Wednesday, October 31, 2012

2ம் உலகப்போர் குண்டு கண்டுபிடிப்பு ஜப்பான் விமான நிலையம் மூடல்

2ம் உலகப்போர் குண்டு கண்டுபிடிப்பு ஜப்பான் விமான நிலையம் மூடல்









இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டு தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இரண்டாம் உலகப் போரின் போது வைக்கப்பட்ட வெடிகுண்டு, வெடிக்காத நிலையில் ஓடுதளத்திற்கு அருகே கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த குண்டு சுமார் 250 கிலோகிராம் எடையில் இருந்ததாகவும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இக்குண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மீது வீசப்பட்டதாகவும் டோக்கியோ நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இக்குண்டை தொடர்ந்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதால் ஷன்டாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஏற்பட்ட சுனாமியின் போது ஷன்டாய் விமானநிலையம் பல மாதங்களுக்கு பின் சமீபத்தில் தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!