Friday, May 9, 2014

உலகமே அழிந்தாலும் மக்களை காப்பாற்றுவோம்: புதிய முயற்சியில் இங்கிலாந்து ஆராச்சியாளர்கள்

உலகமே அழிந்தாலும் மக்களை காப்பாற்றுவோம்: புதிய முயற்சியில் இங்கிலாந்து ஆராச்சியாளர்கள்


உலகம் அழியும்போது மனிதர்களை காப்பாற்ற புதிய முயற்சி ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் அழியும் நிலை ஏற்படுகிறபோது மனிதர்களை காப்பாற்றி அழைத்துச் செல்வதற்காக, விண்வெளி ஓடம் ஒன்றை உருவாக்கும் பணியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விண்வெளி ஓடம் மனிதர்களை விண்வெளிக்கு கூட்டிச்சென்று, குடியிருப்பதற்கு புதிய உலகத்தை தேடும் பணியிலும் ஈடுபடும் என்றும் இதில் மனிதர்கள் உயிருடன் இருப்பதற்கு தேவையான அடிப்படை தேவைகளும் இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இப்புது முயற்சியில் இங்கிலாந்துடன் அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!