Friday, September 7, 2012

இந்தியாவின் 100வது ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் ஆரம்பம்: 9ம் தேதி விண்ணில் பாய்கிறது


இந்தியாவின் 100வது ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் ஆரம்பம்: 9ம் தேதி விண்ணில் பாய்கிறது






இந்தியாவின் 100வது ராக்கெட் வரும் 9ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை 6.51 மணிக்கு துவங்கியது.

இஸ்ரோ தான் தயாரித்த செயற்கைகோளான ஆர்யப்பட்டாவை ரஷ்ய ராக்கெட்டில் வைத்து 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டா மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இதுவரை 62 செயற்கைகோள்கள் மற்றும் பிற நாட்டு செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் 37 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் 9ம் தேதி காலை 9.51 மணிக்கு 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தவுள்ளது.

பிஎஸ்எல்வி-சி21 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ராக்கெட் 715 கிலோ எடை கொண்ட ஸ்பாட் 6 என்ற பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் மற்றும் 15 கிலோ எடை கொண்ட பிராய்டெர்ஸ் என்ற ஜப்பானிய செயற்கைக்ககோளை தாங்கிச் செல்கிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இந்த 100வது ராக்கெட் விண்ணில் பாய்வதை விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் கண்டு மகிழ்வார்.

பிஎஸ்எல்வி ராக்கெட் தாங்கிச் சென்றுள்ள வெளிநாட்டு ராக்கெட்களில் தற்போது அது தாங்கிச் செல்லும் ஸ்பாட் 6 தான் அதிக எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டுக்கான 51 மணிநேர கவுண்ட் டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இன்று காலை 6.51 மணிக்கு துவங்கியது.

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 43 பேர் பலி-20,000 வீடுகள் தரைமட்டம்


சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 43 பேர் பலி-20,000 வீடுகள் தரைமட்டம்


 

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 43 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த யுனான் மற்றும் ஜூஷூயூ மாகாணங்களில் இன்று காலை 11 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 9.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 4.8 முதல் 5.6 வரை ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கிய 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 43 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை தொடர்ந்து, 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் இருந்த மக்கள், தெருவில் குவிந்தனர். மேலும் கட்டிடங்கள் ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளதால், பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நிலநடுக்கத்தை உணர்ந்த ஒருவர் கூறியதாவது,
நான் சாலையில் நடந்து சென்று போது நிலப்பகுதி அதிர்வதை உணர்ந்தேன். நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தெருவில் இங்கும் அங்குமாக ஓடினர். சீனாவின் தென் கிழக்கு பகுதிகளில் உள்ள வீடுகள் குறைந்த வசதியுடன் காணப்படுகின்றன. மேலும் இங்கு மலைப்பகுதிகள் அதிகம் உள்ளதால், நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது என்றார்.

நீல் ஆம்ஸ்டிராங்கின் உடல் கடலில் புதைக்கப்படுகிறது


நீல் ஆம்ஸ்டிராங்கின் உடல் கடலில் புதைக்கப்படுகிறது



மறைந்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங்கின் உடல் கடலில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்டிராங். அமெரிக்கரான ஆம்ஸ்டிராங், தனது 82வது வயதில் மரணமடைந்தார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சின்சினாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது அவரது மனைவி, பேரக் குழந்தைகள், குடும்பத்தினர், அவருடன் நிலாவுக்குச் சென்ற மைக்கேல் காலின்ஸ், பஸ் ஆல்டிரின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆம்ஸ்டிராங்கின் உடல் கடலில் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். அமெரிக்காவில் கடற்படையில் பணியாற்றியவர்களின் உடல்கள் பொதுவாக கடலில்தான் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக சாதனையாளர்களின் உடல்களை கடலில் புதைப்பார்கள்.

ஆம்ஸ்டிராங்கும் ஆரம்பத்தில் கடற்படையில்தான் தனது பணியைத் தொடங்கினார். எனவே அவரது உடலையும் கடலிலேயே புதைக்கவுள்ளனர். இருப்பினும் எந்த இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது என்பது தெரிவிக்கப்படவில்லை.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ஆம்ஸ்டிராங்கின் பேரக்குழந்தைகளில் ஒருவரான பைபர் வான் வேகனன் உருக்கமான உரை நிகழ்த்தினார்.

வாஷிங்டனில் செப்டம்பர் 12ம் தேதி ஆம்ஸ்டிராங்குக்கு இன்னொரு நினைவஞ்சலி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவரது உடல் அடக்கம் நடைபெரும்.

காலியாக போகும் 10 பணிகள்! பணி 01



காலியாக போகும் 10 பணிகள்!


பணி 01 :

Postal Service Workers



வருடாந்த வீழ்ச்சி வீதம்: -26.4%

2010 பணியிடங்கள்: 524,200

மொத்த பணியிட இழப்பு (2010-2020): -138,600

சராசரி வருட வருமானம்: $53,090

தற்போதே தள்ளாடிக் கொண்டிருக்கும் துறை இது. எலக்ட்ரோனிக் மெயில்கள் வந்தபின் சம்பிரதாயமான கடிதங்களுக்கு வேலையில்லை. தவிர, பார்சல் மூலம் பொருட்களை அனுப்புவதிலும், புதிய ட்ராக்கிங் தொழில்நுட்பங்கள் வந்து, அதிக ஆட்கள் தேவையில்லாதபடி செய்துள்ளன. தற்போது அநேக மேலை நாடுகளில் தந்தி சேவை என்றாலே என்னவென்று தெரியாது. அதே நிலைமை, தபால் சேவைக்கும் ஏற்படும்.


HOME                         பணி 02

காலியாக போகும் 10 பணிகள்! பணி 02



காலியாக போகும் 10 பணிகள்!


பணி 02 :

Sewing Machine Operators



வருடாந்த வீழ்ச்சி வீதம்: -25.8%

2010 பணியிடங்கள்: 163,200

மொத்த பணியிட இழப்பு (2010-2020): -42,100

சராசரி வருட வருமானம்: $20,600

தையல் எந்திரங்களை உபயோகித்து ஆடை தயாரிக்கும் பணி இது. அதாவது, டெயிலர்கள். பாவனையாளர்களை ரெடிமேட் ஆடைகள் முழுமையாக ஆக்கிரமித்து விடும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாஷன் டிசைனர்களிடம்தான் டெயிலர்கள் பணியில் இருப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.


பணி 01                         பணி 03

காலியாக போகும் 10 பணிகள்! பணி 03



காலியாக போகும் 10 பணிகள்!


பணி 03 :

Shoe and Leather Workers



வருடாந்த வீழ்ச்சி வீதம்: -23.1%

2010 பணியிடங்கள்: 13,300

மொத்த பணியிட இழப்பு (2010-2020): -3,100

சராசரி வருட வருமானம்: $23,980

இங்கு குறிப்பிடப்படுவது தயாரிப்பு பணியல்ல, திருத்தும் பணி. ஷூ மற்றும் லெதர் பொருட்களை ரிப்பேர் செய்யும் வேலை முற்றிலும் இல்லாது போய்விடும். காரணம், தற்போதெல்லாம், அவற்றை திருத்தி பயன்படுத்துவதைவிட, புதிதாக வாங்குவது மலிவானது. மிகமிக விலையுயர்ந்த தோல் பொருட்களை திருத்தும் இடம், வரும் காலத்தில், ஒரு நகரத்தில் ஏதோ ஒரு இடத்தில் இயங்கினாலே பெரிய விஷயம்!


பணி 02                         பணி 04

காலியாக போகும் 10 பணிகள்! பணி 04


காலியாக போகும் 10 பணிகள்!


பணி 04 :

Communications Equipment Operators


வருடாந்த வீழ்ச்சி வீதம்: -22%

2010 பணியிடங்கள்: 164,000

மொத்த பணியிட இழப்பு (2010-2020): -36,100

சராசரி வருட வருமானம்: $25,570

இந்த பணியில் பெரும்பாலும் டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளில் உள்ள பணியிடங்களே அதிகம் இல்லாது போகப் போகின்றன. டெலிபோன் சுவிட்ச் போர்டு ஆபரேட்டர் பணி முற்றிலுமே இல்லாது போய், கம்ப்யூட்டர் மூலம் எக்ஸ்டென்ஷன்களுக்கு கால்கள் செல்லும் நடைமுறை முழுமையாக ஆக்கிரமித்து விடும்.


பணி 03                         பணி 05

காலியாக போகும் 10 பணிகள்! பணி 05


காலியாக போகும் 10 பணிகள்!


பணி 05 :

Semiconductor Processors



வருடாந்த வீழ்ச்சி வீதம்: -17.9%


2010 பணியிடங்கள்: 21,100

மொத்த பணியிட இழப்பு (2010-2020): -3,800

சராசரி வருட வருமானம்: $33,130

இதுவும் ஒரு தொழிற்சாலை பணிதான். இதுவரை மனிதர்களால் செய்யப்பட்ட இந்த வேலைகளை இப்போது ரோபோக்கள் கவனிக்க துவங்கியுள்ளன. காரணம், இந்த வேலைகள் தொழிற்சாலையின் உற்பத்தி பகுதியில் வைத்து செய்யப்படுவதில்லை. தொழிற்சாலையில் உள்ள கிளீன் அறைகளில் வைத்து செய்யப்படுகின்றன. அதற்கு ரோபோக்களை உபயோகிப்பது சுலபம் என்பதால், சுலபமாக மாற்றீடு செய்யப்பட்டு விடும்.


பணி 04                         பணி 06

காலியாக போகும் 10 பணிகள்! பணி 06



காலியாக போகும் 10 பணிகள்!


பணி 06 :

Textile Machine Setters, Operators and Tenders



வருடாந்த வீழ்ச்சி வீதம்: -16.2%

2010 பணியிடங்கள்: 80,300

மொத்த பணியிட இழப்பு (2010-2020): -13,000

சராசரி வருட வருமானம்: $25,010

இவை டெயிலரிங் தொடர்புடைய பெரிதும், சிறிதுமான பணிகள். தையல் எந்திரங்களின் ஆட்டோமேஷன், மற்றும், துணி வெட்டும் டெக்னாலஜியில் மாற்றம் ஆகியவை இந்த பணியை கடுமையாக பாதிக்கப் போகின்றன. பொதுவாகவே துணி தயாரிப்பு தொழிற்சாலைகளில், ஆடை தயாரிப்பு எக்ஸ்டென்ஷன்கள் தற்போது வரத் துவங்கிவிட்டன. அதன் அர்த்தம் என்னவென்றால், தயாரிக்கப்படும் துணி பண்டல்களாக வெளியே வராமல், ஆடைகளாக வெளியே வரும்!

பணி 05                         பணி 07

காலியாக போகும் 10 பணிகள்! பணி 07



காலியாக போகும் 10 பணிகள்!


பணி 07 :

Coil Winders, Tapers and Finishers



வருடாந்த வீழ்ச்சி வீதம்: -15.9%

2010 பணியிடங்கள்: 15,100

மொத்த பணியிட இழப்பு (2010-2020): -2,400

சராசரி வருட வருமானம்: $28,650

இது தொழிற்சாலை வேலை. அசம்பிளிங் மற்றும் ஃபபிரிகேஷன் பணியில் ஈடுபடுபவர்கள் இவர்கள். மெக்கானிகல் மற்றும் எலக்ட்ரிகல் பாகங்களுக்கு காயில் வைன்டிங் செய்யும் பணி இது. இந்த டெக்னாலஜி இல்லாது போகப்போகிறது. காயில் வைன்டிங் இல்லாதபடி, காட்ரிட்ச்கள் வரத் துவங்கிவிட்டன. சில வருடங்களில், காட்ரிட்ச்களே முழுமையான மாற்றீடு செய்யப்பட்டு விடும்.


பணி 06                         பணி 08

காலியாக போகும் 10 பணிகள்! பணி 08



காலியாக போகும் 10 பணிகள்!


பணி 08 :

Prepress Technicians and Workers


வருடாந்த வீழ்ச்சி வீதம்: -15.9%


2010 பணியிடங்கள்: 50,800

மொத்த பணியிட இழப்பு (2010-2020): -8,100

சராசரி வருட வருமானம்: $36,280

இதுவும் பத்திரிகை துறை பணிதான். பத்திரிகை லே-அவுட் முடிந்தபின், எழுத்துக்கள் மற்றும் படங்களை உரிய இடங்களில் அமைத்து, பிரின்டிங் பிளேட் எடுக்கும் பணி இது. இந்த பணி முழுமையாக இல்லாது போய்விடும். லே-அவுட்டில் இருந்து கம்ப்யூட்டர் மூலமாக நேரே பிரின்டிங்குக்கு போகும் புரோகிராம்கள் பிரபலமாகின்றன.


பணி 07                         பணி 09

காலியாக போகும் 10 பணிகள்! பணி 09


காலியாக போகும் 10 பணிகள்!


பணி 09 :

Desktop Publishers




வருடாந்த வீழ்ச்சி வீதம்: -14.7%

2010 பணியிடங்கள்: 22,600

மொத்த பணியிட இழப்பு (2010-2020): -3,300

சராசரி வருட வருமானம்: $36,610

டெஸ்க்டாப் பப்ளிஷர்கள் பிரசுரிப்பு மற்றும் பத்திரிகை உலக வேலை. பத்திரிகைகள், புத்தகங்கள் அல்லது சஞ்சிகைகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் லே-அவுட் செய்பவர்கள் இவர்கள். இந்த பணியில் மிக வேகமான ஆட்டோமேஷன் நடைபெறுகிறது. பல புதிய புரோகிராம்கள் வெளியாகின்றன. செய்தியாளர்களே தமது செய்திகளை லே-அவுட் செய்ய விரைவில் துவங்கி விடுவார்கள்.


பணி 10                         பணி 08

காலியாக போகும் 10 பணிகள்! பணி 10 :


காலியாக போகும் 10 பணிகள்! இவற்றில் நீங்கள் பணிபுரிந்தால், ரூட்டை மாற்றவும்!!


நீங்கள் தற்போது செய்யும் பணி எவ்வளவு காலத்துக்கு நீடிக்க கூடியது? நிறுவனம் நீடித்து இருக்கலாம். குறிப்பிட்ட அந்த பணி, 5 வருடங்களின் பின்னரும் இருக்குமா? இன்று பல விஷயங்கள் மாறிக்கொண்டு உள்ளன. இதனால், அந்த பணி எவ்வளவு காலத்துக்கு நீடித்து இருக்க கூடியது என்று தெரிந்து கொள்வது நல்லது.

அமெரிக்காவில் தற்போது உள்ள பணிகளில், அடுத்த சில வருடங்களில் காணாமல் போய்விடக்கூடிய 10 பணிகளை பட்டியலிட்டு உள்ளார்கள். இவற்றில் ஏதாவது ஒரு ஃபீல்டில் நீங்கள் இருந்தால், வேறு துறைக்கு மாற முடியுமா என்று பாருங்கள். அல்லது, இவற்றில் ஏதாவது ஒரு துறையில் பணிபுரியும் திட்டம் இருந்தால், வேறு தேர்வு உள்ளதா என்று பாருங்கள்.

இதோ 10-வது பணியில் இருந்து ஆரம்பித்து, 1-வது பணி வரை ஒவ்வொன்றாக செல்லலாம். அடுத்தடுத்த பக்கத்துக்கு செல்வதற்கு போட்டோவில் கிளிக் செய்யவும்.


பணி 10 :

Petroleum Pump System Operators, Refinery Operators and Gaugers



வருடாந்த வீழ்ச்சி வீதம்: -14%

2010 பணியிடங்கள்: 44,200

மொத்த பணியிட இழப்பு (2010-2020): -6,200

சராசரி வருட வருமானம்: $60,040

பெற்றோலியம் பம்ப் சிஸ்ட் ஆபரேட்டர்கள், எண்ணை சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலயங்களில் பணி புரிபவர்கள். இவர்கள், சரியான ஃபுளோவை கவனிப்பதே இவர்களது பிரதான பணி என்பதால், அந்த பணி முற்றிலும் ஆட்டோமேட்டிக் ஆகும்போது, இப்படி ஒரு பணியே இருக்காது. அதேநேரத்தில், இதே துறையில், பெற்றோலியம் இஞ்சினியர்களின் எண்ணிக்கை 17% அதிகரிக்கும்.

பணி 09





நன்றி  http://viruvirupu.com




ரூ.18 கோடிக்கு ஏலம் போன காட்டெருமை


ரூ.18 கோடிக்கு ஏலம் போன காட்டெருமை




தென் ஆப்ரிக்காவில் கொரிஷான் என்ற காட்டெருமை ஒன்று ரூ.18 கோடிக்கு ஏலம் போனது.

தென் ஆப்ரிக்காவில் பிரடோரியா பகுதியில் உள்ள பெலா பெலா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜேக்குயஸ் மலான். இவரது பண்ணையில் கொரிஷான் என்ற ஆண் காட்டெருமை ஒன்று இருந்தது. இந்த எருமைக்கு 4 வயது 10 மாதம் ஆகிறது.

அபூர்வ வகை இன காட்டெருமையான இதன் கொம்புகள் 1.3 மீற்றர் நீளமும், 41 சென்டி மீற்றர் அகலமும் கொண்டது.

தென் ஆப்ரிக்காவின் பிரசித்தி பெற்ற இந்த காட்டெருமை இனத்தை முன்பு வேட்டையாடி அழித்து விட்டனர்.

தற்போது அவரது பண்ணையில் மீண்டும் இந்த இன காட்டெருமை உருவாகி உள்ளது. இதன் மூலம் இனப்பெருக்கம் செய்து மீண்டும் அபூர்வரக காட்டெருமையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகத்தான் இந்த ஆண் காட்டெருமை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சென்ட்லா என்ற காட்டெருமை ரூ.6 கோடிக்கு ஏலம் போனது சாதனையாக கருதப்பட்டது. தற்போது அதை கொரிஷான் முறியடித்துள்ளது.

பறவைகளுடன் பறந்தார் விளாடிமிர் புடின்


பறவைகளுடன் பறந்தார் விளாடிமிர் புடின்



ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சாகசங்கள் பற்றி உலகம் முழுவதும் அறிந்தவர்கள் இருக்கின்றனர்.

ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற கண்ணோட்டத்தை விட்டும் அப்பாற்பட்டவர் புடின்.

குதிரையேற்றம், கார் ரேஸ், பனிப்பிரதேசத்தில் தங்குவது, அதிவேக ஜெட்டில் பறப்பது என அனைத்து விடயங்களும் புடினின் விரல் நுனியில் புதைந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் வடகோடி பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது புதின், கிளைடரில் வானில் பறக்க அப்போது சைபீரிய கொக்குகளும் அந்த கிளைடருக்கு சமமாக பறந்து கொண்டிருந்தன.

பின்னர் கிளைடரில் உட்கார்ந்தபடியே சைபீரிய கொக்கு தமது வாகனத்தை விட்டு நகரும் வரை உற்றுப் பார்த்தபடியே காத்திருந்து பின்னர் காற்றில் பறந்திருக்கிறார்.

இப்படி புதின் வெள்ளை உடையில் வானில் பறப்பதற்கு முதல்நாள் ஒரு வேடிக்கையும் அரங்கேறியுள்ளது.

ரஷ்யாவின் "ஆல்பா- நாய்" என்று புதினை அமெரிக்க ராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அம்பலமாகியிருந்தது.

இதே போல் புடின் ஒரு கறுப்பு உடையில் சாம்பல் நிற இறக்கைகளுடன் நிற்பதைப் போல கார்ட்டூனும் வரையப்பட்டிருந்தது.

சைபீரிய கொக்குகளுடன் பறந்துவிட்டு தரையிறங்கி அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த புடின், இப்ப நான் ஆல்பா- கொக்கு என்று சொல்லி சிரித்திருக்கிறார்.














வீடியோ இணைப்பு

















Thursday, September 6, 2012

முகப் பொலிவிற்கு தேங்காய்


முகப் பொலிவிற்கு தேங்காய்




தேங்காய் உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தரவில்லை, சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் ஆகவும், அதற்கு முன் உடல் ஆரோக்கியத்திற்கு இளநீராகவும் மற்றும் இதன் ஓடு வீட்டில் சமைப்பதற்கு தேவையான நெருப்பை மூட்ட என்றெல்லாம் உதவுகிறது.

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் கூழ் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து, முகம், கை மற்றும் கால்களுக்கு 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்கரப். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் சற்று கூடும்.





மற்றொரு முறை தேங்காய் தண்ணீரை வைத்து செய்வது. அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் நீர் மற்றும் ஏதேனும் பருப்பு பேஸ்ட் எடுத்து கலந்து கொண்டு, சருமத்திற்கு 1-2 நிமிடம் தேய்த்து, பின்னர் கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு தேவையான நீர் சத்து கிடைப்பதோடு, அழகும் அதிகரிக்கும்.

தேங்காயை சிறிது ஆப்ரிக்காட் பழத்துடன் அரைத்து, முகத்திற்கு ஃபேசியல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் சற்று இறுக்கமடைந்து இளமை தோற்றத்தை தரும்.

சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க
தேங்காய் சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த மாஸ்சுரைசர். தினமும் படுக்கும் முன் சிறிது தேங்காய் நீரை சருமத்திற்கு தடவி, பின்னர் படுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அனைத்து புள்ளிகளும் நீங்கி, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும்.



தேங்காய் நீருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, பின் சருமம் முழுவதும் தடவி, ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படுவதோடு, பளபளப்பாக மின்னவும் செய்யும்.

தினமும் குளித்த பின்னர், தேங்காய் பாலை வைத்து முகத்தினை கழுவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின்னர் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஆகவே முகம் நன்கு பொலிவோடு இருப்பதோடு, சற்று சருமத்தின் நிறம் அதிகரித்தும் காணப்படும்.

முகப்பரு நீங்க
முகப்பரு விரைவில் போவதற்கு, ஈஸியான வழி இருக்கிறது. அதற்கு தொடர்ந்து இரவில் படுக்கும் முன் தேங்காய் நீரை முகத்திற்கு தடவி பிறகு தூங்க வேண்டும். இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்தால், முகப்பரு நீங்கி சருமம் மென்மையாகவும், சருமத்துளைகள் நீங்கியும் காணப்படும்.




இல்லையென்றால் தேங்காயின் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு ஃபேஸ் பேக் போன்று, வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.




கல்லறையில் கியூ.ஆர் கோட் வருகிறது !


கல்லறையில் கியூ.ஆர் கோட் வருகிறது !




கியூ. ஆர் கோட்(QR CODE) அப்படி என்றால் என்ன என்று வாயைப் பிளக்கவேண்டாம். பாக் கோட்(BARCODE) பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது நாம் வாங்கும் பொருட்களில் எல்லாம் தற்போது சர்வசாதாரணமாகக் காணப்படுவது பாக்-கோட். கணணியானது ஒரு பொருளின் விலையை மற்றும் என்ன பொருள் என்று அறிய இந்த பாக்-கோட் பயன்படுகிறது. நீள் கோடுகளாக அமைந்துள்ள இந்த பாக்-கோட்டில் பல விடையங்களைப் பதிவுசெய்ய முடியாது. இதன் காரணமாக 3வது தலைமுறையினர், கியூ-ஆர் கோட்டைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த கியூ-ஆர் கோட் வாசிக்கும் திறன் உங்கள் மோபைல் போனில் உள்ளது. இல்லை என்றால் நீங்கள் அதனை தரவிறக்கம் செய்து இன்ஸ்டோல் செய்யலாம். இந்த கியூ-ஆர் கோட்டில் பல விடையங்களை நாம் பதிந்து வைத்துக்கொள்ள முடியும். அதாவது கியூ-ஆர் கோட் உருவாக்கும், இணையத்தில் நாம் எதனை எழுதுகிறோமோ அவ்வளவற்றையும் எழுதிவிட்டு பின்னர் நாம் கியூ-ஆர் கோட்டை உருவாக்கும் பட்டனை அழுத்தினால் போதும்.




உடனே கியூ-ஆர் கோட் உருவாகிவிரும். அதனை நாம் பதிவில் எடுக்கலாம். இல்லையேல் பிரின் போடலாம். பின்னர் அதனை மோபைல் போனில் உள்ள கமராவின் உதவியோடு ஸ்கேன் செய்தால், நாம் எழுதிய அனைத்து விடையங்களும் மோபைல் போன் திரையில் விழும். சுருக்கமாகச் சொல்லப்போனால், புள்ளிப் புள்ளியாக இருக்கும் இந்த கியூ-ஆர் குறியீடுகள் ஒரு செக்கனில் எழுத்துகளாக மாறிவிடும். தற்போது இதனைக் கல்லறையிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். வழமையாக கல்லறையில் ஒருவர் புதைக்கப்பட்டால் அவரது கல்லறையில் அவர் எப்போது பிறந்தார் எப்போது இறந்தார் என்று மட்டும் எழுதுவது உண்டு. ஆனால் தற்போது இந்தக் கியூ ஆர் கோட்டை கல்லறையில் பதிக்கிறார்கள். என்ன ஒரு ஐடியா



இனி நீங்கள் மயாணத்துக்குச் செல்லும் போது, அங்கே காணப்படும் பல கல்லறைகளில் உள்ள கியூ-ஆர் கோட்டை உங்கள் கைகளில் உள்ள மோபைல் போன் மூலம் ஸ்கேன் செய்தால் போதும். அக்கல்லறையின் கீள் புதையுண்ட நபர் குறித்த பல விடையங்களை தெரிந்துகொள்ளலாம். டெக்னாலஜி முன்னேறுகிறது தான் ! ஆனால் கல்லறைவரை முன்னேறிச் செல்வது தான் ஆச்சரியமான விடையம்.




35 ஆண்டுகளுக்கு பின் சூரியக் குடும்பத்தை சென்றடையும் விண்கலம்


35 ஆண்டுகளுக்கு பின் சூரியக் குடும்பத்தை சென்றடையும் விண்கலம்




சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி கிரகங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வாயேஜர்-1, வாயேஜர்-2 என்ற விண்கலங்களை அனுப்பியது.

எட்ஸ்டோன்(வயது 76) என்ற விஞ்ஞானியால் உருவாக்கப்பட்ட இந்த விண்கலங்கள் கடந்த 1977ஆம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதில், வாயேஜர்-2 என்ற விண்கலம் இரண்டு வாரத்துக்கு முன்பு சூரிய குடும்பத்துக்குள் சென்றடைந்தது. தற்போது அது சூரியனில் இருந்து 1440 கோடி கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

இந்நிலையில் வாயேஜர்-1 என்ற விண்கலம் சூரிய குடும்பத்தை சென்றடையும் நிலையில் உள்ளது. அது சூரியனில் இருந்து 1770 கோடி கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

இந்த இரண்டு விண்கலங்களும் வியாழன் மற்றும் சனி கிரகத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளன. அங்குள்ள எரிமலைகள், கடல் மற்றும் பனி மண்டலங்கள், சனி கிரகத்தின் டைடன் துணை கோள் போன்றவைகள் குறித்து பல தகவல்களை அனுப்பியுள்ளது.

தற்போது சூரிய குடும்பத்துக்குள் பல கோணங்களில் நுழைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மனிதர்கள் தயாரித்து அனுப்பிய விண்கலங்களில் இதுதான் பல 100 கோடி மைல் தூரம் பறந்து சென்று பலவிதங்களில் செயல்படுவதாக விஞ்ஞானிகள் மகிழச்சி தெரிவித்துள்ளனர்.




கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான எலிகள்: நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் திண்டாட்டம்


கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான எலிகள்: நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் திண்டாட்டம்




அமெரிக்காவில் வீசிய ஐசக் சூறாவளியில் சிக்கி உயிரிழந்த ஆயிரக்கணக்கான எலிகள் மிசிசிபி கடற்பகுதியில் கரை ஒதுங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசியில், அமெரிக்காவின் வடக்கு பகுதியை தாக்கிய ஐசக் சூறாவளியால் பல பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாயின.

லூசியானாவில் ஏராளமான சதுப்பு நிலப்பகுதிகள் உள்ளது. ஆயிரக்கணக்கான எலிகளின் வசிப்பிடமாக அப்பகுதிகள் திகழ்கிறது.

சூறாவளியின் வேகத்தில் இப்பகுதியில் வெள்ளம் பாய்ந்து ஏராளமான எலிகள் செத்தன. மேலும் பல ஆயிரக்கணக்கான எலிகள், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் தள்ளப்பட்டன.

சூறாவளியில் சிக்கி இறந்த இவற்றின் சடலங்கள் நேற்று முன்தினம், மிசிசிபி கடற்கரையில் ஒதுங்க தொடங்கி உள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவைகளை அகற்றும் பணியில் ஒப்பந்ததாரர்கள் பலர் ஈடுபட்டு, 16 ஆயிரம் எலிகளின் சடலங்கள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றை தவிர பாம்பு, முயல், மான் போன்றவற்றின் சடலங்கள் கரையில் ஒதுங்கி வருவதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.






இந்தியர் ஹோட்டலில் செத்துக் கிடந்த எலி


இந்தியர் ஹோட்டலில் செத்துக் கிடந்த எலி: ரூ. 55 லட்சம் அபாரம் விதித்த அவுஸ்திரேலியா நீதிமன்றம்



அவுஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் உள்ள இந்திய உணவு விடுதி ஒன்றில் சுத்தமான உணவு வழங்கப்படவில்லை என புகார் வந்தது.

அங்குள்ள உணவுகளில் கரப்பான் பூச்சிகள் மொய்க்கின்றன என வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர்.

இதை தொடர்ந்து அங்கு சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது உணவு விடுதியின் சமையல் அறையிலும், அதை சுற்றியுள்ள இடங்களிலும் எலி செத்து கிடந்தது.

மேலும் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை அங்குமிங்கும் சுற்றி திரிந்ததையடுத்து உணவு விடுதி மீது சுகாதார அதிகாரிகள் 13 புகார்கள் பதிவு செய்தனர்.

இது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை பெண் நீதிபதி கெய்ல் மாட்க்விக் விசாரித்தார்.

ஒவ்வொரு புகாருக்கும் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் வீதம் 13 புகாருக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ஆல்ப்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்ட கடிதப்பொதி


46 ஆண்டுகளுக்கு பின்பு ஆல்ப்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்ட கடிதப்பொதி இந்திய அதிகாரியிடம் ஒப்படைப்பு



ஆல்ப்ஸ் மலைத் தொடரில் 46 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் விழுந்த இடத்தில் இந்தியாவின் கடிதப்பொதி ஒன்று கிடைத்தது.

1966ம் ஆண்டு ஜனவரி 26 ம் திகதி ஏர் இந்திய விமானம் மும்பையில் இருந்து நியூயோர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 117 பயணிகளும் பலியாகினர். இறந்தவர்களில் இந்தியாவின் முன்னணி வாய்ந்த அணு விஞ்ஞானியான ஹோமி ஜே பாபா என்பவரும் உள்ளார். (இவர் இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என அறியப்படுபவர் )

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்கு பின்பு அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற சிலர், இப்பொதியை கண்டுபிடித்தனர்.



இந்நிலையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை பாரிஸில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளில் ஒருவரான சத்வந்த் கனாலியா என்பவர் பிரெஞ்சு அதிகாரிகளிடம் இருந்து இந்த கடிதப் பொதியை பெற்றுக் கொண்டார்.

விமானத்தின் உள்ளே இருந்த முக்கிய தகவல்கள் அடங்கிய கடிதங்களைக் கொண்டிருக்கும் பொதி என்று இது கருதப்படுகிறது.





Wednesday, September 5, 2012

ஆடைகளை தேர்வு செய்ய பெண்களை நாடும் ஆண்கள்


இங்கிலாந்தில் 50% பேர் இப்படித்தான்

ஆடைகளை தேர்வு செய்ய பெண்களை நாடும் ஆண்கள்


 


இங்கிலாந்தில் 50 சதவீத ஆண்கள் புது டிரஸ் எடுப்பதற்கும், இன்று எந்த டிரஸ் போடுவது என்று முடிவெடுக்கவும் காதலி, மனைவி அல்லது அம்மாவின் துணையை நாடுகின்றனர் என்று அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இந்த ஆடைகளை தேர்வு செய்வதில், இங்கிலாந்தில் உள்ள ஆண்களுக்கு பெண்களே கைகொடுக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் 1,000 ஆண்களிடம் ஆடைகள் தேர்வு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தெரிய வந்த சுவாரசியமான தகவல்கள்:

ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் தங்களுடைய ஆடைகளை தேர்ந்தெடுப்பதற்கு பெண்களின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளனர். இதில் 25 சதவீதம் பேர் மனைவியிடம் கேட்பவர்கள். 4ல் ஒரு ஆண், தன்னுடைய காதலி அல்லது மனைவியிடம் ஆடையை தேர்வு செய்து தரச் சொல்பவர்கள். தங்கள் ஆடைகளை தாங்களே தேர்வு செய்பவர்கள் வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே. பெரும்பாலான ஆண்கள், அத்தி பூத்தாற்போல் எப்போதாவது தங்கள் ஆடைகளை தாங்களே தேர்வு செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

இன்று என்ன டிரஸ் போட வேண்டும் என்பதை கூட பலர் தங்களுடைய மனைவி அல்லது அம்மாவிடம்தான் கேட்கிறார்கள். வீட்டை விட்டு புறப்படும் போது, தாங்கள் அணிந்துள்ள டிரஸ் நன்றாக உள்ளதா என்பதையும் அவர்களிடம் கேட்கிறார்கள்.

தானே ஆடையை தேர்வு செய்பவர்களில் 3ல் ஒருவர், அந்த ஆடை நன்றாக உள்ளதாக திருப்தியடைகின்றனர். ஆடைகளை பராமரிப்பது, பீரோக்களில் அழகாக அடுக்கி வைப்பது போன்றவைகளில் பெரும்பாலான ஆண்களுக்கு கவலையே இல்லை. அதே போல், பெரும்பாலானவர்கள் 2 நிமிடங்களில் ஆடை அணிந்து விடுவதாக தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர், ஆடை அணிய தங்களுக்கு 20 நிமிடம் ஆகும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புகை, மதுவை நிறுத்தினால் ஆயுள் 6 ஆண்டு அதிகரிக்கும்


புகை, மதுவை நிறுத்தினால் ஆயுள் 6 ஆண்டு அதிகரிக்கும்


 

மது, புகை உள்ளிட்ட பழக்கங்களை நிறுத்திவிட்டு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, சமூகத்துடன் அதிக ஈடுபாடு என்று இருந்தால் ஆயுளை 6 ஆண்டு நீட்டிக்கலாம் என்பது ஆய்வில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

நடுத்தர வயதினர் பலர் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு திடீர் மரணம் அடைகின்றனர். மது, புகை போன்ற பழக்கங்கள் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 75 வயதை கடந்தவர்களையும் இதுபோன்ற பழக்கங்கள் பாதிக்கிறதா என்பது குறித்து ஸ்வீடனை சேர்ந்த டாக்டர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆய்வு நடத்தினர். 75 வயதை கடந்த 1800 பேரின் 18 ஆண்டு கால (1987-2005) குறித்து தீவிரமாக அலசி ஆராய்ந்தனர். அவர்களது வயது, பாலினம், படிப்பு, பார்த்த வேலை, அன்றாட வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், சமூக பணிகளில் அவர்களது ஆர்வம் ஆகிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆய்வு நடந்த 18 ஆண்டு காலத்துக்குள், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தாத்தா, பாட்டிகளில் 92 சதவீதம் பேர் இறந்துவிட்டனர். ஆய்வுக்கு எடுக்கப்பட்டவர்களில் பாதி பேர் 90 வயது கடந்தவர்கள். அதில் பலர் பெண்கள். நன்கு படித்தவர்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றியவர்கள். சமூக பணிகளில் அதிக ஆர்வம் காட்டி, சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள். ஓய்வு காலத்தை சிறப்பாக கழித்தவர்கள். அதாவது, நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர் என்பது ஊர்ஜிதமாகிறது.

தம் அடிப்பவர்களைவிட அடிக்காதவர்கள் 1 ஆண்டு அதிகம் வாழ்கின்றனர். தம் அடித்துவிட்டு பிறகு நிறுத்தியவர்களின் வாழ்நாளும் ஏறக்குறைய 1 ஆண்டு அதிகரித்துள்ளது. நடுத்தர வயதில் புகை பழக்கத்தை விடுவது மிகமிக நல்லது.

உடற்பயிற்சி, நீச்சல் போன்றவற்றை ரெகுலராக செய்தவர்களின் வாழ்நாள் சராசரியாக 2 ஆண்டு அதிகரிக்கிறது.

புகை, மது போன்ற பழக்கங்களை கைவிட்டு ஆரோக்கியமான உணவு, தேவையான உடற்பயிற்சி, போதிய ஓய்வு, சமூக பணிகளில் நாட்டம் என்று சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தால் பெண்களின் ஆயுள் 5 ஆண்டும், ஆண்களின் ஆயுள் 6 ஆண்டும் அதிகரிக்கிறது.

ஆப்பிள் யூசர் நேம், மற்றும் பாஸ்வேட்கள் ஹாக்

12 மில்லியன் ஆப்பிள்  யூசர் நேம், மற்றும் பாஸ்வேட்டுகளை அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ யின் லாப்டொப் ஒன்றில் இருந்து ஹாக்  





அப்பிள் நிறுவனத்தின் யூசர் நேம், மற்றும் பாஸ்வேட்டுகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஒரு குழு அறிவித்துள்ளது. அப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான(மக்களுடைய) தகவல்களை இவர்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மில்லியன் மக்களுடைய ஐடி மற்றும் அவர்கள் தொடர்பான டேட்டாக்களை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ யின் லாப்டொப் ஒன்றில் இருந்தே தாம் இத்தகவல்களைப் பெற்றுள்ளோம் என ஹக்கிங் குழு தெரிவித்துள்ளனர். ஆப்பிள் ஐ பாட் மற்றும் அப்பிள் கணணிகளை மக்கள் வாங்கிப் பாவிக்க ஆரம்பிக்கும்போது, முதலில் தமது தரவுகளை ரெயிஸ்டர் செய்யவேண்டும். இவ்வாறு ரெஜிஸ்டர் செய்யும் தரவுகள் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய கணணியில் சேமித்துவைக்கப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களையே தாம் தற்போது கைப்பற்றியுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். எப்.பி.ஐ அதிகாரியான கிருஸ்டபரின் லாப்டொப்பில் இருந்தே தாம் இத் தகவல்களைப் பெற்றதாக இக் குழு பகிரங்கமாக அறிவித்துள்ளது. அது சரி அப்பிள் நிறுவனத்தின் தரவுகளை ஏன் உளவு நிறுவனமான எப்.பி.ஐ அதிகாரிகள் வைத்திருந்தனர் என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. அப்பிள் நிறுவனத்தின் இரகசியத் தரவுகளை எப்.பி.ஐ யினர் தமது கணணியில் வைத்திருந்ததும் போதாது என்று, இத்தகவல்கள் வெளியாகவும் இவர்களே காரணமாக அமைந்துள்ளார்கள். அப்பிள் நிறுவனத்திற்கு தெரிந்து தான் இத்தகவல்கள் பெறப்பட்டதா இல்லை இரகசியமாக எப்.பி.ஐயினர் சுட்டனரா என்று தெரியவில்லை என்கிறார்கள் விடையமறிந்த வட்டாரத்தினர்.

பிரிட்டன்: வீடற்றவர்கள் காலி வீட்டுக்குள் நுழைந்து வசிப்பது இனி குற்றம்


பிரிட்டன்: வீடற்றவர்கள் காலி வீட்டுக்குள் நுழைந்து வசிப்பது இனி குற்றம்





காலியாக இருக்கும் ஒரு வீட்டில் வீடற்றவர்கள் நுழைந்துகொண்டு அங்கு இலவசமாக வசிக்கும் செயல் பிரிட்டனில் பெரும்பான்மையான இடங்களில் இன்று முதல் கிரிமினல் குற்றமாகிறது.


இலவசமாக வசிப்பவர்கள் எதிராக சிவில் வழக்கு மட்டும்தான் தொடுக்க முடியும் என்ற நிலை இதுநாள் வரை இருந்துவந்தது.

ஸ்குவாட்டர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இப்படியான ஆட்களுக்கு ஆறு மாதங்கள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டி இந்த சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

விடுமுறைக்காக வீட்டைப் பூட்டி வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டுக்குள் மற்றவர்கள் புகுந்துகொண்டு உரிமையாளர்களை வீதியில் நிற்கவைத்த பல சம்பவங்கள் ஊடகங்களில் பெரிதும் அடிபட்டிருந்தன.

லட்சக்கணக்கான வீடுகள் காலியாக கிடக்க பலவீனமான நிலையில் உள்ள மக்கள்தான் கஷ்டப்படுவார்கள் என வீடற்றோர் நலனுக்கான உதவி அமைப்புகள் கூறுகின்றன.



சுற்றுலா விசாக்களுக்கான விதிமுறைகளை தளர்த்தியது அவுஸ்திரேலியா


சுற்றுலா விசாக்களுக்கான விதிமுறைகளை தளர்த்தியது அவுஸ்திரேலியா


 

சுற்றுலா விசா பெறும் விதிமுறைகளை அவுஸ்திரேலிய அரசு தளர்த்தி உள்ளது. இதனால் அங்கு குடியுரிமை பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவுஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கிரிஸ் போவன் கூறுகையில், அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் பலர், தங்களின் பெற்றோருக்கு விசா பெற விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்றனர்.

எனவே அவர்களின் பெற்றோர்கள் வருவதற்காக சுற்றுலா விசாவை தாராளமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தகுதியானவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 12 மாதங்கள் தங்கும் வகையில் 5 ஆண்டு சுற்றுலா விசா வழங்கப்படும். பெற்றோர் விசாவுக்காக புதிதாக விண்ணப்பிப்போருக்கு ஒவ்வொரு முறையும் 12 மாதங்கள் தங்கும் வகையில் 3 ஆண்டு சுற்றுலா விசா வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தங்கி அவர்களின் கடமையை செய்ய முடியும்.

இப்புதிய விதிமுறை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலாகும். சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வர அதற்கேற்ற உடல்நிலை மற்றும் தகுதி பெற்றவராக விண்ணப்பதாரர் இருக்க வேண்டும்.

சுற்றுலாவில் வந்து தங்குவதற்கேற்ற வசதி படைத்தவராக இருக்க வேண்டும். இங்கு தங்கியிருக்கும் போது அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மலவாயிலில் மறைத்து வைத்து 2 கோடி பெறுமதியான தங்கக்கட்டிகளை கடத்த முயன்ற இருவர் கைது



மலவாயிலில் மறைத்து வைத்து 2 கோடி பெறுமதியான தங்கக்கட்டிகளை கடத்த முயன்ற இருவர் கைது

 

இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கக்கட்டிகளை மலவாயிலில் மறைத்து வைத்து மும்பைக்கு கடத்த முயன்ற இரு இலங்கையர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கும் சுங்க பிரிவினருக்கும் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 30 தங்க கட்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை 1.45 மணியளவில் மும்பை நோக்கி செல்லவிருந்த விமானத்தில் பயணிப்பதற்காக வந்த கொழும்பை சேர்ந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பேதி மருந்து கொடுக்கப்பட்டதன் பின்னரே தங்கக்கட்டிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

ஆணுறைக்குள் போட்டு மலவாயிலில் மறைத்தே இவ்விருவரும் தங்க கட்டிகளை கடத்த முயன்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒருவரிடம் 1600 கிராம் நிறையுடைய 16 தங்க கட்டிகளையும் மற்றவரிடம் 1455 கிராம் நிறையுடைய 14 தங்கக் கட்டிகளையும் சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இதன் பெறுமதி 19.6 மில்லியன் ரூபாய் ௭ன தெரிவிக்கப்படுவதுடன் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, September 4, 2012

ஆபத்தில் உதவுவது ஏழைகளே: ஆய்வில் தகவல்

ஆபத்தில் உதவுவது ஏழைகளே: ஆய்வில் தகவல்





அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் ஆபத்து காலத்தில் உடனடியாக உதவுவது, ஏழைகளே என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வில் வெளியிடப்பட்ட தகவலின் படி இயற்கை பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், வசதி படைத்த பணக்காரர்களோ, தமது உடைமைகளை பாதுகாக்கும் முயற்சியில் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். பேரிடர் ஏற்படும் ஆபத்துக் காலத்தில், பொருளாதார உறுதித்தன்மை இழந்து விடுவோம் என்ற எண்ணம், பணக்காரர்களிடம் அதிகமாக இருப்பதில்லை.

அவர்கள், மேலும் பணத்தை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஏழைகளோ, தமது நண்பர்களுடனும், மனதுக்கு பிடித்தவர்களுடனும் பொழுதை கழிப்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர்.

கூடுதல் சம்பளம் கிடைத்தாலும், நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று வேலை செய்ய, ஏழைகள் விரும்புவதில்லை.

ஆனால், உறவுகள் போனாலும், நட்பு போனாலும் கவலையில்லை, பணமே முக்கியம் என்றும் அதற்காக எங்கும் செல்லலாம் என்று வசதி படைத்தோர் நினைக்கின்றனர் எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நகங்களை பராமரிப்பதற்கு

நகங்களை பராமரிப்பதற்கு





நகங்கள் கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில் நகத்துக்கும் பங்கு உண்டு.

உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக்காட்டி விடும். எனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது கிடையாது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும்.

சில டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

உணவு சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். பெண்கள் பாத்திரம் தேய்த்த பின்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள் நகக்கணுக்களில் தங்கிவிட்டால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

அதேபோல் மலம் கழித்த பின்னரும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். குழந்தை பருவம் முதலே இத்தகைய பழக்கங்களை வாடிக்கையாக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் நக பராமரிப்பில் தனிகவனம் செலுத்துவது அவசியம். கை நகங்களை போலவே கால் நகங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும்.

பெரும்பாலான நோய்தொற்றுகளுக்கு நகமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே நகங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.

பெடிக்யூர், மெனிக்யூர் என நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன. இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும் வீட்டிலேயே செய்து கொள்வதும் எளிது. வாரத்தில் 2 அல்லது 3 முறை இந்த பராமரிப்பு முறையை செய்து கொள்ளலாம்.

நகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ மருத்துவ சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. மருத்துவ குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

கடைகளில் பொடியாகவும், கூழாகவும் கிடைக்கும் மருதாணியில் மருத்துவ குணம் இருப்பதில்லை. தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது.

அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும்.

இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம். உணவில் அதிகம் கால்சியம் சேர்த்துக் கொள்வதாலும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் இந்த பாதிப்பு சரியாகும்.

சர்க்கரை நோயாளிகள் இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். காய்கறிகள், பழங்கள் என ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம்.

Monday, September 3, 2012

வெள்ளை முடிகள் வருவதற்கு என்ன காரணம்?


வெள்ளை முடிகள் வருவதற்கு என்ன காரணம்?





வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண்ணம் அனைவரது மனதிலும் இருக்கிறது.
ஆனால் உண்மையில் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால் முடியின் நிறம் மாறுபடுகிறது.

மேலும் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இத்தகைய காரணங்கள் தெரியாததால், இளமையிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆகவே அத்தகைய காரணங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு வெள்ளை முடியை தடுக்கலாம்.

மரபணு பண்புகள்: பெற்றோரின் மரபணுக்கள் மூலமாகவும் வெள்ளை முடிகள் வருகின்றன. அதாவது பெற்றோருக்கு வெள்ளை முடி சிறு வயதிலேயே வந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே வெள்ளை முடிகள் வந்துவிடுகின்றன. அவ்வாறு வந்தால் அந்த வெள்ளை முடியை தடுக்க முடியாது.

வைட்டமின்கள் குறைபாடு: உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும், முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் வெள்ளை முடிகள் வரும்.

அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணச் சொல்கின்றனர். வைட்டமின் குறைபாட்டினால், உடலில் நோய்கள் மட்டும் வருவதில்லை. அதனால் அழகும் தான் கெடும்.

தைராய்டு: வெள்ளை முடிகள் வருவதற்கு மற்றொரு காரணம், தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்காமல் அதாவது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக சுரந்தாலும், வெள்ளை முடிகள் வந்துவிடும்.

மன அழுத்தம்: பெரும்பாலோனோருக்கு வெள்ளை மற்றும் கிரே முடிகள் அதிக மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது பரபரப்பான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் வருகின்றன.

இதனை அனைத்து அழகியல் நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆகவே இவை அனைத்தையும் விட்டு ஆரோக்கியமான, மனஅழுத்தமில்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தால் வெள்ளை முடிகள் வருவதைத் தடுக்கலாம்.

புகை பிடித்தல்: வெள்ளை முடிகள் வருதற்கான காரணத்தை கண்டறிய சிகரெட் பிடிப்பவர்களின் மீது மேற்கொண்ட ஆய்வில், புகைப்பிடிப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடிகள், சாதாரணமாக இருப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடியை விட நான்கு மடங்கு அதிகமாக வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே சிகரெட் பிடிக்காமல் இருந்தால், வெள்ளை முடிகள் வராமல் தள்ளிப்போடலாம் என்றும் கூறுகின்றனர்.



கியூபெக்கில் நீரினால் பரவும் காய்ச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்


கியூபெக்கில் நீரினால் பரவும் காய்ச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்





கனடாவின் கியூபெக் மாகாணத்தில் Legionnaires என்ற நுண்ணுயிரியால் ஏற்படும் காய்ச்சலுக்கு இதுவரையிலும் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோயின் தாக்குதல் குறித்து கியூபெக் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுக்கின்றனர். மேலும் இந்த நுண்ணுயிரியின் தாக்குதலை அறிய பத்து நாட்களாகும் என்பதாலும் அதிகாரிகளிடம் இத்தகைய தயக்கம் காணப்படுகின்றது.

கடந்த ஜீலை மாதம் பரவத் தொடங்கிய இந்த நுண்ணியிரி இதுவரை 165 பேரை தாக்கியுள்ளது.

இதே போன்று சிகாகோவில் ஜே.டபிள்யூ மரியாட் விடுதியின் தண்ணீர் தரம் குறைந்ததால் இந்த நுண்ணுயிரி தோன்றிப் பரவியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த விடுதியில் உள்ள ஒரு செயற்கை நீரூற்றிலிருந்து நோய்க்கிருமி பரவியுள்ளது. உடனே அந்த விடுதியில் இருந்த தண்ணீரை மொத்தமாக வெளியேற்றி சுத்திகரித்து புதிதாக தண்ணீரை நிரப்பினர்.

மேலும் இந்த நுண்ணுயிரி தேங்கி கிடக்கும் நீரிலும் உற்பத்தியாக பரவுகிறது. இந்த நோய்த்தொற்று, எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மனிதர்களிடம் மட்டுமே நோயை ஏற்படுத்துகிறது.

இதனால் கியூபெக்கின் சுகாதாரத்துறை அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் உள்ள குளிரூட்டும் இயந்திரங்களில் சுத்திகரிப்புப் பணியை மேற்கொண்டனர்.

கியூபெக் நகராட்சித் தலைவர் ஜீன் கேரஸ்ட், நோய்த் தடுப்புக்கான அனைத்து முயற்சிகளிலும் அரசு ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.