Saturday, September 22, 2012

மோனாலிசாவின் எலும்புக்கூடு எடுக்கப்படுவதை நீங்கள் பார்க்க வேண்டுமா?

மோனாலிசாவின் எலும்புக்கூடு எடுக்கப்படுவதை நீங்கள் பார்க்க வேண்டுமா?




“மோனா லிசாவின் எலும்புக்கூடு கிடைக்கிறது” என்று சொன்னால், ஓவியத்தில் வரையப்பட்டுள்ள மோனா லிசாவே ஒரு கற்பனைப் பாத்திரம் என்று சொல்லி விடுவீர்கள். நாம் கூறவரும் நபர், மோனா லிசா ஓவியத்தை வரைவதற்கு லியார்னாடோ டாவின்ஸிக்கு மாடலாக (அல்லது இன்ஸ்பிரேஷனாக?) இருந்தவர்.

இவரது பெயர், லிசா கெரர்டினி. இவரும் இத்தாலியர்தான்.

இத்தாலி, ஃபுளோரன்ஸ் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள், இந்த மோனாலிசா மாடலின் எலும்புக் கூடுகளை நெருங்கி விட்டதாக நேற்று அறிவித்துள்ளனர்.

கீழேயுள்ள போட்டோவில், லியார்னாடோ டாவின்ஸி வரைந்த மோனா லிசாவின் ஒரிஜினல் உருவத்தை பார்த்துவிட்டு, எலும்புக்கூடு தேடும் போட்டோக்களை காண, அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.



ஃபுளோரன்ஸ் நகரில் லிசா கெரர்டினியின் எலும்புக்கூட்டை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வாரம், அதே காலப்பகுதியில் இறந்து போய் புதைக்கப்பட்ட ஒருவருடைய எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

“தற்போது கிடைத்துள்ள எலும்புக்கூடு லிசா கெரர்டினியின் எலும்புக்கூடு அல்ல” என்று குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள், “இந்த எலும்புக்கூட்டுக்கு கீழே லிசாவின் எலும்புக்கூடு கிடைக்கலாம் என்பதற்கு எம்மிடம் சில ஆதாரங்கள் உள்ளன” என்று கூறியுள்ளனர்.

கீழேயுள்ள போட்டோவில், அகழ்வாராய்ச்சியாளர் ஒருவர், எலும்புக்கூடு இருக்கக்கூடிய இடத்தை செக் பண்ணுவதை பார்த்துவிட்டு, அடுத்த போட்டோவுக்கு வரவும்.




இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள National Committee for the Promotion of Historic and Cultural Heritage அமைப்பின் தலைவர் சில்வானோ வின்சிட்டி, இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

இந்த அமைப்பினர் எதற்காக லிசா கெரர்டினியின் எலும்புக்கூட்டை தேடுகின்றனர்? கீழேயுள்ள போட்டோவில், இந்தவாரம் கிடைத்த மற்றொருவரின் எலும்புக்கூட்டை பார்த்துவிட்டு, அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.




மோனா லிசா என்று உலகமெங்கும் அறியப்பட்ட ஓவியப் பெண்ணை, La Gioconda என்று இத்தாலியர்கள் அழைக்கின்றனர். La Joconde என்று பிரெஞ்ச்காரர்கள் அழைக்கின்றனர். லியார்னாடோ டாவின்ஸி வரைந்த ஒரிஜினல் மோனா லிசா ஓவியம், பாரீஸில் உள்ள Louvre மியூசியத்தில் உள்ளது.

இந்த ஓவியம் லிசா கெரர்டினியை மாடலாக வைத்து வரையப்பட்டது என்பதை பெரிய சதவீதத்தினர் ஒப்புக்கொண்ட போதிலும், அதை தவறு என்று வாதிடும் ஆட்களும் உள்ளனர்.

கீழேயுள்ள போட்டோவில் உள்ளதுதான், லிசா கெரர்டினியின் உடலை புதைத்த இடம் என்பதுவரை கண்டு பிடித்துள்ளனர். வாருங்கள் இறுதி போட்டோவுக்கு




சில்வானோ வின்சிட்டியின் அமைப்பினர், லிசா கெரர்டினியின் எலும்புக்கூட்டை கண்டெடுத்து, அதன் முகத்தை விஞ்ஞான ரீதியாக பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் ஒரிஜினல் உருவத்துக்கு கொண்டுவந்து, மோனா லிசாவின் உருவத்துடன் ஒப்பிட்டு பார்க்கப் போகிறார்கள். உலக அளவில் சில கோடீஸ்வரர்கள், இந்த ஆராய்ச்சிக்கான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

கீழேயுள்ள போட்டோவில் உள்ளதுதான், அந்த நாட்களில் இத்தாலி, ஃபுளோரன்ஸ் நகரில் பிரபுக்களின் குடும்பத்தினரை புதைத்த கல்லறைகள் இருந்த இடம்.



நேற்று டெஸ்ட் பிளைட்: ஹெலிகாப்டர் போல மேலெழுந்து, ஜெட் போல பறந்தது!


நேற்று டெஸ்ட் பிளைட்: ஹெலிகாப்டர் போல மேலெழுந்து, ஜெட் போல பறந்தது!


 

பல வாரங்கள் கடுமையான எதிர்ப்பை சந்தித்தபின், அமெரிக்க கடற்படையினர் ஜப்பானில் தமது MV-22 Osprey விமானத்தின் முதலாவது டெஸ்ட் பிளைட்டை நேற்று (வெள்ளிக்கிழமை) இயக்கினர்.

அமெரிக்க கடற்படையின் இந்த விமானம், அமெரிக்காவில் ஏற்கனவே பறக்க விடப்பட்டுள்ள போதிலும், ஜப்பானில்தான் முதல் தடவையாக நேற்று பறக்க விடப்பட்டது.

இது வழமைக்கு மாறான புதிய ரக விமானம். ஹெலிகாப்டர் போல நின்ற இடத்தில் இருந்தே மேலெழக் கூடியது. ஜெட் விமானம் போன்ற வேகத்தில் பறக்கக் கூடியது. அதாவது ரன்வே தேவையில்லை.

தெற்கு ஜப்பானில் உள்ள தற்காலிக அமெரிக்க தளத்தில் இருந்து நேற்று பறக்க விடப்பட்ட இந்த ஆஸ்பிரே விமானம், ஜப்பானில் உள்ள பிரதான அமெரிக்க விமானத் தளமான ஒகினாவாவை நிரந்தர தளமாக கொண்டு இயங்கப் போகின்றது. நேற்றைய பறத்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்ததால், திங்கட்கிழமை இந்த விமானம், ஒகினாவாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஒகினாவாவில் இந்த விமானத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன.

காரணம், ஏற்கனவே தயாரிப்பு நிலையில் இருந்தபோது, இந்த விமானத்தால் சரியாக பறக்க முடிந்திருக்கவில்லை. பறக்க முயற்சித்த அநேக தடவைகள், விபத்துக்குள்ளானது. இதனால், விமானம் பாதுகாப்பற்றது. அதை தமது நகரத்தின் மேல் பறக்க விட வேண்டாம் என ஒகினாவா நகர மக்கள் கடந்த சில வாரங்களாகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், இந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேடா ஜப்பானுக்கு விஜயம் செய்து, இது தொடர்பாக பேசியபின், ஜப்பானிய அரசு MV-22 Osprey விமானத்தை தமது நாட்டில் இயக்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளது.

“இந்த விமானம் மிகவும் பாதுகாப்பானது. விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை” என்று பனேடா உறுதிமொழி அளித்திருந்தார்.

“அவ்வளவு நம்பிக்கை இருந்தால், நியூயார்க் போன்ற ஜனநெருக்கடியுள்ள அமெரிக்க நகரம் ஒன்றின் மேலாக பறக்க விடுவதுதானே… எதற்காக நமது நகரத்தின்மேல் பறக்க வேண்டும்?” என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

இன்னும் 10 வருடங்களில், இப்படியான விமானங்களே பயணிகள் விமானங்களாகவும் இருக்கும் என்று கூறத் தொடங்கியுள்ளார்கள்.

இந்த ரக விமானங்களின் போட்டோக்கள் சிலவற்றை தருகிறோம். பாருங்கள். வெவ்வேறு இடங்களில், நிலைகளில், கோணங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்கள்… சுவாரசியமாக இருக்கும்.












புதிய ஐ-போனை வாங்கிய முதலாவது நபர்


புதிய ஐ-போனை வாங்கிய முதலாவது நபர், அதை வாங்கிய விதத்தை பாருங்கள்!




ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 5, நேற்று (வெள்ளிக்கிழமை) உலக நகரங்கள் பலவற்றில் ஒரே தினத்தில் விற்பனைக்கு வந்தது. முதல் தினமே போனை வாங்க வேண்டும் என்று கடை வாயிலிலேயே சில தினங்களுக்கு முன் இடம் பிடித்து, கியூவில் படுத்து தூங்கியவர்கள் பற்றி செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
எனவே அதை விட்டு விடலாம்.

குறிப்பிட்ட ஒரு ஸ்டோரில், விற்பனை தொடங்கிய நேரத்தில், காட்சி எப்படி இருந்தது என்பதை சில போட்டோக்களில் பார்க்கலாம். ஸ்டோர் திறந்த நேரத்தில் இருந்து, கியூவில் நின்ற முதலாவது நபர், ஐபோனை வாங்கிக் கொண்டு வெளியே வரும் காட்சியை இந்த 9 போட்டோக்களில் பாருங்கள்.

இங்கு நாம் தேர்ந்தெடுத்தது, லண்டன், Covent Garden-ல் உள்ள ஆப்பிள் ஸ்டோரை. அந்த ஒரு ஸ்டோரில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க வாருங்கள்…

இதோ முதலாவது போட்டோவில், ஆப்பிள் ஸ்டோரின் ஊழியர்கள் கடையை திறப்பதற்கு வருகிறார்கள். வெளியே நீண்ட கியூவில் காத்திருப்பவர்களை நோக்கி கையசைத்துவிட்டு, கடையை திறக்கப் போகிறார்கள்.


கூட்டத்தை பாருங்கள். இவர்களில் பெரும்பாலானோர் நேற்று சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே கடைக்குள் செல்ல முடிந்தது. காரணம், இவர்கள் கியூவில் இல்லை.


செல்வதற்காக உள்ள கியூ. இதன் தொடக்கத்தில் உள்ள பலர், இங்கேயே வரிசையில் காத்திருந்து தூங்கி எழுந்து, தயாராக நிற்கிறார்கள்.


வாசல் திறந்துவிட்டது. கியூவில் நின்றிருந்தவர்களில் முதல் செல்ல உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்..


முதல் செட்டில் கடைக்கு உள்ளே வந்தவர்களை கடை ஊழியர்கள் ஹை-ஃபைவ் கொடுத்து உற்சாகப்படுத்தி வரவேற்கிறார்கள்.


சேல்ஸ் செய்பவர்கள் பரபரப்பான விற்பனைக்கு தயாராகிறார்கள். இதோ… முதலாவது கஸ்டமர் வரப் போகிறார்.


விற்பவர்களுக்கு பின்னால், ஐ-போன் 5 பெட்டிகள் தயாராக அடுக்கப்பட்டு காத்திருக்கின்றன. கடகடவென்று எடுத்துக் கொடுக்க வேண்டியதுதான்.


இந்த ஸ்டோரின் முதலாவது ஐபோனை வாங்கியவர் அதை ஆனந்தத்துடன் காண்பிக்கிறார். கென்ட் பகுதியில் வசிக்கும் இவரது பெயர், ரயன் வில்லியம்ஸ். மொத்தம் ஐந்து  ஐபோன்களை இவர் வாங்கினார்.


ஆப்பின் ஸ்டோர் ஊழியர்கள் அனைவரும் வந்து அவரை பாராட்டி, உற்சாகப்படுத்த டான்ஸ் ஆடுகிறார்கள்.

விற்பனை செய்த இவர்களே இந்த ஆட்டம் போட்டால், வாங்கிய ரயன் வில்லியம்ஸ் எந்த ஆட்டம் போடுவார்? இதோ நம்ம டி.ராஜேந்தர் பாணியில் போடுகிறார் ஒரு குத்தாட்டம்!


Friday, September 21, 2012

ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வாங்கி சேகரிக்கும் பெண்

புதிய சாதனைக்கு முயற்சி

ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வாங்கி சேகரிக்கும் உதகை பெண்






கின்னஸ் சாதனை முயற்சியாக ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊட்டி நிஷாலி, தற்போது 4,000 சிலைகளை வாங்கி வீடு முழுவதும் அலங்கரித்து வைத்துள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் வித்தியாசமாக ஏதாவது செய்து சாதனை படைக்கின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த நிஷாலி மஞ்சு பாஷினி என்பவர் தற்போது அதிகமாக விநாயகர் சிலைகளை வாங்கி சேர்த்து வைத்துள்ளார். கின்னஸ் சாதனை புரிய இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

இவரது தந்தை ஹரிதாஸ். இவர் காவல்துறையில் எஸ்ஐ ஆக உள்ளார். நிஷாலினியின் சாதனைக்கு அவரது தந்தையும் உறுதுணையாக இருக்கிறார். நிஷாலி வாங்கி குவிக்கும் குட்டி, குட்டி விநாயகர் சிலைக்காக பூஜை அறை முழுவதும் ஷோகேஸ் செய்து வைத்துள்ளனர். இவர் இந்த விநாயகர் சிலைகளை வாங்கி குவிப்பதற்கு மற்றொரு காரணத்தையும் கூறுகிறார்.

வைரம், தங்கம், பித்தளை, களிமண், மரம், பாக்கு, சோப்பு, சங்கு, மின் விளக்குகள், இசை கருவிகள் போன்றவைகளில் விநாயகர் சிலை மற்றும் உருவம் பதித்த பொருட் களை வாங்கி வருகிறேன். என்னிடம் உள்ள கம்மல், மோதிரம், வளையல், கழுத்து செயின் என எல்லாவற்றிலும் விநாயகர் மட்டுமே இருப்பார். நான் ஏன் இந்த விநாயகர் சிலையை வைத்து ஒரு சாதனை படைக்கக் கூடாது என நினைத்தேன். அதன்படி இப்போது சாதனைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளேன் என்றார்.




இராணுவ முகாமிலேயே குழந்தையை பெற்றெடுத்த வீராங்கனை

இராணுவ முகாமிலேயே குழந்தையை பெற்றெடுத்த வீராங்கனை

 



ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் இராணுவத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர், இராணுவ முகாமிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படையில், பிரிட்டன் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்படை பிரிவில் மொத்தமாக 500 பெண்கள் உள்ளனர்.

ஆப்கானின் நேட்டோ இராணுவ முகாமின் ஆயுதப் படைப் பிரிவில் ஆறு மாதங்களுக்கு முன் வந்த, இராணுவ வீராங்கனை ஒருவர் இரு வாரங்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இராணுவ மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில், அப்பெண் 34 வார கர்ப்பிணியாக உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ஐந்து வார குறைப் பிரசவமாக, 18ஆம் திகதி ஆண் குழந்தையை அப்பெண் பெற்றெடுத்தார்.

இதுகுறித்து பிரிட்டன் இராணுவ செய்தி தொடர்பாளர், தாயும்- சேயும் நலமாக உள்ளனர். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தப் பின், தாயும்- சேயும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவித்தார்.

தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமலே கடினமான பயிற்சியிலும், துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டிருந்த வீராங்கனை ஒருவர் முகாமிலேயே குழந்தை பிரசவித்திருப்பது இதுவே முதல் முறை.

சீனாவில் கோவிலில் பிச்சை எடுத்தவர்கள் வேலிச் சிறையில் அடைப்பு


சீனாவில் கோவிலில் பிச்சை எடுத்தவர்கள் வேலிச் சிறையில் அடைப்பு

                       


சீனாவில் புத்தர் கோவிலுக்கு வெளியே பிச்சை எடுத்த நபர்களை, பொலிசார் வலுக் கட்டாயமாக வேலிச் சிறையில் அடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவின் ஷாங்காய் அருகே நான்சாங் நகரில் உள்ள புத்தர் கோவிலில் பிரம்மாண்ட திருவிழா நடக்கிறது. இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புத்தர் கோவிலுக்கு வெளியே அமர்ந்து பிச்சை எடுத்த, நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை நேற்று முன்தினம் பொலிசார் அதிரடியாக அகற்றினர். கோவிலுக்குச் சற்றுத் தள்ளி கம்பி வேலி அமைத்து அவர்களை சிறை வைத்தனர்.

செய்தியை கேள்விப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுமட்டுமல்லாமல் சீன இணையத்தளங்களில் இதற்கு பலத்த விமர்சனங்கள் கிளம்பின.

மனித சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம், பொலிசின் நடவடிக்கை மனிதத் தன்மையற்ற செயல், ஆடு, மாடுகளை கொட்டிலில் அடைப்பது போன்று, பிச்சைக்காரர்களை வேலிச் சிறையில் அடைத்திருப்பது பரிதாபமாக உள்ளது என ஏராளமானோர் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.


                               


ஆனால் உள்ளூர் நிர்வாகம் இதற்கு மறுப்புத் தெரிவித்து உள்ளது. புத்தர் கோவிலுக்கு ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வரும் சமயத்தில், கீழே அமர்ந்து பிச்சை எடுப்பவர்களை மிதித்து செல்லும் வாய்ப்பு உள்ளது.

அப்படி ஏதும் அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் அவர்களை கோவிலில் இருந்து தள்ளி வைத்து உள்ளோம் என அரசு அதிகாரி சென் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பிச்சைக்காரர்களை அந்த இடத்தில் இருந்து செல்லுமாறு முதலில் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் கேட்காததால் தான் கம்பி வலைக்குப் பின்னால் அடைக்க வேண்டிய நிலை உருவானது எனவும் அவர் விவரித்தார்.






                                


                                

Thursday, September 20, 2012

19 வயதில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: உகாண்டா பெண்

19 வயதில் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி: உகாண்டா பெண் சாதனை




உகாண்டாவில் 19 வயது டீன் ஏஜ் பெண், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் ஜனாதிபதியாக இருப்பவர் யோவெரி முசிவெனி.

இந்த ஆண்டு 8 நாடாளுமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 7 இடங்களில் ஆளும் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் அவரது பலம் குறைந்தது.

இந்நிலையில் உசக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திடீரென காலமானார். இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தம் ஜனாதிபதி முசிவெனிக்கு ஏற்பட்டது.

இந்த தொகுதியை இழந்தால், அரசு பெரும்பான்மையை இழந்து விடும் நிலை இருந்தது. இந்நிலையில், உசக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் பிராஸ்கோவியா ஒரோமைட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர காத்திருக்கிறார் ஒரோமைட். இவருக்கு 19 வயதுதான். இதனால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தேர்தலில் டீன் ஏஜ் பெண் தோல்வி அடைவார். ஜனாதிபதி பதவி இழப்பது உறுதி என்று அரசியல் வல்லுனர்கள் கூறினர்.

ஆனால், இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரோமைட் வெற்றி பெற்றுள்ளார். அனுபவம் இல்லாத சிறு பெண், நாடாளுமன்ற உறுப்பினராக எப்படி செயல்பட போகிறார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் இது வயது பற்றிய பிரச்னை இல்லை. புத்தி சம்பந்தப்பட்டது, எனக்கு தெரியும் என்று ஒரோமைட் அமைதியாக பதில் அளித்துள்ளார்.

3000 வருடங்களுக்கு தேவையான வைரங்கள் கண்டுபிடிப்பு

இன்னும் 3000 வருடங்களுக்கு தேவையான வைரங்கள் சைபீரிய வனப்பகுதியில் கண்டுபிடிப்பு




 




ரஷ்யாவின் சைபீரிய வனப் பகுதியில் இன்னும் 3000 வருடங்களுக்கு உலக சந்தைக்கு வழங்கக் கூடியளவுக்கு ட்ரில்லியன் கேரட் கணக்கான வைரங்களைத் தோண்டி எடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மோதிய விண்கல்லால் 62 மைல் விட்டமுள்ள பள்ளத்தாக்கு ஒன்று ரஷ்யாவின் சைபீரிய வனப் பகுதியில் ஏற்பட்டிருந்தது.

சமீபத்தில் இப் பள்ளத்தாக்கின் அடியில் ஆய்வு மேற்கொண்ட போதே இந்த ஆச்சரியமிக்க விடயம் கண்டுபிடிக்கப்பட்டது.

Popigai Astrblem எனப் பெயரிடப் பட்டுள்ள சைபீரியாவில் உள்ள இப் பகுதியில் கிடைக்கும் வைரங்கள் சாதாரண வைரங்களை விட இரு மடங்கு அதிக கடினமுடையது என்பதுடன் அதி உயர் விஞ்ஞான உபகரணங்களையும் தொழி நுட்பக் கருவிக்ளையும் கொண்டு செதுக்கக் கூடியது.

இப்பள்ளத்தாக்கு 1970 ஆம் ஆண்டிலே கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் மிகவும் கட்டுப்பாடு உடைய உலக சந்தைகளின் கொள்கைகளால் பாதிக்கப் பட்ட சுயநலவாதிகளின் செய்கைகளால் வெளியுலகுக்கு மறைக்கப் பட்டு இரகசியமாக வைக்கப் பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.





இயேசுநாதர் தனது சிஷ்யையை திருமணம் செய்தாரா?


இயேசுநாதர் தனது சிஷ்யையை திருமணம் செய்தாரா? புதிய தகவலால் பரபரப்பு




இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.

இயேசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

முழுமையான வாசகங்கள் அதில் இல்லை. பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், இயேசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது. இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் இயேசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது.

ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று இயேசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. நான் அவருடன் வசித்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்துப் படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம் என்றும் அப்படி இருந்தால் இது மிகப் பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் எனவும் கூறியுள்ளார்.



ஏற்கனவே மேரி மெகதலீனும், இயேசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது “தி டாவின்சி கோட்” நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் மேரி மெகதலீன், இயேசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மேரி மெகதலீன்?
மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன. மேரி மெகதலீன் இயேசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.

மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது. பின்னர் இயேசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மேரி மெகதலீன் குறித்து இயேசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர்.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய் விட்டனர். ஜான் மட்டுமே உடன் இருந்தார். அவருடன் உடன் இருந்தவர் மேரி மெகதலீன்.

இதேபோலஇயேசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான். இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர்.

இந்நிலையில்தான் இயேசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் இயேசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


விண்வெளியில் டிரையத்லான் சாகசம் செய்து புதிய சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்



விண்வெளியில் டிரையத்லான் சாகசம் செய்து புதிய சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்





அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

விண்வெளி ஆய்வு கூடத்தின் கமாண்டர் ஆகவும் பொறுப்பு ஏற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் டிரையத்லான் விளையாட்டு போட்டி நடந்தது. டிரையத்லான் என்பது ஒரே நேரத்தில் ஓட்டம், சைக்கிள், நீச்சல் என்று 3 போட்டியும் கலந்தது. அந்த விளையாட்டை அதே நேரத்தில் விண்வெளியில் நிகழ்த்தி சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை படைத்தார்.


அதற்காக சிறப்பாக வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ஓடாத நிலையான சைக்கிள், ஓடுவதற்கு வசதியான டிரெட்மில் எந்திரம் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தினார்.

இதன் மூலம் 0.8 கி.மீற்றர் தூரம் நீந்தியும், 28.9 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டியும், 6.4 கி.மீ தூரம் ஓடியும் சாகசம் நிகழ்த்தினார். அதற்காக அவர் 1 மணி 48 நிமிடங்கள் மற்றும் 33 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.

இவர் ஏற்கனவே அதிகமுறை விண்வெளியில் நடந்தவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








மவுஸ் சைஸில் மலிவு விலை ஸ்கேனர்


மவுஸ் சைஸில் மலிவு விலை ஸ்கேனர் இங்கிலாந்து பேராசிரியர் கண்டுபிடிப்பு




மூவாயிரத்து ஐநூறு ரூபாய் செலவில் கம்ப்யூட்டர் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிடித்துள்ளார் இங்கிலாந்து பேராசிரியர். இங்கிலாந்தில் உள்ள நியூகேசில் பல்கலையின் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஜெப் நீஷம். இவரது தலைமையிலான குழு மலிவு விலை ஸ்கேனிங் கருவியை உருவாக்கியுள்ளது.

இதுபற்றி அவர் கூறியதாவது: வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஸ்கேன் எடுக்கும் நடைமுறை உலகம் முழுவதும் இருக்கிறது. பொதுவாக, ஸ்கேனர் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கிறது. விலை அதிகம் என்பதால் கட்டணமும் அதிகம் வசூலிக்கிறார்கள். சிம்பிளாக நாமே ஒரு ஸ்கேனர் தயாரித்தால் என்ன என்ற எண்ணம், என் மனைவி முதன்முதலாக கர்ப்பமானபோது உதித்தது. ஒலி அலைகள் தொடர்பான சோனார் துறையில் எனக்கு இருந்த அறிவும் அனுபவமும் கைகொடுத்தது.

உடனடியாக அசெம்பிள் செய்து மினி ஸ்கேனரை உருவாக்கினேன். அதன் உதவியுடன் குழந்தையை ஸ்கேன் செய்து நானும் மனைவியும் டிவி திரையில் பார்த்து மகிழ்ந்தோம். சக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அதில் சில மாற்றங்கள் செய்து மலிவு விலை ஸ்கேனரை உருவாக்கியுள்ளேன். இதை தயாரிக்க அதிகபட்சம் ரூ.3,500தான் செலவானது.

கம்ப்யூட்டர் மவுஸ் சைஸ் மட்டுமே உள்ளது. யுஎஸ்பி போர்ட் மூலம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் இணைத்தால் குழந்தையின் அசைவை ஸ்கிரீனில் பார்க்கலாம். குழந்தையின் பொசிஷன் தெளிவாக தெரிகிறது. ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துகொள்ளும் அளவுக்கு தெளிவாக இல்லை. அதிக விலை ஸ்கேனர் கருவிக்கு நிகராக இதன் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு ஜெப் நீஷம் கூறினார்.

Wednesday, September 19, 2012

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்


பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்


 

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன

அவைகளில் சில………
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.



1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ள

இ-மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர்

இ-மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?






இ-மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் (V.A. Shiva Ayyadurai)
இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை அல்லவா…

அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்? ஆம்! அதுதான் உண்மை. இன்று உலகையே ஒருவலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இமெயி ல் வசதியை நம்ம தமிழர் ஒருவர்தான் கண்டு பிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பது வயது நிரம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.


The efforts to belittle the innovation of a 14-year-old child should lead to reflection on the larger story of how power is gained, maintained, and expanded, and the need to encourage, not undermine, the capacities for creative inquiry that are widely shared and could flourish, if recognized and given the support they deserve.“    
                                                                            As MIT's Institute Professor Noam Chomsky reflected:

இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.

ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ , அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ-மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இவ்வாண்டோடு  சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் ‘இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், அதன் சார்பில் இந்தப் போட்டியை அறிவித்துள்ளா ர்.

நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம் தரும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மாணவனாக இருந்தபோது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக்கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்த க்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofe mail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 

arinjar.blogspot.com

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்





விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானின் அவதார திருநாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்து அமைப் புகள் சார்பில் பல இடங்களில் விதவிதமான வடிவங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. எல்லா கோயில் களிலும் விநாயகருக்கு விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு பிரமாண்ட கொழுக்கட்டை படையல் போடப்பட்டது.

மக்கள், சிறிய களிமண் பிள்ளையார் சிலைகளை வாங்கிச் சென்று வீடுகளில் அலங்கரித்து வைத்தனர். விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், பழ வகைகளை வைத்து பூஜை செய்தனர். விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய நல்ல நேரம் காலை 9 மணி என்பதால் இந்த நேரத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையிலும் பல இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. லஸ் கார்னரில் உள்ள நவசக்தி விநாயகர் கோயிலில் இன்று காலை கணபதி ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது.

ஸ்நெசப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சந்தக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ தீபாராதனை நடத்தப்பட்டது. வீடுகளில் வைத்து வழிபடும் களிமண் பிள்ளையார் சிலைகளை மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கிணறுகளில் கரைத்து விடுவார்கள். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், 10 நாட்களுக்கு பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.



Tuesday, September 18, 2012

சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பில் சுனிதா


சாதனைக்கு மேல் சாதனை
சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பில் சுனிதா

 



விண்வெளியில் சாதனைக்கு மேல் சாதனை செய்து கொண்டிருக்கும், அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த சாதனையாக சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (46). இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது, விண்ணில்  சுற்றிவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி உள்ளார். விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்தவர், அதிக முறை நடந்தவர் என அவர் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த 3 வீரர்கள் நேற்று வெற்றிகரமாக பூமி திரும்பினர். இவர்கள் வந்த விண்கலம் கஜகஸ்தானின் பாராசூட் மூலம் தரையிறங்கியது. நேற்று முன்தினம் இவர்கள் சோயூஸ் விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டனர். இந்த விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்தவுடன், அதன் தலைமை பொறுப்பை சுனிதா வில்லியம்ஸ் ஏற்றுகொண்டார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த 2வது பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2007, 2008ம் ஆண்டில் பெக்கி வில்சன் என்ற வீராங்கனை, சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார்.

தற்போது இந்த மையத்தில் சுனிதா வில்லியம்சுடன், ரஷ்ய விண்வெளி வீரர் யூரி மாலென்சென்கோ, ஜப்பான் வீரர் அகிஹிகோ ஹோசிடே ஆகியோர் தங்கியுள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் 2 வாரம் வரையில் அங்கேயே இருப்பார்கள். இதைத் தொடர்ந்து, அமெரிக்க விண்வெளி வீரர் கெவின் போர்டு உள்ளிட்ட 3 வீரர்கள் அங்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் அங்கு போய் சேர்ந்ததும், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இப்போதுள்ள பிற வீரர்கள் பூமி திரும்புவார்கள்.

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!


பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!




நம் வீட்டில் கண்டிப்பாக அனைவரும் குளிர்சாதன பெட்டி வைத்திருப்போம், அதனை பராமரிப்பது பற்றி சிறு தகவல்கள். முடிந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.





தென்கொரியா சூறாவளி: கற்களும் பறந்த அதிசயம்

தென்கொரியா சூறாவளி: கற்களும் பறந்த அதிசயத்தை அச்சத்துடன் பார்த்த மக்கள்!




தென் கொரியாவின் கரையோரப் பகுதிகளை நேற்று (திங்கட்கிழமை) காலை சூறாவளி தாக்கியதில் பலந்த சேதம் ஏற்பட்டுள்ளது. வேகமான காற்று மற்றும் கடும் மழை காரணமாக பலர் வீடிழந்தனர். காற்றின் வேகத்துக்கு கற்களும் பறந்த அதிசயத்தை அச்சத்துடன் பார்த்தார்கள் தென்கொரிய மக்கள்.

சுறாவளி சன்பா காரணமாக சில இடங்களில் காற்று மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசியது. பல நகரங்களில் மின்தடை ஏற்பட்டது. 30,800 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 330 விமான  சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சூறாவளி தென் கொரியாவை தாக்குவதற்கு முன், ஜப்பானின் சில பகுதிகளையும் தாக்கியது.

வீடிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதை ஊகித்து, Hyundai Marine & Fire Insurance, Samsung Fire & Marine Insurance ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் முறையே 3.4, 3.5 சதவீத சரிவை சந்தித்தன. தென்கொரிய டெலிகாம் பங்குகளும் 3.3 சதவீத சரிவைச் சந்தித்தது.

தென்கொரியாவின் கடலோர நகரங்கள் சிலவற்றில் நேற்று காலை எடுக்கப்பட்ட 7 போட்டோக்களை தந்திருக்கிறோம். நிலைமை எப்படி இருந்தது என்பதை பாருங்கள்.

arinjar.blogspot.com

arinjar.blogspot.com

arinjar.blogspot.com

arinjar.blogspot.com

arinjar.blogspot.com

arinjar.blogspot.com