Thursday, December 6, 2012

கமலின் விஸ்வரூபம் தியேட்டர் ரிலீஸூக்கு 8 மணி நேரத்துக்கு முன் டி.வி.யில் ரிலீஸ்!

கமலின் விஸ்வரூபம் தியேட்டர் ரிலீஸூக்கு 8 மணி நேரத்துக்கு முன் டி.வி.யில் ரிலீஸ்!




விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் என்பதே, இந்த நிமிடத்தில் உள்ள ஏற்பாடு என்று தெரியவருகிறது. இந்தப் படத்தை முதலில் டி.டி.எச். மூலம் டி.வி.யில் வெளியிடுவதில் உறுதியாக உள்ளார் கமலஹாஸன்.

நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்று தனது இந்த முடிவை மாற்றுவதற்கு இல்லை என்று அவர் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.  இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டி.வி.க்கு வருவது இதுதான் முதல் முறை!

கிடைத்துள்ள தகவலின்படி, விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமை, முக்கியமான டி.டி.எச். ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்றய டி.டி.எச். நிறுவனங்களுடன் பேசி, படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை விஸ்வரூபம் தயாரிப்பு தரப்பும், டி.டி.எச். நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.

பெரிய பட்ஜெட் படம் ஒன்றுக்கு இது ஒரு புதிய முயற்சி என்பதால், இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டி.வி.டி. பிரச்னை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

டி.டி.எச்.சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து, உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். தற்போது, இந்தப் படத்துக்கு பெருமளவு தியேட்டர்கள் கிடைக்காத நிலையில், கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம்.

நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்சென்ற கமல், “ஒரு படத்தின் வர்த்தகத்தை எப்படி செய்ய வேண்டும் என்ற உரிமை, அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு” என்பதை அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். இந்த முயற்சி வெற்றி பெற்றால், மற்றைய தயாரிப்பாளர்களும் இந்த பார்முலாவை பின்பற்றக்கூடும்.

இது, தற்போதுள்ள முடிவு. சினிமா உலகில், எந்த முடிவு, எந்த நேரம் மாறும் என்பது அந்த பவர் ஸ்டாருக்கேகூட தெரியாது!

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!