Wednesday, December 5, 2012

நல்ல தலைவலி, நாளைக்குப் பாத்துக்குவோமா... உறவைத் தவிர்க்க இப்படியும் 'டிரிக்'!

நல்ல தலைவலி, நாளைக்குப் பாத்துக்குவோமா... உறவைத் தவிர்க்க இப்படியும் 'டிரிக்'!


இந்தியா டுடே இதழும், நீல்சன் அமைப்பும் சேர்ந்து ஒரு செக்ஸ் சர்வே எடுத்துள்ளன. இந்தியாவின் நான்கு முக்கிய பெருநகரங்கள் மற்றும் 12 சிறிய நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம். அதில் கிடைத்துள்ள முடிவுகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களிலும், ஹிஸ்ஸார், மொராதாபாத், கோடா, கோலாப்பூர், ஜாம்நகர், ரட்லம், சேலம், கோட்டயம், குண்டூர், அசன்சோல், பாலேஸ்வர், ஐஸ்வால் ஆகிய நகரங்களிலும் இந்த சர்வே நடத்தப்பட்டது.

இதில் பல சுவாரஸ்ய விஷயங்கள் தெரிய வந்துள்ளதாக இந்தியா டுடே கூறியுள்ளது. அதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போமா...

- மிஸோரம் தலைநகரான ஐஸ்வால் மக்கள்தான் செக்ஸ் வாழ்க்கையில் பெரும் திருப்தியுடன் உள்ளனராம். அதாவது 79 சதவீதம் பேருக்கு செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதாம்.

- ஐஸ்வாலில்தான் தங்களது பாய் பிரண்ட் மற்றும் கேர்ள் பிரண்டுடன் முதல் செக்ஸ் உறவை மேற்கொள்வோர் அதிகம் உள்ளனராம். மேலும் இந்த ஊரில்தான் லிவ் இன் உறவுகளும் அதிகமாக இருக்கிறதாம். அதேபோல பலருடன் உறவு வைத்துக் கொள்வதும் இங்கு ரொம்ப சாதாரணமாம்.

- மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் மனைவியை மாற்றிக் கொள்வது சாதாரணமாக இருக்கிறதாம்.

- ரட்லம் நகரில் நிறையப் பேர் தங்களது பார்ட்னர்கள் டிரஸ் இல்லாமல் இருப்பதைப் பார்த்து ரசிக்கிறார்களாம். மேலும் டிரஸ்ஸைக் கழட்டச் சொல்லிப் பார்த்து ரசிப்பார்களாம்.

- சேலத்தில், செக்ஸ் உறவைத் தவிர்க்க விரும்புவோர் பெரும்பாலும் சொல்லும் காரணம் நல்ல தலைவலியா இருக்கு, நாளைக்குப் பார்த்துக்கலாமா என்பதுதானாம்.

- கோட்டயத்தில் 9 சதவீதம் பேர் உடலுறவின்போது செக்ஸ் என்ஹான்ஸர்களைப் பயன்படுத்துகிறார்களாம்.

- ரட்லம் நகரில் 11 சதவீதம் பேர் மூன்று பேருடன் உறவு வைத்துள்ளதாகவும், 14 சதவதீம் பேர் ஹோமோ செக்ஸ் ஓ.கே.தான் என்றும் கூறியுள்ளனர்.

- ஆந்திர மாநிலம் குண்டூரில், ஒருநாள் மட்டும் உறவு வைத்துக் கொள்வோர் மிக அதிகமாக உள்ளனராம். இந்த விஷயத்தில் இந்தியாவின் தலைநகரம் போல குண்டூர் இருக்கிறதாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!