Monday, November 26, 2012

252 சிறுவர்களைக் கற்பழித்த வெளிநாட்டு நபர் இலங்கையில் உள்ளார்

252 சிறுவர்களைக் கற்பழித்த வெளிநாட்டு நபர் இலங்கையில் உள்ளார்



பேர்ணாட் கெவின் என்னும் 65 வயதாகும் வெள்ளை இனத்தவர் ஒருவர் கடந்த சில மாதங்களாக இலங்கையில் வசித்துவருகிறார் என்று இன்ரர் போல் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இவர் பல சிறுவர்களையும் இளைஞர்களையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். செயின் ஜோன்ஸ் செர்ச் என்னும் தேவாலயத்தில் இவர் பணியாற்றியவேளை நூற்றுக்கணக்கான சிறுவர்களையும், இளைஞர்களுடனும், தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். மேற்படி இவர் சில ஆண் ஆசிரியர்களையும் விட்டுவைக்கவில்லையாம். இவர் மீது சுமார் 252 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு இவர் நியூசிலாந்துச் சிறையில் இருந்தவேளை, இவருக்கு பரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இவர் வீட்டிற்குச் சென்று திரும்ப, சிறைச்சாலை அனுமதித்தவேளை, இவர் நாட்டை விட்டு வெளியேறி இலங்கை சென்றுள்ளார்.

பின்னரே இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளது. முதலில் 2 சிறுவர்களை கற்பழித்த வழக்கில் இவர் நியூசிலாந்தில் இருந்தவேளை தான் இவருக்கு வீட்டிற்குச் சென்றுவர அனுமதி கிடைத்துள்ளது. இதன் பின்னரே இவர் பற்றி 252 புகார்கள் எழுந்துள்ளது. எனினும் இவர் சாதூரியமாகத் தப்பி இலங்கை சென்றுவிட்டார். தற்போது இலங்கையின் மலையகப் பகுதியில் இவர் வசித்துவருகிறார். சமீபத்தில் தனது நண்பர் ஒருவரோடு தொடர்புகொண்ட பேர்ணாட் கெவின், தனது நண்பரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இங்கு வந்து பார் , நல்லா இருக்கும் , அங்கு என்ன செய்கிறாய் என்று இவர் அவரைப் பார்த்து சொல்லியுள்ளார் என்றால் பாருங்களேன். இதில் விவகாரம் என்னவென்றால், மிகவும் ஆபத்தான மனிதர் ஒருவர் உங்கள் நாட்டில் உள்ளா, அவரை உடனடியாக நாடு கடத்துமாறு நியூசிலாந்துப் பொலிசார் இலங்கையைக் கேட்டுள்ளார்கள். ஆனால் இலங்கை அதனை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!