Wednesday, February 27, 2013

கருவுற்ற பெண்களின் வலிப்பு மருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு

கருவுற்ற பெண்களின் வலிப்பு மருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு



பிரிட்டனில் கடந்த 1960ஆண்டுகளில் மகளிரின் கர்ப்பகாலத்தில் ஏற்படுத்தும் மயக்கம், வாந்தி, தலைசுற்றல் போன்றவற்றிக்கு கொடுத்த தாலிடோமைட்(Thalidomide) மருந்தால் ஏறத்தாழ இரண்டாயிரம் குழந்தைகள் ஊனமாகப் பிறந்துள்ளனர்.
பெண்களின் வலிப்பு நோய், வலி, மனஅழுத்தம் ஆகியவற்றிற்காகக் கொடுத்த எப்பிலிம்(Epilim) மருந்து குழந்தைகளின் மனநலத்தைப் பாதித்துள்ளது.

எப்பிலிம் என்ற இந்த மருந்து 1973ம் ஆண்டு பிரிட்டனில் அறிமுகமானது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணூறு குழந்தைகள் இந்த மருந்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து ஆட்டிசம் என்ற நோய்யுடனும், மூளைக் கோளாறுடனும், சில குழந்தைகள் தம் முதுகெலும்பு ஒரு பகுதி வெளியே தெரியும்படியும் பிறந்துள்ளன.

கேரன் பக்(Karen Buck) என்ற தாய் இதுபோன்ற பாதிப்புடைய பிரிட்ஜட்(Bridget) என்ற தனது 14 வயதுப் பெண்ணைக் கொஞ்சும் பொழுதுதெல்லாம் இதுவே கடைசி முறையாக இருக்குமோ என்ற அஞ்சியபடி இருக்கிறார். ஏனெனில் பிரிட்ஜட் இன்னும் சில வாரங்களில் இறக்கப் போவது உறுதியாகியுள்ளது.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!