Wednesday, January 16, 2013

100 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை

100 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை



ஜெர்மனியில் உள்ள பெர்லின் வங்கிக்கு 100 அடி நீளத்துக்கு சுரங்கத்தை தோண்டி சென்ற மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

பெட்டக அறையிலிருந்து பணம், நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், தடயங்களை மறைப்பதற்காக அந்த அறையை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பெர்லின் போலீஸ் அதிகாரி கூறுகையில், வங்கிக்கு அருகில் தரை தளத்துக்கு கீழே உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்திலிருந்து வங்கியின் பெட்டக அறைக்கு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. மிகவும் திறமையாக இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!