Friday, July 13, 2012


அழிவின் விளிம்பில் பவள பாறைகள், கடல் மீன்கள்: விஞ்ஞானிகள எச்சரிக்கை

  


பருவ நிலை மாற்றத்தால் கடலில் பாரிய அளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் இயற்கை அழிவுகள் உருவாகிறது.

இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக 2600 விஞ்ஞானிகள் ஒன்று கூடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, பருவ நிலை மாற்றம் கடலில் தரை பகுதியை கடுமையாக பாதித்துள்ளது. கடல் நீர் தொடர்ந்து வெப்பமாக மாறி வருகிறது.

இதனால் இயற்கை சூழ்நிலை மாறி கடலில் உள்ள பொருட்கள் அழியத் தொடங்கி உள்ளன. குறிப்பாக கடல் பாசி, தாவரங்கள், பவள பாறைகள் போன்றவை அழிந்து வருகின்றன.

இவை இருந்தால் தான் மீன்கள் வளர முடியும், உணவும் கிடைக்கும். சூழ்நிலை மாறி வருவதால் மீன்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவையும் அழியும் நிலையில் உள்ளன.

கரீபியன் கடல் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்குள் 1975ஆம் ஆண்டில் இருந்து 85 சதவீதம் வரை பவள பாறைகள் அழிந்து உள்ளன.





அதே போன்று அவுஸ்திரேலிய கடல் பகுதியிலும், பவள பாறை மற்றும் கடல் பாசிகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு கடந்த 50 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்து விட்டன.

ஆசிய கடல் பகுதியில் இந்தோனேஷியா, மலேசியா, பவுபா நியூகினியா, பிலிப்பைன்ஸ் பகுதியில் கடல் பவள பாறைகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு 30 சதவீத கடல் பாசி தாவரங்கள் அழிந்து விட்டன.

இந்த பகுதியில் 3 ஆயிரம் அரிய வகை மீன்கள் அழியும் நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்து விடும். எனவே இதை காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







வான்வெளியிலிருந்து பாயும் நியூட்ரினோக்கள் – மதுரைக்கு அருகே ஆராய்ச்சி மையம் !




மதுரை அருகே தேனியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.

கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு சிதைவின் போதோ, கதிர்வீச்சுக்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான துணை அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது (nuclear fusion) இது உருவாகிறது.

ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. சூரியனிலிருந்தும் விண்மீன்களில் இருந்தும் கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் அண்டவெளியில் படுவேகத்தில் பயணித்து, பூமியிலும் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சராசரியாக ஒரு மனிதனி்ன் உடலில் ஒரு வினாடிக்கு 50 டிரில்லியன் நியூட்ரினோக்கள் நுழைந்து வெளியேறுகின்றன.

இந்தத் துகளை ஆய்வு செய்தால் சூரியன், விண்மீன்கள் உள்பட விண்வெளியின் பல ரகசியங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக ஒரு விண்மீன் இறக்கும்போது, முதலில் அது உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். அப்போது அதன் மையப் பகுதி பல லட்சம் மடங்கு விரிவடையும். அந்த நேரத்தில் நட்சத்திரத்தின் மையப் பகுதியில் அளவிட முடியாத அளவுக்கு மாபெரும் அழுத்தம் உருவாகும். அந்த அழுத்தத்தில் இருந்து எந்த ஒரு பொருளும், ஒரு அணு கூட வெளியே ‘எஸ்கேப்’ ஆக முடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு மரணிக்கும் நட்சத்திரத்திலிருந்து கூட தப்பி வரும் ஒரே துணை அணுத் துகள் நியூட்ரினோ மட்டும்.

எனவே, நியூட்ரினோவைப் பற்றி கொஞ்சம் நன்றாக ஆராய்ந்தால் பல்வேறு ரகசியங்களுக்கு, நட்சத்திரம் ஏன் இறக்கிறது என்பதில் ஆரம்பித்து, விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஆனால், இந்த நியூட்ரினோக்களை ‘பிடிப்பது’ அவ்வளவு எளிதல்ல, மிக மிகக் கடினம். எந்தப் பொருளோடும் ‘ரியாக்ட்’ செய்யாத தன்மை கொண்ட நியூட்ரினோக்களை பரிசுத்தமான நீரில் தான் ‘பிடிக்க’ முடியும் என்பதால் அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதே போல ஜப்பானில் ஒரு மாபெரும் அண்டர்கிரவுண்ட் ஆராய்ச்சி மையம் (Super K) உள்ளது. ஹிடா நகரில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் தரைக்கு அடியில் 1000 மீட்டருக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 41.4 மீட்டர் உயரம், 39.3 விட்டம் கொண்ட மாபெரும் தொட்டிகளில் மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் தான் நியூட்ரினோக்களை பிடிக்க உதவும் கருவியாகும். ஆனால், இவ்வளவு பெரிய இந்த தொட்டியில் சிக்குவது ஆண்டுக்கு சில நியூட்ரினோ துகள்களே.

இந் நிலையில் இப்போது இந்த ஆராய்ச்சியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. முதலில் நீலகிரி மலைப் பகுதியில் இதற்கான ஆய்வகத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. அங்கு மழைப் பொழிவு அதிகம் என்பதால் மதுரைக்கு அருகே தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் அம்பரப்பர் கோவில் கரடு பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மிகப் பழமையான கற்பாறைகள் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் இந்த ஆய்வுக் கூடம் அமைக்க மிக ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்றதாக உள்ளது. எனவே இப்பகுதியை, நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையமும், மும்பை Tata Institute of Fundamental Research (TIFR), Saha Institute of Nuclear Physics (SINP), கொல்கத்தா Variable Energy Cyclotron Centre (VECC), சென்னை ஐஐடி இயற்பியல் பிரிவு உள்பட ஏகப்பட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை அமைக்கவுள்ளன.

சுமார் ரூ. 1,250 கோடி செலவில் இந்த ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இப்போதைக்கு இதற்கு India-based Neutrino Observatory என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளை ஒருங்கிணைக்க National Centre for High Energy Physics என்ற ஒரு இயற்பியல் ஆராய்ச்சிப் பிரிவும் மதுரையில் அமைக்கப்படவுள்ளது.

கிட்டத்தட்ட 4,300 அடிக்கு ஆழத்தில் மாபெரும் சுரங்கம் அமைத்து அதில் 50,000 டன் எடை கொண்ட மாபெரும் காந்தங்களை பொறுத்தவுள்ளனர். இவை ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்க ஜெனீவாவில் உள்ள CERN சுரங்க ஆராய்ச்சி மையத்தில் பொறுத்தப்பட்ட காந்தங்களை விட 4 மடங்கு அதிக சக்தியும், எடையும் கொண்டவை.

மேலும் தேனியில் அமையும் இந்த சுரங்கத்துக்குள் பொறுத்த 50,000 டன் இரும்பு பிளேட்களும் (soft iron plates) தேவைப்படும். இவற்றை மத்திய அரசின் Steel Authority of India எஃகு நிறுவனத்தின் பிலாய் தொழிற்சாலை தயாரித்து வழங்கவுள்ளது.

இந்த 50,000 டன் காந்தங்களைக் கொண்டு magnetized iron calorimeter (MIC) என்ற கருவியை உருவாக்கி நியூட்ரினோக்களைப் பிடித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காந்தங்கள் தான் உலகிலேயே மிகப் பெரிய காந்தங்களாக இருக்கும் என்கிறார்கள்.



அடுத்த பேரிடி ! பாஸ்வேட்டை மாத்த தயாரா ?

யாஹூ வாய்ஸ் ஹேக்ட்




சில நாட்களுக்கு முன்னர்தான் டி.என்.எஸ் சேஞ்சர் என்னும் வைரஸ் தாக்கி பல லட்சம் கம்பியூட்டர்களை ஆட்டிப்படைத்தது. அதன் புரளி அடங்க தற்போது மற்றும் ஒரு பிரளையம் ஆரம்பமாகியுள்ளது. இன்ரர்நெட்டி உலகில் 2வது இடத்தை வகிக்கும் யாகூ மின்னஞ்சல் சேவையை, ஒரு குழு ஹக் செய்துள்ளது. இவர்கள் யாகூவின் அனைத்து பாதுகாப்பு வளையங்களையும் உடைத்து உள்ளே நுளைந்து, சுமார் அரை மில்லியன்(500,000) பேரின் மின்னஞ்சல் முகவரியையும், அதன் பாஸ்வேட்(இரகசியக் குறியீடுகளையும்) களவாடியுள்ளனர்.

சரி களவாடினாலும் களவாடினார்கள்... அதனை அப்படியே விட்டுவிடவில்லை. தாம் களவாடிய இரகசியக் குறியீடுகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை ஒரு இணையத்தளத்தில் அவர்கள் பிரசுரித்தும் உள்ளார்களாம். இந்த இணையத்தளத்தை எவ்.பி.ஐயினர் உடனடியாக முடக்கிவிட்டனர். இப்ப என்ன செய்வது என்று சிந்திக்கிறீர்களா ? நீங்கள் யாகூவில் மின்னஞ்சல் முகவரிக் கணக்கை வைத்திருப்பவர் ஆயின் உடனடியாக அதன் இரகசியக் குறியீடு மற்றும் இதற்கான கேள்வி, போன்ற அனைத்து செக்குரட்டி விடையங்களையும் மாற்றவேண்டும்.

இதனை யாகூ உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால் அவர்களுக்கு அதுபெருத்த அவமானமாக அமைந்துவிடுமாம் ! ஆனால் அதற்காக நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? இறுதியில் உருளப்போவது எமது தலைதானே. ஏன் வம்பு, யாகூ மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக உங்கள் பாஸ்வேட்டை மாத்துவது நல்லது....

Security firm ESET have carried out a statistical analysis of the leaked passwords and compiled a list of the top ten passwords used, and all of them and weak and easily guessed:

123456 = 1666 (0.38%)
password = 780 (0.18%)
welcome = 436 (0.1%)
ninja = 333 (0.08%)
abc123 = 250 (0.06%)
123456789 = 222 (0.05%)
12345678 = 208 (0.05%)
sunshine = 205 (0.05%)
princess = 202 (0.05%)
qwerty = 172 (0.04%)
This list accounts for more than 1 percent of the passwords leaked.


500 மில்லியன் ஆண்டு பழைய பக்ரீரியா உயிர்த்தது !




உலகம் போற போக்கைப் பார்த்தால் ஜுராசிக் பார்க் படம் உண்மையாகிவிடுமோ என்று தோன்றுகிறது. ஜுராசிக் பார்க் என்னும் படத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து பின்னர் முற்றாக அழிந்துபோன டைனசோர்களை உயிரூட்டி இருப்பார்கள். அதாவது அதன் பொரிக்காத முட்டையை எடுத்து அதில் உள்ள டி.என்.ஏ யை பிரித்தெடுத்து டைனசோர்களை உருவாக்கியது போல அக்கதை அமைந்திருந்தது. ஆனால் அது தற்போது சாத்தியமாகும் ஒரு விடையம் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். உலகம் போறபோக்கில் பல வம்புகளை நாம் விலைகொடுத்து வாங்கவேண்டி இருக்கும் போலத் தோணுது !

சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பக்ரீரியா ஒன்றை விஞ்ஞானிகள் உயிரூட்டியுள்ளனர். அதாவது இறந்த அந்த பக்ரீரியாவை மீண்டு உயிரூட்டியுள்ளனர். இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்கிறீர்களா ? 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து, ஆனால் இயற்கையாகவே பாதுகாத்து வரப்பட்ட பக்ரீரியா ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். அதன் ஜீன்களை தனியே பிரித்து எடுத்து, ஈ கொயில் என்னும் பக்ரீரியாவுடன் இனப்பெருக்கம் செய்யவைத்து, பின்னர் அதன் ஜீன்களை எடுத்து தனியாக ஒரு பக்ரீரியாவை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இது இந்த 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பக்ரீரியாவின் மூலப் பிரதி ஆகும். 

இவ்வாறு உருவாக்கப்பட்ட பக்ரீரியா, தற்போது(நிகழ்காலத்தில்) உள்ள பக்ரீரியாக்களை விட நல்ல சுகதேகியாகவும், வீரியம் மிக்கதாகவும் இருப்பதாக நாசாவின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த பக்ரீரியா படுவேகமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதாகவும், அது பெருகிக்கொண்டு செல்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதனால் மனிதர்களுக்கு என்ன ஆபத்து விளையும் என்பது தொடர்பாகவும், இது நல்ல பக்ரீரியாவா இல்லை மனிதர்களுக்கு கேடுவிளைவிக்கும் பக்ரீரியாவா என்றும் அவர்கள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

படு ஆபத்தான இந்த ஆராய்சியை மேற்கொள்ளும் நாடு எது என்று நாம் சொல்லவே தேவையில்லை ! சாட் சாத் அமெரிக்காவே தான்.

ஏண்டா பக்ரீரியாவோட விளையாடுறீங்க ?









ஏலத்திற்கு வருகிறது அணு சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது போர்க் கப்பல்



அணு சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது போர்க்கப்பலான அமெரிக்காவின் யுஎஸ்எஸ் லாங் பீச் ஏலத்திற்கு வந்துள்ளது.

720 அடிகள் நீளம் கொண்ட இந்த கப்பல், 1991ஆம் ஆண்டு வளைகுடாப் போரின் போது, அமெரிக்க கடற்படையிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டது.

இந்தக் கப்பல் வாஷிங்டனில் 17 ஆண்டுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த கப்பல் 10 ஆயிரம் டன் உருக்கு, 300 மைல் நீள மின்சார கேபிள், 450 டன் அலுமினியம் கொண்டுள்ளது.

இந்த கப்பல் இப்போது ஏலத்துக்கு வந்துள்ளது. வியட்நாம் போர், வளைகுடாப் போரின் போது இந்த கப்பல் அரும்பணி ஆற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


         

Career (US)
Name:USS Long Beach
Namesake:Long Beach, California
Ordered:15 October 1956
Builder:Bethlehem Steel Co., Fore River Shipyard, Quincy, Massachusetts
Laid down:2 December 1957
Launched:14 July 1959
Acquired:1 September 1961
Commissioned:9 September 1961
Decommissioned:1 May 1995
(deactivated on 2 July 1994)
In service:0
Out of service:1
Reclassified:as CGN-9 1 July 1958
Struck:1 May 1995
Fate:stricken, to be disposed of in the U.S. Navy's ship-submarine recycling program, 1 May 1995






Wednesday, July 11, 2012


சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு




விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அமெரிக்காவின் விண் ஓடத் திட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

                                                           Atlas Rocket Final Landing 

இந்த விண் ஒடங்கள் மனிதர்கள் பூமி குறித்தும் பிரபஞ்சம் குறித்தும் வைத்திருந்த புரிதல்களை மாற்றியதாக அடலாண்டிஸ் கமாண்டர் கிரஸ் பெர்குசன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் ஐந்து விண்வெளி ஓடங்கள் தயாரிக்கப்பட்டன. இவை நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களையும் ஹப்பில் தொலைநோக்கியையும் ஏவ உதவின.
முதல் முதலாக அமெரிக்க 1983 ஆம் ஆண்டு சேலன்சர் என்ற விண்வெளி ஓடத்தை ஏவியது. அதுவரை விண்வெளி வீரர்களும் - செயற்கைக்கோள்களும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டனர். விண்வெளி ஓடத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு.

கல்பனா சாவ்லா

இதுவரை விண்வெளி ஓடங்கள் மூலமாக 135 விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அதேநேரம் விண்வெளியில் இரண்டு விண்வெளி ஓடங்கள் வெடித்துச் சிதறியதால், இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட 5 விண்வெளி ஓடங்களில் மற்ற இரண்டு ஏற்கனவே அருங்காட்சியகங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. அட்லாண்டிஸ் விண்கலமும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மேலும் இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் 4 ஆயிரம் ஊழியர்கள் பதவியிழப்பார்கள்.
அதேநேரம் விண்வெளி ஓடத்துக்கு ஓய்வு கொடுக்கப்படுவதால் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி தடைபடாது என்று நாசா உறுதி கூறுகிறது.
ஆனால் அமெரிக்காவில் தனியார் துறையினரால் செய்யப்படும் ராக்கெட்டுகள் பயன்பாட்டுக்கு வரும் வரை ரஷ்யாவின் சோயஸ் ராக்கெட்டுக்கள் மூலமாகவே அமெரிக்காவின் விண்வெளிப் பயணங்கள் நடைபெறும்.



அழகாய் இருக்கிறதாம் செவ்வாய் கிரகம் : நாசாவின் புதிய தகவல்




செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் கிரேட்டர் ஆகியவை படு அழகாக காட்சி தருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன. கிரீலே பனோரமா என்று இதற்குப் பெயரிட்டுள்ளது நாசா. 

செவ்வாய் கிரகத்தின் வின்டர் சீசனின்போது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரோவர் விண்கலத்தைச் சுற்றிலும் உள்ள செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுவதும் இதில் காட்சியாகியுள்ளது. நான்கு மாதங்கள் அந்த இடத்தில் ரோவர் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதாவது 2011ம் ஆண்டு டிசம்பர் 21 முதல் 2012 மே 8ம் தேதி வரை இங்கு ரோவர் விண்கலம் நிலை நின்றிருந்தது.

ஒரு புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுமையாக தெரிகிறது. இந்த கிரேட்டரானது 14 மைல்கள் அதாவது 22 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகும். கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ரோவர் விண்கலம். அன்று முதல் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 34.4 கிலோமீட்டர் தூரம் வரை அது பயணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Monday, July 9, 2012

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்



பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்” என ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.



உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.
எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.




வாழ்நாளில் ஒரு தடவை பூக்கும் மரம்




இலங்கை , இந்திய நாடுகளில் காணப்படும் ஒருவகை பனை இனம் Talipot Palm மரங்கள். இந்த மரங்கள் 25 மீற்றர் உயரம் மேலாக வளரக்கூடியன. Talipot Palm இன் வாழ்க்கைக் காலம் 30 இலிருந்து 80 வருடங்களாக உள்ளது. இந்த பனை வகை மரம் தனது வாழ்நாளில் ஒரேஒரு தடைவை மட்டுமே பூத்து , காய்த்து , கனிகானதும் இறந்தும் விடுகின்றது. இதன் பூக்கள் 6 மீற்றர் மேலாகவும் இருப்பதுடன் பல இலட்சம் சிறிய மலர்களின் கூட்டாகவும் உள்ளது. மேலும் முற்றிய மரம் பல தேவைகளுக்கு பயன்படுவதுடன் இதன் ஒலையை எழுதுவதற்கும்(ஒலை சுவடி) ஆதிகாலத்தில் பயன்படுத்தினர் என்பது இம் மரத்தின் சிறப்பாக உள்ளது.

அசாமில் பலத்த மழை: உயிரியல் பூங்கா மூழ்கியது- 500 விலங்குகள் பலி

இந்தியா : அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. அங்குள்ள 27 மாவட்டங்கள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுவரை அங்கு மழைக்கு 115 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அங்குள்ள பிரம்மபுத்திரா நதி உள்பட அனைத்து நதிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் உள்ள காஜி ரங்கா உயிரியல் பூங்காவில் அரிய வகை காண்டா மிருகங்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இருந்தன. 

பிரம்மபுத்திரா நதியில் இருந்து பெருக்கெடுத்து வந்த வெள்ள நீர் காகிரங்கா உயிரியல் பூங்காவில் புகுந்தது. இதனால் சில மணி நேரத்திற்குள் உயிரியல் பூங்காவின் 80 சதவீத பகுதி வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் பள்ளமான பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 காண்டா மிருகங்கள், 465 மான்கள், 28 பன்றிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட விலங்குகள் நீரில் மூழ்கி பலியாயின. 

மேடான பகுதிகளில் இருந்த விலங்குகள் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி அருகில் உள்ள காட்டுக்குள் தப்பி சென்றன. அவற்றை பிடிக்கும் பணியில் உயிரியல் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபற்றி காஜிரங்கா உயிரியல் பூங்கா நிர்வாகி அபிஜித் பவால் கூறும் போது, உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்கிருந்து தப்பிச் சென்ற விலங்குகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். மழை தொடர்ந்து பெய்வதால் காட்டுக்குள் செல்ல கடினமாக உள்ளது. ஆனாலும் ஊழியர்களின் தீவிர முயற்சியால் 2 காண்டாமிருகம் உள்பட 75 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளது. அவைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து நிறைய உணவுகளும் வழங்கப்படுகிறது என்றார்.

மரங்கள் உருளை வடிவில் இருக்கிறதே ஏன்?




மரத்தின் தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத் தாவரங்களுக்கும் இது பொருந்தாது. ஏனென்றால் புல் வகைகளின் தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் சதுர வடிவிலும் அமைந்திருக்கும். தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால் ஆனவை என்பதால், அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் அல்லது திருகு சுருள் வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும்.


                              


மேலும், தனிப்பட்ட உயிரணுவின் அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப் பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் பகுதிகள் உள்ளன. அவை மரவியம், பட்டையம் என்று அழைக்கப்படுகிறது. மரவியம் தண்டின் நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி வெளிப்புறமாக ஆரவாட்டில் ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் தான் மரத்தின் தண்டு பகுதி உருளை வடிவில் காணப்படுகிறது.