Wednesday, January 16, 2013

இந்திய விஞ்ஞானிகள் சாதனை புற்றுநோயை குணப்படுத்தும் புது மூலக்கூறு கண்டுபிடிப்பு

இந்திய விஞ்ஞானிகள் சாதனை புற்றுநோயை குணப்படுத்தும் புது மூலக்கூறு கண்டுபிடிப்பு



 புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உயிர்கொல்லி நோயான புற்றுநோயால், இந்தியாவில் ஆண்டுதோறும் ஏராளமானோர் இறக்கின்றனர். இந்த நோய்க்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இந்நோயை குணப்படுத்துவதற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்க இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் டாக்டர் சதீஷ் சி ராகவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில், புற்றுநோயை குணப்படுத்துவதற்கான புதிய மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்நோயை குணப்படுத்துவற்கான புதிய மருந்துகளை தயாரிப்பதில் இந்த மூலக்கூறு புரட்சியை ஏற்படுத்தும் என்று இக்குழு தெரிவித்துள்ளது. இந்த மூலக்கூறுக்கு ‘சதீஷ் அஸ் எஸ்சிஆர்&7’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது பற்றி சதீஷ் அளித்த பேட்டியில், ‘‘புற்றுநோய்க்கு இப்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில், இந்த மூலக்கூறு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புற்றுநோய் சிகிச்சையில் இந்த மூலக்கூறு கண்டுபிடிப்பு ஒரு மைல்கல் என்று கூட கூறலாம். கட்டியால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு இந்த மூலக்கூறை செலுத்தி பரிசோதனை செய்ததில், கட்டிகளின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, எலிகளின் வாழ்நாள் அதிகரிப்பது உறுதியானது’’ என்றார். இவர், கேரளாவில் உள்ள கன்னூரை சேர்ந்தவர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!