Saturday, February 16, 2013

நள்ளிரவில் கடந்து சென்ற விண்கல் பூமிக்கு ஆபத்தில்லை


நள்ளிரவில் கடந்து சென்ற விண்கல் பூமிக்கு ஆபத்தில்லை



2012 DA 14 விண்கல், எந்த வித ஆபத்தையும் விளைவிக்காமல், நள்ளிரவில் பூமிக்கு மிக அருகே கடந்து சென்றது.

விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு, விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டதை விட பூமிக்கு மிக அருகில் விண்கல் கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் மூலம், இதன் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மேல் பகுதியில் கடந்து சென்ற இந்த விண்கல், இந்திய நேரப்படி நள்ளிரவு ஒரு மணிக்கு சில நிமிடங்கள் முன்பாக, பூமியில் இருந்து 17 ஆயிரத்து 200 மைல் உயரத்தில்,

பூமியைக் கடந்து சென்றது தெரியவந்துள்ளது. பூமிக்கும், செயற்கைக் கோள்களுக்கும் இடையே உள்ள பகுதியில், கடந்து சென்ற இந்த விண்கல்லில் இருந்து, சில மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் நேற்று விழுந்த எரிகல்லுக்கும், 2012 DA 14 விண்கல்லுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Friday, February 15, 2013

ரஷ்யாவில் விழுந்து வெடித்து சிதறிய எரிநட்சத்திரம்- 400 பேர் படுகாயம்!

ரஷ்யாவில் விழுந்து வெடித்து சிதறிய எரிநட்சத்திரம்- 400 பேர் படுகாயம்!




மாஸ்கோ: மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில் ரஷ்யாவின் வான்வெளியில் எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் சுமார் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் பகுதியில் இன்று மிகப் பெரிய எரிநட்சத்திரம் வெடித்து விழுந்தது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.

எரி நட்சத்திரத்திரம் வெடித்துச் சிதறியபோது மிகப்பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெடித்துச் சிதறிய எரி நட்சத்திரத்தின் துகள்கள் நிலப்பரப்பில் எங்கும் விழவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த அதிர்வால் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரை நொறுங்கியது. மேலும் அதிர்வில் வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் சுமார் 400 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Click Here to Watch

















தினம் வால்நட் சாப்பிடுங்க... படுக்கையில் அசத்திடுங்க...

தினம் வால்நட் சாப்பிடுங்க... படுக்கையில் அசத்திடுங்க...

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும் வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை
அறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்,தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குபின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்தபோது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.

காதல் சாஸ்திரம்

காதல் சாஸ்திரம்




காதலர் தினம். உலகமே கொண்டாடுகிறது. பரிசு பொருட்களையும் வாழ்த்துகளையும் பரிமாறிய வண்ணம் இருக்கிறார்கள் காதல் ஜோடிகள். கொடி அசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடி அசைந்ததா? முதலில் வந்தது முட்டையா.. கோழியா? என்பது போல காதலிலும் ஒரு சந்தேகம் தீரா கேள்வி. காதல் வந்ததால் மனித குலம் தோன்றியதா.. மனித குலம் தோன்றிய பிறகு காதல் வந்ததா? ஆகமொத்தம்.. எதிர்ப்புகள் இருந்தாலும் மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. ஜோதிட கலையை, ஜோதிட சாஸ்திரத்தை மிகப்பெரிய கடலுக்கு ஒப்பாக சொல்வார்கள். எந்த விஷயத்துக்கும் அசைக்க முடியாத தீர்வுகள் இந்த கலையில் இருக்கின்றன.

ஏதோ ராசிபலன், நாள், நட்சத்திரம், பொருத்தம், தோஷம் என்ற அளவில்தான் சாதாரண மக்களுக்கு இந்த கலை பரிச்சயம். ஆனால் மகரிஷிகள், யோகீஸ்வரர்கள் எழுதி வைத்து நமக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளின்படி தனி மனிதனின் யோக அவயோகங்களை பற்றி மட்டுமின்றி, உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளின் தன்மைகள், செயல்பாடுகளையும் நாம் ஜோதிடம் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். மனித வாழ்க்கை என்பதே சுகத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஐம்புலன்களுக்கும் ஒவ்வொரு வகையில் சுகம் கிடைக்கிறது. தொடுதல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், ரசித்தல் என எல்லாமே ஒருவகை சுகம்தான்.

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் உணர்ச்சியும், சுகமும் உள்ளது. அந்த வகையில் மனிதனுக்கு இந்த உணர்ச்சி, சுகம், காதல் என்பது முக்கிய தேவையாக உள்ளது. அதையும் கருத்தில் கொண்டே திருமண பந்தம், தாம்பத்ய சுகம் எல்லாவற்றுக்கும் வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். காதல் விஷயத்தில் ஜோதிட சாஸ்திரம் என்ன அறிவுறுத்துகிறது என பார்க்கலாம். இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள், அமைப்புகள் ஆகியவை பொதுப் பலன்களாகும். பண்டைய நூல்கள் பலவற்றில் கூறப்பட்ட கருத்துகளின் சாராம்சமே இங்கு கூறப்பட்டுள்ளது. சிலருக்கு ஒத்துப்போகும். சிலருக்கு ஒத்துப்போகாமலும் இருக்கலாம்.

காதலை தீர்மானிக்கும் 5 கிரகங்கள்

குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் சக்ஸஸ் ஆகுமா, சொதப்புமா என்பதை தீர்மானிக்கின்றன.

குரு:

ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர். யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால் ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.

 சுக்கிரன்:


இவர்தான் சுகபோகத்தின், காதலின், காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

செவ்வாய்:


இவர்தான் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

புதன்:

ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.

சந்திரன்:

மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.

காமத்தை நிர்ணயிக்கும் வீடுகள்

ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

அதிரடி காதலர்கள்

மூன்றாம் இடம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய திசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.

உஷார் லவ்வர்.. உஷார்!

நான்காம் இடம்: இது சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். காதலனிடம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

காதல் இனிக்குமா?

ஏழாம் இடம்: இந்த இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும். ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகுகேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம். குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.

காதல் சொதப்பும்!

12ம் இடம்: இந்த இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.

விவகாரமான சனிசந்திரன்

சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது. பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரனும், ஏழாம் அதிபதியும் பலம் குறைந்து நீச்சமாக இருப்பது, ஏழாம் வீட்டில் ராகுசனி, சுக்கிரன்கேது இருப்பது. நவாம்சத்தில் சுக்கிரன் வீட்டில் சனியும், சனி வீட்டில் சுக்கிரனும் இருப்பது ஆகியவை இருந்தால் பெண்கள் மீதே அவர்களுக்கு நாட்டம் ஏற்படலாம்.

ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனிசுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகள்தான் யோக, அவயோகத்துக்கு காரணமாக இருக்கிறது. நன்மை, தீமை இரண்டுக்குமே கிரகங்கள்தான் காரணம். ஒருவருக்கு கிடைக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றையுமே ‘பிராப்தம்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அதனால்தான் திருமண பொருத்தத்தின்போது ஜாதக பொருத்தம் மிக அவசியம் என்று கூறுகிறார்கள். இதில் சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புகள் எல்லாம் இருந்தபோதிலும், சில நேரம் கைகூடாமல் போகலாம். அதற்கு வேறு கிரக சேர்க்கைகள் காரணமாக இருக்கும். மேலும் காதல், காமம் போன்ற விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நீச்ச கிரக, பாவ கிரக, திசா புக்தி அந்தரங்களில் தொடர்புகள் ஏற்படுகின்றன. ராசிநாதன், லக்னாதிபதி பலமாக இருந்தால், எந்த சூழ்நிலையிலும் அவர் சஞ்சலம், சபலம் அடையமாட்டார் என்று அடித்து சொல்லலாம். இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.

செவ்வாயும் ராகு கேதுவும் தோஷமா? சந்தோஷமா?

திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகுகேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள்.

ஜோடிகள் இடையே காதல் சுகம் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் இலைமறை காய்மறையாக ‘தோஷ ஜாதகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்கள். ராகுகேது விஷயத்திலும் அதே அணுகுமுறைதான். லக்னத்துக்கு 7, 8ல் ராகுகேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்கிறது. தோஷம் உள்ள ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், ‘தோஷம்‘ என்று சொல்லி சம தோஷ ஜாதகத்தை சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.

சுக்கிரன்  செவ்வாய் ஆகாத கூட்டணி

ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்.. காதலுக்கு உகந்த இடம் எது?

பள்ளியில் தொடங்கி, கல்லூரி, பணி புரியும் இடம் என எல்லா இடங்களிலும் காதல் மலர்கிறது.  இளம் வயது என்பது பக்குவம் இல்லாத வயது என்பதால் அப்போது மலரும் ஈர்ப்பை காதலாக கருத முடியாது. கல்லூரி காலம் என்பது குழப்பமான பருவம் என்பதால், அந்த காதலும் பெரும்பாலும் சக்ஸஸ் அடைவதில்லை. ஓரளவு பக்குவம் வந்த பிறகு மலரும் காதல்தான் அன்யோன்யமாக, நீடித்திருப்பதாக அமைகிறது.

இதுவும் ஜாதகம் மற்றும் அந்தந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொருத்ததே. பள்ளி, கல்லூரி பருவத்தில் லக்னாதிபதி, 5ம் எண் அதிபதி ஆகியோர் வலுவாக இருந்தால் காதல் போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லாது. கிரகங்களின் அனுக்கிரகத்தால் நீங்கள் பொறுப்பு உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அமைந்தால் காதலின்பால் நாட்டம் ஏற்பட்டு வழிதவறி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

கள்ளக்காதல் ரகசியம்

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.

 ‘ஜோதிட முரசு’
மிதுனம் செல்வம்

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்: இதிலும் இந்தியாவுக்கு இடமில்லை


போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள டாப் 20 சந்தோஷமான நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை.

போர்ப்ஸ் பத்திரிக்கை உலகில் உள்ள நாடுகளில் டாப் 20 சந்தோஷமான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பது நார்வே. ஆனால் இந்த பட்டியலில் இந்தியா இல்லை.

இப்பட்டியலில் லக்சம்பர்க் 11வது இடத்திலும், அமெரிக்கா 12வது இடத்திலும் உள்ளன. மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.



உலகின் சந்தோஷமான நாடு நார்வே 

உலகிலேயே நார்வே தான் சந்தோஷமான நாடு ஆகும். பிற நாடுகளை ஒப்பிடுகையில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது நார்வே.

 

2வது சந்தோஷமான நாடு டென்மார்க் 

உலகின் சந்தோஷமான டாப் 20 நாடுகள் பட்டியலில் 4வது ஆண்டாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு டென்மார்க்.


3வது இடத்தில் ஸ்வீடன் 

கடந்த 2009ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த ஸ்வீடன் இந்த ஆண்டு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் 

உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் ஆஸ்திரேலியா கல்வியில் 2வது இடத்திலும், தனிநபர் சுதந்திரத்தில் 3வது இடத்திலும் உள்ளது.


5வது இடத்தில் நியூசிலாந்து 

கல்வியில் முதலிடம், தனி நபர் சுதந்திரம் மற்றும் ஆளுமையில் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து உலகின் 5வது சந்தோஷமான நாடு ஆகும்.



6வது இடத்தில் குளிருக்கு பெயர் போன கனடா 

தனிநபர் சுதந்திரத்தில் முதலிடத்தில் இருக்கும் கனடா உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.


பின்லாந்துக்கு 7வது இடம் 

பாதுகாப்பு, வாய்ப்பு ஆகியவற்றில் உலக அளவில் 3து இடத்தில் இருக்கும் பின்லாந்து உலகின் 7வது சந்தோஷமான நாடு ஆகும்.

8வது இடத்தில் நெதர்லாந்து 

உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் நெதர்லாந்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.


9வது இடத்தில் குளு குளு சுவிட்சர்லாந்து 

அழகான இடங்களால் உலக மக்களை கவரும் சுவிட்சர்லாந்து உலகின் 9வது சந்தோஷமான நாடு ஆகும். பொருளாதாரம், ஆளுமையில் முதலிடத்தில் இருந்தாலும் கல்வியில் 32வது இடத்தில் உள்ளது.



10வது இடத்தில் அயர்லாந்து 

உலகின் பத்தாவது சந்தோஷமான நாடான அயர்லாந்து தனிநபர் சுதந்திரத்தில் 4வது இடத்தில் உள்ளது.



இந்தியா சந்தோஷமான நாடு இல்லையா? 

உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை.

மொரீஷியஸில் சி. இலக்குவனார் தமிழ் பள்ளி திறப்பு

மொரீஷியஸில் சி. இலக்குவனார் தமிழ் பள்ளி திறப்பு



மொரீஷியஸில் கடந்த 3ம் தேதி தமிழ் பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

மொரீஷியஸ் நாட்டில் கடந்த 3ம் தேதி தமிழ் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு தமிழுக்காக பாடுபட்ட சி. இலக்குவனாரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சி. இலக்குவனார் தமிழ் பள்ளி மாரியம்மன் கோவில் தமிழ்ச் சங்கம் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்ட மொரீஷியஸ் வாழ் தமிழ் அறிஞரான அருணாசலம் புட்பரத்தினம் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், சி. இலக்குவனாரின் தமிழ் பணி மற்றும் அவருடைய சிறப்புகள் குறித்து விரிவாகக் கூறினார். பின்னர் பேசிய கேசவன் சொர்ணம், பள்ளிக்கு ஏன் இலக்குவனார் பெயர் வைக்கப்பட்டது என்பதையும், பெயர் பொருத்தத்தையும் பற்றி விளக்கினார்.

தொடர்ந்து பேசிய செமன், தமிழ் பள்ளியின் தேவை குறித்து விளக்கினார். மொரீஷியஸ் நாட்டு தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் மேனன் மருதை தமிழ் பள்ளி திறக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார்.







கடும் மழையால் வடக்கு கிழக்கு விவசாயம் பெரும் பாதிப்பு

கடும் மழையால் வடக்கு கிழக்கு விவசாயம் பெரும் பாதிப்பு



கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இரணைமடு குளத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதையடுத்து பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

இந்த தகவலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் இடம் பெயர்ந்த பல குடும்பங்களை சேர்ந்த மக்கள் நான்கு நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளை, முரசுமோட்டை, வட்டகச்சி, பன்னங்கண்டி, ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி முகாம்களிலே இடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.




இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பெருமளவிலான நெற்பயிர் சீரழிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பெருவெள்ளம் காரணமாக பல கிராமங்கள் நீரினால் சூழப்பட்டுள்ளதுடன்இ பொதுமக்கள் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், பல மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையின் வடக்கே வவுனியா, முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக அறுவடைக்குத் தயாராகவுள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்கதிர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தப் பிரதேசத்தில் 4 குளங்கள் உடைப்பெடுத்திருக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளத்தின் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டிருப்பதனால் வெள்ளம் ஏற்பட்டு பெருமளவான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது வரையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வரையில் இடம்யெபர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இடம்பெயர்ந்தவர்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கூறியிருக்கின்றார்கள்.

மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதனால்இ நிலைமை மேலும் மோசமடையலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள்.

இதேவேளை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கனத்த மழை காரணமாக விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் வெள்ளம் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

மழை இன்னமும் தொடர்ந்து வருவதால், சிரமம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பெண்களை புத்திசாலிகளாக்கும் 'உச்சகட்டம்'...!

பெண்களை புத்திசாலிகளாக்கும் 'உச்சகட்டம்'...!


தாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒட்டம் சீரடைகிறதாம். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் குணமடைந்து உற்சாகம் அதிகரிக்குமாம்.

ரத்த ஓட்டம் சீராகும்

செக்ஸ் உறவின் கிளைமேக்ஸில் பெண்களுக்கு பீறிட்டுக் கிளம்பும் உணர்வுகளால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.

குணமடையும் இதயநோய்கள்

உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு  நன்மைகள் பல ஏற்படுகிறது.

உற்சாகம் அதிகரிக்கும்

எண்டோர்பின், டோபமைன், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் ஆர்கஸத்தின் போது உடலில் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் கோகெயின் எனப்படும் போதை மருந்துக்கு ஒப்பானது என்றும் அதை உட்கொள்வதால் ஏற்படும் பறத்தல் போன்ற உணர்வு ஆர்கஸம் மூலம் ஏற்படும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

நிம்மதியான உறக்கம்

உறவில் ஏற்படும் உச்சகட்ட நிலைக்குப் பிறகு உடலும் உள்ளமும் அமைதியடைந்து நிம்மதியான உறக்கம் வரும். தூக்க குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த 1,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறவில் ஈடுபட்ட பின் நிம்மதியாக உறங்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.


மூளையின் ஆரோக்கியம்

ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் விரைவாக பாய்வதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது இது நிரூபிக்கப்பட்டது. ஆர்கஸத்திற்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை வலி நிவாரணி

உடல்வலியோ மன வலியோ இரண்டையும் போக்கும் இயற்கை வலி நிவாரணியாக செக்ஸ் இருக்கிறது. ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக பாயும் பொழுது உடலில் ஆங்காங்கே ரத்தம் தேங்கியிருந்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு நன்மை செய்கிறதாம். ஆர்கஸத்தின் போது வெளிப்படும் ஹார்மோன்கள் சோர்வு, மன அழுத்தம் போன்றவைகள் ஏற்பட்டிருந்தாலும், தலைவலி இருந்தாலும் அவற்றை போக்கும் மருந்தாக செயல்படுகிறது

சுபமுகூர்த்த நாள் ஆந்திராவில் 3 நாளில் 2 லட்சம் திருமணம்

சுபமுகூர்த்த நாள் ஆந்திராவில் 3 நாளில் 2 லட்சம் திருமணம்



ஆந்திராவில் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு கடந்த 3 நாளில் 2 லட்சம் திருமணங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் ஆடி மாதத்தில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். அதனால், அதற்கு முந்தைய ஆனி மாதத்தில் திருமணங்கள் அதிகமாக நடக்கும். அதேபோல, ஆந்திராவில் தெலுங்கு பஞ்சாங்கப்படி மகாமாசம் இன்றுடன் முடிகிறது.

மே மாதம் 2வது வாரம் வரை அடுத்து வரும் தெலுங்கு மாதங்கள் திருமணம் செய்ய ஏற்றது அல்ல என்பது ஆந்திர மக்களின் நம்பிக்கை. மகா மாசம் இன்றுடன் முடியும் நிலையில், கடந்த 3 நாட்கள் சுப முகூர்த்த தினங்கள் என்பதால் மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் திருமணங்கள் நடந்துள்ளன. இதில் ஐதராபாத்தில் மட்டும் 50 ஆயிரம் திருமணங்கள் நடந்துள்ளன.

இதற்காக, திருமண மண்டபங்கள், விழா மண்டபங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டன. பல இடங்களில் திருமண வீட்டார் மண்டபங்கள் கிடைக்காமல் திண்டாடினர். மண்டபங்களுக்கு கிராக்கி ஏற்பட்டதால் அதன் வாடகையும் உயர்ந்தது. செகந்திராபாத்திலும் நகரின் மற்ற இடங்களிலும் திருமண விழாக்களுக்கு மண்டபங்களில் ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் வசூலிக்கப்பட்டது. மண்டபம் கிடைக்காமல் கோயில்களில் பல திருமணங்கள் நடந்ததால் பல கோயில்களில் மாலையும் கழுத்துமாக மணமக்களும் அவர்களது உறவினர்களும் திரண்டனர்.

வசந்த பஞ்சமி லட்சக்கணக்கானோர் புனித நீராடால்

வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடால்



அலகாபாத்: வசந்த பஞ்சமியை முன்னிட்டு  உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவின் முக்கிய தினம் என்பதால்  அகோரிகள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற அலகாபாத் கும்பமேளாவின் முக்கிய நாளாக கருதப்படும் வசந்த் பஞ்சமி நாளான இன்று  புனித நீராட மக்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.  மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வரை 55 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் நாள் தோறும் வந்து புனித நீராடி வருகின்றனர்.

இந்த கும்பமேளாவின் மிக முக்கிய தினமாக கருதப்படும் வசந்த் பஞ்சமி நாளான இன்று புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்த வண்ணம் இருகின்றனர். இன்று காலை 3.30 மணிக்கு துவங்கிய புனித நீராளால் நிகழ்ச்சியில் காலை 7.30 மணியளவில் அகாடாக்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

Thursday, February 14, 2013

பெண்களை விட ஆண்கள்தான் ரொமான்ஸில் சூப்பராம்...!

பெண்களை விட ஆண்கள்தான் ரொமான்ஸில் சூப்பராம்...!



ரொமான்ஸ்... இதற்கு மயங்காத ஆளே கிடையாது.. இதை அடிச்சிக்கவும் வேறு விஷயமே கிடையாது.. எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் ரொமான்ஸுக்கு மயங்காவிட்டால் பிறந்ததற்கே பலன் இல்லை...

பைக்கில் ஏறி சட்டை வேகமாக படபடக்க, ஜிவ்வென்று காற்று முகத்தில் அடிக்க, மனசுக்குள் அலை அலையாக எண்ணங்கள் சிறகடிக்க, மனதுக்குள் பொங்கி எழும் உணர்வுகளை ஆண்கள் எப்பவுமே அழகாக வெளிப்படுத்துவார்கள். பெண்களைப் பொறுத்தவரை உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் சரி, ரொமான்ஸை வெளிப்படுத்துவதிலும் சரி கொஞ்சம் அடக்கம் அதிகமாகவே இருக்கும்.

ரொமான்ஸ் செய்வதில் எப்போதுமே ஆண்கள்தான் பெஸ்ட்... இது ரொம்ப காலமாகமாவே பலரும் சொல்லி வரும் ஒன்றுதான். ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக ஒரு சர்வேயில் சொல்லியுள்ளனர் இப்போது.

கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் ஆண்கள்தான் ரொமான்ஸ் செய்வதிலும், ரொமான்டிக்காக நடந்து கொள்வதிலும் பெஸ்ட் என்று சொல்லியுள்ளனர் இந்த சர்வேயில். அதேசமயம், ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் ரொமான்ஸில் ரொம்ப தூரம் பின்தங்கியுள்ளனராம். ஒரு கார்டு கொடுத்தும் , சின்னதாக ஒரு கிப்ட் கொடுத்தும் தங்களது ரொமான்ஸை முடித்துக் கொள்வார்களாம் பெண்கள். ஆனால் ஆண்கள் அப்படி இல்லையாம்... நிறைய மெனக்கெடுவார்களாம், தங்களது காதலையும், உணர்வுகளையும் தெரிவிக்க.

இங்கிலாந்தில் 2000 ஆண், பெண்களிடம் காதலர் தினத்தையொட்டி நடத்தப்பட்டது ஒரு சர்வே. அதில் கலந்து கொண்டவர்களிடம் யார் அதிக ரொமான்ட்டிக்காக செயல்படுவது என்று கேட்கப்பட்டது . அதற்குத்தான் இப்படிப் பதில்கள் வந்துள்ளன. 21.5 சதவீத பெண்கள் கூறுகையில், பெரிய அளவில் காதலர் தினத்தைக் கொண்டாட மாட்டோம் என்று கூறினராம். அதேசமயம், ஆண்களில் 14.5 சதவீதம் பேரே காதலர் தினத்தைக் கொண்டாட மாட்டோம் என்று கூறினராம். மேலும் 25 சதவீத பெண்கள், வெறும் கார்டுடன் கடையை மூடி விடுவார்களாம். ஆண்களில் 16 சதவீதம் பேர் மட்டுமே கார்டு அனுப்பி காதல் வாழ்த்து சொல்கின்றனராம்.

அதேபோல தங்களது துணையை மகிழ்விக்க நிறைய முயற்சி எடுப்பது என்று பார்த்தாலும் ஆண்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றனர். செலவழிப்பதிலாகட்டும், மெனெக்கெடுவதிலாகட்டும், கஷ்டப்படுவதிலாகட்டும், உணர்வுகளை வெளிப்படுத்துவதிலாகட்டும் எல்லாவற்றிலும் ஆணக்ள்தான் முன்னணியில் உள்ளனராம்.

காதலியை வெளியே கூட்டிச் செல்வது, அவருக்குப் பிடித்ததை வாங்கிக் குவிப்பது, அவர் கூப்பிடும் இடத்திற்கு ஓடி வருவது, பிடித்த உணவை வாங்கித் தருவது, கேன்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்வது, வெளியில் அழைத்துச் செல்வது என்று விழுந்து விழுந்து கவனிப்பதில் ஆண்கள்தான் செம சமர்த்தாம். (பின்னே, வேலை ஆக வேண்டுமே...)

நீங்க என்ன சொல்றீங்க, ரொமான்ஸில் ஆண்கள் பெஸ்ட்டா, இல்லை பெண்கள் பெஸ்ட்டா...?

காதல் தலைநகரம் டில்லி! – சர்வே ரிசல்ட்

காதல் தலைநகரம் டில்லி! – சர்வே ரிசல்ட்



இந்தியாவின் காதல் நகரமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சர்வேயில் இந்த புதிய அந்தஸ்து டெல்லிக்கு கிடைத்துள்ளது.

காதலர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் எந்த நகரம் காதல் நகரமாக கருதப்படுகிறது என்று snapdeal.com என்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் சர்வே நடத்தியது.

இந்த சர்வேயில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட நான்கரை லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த சர்வேயில் டெல்லியை 53 ஆயிரத்து 174 பேர் காதல் நகரமாக தேர்வு செய்துள்ளனர். மும்பைக்கு 49 ஆயிரத்து 010 பேரும், ஸ்ரீநகருக்கு 29 ஆயிரத்து 047 பேரும் வாக்களித்துள்ளனர்.

 எல்லோரும் நேசிக்கிறாங்க 

காதல் நகரமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டது பற்றி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், டெல்லியை அனைவரும் நேசிக்கின்றனர். இங்குள்ள வெளிமாநிலத்தவரும் இதை தங்கள் சொந்த மண் போல் நேசிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 4ம் தேதி முதல் நடைபெற்ற இந்த சர்வேயில் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறைவாகவே வாக்களித்துள்ளனர். வட இந்தியர்கள் குறிப்பாக டெல்லிவாசிகள் இணையதளத்திற்கு சென்று அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/14/india-delhi-voted-love-capital-169740.html

யோவ்.. நம்ம ஊர்ல மழை பெஞ்சுக்கிட்டு இருக்குயா!


யோவ்.. நம்ம ஊர்ல மழை பெஞ்சுக்கிட்டு இருக்குயா!


விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தேனி ஆகிய இடங்களில் பலத்த மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ராமேஸ்வரம், பாம்பனில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வந்தது. இந் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், கீழக்கரை, சத்திரகுடி, பரமக்குடி, தேவிபட்டினம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. அலைகள் 10 அடி உயரத்துக்கு எழுகின்றன.

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் 2,000 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சிவகங்கை, மானாமதுரை, ராஜகம்பீரம், காரைக்குடி போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதே போல விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் சாத்தூர், இருக்கன்குடி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், சிவகாசி போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. மதுரை, உசிலம்பட்டி, அவனியாபுரம், அலங்கால்லூர் பகுதிகளில் மழை பெய்ததோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் மேகமூட்டமாக இருக்கும். தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/14/tamilnadu-rains-southern-tamil-nadu-169765.html