Tuesday, February 26, 2013

24 மணி நேரமும் விறைப்பாக இருக்குமாம் முதலையின் இனப்பெருக்க உறுப்பு !

24 மணி நேரமும் விறைப்பாக இருக்குமாம் முதலையின் இனப்பெருக்க உறுப்பு !



இவ்வளவு ஆண்டுகள் கழித்து விஞ்ஞானிகள் ஒரு உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்கள். உலகில் அநேகமாக இனப் பெருக்கம் செய்யும் உயிரினத்தில் ஆண் இனம் முக்கியமானது. ஆண் இனத்தில் காணப்படும் இனப்பெருக்க உறுப்பில் இருந்து வெளியாகும் விந்து கரு முட்டைக்குள் செல்வதால் தான் கருக்கட்டல் நடைபெறுகிறது. இதற்கு ஆணின் இனப்பெருக்க உறுப்பு விறைப்படையவேண்டும். பொதுவாக மிருங்கள் ஆனாலும் சரி, இல்லை என்றால் மனிதர்கள் ஆனாலும் சரி, ஒரு உணர்ச்சி வசப்படும்பொழுது தான், ஆண் இனப்பெருக்க உறுப்பு விறைப்படைகிறது. ஏனைய நேரங்களில் அது சாதாரண நிலையில் தான் காணப்படும்.

ஆனால் தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள விடையம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஆண் முதலைக்கு இனப்பெருக்க உறுப்பு உடலுக்குள் மறைந்து காணப்படுகிறது. அது தேவைப்படும்போது வெளிப்படுகிறது. ஆனால் அது 24 மணி நேரமும் விறைப்பாகவே இருக்கும். எனவே அது வெளிப்பட்டவுடன் உடலுறவு கொள்ள முடியும். இப்படி உலகில் எந்த ஒரு உயிரினமும் இருப்பதில்லை என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அது சரி இவ்வளவு நாளும் சிட்டுக் குருவி லேகியம் வாங்க அலைந்து திரிந்த எங்க ஆட்க்கள், இனி முதலை லேகியம் கிடைக்குமா என்று அலையாமல் இருந்தால் சரி.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!