Tuesday, February 26, 2013

ரூ.2.4 லட்சத்தில் வாசனை திரவியம்: பென்ட்லீ அறிமுகம்!

ரூ.2.4 லட்சத்தில் வாசனை திரவியம்: பென்ட்லீ அறிமுகம்!


ஆடம்பர கார் தயாரிப்பாளரான பென்ட்லீ நிறுவனம் வாசனை திரவியங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில், ஸ்பெஷல் எடிசனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெர்ஃப்யூம் பாட்டிலின் விலை ரூ.2.4 லட்சம். அதாவது, மாருதியின் புதிய ஆல்ட்டோவின் எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

இந்த வாசனை திரவியங்கள் ஆண்களுக்கானது என்பதோடு, ஆடம்பர ரகத்தை சேர்ந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசனை திரவியங்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற லாலிக் நிறுவனத்துடன் இணைந்து வாசனை திரவியங்களை பென்ட்லீ அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பென்ட்லீ இயக்குனர் லின்ட்சே கூறுகையில்,"எங்களது பிராண்டின் ஆடம்பரத்தை பரைசாற்றும் வகையில் லாலிக் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய வாசனை திரவியங்களை அறிமுகம் செய்துள்ளோம்.

பென்ட்லீயும், லாலிக்கும் ஒன்றுபோல் நூறாண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட நிறுவனங்கள். இந்த புதிய வாசனை திரவியங்கள் இரு பிராண்டுகளின் மதிப்பை வெகுவாக உயர்த்தும்," என்றார்.

பென்ட்லீயின் கிறிஸ்டல் ஸ்பெஷல் எடிசனின் 40 மில்லி கொண்ட பாட்டில் 2.4 லட்சம் விலையில் கிடைக்கும். பிற வாசனை திரவியங்கள் ரூ.3,500 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசனை திரவியங்கள் தவிர ஷாம்பூ, முக சவரத்திற்கு பின்னர் பயன்படுத்தும் லோஷனையும் பென்ட்லீ அறிமுகம் செய்திருக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!