Thursday, November 22, 2012

மனிதக் குரங்குகளுக்கும் இளமையைக் கடக்கும்போது 'மன உளைச்சல்'

மனிதக் குரங்குகளுக்கும் இளமையைக் கடக்கும்போது 'மன உளைச்சல்'



மனிதக் குரங்குகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவைகளுக்கும், மனிதர்களைப் போல , வாழ்க்கையின் மத்திய கால கட்டத்தில், மன உளைச்சல் ஏற்படலாம் என்பதற்கான ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது, இளமையில் அதிகமாகவும், வாழ்க்கையின் மத்திய காலகட்டத்தில் குறைவாகவும், மீண்டும் முதுமையில் அதிகரித்தும் காணப்படுவதாக, கடந்த பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் காட்டுகின்றன.

உலகெங்கிலும் வன உயிர்க் காட்சி சாலைகள் மற்றும் ஆய்வு மையங்களில் இருக்கும் சிம்பான்ஸீகள் மற்றும் ஒராங்குட்டன் ஆகிய குரங்கினங்களிலும், இதே போன்றதொரு ஒரு போக்கு காணப்படுவதை தேசிய அறிவியல் அக்கெடமி ப்ரொசீடிங்க்ஸ் என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று காட்டுகிறது.

இது போன்ற வாழ்க்கையின் மத்திய காலகட்டத்தில் ஏற்படும் மன உளைச்சல் உணர்வு, உடலியல் மற்றும் உயிரியல் தொடர்பானது, சமூகக் காரணிகளால் மட்டும் அல்ல என்று இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக , இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான , பேராசிரியர் ஆண்ட்ரூ ஓஸ்வால்ட் கூறுகிறார்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, மனிதக் குரங்குகளின் பராமரிப்பாளர்கள், அந்தக் குரங்குகளின் மனோநிலையைக் கணிக்குமாறும், அவை எந்த அளவுக்கு சமூக தொடர்பாடலை அனுபவிக்கின்றன என்பதை கவனிக்குமாறும், அவைகள் அவைகளுக்கு விதிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதில் எந்த அளவுக்கு வெற்றியடைந்தன என்பதைப் பார்க்குமாறும் கோரப்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!