்டுப்படுத்த பல ஆய்வுகள் நடந்த போதிலும், இந்நோயை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போதைய ஆய்வில், வைட்டமின் ஏ சத்து புற்றுநோயை குணப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றி ஆய்வு நடத்தி யார்க்சயர் புற்றுநோய் ஆராய்ச்சி மைய பேராசிரியர் நார்மன் மைட்லாண்ட் கூறுகையில், புற்றுநோயை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது மாலிங்னட் எனப்படும் செல்களாகும்.

இதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் திறன் வைட்டமின் ஏ- க்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த வைட்டமின் ஏ- யை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இதை உணவுச் சத்துக்காகவும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்றாட உணவில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ள மீன், கேரட், கல்லீரல், சிவப்பு மிளகு, காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். அதற்காக அதிக அளவு வைட்டமின் ஏ மாத்திரைகளை சாப்பிடுவது சரியான முறையல்ல என்று தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார அறிக்கை


உலக பொருளாதார அறிக்கையில் சுவிட்சர்லாந்து முதலிடம்




உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையில் சுவிட்சர்லாந்து முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

ஒரு நாட்டினது, தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, நாட்டின் சுகாதாரம், சந்தைத் திறன், தொழிழ்நுட்ப வளர்ச்சி, போட்டித்தன்மை போன்ற முக்கிய 12 பிரிவுகளின் கீழ் பொது மற்றும் தனியார் தரவுகளை பயன்படுத்தி கணக்கிடப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இவ்வருடத்திற்கான அதாவது 2012-2013ற்கான உலகளாவிய போட்டித்திறன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதன் படி உலக பொருளாதார நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் சுவிசர்லாந்து 144 நாடுகளில் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து பட்டியலில் முதலிடத்தை பிடித்து வருகிறது. இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன.

புது வகையான கல்வி முறை, அதிக அளவிலான ஆராய்ச்சிகள், மற்றும் தனியார் துறைகள் - கல்வி இடையேனான வலுவான ஒத்துழைப்பு ஆகியன சுவிட்சர்லாந்தில் மேலோங்கி இருக்கிறது.

மேலும் அங்கு வலுவான பொருளாதாரமும் தொழிலாளர் சந்தைதிறன் போன்றவைகளும் ஆரோக்கியமாக இருப்பதும் காரணமாகும். இதனையடுத்து சிங்கப்பூர் இரண்டாவதிலும் பின்லாந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.


நாடுகளும் பொருளாதார அடிப்படையில் அவற்றின் இடங்களும்


The Global Competitiveness Index 2012-2013 rankings 
© 2012 World Economic Forum | www.weforum.org/gcr

GCI 2012-2013 GCI 2011-2012
Country/Economy Rank Score Rank Change
Switzerland 1 5.72 1 0
Singapore 2 5.67 2 0
Finland 3 5.55 4 1
Sweden 4 5.53 3 -1
Netherlands 5 5.50 7 2
Germany 6 5.48 6 0
United States 7 5.47 5 -2
United Kingdom 8 5.45 10 2
Hong Kong SAR 9 5.41 11 2
Japan 10 5.40 9 -1
Qatar 11 5.38 14 3
Denmark 12 5.29 8 -4
Taiwan, China 13 5.28 13 0
Canada 14 5.27 12 -2
Norway 15 5.27 16 1
Austria 16 5.22 19 3
Belgium 17 5.21 15 -2
Saudi Arabia 18 5.19 17 -1
Korea, Rep. 19 5.12 24 5
Australia 20 5.12 20 0
France 21 5.11 18 -3
Luxembourg 22 5.09 23 1
New Zealand 23 5.09 25 2
United Arab Emirates 24 5.07 27 3
Malaysia 25 5.06 21 -4
Israel 26 5.02 22 -4
Ireland 27 4.91 29 2
Brunei Darussalam 28 4.87 28 0
China 29 4.83 26 -3
Iceland 30 4.74 30 0
Puerto Rico 31 4.67 35 4
Oman 32 4.65 32 0
Chile 33 4.65 31 -2
Estonia 34 4.64 33 -1
Bahrain 35 4.63 37 2
Spain 36 4.60 36 0
Kuwait 37 4.56 34 -3
Thailand 38 4.52 39 1
Czech Republic 39 4.51 38 -1
Panama 40 4.49 49 9
Poland 41 4.46 41 0
Italy 42 4.46 43 1
Turkey 43 4.45 59 16
Barbados 44 4.42 42 -2
Lithuania 45 4.41 44 -1
Azerbaijan 46 4.41 55 9
Malta 47 4.41 51 4
Brazil 48 4.40 53 5
Portugal 49 4.40 45 -4
Indonesia 50 4.40 46 -4
Kazakhstan 51 4.38 72 21
South Africa 52 4.37 50 -2
Mexico 53 4.36 58 5
Mauritius 54 4.35 54 0
Latvia 55 4.35 64 9
Slovenia 56 4.34 57 1
Costa Rica 57 4.34 61 4
Cyprus 58 4.32 47 -11
India 59 4.32 56 -3
Hungary 60 4.30 48 -12
Peru 61 4.28 67 6
Bulgaria 62 4.27 74 12
Rwanda 63 4.24 70 7
Jordan 64 4.23 71 7
Philippines 65 4.23 75 10
Iran, Islamic Rep. 66 4.22 62 -4
Russian Federation 67 4.20 66 -1
Sri Lanka 68 4.19 52 -16
Colombia 69 4.18 68 -1
Morocco 70 4.15 73 3
Slovak Republic 71 4.14 69 -2
Montenegro 72 4.14 60 -12
Ukraine 73 4.14 82 9
Uruguay 74 4.13 63 -11
Vietnam 75 4.11 65 -10
Seychelles 76 4.10 n/a n/a
Georgia 77 4.07 88 11
Romania 78 4.07 77 -1
Botswana 79 4.06 80 1
Macedonia, FYR 80 4.04 79 -1
Croatia 81 4.04 76 -5
Armenia 82 4.02 92 10
Guatemala 83 4.01 84 1
Trinidad and Tobago 84 4.01 81 -3
Cambodia 85 4.01 97 12
Ecuador 86 3.94 101 15
Moldova 87 3.94 93 6
Bosnia and Herzegovina 88 3.93 100 12
Albania 89 3.91 78 -11
Honduras 90 3.88 86 -4
Lebanon 91 3.88 89 -2
Namibia 92 3.88 83 -9
Mongolia 93 3.87 96 3
Argentina 94 3.87 85 -9
Serbia 95 3.87 95 0
Greece 96 3.86 90 -6
Jamaica 97 3.84 107 10
Gambia, The 98 3.83 99 1
Gabon 99 3.82 n/a n/a
Tajikistan 100 3.80 105 5
El Salvador 101 3.80 91 -10
Zambia 102 3.80 113 11
Ghana 103 3.79 114 11
Bolivia 104 3.78 103 -1
Dominican Republic 105 3.77 110 5
Kenya 106 3.75 102 -4
Egypt 107 3.73 94 -13
Nicaragua 108 3.73 115 7
Guyana 109 3.73 109 0
Algeria 110 3.72 87 -23
Liberia 111 3.71 n/a n/a
Cameroon 112 3.69 116 4
Libya 113 3.68 n/a n/a
Suriname 114 3.68 112 -2
Nigeria 115 3.67 127 12
Paraguay 116 3.67 122 6
Senegal 117 3.66 111 -6
Bangladesh 118 3.65 108 -10
Benin 119 3.61 104 -15
Tanzania 120 3.60 120 0
Ethiopia 121 3.56 106 -15
Cape Verde 122 3.55 119 -3
Uganda 123 3.53 121 -2
Pakistan 124 3.52 118 -6
Nepal 125 3.49 125 0
Venezuela 126 3.46 124 -2
Kyrgyz Republic 127 3.44 126 -1
Mali 128 3.43 128 0
Malawi 129 3.38 117 -12
Madagascar 130 3.38 130 0
Côte d'Ivoire 131 3.36 129 -2
Zimbabwe 132 3.34 132 0
Burkina Faso 133 3.34 136 3
Mauritania 134 3.32 137 3
Swaziland 135 3.28 134 -1
Timor-Leste 136 3.27 131 -5
Lesotho 137 3.19 135 -2
Mozambique 138 3.17 133 -5
Chad 139 3.05 142 3
Yemen 140 2.97 138 -2
Guinea 141 2.90 n/a n/a
Haiti 142 2.90 141 -1
Sierra Leone 143 2.82 n/a n/a
Burundi 144 2.78 140 -4