Wednesday, February 26, 2014

ஒலிம்பிக் நிறைவில் அரங்கேறிய கூத்து

ஒலிம்பிக் நிறைவில் அரங்கேறிய கூத்து


ரஷ்யாவின் சோச்சியில் நிகழ்ந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் 5 ஒலிம்பிக் வளையங்களில் நான்கு மட்டுமே தென்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ரஷ்யாவின் 22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவிற்கு வந்தது.

இந்நிலையில் வானவேடிக்கைகளுடன் நடந்த நிறைவு விழாவின் போது, சுவிசின் பனிச்சறுக்கு வீராங்கனை பாட்ரிசியா கும்மர் தங்கள் நாட்டின் கொடியை ஏந்தியவாறு நடந்து வந்தார்.

அப்போது நேர்ந்த மின்னணு கோளாரின் காரணமாக 5 வளையங்களுடன் தோற்றமளிக்கும் ஒலிம்பிக் சின்னம் 4 வளையங்களை மட்டுமே கொண்டு தோன்றியது.

இதனை 40,000 பார்வையாளர்கள் கண்டதுடன் ”மற்றொரு வளையம் எங்கே” என மிக கிண்டாலாக விமர்சிக்க தொடங்கினர்.

மேலும் இச்சம்பவம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் பெரும் சிரிப்பினில் ஆழ்த்தியது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!