Friday, June 21, 2013

பூமியிலிருந்து 20 கி.மீ.க்கு மேல் நிறுத்தி பிரமாண்ட பலூன்கள் மூலம் குக்கிராமங்களிலும் இன்டர்நெட்

பூமியிலிருந்து 20 கி.மீ.க்கு மேல் நிறுத்தி பிரமாண்ட பலூன்கள் மூலம் குக்கிராமங்களிலும் இன்டர்நெட்


பூமியில் இருந்து வாயு மண்டலத்தின் மேலே சுமார் 20 கி.மீ. தொலைவில் பலூன்களை நிலை நிறுத்தி, நவீன ஆன்டனாக்கள் மூலம் குக்கிராமங்களிலும் மக்கள் அனைவருக்கும் இன்டர்நெட் வசதி அளிக்கும் திட்டத்தை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. நியூசிலாந்தில் சோதனை ரீதியில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தொலைதொடர்புத் துறையின் அதிநவீன முன்னேற்றம் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்டு கூகுள் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவு தலைவர் கரீம் தெம்சாமணி கூறியதாவது:

உலக மக்கள் அனைவருக்கும் இன்டர்நெட் வசதி அளிக்கும் நவீன திட்டத்தை கூகுள் தயாரித்துள்ளது. இதன்படி, வாயு மண்டலத்தின் மீது 20 கி.மீ. தொலைவில் ஹீலியம் பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் பூமியில் இருந்து வரும் சிக்னல்கள் பெற்று, தேவைப்படுபவர்களுக்கு அளிக்கப்படும். அதாவது முன்பு டிவி நிகழ்ச்சிகளை ஆன்டனாக்கள் மூலம் பெற்று பார்த்ததை போன்று இதை எங்கு வேண்டுமானாலும் ஆன்டனாக்களை பொருத்தி பார்க்கலாம். அடர்ந்த வனப்பகுதிகளில் இருப்பவர்களும் ஆன்டனாக்கள் மூலம் இன்டர்நெட் வசதி பெற முடியும்.

மேலும், இத்திட்டத்தினால் மற்றொரு லாபமும் உள்ளது. அதாவது இயற்கை பேரிடர் நேரங்களில் தொலைத் தொடர்பு சேவை பாதிக்காமல், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும். மருத்துவ வசதியே இல்லாத குக்கிராமங்களில் செவிலியர்கள் இணையதள வசதியுடன், நகரத்தில் உள்ள மருத்துவர்கள் ஆலோசனையின்படி மருத்துவம் மேற்கொள்ள முடியும்.

மேலும், ஆசிய பகுதிகளில் உள்ள சிறு, குறு வர்த்தகர்கள், விவசாயிகளும் இன்டர்நெட் மூலம் சிறப்பான பலன்களை பெற முடியும். விவசாயிகள் சந்தை நிலவரத்தை அறிந்து தங்களுடைய உற்பத்தியை நல்ல லாபத்துக்கு விற்க முடியும். வானிலையை அறிந்து பயிர் செய்ய முடியும். இப்படி பல லாபங்கள் உள்ளன. இந்த பலூன்கள் விமானங்களின் பாதையை காட்டிலும் இரண்டு மடங்கு உயரத்தில் நிறுத்தப்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பலூன்களில் பொருத்தப்படும் கருவிகளுக்கு தேவையான மின்சாரத்தை, சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் தானே தயாரித்துக் கொள்ளும்.

ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்போது நியூசிலாந்தில் கிறிஸ்டோசர்ச் நகரில் 30 பலூன்களை பறக்கவிட்டு சோதனை நடத்தப்படுகிறது. பூமியில் 20 பேருக்கு ஆன்டனாக்கள் மூலம் இன்டர்நெட் வசதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால் உலகத்தில் இன்டர்நெட் வசதி கிடைக்காத இடமே இல்லை என்னும் நிலையை 2015ம் ஆண்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.
இவ்வாறு கரீம் தெம்சாமணி கூறினார்.

சிறந்த விந்தணு உற்பத்திக்கு இடையூறாக காணப்படும் காரணிகள்!

சிறந்த விந்தணு உற்பத்திக்கு இடையூறாக காணப்படும் காரணிகள்! 


தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம். அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன தான் சந்தோஷமான காதல் வாழ்க்கையில் ஈடுபட்டாலும், கர்ப்பமாவதில் பிரச்சனை ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல், போதிய உடலுறவு இல்லாமை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும், அவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை உண்டாக்கிவிடும். இதுப்போன்று விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் வகையில் பல செயல்கள் உள்ளன. உதாரணமாக, கெட்ட பழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்துவதோடு, தரத்தையும் குறைத்துவிடும்.

அதுமட்டுமல்லாமல், நல்ல பழக்கமான குளியல் விஷயமும் விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். அதிலும் குறிப்பாக ஆண்கள் மிகவும் சூடான நீரில் குளித்தால், அவை எப்படி உடல் வலியை குறைக்குமோ, அதேப் போன்று விந்தணுவின் உற்பத்தியையும் குறைக்கும். சரி, இப்போது விந்தணுவின் உற்பத்தியைக் குறைக்கும் செயல்கள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை தவிர்த்து வந்தால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படாமல் இருப்பதோடு, காதல் வாழ்க்கைக்கு ஏற்றவாறே அழகான ஒரு குழந்தையை பெற்றெடுக்கலாம்.

சுடுநீர் குளியல்

பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.

உள்ளாடை

அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.

மொபைல்

பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினாலும், விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

போதிய உடலுறவு இல்லாமை

உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு உற்பத்தி குறைவு. எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் அதிகம் பருகினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடித்தல்

சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். ஆகவே அழகான குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

சோயா பொருட்கள்

ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும்.

டிவி பார்த்தல்

பெரும்பாலான ஆண்கள் டிவி பார்க்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை நொறுக்கிக் கொண்டே பார்ப்பார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில், நொறுக்கி தீனி சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்க்கும் ஆண்களின் விந்தணு உற்பத்தியை விட, தினமும் டிவியை அதிகம் பார்க்காமல், உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி அதிகம் உள்ளதாகவும் சொல்கிறது.

லேப்டாப்

தற்போது லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு ஆண்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

Thursday, June 20, 2013

அரிக்கும் உச்சந்தலைக்கு சில பயனுள்ள வீட்டுச் சிகிச்சைகள்!!!

அரிக்கும் உச்சந்தலைக்கு சில பயனுள்ள வீட்டுச் சிகிச்சைகள்!!!


பொடுகுத் தொல்லையா? சீப்புகளில் வெள்ளை செதில்களா? கருப்பு ஆடைகளில் வெள்ளை நிற தூசிகள் படிகிறதா? உங்களுடைய உச்சந்தலையில் நமைச்சலா? மேற்கூறிய எல்லா கேள்விகளுக்கும் உங்களுடைய பதில் ஆம் எனில், உச்சந்தலை சரும நோயினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.

உச்சந்தலை சரும நோய் என்பது உச்சந்தலையில் மேல் சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வறண்ட மேல் சருமம் தனியே பிரிந்து மீன் செதில்கள் போன்ற தோற்றத்தை தரும். சில நேரங்களில் இது வெடிப்பை உருவாக்கிவிடும். சில சமயங்களில் அந்த செதில்கள் வழியே இரத்தம் வரலாம். அவ்வாறு இரத்தம் வந்தால் மருத்துவரை உடனடியாக ஆலோசிப்பது மிகவும் நல்லது.

இந்த பிரச்சனையை எளிதில் வீட்டிலிருந்தபடியே குணப்படுத்தலாம். இதற்கு நாம் காலங்கலமாக பயன்படுத்தும் வழிமுறைகள் கைக்கொடுக்கின்றன. அதிகம் பணம் பிடுங்கும் நவீன மருத்துத்தை காட்டிலும் பழங்கால வழிமுறைகள் உச்சந்தலை சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கின்றன. இப்போது அத்தகைய சிறந்த வழிமுறைகளைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

உலர வைக்கும் முறை 

ஹேர் ட்ரையர் (Hair dryer) பயன்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். மேலும் சூடான நீரில் நனைத்த துணியை தலையில் கட்டும் சிகிச்சையை எடுத்துக் கொண்டிருந்தால் அதையும் முற்றிலும் நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அது உச்சந்தலையை கடுமையாக உலர்த்தி, பொடுகுகளை அதிகரிக்க செய்து விடும். மேலும், பொடுகு மற்றும் அரிப்பு தொல்லையை அதிகரிக்கும். ஆகவே கேசத்தை காய வைக்க வேண்டுமெனில், ஒரு மென்மையான துண்டு கொண்டு மெதுவாக தேய்க்கலாம். அது உச்சந்தலையை பாதுகாக்கும்.

பொடுகுத் தொல்லை 

சரும வறட்சியால், ஸ்கால்ப்பில் வெள்ளை செதில்கள் ஏற்படுவதோடு, தலையில் அரிப்பையும் ஏற்படுத்திவிடும். எனவே, பொடுகை நீக்குவது மட்டுமே பிரதான பணியாக இருக்க வேண்டும். அதற்கு மூலிகை பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். இது மிகவும் லேசானது. மேலும் இதில் எந்தவித இரசாயன பொருட்களும் கிடையாது. இதை மிக மெதுவாக உச்சந்தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும்.

ஈரப்பதம் 

பொடுகுத் தொல்லை பிரச்சனையானது வறட்சியால் ஏற்படுகிறது. எனவே உச்சந்தலை சரும பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, அதை வறண்டு போகாமல் பாதுகாப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். நல்லெண்ணையை தலையில் தேய்த்து எண்ணெய் குளியல் எடுப்பது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கமாகும். இது தலையின் வறட்சியை போக்கி பொடுகுத் தொல்லையை குறைத்து பல அற்புதங்களை செய்கிறது. அதற்கு இரவு படுக்கைக்கு செல்லும் பொழுது, உச்சந்தலையில் எண்ணையை தடவ வேண்டும். அதிலும் வைட்டமின் ஈ நிறைந்துள்ள எண்ணெயை பயன்படுத்தி உச்சந்தலைக்கு மசாஜ் செய்யலாம். ஏனெனில் வைட்டமின் ஈ முடிகளுக்கு மிகவும் நல்லது.

ஆப்பிள் சீடர் வினிகர் 

ஆப்பிள் சீடர் வினிகரானது உச்சந்தலையின் வறட்சியை குறைப்பதில் பெரிதும் உதவுகிறது. ஒரு 1/4 கப் வினிகர் மற்றும் 1/4 கப் தண்ணீரை சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து, அந்த கலவையை உச்சந்தலையில் மெதுவாக தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் தலையை நன்றாக அலசி விட வேண்டும்.

தேயிலை மர எண்ணெய் (Tea tree oil) 

இது சிறந்த பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகளை கொண்ட எண்ணெய் ஆகும். இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி வர, பொடுகு மற்றும் உச்சந்தலை நோய்கள் குணமாகும். இரண்டு தேக்கரண்டி எண்ணெய்க்கு ஒரு தேக்கரண்டி தண்ணீர் விட்டு, எண்ணெயை நீர்த்து போகச் செய்து, பின் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், உச்சந்தலை பிரச்சனைகள் நீங்கும்.

எலுமிச்சை சாறு 

ஒரு கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து, உச்சந்தலையில் நேரடியாக தேய்க்க வேண்டும். சுமார் முப்பது நிமிடங்கள் ஊற வைத்து, தலையை அலசவும். இது நல்ல பலன் தந்தாலும், ஸ்கால்ப்பில் வெடிப்பு இருந்தால் இதை பின்பற்ற கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு ஆபத்து: நாசா

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு ஆபத்து: நாசா


எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது.

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.

கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்துசென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ- ஊர்தியை அங்கு கொண்டுசெல்லும் அரை-பில்லியன் கிலோமீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிககாலம் எடுத்துள்ளது.
இந்தப் பயணத்தை கிழமைகள் கணக்கில் விரைவு படுத்துவதற்கு போதுமான உந்துசக்திக்கான தொழிநுட்ப வசதி இன்னும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கேதார்நாத் பனிச்சிகரத்தின் பெரும்பகுதி உடைந்ததே உத்தர்காண்ட் பேரழிவுக்கு காரணம்?

கேதார்நாத் பனிச்சிகரத்தின் பெரும்பகுதி உடைந்ததே உத்தர்காண்ட் பேரழிவுக்கு காரணம்?




இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளில் ஒன்று இமயமலை சார்தாம் யாத்திரை.. ஆனால் இந்த சார் தாம் யாத்திரை இனி எத்தனை ஆண்டுகள் கழித்து மேற்கொள்ள முடியுமோ? என்ற பெரும் கேள்வியை உருவாக்கி வைத்திருக்கிறது பெரும் வெள்ளப் பேரழிவு. இந்தப் பேரழிவுக்கு இயற்கை மட்டுமே காரணமல்ல..இயற்கையை சீர்குலைத்த நாமே காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்..

உத்தர்காண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரைக்குப் போன சுமார் 60 ஆயிரம் பேர் கேதர்நாத்துக்கும் ருத்பிரயாக்குக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருப்பதாக செயற்கைக் கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. அதே செயற்கைக் கோள் புகைப்படங்கள் சில ஒப்பீடுகளையும் நமக்கு அம்பலப்படுத்துகின்றன. 1980களில் கேதர்நாத் கோயில் அருகே சில கட்டிட்டங்கள் மட்டும்தான் இருந்தன. இப்போது இமயமலையின் உச்சியான கேதர்நாத்தையே ஒரு நகரமாக உருவாக்கிவிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் இஸ்ரோ அதிகாரிகள், கேதர்நாத் கோயிலை ஒட்டி ஓடுகிற மந்தாகினி ஆற்றின் போக்கை கடந்த பல ஆண்டுகளாக திசை திருப்பிவிட்டதன் விளைவுதான் இந்தப் பேரழிவு என்கின்றனர். இதுமட்டுமே காரணம் இல்லை.. கேதர்நாத் கோயிலின் பின்புறம் இருக்கும் கேதர் டோம் எனப்படும் பனிச்சிகரம் உடைந்து கோயிலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்பால் ஏரியில் அப்படியே விழுந்திருக்கிறது. பனிச்சிகரம் அப்படியே உருகி பனிச்சுனாமியாக உருவெடுத்து சர்பால் ஏரியையும் அதை ஒட்டிய மந்தாகினி ஆற்றிலும் பேரலைகளை உருவாக்கியபடியே அகப்பட்ட அத்தனை கட்டிடங்களையும் மனிதர்களையும் வாரிச் சுருட்டி எடுத்தது. இமயமலையில் ஓடுகிற மந்தாகினி ஆறு, அலக்நந்தா, பகீரதி போன்றவைகள் அனைத்தும் இணைந்துதான் கங்கையாக, யமுனையாக சமவெளிக்கு ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேதர்நாத் கோயில் மட்டும்தான் இப்போது தனித்துவிடப்பட்டிருக்கிறது. கோயிலை சுற்றிக் கட்டப்பட்டிருந்த அத்தனை கடைகளும் வீடுகளும் அப்படியே கபளீகரம் செய்யப்பட்டு கேதர்நாத் நகரே சேற்றால் புதையுண்டு கிடக்கிறது என்றே சொல்லப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த உத்தர்காண்ட் முதல்வர் விஜய் பகுகுணா, இன்னும் ஒரு ஆண்டுக்கு கேதர்நாத் யாத்திரை பற்றி சிந்திக்கவே முடியாது என்கிறார். ஆனால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு கேதர்நாத் யாத்திரையே போக முடியாத அளவுக்கு பேரழிவு ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர் அங்கிருந்து தகவல் தெரிவிப்போர்..

இப்படி கங்கை, யமுனையை பெருநதிகளாக உருவெடுக்க வைக்கும் இந்த துணையாறுகளின் போக்கை திசைமாற்றி 70 நீர் மின் திட்டங்கள் இமயமலையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காகவே 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டு சுரங்கங்கள் அமைத்து இந்த ஆறுகள் திசை திருப்பிவிடப்பட்டிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும் முன் எப்போதையும் விட அண்மைக்காலமாக வாகனங்களில் சார்தாம் யாத்திரை செல்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்க இமயமலையின் ஒட்டுமொத்த சூழலே சீர்குலைந்து போனது என்றும் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு இதே இமயமலைப் பகுதியில் உத்தர்காசியில் மழைமேகம் வெடித்து 60க்கும் பேர் பலியாகினர். அப்போதும்கூட விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை கொடுத்திருந்தும் அதை கவனத்தில் கொள்ளாமல் போனது மத்திய, மாநில அரசுகள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதேநிலைமைதான் ஹிமாச்சல்பிரதேசத்திலும்கூட.. அந்த மாநிலத்தில் கின்னாவூர் என்ற மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் அம்மாநில முதல்வரே 60 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கித் தவித்தார். இந்தப் பெரும் நிலச்சரிவுக்கு காரணமாக இஸ்ரோ அதிகாரிகள் சொல்வது என்னவெனில் கின்னாவூர் மாவட்டம் உள்ளடங்கிய சங்லா வனப்பகுதியானது முன்பு மிகவும் அடர்ந்த ஒரு வனப்பகுதியாக இருந்தது. ஆனால் தற்போது அந்த வனப்பகுதி அழிகப்பட்டு சட்லெஜ் நதியில் 1000 மெகாவாட் நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காகவே அடர்வனப்பகுதி அழிந்து போக பெரும்நிலச்சரிவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்கின்றனர் விஞ்ஞானிகள்...

ஆறுகளை திசைதிருப்பி, காடுகளை சூறையாடி, மலைகளை வேட்டையாடி பதம் பார்த்த மனிதர்களை இப்போது இயற்கை பழிவாங்கியிருக்கிறது என்பதே நிதர்சனம்!


உலகின் அதிவேக சூப்பர் கணனி அறிமுகம்

உலகின் அதிவேக சூப்பர் கணனி அறிமுகம்





உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த சூப்பர் கணனியை உருவாக்கியுள்ளனர்.

டியானி 2(Tianhe 2) என பெயரிடப்பட்டுள்ள இந்த கணனியின் வேகம் நொடிக்கு 33.86 பெடாஃப்லாப்(Petaflap) ஆகும்.

அதாவது நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தது.

மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது, சந்திரன் போன்ற மற்ற கிரகங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட மிகப்பெரிய அளவிலான அறிவியல் திட்டங்களைச் செயல்படுத்த இந்த சூப்பர் கணனி உதவும்.

மேலும் இந்த கணனியை கொண்டு மிக கடினமாக கணக்குகளை கூட துல்லியமாக செய்து முடிக்கலாம்.

இதுவரையிலும் அமெரிக்க எரிசக்தி அமைச்சகத்தின் தயாரிப்பான டைட்டன் என்ற கணனி தான், இதுவரை உலகின் அதிவேக சூப்பர் கணனியாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 19, 2013

மேட்டூர் அணையில் புதையல் ரகசியம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

மேட்டூர் அணையில் புதையல் ரகசியம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு




மேட்டூர் அணையின் நீர்மட்டம் 16 அடியாக குறைந்ததால், நீர்த்தேக்க பகுதியான கீரைக்காரனூரில் ஆற்றின் நடுவில் உள்ள வீரபத்திரன் சுவாமி கோயில் முழுமையாக வெளியில் தெரிகிறது. இந்த கோயிலில் புதையல் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் விக்டோரியா ராணி காலத்து வெள்ளிக் காசுகள் இந்த பகுதியில் கிடைத்தன. இதைத்தொடர்ந்து, நேற்று அப்பகுதியில் பழங்கால ரகசிய குறிப்புகள் கொண்ட சமஸ்தான கல்வெட்டை கிராம மக்கள் கண்டுபிடித்தனர். இதை, கல்லில் அடங்கியுள்ள குறியீடுகள் புதையல் ரகசியம் என்று இந்த பகுதியினர் கூறுகின்றனர். கல்லின் இரண்டு பக்கங்களிலும் பல குறிப்புகள் உள்ளன. அவற்றில் எழுத்துக்கள் இல்லாமல் வரைபடங்கள் உள்ளன. இதனால், இந்த கல்லை சமஸ்தான கல் என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். அதாவது பழங்கால மன்னர்கள் தங்களுடைய போர் நுணுக்கங்களை எதிரிகள் அறியாத வகையில் குறிப்புகளாக வரைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சமஸ்தான கல் அருகே முறுக்கு மீசையுடன் ஈட்டியை கையில் பிடித்தவாறு எல்லைச்சாமியின் சிலை உள்ளது. சமஸ்தான கல்லில் உள்ள குறிப்பை பார்த்து எவரேனும் புதையலை எடுத்துக் கொண்டு எல்லையை தாண்டினால் எல்லைச்சாமி தண்டித்து அவர்களை வதம் செய்வதாக இப்பகுதியினர் கூறுகின்றனர். அதையும் மீறி புதையலை தேடும் மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள், கல்வெட்டில் உள்ள ரகசிய குறியீடுகளை தெரிந்து கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் புதையல் எடுக்க முயன்றால், தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுவதால் இங்கு புதையல் தேடுவோர் அச்சத்துடன் உள்ளனர்.மேலும் எல்லைச்சாமியை சாந்தப்படுத்தும் வகையில், பரிகார பூஜை செய்யவும், பூசாரிகளிடம் பலர் குறி கேட்டு வருகின்றனர். இந்த சமஸ்தான கல் மற்றும் எல்லைச்சாமி சிலை பகுதிகளை, கிராம மக்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கர்ப்பிணிகளே, வயித்துக்குள்ள இருக்கற குட்டி, நீங்க சொல்ற கதையை கேட்குமாம்...

கர்ப்பிணிகளே, வயித்துக்குள்ள இருக்கற குட்டி, நீங்க சொல்ற கதையை கேட்குமாம்...


கர்ப்பத்தில் இருக்கும் போதே குழந்தை தாயின் பேச்சை உற்றுக் கவனிக்க ஆரம்பித்து விடுகிறது என சமீபத்து ஆய்வில் உறுதி படுத்தியுள்ளார்கள்.

மகாபாரதத்தில், சக்கர வியூகம் குறித்து அர்ஜூனன் கூறியதைக் கருவில் இருந்த அபிமன்யு கேட்டு தெரிந்து கொண்டதாக ஒரு பகுதி வரும். அக்கூற்றை தற்போது உண்மை என நிரூபித்துள்ளது

அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று. கர்ப்பிணிகள் மற்றும் அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கருவில் இருக்கும் குழந்தை தாயின் குரலை சரியாக இனம் கண்டு கொள்கிறது என தெரிய வந்துள்ளதாம்.

ஆய்வில் நிரூபணம்... 

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 74 கர்ப்பிணி பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வு மூலம் இதனை நிரூபித்துள்ளனர்.

கதை சொல்லப் போறேன்... 

கிட்டத்தட்ட 36 வாரம் குழந்தை வளர்ச்சியுடைய கர்ப்பிணிகளிடம் ஒரு கதை புத்தகத்தை கொடுத்து சத்தம் போட்டு படிக்க சொன்னார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்போது வயிற்றில் கர்ப்பபையில் வளரும் குழந்தைகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.

கவனமா கேட்குமாம்... 

ஆச்சர்யமாக, தாய் கதைப்புத்தகம் படிக்கும் போது வயிற்றில் உள்ள குழந்தையின் இதய துடிப்பின் வேகம் சிறிதளவு குறைந்து, அவற்றின் அசைவும் அடங்கி இருந்தது.

கதை கேட்கும் பாப்பா... 

தாயின் சொல்லும் கதையைக் கேட்பதாலேயே, இந்த மாற்றம் குழந்தையிடம் நிகழ்ந்தது என இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



Tuesday, June 18, 2013

ஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்கு' ஒப்பானது: சென்னை ஹைகோர்ட் அதிரடி

ஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்கு' ஒப்பானது: சென்னை ஹைகோர்ட் அதிரடி


திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவில் ஈடுபட்டு அதன் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தால் அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோவை பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் (35), அனீஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிக்கு கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

1999ம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு அனீஷ் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் அனீஷ் இடமிருந்து மாதம் ரூ.5,000 பராமரிப்புத் தொகை கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் மும்தாஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகைப்படங்கள், அனீசுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை மும்தாஜ் தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, இரண்டு குழந்தைகளும் அனீசுக்குத்தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனாலும், அனீஷை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மும்தாஜூக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மும்தாஜ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவில், தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை. இந்த இரண்டு குழந்தைகளையும், அனீசுக்கு முறை தவறிப் பிறந்தவை என்று குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

குழந்தை பிறப்பின்போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையெழுத்திட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.

திருமணத்தை நடத்துவது என்பது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் நிகழ்வு. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல. தாலி கட்டுவது, மாலை மாற்றுவது, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத்தான்.

மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம், அந்த ஜோடிகளுக்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி என்ற உறவுக்கு உட்பட்டவர்கள்தான்.

இந்த வழக்கில் அனீஷ் மற்றும் மும்தாஜை வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான். திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால்தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். மும்தாஜ் விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான். எனவே கணவரான அனீஷ் தனது மனைவி மும்தாஜூக்கு மாதம் ரூ.500 பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவர்கள் சட்டபூர்வமான தம்பதிகளாக கருதலாம். சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி கர்ணன்.


சிங்கப்பூரில் புழுதிமூட்டம் (haze)! வெளியே நடமாட வேண்டாம் என அரசு எச்சரிக்கை!!

சிங்கப்பூரில் புழுதிமூட்டம் (haze)! வெளியே நடமாட வேண்டாம் என அரசு எச்சரிக்கை!!



சிங்கப்பூரில் நேற்று (திங்கட்கிழமை) பல இடங்களில் காற்றில் புழுதிமூட்டம் (haze) ஏற்பட்டதையடுத்து, பொதுமக்களை அவசியமில்லாமல் வெளியே தலைகாட்ட வேண்டாம் என அரசு அறிவித்தது. இந்த நிலை கிட்டத்தட்ட நேற்றைய தினம் முழுவதும் தொடர்ந்து காணப்பட்டது.

சில் இடங்களில் தெளிவாக பார்க்க முடியாதிருந்தது. சில இடங்களில் சிலருக்கு சுவாசிப்பதே கடினமாக இருந்தது. காற்றின் தூய்மைத் தன்மை நேற்று அபாயகரமான அளவைத் தொட்டது.

நேற்று மாலை 3 மணியளவில், காற்றின் தூய்மைக்கான கணிப்பீடான PSI (Pollutant Standards Index) 3 மணி நேர வாசிப்பு, 105 புள்ளிகளை தொட்டது. இரவு 10 மணிக்கு இது மேலும் மோசமாகி, 155 புள்ளிகளை தொட்டது. சிங்கப்பூரில் இந்த வாசிப்பு மிக மோசமான அளவைத் தொட்டது கடந்த 1997-ம் ஆண்டுதான். அப்போது வாசிப்பு 226 புள்ளி வரை சென்றிருந்தது.

சிங்கப்பூர் தொழிலாளர் நல அமைச்சு, அனைத்து நிறுவனங்களுக்கும் விடுத்த வேண்டுகோளில், தொழிலாளர்களை பில்டிங்குகளுக்கு வெளியே பணி புரிய அனுப்புவதை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. சிங்கப்பூர் ராணுவம், மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் அவுட்டோர் பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

சிங்கப்பூர் சுற்றுப்புற சூழல் துறை விடுத்துள்ள அறிக்கையில், “இந்த நிலைக்கு காரணம், இந்தோனேசியா சுமாத்ரா பகுதியில் ஏற்பட்ட hotspot activities. இந்த நிலை அடுத்த சில் தினங்களுக்கு தொடரவும் வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சுற்றுப்புற சூழல் மற்றும் தண்ணீர் வளத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “இது தொடர்பாக இந்தோனேசிய அரசிடம் பேசிவருகிறோம். இந்தோனேசிய சுற்றுப்புற சூழல் துறை அமைச்சருடன் இன்று நான் நேரடியாக பேசவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.




லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: பணப்பரிமாற்றம் திருடர்கள் !

லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: பணப்பரிமாற்றம் திருடர்கள் !




லண்டனில் உள்ள பல வங்கள் தற்போது காண்டக்-லஸ் என்னும் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளை கொடுத்து வருகிறது. உங்கள் வங்கி மற்றும் கடன் அட்டையில் பின் வரும் குறியீடு இருப்பின்அது காண்டக்-லஸ் கார்டு என்று அர்த்தம். 20.00 பவுண்டுகளுக்குள், பொருட்களை நாம் வாங்கினால், எமது இரகசியக் குறியீடு நம்பரைப் பாவிக்காமல் அந்த கார்டை மெஷினில் தொட்டாலே போதும். கடைக்காரருடைய மெஷின் எமது கார்டில் பணத்தை எடுத்துவிடும். இந்த முறை இலகுவானது என்று அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அதுவே தற்போது தலையிடியாக மாறியுள்ளது. குறிப்பாக நீங்கள் காண்டக்-லெஸ் என்னும் அந்த கிரெடிட் கார்டைக் கொண்டுசெல்லும்போது, அதனை அறியக்கூடிய இலத்திரனியல் உபகரணத்தை உங்கள் பாக்கெட்டில் அல்லது உங்கள் உடலில் டச் பண்ணிலால் போதும். உங்கள் கிரெடிட் காட் இரகசியங்கள் குறிப்பிட்ட நபருக்குச் சென்றுவிடும்.

இதனால் பெரும் ஆபத்து தோன்றியுள்ளது. வழமையாக பெற்றோல் நிரப்பும் நிலையங்களில் வங்கி அட்டைகளை சிலர் களவாடுவதும் பின்னர் இன்ரர் நெட் ஊடாக நாம் காசு செலுத்தும்போது எமது வங்கி அட்டைகளை சிலர் களவாடுவதும் வழக்கம். ஆனால் இந்த புதிய முறையானது யாருக்கும் தெரியாமல் நடக்கும் ஒரு விடையமாக உள்ளது. அத்தோடு உங்கள் கடன் அல்லது வங்கி அட்டைகளை நீங்கள் பாவிக்காமலே உங்கள் அட்டைகளின் விபரங்களை அவர்களால் திருட முடிகிறது. எனவே காண்டக்-லஸ் எனப்படும் குறிப்பிட்ட வங்கி அட்டைகளை கொண்டுசெல்லும்போதும் நீங்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் யாராவது உங்கள் மேல் முட்டப் பார்த்தால், இல்லை என்றால் உங்கள் பாக்கெட் இருக்கும் பகுதியை முட்ட நினைத்தால் கவனமாக இருப்பது நல்லது.

McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற...

McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற...




கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
இவ்வாறான தாக்கங்களிலிருந்து கணினிகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு அன்டி வைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் பிரபலமானதும், வினைத்திறமானதுமான மென்பொருட்களில் McAfee அன்டி வைரசும் ஒன்றாகும்.

இதன் Genuine பதிப்பானது கணனிக்கு சிறந்த பாதுகாப்பினை வழங்குவதோடு Anti-malware, Firewall, Spam Filters போன்ற அம்சங்களையும் ஒருங்கே கொண்டுள்ளது.

எனினும் இதனை ஒரு வருடம், இரு வருடம், 3 வருடம் என்ற கால அடிப்படைக்கு ஏற்ப பணம் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.

இருந்த போதிலும் தற்போது 6 மாதங்களுக்கு பயன்படுத்தக் கூடிய பதிப்பினை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இதனை தரவிறக்கம் செய்துகொள்வதற்கு கீழுள்ள இணைப்பில் கிளிக் செய்து உங்களுக்கு என்று ஒரு கணக்கினை உருவாக்கிக் கொண்டால் போதுமானது.

இணையத்தள முகவரி

நமது தொழில்நுட்பத்தை அன்னிய நாடுகளுக்கு வழங்குவதா? ஜப்பான் மக்கள் எதிர்ப்பு

நமது தொழில்நுட்பத்தை அன்னிய நாடுகளுக்கு வழங்குவதா? ஜப்பான் மக்கள் எதிர்ப்பு


ஜப்பானின் அணு உலை தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் போன்ற ஒத்துழைப்பை உலக நாடுகளுக்கு வழங்குவது என ஜப்பான் பிரதமர் "ஷின்சோ அபே" உறுதி அளித்திருந்தார்.
இவர் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டேவுடனான ஒப்பந்தத்தில் இவ்வுறுதியை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமரின் இந்த முடிவுக்கு மக்களின் கருத்து எப்படி இருக்கிறது என்பதை அறிய சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இக் கருத்துக் கணிப்பில் சுமார் 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவருக்கு ஆதரவாக 24 சதவீதம் பேர் மட்டுமே இதனை வரவேற்றுள்ளனர்.

"ஷின்சோ அபே"வின் சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களில் கூட 43.2 சதவீதம் பேர் ஜப்பானிய அணு உலை தொழில் நுட்பத்தை பிற நாடுகளுக்கு தரக்கூடாது என கூறியுள்ளனர்.

அத்துடன் எதிர்க் கட்சியை சேர்ந்த 76.1 சதவீதம் பேரும் பிரதமரின் இந்த முடிவு சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

2011 மார்ச்சில் புகுஷிமா அணு உலைக்கு நேர்ந்த நிலைமை மீண்டும் ஏற்படாதபடி அணு உலை தொழில் நுட்பத்தை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் எனவும், அனைத்து தரப்பினரும் அதனையே விரும்புவதாக அக் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இரு கால்களையும் இழந்த பெண் கடலில் நீந்தி சாதனை

இரு கால்களையும் இழந்த பெண் கடலில் நீந்தி சாதனை


பிரிட்டனைச் சேர்ந்த சூ ஆஸ்டின் என்பவருக்கு  16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் இரு கால்களும் செயல் இழந்தன.
எனினும், நம்பிக்கையை கை விடாத ஆஸ்டின் தான் கற்றிருந்த நீச்சல் மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததனால், மீண்டும் முன் போலவே நீந்த வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.

ஆஸ்டின் தனக்கு வேண்டிய சக்கர நாற்காலியை தானே, பிரத்யேகமான முறையில் வடிவமைத்து அதன் மூலம் மீண்டும் நீச்சல் பழகி தற்பொழுது கடலிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இவர் தயாரித்த நாற்காலியில், விசேஷ காஸ் நிரப்பிய உருளைகள் பொருத்தப்பட்டு உள்ளதுடன் கால்களின் உதவி இல்லாமல் நீந்துவதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியின் மூலம், 360 டிகிரி கோணத்திலும் சுழல முடியும்.

இச் சாதனையினால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தரையில் இருப்பதை விட, தண்ணீரில் இருப்பதையே தான் விரும்புவதாகவும் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.