Friday, August 16, 2013

17 வயதுச் சிறுவன் 15 வயது பெண்ணுடன் தேன் நிலவைக் கழித்த குகை !

17 வயதுச் சிறுவன் 15 வயது பெண்ணுடன் தேன் நிலவைக் கழித்த குகை !



ஹம்பாந்தோட்டையில் உள்ள குலன்கண்ட என்னும் காட்டுப்பிரதேசத்தில் உள்ள குகை ஒன்றில் இருந்து இளம் ஜோடிகளைப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். 17 யதுடைய சிறுவனையும் மற்றும் 15 வயதேயான சிறுமியையும் தாம் அக் குகையில் கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் அக் குகையில் சுமார் 5 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் தேன் நிலவுக்காக அங்கே சென்றதாகவும், அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை சிறுவனின் தகப்பனார் அவ்வப்போது சென்று கொடுத்து வந்ததாகவும் மேலும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 

தமது மளைக் காணவில்லை எனப் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில், அவர்கள் அச் சிறுமியின் காதலனின் தகப்பனை இரகசியமாகப் பின் தொடர்ந்தவேளை அவர்கள் குகையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் விளையாட்டுத் திருமண செய்துகொண்டுள்ளதோடு, உண்மையாகவே தேன் நிலவைக் கொண்டாட அக் குகைக்குச் சென்றுள்ளார்கள். இச் செயலுக்கு விளக்குப் பிடித்துள்ளார் அச் சிறுவனின் தந்தை. இச் சம்பவம் ஹம்பாந்தோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Like us on Facebook  >>>

              அறிவியல்

நிர்வாண கோலத்தில் தலைகீழாக குழந்தைக்குப் பால் கொடுத்த பெண்....!

நிர்வாண கோலத்தில் தலைகீழாக குழந்தைக்குப் பால் கொடுத்த பெண்....!


நிர்வாண கோலத்தில் யோகா செய்தபடி தனது குழந்தைக்குப் பால் கொடுத்த பெண், பிரசுரித்த புகைப்படத்தால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. ஆடைகளின்றி வசிக்கும் சுதந்திரத்துடன் கூடிய ஹவாய் தீவில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அந்தப் பெண் இந்தப் புகைப்படத்தால் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அமி உட்ரப் 

அவரது பெயர் அமி உட்ரப். இவர் ஹவாய் தீவில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். ஹவாய் தீவில் ஆடைகளின்றியும் சுதந்திரமாக வசிக்கலாம்.

யோகா பிரியை 

அமி ஒரு யோகாசனப் பிரியை ஆவார். யோகாசனம் செய்யாமல் அவரது எந்த நாளும் தொடங்காது, முடியாது.

தலைகீழாக யோகாசனம் 

இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு இவர் தனது தோட்டத்தில் நிர்வாண நிலையில் யோகாசனம் செய்தார்.

தலைகீழாக பாலூட்டினார் 

உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நின்ற நிலையில் தனது பெண் குழந்தை நையாவுக்கும் பாலூட்டினார். இதை அவரது கணவர் புகைப்படம் எடுத்தார்.

இரண்டும் எனக்கு முக்கியம் 

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அமி கூறுகையில், எனக்கு யோகாசனம் முக்கியம். அதேசமயம், எனது குழந்தைக்குப் பாலூட்டுவதும் முக்கியம். நான் யோகா செய்து கொண்டிருந்தபோது என் குழந்தை பசியெடுத்து என் மார்பருகே வந்தபோது அப்படியே அதற்குப் பாலூட்டினேன். இதில் தவறேதும் இல்லை என்றார்.

இப்படித்தான் அடிக்கடி 

மேலும் அவர் கூறுகையில், பெரும்பாலும் நையா இப்படித்தான் பால் குடிக்கிறாள். நான் புல்வெளியில் நிர்வாண கோலத்தில் யோகா செய்வதும், அவள் தவழ்ந்து வந்து பாலருந்துவதும் எங்கள் வீட்டில் சகஜம் என்கிறார் அமி.


எதிர்ப்புகளும், ஆட்சேபனைகளும் 

ஆனால் அமியின் செயலுக்கு எதிர்ப்புகளும், ஆட்சேபனைகளும் வராமல் இல்லை. பலர் இது தாய்மையை இழிவுபடுத்துவது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதை அமி பொருட்படுத்தவில்லையாம்.


Like us on Facebook  >>>

              அறிவியல்

தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு

தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு

தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி நடக்கும் உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். எவ்வளவோ முயற்சி செய்தும் தலைவா படம் வெளியாகவில்லை. நாளைக்குள் வெளியாக வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தினசரி ஒரு பேட்டி, பிரஸ் மீட் வைத்து வருகின்றனர். 

அரசு இதில் தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என தெளிவுபடுத்திவிட்டது. போலீசாரோ இது தங்கள் வேலையல்ல என்றும், சினிமாத் துறையினர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றும் கூறிவிட்டது. 

வெளியிட வேண்டிய தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். விஜய் படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களுக்குப் பழி வாங்கவே தியேட்டர்காரர்கள் இப்படிச் செய்வதாகவும் பேச்சு நிலவுகிறது. 

இந்த நிலையில், தலைவா படத்தை வெளியிட முதல்வர் அம்மா நடவடிக்கை 
எடுக்க வேண்டும் என விஜய்யும் அவரது குழுவினரும் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் விஜய், தயாரிப்பாளர், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் தலைவா படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர். 

சத்யராஜ், அமலாபால், சந்தானம் ஆகியோரிடம் பேசி இதற்கு சம்மதம் வாங்கியுள்ளாராம் இயக்குநர் விஜய். அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வேன் என்று உறுதி அளித்துள்ளாராம் படத்தின் நாயகன் விஜய். எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ளப் போகிறார்களாம்.

Note : நானும் ஒரு விஜய் ரசிகனே !!! (ஆனால் அவரது தொழிலை வளர்க்க வேண்டியது எனக்கு அவசியமில்லை)

நானும் ஒரு ரசிகனாக இந்த நடிகரிடம் ஒரே ஒரு கேள்வி எத்தனயோ உயிர் எவ்வாறு எல்லாமா பறிபோன பல சந்தர்பங்களில் நீங்கள் உடனே எடுக்காத இந்த முடிவு உங்கள் படம் ஒரு வாரம் தாமதுக்காக உண்ணாவிரதம் என்குரீர்களே ? இது என்ன சாகும் வரையா? (அப்படிஎன்றால் உங்களுக்கும் மு. க. வுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை)

புளைபபுக்காக உண்ணாவிரதம், படம் வெளியாகததால் தூக்கு, ............. நாம எங்க வல்லரசு ஆகுறது

இப்படியான ஒரு இடத்தில் நானும் வாழ்கின்றேன் என்று வெட்ட்கப்படுகின்றேன்


Thursday, August 15, 2013

ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்...

ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்... 


பெண்களின் கவர்ச்சியில் முக்கிய அங்கமாக விளங்குவது அவர்களின் மார்பகங்கள். அதை எடுப்பாக வைத்திருக்க பல பெண்கள் முற்படுவது வாடிக்கையே. ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு முக்கிய பிரச்சனையையும் சந்திக்கிறார்கள். அது தான் மார்பக புற்றுநோய்.

சிலவகை உணவுகளை உண்பதால் மார்பக புற்றுநோய் வரும் ஆபத்து குறையும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அப்படி உணவில் சேர்க்க வேண்டிய பொருட்களில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்களும் காய்கறிகளும் அடங்கும். பட்டர்நட் பழப்பானம் இவ்வகை உணவிற்கு ஒரு உதாரணமாகும். இதில் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டான பீட்டா-கரோடீன் உள்ளது.

இப்போது ஆரோக்கியமான மார்பகங்களை பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி, ஆரோக்கியமான மற்றும் அழகான மார்பகங்களைப் பெறுங்கள்.

சரியான உணவுகள் 

வால்நட், ஆளி விதை, க்ரான்பெர்ரி மற்றும் எண்ணெய் சத்துள்ள மீன்கள், வெண்ணைப்பழம், முட்டைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் ஆகியவைகளும் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவும். மெக்னீசியம் அதிகமாக உள்ள உணவை உண்பதால் மார்புகள் வீங்குவதையும், நொய்வு ஏற்படுவதையும் தடுக்கும்.

பொருத்தமான பிரா 

70 சதவீத பெண்கள் பயன்படுத்தும் பிரா தவறான அளவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இது மோசமான தோற்ற நிலை, சரும எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் என பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் இது மார்பக தசை நார்களை பாதிக்கும். இதனால் மார்பகத்தில் வலியும் தொய்தலும் ஏற்படும்.

பருவ காலத்தினால் ஏற்படும் மாற்றம் 

எடை மாறுதல், கருவுற்றல் அல்லது மாதவிடாய் நிறுத்தம் என பல காரணங்களால் மார்பகத்தின் அளவு நிலையாக இல்லாமல் ஒவ்வொரு பருவத்திலும் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் மார்பக அளவை ஊகிப்பதை விட, சரியான இடைவேளையில் அதன் அளவை அளந்து கொண்டால், அதற்கேற்ப உங்கள் மார்பகங்களை பராமரிக்கலாம்.

உடற்பயிற்சி 

உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தில் ஈடுபடுதல் அவசியம். வாரத்திற்கு நான்கு மணி நேரம் அல்லது அதற்கு மேலாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதன் விளைவாக மார்பகபுற்று நோயின் இடர்பாடு குறையும். இந்த வியாதி உள்ளவர்கள் ஒவ்வொரு வாரமும் சில மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், இந்த நோயை எதிர்த்து போராடலாம் என்றும் சில ஆய்வுகள் கூறுகிறது. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். உடற்பயிற்சி என்பது உடல்நலத்திற்காக மட்டுமல்ல, மார்பகங்கள் தொய்வு ஏற்படாமலும் காக்கும். மேலும் மார்பகங்கள் எடுப்பாகவும் காட்சி அளிக்கும்.

மார்பகத்திற்கான பயிற்சிகள் 

நெஞ்சுக்கான உடற்பயிற்சிகள் ஆண்களுக்காக மட்டும் தான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தவறு. மார்பக தசைகள் வலு பெற புஷ்-அப் மற்றும் பெஞ்ச் பிரஸ் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அப்படி செய்வதால் தசைகள் திடமாகி, மார்பகங்கள் தொய்வு நீங்கி, அழகிய அமைப்புடன் மேலோங்கி நிற்கும்.

மார்பக க்ரீம்கள் 

இயற்கையான முறையில் மார்பகங்கள் மேலோங்கி நிற்க அதற்காக விற்கப்படும் க்ரீம்களை அதன் மீது தடவலாம். அதுவும் நல்ல பலனை தரும். மார்பக பிளவு தெரியும் படி ஆடை அணியும் போது, மார்புகள் தொய்வு இல்லாமல் மேலோங்கி நின்றால் பார்க்க எடுப்பாக தெரியும். இப்படி க்ரீம் பயன்படுத்தினால், அது மார்பக அளவையும் அமைப்பையும் எந்த விதத்திலும் பாதிக்காது. மேலும் இவ்வகை க்ரீமை மார்பகங்களில் சீரான முறையில் தடவி மசாஜ் செய்தால், அது சரும மீள்தன்மையை மேம்படுத்தும். மேலும் சுருக்கம் மற்றும் தொய்வு ஏற்படாமல், மார்பக அமைப்பை எடுப்பாக மாற்றும்.

சிறப்பான மார்பக பிளவு இருப்பதை போல பிம்பத்தை உருவாக்கலாம் 

கழுத்திற்கு கீழ் மார்பகம் தெரியும் படி ஆடை அணிய திட்டமிடுகிறீர்களா? அப்படி அணியும் ஆடையினால் மார்பக பிளவை அதிகமாக காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் மேக்-கப் செய்தால் போதும், பெரிய மார்பகங்கள் இருப்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தலாம்.

அதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த கவர்ச்சியான பிராவை அணிந்து கொண்டு, பின் மார்பகங்களுக்கு மத்தியில் மேட் ப்ரான்சர் (matte bronzer) என்ற பவுடரை லேசாக பூசிக்கொள்ளுங்கள். இது பார்ப்பதற்கு ஒரு நிழல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். பின் மார்பகங்களுக்கு மேலும், கழுத்துக்கு கீழும் மினுமினுப்பான பவுடரை பூசிக் கொள்ளுங்கள். இப்போது பாருங்கள் உங்கள் தோற்றத்தை பார்த்து நீங்களே அசந்தே போய் விடுவீர்கள்!

மார்பகங்களை சோதனை செய்யுங்கள் 

பிரேக் த்ரூ மார்பக புற்றுநோய் நடத்திய ஆய்வின் படி, 35 சதவீத பெண்கள் மட்டும் தான் சீரான முறையில் மார்பகங்களை புற்றுநோய்க்காக சோதனை செய்து கொள்கிறார்கள் என்று சொல்கிறது. பொதுவாக பெண்கள் இறப்பை சந்திப்பதற்கு பெரிய காரணமாக விளங்குகிறது மார்பக புற்றுநோய். அத்தகைய நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், உயிர் பிழைப்பது சாத்தியமாகும்.

ஆகவே பெண்கள் ஒவ்வொரு மாதமும் தன் மார்பகங்களை சோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மார்பகங்களின் அளவு, அமைப்பு போன்றவைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் சரி, சொறி, கட்டி போன்ற பாதிப்புகளை கண்டாலும் சரி, உடனே சோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பக மாற்றங்களை எப்படி கண்டு பிடிப்பதென்று தெரியவில்லை என்றால், இணையதளங்களில் சென்று படித்து பாருங்கள் அல்லது ஒரு மருத்துவரை அணுகி டிப்ஸ்களை பெறுங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள் 

புகைப்பிடிக்கும் பழக்கம் பல ஆபத்தான நோயை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு மார்பக புற்றுநோய் ஒன்றும் விதி விலக்கல்ல. கலிபோர்னியா ஹெல்த் சர்வீசஸ் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் படி, மார்பக புற்றுநோய் புகைப்பிடிக்காத பெண்களை விட, புகைப்பிடிக்கும் பெண்களை தான் 30 சதவீதம் அதிகமாக தாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பதால், இதன் விளைவு கொஞ்சம் கொஞ்சமாக உடலில் தேங்கும். இதனால் உடல்நல இடர்பாடு காலப்போக்கில் அதிகரிக்கும். அதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், பல வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா அணியுங்கள் 

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, மார்பகங்கள் உடலின் அசைவுக்கேற்ப நகர முற்படும். போதுமான ஆதரவு இல்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் (முக்கியமாக பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள்), அது வலியையும், உபாதையையும் ஏற்படுத்தும். மேலும் அது தசை நாரை பாதிப்படைய செய்து, மார்பகங்களுக்கு தொய்வு ஏற்படுத்தும். எனவே உடற்பயிற்சியினால் மார்பகங்கள் பாதிப்படையாமல் இருக்க, முதலில் மார்பின் அளவுக்கேற்ப ஒரு ஸ்போர்ட்ஸ் பிராவை வாங்கி, உடற்பயிற்சியில் ஈடுபடும் போது அணியுங்கள். இது தினமும் அணியும் பிராவைப் போல் அல்லாமல், கொஞ்சம் திடமாக இருக்கும். அதனால் மார்பக அசைவுகள் குறையும்.

தோரணையை மேம்படுத்துங்கள் 

மார்பகங்கள் உடனே மேலோங்கி எடுப்பாக தெரிய வேண்டுமானால், தோரணையை மேம்படுத்துங்கள். அதிலும் தோள்பட்டைகள் கூன் விழுந்திருந்தால், மார்பக தசைகள் மீள்விசையை இழந்து காலப்போக்கில் தொய்வு அடையும். மேலும் பின் பக்கத்தை வளைக்காமல் நேராக நடந்து சென்றாலும் கூட, மார்பகங்கள் எடுப்பாகவும் அழகாகவும் தெரியும். மேலும் நாள் முழுவதும் எப்படி நிற்க வேண்டும், நடக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக யோகா, பிளேட்ஸ் அல்லது டை சீ போன்ற பயிற்சியில் ஈடுபட்டு, தோரணையை மேம்படுத்தி மார்பகங்களை எடுப்பாக காட்டுங்கள்.


இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள்!!!

இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! 


இந்த உலகத்தில் அனைவரும் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். இதில் சிலரின் வருமானத்தைக் கொண்டு, மாத செலவுகளை சமாலிக்கவே தலை சுற்றுகிறது. ஆனால் பெரிய பதவி வகிக்கும் சிலரின் வருமானம் கேட்டாலே நமக்கு தலை சுற்றுகிறது.

அப்படிபட்டவர்கள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள், இவர்களை பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் இவர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா பாஸ் உங்களுக்கு?


நவீன் ஜின்டல் 

இவர் ஜின்டல் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்நிறுவனம் 17 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒ.பி ஜின்டல் குழுமத்தின் ஒரு பகுதி. மேலும் இவர் குருஷேத்ரா மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். நவீன் ஜின்டல் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, 1992 ஆம் ஆண்டு டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ பட்டமும் பெற்றார். இவர் தான் இந்தியாவிலேயே மிக அதிகமான ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி, இவரின் ஆண்டு வருமானம் சுமார் 14.68 மில்லியன் டாலராகும்.

கலாநிதி மாறன் 

இவர் இந்தியவின் ஊடக அரசன் என்று அழைக்கப்படுவார். இவர் சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். கலாநிதி மாறன் தனது பள்ளி படிப்பை சென்னையில் தான் முடித்தார், பின்பு ஸ்க்ராண்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

சன் குழுமம் ஏசியாவின் முன்னணி ஊடக நிறுவனம் ஆகும், மேலும் இவர் ஐபிஎல் ஹைதெராபாத் சன்ரெய்சர்ஸ் அணியின் உரிமையாளர். இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர். மேலும் இவரின் மனைவி காவேரி காலநிதி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளர் இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர் ஆகும்.

குமார் மங்கலம் பிர்லா 

இவர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் ஆவார், இந்தியாவின் மதிப்புக்குரிய தொழிலதிபர்களில் இவர் முக்கிய இடத்தை வகுக்கிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ முடித்தார். தனது தந்தை மரணத்தினால், 28ஆம் வயதில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் பதவியை ஏற்றார். இவரது சம்பளம் ஆண்டிற்கு 9.42 மில்லியன் டாலர் ஆகும்.

பவன் காந்த் முஞ்சால் 

இவர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். மேலும் இவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸின் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறார். மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். இவர் 1986 ஆம் ஆண்டில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக பதவி வகுக்கிறார். இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.89 மில்லியன் டாலர் ஆகும்.

பிரிஜ்மோகன் லால் முஞ்சால் 

பிரிஜ்மோகன் லால் முஞ்சால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிறுவனர். இவர் மார்ச் 2005 ஆம் ஆண்டில் இந்திய மோட்டார் துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக "பத்ம பூஷன்" வருது பெற்றார். மேலும் இவர் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பிஸ்னஸ் பேரான்ஸ் என்ற பத்திரிகை அறிவித்தது. இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.88 மில்லியன் டாலர்.

பி.ஆர். சுப்ரமனிய ராஜா 

இவர் மெட்ராஸ் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் 20 நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் ஆவார். இவருக்கு 81 வயது ஆன நிலையிலும் தனது பணிகளை செம்மையாக செய்கிறார். இந்த வயதான இளைஞரின் ஆண்டு வருமானம் 5.86 மில்லியன் டாலர் ஆகும்.

பி.ஜி. ரகுபதி பி.ஜி. ரகுபதி, 

பிஜிஆர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். இந்நிறுவனம் 1985 ஆம் ஆண்டு ஜெர்மனி நிறுவனத்துடன் இனைந்து துவங்கப்பட்டது. பி.ஜி. ரகுபதி, பிஜிஆர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் நிர்வாகம் துறையில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்தார். இவரது ஆண்டு வருமானம் 5.19 மில்லியன் டாலர் ஆகும்.

சஜ்ஜன் ஜின்டல் 

இவர் ஜின்டல் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தியில் முன்றாம் இடத்தில் உள்ளது. இவர் அஸ்ஸோசாம் நிறுநவனத்தின் முன்னால் தலைவர் ஆவார். இவரின் ஆண்டு வருமானம் 5.06 மில்லியன் டாலர் ஆகும்.

முரளி. கே டெவி டாக்டர். டெவி, 

டெவிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் ககாதியா பல்கலைக்கழகத்தில் மருந்து அறிவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். டெவிஸ் நிறுவனத்தில் ஜெனரிக்குகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவரின் ஆண்டு வருமானம் 4.63 மில்லியன் டாலர் ஆகும்.


சுனில் பார்தி மிட்டல் 

இவர் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆவார். இந்நிறுவனத்தின் விற்றுமுதல் மட்டும் 8.3 பில்லியன் டாலர் ஆகும். இவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய வணிக துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக "பத்ம பூஷன்" வருது பெற்றார். இவரின் ஆண்டு வருமானம் மட்டும் 4.25 மில்லியன் டாலர் ஆகும்.


பொருளாதாரம் பற்றிய சீனாவின் புள்ளி விவரங்கள் எல்லாமே பொய் பொய்

பொருளாதாரம் பற்றிய சீனாவின் புள்ளி விவரங்கள் எல்லாமே பொய் பொய்


சீனா தெரிவித்து வரும் மிரட்டக் கூடிய புள்ளி விவரங்கள் அனைத்துமே பொய்யானவை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீனா தெரிவித்து வருவது போல் அதன் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் கேள்விக்குரியது என்கின்றனர் வல்லுநர்கள்..

2007 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க தூதரக ஆவணங்களில், சீனாவின் புள்ளி விவரங்கள் 'மனிதர்களால் உருவாக்கப்பட்ட' ஆவணங்கள் என்று அப்போதைய தூதரிடம் லியானிங் மாகாண உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது.

அதே போல் 2010ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் தகவல்களின்படியும் மாகாணங்களின் மின்சார நுகர்வு, சரக்கு ரயில் வருவாய், வழங்கப்பட்ட கடன் அளவு ஆகியவற்றை மட்டுமே அந்நாட்டு அதிபர் லீ கவனத்தில் கொள்கிறார் என்றும் கூறப்பட்டிருந்தது. இதர புள்ளி விவரங்கள் அனைத்தும் ஜஸ்ட் ஆவணங்களில்தான் என்கிற வகையில் லீ செயல்படுகிறார் என்பது விக்கிலீக்ஸ் தகவல்.

2010ஆம் ஆண்டு ஜப்பானைவிட சீனா பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தது. பிரான்ஸைவிட சீனா அதிவேகமாக மாத, ஆண்டு புள்ளி விவரங்களை கணக்கிவிட்டு விடுகிறது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இதனால்தான் சீனாவின் பொருளாதார புள்ளி விவரங்கள் பற்றிய கேள்வியே எழுகிறது என்கின்றனர்.

ஆக சீனா தெரிவித்த புள்ளி விவரங்கள் எல்லாமே பொய்யா?


Wednesday, August 14, 2013

"சிம்புவுடனான போட்டோவை தாமே ரிலீஸ் செய்துவிட்டு போலீஸுக்கு போகும் ஹன்சிகா!"

சிம்புவுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது எப்படி? - போலீசில் புகார் தருகிறார் ஹன்சிகா!

"சிம்புவுடனான போட்டோவை தாமே ரிலீஸ் செய்துவிட்டு போலீஸுக்கு போகும் ஹன்சிகா!"


சென்னை: நடிகர் சிம்புவுடன் நெருக்கமாக கட்டிப் பிடித்து இருக்கும் படத்தை தாமே ரிலீஸ் செய்து விட்டு இப்போது யார் வெளியிட்டாங்களோ? என்று உலக மகா நடிப்பை வெளிப்படுத்துகிறார் நடிகை ஹன்சிகா.

நடிகை ஹன்சிகா பெயரில் எத்தனையோ பேஸ்புக் பக்கங்கள் இருக்கின்றன.." Actor/Director © Profile Original ® █║▌│█│║▌║││█║▌║▌║║▌ Verified By Facebook ✔ © Official Page ® என்ற பதிவோடு இருக்கும் பக்கம் https://www.facebook.com/pages/%E1%83%A6-Hansika-hansu-%E1%83%A6/100678146749452.

இதில் ஆகஸ்ட் 12-ந் தேதி அனைத்து ஊடகங்களில் வெளியாவதற்கு முன்பு ஹன்சிகா- சிம்பு படம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு முதல் கமெண்ட் ஆகஸ்ட் 12, காலை 10.44 மணிக்கு..

முதல் கமெண்ட் இதுதான் "Varathu Rajan yenna koduma saravanan idhu" இதற்கு 'ღ Hansika hansu ღ koduma than,... yena panrathu...:"என்று பதிலும் கொடுத்திருக்கிறார். அவர் கமெண்ட்ஸுக்கு பதில் கொடுத்த நேரம் காலை 10.46 மணி..

இதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நடிகர் அதர்வா முரளி இதே படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். https://www.facebook.com/ActorAdharvaaMurali?hc_location=stream என்ற அதர்வாவின் பக்கத்தில் Cute & Lovable Couples...என்ற தலைப்பில் ஹன்சிகா- சிம்பு படத்தைப் போட்டுவிட்டு சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குள் வாங்கியிருக்கிறார்.

இப்ப யார் ரிலீஸ் செய்தார்களாம் சிம்பு- ஹன்சிகா போட்டோவை? அதை யார் ஃபேஸ்புக்கில் போட்டு கொண்டாடினார்களாம்?