Showing posts with label கண்டுபிடிப்புகள். Show all posts
Showing posts with label கண்டுபிடிப்புகள். Show all posts

Tuesday, November 19, 2013

பிரசவத்தை எளிதாக்க புது கருவி! அர்ஜென்டினா நபர் சாதனை

பிரசவத்தை எளிதாக்க புது கருவி! அர்ஜென்டினா நபர் சாதனை




அர்ஜென்டினாவை சேர்ந்த நபர் ஒருவர், பிரசவத்தை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன்.

இவர் பிரசவ முறையை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது பிளாஸ்டிக் பையை பயன்படுத்தி குழந்தையை மிக எளிதான முறையில் வெளியே எடுப்பது.

இந்த புதிய கருவியை பற்றி ஜோர்ஜ், தனது நண்பருடன் சேர்ந்து மகப்பேறு மருத்துவரை சந்தித்து விளக்கியுள்ளார்.

அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்க உதவினார்.

இதனை தொடர்ந்து யூடியூப்பில் இணையத்தளத்தில் சோதனையை வெளியிட்டதுடன், மிகச் சிறந்த மருத்துவரான மரியோ மரியால்டியை சந்தித்து பேச வைத்தார்.

இதுகுறித்து டாக்டர் மரியோ கூறுகையில், மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.

அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது.

இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.

ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது.

இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும்.

இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது.

இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும்.

இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக் கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.

இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.

இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகப் பிரசவம் நடந்துள்ளது.

இதனால் அறுவை சிகிச்சைகள் குறையும், இந்த முறையை இந்தியா, சீனா மற்றும் தெற்கு ஆப்ரிக்காவில் பயன்படுத்த உள்ளோம்.

இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும்.

இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து இந்த கருவியை தயாரிக்க உள்ளது. 
ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது.

Monday, October 21, 2013

வருகின்றது சூப்பர் வேக பயணிகள் விமானம்! லண்டன் – சிட்னி வெறும் 2 மணி நேரத்தில்!!

வருகின்றது சூப்பர் வேக பயணிகள் விமானம்! லண்டன் – சிட்னி வெறும் 2 மணி நேரத்தில்!!



பிரிட்டிஷ் நிறுவனம் வெர்ஜின் அட்லான்டிக்குக்கு சொந்தமான தனியார் விண்கலம் SS2, சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. மொஜாவ் பாலைவனத்தில் இயக்கப்பட்ட டெஸ்ட் பிளைட், விண்வெளி உல்லாசப் பயணத்தின் கதவுகளை திறந்து விட்டுள்ளது.

வெர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனத்தின் மற்றொரு ப்ராஜெக்ட், SS2 விண்கலம். விண்வெளியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்வதும், விண்வெளியில் ஹோட்டல் ஒன்றை அமைத்து, உல்லாசப் பயணிகளை அதில் தங்க வைப்பதும் இந்த அட்வென்சர் ப்ராஜெக்ட்டின் நோக்கம்.

மொஜாவ் பாலைவனத்தில் டெஸ்ட் பிளைட்டை செலுத்திச் சென்றவர்கள், விண்வெளி வீரர்களான மார்க் ஸ்டக்கி மற்றும், கிளின்ட் நிக்கோலஸ். SS2 விண்கலத்தை சுமார் ஒரு மணி நேரம் பறக்கவிட்டபின், பத்திரமாக தரையிறங்கினார்கள் இவர்கள்.

SS2 விண்கல சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததில், தற்போது மற்றொரு சாத்தியத்தை ஆராயத் தொடங்கியுள்ளார்கள். அது என்னவென்றால், இந்த விண்கலத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிவேக விமானங்களை தயாரிப்பது. அது நடந்துவிட்டால், நாடுகளுக்கு இடையிலான பயண நேரம், வெகுவாக குறைந்துவிடும்.

உதாரணமாக, தற்போது சோதனை செய்யப்பட்ட SS2 விண்கலத்தின் வேகத்துடன் லண்டனில் இருந்து சிட்னிக்கு (ஆஸ்திரேலியா) ஒரு அதிவேக விமானம் பறக்க விடப்பட்டால், அதன் பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக இருக்கும்!

தற்போது லண்டனில் இருந்து சிட்னிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ், அல்லது குவான்டஸ் ஏர்வேஸ் விமான சேவையில் பயணம் செய்தால் (ஏர்பஸ், அல்லது போயிங் விமானங்கள்) பயண நேரம் சுமார் 21 மணிநேரம் 30 நிமிடங்கள். அந்த பயணத்தை வெறும் 2 மணி நேரத்தில் பறக்க முடிந்தால் எப்படியிருக்கும்?

சிவில் விமானப் பயணத்தின் அடுத்த கட்டம், இதுவாகத்தான் இருக்கப் போகிறது.



ஆனால், இதில் ஒரு கேட்ச் இருக்கும். இந்த அதிவேக பயணத்துக்கான டிக்கெட் கட்டணம், வழமையான பயண டிக்கெட்டைவிட சில மடங்கு அதிகமாக இருக்கும்.

முன்பு அதிவேக சூப்பர்சோனிக் கொன்கோர்ட் விமானம் இயக்கப்பட்ட நாட்களில், பாரிஸ் – நியூயார்க் ரூட்டில் ஏர் பிரான்ஸூம், லண்டன் – நியூயார்க் ரூட்டில் பிரிட்டிஷ் ஏர்வேஸூம் சூப்பாசோனிக் விமானங்களை இயக்கின. அவற்றுக்கான கட்டணம், வழமையாக இந்த ரூட்டில் உள்ள பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் கட்டணத்தைவிட அதிகம்!

இதுவும், அப்படியொரு ‘உயர்ந்த கட்டணத்தில்’ இயக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

சரி. விமானம் ஏறத்தானே அப்படி கட்டணம். போட்டோ பார்ப்பது இலவசம் அல்லவா? SS2 விண்கல சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை தொகுத்து தருகிறோம், பார்த்து வையுங்கள்.

இன்னும் சில வருடங்களில் பயணிகள் விமானங்களும் இந்த ஷேப்பில் பறக்கப் போகின்றன. நீங்கள் முதலிலேயே பார்த்து விடுங்கள். 



Monday, September 30, 2013

நாம் கண்டுபிடித்த அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1000ஐத் தொடப் போகிறதாம்

நாம் கண்டுபிடித்த அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1000ஐத் தொடப் போகிறதாம் 




மனித வாசனையே இல்லாத அன்னிய உலகங்களைக் கண்டுபிடிக்க நாம் ஆரம்பித்து 20 வருடங்களாகி விட்டன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தொடவுள்ளது. அது சில நாட்களில் தெரியலாம் அல்லது சில வாரங்களில் தெரியலாம் என்று வி்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

மலைக்க வைக்கும் விஷயம்தான் விஞ்ஞானம். அதை விட ஆச்சரியமானது விண்வெளியியல். உலகத்தை கீழே பார்ப்பதை விட சற்று மேலே நிமிர்ந்து பாருங்கள்.. எத்தனை எத்தனை ஆச்சரியங்கள், அற்புதங்கள், அமர்க்களங்கள் நமது அண்டவெளியில் கொட்டிக் கிடக்கின்றன தெரியுமா... 

நம்மைப் போலவே யாராச்சும் எங்கேயோவது இருக்கிறார்களா என்பதை அறியும் ஆய்வுகள் பல வருடங்களாகவே நடந்து வருகின்றன. அதிலும் நம்மைப் போன்ற கிரகங்கள் வேறு உள்ளதா என்பதை அறியும் கண்டுபிடிப்புகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. இது நாள் வரை 900க்கும் மேற்பட்ட கிரகங்களை உலக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு இப்போது 1000ஐத் தொடவுள்ளதாம். 

900 அந்நிய கிரகங்கள் 

புதிய கிரகங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளை ஐந்து தகவல் தொகுப்புகளாக வகுத்துள்ளனர். அதில் நான்கு தகவல் தொகுப்புகளின் கணக்குப்படி நமது உலகுக்கு வெளியே 900 புதிய உலகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக கூறப்படுகிறது.

சரியான எண்ணிக்கை 986 

அதேசமயம், இரண்டு தகவல் தொகுப்புகளின் கணக்குப்படி, இதுவரை 986 புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

விரைவில் 1000மாவது உலகம் 

இன்னும் சில வாரங்களில் 1000மாவது உலகத்தின் கண்டுபிடிப்பு குறித்த தகவல் வெளியாகலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

92ல் கண்டுபிடிக்கப்பட்ட 2 கிரகங்கள் 

1992ம் ஆண்டு முதல் முறையாக 2 கிரகங்களை விஞ்ஞானிகள் க ண்டுபிடித்தனர். அதில் ஒன்று பல்சார் அல்லது நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வருவது தெரிய வந்தது. இந்த பல்சாரானது, பூமியிலிருந்து 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலான தொலைவில் உள்ளது.

கெப்ளர்தான் நிறைய கண்டுபிடித்தது 

நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கிதான் பெரும்பாலான புதிய கிரகங்களைக் கண்டுபிடித்த பெருமைக்குரியதாகும்.

3588 புதிய விஷயங்களைக் கண்டுபிடித்த கெப்ளர் 

கெப்ளர் தொலைநோக்கியானது, 3588 பூமிக்கு அப்பால் உள்ள புதிய விஷயங்களை நமக்கு அடையாளம் காட்டி அசத்தியுள்ளது.


160 பில்லியன் உலகங்கள் இருக்கிறதாம் 

ஆயிரம் உலகங்கள் குறித்துத்தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். ஆஐனால் நமது பால்வழிப் பாதையில் கிட்டத்தட்ட 160 பில்லியன் புதிய உலகங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுத்துகின்றனர். எங்கேயாச்சும் தண்ணீர், காத்து நல்லதா இருந்தா சொல்லுங்கப்பா... பொல்லூஷன் மற்றும் பொலிடீசியன்களால் பூமி ரொம்பவே நாறிப் போய்க் கிடக்கு... இடத்தை மாத்தனும்.  


Tuesday, July 23, 2013

இனி, ஏவிய கால் மணி நேரத்தில் விண்ணைத் தொட்டு விடுமாம் ராக்கெட்கள்

இனி, ஏவிய கால் மணி நேரத்தில் விண்ணைத் தொட்டு விடுமாம் ராக்கெட்கள் 




வெறும் 15 நிமிடத்தில், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ராக்கெட் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். பொதுவாக பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப் படும் ராக்கெட்டுகளின் பயணநேரம் பல மணி நேரங்கள் ஆகும். ஆனால், ராக்கெட்டுகளின் பயண நேர விரயத்தை குறைக்கும் வகையில் மாற்றுப் பாதையினை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

தற்போது, அம்முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர் விஞ்ஞானிகள். அதாவது, காற்றை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ராக்கெட்டின் உதவியால் 15 நிமிடத்தில் விண்வெளியை அடைய முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சாப்ரீ என்ஜின்... 

ஒலியை விட வேகமாக சீறிப்பாயும் அதிநவீன 'சாப்ரீ' என்ஜின் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள். இவற்றைப் பயன் படுத்தி உருவாக்கும் ராக்கெட்டுகளை சாதாரண விமான ஓடுதளத்திலேயே பயன் படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

ஒலியை விட 5 மடங்கு வேகம்... 

மேலும், இந்த ராக்கெட் ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்தில் இயங்க கூடியது. அதாவது, கிட்டத்தட்ட மணிக்கு 19 ஆயிரம் மைல் (30,577 கி.மீ) வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன் மிக்கது.

ஓட்டுநர் தேவையில்லை... 

ஆளின்றி இயங்க கூடிய, மிகவும் எடை குறைந்த இந்த ராக்கெட் 15 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரவ ஹைட்ரஜன்... 

‘சாப்ரீ' என்ஜின் இயங்க திரவ ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிபொருளை எடுத்துக் கொள்கிறது.


ஆப்பிள், தக்காளி தோலை தூக்கி போட்றாதீங்க...: வாட்டர் பில்டரா பயன்படுத்தலாம்!

ஆப்பிள், தக்காளி தோலை தூக்கி போட்றாதீங்க...: வாட்டர் பில்டரா பயன்படுத்தலாம்!


ஆப்பிள் மற்றும் தக்காளியின் தோலை பயன் படுத்தி குடிநீரை சுத்திகரிக்க இயலும் என சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளார் கண்டு பிடித்துள்ளார். தற்போது, நீரை சுத்திகரிக்க பல்வேறு முறைகள் கடைபிடிக்கப் படுகின்றன.

ஆனால், அவற்றின் விலைகளோடு ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வறியவர்கள் அவற்றை வாங்கிப் பயன் படுத்துவது என்பது பெரும்பாலும் சாத்தியமில்லாத ஒன்றாகி விடுவது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம், பெரும்பான்மையான நோய்கள் நீர் மூலமாக பரவுகின்றன என்பதும் நிஜம். எனவே, தற்போது சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த செலவில் தண்ணீரை சுத்தப்படுத்தும் முறைமையைக் கண்டறிந்துள்ளனர்.

குடிநீர் சுத்திகரிப்பு... 

சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளவர் ராம்கிருஷ்ணா மல்லம்பட்டி. அடிப்படையில் இவர் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது கண்டுபிடிப்பு தான் தோல்கள் மூலம் நீரை தூய்மையாக்கும் தொழிற்நுட்பம்.

நீக்கும் தன்மை... 

பொதுவாக, தக்காளி தோல்கள் மாசுபட்ட தண்ணீரின் கழிவு பொருட்கள், அதில் கரைந்திருக்கும் ரசாயனம் மற்றும் சாய பொருட்கள், பூச்சி கொல்லி மருந்துகளை நீக்கும் தன்மை கொண்டவை.

உறிஞ்சும் திறன்... 

அதே போன்று ஆப்பிள் தோலுக்கு தண்ணீரில் கரைந்து கலந்திருக்கும் கழிவுகளை உறிஞ்சும் சக்தி உள்ளது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீர் சுத்திகரிப்பு... 

ஆகவே, இவற்றின் தோல்களைப் பயன் படுத்தி அசுத்தமாக உள்ள நீரை குடிநீராக மாற்ற இயலும் என நிரூபித்திருக்கிறார் ராமகிருஷ்ணா.

குறைந்த செலவு... 

இந்தப் புதிய தொழிற்நுட்பத்தின் மூலம் நீரைத் தூய்மைபடுத்த மிகக் குறைந்த அளவு செலவே ஆகும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் இவர்.

கரண்ட் வேணும்... 

ஆனால், இவரது இந்த கண்டுபிடிப்பிற்கு மின்சாரமும், சிறிதளவு ரசாயனமும் தேவை என்பது முக்கிய விஷயம்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/23/world-scientists-purify-water-using-fruit-peels-179661.html#slide253483

Tuesday, July 16, 2013

நெப்ட்யூனின் 14வது நிலாவைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

நெப்ட்யூனின் 14வது நிலாவைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்




நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு புதிய நிலவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹப்பளி தொலைநோக்கி மூலம் இந்த புதிய நிலா குறித்த இருப்பு தெரிய வந்துள்ளது. நெப்ட்யூனைச் சுற்றி இது வலம் வந்து கொண்டுள்ளதாம். இது நெப்ட்யூனின் 14வது நிலாவாகும்.

நீல பச்சை கிரகம் 

நெப்ட்யூன் நீலம் மற்றும் பச்சை நிறத்திலான கிரகம் ஆகும். இந்த கிரகத்திற்கு இதுவரை 13 நிலாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஹப்பிள் கண்டுபிடித்த 14வது நிலா 

இந்த நிலையில் நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு நிலவைக் கண்டுபிடித்துள்ளனர் ஹப்பிள் துணையுடன். இது அக்கிரகத்தின் 14வது நிலாவாகும்.


நிலாவுக்குப் பெயர் வச்சாச்சு 

இந்த நிலாவுக்கு S/2004 N 1 என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலவின் சுற்றளவு 19 கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நெப்ட்யூனின் நிலவுகளிலேயே இதுதான் சிறியதாம்.



மங்கலாத் தெரியுதே... 

இந்த நிலவானது சிறிதாகமட்டுமல்லாமல், மங்கலாகவும், பிரகாசம் இன்றியும் காணப்படுகிறது. ஒரு நட்சத்திரத்தை விட 100 மடங்கு டிம்மாகவும் இது காணப்படுகிறது.


ஜூலை 1ம் தேதி கண்டுபிடித்தார்கள் 

கடந்த ஜூலை 1ம் தேதி இந்த நிலாவைக் கண்டுபிடித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/16/world-new-neptune-moon-discovered-179241.html#slide244530

Thursday, June 6, 2013

பின்லேடனை போட்டுத் தள்ள உதவிய 'நைட்விஷன்' டெக்னாலஜி: உருவாக்கிய ஈழத் தமிழருக்கு யு.எஸ். விருது!

பின்லேடனை போட்டுத் தள்ள உதவிய 'நைட்விஷன்' டெக்னாலஜி: உருவாக்கிய ஈழத் தமிழருக்கு யு.எஸ். விருது!



அல்குவைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு உதவிய நைட்விஷன் டெக்னாலஜியை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'சாம்பியன் ஆப் சேஞ்ச்' விருது வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க சீல் படையினர் இரவோடு இரவாக ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பிச் சென்று அதிரடி ரெய்ட் நடத்தி சுட்டுக் கொலை செய்தனர்.

இந்த ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்ட நைட் விஷன் தொழில்நுட்பக் கருவிகளை பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். இவர் அமெரிக்காவின் சிகாகோவில் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

செமி கண்டக்டர் ஆராய்ச்சியாளரான இவர் mercury cadmium telluride (MCT) என்ற ரசாயனத்தைக் கொண்டு உருவாக்கிய நைட்விஷன் தொழில்நுட்பம் சீல் படையினருக்கு பெரும் உதவியாக இருந்தது.

நிலா வெளிச்சம் கூட இல்லாத அமாவாசை நாளில் அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த இந்தத் தொழில்நுட்பம் உதவியது. இது மிக மிகச் சிறிய அளவிலான ஒளியைக் கூட பல்லாயிரம் மடங்கு அதிகப்படுத்தும் தொழில்நுட்பமாகும்.

இந் நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இவரது தொழில்நுட்பம் ஒசாமாவைக் கொல்ல உதவிய தவல் வெளியே தெரியவந்தது.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம், அணு மின் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்றவர். பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி டாட் பார்க் கூறுகையில், பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் போன்ற அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தது பெருமைக்குரியது என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/06/world-osama-killing-us-names-tamil-scientist-176715.html

Friday, May 3, 2013

ஹலோ, நான் கிரகாம் பெல் பேசறேன்...

ஹலோ, நான் கிரகாம் பெல் பேசறேன்...



தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல். தொலைபேசிக்குப் பின் ஒலி பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட கிரகாம் பெல் தனது குரலை ஒரு தகட்டில் பதிவு செய்து வைத்தார். அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை, கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர்.

தொலைபேசி கண்டுபிடிப்புக்காக அறியப்பட்டிருந்தாலும், கிரகாம் பெல் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பல இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளார்.

அலெக்சாண்டர் கிரகம் பெல் 1847-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள் வரிசையில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் 1876-ம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட அடிகோலினார். .

தொலைபேசி கண்டுபிடித்த பின் 9 வருடம் கழித்து அவர் புதிய முயற்சியாக, குரலை பதிவு செய்யும் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இவர் 1885-ம் வருடம் ஏப்ரல் 15-ம் தேதி அவரது குரலை மெழுகு தடவிய காட்போர்ட் தகட்டில் பதிவு செய்துள்ளார்.

இது அமெரிக்காவில் உள்ள சுமித் சோனியன் அருங்காட்சியகத்தில் பழமையான ஒலித் தகடுகள் பாதுகாக்கும் பிரிவில் 138 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை, கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர். அதில் அவர், 'கேளுங்கள் என் குரலை - அலெக்சாண்டர் கிரகாம் பெல்' என்று கூறியுள்ளார்.

மேலும் இதில் வரிசையாக எண்களை அவர் கூறியுள்ளார். அத்துடன் 'மூன்றரை டாலர்கள்', 'ஏழு டாலர்கள் மற்றும் 29 சென்ட்டுகள்' என்று பல பண மதிப்புகளையும் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் இதனை வணிக விசயங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

6 அங்குல எலும்புக்கூடு பாரிய தலையுடன் மீட்பு - மனிதனுடையதாம்!

6 அங்குல எலும்புக்கூடு பாரிய தலையுடன் மீட்பு - மனிதனுடையதாம்!


சுமார் 10 வருடங்களுக்கு முன் சிலியின் அதாகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எலும்புக்கூடு எச்சமானது மனிதனுக்குரியது என்பதை மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டு இந்த விநோத தோற்றமுடைய சிறிய எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அது வேற்றுக்கிரக வாசிகளுக்குரியது அல்லது கருக்கலைப்புக்குள்ளான சிசுவுக்கோ, குரங்கிற்கோ உரியது என கருதப்பட்டது.

அதாகமா ஹூமனொயிட் என பெயர் சூட்டப்பட்ட இந்த இந்த எழும்புக் கூட்டு எச்சம் அத என அழைக்கப்பட்டது. இந்நிலையில், மேற்படி எலும்புக்கூட்டின் என்பு மச்சையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின் பின், அது 6 அல்லது 8 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த மனித சிறுவனுக்குரியது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வானது அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது.


Friday, April 12, 2013

நோ டயட்... வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'

நோ டயட்... வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'


உடல் பருமனை குறைக்க உதவும் மைக்ரோ சிப் மின்னனுக் கணினிச் சில்லு ஒன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் அதை விரைவில் முழுமையாக ஆய்வு செய்த பின் வெளியிடும் போது மனித குலத்திற்கே பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மைக்ரோ சிப்களை உடலில் பொருத்திக் கொண்டவருக்கு அதிகம் பசிக்காது என்பதால் அறுவை சிகிச்சையெல்லாம் செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

எப்படா வரும் இந்த மைக்கிரோ சிப், என்று பலர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Tuesday, March 19, 2013

உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...

உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...


நாம் என்னதான் அறிவியல் யுகத்தில் இருந்தாலும் இதற்கு புள்ளையார் சுழி எங்கிருந்து வந்தது? நமது மூதாதையர்கள் விட்டுச்சென்ற அவர்களின் அறிவை நாம் தூசி தட்டிப் பயன்படுத்துகிறோம் என்றுசொன்னால் அது மிகையாகாது.

அவர்கள் கண்டுபிடித்தவைகளே இன்று மறுவடிவமெடுத்துள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. அவர்கள் கண்டுபிடித்த பல உக்திகள் இன்றைய உலகை மாற்றியுள்ளது என்பதே நிதர்சனம். அப்படி உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள் இங்கே!



உழுதல்:

இன்றளவிலும் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள இந்த உழுதல் முறைதான் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விவசாயம் செய்வதை எளிமையாக்கியதும் இம்முறையே! ஆனால் இன்று பல்வேறு வளர்ச்சியில் இருக்கும் உழுதலின் நிலையும், உழவனின் நிலையும் வருங்காலத்தில் கேள்விக்குறியுடனே இருக்கும்...

சக்கரம்:
சாதாரணமாக பார்த்தால் இது வெறும் சக்கரம் தான். ஆனால் இது இல்லாமல் எதையாவது நினைத்துப் பார்க்க இயலுமா? வாகனங்கள் சக்கரம் இல்லாமல் இயங்குமா? இந்த சக்கரம் 3100 B.C யில் கண்டுபிடிக்கப்பட்டவை.


இன்டர்நெட்:

சாப்பாடு கூட இல்லாமல் பலரால் சில தினங்கள் உயிர்வாழமுடியும். ஆனால் இன்டர்நெட் இல்லாமால் இருக்க முடியாது என்பார்கள் அவர்கள். அந்த அளவிற்கு மனித வாழ்வில் முக்கியப்பங்குவகிக்கிறது இன்டர்நெட்! இதை கண்டறிந்தவர்களுக்கு ஒரு சல்யூட்!


குளிர்சாதனப் பெட்டி:

ஆண்களின் பார்வையில் இந்த குளிர்சாதனப் பெட்டி என்பது, பணத்தை வீணடிக்கும் ஒரு ஆடம்பர டப்பாதான். ஆனால் பெண்கள் இந்த குளிர்சாதனப் பெட்டியை தயிர், பால், காய்கறிகள், இவ்வளவு ஏன் இட்லி மாவை பாதுகாக்கும் பொக்கிசமாகவே கருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் காலங்களில் அதிகம் தேவைப்படும் ஒரு பெட்டி. ஆனால் பயன்படுத்துவதற்கு 'பவர்தான்' இருப்பதே இல்லை!


ஸ்டீம் என்ஜின்:

அந்தக்காலத்தில் ஒரு பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்வது மிகவும் கடினவாகவும், மெதுவாகவும் இருந்தது. அந்த சூழலில்தான் இந்த ஸ்டீம் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டு, சற்றே வேகமானது பிசினஸ்!


அச்சிடும் இயந்திரம்:

ஆயிரம் வருடங்களுக்கும் முன்பே சீனர்கள் காகிதங்களை கண்டறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. காகிதங்களில் அச்சிடுவதற்கு இந்த அச்சிடும் இயந்திரம் பயன்பட்டது. இதனால்தான் தகவல்தொடர்பும் விரிவடைந்தது என்றே சொல்லலாம். செய்திகளை காகிதங்களில் அச்சிட்டது, அது இன்று இணையவழி செய்தியாக மாறியதும் தொழில்நுட்பத்தின் உந்துதலே!


 தகவல்தொடர்பு சாதனங்கள்:

இன்றைய உலகம், மொபைல் போன், டிவி,ரேடியோ போன்றவையெல்லாம் இல்லாமல் வாழவே முடியாது என்கின்ற நிலையில் உள்ளது. டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். டிவியை கண்டுபிடித்தவர் லோகி பைர்ட். ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்கோனி.


மின்சார விளக்கு:

இந்த பல்ப்பை கண்டுபிடித்தவர் தாமஸ் எடிசன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது எனவும் சொல்லப்பட்டது. நினைத்துப் பாருங்கள் இந்த பல்ப் மட்டும் இல்லாமல் இருந்தால்...


வாகனங்கள் :

உலகின் முதல் வாகனத்தை உருவாக்கியவர் கார்ல் பென்ஸ் என நம்பப்படுகிறது. இதை இவர் 1885ல் உருவாக்கினார் எனவும் கூறப்படுகிறது. இவைகளில் தான் இன்றைய உலகம் நகர்த்தப்படுகிறது.


கணிப்பொறி:

கம்ப்யூட்டர் பற்றிப் படிக்காதவர்களும் கம்ப்யூட்டர் அறிவு இல்லாவதவ்ர்களும் மிக மிகக் குறைவு எனலாம். அதிக அளவில் வளர்ச்சிபெறும் துறையில் முக்கியமான இடத்தில் கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளே உள்ளன.














Wednesday, January 2, 2013

செல்களின் பெண் என வர்ணிக்கப்பட்ட விஞ்ஞானி காலமானார்

செல்களின் பெண் என வர்ணிக்கப்பட்ட விஞ்ஞானி காலமானார்



இரத்தத்தில் உள்ள செல்களை ஆராய்ச்சி செய்து புற்றுநோய்க்கான காரணிகளை கண்டறிய வழிவகுத்த இத்தாலிய நாட்டு பெண் விஞ்ஞானி ரீட்டா லெவி மோண்டால்ச்சினி நேற்று காலமானார்.
இத்தாலி நாட்டின் உள்ள வடக்கு தூரின் பகுதியில் 1909ம் ஆண்டு வசதியான யூத குடும்பத்தில் பிறந்தவர் ரீட்டா மெலவி மோண்டால்சினி.

கல்லூரிப்படிப்பை முடித்து மருத்துவ பட்டம் பெற்ற போதும் மருத்துவ ஆராய்ச்சியை தொடரவிடாமல், இத்தாலிய பாசிஸ்ட் அரசு அவருக்கு தடை விதித்தது.

இந்த தடையையும் மீறி ரத்தத்தில் உள்ள செல்களை பற்றி அவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அமெரிக்காவின் உயிரியல் ஆராய்ச்சியாளர் ஸ்டான்லி கோஹன் என்பவருடன் இணைந்து நடத்திய புற்றுநோய் ஆராய்ச்சிக்காக, 1986ம் ஆண்டு உலகின் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரது ஆராய்ச்சிக்கள் மருத்துவ உலகுக்கு கொடையாக மாறிய பின்னர், இத்தாலியின் உயர்ந்த ஆராய்ச்சியாளராக கௌரவப்படுத்தப்பட்டார்.

இவர் 100 வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சியிலேயே தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று உறங்கிய நிலையிலேயே காலமானார்.

'செல்களின் பெண்' என இத்தாலியர்களால் அழைக்கப்படும் லெவியின் மரணம், மனித குலத்திற்கு மாபெரும் இழப்பாகும் என ரோம் நகரின் மேஜர் கியானி அலெமனோ தெரிவித்துள்ளார்.

'20 வயதிலிருந்ததை விட 100 வயதில் எனது சிந்தனை மிக உச்சமாக இருக்கிறது.

இதற்கு காரணமான அனுபவத்திற்கு நன்றி சொல்கிறேன்' என ஒரு பேட்டியில் லெவி தெரிவித்திருந்தார்.







Tuesday, December 11, 2012

புதிய மற்றும் பழைய உலக அதிசயங்கள் 7 Part 1

புதிய மற்றும் பழைய உலக அதிசயங்கள் 7   Part 1


நமக்கெல்லாம் புதிதாக உள்ள உலக அதிசயங்களைதான் பெரும்பாலும் தெரிந்திருக்கும் …. ஆனால் பண்டைய உலக அதிசயங்களும் பிரமிக்க தக்கதாக உள்ளது …. அவற்றையும் இங்கே உங்கள் பார்வைக்காக முதலில் வைத்து தொடர்ந்து புதிய ஏழு அதிசயங்களையும் பார்வையிடலாம் ….
பண்டைய உலக அதிசயங்கள்

பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது எனினும், இவை பற்றிய குறிப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
பண்டைய உலக அதிசயங்கள் ஏழு


பண்டைய உலக அதிசயங்கள். வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழ். கிசாவின் பெரிய பிரமிட், பபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, ஆர்ட்டெமிஸ் கோயில், மௌசோல்லொஸின் மௌசோலியம், ரோடொஸின் கொலோசஸ், அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம்.14ம் நூற்றாண்டை சேர்ந்த இடாய்ச்சு ஓவியர் மார்த்தன் வான் யீம்சூகெர்க் வரைந்தது.

தற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது.

1) கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய பாரோ (அரசன்) கூபுவின் சமாதியாகும் இது. கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

2) பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.

3) ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய கிரீஸில், கி.மு ஔஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் செதுக்கப்பட்டது.

4)ஆர்ட்டெமிஸ் கோயில், கி.மு 350ல், இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.

5) மௌசோல்லொஸின் மௌசோலியம், காரியாவின் பாரசீக சத்ரப்பினால், ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.

6) ரோடொஸின் கொலோசஸ், ஹெலியோசின் பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு 280ல் உருவாக்கப்பட்டது.

7) அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம், இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டது.

இவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சி யொன்றினால் விழுந்துவிட்டது.

01) கிசாவின் பெரிய பிரமிட் (பண்டைய உலக அதிசயம்)
கிசாவின் பெரிய பிரமீடு (அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கிசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே. இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதும் இதுவேயாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கட்டிமுடிக்கப்பட்டது, கிமு 2560 என்று கணக்கிடப்பட்டுள்ளது
 
கி.மு 2560 இல் கட்டப்பட்ட கிசாவின் பெரிய பிரமிடு கி.பி 2005 ஆம் ஆண்டு தோற்றம்

பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 ஹெக்டேயர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் சரிந்துள்ளன.

பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு தொன்கள் வரை நிறையுள்ள, சுண்ணக்கல், பசோல்ட், கருங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் தொன்கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே எகிப்தியப் பிரமிட்டுக்களுள் மிகப் பெரியது. (மெக்சிக்கோவிலுள்ள சோலுலாவின் பெரிய பிரமிட் கன அளவில் இதைவிடப் பெரியது.) )
வரலாறும் விளக்கமும்


கிசாவின் பெரிய பிரமிட்19 ஆம் நூற்றாண்டு stereopticon அட்டைப் புகைப்படம்
இது 4வது வம்ச எகிப்திய பாரோ மன்னனான கூபுவின் சமாதி என்றும் இதன் கட்டுமானம் 20 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூபுவின் தலைமை பணியாளரான ஹேமன் அல்லது ஹெமயுனு என்றழைக்கபட்டவரால் இந்த பிரமீடு வடிவமைக்கபட்டிருக்கலாம். உண்மையில் கிசாவின் பெரிய பிரமீடு 146.5மீட்டர் உயரம் உடையதாகும். ஆனால் காலத்தால் ஏற்பட்ட அறிப்புகளாலும் இதன் மேல்முனையில் உள்ள தலைமை கல்லின் சேதத்தினாலும் இதன் தற்போதய உயரம் 138.8மீட்டராக உள்ளது. இதன் ஒவ்வொரு பக்கவாட்டு அளவானது 230.4மீட்டர்களாகும். கிசா பிரமிடின் மொத்த அடர் எடை 5.9மில்லியன் என அளவிடப்பட்டுள்ளது. இதன் உள்ளீடோடு சேர்த்து இந்த பிரமீடிங் கன அளவானது 2500000 கன மீட்டர்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவீடுகளின் படிக்கு இதனை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயிருக்கலாம் எனவும் அளவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானத்தின் பொழுது தினசரி 800 தொன்கள் அளவுள்ள கட்டுமான கற்களை நிறுவியிருக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல 2.3 மில்லியன். இதன் முதல் நுணுக்க மதிப்பீடானது எகிப்திய வரலாற்றின் ஆராய்ச்சியாளரான சர் ப்ளிண்டேர்ஸ் பெற்றி என்பவரால் 1880 – 82 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது.
கட்டுமான பொருள்கள்

கிசா பிரமீடு 2.3 மில்லியன் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அருகில் உள்ள கற்க்குவாரியில் இருந்து எடுத்துவரப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது. அரசனின் பகுப்பறையை சுற்றிலும் 20 முதல் 80 தொன்கள் எடையுள்ள மிகப்பெரிய கட்டுமான கற்களானது அமைக்கப்பட்டுள்ளன அவை அனைத்தும் 500 மைல்களுக்கு அப்பாலுள்ள அஸ்வான் எனுமிடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளன. பாறைகளில் வரிசையாக சிறு துளையிட்டு அந்த துளைகளில் மரத்தாலான ஆப்புகளை அந்த துளைகளில் இறுக்கி அவற்றின் மீது நீரை ஊற்றும்போது மரம் ஈரத்தின் காரணமாக உப்பலாகி பாறைகளில் பெரிய விரிசலை ஏற்படுத்துகிறன இந்த பிரபலமான முறைதான் பழங்கால எகிப்தியர்கள் கற்களை வெட்டி எடுக்கவும் உதவியிருக்கிறன. இப்படி வெட்டி எடுக்கப்பட்ட பெரிய கற்களானது படகுகளை மூலம் நைல் நதியின் வழியாக கட்டுமான இடங்களுக்கு இடம்பெயர்த்தபட்டிருக்கிறன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட 5.5 மில்லியன் தொன்கள் எடையுள்ள சுண்ணாம்பு கற்களும் 8000 தொன்கள் எடையுள்ள கிரானைட் கற்களும் 500000 தொன்கள் எடையுள்ள சாந்து கலவையும் இதன் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப்பட்டுள்ளன.

வார்ப்பு கற்கள்


இந்த பிரமிடின் கட்டுமான முடிவின் உச்சமாக வார்ப்பு கற்கள் உள்ளன வரப்பு கற்கள் என்பன சாய்வு முகப்புடைய தட்டையான மேல்பரப்புடைய கற்கள் ஆகும். உயர் தரத்தில் மெருகேற்றப்பட்ட வெள்ளை சுண்ணாம்பு கற்கள் ஆகும். மிக கவனமாக ஒரே சாய்கோணத்தில் வெட்டப்பட்ட இந்த சுண்ணாம்பு கல்லானது பிரமீடுக்கு தேவையான வடிவத்தை கொடுக்கிறது. இன்றைய நிலையில் உள்பக்கமாக அமைக்கபெற்ற வர்ப்புகர்களின் அடிப்பாகங்கள் மட்டுமே பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன வெளிப்பக்கமாயிருந்த வழவழப்பான வார்ப்பு கற்கள் அனைத்தும் கி.பி.1300இல் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அழிந்துவிட்டன. பின்னாளில் அவற்றை கொண்டு தான் பஹ்ரி வம்சாவழியில் வந்த பஹ்ரி சுல்தான் அன்-நசிர் நசிர்-அத்-தின் அல்-ஹசன் என்பார் 1356இல் கெய்ரோவில் மசூதிகள் கட்டினார். இன்றும் இந்த மசூதிகளின் கட்டுமானத்தில் இந்த பிரமிடின் வார்ப்பு கற்கள் காணப்படுகிறன.


02) பபிலோனின் தொங்கு தோட்டம் (பண்டைய உலக அதிசயம்)


பபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின்தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பபிலோனின் சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுச்சட்னெஸ்ஸாரால் (Nebuchadnezzar) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.

ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை




03) ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை (பண்டைய உலக அதிசயம்)






 ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை (Statue of Zeus at Olympia) கிமு 433 இல் பீடியாஸ் என்னும் கிரேக்கச் சிற்பியால் கிரீஸ் நாட்டில் செதுக்கப்பட்டது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிபி 394 இல், இது கொன்ஸ்தந்தினோப்பிள் (தற்கால இஸ்தான்புல்) நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும், அங்கு தீக்கு இரையானதாகவும் சொல்லப்படுகிறது.


இந்தச் சிலை, இதற்கெனக் கட்டப்பட்ட கோயிலின் நிரலின் முழு அகலத்தையும் நிரப்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. சமகால மூலங்களின்படி, இது 12 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சேயுஸ் தந்தத்தில் செதுக்கப்பட்டு, யானைத் தந்தம், தங்கம், கருங்காலி போன்றவற்றாலும் விலைமதிப்பற்ற கற்களாலும் இழைக்கப்பட்ட செடார் மரச் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்தது. சேயுஸின் வலக்கரத்தில், வெற்றிக் கடவுளான (பெண்) நிக்கேயின் சிறிய சிலையும், இடக்கரத்தில் கழுகும் இருந்தது.


04) ஆர்ட்டெமிஸ் கோயில் (பண்டைய உலக அதிசயம்)


துருக்கியின் இசுத்தான்புல் நகரில் உள்ள மினியாதுர்க் பூங்காவில் காணப்படும் ஆர்ட்டெமிசு கோயிலின் மாதிரி வடிவம்.
ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அத்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. வெண்கலக் காலத்திலேயே ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.


கல்லிமாக்கசு என்பார் தமது பாடல்களில் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இவ்விடத்தின் தோற்றத்தை கிரேக்கத் தொன்மங்களில் வரும் அமேசோன்களுடன் தொடர்புபடுத்தி உள்ளார். இவர்களுடைய வழிபாடு உருவ வழிபாடாக இருந்ததாக அவர் கற்பனை செய்தார். கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று. உலக அதிசயமாகக் கரிதப்பட்ட புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத் திட்டம் முதலில் கிரேத்தக் கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது மகன் மெத்தாசெனசு என்பவராலும் வடிவமைத்துக் கட்டப்பட்டடது.
ஆர்ட்டெமிஸ்

ஆர்ட்டெமிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு முதன்மையான பெண் கடவுள் ஆவார். இவர் ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் அப்போலோவும் இரட்டையர்கள். பிறப்பு, அறுவடை, இயற்கை ஆகியவற்றின் கடவுள ஆவார். இளம்பெண்களைக் காப்பவராகவும் இவர் விளங்குகிறார். இவர் கைகளில் வில்- அம்பு ஏந்திக் காணப்படுவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் டயானா.


Friday, November 30, 2012

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - பாகம் 10

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - பாகம் 10

கடந்த அத்தியாயத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்







மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இதை ஆராய்ந்து பார்த்தால், பலமான பாதுகாப்புகளுடன் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் உலகம் அழியும்போது, பலர் பாதுகாப்பாக வாழும்படி அமைக்கப்படுகிறது எனத் தெரிய வருகிறது. அதாவது ஒரு நட்சத்திர விடுதியின் வசதிகளுடன் கூடிய பல அறைகளுடன் இது அமைக்கப்படுகிறது. இதை யார் அமைக்கிறார்கள்? எதற்கு அமைக்கிறார்கள் என்ற எந்தக் கேள்விக்கும் அங்கு யாரும் பதில் சொல்லத் தயாரில்லை. எல்லாமே மர்மங்களாக இருக்கின்றன.

கட்டடம் கட்டப்படும் இடத்தில், ‘New World Airport Commission’ என்னும் ஸ்தாபனத்தால் கட்டடம் கட்டப்படுகிறது என்று எழுதப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஸ்தாபனம் பற்றி ஆராய்ந்தால், அப்படி ஒரு ஸ்தாபனம் அமெரிக்காவில் சட்டரீதியாக, எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அந்தக் கல்வெட்டில் உள்ள சின்னமும், ‘நியூ வேர்ல்ட் ஆர்டர்’ (New World Order) என்னும் பெயரும் எமக்கு முன்னரே பரீட்சயமானதால், பல உண்மைகளையும், பயங்கரங்களையும் அவை சொல்லாமல் சொல்ல ஆரம்பித்திருக்கின்றன.


 
“அட! அவர்களா நீங்கள்?” என்ற ஆச்சரியத்துடன் இதை ஆய்வுக்குட்படுத்தியபோது, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்த விமான நிலையம் ஒன்றும் மிக முக்கியமான விமான நிலையமோ அல்லது கொலராடோ ஒரு முக்கிய மாநிலமோ கிடையாது. ஆனால் இந்த விமான நிலையத்துக்கு மிக அருகில், சமீபமாகப் பலர் வீடுகளை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்று பார்த்தால் ஒட்டு மொத்த தலையே சுற்றும் போல் உள்ளது. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் என்று நீங்கள் யார் யாரை நினைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் அங்கே வீடுகளை வாங்கியிருக்கின்றனர். யார் யார் வாங்கியுள்ளனர் என்ற பெயர்கள் கூட எனக்குத் தெரிந்திருந்தாலும், நான் அவற்றை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவில்லை. உலகின் பணக்காரர்கள் எல்லோரும், ஒரு பிரபலமே இல்லாத சாதாரண இடத்தில் வீடுகள் வாங்கியிருக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல், மிகமிக இரகசியமாக.

சொல்லி வைத்தது போல எல்லாப் பணக்காரர்களும் ஏன் டென்வெர் விமான நிலையத்துக்கு அருகில் வீடுகள் வாங்குகிறார்கள்? ஏன் விமான நிலையத்துக்குக் கீழே, நிலக் கீழ் சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன? உலகம் அழியும் நிலை தோன்றினால் அதிலிருந்து காப்பாற்றப்பட ஒரு சிலர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுவார்களா? அந்த ஒரு சிலரில் நானோ, நீங்களோ இல்லாமல் அதிகாரத்தில் உள்ளவர்களும், உலகக் கோடீஸ்வரர்களும் மட்டும்தான் காப்பாற்றப்படுவார்களா?
இந்தக் கேள்விகளின் அடிப்படையிலேயே, சமீபத்தில் வெளிவந்த ’2012′ என்னும் ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தை ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ என்னும் வகையிலேயே நாம் பார்த்தோம். ஆனால், ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் பற்றி விரிவாகப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம். அந்தப் படம் எடுக்கப்பட்டதே, உலகம் அழியுமானால், அரசியலில் உள்ள முக்கிய தலைவர்களும்,

கோடீஸ்வரர்களும், அதியுயர் அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் மட்டுமே அந்த அழிவில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதை மையமாக வைத்துத்தான். முடிந்தால் அந்தப் படத்தை ஒரு முறை மீண்டும் பாருங்கள்.


உலக அழிவு பற்றிய பயத்தினால், நாம் இப்படி எல்லாம் அவர்களைப் பற்றி அபாண்டமாகச் சந்தேகப்படுகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அப்படி இல்லை என்று பதில் சொல்வதற்கு நான், டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களைக் காட்ட மீண்டும் உங்களை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

மனிதனால் செய்யப்படும் தொலைதூரப் பயணங்களில் ஆபத்தானது என்று கருதப்படுவது விமானப் பயணம்தான். பிரயாணிகள் பயணம் செல்லும் விமான நிலையங்கள் உலகெங்குமே அழகானவையாகவும், மனதுக்கு உகந்தவையாகவுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த டென்வெர் விமான நிலையம் எப்படிக் காட்சியளிக்கிறது தெரியுமா? விமான நிலையச் சுவர்களில் விசித்திரமாக, மிகப் பிரமாண்டமாக சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அந்தச் சித்திரங்கள் அனைத்தும் சொல்வது வேறெதைப் பற்றியுமல்ல, உலக அழிவைப் பற்றித்தான்.

விமான நிலையத்துக்குக் கீழே உலக அழிவில் இருந்து தப்பிக் கொள்ளப் பாதுகாப்பான இடம். மேலே உலக அழிவைச் சொல்லும் சித்திரங்கள். கீழே கட்டப்படுவது வெளியே தெரியவராது என்ற நினைப்பில், குறியீடாக இந்த உலக அழிவு அங்கு சித்திரமாக வையப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு விமான நிலையத்திலாவது இறந்த உடல்கள், சவப்பெட்டிகள், மனித அவலங்கள் எனச் சித்திரங்கள் வரைவார்களா……..? ஆனால் டென்வெர் விமான நிலையத்தில் வரைந்திருக்கிறார்கள். அந்தச் சித்திரங்களில் சிலவற்றை நீங்களே பாருங்கள்………!









படங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் இங்கு உங்களுக்குத் தர முடியவில்லை.

அதிகம் எதற்கு? எந்த விமான நிலையத்திலாவது பயணப் பெட்டியினுள் இருந்து சாத்தான் வெளிப்படுவது போல சிலை செய்து வைத்திருப்பர்களா? அதுவும் இருக்கிறது அங்கே!


எல்லாம் சரி, உலகம் அழிவது என்றால் மாயன் இல்லாமல் ஒரு உலக அழிவா…? அதுவும் அங்கே காணப்படுகிறது. மாயன் இனத்துச் சிறுமி ஒருத்தி, மாயன்களின் சுவர் ஓவியத்தின் பகுதியொன்றைத் தன் கைகளில் ஏந்தியபடி இருப்பதும் அந்தச் சித்திரங்களில் காணப்படுகிறது. இது மேலதிக பயத்தை எமக்கு ஏற்படுத்துகிறது. அதையும் பாருங்கள்.



இங்குமா மாயன் என்று ஆச்சரியம் வரவில்லையா…?
இந்தச் சித்திரங்கள் பற்றி நிறையவே விமர்சித்துக் கொண்டு போகலாம். அவ்வளவு உலக அழிவு பற்றிய விபரங்கள் அடங்கிய சித்திரங்கள் அங்கு வரையப்பட்டிருக்கின்றன. ஒரு விமான நிலையத்தில் அப்படிச் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பது அசாதாரணமானவை. ஆனால் ஏன்…..?

இந்த டென்வெர் விமான நிலையத்தின் நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்ட சுரங்க நகரைப் போல, அமெரிக்காவில் மட்டும் மொத்தமாக பதினெட்டு இடங்களில் நிலக் கீழ்ச் சுரங்கங்கள் இராணுவப் பாதுகாப்புகளுடன் இரகசியமாக அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் உலகெங்கும் பல இடங்களிலும் மிக இரகசியமாக, பல கட்டடங்கள் இப்படி அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆப்ரிக்காவில் மிகப்பெரிய நிலக் கீழ் நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எதற்கு? இவ்வளவு பணச் செலவுகளுடன் காரணமில்லாமல் யாரும் இவற்றை அமைப்பார்களா..?






மேலே படங்களில் உள்ளவை, அமெரிக்காவின் பல இடங்களில் அமைக்கப்படும் நிலக் கீழ் நகரங்கள். வெளியே எதுவுமே தெரியாத அளவுக்கு அமைதியாகக் காணப்படும் இவை உள்ளே மிகப் பிரமாண்டமானவை.
அமெரிக்கா என்னும் நாட்டில் அநேக இரகசியங்கள் மீடியாக்களினால் வெகு சுலபமாக வெளிவந்து விடுகின்றன. ஆனால் அமெரிக்கா தவிர்த்து சீனா, ரஷ்யா போன்ற பிற நாடுகளில் அப்படி அல்ல. அங்கு என்ன என்ன கட்டடங்கள் அமைக்கப் படுகின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியங்கள். இதனாலேயே நான் முன்னர் சொன்ன ’2012′ என்னும் ஆங்கிலப் படத்தின் இறுதியில் கூட, உலக உயர் சக்திகள் சீனாவில் இணைவதாகக் காட்டியிருந்தார்கள்.

இவை மட்டுமல்ல எம்மை ஆச்சரியப்படுத்துபவை. இதைவிட இன்னுமொன்றும் உண்டு. அதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவும் தெரிந்து விட்டால், உலகம் அழியுமா என்னும் சந்தேகம் வருவதற்குப் பதில், அழியும் என்னும் நம்பிக்கையே உங்களுக்கு ஏற்பட்டுவிடும். இதைத் தெரிந்து கொள்ள ஐரோப்பா, ஸ்காண்டினேவியா நோக்கி எம் பார்வையைத் திருப்ப வேண்டும்.

நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் ‘ஸ்வால்பார்ட்’ (Svalbard) எனும் தீவு ஒன்று உண்டு. எங்கு பார்த்தாலும் மலைகளும், அவற்றில் நிறைந்திருக்கும் பனிகளுமாகவே அந்த இடம் எப்போதுமே காட்சியளிக்கும். இந்த இடமும் டென்வெர் விமான நிலையத்தைப் போல மிக முக்கிய இடமாக இப்போது இருக்கிறது. அது என்ன தெரியுமா…?
சொல்கிறேன்……!


உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக அங்கு பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது. ஒன்பது மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு, மலைகளைக் குடைந்து, நிலத்தடிச் சுரங்கமாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் இந்த விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. உலகம் அழிந்தாலும், இவற்றிற்கு எந்தப் பாதிப்பும் வரமுடியாத அமைப்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. மாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் செலவு செய்து குளிர்பதனப்படுத்தப்பட்டு இவை பாதுகாக்கப்படுகின்றன.


உலகத்தில் அழிவு ஏற்படும் பட்சத்தில், அதன் பின்னர் உருவாகும் மாற்று உலகத்தில், அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மரம் செடிகளை உற்பத்தி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. உண்ண உணவின்றிப் பல நாடுகளில் மக்கள் உயிர்களை விட்டுக் கொண்டிருக்கும்போது, இல்லாத அழிவு ஒன்றை எதிர்பார்த்து இவ்வளவு செலவில் இப்படி ஒரு பாதுகாப்பு வைப்பகம் எதற்காக?





இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏன் வட துருவத்தில் செய்யப்பட வேண்டும்? பூமியின் வட, தென் துருவத்திற்கான அச்சு தனது தடத்திலிருந்து இடம் மாறினால் (Pole Shift), தற்சமயம் வெப்ப வலயப் பிரதேசமாக இருக்கும் இடங்கள், குளிர்ப் பிரதேசங்களாகவும், குளிர்ப் பிரதேசங்கள் வெப்ப வலயப் பிரதேசங்களாகவும் மாறும் ஆபத்து உண்டு என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஏனோ ஞாபகத்திற்கு வரவில்லையா?




உலகம் அழியும் ஒரு நிலை ஏற்படுமாயின், மரங்களைப் பாதுகாக்கும் இடம் வெப்ப வலயப் பிரதேசமாக மாறி அங்கு மரங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக மாறலாம். அழிவிலிருந்து காப்பாற்றப்படும் சில மனிதர்களால், வெப்ப வலயமாக மாறியிருக்கும் இந்த நோர்வே பகுதியில் மீண்டும் ஒரு மனித நாகரீகத்தை உருவாக்கும் திட்டம் யாராலும் உருவாக்கப்பட்டதா?
மனிதர்கள் அங்கே! மரங்கள் இங்கே! என்ற இந்த புத்திசாலித்தனமான செயல்களை எல்லாம் இவர்களுக்குச் செய்வதற்கு கட்டளையிட்டவர்கள் யார்? இவையெல்லாவற்றையும் யார் அமைக்கிறார்கள்?

உலகப் பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும், பெரும் சக்தி வாய்ந்தவர்களையும் எந்த சக்தி ஒன்றிணைக்கிறது? நிச்சயமாக இதை ஒரு பலமான சக்தி இருந்து கொண்டுதான் இணைக்க வேண்டும் அல்லவா?
அவர்கள் யார் என்பதையும், அவர்களால் இன்னும் என்ன என்ன சதிவலைகள் பின்னப்படுகின்றன?

பாகம் 11