Tuesday, December 4, 2012

சென்னை விமான நிலையம் உள்ளே வெள்ளம்!! இமிகிரேஷன் அதிகாரிகள் மேஜை மேலே!!!

சென்னை விமான நிலையம் உள்ளே வெள்ளம்!! இமிகிரேஷன் அதிகாரிகள் மேஜை மேலே!!!


சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விடாது கனமழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக, சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள் பணிபுரியும் பகுதியில் மழை நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் சர்வதேச விமானங்களின் வருகை அதிகம். ஆனால், பயணிகளின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை செக் செய்யும் அதிகாரிகள் தரையில் கால் வைக்க முடியாதபடி தண்ணீர் வந்துவிட்டது. இதையடுத்து, சென்னை இமிகிரேஷன் அதிகாரிகள் மேஜை மீது ஏறி நின்று பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது, தியாகராய நகர், புரசைவாக்கம், வானகரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால், வானக ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!