Thursday, July 26, 2012

Intresting Report : பெண்களின் தன்னம்பிக்கை 32 வயதில் உச்சம் : தங்களை கவர்ச்சியாக உணர்வது 28ல்


பெண்களின் தன்னம்பிக்கை 32 வயதில் உச்சம் : தங்களை கவர்ச்சியாக உணர்வது 28ல்




பெண்களின் தன்னம்பிக்கை 32 வயதில்தான் உச்சத்தில் இருக்கிறது. 28 வயதில்தான் மிகவும் கவர்ச்சியாக உணர்கிறார்களாம். இங்கிலாந்தில் 2 ஆயிரம் பெண்களை வைத்து ஒரு சர்வே நடத்தப்பட்டது. படிப்பு முடித்து நல்ல வேலையில் சேர்ந்து எந்த வயதில் செட்டில் ஆகின்றனர், எந்த வயதில் திருமணம், எப்போது மகிழ்ச்சி என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கேட்கப்பட்டது. சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது தன்னை அழகாக, இளமையாக காட்டிக் கொள்ளும் ஆர்வம் பெண்களுக்கு எல்லா வயதிலும் உண்டு. ஆனாலும், 28 வயதில்தான் நாம் மிகமிக கவர்ச்சியாக இருக்கிறோம் என்று பெண்கள் நம்புகிறார்கள். தன் இடை, பின்பக்க அழகில் இந்த வயதில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த அழகுகள் லிமிட்டை தாண்டிவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்கின்றனர்.

23% பெண்கள் கண்தான் தனக்கு அழகு என்கின்றனர். 20% பெண்கள் மார்பக அழகை குறிப்பிடுகின்றனர். ஆளைவிட அறிவுதான் முக்கியம் என்று கூறுவது 13% பெண்கள் மட்டுமே. அழகை அதிகப்படுத்துவதற்காக எந்த உறுப்பை மாற்றிக் கொள்ள விரும்புவீர்கள் என்று கேட்டால், நீண்ட அழகிய கால்களுக்கு அதிகபட்சமாக 41% பேர் வாக்களிக்கின்றனர். பின்னர், மெல்ல மெல்ல அவர்களுக்கு பொறுப்பு, கடமைகள் அதிகமாகிறது. நட்பு, உறவு வட்டாரம் பெரிதாகிறது. கணவன், குழந்தைகள், குடும்பம் என செட்டில் ஆகின்றனர். இதனால், தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. 32 வயதில் அவர்களது தன்னம்பிக்கை உச்சத்தை தொடுகிறது. இவ்வாறு சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.






உலக மக்கள்தொகையை மிஞ்சும் மொபைல் போன்


உலக மக்கள்தொகையை மிஞ்சும் மொபைல் போன்






உலகில் மக்கள்தொகையை விட மொபைல்போன் எண்ணிக்கை விரைவில் அதிகமாகி விடும் என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து உலக வங்கி ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி பார்த்தால், உலக மக்கள் தொகையான 700 கோடியை, மொபைல்போன் எண்ணிக்கை விரைவில் தாண்டும் என தெரிகிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும், மொபைல் போன்களில் பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த 2000ம் ஆண்டில் 100 கோடியாக இருந்தது. இது 2012ம் ஆண்டில் 600 கோடியை தாண்டியுள்ளது. அவற்றில் 500 கோடி வாடிக்கையாளர்கள், வளரும் நாடுகளில் வசிப்போர். 2000ம் ஆண்டில் பத்து பேருக்கு ஒரு செல்போன் என்ற வீதத்தில் செல்போன்களின் எண்ணிக்கை இருந்தது. அதுவே 2011ம் ஆண்டு இறுதியில் 10 பேரில் 8 பேரிடம் செல்போன் இருக்கும் அளவுக்கு அதிகரித்து விட்டது.

கடந்த ஓராண்டில் மட்டும் உலக வங்கியின் உறுப்பு நாடுகளில் செல்போன் பயன்பாடு வேகமாக வளர்ந்துள்ளது. அதிலும் 50 சதவீத நாடுகளில், அதாவது 90 நாடுகளில் நூறு சதவீத அளவில் செல்போன் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனினும், ஏராளமானோர் 2 அல்லது 3 செல்போன் வைத்திருக்கிறார்கள்.

அதாவது, சிக்கனத்துக்காக அதிக சலுகை தரும் கம்பெனி சிம் கார்டையும், இன்கமிங் கால்களுக்கு மட்டும் இன்னொரு சிம் கார்டையும் பயன்படுத்துகின்றனர். எனவே, செல்போன் பயன்பாடு எண்ணிக்கையும், வாடிக்கையாளர் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்காது. செல்போன் பயன்பாட்டில் அதிகமாக பேச்சுகள் இடம் பெற்றாலும், கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் கோடி மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதே போல், இளைஞர்களே அதிகமாக செல்போன் பயன்படுத்துவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.







அல்சர் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவைகள்


அல்சர் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவைகள்




இன்றைய உலகில் அனைவரும் பாதிக்கப்படும் நோய்களில் அல்சரும் ஒன்றாகும்.

அல்சர் என்பது வயிற்றில் இருக்கும் இரைப்பையில் புண்களை ஏற்படுத்தும். மேலும் எப்பொழுது வயிற்றில் இருக்கும் பாதுகாப்பைத் தரும் ஒரு உறையானது சரியாக வேலை செய்யாமல் இருக்கிறதோ, அப்போது வயிற்றில் வீக்கம் அல்லது புண் போன்றவை ஏற்படும்.

அத்தகைய அல்சர் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட போது, அந்த ஆய்வில் அல்சர் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அல்சர் உருவாதற்கு முக்கிய காரணம் இரைப்பையில் பாக்டீரியாவான ஹெலிகோபேக்டர் பைலோரி(helicobacter pylori) தாக்குவதே.
அல்சரை உருவாக்கும் இந்த பாக்டீரியா, கார்சினோமாவுடன் தொடர்புடையது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாக்டீரியா எளிதில் உடலை தாக்கி அல்சரை உண்டாக்கும் தன்மையையும் உடையது.

அதுமட்டுமல்லாமல் டி.என்.ஏ-வில் மாறுபாட்டை ஏற்படுத்துவதோடு, வயிற்றில் இருக்கும் பாதுகாப்பு உறையையும் பாதித்து விடுகிறது. இதனை எளிதில் சரிசெய்து விட முடியாது.நீண்ட நாட்கள் வயிற்றில் புண்கள் இருந்தால், அவை வயிற்று புற்றுநோயை உண்டாக்கிவிடும். ஏனெனில் அவ்வாறு பாதிக்கப்பட்ட வயிற்று திசுக்கள் நீண்ட நாட்கள் இருப்பதால், இயற்கையாக அவை ஃபைபரஸ் திசுக்களாக மாற்றப்படுகின்றது. இதனால் நாளடைவில் வயிற்று புற்றுநோயானது ஏற்பட்டுவிடும்.

ஆகவே அல்சர் இருப்பவர்கள் ஆஸ்பிரின் அல்லது மற்ற அழற்சி மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் வயிற்றில் உற்பத்தியாகும் பாதுகாப்பான கோழையானது குறைந்துவிடும்.
மேலும் அந்த மருந்துகள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரித்து. வயிற்றுக்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைத்து, உடலின் திறனை பலவீனப்படுத்தும் செல்களை சரி செய்யாமல் இருக்கும். இத்தகைய காரணங்களால் புற்றுநோய் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும் கூறுகின்றனர்.

அல்சர் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை


மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பாக்கு போடுதல் போன்றவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அல்சரிலிருந்து, வயிற்று புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

மேலும் அவை வயிற்றில் அதிகமான அளவு அமிலத்தை உற்பத்தி செய்யும். ஆகவே வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்பட்டால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

மேலும் அல்சர் ஏற்பட்டால் கடைகளில் அதற்கான மருந்துகளை வாங்கி சாப்பிட்டு சரிசெய்யலாம். இதனால் புற்றுநோய் அளவுக்கு கொண்டு போகாமல் தடுக்கும்.

அல்சரானது சரிசெய்யக் கூடிய ஒன்றே. அதிலும் வயிற்று புற்றுநோய் ஆரம்பத்தில் இருந்தால் கூட சரிசெய்துவிட முடியும். ஆனால் எதற்கு அந்த அளவு வரை நாம் இருக்க வேண்டும்.

அதற்கு முன்னதாகவே மருத்துவரை ஆலோசித்து சரியான மருந்துகளை உட்கொண்டு, அல்சரை தடுக்கலாம்.



Wednesday, July 25, 2012

காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்காக


காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்காக




இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் காரசாரமான உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

மேலும் அவர்கள் உணவில் நல்ல சுவை மற்றும் மணம் வருவதற்கும் பல பொருட்களை சேர்க்கின்றனர்.


ஆனால் அப்படி காரமான உணவுகளை, சுவைக்காக அதிக மணமூட்டும் பொருட்களை சேர்ககும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவரும் அறிவதில்லை.


இவற்றையெல்லாம் உண்பதால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அதிகமான காரசார உணவுகளை உண்பதால் உணவில் இருக்கும் வைட்டமின்கள் மற்றம் கனிம சத்துக்கள் சரியாக செரிமானம் ஆகாமல், மேலும் செரிமான மண்டலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும்.

அதற்காக காரமான உணவுகளை உண்ண கூடாது என்று கூறவில்லை, குறைவான அளவு உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளை நேரிடக் கூடும் என்றும் கூறுகின்றனர்.


வயிற்று வலி:


காரமான உணவில் அதிக அளவு அமிலத்தன்மையானது இருக்கும். அதனால் கடுமையான வயிற்று வலியானது ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் காரமான உணவில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் வால்களை பாதிக்கும். ஏனெனில் மிளகாயில் கேப்சைசின் என்னம் பொருள் இருப்பதால், குடலில் பாதிப்பை எற்படுத்தி வலியை உண்டாக்கும். மேலும் அதிக அளவு காரத்தை சாப்பிட்டால் கேப்சைசின், வயிற்றில் எரிச்சல் மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.


இரைப்பை புண்:


உணவில் காரம் அதிகமான அளவு பச்சை மிளகாயை பயன்படுத்தினால், இரைப்பையில் புண் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் டியோடினத்திலும் புண்ணானது ஏற்படும்.

மேலும் காரத்திற்காக சேர்க்கப்படும் ஒரு சில மசாலாக்கள் உணவுக் குழாயிலும் புண்கள் ஏற்பட வழிவகுக்கும்.



ஆகவே இரைப்பையில் புண் இருந்தால், வயிறு வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். இவ்வாறெல்லாம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அந்த காரம் வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இவையெல்லாம் இருந்தால் ஒரு துளி கூட காரத்தை உணவில் சேர்க்க கூடாது.


இரைப்பை அழற்சி: 


சில சமயங்களில் காரமான உணவுகளால் வயிற்றில் அதிக எரிச்சலால் இரைப்பையில் அழற்சி கூட எற்படும்.

அந்த அழற்சி இருந்தால் அஜீரணம், வயிற்று வலி, விக்கல்கள் கூட இருண்ட மலம் போன்றவை ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவதோடு, காரமான உணவுகளை முற்றிலும் நிறுத்த வேண்டும். அதிலும் சில நேரங்களில் லேசான காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்றவையும் ஏற்படும்.



ஆகவே காரமான உணவுகளை அதிகமாக உண்ணாமல், உண்ண வேண்டிய அளவு மட்டும் உண்டு உடலை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


.

பிசாவால் இருதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது


பிசாவால் இருதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது



அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அறிமுகப்படுத்திய பீசா, பர்கர், வறுத்த இறைச்சி போன்ற “பாஸ்ட் புட்” எனப்படும் உணவு வகைகளை இன்றைக்கு இளைஞர்கள் விரும்பி சாப்பிடுகின்றார்கள்.

குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த மோகம் வேகமாக பரவி வருகிறது. இவை உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தாலும் யாரும் இதைக் கண்டுக்கொள்வதில்லை. இதனால் பிரபல நிறுவனங்களுக்கு தான் வருவாய் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்காவின் உள்ள மினிசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சிங்கப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாஸ்ட் புட் உணவு வகைகளை சாப்பிடுவதால் நீரிழிவு, இருதய நோய் பாதிப்பு ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உணவை வாரத்தில் 2 தடவை சாப்பிடும் போது 27 சதவீதம் நீரிழிவும், 56 சதவீதம் இருதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் “நூடுல்ஸ்” இந்த அளவிற்கு பாதிப்பு தராது எனவும் தெரிவித்துள்ளனர்.

சனி கிரகத்தின் துணைக் கோள் பூமியை போன்றது: ஆய்வில் தகவல்


சனி கிரகத்தின் துணைக் கோள் பூமியை போன்றது: ஆய்வில் தகவல்





சனி கிரகத்தின் துணை கோளான டைட்டன் பூகோள ரீதியில்(Geology) பூமியை போன்றே உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சனி கிரகத்தின் ஏராளமான துணைக் கோள்களில் மிகப் பெரியது டைட்டன் தான்.இந்தக் கோளில் பூமியைப் போன்றே ஏராளமான ஆறுகள் உள்ளன. ஆனால் அதில் நீருக்குப் பதில் திரவ நிலையில் மீத்தேன் தான் ஓடிக் கொண்டுள்ளது.

அதே போல சூரிய மண்டலத்தில் உள்ள பிற துணைக் கோள்கள், நிலாக்களில் காணப்படும் ஏராளமான கிரேட்டர்கள் எனப்படும் மேடு, பள்ளங்கள் இதில் இல்லை. விண்கற்கள் தாக்குதல்களால் ஏற்படும் இந்த மேடு, பள்ளங்கள் டைட்டனில் காணப்படாததற்குக் காரணம் இதுவரை தெரியாமல் இருந்தது.
ஆனால் பூமியைப் போன்று டைட்டனிலும் கண்டத் திட்டுகள் நகர்வு உள்ளிட்ட நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் இந்த மேடு, பள்ளங்கள் மறைந்து விடுவது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் டைட்டனின் புவியியல் தன்மை கிட்டத்தட்ட பூமியை ஒத்து இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை


பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை




சமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை கவனிக்கும் முதலாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களின் முதலாளிகள் தங்களது ஊழியர்களை கண்காணிப்பதற்காவே பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர் என புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக ஆய்வாளர் Vanessa de la Llama தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமது ஊழியர்களைக் கண்காணிக்கவும், புதிய தொழிலாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் நிறுவனங்கள் இம்முறையை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு பரிசோதனை செய்யும் போது பேஸ்புக் சுயவிபரத்தில் பொருத்தமற்ற படங்களைப் பார்த்தவுடனேயே, குறிப்பிட்ட ஊழியர்களைப் பற்றி தவறாக மதிப்பிட்டு அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை அல்லது புதியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுதல் போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்




கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் இயற்கையான நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது. இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது.

எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

தாது உப்புக்களும், உயிர்சத்தும்


இளநீரில் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டாசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.
இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.

இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இயற்கை குளுக்கோஸ்


இளநீரில் மின்பகுபொருள்(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.


இயற்கை சுத்திகரிப்பு


இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம்.

இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும்.














முதல் முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க பெண் மரணம்





அமெரிக்காவிலிருந்து முதன்முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட சேலி ரைட் (வயது 61), நேற்று கணையப் புற்றுநோயால் மரணமடைந்தார்.

டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையாக இருந்த சேலி, நான்கு பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இவரது மரணத்தால் மனம் வருந்திய ஜனாதிபதி ஒபாமா இவரை தேசிய வீராங்கனை என்றும் மற்றவர்களுக்கு ஆற்றல்மிகு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் எனவும் பாராட்டியுள்ளார்.

சேலி ரைட், கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸில் பிறந்தார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் பயின்றார்.




விஞ்ஞானிகளும் பொறியியல் வல்லுநர்களும் “நாசா”வுக்குத் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தார். 8000 பேர் விண்ணப்பத்தில் 35 பேர் மட்டுமே தெரிவாயினர். அவர்களில் ஒருவரான சேலி 1978ம் ஆண்டில் நாசாவில் சேர்ந்தார்.

அங்கு சிறப்பாக பணியாற்றி, கடந்த 1983ம் ஆண்டில் சேலஞ்சர் என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு பறந்தார்.

இவரது மரணம் குறித்து நாசா நிர்வாகி சார்லஸ் போல்டென், சேலியை நாம் இழந்துவிட்டோம், ஆனால் அவரது நட்சத்திரம் எப்போதும் வானில் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும் என்றார்.

நாசாவை விட்டு விலகிய பின்பு கலிபோர்னியா சேன் டியாகோ ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார்.

கடந்த 2001ம் ஆண்டில் சேலி ரைட் சைன்ஸ் என்ற அறக்கட்டளையை நிறுவி சிறுவர்களுக்கான அறக்கட்டளை வெளியிட்டார். அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தினார். சிறுவர்களுக்கு அறிவியல் பற்றிய அறிவை ஊட்டும் வகையில் இவர் ஐந்து நூல்களை எழுதியிருக்கிறார்.





Tuesday, July 24, 2012


உலகில் மழை பெய்யாத இடம் எது?


The Atacama Desert in Chile (South America) is the driest place in the world


உலகில் பலநாடுகளிலும் பலவேறு அளவுகளில் ஒவ்ஒரு ஆண்டும் மழை பெய்து வருகிறது.மழை அளவை பொதுவாக சென்டீமிட்டரில் கணக்கிடப்படுகிறது.உலகின் பல பாலைவனங்களில் ஒவ்வறு ஆண்டும் 25 சென்டீமிட-க்கும் குறைவாக தான் மழை பெய்கிறது.இந்த இடங்களில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் இருக்கும்

பொதுவாக பாலை வனங்களில் கள்ளி செடிகளே பெருமளவில் காணப்படுகிறது.இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியும் தாங்கி வளரும் திரன் உடையவை.

சிலி நாட்டில் அமைந்துள்ள அடகாமா பாலைவனம் (Atacama Desert) மிகவும் விநோதமானது இந்த பாலை வனத்தில் எந்தத் தாவரமும் வளர்வதில்லை உலகிலேயோ மிகவும் வறட்சியான பகுதியாக இந்த பாலைவனம் கருதப்படுகிறது.மேலும் பல ஆன்டுகளாக மழையே பெய்வதில்லையாம் சுமார் 400 ஆண்டுகளாக மழை பெய்யாத இடமாக அடகாமா பாலைவனம் இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகாறார்கள்.

உலகின் மிக பெரிய பாலைவனமாக சகாரா பாலைவனம் (Sahara Desert) திகழ்கிறது இந்த பாலைவனம் சுமார் 84-லட்சம் சதுர கீலோமீட்டர் கொண்டதாகும் பாலைவனம் என்றால் வெப்ப பாலைவனங்கள் மட்டுமே என்று நினைத்து விடவேண்டாம். குளிர் பாலைவனங்களும் உள்ளன. அன்டார்டிகா,காரீன்லாந்து,ரஷ்யாவில் வடக்கு பகுதி போன்றவை குளிர்பாலைவனப் பிரிவைச் சேர்ந்தவை.இங்கும் மழை அளவு குறைவாகும்.
இங்கு எப்போதும் நம் முகங்களில் பனி கொட்டிக் கொண்டை இருக்கும்.இந்த பனி நமது தலைக்கு மேலிருந்து கொட்டாது, பூமியின் மேற்பரப்பிலிருந்து வெளிப்பட்ட பனித் துகள்களாகும்.


Monday, July 23, 2012



49 கோடி டாலர் இழப்பு


26 ஆண்டில் முதல்முறையாக நஷ்டத்தில் மைக்ரோசாப்ட்




அமெரிக்க முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 26 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நஷ்டம் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது.
உலக மகா பணக்காரர் பில்கேட்சின் நிறுவனம் மைக்ரோசாப்ட். கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்தது. 2007ம் ஆண்டில் 630 கோடி டாலருக்கு ஏக்வான்டிவ் என்ற ஆன்லைன் விளம்பர சேவை நிறுவனத்தை வாங்கியது.

மைக்ரோசாப்டின் போட்டி நிறுவனமான கூகுளின் விளம்பர வேகத்துக்கு மாற்றாக ஏக்வான்டிவ் இருக்கும் என்று கருதப்பட்டது.ஆனால், கூகுளுடன் அது போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. ஆன்லைன் விளம்பர சேவையில் கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஏக்வான்டிவ் கொள்முதலால் 4வது காலாண்டு நிதி நிலை அறிக்கையில் மைக்ரோசாப்ட் 49 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளது. 1986ம் ஆண்டு பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு மைக்ரோசாப்ட் முதல்முறையாக நஷ்டத்தை சந்தித்துள்ளது





இன்று பூமியைக் கடக்கும் விண் கல்






சுமார் 4,500 அடி விட்டம் கொண்ட விண் கல் ஒன்று இன்று பூமையைக் கடக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு மிக அருகாமையில், இது கடந்துசெல்லவிருக்கிறது. இதனை வெறும் கண்களால் காணமுடியும் என்றும் சொல்லப்படுகிறது. 2002ஏம்31 என்று இந்த விண்கல்லுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இவ்விண்கல்லால் பூமிக்கு பாதிப்பு எதுவும் இல்லை எனவும் விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த விண் கல்லில் இருந்து தெறித்த சில துகள்கள், பூமியில் வீழ்ந்து பின்னர் அதில் இருந்து உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்ற கோட்பாடு ஒன்றும் உள்ளது. இருப்பினும் அதனை தற்போது விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.

ஈர்ப்பு சக்தி இல்லாத, இந்த விண் கல்லில் அவ்வாறு நுன் உயிர்கள் இருக்க வாய்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.