Monday, January 14, 2013

தை மாதத்தில் வலிமை அடையும் சூரிய பகுதி

தை மாதத்தில் வலிமை அடையும் சூரிய பகுதி



ஜோதிடங்களில் பூமி இரண்டாக பிரித்து பார்க்கப்படுகிறது. இதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்று கூறுவதுண்டு. அதாவது, காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். தட்சினாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை. மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதி, அவைகள் சந்திர
ஆதிக்கத்துக்கு உட்பட்டவை. மற்றவை சூரியன் பகுதி. அதாவது தை மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது. உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள்.

மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். அதனால்தான் இந்த மாதம் எல்லா வகையிலும் சிறப்புடையது. உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும். இந்த நேரத்தில்தான் பல விண்மீன்கள் சூரியனையும், சந்திரனையும் சூழ்ந்திருக்கும். மலையாளத்தில், கேரளாவில் இதனை மகர ஜோதி என்று அழைக்கின்றனர். ஆனால், விளக்கை ஏற்றி ஜோதி என்று காண்பிப்பது ஒரு அடையாளமே, இயற்கையாக இருப்பதை அறிவிப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!