Monday, January 14, 2013

உலகில் அதிக வயதான பாட்டி மரணம்

உலகில் அதிக வயதான பாட்டி மரணம்



உலகில் அதிக வயதான பெண்ணாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஜப்பான் பாட்டி தனது 115வது வயதில் நேற்றுமுன்தினம் இறந்தார். கோடோ ஒகுபோ (115) என்ற அந்த பாட்டி, ஜப்பானின் கவாசாகி நகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். முதுமை காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. எனினும், இறப்புக்கான காரணம் பற்றியும், அவரது குடும்பப் பின்னணி விவரங்களையும் வெளியிட அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். ஒகுபோ தனது மகன்களில் ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தார் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 1897ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி பிறந்தவர் ஒகுபோ. உலகில் அதிக வயதான பெண்ணாக முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை சேர்ந்த டைனா மேன்பிரடினி கடந்த மாதம் இறந்தார். இதையடுத்து உலகின் வயதான பெண் என்ற பெருமையை ஒகுபோ பெற்றார். மேன்பிரடினியும் வயதான பாட்டியாக அறிவிக்கப்பட்ட 2 வாரங்களில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!