Friday, August 2, 2013

ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினார் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தந்தது ரஷ்யா

ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினார் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தந்தது ரஷ்யா




அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட அந்நாட்டு முன்னாள் அதிகாரி எட்வர்டு ஸ்னோடெனுக்கு, ரஷ்யா அடைக்கலம் அளித்துள்ளது. இதனால் மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து வெளியேறினார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தூதரங்கங்களை உளவு பார்த்துவரும் விஷயத்தை, அதன் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரியான எட்வர்டு ஸ்னோடென், ஹாங்காங்குக்கு தப்பி வந்து வெளியிட்டார். அவரை கைது செய்ய அமெரிக்க நடவடிக்கையில் இறங்கியபோது, ஹாங்காங்கில் இருந்து ஜூன் 23ல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றார்.

ஆனால், அவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுக்காத நிலையில், விமான நிலையத்திலேயே அவர் தங்கியிருந்தார். அங்கிருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிடம் அவர் அடைக்கலம் கேட்டு கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்த நாடுகள் அவருக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டன. இதனால் மாஸ்கோ விமான நிலையத்திலேயே தொடர்ந்து அவர் தங்கியிருந்தார்.

இந்நிலையில், ஸ்னோடெனுக்கு ரஷ்யா தற்காலிக அடைக்கலம் அளித்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து நேற்று அவர் வெளியேறினார். இத்தகவலை அவரது வக்கீல் அனடோலி குசரேனா தெரிவித்தார். எனினும், விமான நிலையத்தில் இருந்து அவர் எங்கு சென்றார் என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அமெரிக்காவின் ரகசியங்களை இனி வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவருக்கு ரஷ்யா தற்காலிக அடைக்கலம் அளித்துள்ளது. இதை ஸ்னோடென் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எக்ஸ்ட்ரா தகவல்

2012 வரையில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் 4.52 கோடி. இதில் 1.54 கோடி பேர் அகதிகள். 9.37 லட்சம் பேர் அடைக்கலம் தேடி சென்றவர்கள்.

நாளை ஆடிப்பெருக்கு காவிரியில் கரைபுரளும் தண்ணீர்

நாளை ஆடிப்பெருக்கு காவிரியில் கரைபுரளும் தண்ணீர்




காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆடிப்பெருக்கை கொண்டாட புதுமண தம்பதிகள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகத்தில் நீர்நிலைகளில் குறிப்பாக காவிரி ஆற்றில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படும். அன்றைய தினம் புதுமண தம்பதிகள் திருச்சி காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடி பூஜை செய்து, மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வார்கள். திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விடுவார்கள். அதேபோல் திருமணமாகாத பெண்கள், நல்ல வரன் அமையவேண்டி, பூஜை செய்து மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா நாளை (சனி) கொண்டாடப்பட உள்ளது. தற்போது திருச்சி காவிரி ஆற்றில் கரைபுரள தண்ணீர் ஓடுவதால், ஆடிப்பெருக்கு விழா களை கட்டி உள்ளது. புதுமண தம்பதிகள், பெண்கள் புனித நீராடுவதற்கு உற்சாகத்துடன் உள்ளனர். ஆடிப்பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் காவிரிக்கரையில் கூடி, தலைவாழை இலையில் மஞ்சள் கயிறு, பழவகைகள், சர்க்கரை பொங்கல்,

பஞ்சாமிர்தம் போன்ற நைவேத்தியங்கள், கருகமணி, தேங் காய், பால் ஆகியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். மேலும் மூத்த சுமங்கலி பெண்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள். ஆடி பெருக்கு அன்று திருச்சி காவிரி கரையில் உள்ள அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்புக்காக போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர்.


எக்ஸ்ட்ரா தகவல்

ஆடி என்றாலே புது தம்பதிகளுக்கு ஏக்கம்தான். ஒரு மாத பிரிவுக்கு ஒரே ஆறுதல் சந்தோஷம் இந்த ஆடிப் பெருக்கு விழாதான்.

Thursday, August 1, 2013

நல்லவேளை... எனக்கு எய்ட்ஸுன்னு சொல்லாம விட்டாங்களே! - வதந்திகள் குறித்து கனகா கமெண்ட்!

நல்லவேளை... எனக்கு எய்ட்ஸுன்னு சொல்லாம விட்டாங்களே! - வதந்திகள் குறித்து கனகா கமெண்ட்!





நல்லவேளை... என்னைப் பத்தி வதந்தி பரப்பினவங்க எனக்கு எய்ட்ஸுன்னு சொல்லாம விட்டாங்களே, என கமெண்ட் அடித்து சிரித்தார் நடிகை கனகா. தென் இந்திய மீடியாவை நேற்று முழுக்க கலக்கியது நடிகை கனகா குறித்த செய்திகள்தான். கனகா புற்றுநோயால் உருக்குலைந்து போய், ஆலப்புழாவில் அநாதைகளுக்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கடந்த சில தினங்களாக பரவிய வதந்தி, நேற்று உச்சத்துக்குப் போய் அவர் கேரளாவிலேயே இறந்துவிட்டதாய் பரபரப்பைக் கிளப்பியது.

நலமுடன் நேரில் தோன்றிய கனகா 

ஆனால் அடுத்த சில மணி நேரத்துக்குள் கனகா சென்னையில் அனைத்து நிருபர்கள் முன்னிலையிலும் நல்ல ஆரோக்கியம் ப்ளஸ் முன்னிலும் அழகாக நேரில் தோன்றி தனக்கு ஒன்றுமில்லை என்றும், தன்னைப் பற்றி சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்பியதாகவும் குற்றம் சாட்டினார்.


நல்ல வேளை எய்ட்ஸுன்னு சொல்லாம போனாங்களே... 

நிருபர்களிடம் பேசிய அவர், "நான் கேரளாவில் சிகிச்சை பெறவில்லை. சென்னையில் உள்ள எனது வீட்டில் தான் இருக்கிறேன். எனக்கு புற்றுநோய் என்று வதந்தியைப் பரப்பியுள்ளனர். நல்ல வேளை எய்ட்ஸ் என்று செய்தி பரவாமல் இருந்ததே; அதுவே போதும்.

எல்லாம் அந்த தேவதாஸ் வேலை 

இந்த வதந்திகளை என் தந்தை எனக்கூறிக்கொண்டு திரியும் தேவதாஸ்தான் பரப்பி விடுகிறார். இதையே சாக்காக வைத்து என்னை சந்தித்து பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார். இல்லையென்றால் ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில் என்னைத்தேடி சரியாக சென்னையில் நான் இருப்பதை எப்படி அவரால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆண்களைப் பிடிக்கவில்லை 

என்னைத்தேடி ஆலப்புழாவுக்கு போகாமல் மிகச்சரியாக சென்னையில் உள்ள என் வீட்டிற்கு எப்படி வருகிறார். அவரை என் வீட்டிற்குள் வர நான் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவுக்கு அவர் ஒருநாளும் அவர் நல்ல கணவராக நடந்துகொண்டதே இல்லை. எனக்கு ஒரு நல்ல தந்தையாக எந்நாளும் நடந்துகொண்டதில்லை. அவர் ஒரு பணப்பேய். அவரால்தான் எனக்கு ஆண்களைப் பார்த்தாலே பிடிக்காமலே போய்விட்டது. அதனால்தான் திருமணம் வேண்டாம் என முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

பூனை, கோழிகளுடன்... 

எனது தனிமையை தவிர்ப்பதற்காக வீட்டில் 35 பூனைகளை வளர்க்கிறேன். நாய், கோழி இவற்றுடன்தான் வசிக்கிறேன். மனிதர்களை விட இவை எவ்வளவோ மேல். என் உதவிக்கு என் தேவைகளை கவனித்துக் கொள்ள என் வேலைக்காரி மட்டுமே உடனிருக்கிறார்.எக்காரணத்தைக்கொண்டும் எனக்கு தந்தை என்று கூறிவரும் தேவதாசை என் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவுக்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன்.

நடிகர்- நடிகைகள் தவிர்ப்பு 

சில நடிகர், நடிகைகளிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஏனோ என்னிடம் பேச விரும்பவில்லை. நானும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. எனக்குப் பிடித்த உலகில் நான் வசிக்கிறேன்.

பயமில்லை.. 

எனக்கு எந்த பயமும் இல்லை. இவ்வளவு பெரிய வீ்ட்டில் வசிக்க பயமாக இருக்கிறதா என்று கேட்கிறீர்களே.. யாருக்காக எதற்காக பயப்பட வேண்டும். திருடனுக்கா... பேய் பிசாசுகளுக்கா... எத்தனையோ பேர் நகரை விட்டு ஒதுங்கி ஈசிஆர் ரோட்டில் பங்களா கட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். நான் பணக்காரி. ராஜா அண்ணாமலைபுரத்தில் சொந்த வீட்டில் வசிக்கிறேன். நான் எதற்கு பயப்பட வேண்டும்.

திருமணம் பற்றி பேச வேண்டாம் 

என் திருமணம் பற்றிப் பேச வேண்டாம். நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்பதுதான். திருமணம் பற்றி பேசவேண்டாம் என என் வக்கீல் சொல்லியிருக்கிறார். திருமணம் செய்து கொண்டே தீரவேண்டும் என்று கட்டாயமில்லையே. திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை இல்லாமலும் கூட வாழத்தானே செய்கிறார்கள்!

மீண்டும் நடிப்பேன்.. 

நல்ல கதை, கவுரவமான கேரக்டர்கள் கிடைத்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன். நடிக்க மாட்டேன் என எப்போதாவது நான் அறிவித்தேனா என்ன... ஆனால் நான் எந்த நிலையில் இருந்தாலும் அந்த தேவதாசை மட்டும் சேர்க்க மாட்டேன். இன்று கூட வீட்டு வாசல் வரை வந்த அவரை நான் துரத்திவிட்டேன். அவரை நான் பார்க்க விரும்பவில்லை. என் இறுதி மூச்சு வரை இதில் நான் உறுதியாக இருப்பேன்,'' என்றார்.

(சபாஷ் கனகா !!! நீங்கள் இந்த கொள்கையில் உறுதியாக உள்ள வரை உங்களது இந்த பேட்டி எமது பதிவில் உயிர்ப்புடன் இருக்கும்)

Tuesday, July 30, 2013

இந்தியர்களை அதிக அளவில் கொல்லும் நோய் எது தெரியுமா?

இந்தியர்களை அதிக அளவில் கொல்லும் நோய் எது தெரியுமா?


இந்தியாவில் அதிகாமானோர் இதய நோயால் தான் இறப்பதாக புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் இந்தியாவில் உள்ள 25 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் இதய நோயால் இறப்பது தெரிய வந்துள்ளது. அனைத்து வயதினரையும் சேர்த்தால் இறப்பவர்களில் 19 சதவீதம் பேர் இதய நோயால் தான் இறக்கினர்.