Wednesday, February 27, 2013

மடகாஸ்கர் இரட்டை சூறாவளி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

மடகாஸ்கர் இரட்டை சூறாவளி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு!



மடகாஸ்கர் நாட்டில் அடித்த சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஐ எட்டியுள்ளது. 16 பேரை காணவில்லை. 84 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 23,000 பேருக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியக்கடலின் தென்மேற்கு பகுதியில், ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ள மடகாஸ்கர் நாட்டில் ஹருனா என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி பலத்த மழையுடன் தாக்கியது. சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில்
தாக்கிய இந்த புயல், இரண்டு தடவைகள் தாக்கியதால் சேதம் அதிகம் ஏற்பட்டது.

தேசிய நிவாரண மையத்தின் கணிப்பின்படி, 1,500 வீடுகள் சேதமடைந்தன. 6,000 ஹெக்டர் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.






No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!