Thursday, July 4, 2013

தர்மபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

தர்மபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு



தர்மபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இளவரசனின் சடலம் தர்மபுரி அரசுக் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி திவ்யாவின் காதல் கணவரான இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். தண்டவாளத்தின் அருகிலிருந்து இளவரசனின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பை மீட்கப்பட்டுள்ளன. இளவரசனின் சட்டைப் பையிலிருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

தர்மபுரி கலவரம் விவரம்


தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இவரும் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி இளவரசன், திவ்யா இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் தரப்பில் கடத்தல் என்று புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் சேர்ந்து வாழும்படி கூறி அனுப்பினர். இதையடுத்து, திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து, தர்மபுரியில் சாதி கலவரம் மூண்டு வடமாவட்டம் முழுவதும் பற்றி எரிந்தது. 10 மாதங்கள் கடந்த நிலையில், இளவரசன் வீட்டில் இருந்து திவ்யா, மருத்துவமனையில் இருக்கும் உறவினரை பார்த்துவிட்டு வருவதாகக் கூறி சென்றவர் திரும்பவில்லை. மனைவியை காணவில்லை என்று போலீசில் இளவரசன் புகார் கொடுத்தார். இதற்கிடையில் திவ்யாவின் தாய் தேன்மொழி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின்படி கடந்த மார்ச் மாதம் இளவரசனும், திவ்யாவும் நீதிபதிகள் முன் ஆஜராயினர். அப்போது கணவனுடன் செல்வதாக கூறி திவ்யா சென்றார். பின்னர் மீண்டும் இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது காதலனுடன் செல்ல விருப்பம் இல்லை. தாயுடன் செல்கிறேன் என்று திவ்யா நீதிபதிகளிடம் கூறினார். இதனால் காதல் ஜோடிகள் பிரிந்தனர். திவ்யா தாயுடன் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதை தொடர்ந்து அந்த மனு நேற்று மீண்டும் நீதிபதிகள் ஜெயசந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யா தாயுடன் நேரில் ஆஜரானார். திவ்யா சார்பாக வக்கீல் கே.பாலு ஆஜராகி, திவ்யாவை ஒப்படைக்க கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். மகள் தாயுடன் செல்ல நீதிமன்றம் அனுமதி கொடுத்ததால் நாங்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். இதற்கு அனுமதி தர வேண்டும் என்றார்.

இளவரசனின் வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, இந்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்க கூடாது. திவ்யா வன்னியர் சங்க வக்கீல்கள் வசம் உள்ளார். எனவே வக்கீல்கள் கூறுவதை திவ்யா அப்படியே நீதிமன்றத்தில் கூறுகிறார். அவருக்கு அறிவுசார் கவுன்சலிங் நடத்த உத்தரவிட வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு கூறுவதாக அறிவித்தனர்.      

 பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த திவ்யா கதறி அழுதார். பின்னர் கண்ணீருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  என் தந்தை இறந்துவிட்டார், தாய் தனியாக இருக்கிறார். அதனால் நான் அவருடன் செல்லவே விரும்புகிறேன். இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. என்னால்தான் எனது தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் எனக்கு மனஉளைச்சலாக உள்ளது. எனது தந்தையின் நினைவாகவே உள்ளது. இதற்கு காரணமான நான் எனது தாயுடன் இருந்து எனது காலத்தை கழிக்க விரும்புகிறேன். என்னால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவே விரும்புகிறேன். எக்காரணத்தை கொண்டும் இளவரசனுடன் செல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

என்னால்தான் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் எனக்கு மனஉளைச்சலாக உள்ளது. எனது தந்தையின் நினைவாகவே உள்ளது. இதற்கு காரணமான நான் எனது தாயுடன் இருந்து காலத்தை கழிக்க விரும்புகிறேன்.

இளவரசன் மரணம்


இந்நிலையில், தர்மபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இளவரசனின் சடலம் தர்மபுரி அரசுக் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். தண்டவாளத்தின் அருகிலிருந்து இளவரசனின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பை மீட்கப்பட்டுள்ளன. இளவரசனின் சட்டைப் பையிலிருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

தர்மபுரியில் 144 தடை உத்தரவு


தர்மபுரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் வில்லி. இளவரசன் உயிரிழந்ததை அடுத்து மாவட்டத்தில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நம் கையில் உள்ள மெளஸைக் கண்டுபிடித்த டக்ளஸ் 88 வயதில் மரணம்!

நம் கையில் உள்ள மெளஸைக் கண்டுபிடித்த டக்ளஸ் 88 வயதில் மரணம்!


கம்ப்யூட்டருடன் இணை பிரியாத துணைவனாக திகழும் மெளஸைக் கண்டுபிடித்தவரான அமெரிக்காவைச் சேர்ந்த டக்ளஸ், எங்கல்பர்ட் சான்பிரான்சிஸ்கோவில் மரணமடைந்தார் நேற்று இரவு தனது வீட்டில் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எங்கல்பர்ட்டுக்கு வயது 88 ஆகிறது. கம்ப்யூட்டர்களால் கூட மறக்க முடியாத டக்ளஸ்

கம்ப்யூட்டர்களால் கூட மறக்க முடியாத டக்ளஸ் கம்ப்யூட்டர் துறையில் பல மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் டோக் என்று செல்லமாக அழைக்கப்படும் டக்ளஸ்


முதல் மெளஸின் முன்னோடி எஸ்ஆர்ஐ என்று அழைக்கப்படும் ஸ்டான்போர்ட் ஆய்வுக் கழகத்தில் இவர் ஆற்றிய பணிகள்தான் 1963ம் ஆண்டு முதல் மெளஸை இவர் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது.

68ல் முதல் மெளஸ் அறிமுகம் 1968ம்ஆண்டு முதல் மெளஸை உலகுக்கு அறிமுகப்படுத்தி பேசினார் டக்ளஸ். அந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டர் பயன்பாடு எளிதானது மெளஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் கம்ப்யூடட்ர் பயன்பாடு எளிதானது, வேகமாக பரவவும் வகை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கல்பர்ட்டுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். அவருடன் 47 ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினார் டோக். இரண்டாவது மனைவி பெயர் கரேன். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.


நைட் ஷிப் வேலையா? மார்பகப்புற்றுநோய் வருமாம்!

நைட் ஷிப் வேலையா? மார்பகப்புற்றுநோய் வருமாம்!


15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நைட்ஷிப்ட் வேலை பார்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கனடாவை சேர்ந்த உடலியல் ஆராய்ச்சியாளர்கள், இரவு பணியில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும் மார்பக புற்றுநோய் குறித்து இதில் தீவிரமாக ஆராயப்பட்டது. இரவு பணியில் இருக்கும் பெண்களுக்கு விட்டமின் டி குறைவதும், வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றமும்தான் புற்றுநோய் பாதிப்புக்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


கனடா பெண்களிடம் ஆய்வு 

கனடாவின் வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கிங்ஸ்டன், ஆன்டாரியோ நகரங்களில் மார்பக புற்றுநோய் பாதித்த 1,134 பெண்களிடமும், அதே வயதில் நோய் பாதிக்காத 1,179 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.



30 ஆண்டு இரவுப் பணி 

ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 3ல் ஒருவர் தொடர்ந்து இரவு பணியில் வேலை பார்ப்பவர். 15 முதல் 29 வயது வரையில் அதாவது 14 ஆண்டுகள் வரை தொடர்ந்து இரவு பணிக்கு சென்றுவந்த பெண்களுக்கு எந்த பாதிப்பும் தெரியவில்லை. ஆனால், 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள், தொடர்ந்து இரவு பணியில் இருந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு 2 மடங்காக இருந்தது. இதற்கு முக்கிய காரணம், உடல் சுரப்பிகள்தான்" என்று தெரிய வந்துள்ளது.

சுரப்பிகளில் மாற்றம் 

அதாவது தூங்காமல் வேலை செய்வதால், உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது. தூக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தூக்கத்தை வரழைக்கவும் உதவும் மெலடோனின் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது.

மார்பகப் புற்றுநோய் 

நைட் ஷிப்ட் வேலையினால் உடல் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. உடல் பாதிக்கப்படுகிறது. மேலும் விட்டமின் டி குறைவது, உடல் கடிகாரத்தில் மாற்றம் ஏற்படுவது, ஆகிய அனைத்தும் மார்பக புற்றுநோய் மற்றும் உடலில் கட்டிகள் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாகின்றன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.


விக்கிலீக்ஸ் மீதான ‘பொருளாதார தடை’யை நீக்கியது மாஸ்டர் கார்டு!

விக்கிலீக்ஸ் மீதான ‘பொருளாதார தடை’யை நீக்கியது மாஸ்டர் கார்டு!


அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அம்பலப்படுத்தியதால் அந்த இணையதளத்துக்கு மாஸ்டர்கார்டு மூலம் நன்கொடை செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ்.. அமெரிக்காவை அலற வைத்த இணையதளம்.. உலகம் முழுவதும் அமெரிக்க தூதரகங்கள் என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டது? பிற நாடுகளின் தலைவர்களை எப்படியெல்லாம் விமர்சித்தது? ஏன பல்லாயிரக்கணக்கான தகவல்களை விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே தமது தளத்தின் மூலம் வெளியிட்டார். இதனால் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் செம கடுப்பாகிப் போகின. அசாஞ்சே மீது வெளிநாடுகளில் பாலியல் வழக்குகள் தொடரப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு டிசம்ப மாதம் விசா, பேபால், பேங்க் ஆப் அமெரிக்கா, வெஸ்டர்ன் யூனியன்ஸ் மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவற்றின் மூலமாக விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு நிதி உதவி செய்வது தடை செய்யப்பட்டது. இதனால் விக்கிலீக்ஸ் செயல்பாடுகள் முடங்கும் நிலைக்குப் போனது.

இந்த பொருளாதாரத் தடையை அசாஞ்சே மிகக் கடுமையாக விமர்சித்தும் இருந்தார். இதனிடையே அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் தளத்துக்கு நன்கொடை செலுத்துவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை மாஸ்டர் கார்டு நீக்கியிருக்கிறது என்று விக்கிலீக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 3, 2013

ஆபிஸ்ல அடிக்கடி எழுந்து நடங்க நீரிழிவு வராது…. ஆய்வில் தகவல்

ஆபிஸ்ல அடிக்கடி எழுந்து நடங்க நீரிழிவு வராது…. ஆய்வில் தகவல்


அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து இரண்டு நிமிடங்கள் நடக்க வேண்டும். இதன்மூலம் நீரிழிவை தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே அதிக நேரம் வேலை பார்ப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட பலவித நோய்களும், இருதயம் தொடர்பான நோய்களும் தாக்குகின்றன.

டைப் 2 நீரிழிவுக்கு ஆளானவர்களின் பெரும்பாலோனோர் அலுவலகத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட நியூசிலாந்தை சேர்ந்த ஒடாகோ பல்கலைக்கழக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நீரிழிவினைத் தடுக்க சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் அலுவலகத்தில் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் நடக்க வேண்டும். இதன் மூலம், கொழுப்பு, சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளனர். லோ பிளட் சுகர் கட்டுப்படுவததோடு இன்சுலின் அளவு சீராகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டைப் 2 நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயநோய், பக்கவாதம் போன்றவை தாக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே இரண்டு நிமிடங்கள் நடப்பதன் மூலம் நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு இருதய நோய் ஏற்படாமலும் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஆய்வு முடிவு அமெரிக்க ஜர்னல் கிளினிக்கல் நியூட்ரீசன் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


ஸ்னோடென் சந்தேகம்..பொலிவிய அதிபர் விமானம் ஐரோப்பாவில் கட்டாய தரை இறக்கம்!

ஸ்னோடென் சந்தேகம்..பொலிவிய அதிபர் விமானம் ஐரோப்பாவில் கட்டாய தரை இறக்கம்!


“தப்பி செல்கிறாரா ஸ்னோடன்?” பொலிவியா நாட்டு ஜனாதிபதியின் விமானம் திசை திருப்பல்!!


அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை அம்பலமாக்கிய எட்வார்ட் ஸ்னோடன் விவகாரம், சர்வதேச ராஜதந்திர அளவில் நேற்றிரவு உச்சத்தை தொட்டது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பொலிவியா நாட்டு ஜனாதிபதி பயணம் செய்த தனி விமானம், ஐரோப்பாவில் திசை திருப்பப்பட்டது.

அந்த விமானத்தில் ஸ்னோடன் தப்பிச் செல்லலாம் என்று ஏற்பட்ட சந்தேகமே அதற்கு காரணம்.

துப்பறியும் கதை போல சுவாரசியமான திருப்பங்கள் எல்லாம் ஸ்னோடன் விவகாரத்தில் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஒரு நாட்டின் ஜனாதிபதியின் தனி விமானமே திசை திருப்பப்படும் அளவுக்கு விவகாரம் போயிருக்கிறது என்றால், இது மிகப் பரிய விஷயம்.

பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரால்ஸூடன், அவரது தனி விமானத்தில் ஸ்னோடன் ரஷ்யாவில் இருந்து தப்பிச் செல்கிறார் என்ற உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த விமானம் ஐரோப்பிய வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, பிரான்ஸ், மற்றும் போத்துக்கல் ஆகிய இரு நாடுகளும் அந்த விமானம் தமது வான் பகுதியில் பறப்பதற்கு தடை விதித்தன.

இதையடுத்து ஜனாதிபதியின் விமானம் நேற்றிரவு திசைதிருப்பப்பட்டு, தற்போது ஆஸ்திரியா நாட்டில் இறக்கப்பட்டுள்ளது.

இப்போது ஸ்னோடன் விவகாரம், நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர முறுகல் நிலையை ஏற்படுத்தி விட்டது. அமெரிக்காவின் வேண்டுகோளை அடுத்தே பிரான்ஸ், மற்றும் போத்துக்கல் தமது நாட்டு ஜனாதிபதியின் விமானம் பறப்பதற்கு தடை விதித்துள்ளன என பொலிவியா நாட்டு வெளியுறவு அமைச்சர் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியுள்ளார்.

சரி. விறுவிறுப்பான இந்த விவகாரத்தின் என்னதான் நடந்தது?

இந்தியா, சீனா உட்பட 19 நாடுகளிடம் ஸ்னோடன் அரசியல் அடைக்கலம் கோரியிருந்த போதிலும், அவரது முதல் சாய்சாக இருந்த நாடுகள் தென் அமெரிக்க நாடுகளான ஈக்வடோர், பொலிவியா மற்றும் வெனிசூலாதான். இதில் ஈக்வடோர், விக்கிலீக்ஸ் அதிபர் அசாஞ்ச்சுக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்து, பிரிட்டனில் உள்ள தமது நாட்டு தூதரகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில், பொலிவியா நாட்டு ஜனாதிபதி, எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள ரஷ்யா வந்தார். ஸ்னோடன் ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலைய ட்ரான்சிட் ஏரியாவில் தங்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், இவர் ரஷ்யா வரும் முன்னரே சர்வதேச மீடியாவில் வதந்தி ஒன்று பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது.

வதந்தி என்னவென்றால், ரஷ்யா வரும் பொலிவியா நாட்டு ஜனாதிபதி மாநாடு முடிந்து தனது நாடு திரும்பும்போது, தனது தனி விமானத்தில் எட்வார்ட் ஸ்னோடனையும் அழைத்து (‘கடத்தி’ என்றன சில அமெரிக்க மீடியாக்கள்) சென்று விடுவார் என்பதே!

இதனால், பொலிவியா நாட்டு ஜனாதிபதியின் வருகையை, மீடியாக்கள் மட்டுமின்றி, சி.ஐ.ஏ. உட்பட உளவு அமைப்புகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன.

மாஸ்கோ வந்து இறங்கிய பொலிவியா நாட்டு ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஸ்னோடன் பற்றி சிலாகித்து பேசினார். “ஸ்னோடன் என்ன குற்றம் செய்தார்? யாரையாவது கொன்றாரா? எங்காவது வெடிகுண்டு வைத்தாரா? இல்லையே… அமெரிக்க உளவுத்துறை அனைவரையும் உளவு பார்க்கிறது என்று உலகத்துக்கு தெரிய வேண்டிய உண்மையை வெளியிட்டிருக்கிறார்” என்றார்.

இது போதாதா?

பொலிவியா ஜனாதிபதி வந்து இறங்கிய விமானம், மாஸ்கோ விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்றிரவு அந்த விமானம் புறப்படும் முன், மூடப்பட்ட ஹாங்கர் ஒன்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அதன்பின் மீண்டும் வெளியே கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. (விமானத்தை பழுது பார்ப்பதற்கும் ஹாங்கருக்குள் கொண்டு செல்லலாம்)

இந்த நடைமுறை அமெரிக்க உளவுத்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதன்பின் விமானத்தை யாரும் நெருங்க அனுமதிக்கப்படவில்லை. மூடப்பட்ட ஹாங்கரில் ஸ்னோடன் விமானத்தில் ஏறியிருக்கலாம் என்ற சந்தேகம் அமெரிக்க உளவுத்துறைக்கு ஏற்பட்டிருக்கலாம்.

நேற்றிரவு, பொலிவியா ஜனாதிபதி வந்து விமானத்தில் ஏறிக் கொண்டார். விமானம் பொலிவியா நாட்டை நோக்கி புறப்பட்டது.

இந்த விமானம் செல்லும் வான் பாதையில், அதற்கு கீழேயுள்ள நாடுகளில் ஏற்கனவே அனுமதி பெறப்பட்டிருந்தது. விமானம் புறப்படும்வரை காத்திருந்துவிட்டு, விமானம் வானில் பறந்து கொண்டிருந்த நிலையில், தமது வான் பகுதியூடாக பறக்க வழங்கப்பட்ட அனுமதியை போத்துக்கல் ரத்து செய்தது. அதையடுத்து பிரான்ஸூம், அனுமதி ரத்து என்ற தகவலை விமானிக்கு அனுப்பியது.

ஜனாதிபதியின் விமானம் தொடர்ந்து செல்ல முடியாமல் வானத்தில் வட்டமடிக்க தொடங்கியது.

இந்த நிலையில் பொலிவியா அதிகாரிகள், வேறு ஐரோப்பிய நாடுகளிடம் அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இரவு நேரத்தில் அந்த முயற்சி பெரிதாக வெற்றி பெறாத நிலையில், விமானத்தின் எரிபொருள் இருப்பு குறையத் தொடங்கியது. ஜனாதிபதியின் விமானம் எரிபொருள் முடிந்து விழுந்து விடலாம் என்ற அவசர கோரிக்கையை பொலிவியா அதிகாரிகள் விடுத்ததை அடுத்து, ஸ்பெயின் நாடு ஒரு நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தது.

நிபந்தனை என்னவென்றால், விமானத்தை ஸ்பெயின் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கி எரிபொருள் நிரப்பலாம். ஆனால் விமானம் பொலிவியா நாட்டுக்கு தொடர்ந்து செல்ல அனுமதி கிடையாது. வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

அதன் அர்த்தம், ஜனாதிபதியின் விமானமாக இருந்தாலும் சரி, அதில் எட்வார்ட் ஸ்னோடன் பொலிவியா செல்ல முடியாதபடி எப்படியாவது தடுப்பது.

ஸ்னோடன் விவகாரத்தில், ஒரு நாட்டு ஜனாதிபதியின் விமானத்துக்கே ஏற்பட்ட கதியை பார்த்தீர்களா?

வேறு வழியில்லாமல் ஜனாதிபதியின் விமானம் ஸ்பெயினில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பியது. அங்கிருந்து எங்கே போகலாம்? பொலிவியா நாட்டு ராஜதந்திரிகள் தமக்கு சார்பான நாட்டு அரசு தலைவர்களை நள்ளிரவு நேரத்தில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்கள்.

விமானம் தமது நாட்டுக்கு வந்து தரையிறங்க அனுமதி கொடுத்தது ஆஸ்திரியா.

இதையடுத்து ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட விமானம், ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தரையிறங்கியுள்ளது. சர்வதேச அகதி மற்றும் அரசியல் அடைக்கல சட்டங்கள் பல ஆஸ்திரியாவில்தான் உருவாகின (வியன்னா கன்வென்ஷன்) என்பதால், ஆஸ்திரியாவை தேர்ந்தெடுத்திருக்கலாம் பொலிவியா ஜனாதிபதி.

நேற்றிரவு ஆஸ்திரியாவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இறங்கிய பொலிவியா ஜனாதிபதி, வியன்னா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தற்போது தங்கியுள்ளார். ஸ்னோடன் இறங்கியதாக தெரியவில்லை. “ஜனாதிபதியின் தனி விமானத்தில் ஸ்னோடன் இல்லவே இல்லை” என தெரிவித்துள்ளார், பொலிவியா நாட்டு வெளியுறவு அமைச்சர்.

“பிரான்ஸ் மற்றும் போத்துக்கல், எமது நாட்டு ஜனாதிபதியின் உயிருக்கே உலை வைக்கப் பார்த்தன. இதெல்லாம் அமெரிக்க உத்தரவுப்படிதான் நடந்திருக்கின்றன ” எனவும் கூறியுள்ளார் அவர்.

பொலிவியா ஜனாதிபதி எப்போது கிளம்புவார் என்றும் தெரியவில்லை. அந்த விமானத்துக்குள் ஸ்னோடன் ‘நிஜமாகவே’ இல்லையா என்பதும் தெரியவில்லை. ஆனால், கடந்த மாதம் 30 வயதை எட்டிப்பிடித்துள்ள ஸ்னோடனிடம், பல முக்கிய ரகசியங்கள் உள்ளன என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது!




Tuesday, July 2, 2013

அட!.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்!!

அட!.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்!!



ஏஞ்சலெஸ்: அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று, சொல் பேச்சு கேட்காத மனைவிகளை அவர்களின் புட்டத்தில் அடித்துத் திருத்துமாறு கணவர்மார்களுக்கு அறிவுரை கூறியுள்ளது. இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புட்டத்தில் எதைக் கொண்டு அடிக்கலாம் என்பதை ஒரு லிஸ்ட்டாகவும் அந்த அமைப்பு தொகுத்து வழங்கியுள்ளது. பிரஷ், பெரிய மரக் கரண்டி ஆகியவை அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ள 'ஆயுதங்களில்' சிலவாகும். சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை இப்படி அடித்து் திருத்தலாம் என்று பைபிளில் கூறியிருப்பதாகவும் அந்த அமைப்பு விளக்கம் தருகிறது.

கிறிஸ்தவ குடும்ப ஒழுங்கு அமைப்பு 

இந்த அமைப்பின் பெயர் கிறிஸ்தவ குடும்ப ஒழுங்கு அமைப்பு (Christian Domestic Discipline - CDD) என்பதாகும். இது ஏகப்பட்ட பரிந்துரைகளை, அறிவுரைகளை கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தனது இணையதளம் மூலம் வழங்கி வருகிறது.

கிளின்ட் - செல்சியா 

இந்த அமைப்பை நடத்துவது கிளின்ட், செல்சியா தம்பதியர் ஆவர். இவர்கள் இதுதொடர்பாக ஒரு சிடியையும் வெளியிட்டுள்ளனர்.

கணவர்தான் தலைவன் 

இந்த அமைப்பின் இணையதளத்தில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது.. கணவர்தான் வீட்டுக்குத் தலைவன் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. பைபிளிலும் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த கணவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

சொல் பேச்சு கேட்காட்டி அடிங்க 

அதன்படி தனது மனைவி தனது சொல் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களை கணவர் அடித்துத் திருத்தலாம்.

புட்டத்தில் அடிங்க 

மனைவியரை புட்டத்தில் அடித்துத் திருத்த கணவருக்கு உரிமை உண்டு. இதில் தவறில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எப்படி அடிக்கலாம்... 

அதற்கும் விளக்கம் இந்த சிடியில், மனைவியரை எப்படி அடிக்கலாம், எதை வைத்து அடிக்கலாம் என்பது குறித்தும் விளக்கம் தந்துள்ளனர் கிளின்ட் தம்பதியர்.

மடியில் படுக்க வைத்து 

மடியில் மனைவியை படுக்க வைத்துக் கொண்டு புட்டத்தில் அடிக்கலாமாம்.

படுக்கையில் படுக்க வைத்தும் அடிக்கலாம் படுக்கையில் படுக்கவைத்தும் மனைவியை புட்டத்தி்ல அடிக்கலாமாம்.

எதை வைத்து அடிக்கலாம்? 

பெரிய மரக் கரண்டி, தலை வாரஉதவும் பெரிய பிரஷ், சப்பாத்திக் கட்டை, வெறும் கை ஆகியவற்றைக் கொண்டு புட்டத்தில் அடிக்கலாமாம்.

டிரஸ்ஸோடும், டிரஸ் இல்லாமலும்... டிரஸ் அணிந்தபடியும் மனைவியை அடிக்கலாம் அல்லது டிரஸ்ஸைக் கழற்றி விட்டும் புட்டத்தில் அடிக்கலாமாம்..

ரொம்ப அடிக்காதீங்க 

அதேசமயம், இந்த அடியானது மென்மையாக இருக்க வேண்டும். அடிவாங்குபவரின் சம்மதத்துடன்தான் அடிக்க வேண்டும். கோபமாகவோ அல்லது வேகமாகவோ அடிக்கக் கூடாது என்றும் கிளின்ட் தம்பதி வலியுறுத்தியுள்ளது.

இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா... 

ஆனால் இப்படி கணவரிடம் புட்டத்தில் அடி வாங்கிய ஒரு பெண் கடும் கோபமாகி விவாகரத்து வரை போய் விட்டாராம். இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், அடி வாங்குகிறாயா, விவாகரத்து செய்கிறாயா என்று எனது கணவர் கேட்டபோது விவாகரத்தே மேல் என்று கூறி விட்டேன். இப்படி அடிக்கிற வேலையெல்லாம் என்கிட்ட ஆகாது என்றார் கோபமாக.

பைபிளில் அப்படியா சொல்லியுள்ளது...? 

இந்த சர்ச்சை குறித்து பிரையன் பிஷர் என்பவர் கூறுகையில், புதிய ஏற்பாட்டில், மனைவியானவர், கணவரின் தலைமையின் கீழ் வருவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. கணவருக்கு அடி பணிந்தவர் மனைவி என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், இப்படி கணவர் அடிக்கலாம் என்று அதில் கூறப்படவில்லை என்று விளக்கினார். அமெரிக்காவிலும் இ