Tuesday, December 4, 2012

நாய் கடித்து இறந்த குட்டியை தூக்கிக் கொண்டு சுற்றும் குரங்கு : 3 நாளாக பட்டினி

நாய் கடித்து இறந்த குட்டியை தூக்கிக் கொண்டு சுற்றும் குரங்கு : 3 நாளாக பட்டினி


நாய் கடித்து இறந்துபோன தனது குட்டியை 3 நாட்களாக தூக்கி கொண்டு சாப்பிடாமல் அழுதபடி பாசப்போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது தாய் குரங்கு. பெரம்பலூர் மாவட்டம் வேலூர் அருகே உள்ளது ரங்கநாதபுரம் கிராமம். இங்கு ஒரு பெண் குரங்கு, தனது குட்டியுடன் சமீபகாலமாக சுற்றி கொண்டிருந்தது. 3 நாட்களுக்கு முன்பு குட்டிக்குரங்கு தெருவில் விளையாடியபோது, தெரு நாய் ஒன்று அதை கடித்துள்ளது. இதைப்பார்த்த தாய் குரங்கு ஓடிச் சென்று நாயை விரட்டி, குட்டியை மீட்டது. காயம்பட்டு வலியால் துடித்த அந்த குட்டியை பார்த்து தாய் குரங்கு துடித்தது. அந்த குட்டியை தோளில் போட்டு சமாதானப்படுத்தியது.

ஆனால் காயமடைந்த அந்த குட்டி சிறிது நேரத்தில் இறந்து போனது. அசைவற்று இருந்த குட்டியை பார்த்து தாய் குரங்கு கண்ணீர் வடித்தது. ஆனாலும் தனது பாச குட்டியை கீழே போட்டுவிட்டு செல்ல மனமில்லாமல், அதை கடந்த 3 நாட்களாக தூக்கியபடி சுற்றுகிறது தாய் குரங்கு. மனமுடைந்த நிலையில் சுற்றும் அந்த தாய் குரங்கு, குட்டிக்கு முத்தம் கொடுக்கிறது. கண்ணீர் சிந்துகிறது. குட்டியின் உடல் மீது அமரும் ஈக்களையும், கொசுக்களையும் கையால் விரட்டிவிடுகிறது. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் பரிதாபப்பட்டு வாழைப்பழம், பிஸ்கட் வாங்கி கொடுத்தாலும் அதை வாங்க மறுத்து, எதையும் சாப்பிடாமல் குட்டியுடன் தொடர்ந்து கத்தியபடியே ஓடுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!