Friday, June 28, 2013

25 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம்: ஆந்திர வனப்பகுதியில் கண்டுபிடிப்பு

25 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம்: ஆந்திர வனப்பகுதியில் கண்டுபிடிப்பு



இருபத்தைந்து கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் ஒன்று ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் உள்ள வனப்பகுதி இதுரு நகரம். அப்பகுதியில் மிகப் பழமையான கல்மர படிவம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் மண்ணியல் தாவரவியல் மற்றும் வனத்துறை நிபுணர்கள்.

பொதுவாக பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதையுண்ட மரங்கள், மண் மற்றும் பாறையுடன் இறுகி ரசாயன மாற்றங்களால் கல்மரம் படிவங்களாக மாறுகின்றன.

முதல் கட்ட கணிப்பில், இந்த கல்மரம் சுமார் 12 கோடி முதல் 25 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது. இதுரு நகரம் வனப்பகுதிக்குட்பட்ட சிட்யால், சிந்தகுடா, வடக்கு சர்வை, தெற்கு சர்வை காடுகளில் இது போன்ற கல்மரங்கள் அதிகளவில் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இப்பகுதி மண்ணியல் மரபு பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Wednesday, June 26, 2013

இதோ புதிய சூரியன்.. 3 புதிய பூமிகள்!

இதோ புதிய சூரியன்.. 3 புதிய பூமிகள்!


அண்டவெளியில் தேள் விண்மீன் தொகுப்பில் (constellation of Scorpius) ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று கிரகங்களிலும் நமது பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் நிலவலாம் என்று கருதப்படுகிறது.

க்ளீஸே என்றொரு நட்சத்திரம்... 

நமது பூமியிலிருந்து 22 ஒளி வருட தூரத்தில் உள்ளது Gliese 667C என்ற நட்சத்திரம் (இதை இன்னொரு சூரியன் என்றும் சொல்லாம்). இந்த நட்சத்திரத்தை பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந் நிலையில் இந்த நட்சத்திரத்தை 6 கோள்கள் சுற்றி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிர்கள் வாழ்வதற்கேற்ற தூரத்தில்... 

அதில் 3 கோள்கள் நட்சத்திரத்தில் இருந்து உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சரியான தூரத்தில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. அதாவது நமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவு மாதிரி. நமது சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்கள் (செவ்வாய், வீனஸ்) சூரியனுக்கு மிக அருகிலும் (மார்ஸ், ஜூபிடர், சனி, யுரேனஸ் உள்ளிட்டவை) மிகத் தொலைவிலும் உள்ளதால் இந்த கிரங்களில் (செவ்வாய், வீனஸ்) தண்ணீரே இல்லை அல்லது மார்ஸ், ஜூபிடர், சனி, யுரேனஸ் உள்ளிட்டவற்றில் தண்ணீர் பயன்படுத்தப்படும் நிலையில் இல்லை, உறைந்து போய் வேறு ரசானங்களுடன் கலந்து போய் இருக்கிறது.

தண்ணீர் இருக்கலாம்... 

ஆனால், இந்த Gliese 667C நட்சத்திரத்தின் 3 கோள்கள் பூமி மாதிரியே சரியான தொலைவில் அதை சுற்றி வந்து கொண்டுள்ளன. இதனால் இங்கு தண்ணீர் இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தண்ணி மட்டுமா.. உயிர்களும் தான்... 

தண்ணீர் தானே உயிருக்கு அடிப்படை, இதனால் இந்த கிரகங்களில் தண்ணீர் இருந்தால் அங்கு உயிர்களும் கூட இருக்கலாம் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

நமது பூமியை விடப் பெரியவை.. 

சிலி நாட்டில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அமைத்த High Accuracy Radial Velocity Planet Searcher (HARPS), ESO's Very Large Telescope, W.M. Keck Observatory, Magellan Telescopes ஆகிய உலகின் முன்னணி புவியியல் தொலைநோக்கிகள் மூலமாக இந்த நட்சத்திரத்தை ஆய்வாளர்கள் ஆராய்ந்தபோது தான் இந்த விவரங்கள் கிடைத்துள்ளன. இந்த மூன்று புதிய பூமிகளுமே நமது பூமியை விட அளவில் பெரிதாகவும் உள்ளனவாம். எடுறா வண்டிய...!


இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்!: ஒரு ஷாக் ரிப்போர்ட்

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்!: ஒரு ஷாக் ரிப்போர்ட்



இந்திய அரசு, வேலைவாய்ப்பு தொடர்பில்லாத வளர்ச்சிக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு வருடங்களில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 10% உயர்ந்துள்ளது. மந்தமான பொருளாதார நிலை, போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் நிறுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் போன்றவையால் வேலை வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

என்எஸ்எஸ்ஒ(NSSO) 

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள தேசிய மாதிரி சர்வே நிறுவனம்(NSSO), ஜனவரி 1, 2012 இன் படி, 10.8 மில்லியன் நபர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். கடந்த ஜனவரி 1, 2010 இன் படி வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 9.8 மில்லியனாக இருந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் இது 10% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

ஜிடிபி 

நிதி ஆண்டு 2012 இல், நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 6.2%, நிதி ஆண்டு 2013 இல் 5% இருக்கிறது. இந்தப் பொருளாதார மந்த நிலை காரணமாக, வேலை வாய்ப்புக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

புள்ளிவிவரம் 

சர்வே நடத்தியவர்கள், ஒரு நபரின் பிரதான வேலை மற்றும் இதர வருமான வழிகளையும் சேர்த்து இந்த புள்ளி விவரத்தை அளித்துள்ளனர். ஆனால், ஒரு நபரின் பிரதான வேலையை மட்டும் கணக்கிட்டிருந்தால், வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று கருதுகின்றனர் நிபுணர்கள்.


இந்தியப் பெண்கள் 6 கோடி பேர் இணையத்தில் தேடுகின்றனர்: ஆய்வில் தகவல்

இந்தியப் பெண்கள் 6 கோடி பேர் இணையத்தில் தேடுகின்றனர்: ஆய்வில் தகவல்


இந்தியாவில் உள்ள 6 கோடி பெண்கள் இணையதளத்தை உபயோகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினசரி வாழ்க்கையை நகர்த்த தேடுதல் அவசியமாகிறது. வீட்டிற்குள் அமர்ந்து விரல் நுனியில் தேடுவதுதான் இன்றைய டிரென்ட். இந்தியா முழுவதும் 15 கோடி மக்கள் இணையதளத்தை உபயோகிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 6 கோடி பேர் பெண்கள் என்று கூகுள் தகவல் வெளியிட்டுள்ளது. உமன் அன்ட் வெப் ஸ்ட்டி நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது. உணவுப் பொருட்கள், நகைகள், உடைகள் என பல வித பொருட்களை பெண்கள் இணையத்தில் தேடுகின்றனர்.

ஆயிரம் பெண்கள் 

18 முதல் 65 வயதுவரை உடைய 1000 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அவர்களிடம் இணைய தளத்தில் தேடும் பொருட்கள் பற்றியும் தேடுதல் முறை பற்றியும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அழகு சாதனங்கள் 

சருமபாதுகாப்பு, கூந்தல் பராமரிப்பு, உணவு, பானங்கள் போன்றவைகள் அதிகம் தேடும் பொருட்களாக தெரியவந்துள்ளது. செல்போன் பற்றி 25 சதவிகிதம் பெண்கள் தேடுகின்றனராம்.

6 கோடி பேர் இந்தியாவில் 

6 கோடி பெண்கள் இணைய சேவையைப் பயன்படுத்தி வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு கோடியே 40 லட்சம் பெண்கள் நாள் தவறாமல் இணைய தளங்களைப் பயன்படுத்துவது ஆய்வில் தெரிய வந்திருக்கிறதாம்.

மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் 

மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களை இன்றைய இளம் தலை முறைப் பெண்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். தவிர ஆடை, அணிகலன்கள் குறித்தும் இணையதளங்களில் பெண்கள் தகவல் தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.


Tuesday, June 25, 2013

அபார்ட்மென்ட்களில் பொத்தி பொத்தி வைக்கப்படும் குழந்தைகளை நிமோனியா தாக்கும் வாய்ப்பு அதிகம்!!

அபார்ட்மென்ட்களில் பொத்தி பொத்தி வைக்கப்படும் குழந்தைகளை நிமோனியா தாக்கும் வாய்ப்பு அதிகம்!!


நகர்ப்புறங்களில் உள்ள அபார்ட்மென்ட்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு தான் அதிக அளவில் நிமோனியா வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சீனாவின் நான்ஜிங்கில் உள்ளது ஸ்கூல் ஆப் எனர்ஜி என்று என்விரான்மென்ட். அதைச் சேர்ந்த பேராசிரியர் ஹுவா கியான் மற்றும் அவரது குழுவினர் நகரங்களில் உள்ள பெரிய பெரிய அபார்ட்மென்ட்களில் வாழும் குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படுவது குறித்து ஒரு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நான்ஜிங்கில் உள்ள 11 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. மாடர்ன் அபார்ட்மென்ட்களில் வீட்டுக்குள்ளேயே வளரும் குழந்தைகளுக்கு நிமோனியா தாக்கும் வாய்ப்பு அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.


வீட்டுக்குள்ளேயே இருப்பது 

நகரத்தில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிக்கும் குழந்தைகளை பெற்றோர் வெளியே சென்று விளையாட விடுவதில்லை. எப்பொழுதும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். போதிய காற்று இல்லாமை, புதிய பர்னிச்சர், சுவரில் தொங்கவிடப்படும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவைக்கும், குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படுவதற்கும் தொடர்புள்ளது.


அலர்ஜி 

குடும்ப அலர்ஜி, குழந்தைகளை பெற்றோர் பிறரின் பராமரிப்பில் விடுவது, சுவாச கோளாறுகளாலும் நிமோனியா வருகிறதாம்.


பொத்தி பொத்தி வைப்பது 

கிராமத்து குழந்தைகள் தெருவில் மண்ணில் விளையாடியும், புரண்டு எழுந்தும் ஒன்றும் ஆவதில்லை. ஆனால் சுத்தமான அபார்ட்மென்ட்களில் வாழும் குழந்தைகளுக்கு கிராமத்து குழந்தைகள் போன்று நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.


வினாடிக்கு வினாடி 4 அணுகுண்டு வெப்பம் பூமியைத் தாக்குகிறதாம்: திகிலூட்டும் விஞ்ஞானிகள்

வினாடிக்கு வினாடி 4 அணுகுண்டு வெப்பம் பூமியைத் தாக்குகிறதாம்: திகிலூட்டும் விஞ்ஞானிகள்



4 அணுகுண்டுகள் ஒரு சேர வெடித்தால் உண்டாகும் எப்பத்தின் அளவிற்கு பூமி தற்போது சூடாகி வருவதாக அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். பூமி வெப்பமயமாதல் குறித்து , ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான்குக் ஆய்வு செய்து வந்தார். அந்த ஆய்வில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பூமியின் வெப்பம் தற்போது அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.


கார்பன் டை ஆக்ஸைடு தான் காரணம்... 

இந்த அதிக வெப்பத்திற்குக் காரணம் அளவுக்கு அதிகமான கார்பன்- டை-ஆக்சைடு பூமியின் மேற்பரப்பில் படிந்து இருப்பதே எனச் சொல்லப் படுகிறது.

பாதிப்பு... 

இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா நகரம் மீது வீசிய அணுகுண்டு போன்று 4 அணுகுண்டு வீசினால் எவ்வளவு வெப்பம் வெளி வருமோ அந்தளவுக்கு வெப்பம் உயருகிறது என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.


பூமி தாங்குமா? 

இவ்வளவு கொடூரமான வெப்பமானது பூமியை ஒவ்வொரு வினாடியும் தாக்குகிறதாம். இதே நிலை தொடர்ந்தால், சில ஆண்டுகளில் பூமியின் நிலை என்ன ஆகுமென நினைத்துப் பாருங்கள் என திகில் காட்டுகிறார்கள் அவர்கள்.


உருகும் பனிமலைகள்... 

அதிலும் குறிப்பாக, பூமியை தாக்குவதில் 90 சதவீத வெப்பம் கடலுக்குள் சென்று விடுகிறதாம். எனவே, இந்த வெப்பத்தினால் பனிமலைகள் மற்றும் விலங்கினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.


உன்ன பெத்ததுக்கு, ஒரு கோழிக்குஞ்சப் பெத்துருக்கலாம்...

உன்ன பெத்ததுக்கு, ஒரு கோழிக்குஞ்சப் பெத்துருக்கலாம்... 



பொதுவாக கோழிகளுக்கு சாதாரணப் பறவைகளைப் போன்ற மூளை இல்லையாம். இள் வயது கோழிகள் சிறு குழந்தைகளை விட சிறப்பாக சிந்திப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. பொதுவாக சிருகுழந்தைகள் தடுமாறும் விஷயங்களான எண்ணியல் மற்றும் சுயக் கட்டுப்பாட்டில் குழந்தைகளை விட புத்திசாலித்தனமாக கோழிகள் செயல் படுவதாக தெரிய வந்துள்ளதாம்.

முட்டையிலிருந்து வெளிவந்த சிரு கோழிக்கு இருக்கும் அறிவை, குழந்தைகள் அனுபவப் பூர்வமாகப் பெற ஆண்டுகள் பல பிடிப்பதாக ஆய்வு சொல்கிறது.

பாத்து... பொறுமையா சாப்பிடுப்பா 

இந்த ஆய்வில் அதிக அளவிலான உணவை கொண்டு வந்து கோழிகளின் முன்பு வைத்த போது, அவை சிறிது நேரம் யோசித்து பின் பொறுமையாக உண்டனவாம். இத்தகைய சுய கட்டுப்பாடு குழந்தைகளுக்கு வருவதற்கு கிட்டத்தட்ட நான்கு வயதாகிறதாம் குழந்தைகளுக்கு.

கணக்கு மாஸ்டர்ஸாம் கோழிகள்... 

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், கோழிகளுக்கு முட்டையிலிருந்து வெளி வரும் போதே ஐந்து வரையிலான எண்கள் தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறதாம், ஆனால், குழந்தைகளுக்கு எண்களை நாம் தான் கற்பிக்க வேண்டியுள்ளது.


கோழி, ஜாக்கிரதையான ஆளுங்க... 

பொதுவாக கோழிகளுக்கு உள்ளுணர்வு திறன் கொஞ்சம் அதிகமாம். உள்ளுணர்வை வைத்தே சந்தேகத்திற்குரிய அல்லது சீரற்ற பொருட்களின் ஆபத்தை உணர்ந்து கொள்கின்றனவாம் கோழிகள். ஆனால், குழந்தைகள் இந்த நிலைக்கு வர குறைந்தது ஓராண்டாவது ஆகுமாம்.

கோழி தான் புத்திசாலிப் பறவை... 

அதனால் தான் சிலர் கோழியை புத்திசாலிப் பறவை எனக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார் இது குறித்து 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் புரொபஷர் கிறிஸ்டின் நிகோல்.


உத்தரகண்டில் வெளுத்து வாங்கும் மழை: 10,000 பேர் தவிப்பு

உத்தரகண்டில் வெளுத்து வாங்கும் மழை: 10,000 பேர் தவிப்பு



உத்தரகண்டில் கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 10,000 பேர் மலைப் பகுதிகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 5,000 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளில் சுமார் 10,000 பேர் தங்களை மீட்க ஆளின்றி தவித்து வருகின்றனர்.

விடிய விடிய மழை 

ரிஷிகேஷ், டேராடூன், ஹர்சில், கங்கோத்ரி மற்றும் உத்தரகாசியில் விடிய விடிய மழை பெய்தது.

மேலும் மழை 

அடுத்த 72 முதல் 96 மணிநேரம் வரை உத்தரகண்டில் மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


கேதர்நாத்தில் 3 நாட்களுக்கு மழை 

ஏற்கனவே வெள்ளத்தால் சீர்குலைந்துள்ள கேதர்நாத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பத்ரிநாத்தில் யாத்ரீகர்கள் தவிப்பு 

பத்ரிநாத்திலும் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மலைப் பகுதியில் சிக்கியுள்ள 5,000 யாத்ரீகர்களில் 164 பேர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஹர்ஷில், மனேரி மற்றும் பத்வாரி பகுதிகளில் இருந்து 830 பேர் தாராசு பகுதிக்கு இடம் பெயர வைக்கப்பட்டுள்ளனர்.


ஃபூ...இது தான் உலகின் விவிஐபி நாய்க்குட்டி... பேஸ்புக்ல 20லட்சம் பாலோயர்ஸ்

ஃபூ...இது தான் உலகின் விவிஐபி நாய்க்குட்டி... பேஸ்புக்ல 20லட்சம் பாலோயர்ஸ்


பேஸ்புக்கில் ஒருவருக்கு 20 லட்சம் பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்றால்... அவர் எவ்வளவு பெரிய விவிஐபியாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விவிஐபி ஒரு அழகான நாய்க்குட்டி. பெயர் ஃபூ மனியா. இது அமெரிக்காவில் வசித்து வருகிறது. இதன் உரிமையாளரின் பெயர் ஜஸ்டின் பைபர். பொமரேனியன் வகையைச் சேர்ந்த ஃபூமனியா உலகின் மிகப் பிரபலமான நாயாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஃபூ... இவ்வளவுதானா நீனு சொல்லக்கூடாது... 

ஃபூ வுக்கு தற்போது ஏழு வயதாகிறது. அமெரிக்காவின் உத்தியோகபூர்வ செல்லப்பிராணி தொடர்பாளராக பணி புரிகிறது இந்த அழகி.


ஃபூக்கு ஒரு லைக் போடுங்க... 

2009ல் ஃபூவிற்கென தனி பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கப் பட்டது. அதில், ஃபூ க்யூட்டாகச் சிரிக்கும் படங்களும், அது செய்யும் சேட்டைகளின் வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

உலகின் பிரபலமான நாய்...

அன்றிலிருந்து ஃபூ விற்கு லைக்குகளும், பாலோயர்களும் குவிந்த வண்ணம் உள்ளனராம். தற்போது, கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களைக் கொண்டு, உலகின் மிகப் பிரபலமான நாய் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது ஃபூ.


அப்படியா... 

அழகான கூந்தல், குட்டிக் கண்கள் என ஃபூவை பார்த்தாலே கவிதைப்பாடத் தோணும். அவ்வளவு அழகான் ஃபூ முதன் முதலில் கலந்து கொண்டது அசிங்கமான நாய்களுக்கான அழகுப் போட்டியில் தானாம்.

ஏய்... நீ ரொம்ப அழகா இருக்க...

 ஜஸ்டின் பைபர் முயற்சியால் அழகு தேவதையாக மாறியதாம் ஃபூ. விளையாட்டாகத் தான் ஃபூவிற்கு பேஸ்புக் பக்கம் ஆரம்பித்தாராம். ஆனால், ஃபூ இன்று இவ்வளவு பிரபலமாகி விட்டது என ஆச்சர்யம் தெரிவிக்கிறார் ஜஸ்டின்.

இதிலயுமா வதந்தி... 

கடந்த ஏப்ரலில் சில நலம் விரும்பிகள் ஃபூ இறந்து விட்டதாக ட்விட்டரில் செய்தியை பரப்பி விட்டனர். ஆதாரமாக ஃபூ தூஉங்கும் படம் ஒன்றையும் வெளியிட்டனர். இச்செய்தியைப் படித்த அதன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே ஜஸ்டின் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஃபூவின் படமொன்றை வெளியிட்டார். அதன் பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர் ஃபூ ரசிகர்கள்.


விளம்பர மாடல்... 

உலகின் மிக அழகான, பிரபலமான நாய் -ஃபூ என்ற பெயரில் லீ என்பவர் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். தனியார் விமானம் ஒன்றின் விளம்பர தூதராகவும் சில காலம் ஃபூ இருந்தது.

பார்றா... 

அழகழகான் உடைகளை மாட்டி ஃபூவை விதவிதமாக படம் பிடித்து, தான் ரசித்ததோடு அதன் ரசிகர்களும் ரசிக்கட்டும் என்று அப்லோட் செய்கிறார் ஜஸ்டின்.


இண்டர்நெட்ட ஆன் பண்ணுப்பா... இன்னைக்கு என்ன நியூஸ்னு பாக்கணும்

இண்டர்நெட்ட ஆன் பண்ணுப்பா... இன்னைக்கு என்ன நியூஸ்னு பாக்கணும்



இண்டர் நெட்டைப் பயன் படுத்தி செய்திகள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. மொபைலில் இண்டர்நெட் வந்த பிறகு, உலகமே கைக்குள் சுருங்கிப் போன நிலைமை தான். காலை எழுந்தவுடன் படிப்பு என்ற நிலை எல்லாம் மாறி, அவ்வப்போது அப்டேட்களை அள்ளி வீசுகிறது இண்டர்நெட்.

அதிலும், ஆன்லைனில் செய்திகள் படிப்பதற்காக மக்கள் அதிகளவு பணம் செலவு செய்கிறார்களாம். இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

10 மாதம்... 9 நாடுகள்... 

கடந்த 10 மாதங்களில் 9 நாடுகளைச் சேர்ந்த 1000 இன்டர்நெட் பயன்பாட்டாளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

வருமானத்தில் கொஞ்சம்... 

இதில், சராசரியாக ஆண்டு வருமானம் 25000 முதல் 50,000 பவுண்டுகளைக் கொண்ட 25 முதல் 34 வயதுடையவர்கள், தங்களின் வருமானத்தில் 5 முதல் 14‌ சதவீதம் தொகையை ஆன்லைன் மூலம் செய்திகளை படிப்பதற்காக செலவிடுகின்றனர் என தெரிய வந்துள்ளதாம்.

லண்டனிலும்... 

ஏற்கனவே லண்டனில், ஆன்லைனில் செய்தி படிப்பதற்காக 23 சதவீதம் பேர் அதிகளவில் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


''ரெண்டு பேரும் பிரியப் போறோம்.. தச்சு விட்ருங்க டாக்டர்''

''ரெண்டு பேரும் பிரியப் போறோம்.. தச்சு விட்ருங்க டாக்டர்''


கன்னித்தன்மை மீட்பு அறுவைச் சிகிச்சை இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறதாம். ஏராளமான இளம் பெண்கள் இந்த அறுவைச் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருவது அதிகரித்துள்ளதாம்.

எல்லாவற்றுக்கும் இப்போது கத்தியை நாட ஆரம்பித்து விட்டார்கள் மக்கள். உடலின் எந்த ஒரு பாகத்தையும் நவீன அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என்ற நிலை வந்து விட்டது. முகம் பிடிக்கலையா.. வேறு முகத்தையே மாற்றிக் கொள்ளும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ள கன்னித்தன்மை மீட்பு அறுவைச் சிகிச்சை இப்போது இந்தியாவிலும் பரவலாக பிரபலமாகி வருகிறதாம். அகமதாபாத்தில் நடந்த கதையைக் கேளுங்கள்...

பிளாஸ்டிக் சர்ஜனை நாடிய பையனும், பெண்ணும்

அகமதாபாத்தைச் சேர்ந்த டாக்டர் ஹேமந்த் சரையா என்ற பிளாஸ்டிக் சர்ஜனிடம் ஒரு வாலிபனும், இளம் பெண்ணும் வந்தனர். அந்தப் பெண்ணை தனது காதலி என்று அந்தவாலிபர் அறிமுகப்படுத்தினார்.



ஒரு வருடம் உறவு 

தனது காதலியும், தானும் கடந்த ஒரு வருடமாக உடல் ரீதியான உறவில் ஈடுபட்டிருந்ததாகவும், தற்போது இருவரும் வேறு வேறு சாதி என்பதால் திருமணத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாகவும், எனவே வேறு வழியில்லாமல் பிரிய முடிவெடுத்திருப்பதாகவும் கூறினார் அந்த வாலிபர்.

ஹைமன்பிளாஸ்டி செய்யனும் 

அப்போது டாக்டர், சரி இப்போது நான் எப்படி உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று டாக்டர் கேட்கவே, அதற்கு அந்த வாலிபர், எனது காதலிக்கு கன்னித்தன்மையை மீட்கும் ஹைமன்பிளாஸ்டி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.

ஏன் ஹைமன் பிளாஸ்டி 

ஹைமன் பிளாஸ்டிஎன்பது பெண்கனின் கிழிபட்ட கன்னிச் சவ்வுக்குப் பதில் வேறு சவ்வை அறுவைச் சிகிச்சை மூலம் ஏற்படுத்துவதாகும். இதன் மூலம் அந்தப் பெண் கன்னி கழியாத பெண்ணாக மீண்டும் மாறி விடுவார். இதன் மூலம் அந்தப் பெண்ணை மணக்கும் கணவருக்கு தனது மனைவி கன்னி கழியாத பெண்தான் என்ற எண்ணம் ஏற்படும். இதற்காகத்தான் அந்த வாலிபர், தனது காதலிக்கு ஹைமன்பிளாஸ்டி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டரிடம் கோரிக்கை வைத்தார்.

இதுதான் முதல் தடவை 

டாக்டர் ஹேமந்த் சரையா கூறுகையில், நான் அந்தப் பையனின் கருத்தை ஆமோதித்தேன், ஆதரவும் தெரிவித்தேன். காரணம், முதலிரவின்போது அந்தப் பெண்ணுக்கு கணவரால் தர்மசங்கடம் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், அந்தப் பெண்ணின் வாழ்க்கை கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவும். ஆனால் ஒரு காதலன் தனது காதலியைக் கூட்டிவந்து அவருக்கு ஹைமன் பிளாஸ்டி செய்து விடுமாறு கேட்டது என்னைப் பொறுத்தவரை இதுதான் முதல் தடவை என்று கருதுகிறேன் என்றார் டாக்டர் ஹேமந்த்.

நிறையப் பெண்கள் வருகிறார்கள் 

ஹேமந்த் மேலும் கூறுகையில், நிறையப் பெண்கள் ஹைமன்பிளாஸ்டி தொடர்பாக என்னிடம் ஆலோசனை கேட்க வருகிறார்கள். தங்களது தோழிகளுடன்தான் அனைவருமே வருவார்கள். ஆனால் காதலனுடன் வந்த முதல் பெண் இவர்தான்.

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் சகஜம் 

இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது சகஜமாகி வருகிறது. எனவே பெரும்பாலான ஆண்கள் இப்போதெல்லாம் தங்களது மனைவியர் கன்னித்தன்மையுடன் இருக்கிறார்களா என்பது குறித்துக் கவலைப்படுவதை விட்டு விட்டனர். மிகவும் சிறிய சதவீதத்திலானவர்கள் மட்டுமே அதை உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

நிறையப் பேர் நாடுகிறார்கள் 

திருமணத்திற்கு முன்பு உறவில் ஈடுபடும் பல பெண்கள், திருமணத்திற்கு முன்பாக ஹைமன்பிளாஸ்டி செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இது சகஜமாகி வருகிறது. ஒருமுறை தனது தாயுடன் வந்திருந்த பெண், ஹைமன்பிளாஸ்டி குறித்து என்னிடம் ஆலோசனை கேட்டுச் சென்றார் என்றார்.

எப்படி செய்கிறார்கள் ஹைமன் பிளாஸ்டி...? 

வெஜைனா எனப்படும் பெண்ணின் பிறப்புறுப்பு சுவரிலிருந்து திசுக்களை எடுத்து, கிழிந்து போன கன்னிச் சவ்வுக்குப் பதில் தைத்து இணைப்பதே ஹைமன்பிளாஸ்டி ஆகும். இது ஒரிஜினல் கன்னிச் சவ்வு போலவே இருக்கும். உடலுறவில் ஈடுபடும்போது இது கிழியும்.


சென்னை அருகே வங்கக் கடலில் எரிமலையா? 3 நிறுவனங்கள் ஆய்வு!

சென்னை அருகே வங்கக் கடலில் எரிமலையா? 3 நிறுவனங்கள் ஆய்வு!


சென்னை அருகே வங்கக் கடலுக்கு அடியில் எரிமலை இருக்கிறதா என்பது குறித்து 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 1757ஆம் ஆண்டில் எரிமலை ஒன்று வெடித்து லாவாவை கக்கியது.. இதனால் கடல் நீரின் நிறம் மாறியது என்று ஒரு மாலுமி தமது பயணக் குறிப்பில் பதிவு செய்திருந்தார். மேலும் சில விஞ்ஞானிகளும் இணையதள பக்கங்களில் இதைப் பதிவு செய்திருப்பதுடன் வங்கக் கடலின் அடியில் பெயரிடப்படாத 0305=01 என்ற எண்ணால் குறிப்பிடப்படுகிற எரிமலை இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர்.


இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் விவரம் கேட்டிருந்தனர். ஆனால் இதை அணுசக்தி ஆணையம், எரிமலை இருக்கிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆகியவை வங்கக் கடலில் எரிமலை இருக்கிறதா? என்பதை அறியும் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டருக்குள்தான் கல்பாக்கம் அணுமின் நிலையமும் அமைந்திருக்கிறது. ஒருவேளை கடலுக்கடியில் எரிமலை இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது சென்னை முதல் புதுச்சேரி வரையில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

கொட்டுகிறது அருவி; ஆறாக ஓடுகிறது சரக்கு குற்றாலத்தில் ரூ.2.50 கோடிக்கு மது விற்பனை

கொட்டுகிறது அருவி; ஆறாக ஓடுகிறது சரக்கு குற்றாலத்தில் ரூ.2.50 கோடிக்கு மது விற்பனை


குற்றாலத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே களை கட்டியது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அருவிகளில் குளிக்கும் பயணிகளுக்காக ஆயில் மசாஜ¢, படகு சவாரி என பொழுது போக்குக்கும் குறைவில்லை என்றாலும், இளைஞர்கள் பலர் குளிப்பதற்கு முன்பே ஓடுவது டாஸ்மாக் கடையை நோக்கித் தான்.

மனதை நெருடும் சாரல், இதமான குளிருக்கு நடுவே சரக்கு விற்பனை குற்றாலத்தில் சக்கை போடு போடுகிறது. சீசனுக்கு முன்பு குற்றாலத்தில் மெயின் அருவிக்கு அருகே மட்டும் 2 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இந¢த கடைகளில் ஒரு நாள் விற்பனை ரூ.50 ஆயிரத்தை தாண்டாது.  தற்போது சீசனை முன்னிட்டு மேலும் 2 கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. குற்றாலம், தென்காசி சாலையில் கூடுதலாக ஒரு கடை திறக்கப்பட்டது. மற்றொரு கடை திறக்க இடம் கிடைக்காததால் அந்த கடையை பழைய குற்றாலத்துக்கு மாற்றியது.

மெயின் அருவி பகுதிய¤ல் அமைந்துள்ள மூன்று கடைகளிலும் நாள் ஒன்றுக்கு விற்பனை ரூ.10 லட்சத்தை தாண்டுகிறது. ஒரு கடையில் தற்போது நாள் ஒன்றுக்கு வருவாய் ஸீ3 லட்சத்தை தாண்டுகிறது. கடந்த 25 நாட்களில் மட்டும் விற்பனை ரூ.2.50 கோடியை தாண்டியுள்ளது. அருவியை போன்று டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுவதால் குற்றாலத்தில் மதுபான கடைகள் நிரம்பி வழிகின்றன.

நெல்லை மாவட்டத்தில் பிற மதுபான கடைகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சரக்குகள் அனுப்பப்பட்டு வரும் நிலையில், குற்றாலத்தில் உள்ள டாஸ்மாக¢ கடைகளுக்கு தினமும் சரக்குகள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.

Monday, June 24, 2013

சவுதி வார இறுதி நாட்கள் மாறுகின்றன: இனி வெள்ளி-சனி வார இறுதி நாட்கள்!

சவுதி வார இறுதி நாட்கள் மாறுகின்றன: இனி வெள்ளி-சனி வார இறுதி நாட்கள்!




சவுதி அரேபியா தமது வார இறுதி நாட்களை வெள்ளி-சனி என்று மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து சவுதியில் வேலைநாட்கள், ஞாயிறு-வியாழன் என்று மாறப்போகின்றது.

இதுவரை காலமும் சவுதியில் வார இறுதி நாட்கள், வியாழன்-வெள்ளி என்றே இருந்தன. அநேக அரபு நாடுகளிலும் அவ்வாறுதான் உள்ளன. கடந்த மாதம் ஓமன் அரசு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளை வார இறுதி நாட்களாக அறிவித்தது. தற்போது, சவுதியும் அப்படியே மாற்றிக் கொள்ளப் போகின்றது.

சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ்அல் சவுத், இந்த அறிவிப்பை செய்துள்ளார். “உலக வேலை வாரத்தில் இருந்து, சவுதியின் வேலை வாரம் இதுவரை பெரிதும் மாறுபட்டு இருந்ததால், பல பொருளாதார வாய்ப்புகள் இழக்கப்பட்டன. அதையடுத்து, உலக வேலை வாரத்துக்கு மிக நெருக்கமாக சவுதி வேலை வாரத்தையும் கொண்டுவர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனவும், மன்னர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து, சவுதி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், சவுதி மத்திய வங்கி, மற்றும் பிற நிதி நிறுவனங்கள் இம்மாதம் 29-ம் தேதி இந்த மாற்றத்தை கொண்டுவருகின்றன. அரசு அமைச்சுக்களும் அதே தினத்தில் தமது காலண்டர்களை மாற்றுகின்றன. பள்ளிகளில் மட்டும் அடுத்த கல்வியாண்டில் இந்த மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.