Friday, January 10, 2014

சூரியனிலிருந்து வெளியேறும் மிகப்பெரிய ஒளிப்பிரளயம்

சூரியனிலிருந்து வெளியேறும் மிகப்பெரிய ஒளிப்பிரளயம்




பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சூரியன் உள்ளது.
சூரியனின் மத்தியப்பகுதியிலிருந்து கடந்த 7-ம் திகதியன்று மிகப்பெரிய அளவிலான ஒளிக்கற்றைகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. சூரியன் உமிழ்ந்த இந்த கிளரொளிக்காட்சிகளை நாசாவின் சோலார் டைனமிக் ஆய்வகம் வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர். 1944 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளரொளியானது கடந்த பத்து வருடங்களில் காணப்படாத மிகப்பெரிய ஒன்று என்றும் நாசா கூறியுள்ளது.

இந்த கிளரொளிக்காட்சியின் போது சக்தி வாய்ந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெடித்து சிதறுகின்றன. இவ்வாறு வெடித்து சிதறிவரும் மனிதனுக்கு தீங்கிழைக்கூடிய கதிர்வீச்சுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் நுழையமுடியாது.

ஆனால் இது பூமிக்கு அருகில் செயல்பட்டு கொண்டிருக்கும் நமது தகவல் தொடர்பு சாதனங்களையும், செயற்கை கோள்களுக்கும் தீங்கிழைக்கக்கூடும். மிகக்கடுமையான இந்த ஒளிப்பிரளயங்களை எக்ஸ் 1, 2, 3 என்று வகைப்படுத்துகின்றனர்.

போராளி இயக்கம் கைப்பற்றிய டேங்கருக்குள் இருப்பது ஆயில் அல்ல, ராஜதந்திர சிக்கல்!

போராளி இயக்கம் கைப்பற்றிய டேங்கருக்குள் இருப்பது ஆயில் அல்ல, ராஜதந்திர சிக்கல்!




சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி இயக்கத்தினர், சிரியா ராணுவ முகாம் ஒன்றில் கைப்பற்றியதாக அறிவித்து, போட்டோ வெளியிட்டுள்ள ஆயில் 
லாரிக்குள் பெரிதாக ஏதுமில்லை. பெற்றோலோ, டீசலோ இருக்கலாம். அல்லது, காலி லாரியாகக்கூட இருக்கலாம். அது முக்கியமல்ல. லாரியில், அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு எண்ணை நிறுவனத்தின் லோகோ (logo) இருப்பதுதான், ராஜதந்திர ரீதியில் பெரிய விஷயம்!

அது எப்படி? இதோ, இப்படித்தான்:

சிரியா அரசுக்கு எதிராக ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. அதை சிரியாவின் சில நட்பு நாடுகள் டேங்கர் (லாரி), தம்முடையது அல்ல என அறிவித்துள்ளது, அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு எண்ணை நிறுவனம்.

போராளி இயக்கம் லாரி ஒன்றை கைப்பற்றியது பெரிய விஷயமா? அது ஒரு சாதனை என்பதுபோல போட்டோ வெளியிட வேண்டுமா? அப்படி வெளியிட்டாலும், உடனே மற்றொரு நாட்டின் அரசு எண்ணை நிறுவனம் அவசர மறுப்பு அறிக்கை வெளியிடும் அளவுக்கு இந்த ஒற்றை லாரியில் அப்படி என்னதான் உள்ளது?
ரகசியமாக மீறி, சில சப்ளைகளை செய்கின்றன. இந்த ரகசிய சப்ளை செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் உண்டு. சிரியாவுக்கு ரஷ்யாவும், வேறு சில நாடுகளும் செய்யும் சப்ளைகளை அம்பலப்படுத்தும் பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிரியாவில் அரசு ராணுவத்தை தாக்கும் போராளிப்படைகள், தாக்குதலில் வெற்றியடைந்து ஒரு ராணுவ முகாமை கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம், அந்த ராணுவ முகாமில் உள்ள ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, முகாமை வெடிவைத்து தகர்த்து விடுவார்கள். ராணுவம் மீண்டும் அந்தப் பகுதியை கைப்பற்றினால், அவர்கள் நிலைகொள்வதற்கு ராணுவ முகாம் பில்டிங் இருக்கக்கூடாது என்பதற்காக அப்படி செய்தார்கள்.

இப்போது கதை வேறு. ராணுவ முகாமை கைப்பற்றியவுடன், ஆயுதங்களை எடுப்பதற்கு முன், முகாமுக்குள் உள்ள இதர பொருட்கள் எந்த நாட்டு தயாரிப்பு என்று பார்க்கிறார்கள். அந்தப் பொருட்கள் மற்றொரு அரசால் சப்ளை செய்யப்பட்டவை என்பதற்கு ஆதாரம் ஏதாவது கிடைத்தால், உடனே போட்டோ எடுத்து வெளியிட்டு விடுகிறார்கள்.

“இதோ பாருங்கள். ஐ.நா.வின் பொருளாதாரத்தடை இருக்கையில், இந்த நாடு ரகசியமாக சிரியா அரசுக்கு சப்ளை செய்கிறது” என்று காட்டுவதுதான், போட்டோ வெளியிடுவதன் நோக்கம். இதையடுத்து அந்த நாட்டுக்கு ராஜதந்திர ரீதியில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கும். ஐ.நா. காரணம் கேட்கும்.

இப்படி செய்வதால், இனிவரும் நாட்களில் சிரியாவுக்கு எந்த சப்ளையும் செய்ய மற்றைய நாடுகள் தயங்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம்.

இரு தினங்களுக்கு முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸின் புறநகரப் பகுதியில் உள்ள சிறிய ராணுவ முகாம் ஒன்று போராளிப் படையினரால் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த சொற்ப அளவிலான ராணுவத்தினரில் சிலர் கொல்லப்பட்டனர். வேறு சிலரோ, போட்டது போட்டபடி முகாமை விட்டு தப்பியோடினர்.

முகாமை கைப்பற்றிய போராளிப் படையினர் முகாமில் இருந்த பொருட்களை சோதனையிட்டபோது, முகாமுக்கான எரிபொருள் சப்ளை செய்த ஆயில் டேங்கர் லாரி ஒன்றை கண்டார்கள். அதன் பின்பகுதியில், அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு எண்ணை நிறுவனத்தின் லோகோ இருந்தது (பார்க்கவும் போட்டோ).

இதுதான், இந்த போட்டோவின் ராஜதந்திர முக்கியத்துவம்.

போட்டோ வெளியானதும் பதறிப்போன அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு, அந்த டேங்கர் தம்முடையது அல்ல என அவசர அவசரமாக அறிவித்த காரணம் அதுதான்.

அஸர்பாய்ஜான் குடியரசு அரசின் செய்தி தொடர்பாளர் நிஜாமிடின் குலியேவ் உடனடியாக செய்தியாளர் மாநாடு ஒன்றைக் கூட்டி, “எமது அரசு எண்ணை நிறுவனமான சொகார் (SOCAR), சிரியாவுக்குள் எந்த ஆபரேஷனிலும் இல்லை. அந்த நிறுவனத்துக்கு, சிரியா அரசுடன் எந்த வர்த்தகமும் இல்லை. போட்டோவில் உள்ளது, சொகார் நிறுவனத்தின் டேங்கர் லாரியும் அல்ல” என்று நேற்று அறிவித்தார்.

“அந்த ஆயில் டேங்கரில், சொகார் நிறுவனத்தின் லோகோ உள்ளதே” என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “அந்த லோகோ போலியாக வரையப்பட்டுள்ளது. எமது நாட்டை அரசியல் ரீதியாக சிக்கலில் மாட்டிவிட சிரியாவில் உள்ள போராளி அமைப்பினர் செய்த சதிச்செயல் இது” என்று தெரிவித்துள்ளார்.

”லோகோ போலியானது என்பதற்கு உங்களிடம் நிரூபணம் ஏதாவது உள்ளதா?” என மற்றொரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “எமது நிபுணர்கள் இரு லோகோவையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கப்பட்டபின், ஆதாரத்தை வெளியிடுவோம்” என்றார்.

சிரியா போராளி இயக்கங்களில் கூட்டமைப்பான பிரீ சிரியன் ஆர்மியின் செய்தி தொடர்பாளர், “ஆயில் டேங்கரில் லோகோ வரைவது எமது போராளிகளின் பணியல்ல. நாம் கைப்பற்றிய டேங்கர் லாரி, இந்த லோகோ சகிதம் இருந்தது என்பதே நிஜம்” என்று தெரிவித்துள்ளார்.

சரி. அஸர்பாய்ஜான் குடியரசு அரசின் செய்தி தொடர்பாளர் நிஜாமிடின் குலியேவ், “அசலுக்கும் நகலுக்கும் உள்ள வித்தியாசத்தை எமது நிபுணர்கள் கண்டு பிடித்தபின் தாரம் தருகிறோம்” என்கிறாரே… வித்தியாசத்தை கண்டுபிடிக்காமல், அது போலி லோகோ என்று எப்படி அடித்துச் சொல்கிறார்?


Monday, January 6, 2014

துபாயில் வீடு வாங்கினால் லம்போகினி கார் இனாம்! அருகே உள்ள நங்கை எந்த கணக்கு?

துபாயில் வீடு வாங்கினால் லம்போகினி கார் இனாம்! அருகே உள்ள நங்கை எந்த கணக்கு?




வசிப்பதற்கு ஒரு அட்டகாசமான பெந்த்ஹவுஸ் வாங்கும் திட்டம் உங்களுக்கு உள்ளதா? அதை அந்தப் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம்… ஒரு லம்போகினி ஆடம்பர கார் வாங்கும் பிளான் உள்ளதா? அதை, இந்தப் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது கேள்வி, சின்ன வயதில் மாங்காய்க்கு கல் எறிந்திருக்கிறீர்களா? ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தீர்களா?

இல்லை என்றால் கவலை வேண்டாம். இப்போது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். ஆனால் அதற்கு நீங்கள் துபாய் போக வேண்டியிருக்கும்! (ஏங்க.. போகுமிடம் துபாய். ஜாக்கிரதையாக மாங்காயை மட்டும் அடியுங்க. மாங்கனி கன்னத்தை பார்த்து கண் அடித்தால், கல்லால் அடித்து கொல்லும் தண்டனை இன்னமும் இருக்கிறதாம்)

ஒரு கல் – ரெண்டு மாங்காய் டீல் என்ன?

தமாக் பெந்த்ஹவுஸ் (Damac penthouse) வீடு வாங்கும் கஸ்டமர்களுக்கு, புத்தம் புதிய லம்போகினி கார் இனாமாக கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளது ஒரு நிறுவனம்! துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்காக தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அதற்காக, வீடு வாங்கும் ஆட்களின் பெயர்கள் எல்லாவற்றையும் சீட்டில் எழுதி, குலுக்கிப்போட்டு, அதிஷ்டசாலியாக சித்தப்பாவின் பெயரை எடுக்கும் லோக்கல் கேம் அல்ல இது. வீடு வாங்கும் அனைவருக்கும் கார் இனாம் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த டீலில் ஒரேயொரு கேட்ச், பெரிய வீடுகள் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே, லம்போகினி கார் கொடுப்பார்களாம். மற்றையவர்களுக்கு என்ன,  மந்தாகினியா?

சேச்சே, சிறிய சைஸ் வீடுகள் வாங்கினாலும் கார் இனாம் உண்டு. BMW அல்லது மினி கூப்பர் கார் கிடைக்கும் என அறிவித்துள்ளது ரியல் எஸ்டேட் நிறுவனம்!

லம்போகினி கார் சூப்பராக உள்ளதை, மேலேயுள்ள போட்டோவில் பார்த்திருப்பீர்கள். அந்த போட்டோ, துபாயில் கார் கொடுக்கும் தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்ட போட்டோ அல்ல. “கார் மட்டும்தான் கொடுக்கிறார்கள், அப்புறம் எதற்காக அம்மிணி போட்டோவையும் மேலே போட்டிருக்கிறீர்கள்?” என்று நீங்கள் எம்முடன் சண்டைக்கு வந்தால்,  அதற்கும் ஒரு பதில் எம்மிடம் உள்ளது.

துபாயில் கார் கொடுக்கும் தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் இலவச கார் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பிலும் ஒரு அம்மிணியின் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை 5-வது போட்டோவில் பார்க்கவும்.

நாங்களாவது பரவாயில்லை, அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காரைவிட நங்கையின் போட்டோ பெரிதாக இருக்கிறது! (வீடு வாங்கினால் இனாம், நங்கையா? காரா? என்ற சந்தேகம் எழுவதை தடுக்க முடியாது)

துபாய் நிறுவனம் வெளியிட்டுள்ள சில போட்டோக்களை இணைத்துள்ளோம். முதலில் அவர்கள் இனாமாக கொடுக்கும் காரின் போட்டோக்களை பாருங்கள்… அதன்பின், அந்த காரை இனாமாக பெற, நீங்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய வீட்டின் போட்டோக்களை பாருங்கள்.

இதுதான் நாம் போட்ட போட்டோ வரிசை. இந்த போட்டோ வரிசையை  எப்போது மாற்ற வேண்டும் தெரியுமா?

ஒருவேளை போட்டோக்களை பார்த்துவிட்டு வாங்கும் ஆசை ஏற்பட்டு, அதற்காக சம்சாரத்திடம் அனுமதியும் பெற வேண்டிய கட்டாயம் இருந்தால்… எமது ஆலோசனை, சம்சாரத்திடம் முதலில் வீட்டின் போட்டோக்களை காட்டுங்கள்…  அப்புறம் காரின் போட்டோக்கள்…  அம்மிணியின் போட்டோ வேண்டாம்!









“செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” மிரளும் அமெரிக்கர்கள்!

“செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” மிரளும் அமெரிக்கர்கள்!




“காலநிலை அறிவிப்பின்போது பொதுவாக நாம், ‘உயிர் அச்சுறுத்தல்’ (‘life threatening’) என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதில்லை. ஆனால், ஆம்.. தற்போது ஏற்பட்டுள்ளது ‘உயிர் அச்சுறுத்தல்’ என்ற நிலைமைதான்” என்கிறார், கென் சிமெஸ்கோ. இவர் அமெரிக்கா பிஸ்மார்ச் பகுதியை சேர்ந்த meteorologist.

“தற்போது வெளியே உள்ள மைனஸ்-50 டிகிரி குளிரில் உடலின் பாகங்கள் ஏதாவது தொடர்ந்து 5 நிமிடங்கள் தெரியும்படி நின்றிருந்தாலே, தோலில் frostbite ஏற்பட தொடங்கும். அந்த உடல் பகுதி தொடர்ந்து குளிரில் எக்ஸ்போஸ் செய்யப்பட்டால், மயக்கமடைந்து விழுவதுடன், உயிராபத்தும் ஏற்படலாம். அதுதான் காலநிலை அறிவிப்பில் ‘உயிர் அச்சுறுத்தல்’ என்ற எச்சரிக்கை செய்யப்படுகிறது” என்கிறார் கென்.

கடந்த இரு தினங்களாக கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கடும் மோசமான காலநிலை காணப்படுகிறது. குளிர் என்றால், உங்கவீட்டு குளிர், எங்க வீட்டு குளிர் அல்ல, நிஜமாகவே கிடுகிடுக்க வைக்கும் குளிர்.

அமெரிக்கர்களுக்கு இதில் கடும் கோபம் என்னவென்றால், கனடாவின் மத்திய பகுதியில் ஆரம்பித்த குளிர்தான் படர்ந்து, அமெரிக்காவின் சில பகுதிகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்! கனடாவின் கியுபக் பகுதிகளில் நேற்று முதலே வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தொடர்ந்து அறிவித்தபடி உள்ளார்கள்.

கனடா, டொரண்டோவில் வீதிகளில் கொட்டியிருந்த பனி தொடர்ந்து அகற்றப்பட்ட வண்ணம் உள்ள நிலையிலும், அதன்மேல் செல்லும் வாகனங்களின் அழுத்தம் காரணமாக வீதிகளில் பனி அழுந்தி கெட்டி ஐஸாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதில் வாகனங்கள் அதிகம் சறுக்க தொடங்குகின்றன.

கிழக்கு கனடாவில் உள்ளவர்களுக்கு இது ஓரளவு பரிச்சயமான காலநிலைதான் என்ன போதிலும், கடந்த பல ஆண்டுகளாக இந்தளவு மோசமான அளவுக்கு சென்றதில்லை. குளிரில் சடுகுடு விளையாடும் கனேடியர்களுக்கே இப்படி என்றால், அமெரிக்கர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என்று யோசித்து பாருங்கள்.

அதுதான், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில், ‘உயிர் அச்சுறுத்தல்’ அறிவிப்பை விடுத்துவிட்டு மிரண்டுபோய் உள்ளார்கள்! அமெரிக்க டி.வி. சேனல் ஒன்று, “செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” என்று மிரட்டுகிறது.

அமெரிக்காவின் வடக்கு டகோட்டா பகுதிகளில் காற்றுடன் சேர்ந்த குளிர் (wind chill factor) இன்றிரவு மைனஸ் 60 வரை போகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சனி ஞாயிறு தினங்களில் மத்திய கனடா, வடகிழக்கு அமெரிக்காவில் மற்றொரு பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது. 6 முதல் 12 அங்குல பனிப்பொழிவு இருக்குமாம்.

நீங்கள் வட அமெரிக்காவுக்கு (கனடா, அமெரிக்கா) வெளியே வசிப்பவராக இருந்தால், நம்மூரில் நிலைமை எப்படி என்று பார்க்க ஆவல் உள்ளவர்களாக இருப்பீர்கள் அல்லவா? இதோ, நேற்று எடுக்கப்பட்ட சில போட்டோக்களை இணைத்துள்ளோம். 



















பின்லேடனை சுட்டு கொன்றதாக கூறிய வீரர், பாய்ந்து பதுங்கினார் ஹோட்டல் ருமில்!!

பின்லேடனை சுட்டு கொன்றதாக கூறிய வீரர், பாய்ந்து பதுங்கினார் ஹோட்டல் ருமில்!!




“ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொல்வதற்காக சென்ற அமெரிக்க நேவி சீல் (Navy SEAL) அதிரடிப்படையில் நானும் ஒருவன். பின்லேடனை சுட்டு வீழ்த்தியது எனது துப்பாக்கிதான்” இப்படி தம்மைப் பற்றி பெருமையாக கூறிக்கொண்டிருந்தஅமெரிக்கர் ஒருவர், தற்போது தலைமறைவாகியுள்ளார். இவர்மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் பொழுதுபோகாமல் சும்மா வீதியில் நின்ற நபரல்ல. அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்தியவர். ஐ.நா.வின் வெளிநாட்டு பாதுகாப்பு கான்ட்ராக்ட் ஒன்றை பெற்ற நிறுவனத்தின் உரிமையாளர். ஆபிரிக்க நாடான புருண்டியில் ஐ.நா. ஆபரேஷனுக்காக வழங்கப்பட்ட இந்த பாதுகாப்பு கான்ட்ராக்ட்டின் பெறுமதி, சுமார் ஐம்பது மில்லியன் டாலர்!

இந்த நபரின் பெயர், ஏ.ஜே.டிக்கன். அமெரிக்க ராணுவத்தில் மேல் மட்டங்களுடன் நெருக்கமானவர் என தம்மை கூறிக்கொண்ட இவர், ராணுவ பயிற்சி மையம் பாணியில் அமெரிக்கா நெவாடா, கார்சன் சிட்டியில் தொடங்கினார்.



அங்கு பணியில் இணைபவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. (பக்கத்தில் உள்ள போட்டோவில், கார்சன் சிட்டி பயிற்சி மையத்தில் ஆயுதப் பயிற்சி வழங்குகிறார் ஏ.ஜே.டிக்கன்.)

இது ஒன்றும் அமெரிக்காவில் சட்டவிரோத செயல் அல்ல. இன்றைய தேதியில் பணம் கொழிக்கும் பிசினெஸ்களில் இதுவும் ஒன்று. காரணம் இப்போதெல்லாம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முதல், அமெரிக்க ராணுவம் வரை வெளிநாட்டு ஆபரேஷன்களில் தனியார் பாதுகாப்பு படைகளைதான் உபயோகிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் என்று பொதுப்படையாக கூறப்படும் துப்பாக்கி ஏந்திய நபர்களில் பலர், தனியார் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள்தான். இந்த கான்ட்ராக்ட்டுகள், பல மில்லியன் டாலர் பெறுமதியானவை.

அவர்களுக்கான ஆயுதப் பயிற்சி எல்லாமே, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தால் வழங்கப்பட்டு, ஆயுதம் கொடுத்து களத்தில் இறக்கி விடுவார்கள். சம்பளம் கொடுப்பதும், தனியார் பாதுகாப்பு நிறுவனம்தான். மொத்தமாக பல மில்லியன் டாலர் பில் போட்டு, அமெரிக்க ராணுவத்திடம் வாங்கி விடுவார்கள் நிறுவனத்தினர். ஏகப்பட்ட லாபம் அள்ளலாம்!

பொதுவாகவே, அமெரிக்க ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளே இப்படியான நிறுவனங்களை நடத்துகின்றனர்.

இப்படியான ஒரு பாதுகாப்பு நிறுவனத்தைதான் அமெரிக்கா நெவாடா, கார்சன் சிட்டியில் தொடங்கினார் ஏ.ஜே.டிக்கன்.

நிறுவனத்தை தொடங்கி, ஆயுதப் பயிற்சி கொடுக்க பணம் வேண்டுமே.. அதற்கு எங்கே போனார் இவர்?

இரு பிரபல டாக்டர்கள் பைனான்ஸ் செய்ய முன்வந்தார்கள். “நான் அமெரிக்க சீல் அதிரடிப் படையில் இருந்து ஓய்வு பெற்றவன். அத்துடன் முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி” என்று ஏ.ஜே.டிக்கன் ‘அள்ளி விட்டதை’ நம்பி இந்த இரு டாக்டர்களும், $850,000 முதலீடு செய்தனர். நிறுவனம் இயங்க தொடங்கியது. Global Resources and Logistics என்பது, நிறுவனத்தின் பெயர்.


அமெரிக்க ராணுவ கான்ட்ராக்ட்டுகளுக்கு போகாமல் வெளிநாட்டு கான்ட்ராக்ட்டுகளை ‘பிட்’ பண்ணியது இந்த நிறுவனம். அந்த வகையில் கிடைத்ததுதான் ஐ.நா. கான்ட்ராக்ட் ஒன்று. ஆபிரிக்க நாடான புருண்டியில் ஐ.நா. தமது அமைதிப் படையை இறக்கி விட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக, ஏ.ஜே.டிக்கனின் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் பணி புரிவதற்கான கான்ட்ராக்ட் அது.

அங்கேதான் இவரது குட்டு வெளிப்பட்டு விட்டது!

இப்படியான நிறுவனங்கள் தமக்கு கான்ட்ராக்ட் பிடித்துக் கொடுக்க மார்க்கெட்டிங் பிரதிநிதிகளை பணியில் அமர்த்துவார்கள். அப்படியான பணிக்கு வந்தவர்தான், காரொல் ராபர்ட்ஸ் என்ற பெண். கார்சன் சிட்டியில் உள்ள பயிற்சி மையத்தில் வழங்கப்பட்ட பயிற்சிகளை பார்த்த காரொல், ஏ.ஜே.டிக்கன் எடுத்து விட்ட கதைகளையும் நம்பினார்.

“ஆகா.. இந்த நிறுவனம் ராணுவ வர்த்தகத்தில் ஓகோ என்று வரக்கூடிய நிறுவனம்” என நினைத்து, பணியில் இணைந்து கொண்டார்.

நிறுவனத்துக்கு கிடைத்த முதலாவது கான்ட்ராக்ட்டை மேற்பார்வை செய்ய ஆபிரிக்க நாடான புருண்டிக்கு, ஏ.ஜே.டிக்கனுடன் போய் இறங்கினார் இந்தப் பெண்!

அதுவரைக்கும் எல்லாமே சரியாகத்தான் போனது. புருண்டி நாட்டு ஹோட்டல் அறையில்தான் நம்ம அதிரடிப்படை வீரரின் ‘வீரம்’ வெளிப்பட்டது.

இவர்கள் புருண்டி போய் இறங்கிய இரண்டாவது நாள் இரவு, இவங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பவர்கட் ஏற்பட்டது. ரூமுக்குள் இருந்த ஏ.ஜே.டிக்கன் மிரண்டு போனார். அமெரிக்க அதிரடிப்படைக்காக பின் லேடனையே போட்டுத் தள்ளியவராக தம்மை கூறிக்கொண்ட ஏ.ஜே.டிக்கன், பவுகட் ஏற்பட்டதும், ஒவ்வொரு ரூமாக ஓடிப் பதுங்க தொடங்கினார். “ஐயோ.. இங்குள்ள தீவிரவாத அமைப்பினர் எங்களை தேடி வரலாம்.. என்ன செய்வது? எப்படி தப்புவது?” என்றெல்லாம் புலம்பவே தொடங்கி விட்டார்.

இவருடன் சென்ற காரொல் ராபர்ட்ஸ் என்ற பெண்ணுக்கு, இந்த வீரரின் பதுங்கல்லில் சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

“அமெரிக்க நேவி சீல் படையினருக்கு வழங்கப்படும் ராணுவ பயிற்சி, உலக அளவில் உச்சக்கட்ட பயிற்சியாக கருதப்படுகிறது. அப்படி உச்சக்கட்ட பயிற்சி பெற்றதாக கூறிக்கொள்ளும் ஆள், சாதாரண பவர்கட்டுக்கே உச்சா போகும் அளவுக்கு பதறுகிறாரே.. சம்திங் ராங்” என்று நினைத்துக்கொண்ட காரொல் ராபர்ட்ஸ், அமெரிக்கா திரும்பியதும் பல வழிகளிலும் இவரது பின்னணியை ஆராயத் தொடங்கினார்.

அப்போது தெரியவந்த விபரங்கள் அவரை அதிர வைத்தன.

“பின்லேடனை சுட்டு வீழ்த்தியது நான்தான்” என்று கூறிக்கொண்டிருந்த இவர், எந்த ஒரு காலத்திலும் அமெரிக்க நேவி சீல் படையில் இருந்தவர் அல்ல. துப்பாக்கி சுடுவதை விடுங்கள், ராணுவத்தில் ரொட்டி கூட சுட்டவரல்ல இவர் என்ற விஷயம் தெரிந்தது. 57 வயதான ஏ.ஜே.டிக்கன் இதற்குமுன் பணிபுரிந்தது எங்கே தெரியுமா? பார் ஒன்றில்! அங்கு மது பரிமாறும் நபராக இருந்திருக்கிறார்.

இந்த விவகாரம் வெளியே வந்ததும், இப்போது தலைமறைவாகி விட்டார் நம்ம அதிரடிப்படை வீரர், ஏ.ஜே.டிக்கன்.

இவரால் பயிற்சி கொடுக்கப்பட்டு, புருண்டி நாட்டிலுள்ள ஐ.நா. பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களை, திருப்பி அனுப்பும் ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டார்கள். ஏ.ஜே.டிக்கன் அலாபாமா பக்கத்தில் பதுங்கியிருப்பதாக மீடியா செய்திகள் சொல்கின்றன.

பின்லேடனை வலைவீசி தேடிப் பிடித்ததுபோல, பின்லேடனை சுட்டுக் கொண்டதாக கூறிய ஏ.ஜே.டிக்கனையும் வலைவீசி தேட வேண்டுமோ சி.ஐ.ஏ.?



“இத்துபோன நடிகரை கத்தவைத்த தி.மு.க.” தே.மு.தி.க.வில் பிரேமலதா அடித்து ஆடுகிறார்!

“இத்துபோன நடிகரை கத்தவைத்த தி.மு.க.” தே.மு.தி.க.வில் பிரேமலதா அடித்து ஆடுகிறார்!




வரும் லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி வைத்துக் கொள்ளப்போவது, (கடவுளையும் மக்களையும் தவிர) யாருடன் என்ற கேள்வி பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள நிலையில், தி.மு.க.-வை போட்டு தாக்கியுள்ளார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.

தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பிரேமலதா, “கடந்த தி.மு.க. ஆட்சியில் எங்கள் திருமண மண்டபத்தை இடித்தனர்; வருமான வரி சோதனை நடத்த தூண்டினர். இதையெல்லாம் விட, ‘இத்துபோன நடிகர்’ ஒருவரை விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேச வைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேச வைத்தனர். அதை, தங்களின் டிவியில் நேரடியாக ஒளிபரப்பும் செய்து, அசிங்கப்படுத்தினர்.

தி.மு.க.வினரால் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. அதேபோல ஜெயலலிதாவும் இப்போது வழக்கு மேல் வழக்கு போட்டு வருகிறார்” என்று பேசினார்.

பிரேமலதாவின் குரல்தான் தே.மு.தி.க.வில் எடுபடும் என்றால், தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளுடனும் இவர்களது கூட்டணி கிடையாது.

சரி. தே.மு.தி.க.வில் ‘எடுபடக்கூடிய’ மற்றொரு குரல், மச்சான் சுதீஷின் குரல் அல்லவா? என்ன சொல்கிறது அந்தக் குரல்?

தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் மச்சானும் பேசினார். அவர் பேசுகையில், “எட்டு ஆண்டுகளுக்கு முன், மத்திய அமைச்சர் மகன் ஒருவரை நான் சந்தித்தேன். அப்போது அவர், “உங்கள் கட்சியின் பெயர் என்ன?” என கேட்டு என்னை கிண்டல் செய்தார். அதே நபரை சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்தேன். இருக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்த அவர், எப்படி இருக்கிறீர்கள்; விஜயகாந்தை கேட்டதாகச் சொல்லுங்கள் என்றார். இதையெல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

லோக்சபா தேர்தலின், ‘கிங் மேக்கர்’ என விஜயகாந்தை பலரும் கூறுகின்றனர். ஆனால் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர்தான், ‘கிங்’ ஆக இருப்பார்” என்றார்.

‘கிங் மேக்கர்’ என்று விஜயகாந்தை மற்றையவர்கள் சொல்வதாக கூறும் சுதீஷ், “அவர் கிங்” என்று பட்டம் சூட்டுகிறார் என்றால்… நமக்கு ஒரு கேள்வி: ‘கிங் மேக்கர்’ ஆக இருந்த கேப்டனை ‘கிங்’ ஆக மச்சான் மேக் பண்ணினால், ‘நெசமான கிங் மேக்கர்’ மச்சான் சுதீஷ் என்று அர்த்தமாகிறதே…

‘கிங்’, ‘கிங் மேக்கர்’ இருவரும், கடலில் இறங்கிய ‘வைகிங்ஸ்’ (Vikings) ஆகாதவரை சந்தோஷம்தான்!