Thursday, February 28, 2013

விண்ணில் ஸ்மார்ட்போனை நிலைநிறுத்தியது இந்தியா

விண்ணில் ஸ்மார்ட்போனை நிலைநிறுத்தியது இந்தியா




ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 25ம் தேதியன்று, பி.எஸ்.எல்.வி,சி20 ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதிலிருந்து, இந்தியா,பிரான்ஸ் கூட்டு தயாரிப்பான சரள் செயற்கைகோள் உட்பட வெளிநாடுகளின் 7 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் ஒன்று ஸ்ட்ராண்ட்,1. இதை இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழகத்தின் விண்வெளி மைய விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளது.

இந்த செயற்கைக்கோளில் 3யூ,க்யூப்செட் என்ற 4.3 கிலோ எடை கொண்ட நவீன விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளும் (சதுரமானது), போன்சாட் என்ற அதிநவீன ஸ்மார்ட்போனும் உள்ளது. உலகிலேயே முதல் முறையாக ஸ்மார்ட்போன் ஒன்று, இந்திய ராக்கெட் மூலம் சோதனைக்காக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டுகள் உள்ளன. விண்வெளிச் சூழ்நிலையில், இவை எவ்வாறு செயல்பட உள்ளது என்பது குறித்து ஆராயப்பட உள்ளது. - See more at: http://dinakaran.com/News_Detail.asp?Nid=42004#sthash.cZqxaj7o.dpuf

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!